புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதி மயங்கும் மாலைவேளை (கவிதை) Poll_c10மதி மயங்கும் மாலைவேளை (கவிதை) Poll_m10மதி மயங்கும் மாலைவேளை (கவிதை) Poll_c10 
91 Posts - 61%
heezulia
மதி மயங்கும் மாலைவேளை (கவிதை) Poll_c10மதி மயங்கும் மாலைவேளை (கவிதை) Poll_m10மதி மயங்கும் மாலைவேளை (கவிதை) Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
மதி மயங்கும் மாலைவேளை (கவிதை) Poll_c10மதி மயங்கும் மாலைவேளை (கவிதை) Poll_m10மதி மயங்கும் மாலைவேளை (கவிதை) Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
மதி மயங்கும் மாலைவேளை (கவிதை) Poll_c10மதி மயங்கும் மாலைவேளை (கவிதை) Poll_m10மதி மயங்கும் மாலைவேளை (கவிதை) Poll_c10 
6 Posts - 4%
viyasan
மதி மயங்கும் மாலைவேளை (கவிதை) Poll_c10மதி மயங்கும் மாலைவேளை (கவிதை) Poll_m10மதி மயங்கும் மாலைவேளை (கவிதை) Poll_c10 
1 Post - 1%
eraeravi
மதி மயங்கும் மாலைவேளை (கவிதை) Poll_c10மதி மயங்கும் மாலைவேளை (கவிதை) Poll_m10மதி மயங்கும் மாலைவேளை (கவிதை) Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
மதி மயங்கும் மாலைவேளை (கவிதை) Poll_c10மதி மயங்கும் மாலைவேளை (கவிதை) Poll_m10மதி மயங்கும் மாலைவேளை (கவிதை) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதி மயங்கும் மாலைவேளை (கவிதை) Poll_c10மதி மயங்கும் மாலைவேளை (கவிதை) Poll_m10மதி மயங்கும் மாலைவேளை (கவிதை) Poll_c10 
283 Posts - 45%
heezulia
மதி மயங்கும் மாலைவேளை (கவிதை) Poll_c10மதி மயங்கும் மாலைவேளை (கவிதை) Poll_m10மதி மயங்கும் மாலைவேளை (கவிதை) Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
மதி மயங்கும் மாலைவேளை (கவிதை) Poll_c10மதி மயங்கும் மாலைவேளை (கவிதை) Poll_m10மதி மயங்கும் மாலைவேளை (கவிதை) Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
மதி மயங்கும் மாலைவேளை (கவிதை) Poll_c10மதி மயங்கும் மாலைவேளை (கவிதை) Poll_m10மதி மயங்கும் மாலைவேளை (கவிதை) Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
மதி மயங்கும் மாலைவேளை (கவிதை) Poll_c10மதி மயங்கும் மாலைவேளை (கவிதை) Poll_m10மதி மயங்கும் மாலைவேளை (கவிதை) Poll_c10 
19 Posts - 3%
prajai
மதி மயங்கும் மாலைவேளை (கவிதை) Poll_c10மதி மயங்கும் மாலைவேளை (கவிதை) Poll_m10மதி மயங்கும் மாலைவேளை (கவிதை) Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
மதி மயங்கும் மாலைவேளை (கவிதை) Poll_c10மதி மயங்கும் மாலைவேளை (கவிதை) Poll_m10மதி மயங்கும் மாலைவேளை (கவிதை) Poll_c10 
8 Posts - 1%
Guna.D
மதி மயங்கும் மாலைவேளை (கவிதை) Poll_c10மதி மயங்கும் மாலைவேளை (கவிதை) Poll_m10மதி மயங்கும் மாலைவேளை (கவிதை) Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
மதி மயங்கும் மாலைவேளை (கவிதை) Poll_c10மதி மயங்கும் மாலைவேளை (கவிதை) Poll_m10மதி மயங்கும் மாலைவேளை (கவிதை) Poll_c10 
7 Posts - 1%
mruthun
மதி மயங்கும் மாலைவேளை (கவிதை) Poll_c10மதி மயங்கும் மாலைவேளை (கவிதை) Poll_m10மதி மயங்கும் மாலைவேளை (கவிதை) Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதி மயங்கும் மாலைவேளை (கவிதை)


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Fri Dec 30, 2011 4:46 pm

மதி மயங்கும் மாலைவேளை (கவிதை) Raniw


மதி மயங்கும் மாலைவேளை


அழகிய சோலை. அதனூடே இரு உருவங்கள் காணப்படுகின்றன ஒருத்தி மன்னர் புரத்து
மாதேவி. மற்றவள் அவள்தோழி இருவரின் முகங்களிலும் சோகமுற ஏதோ உரையாடல்
நடக்கிறது என்னவென பார்த்திடுவோம் வாருங்கள்



தோழி:
மாமரச் சோலையிலே - மடி
மீது தலைய ணைந்து
மாமகள் நீயிருந்தாய் - மனந்
தானும் மகிழ்வு கொண்டாய்
தாமரைப் பூவிரிய - புனல்
தாவிக் கயல் குதிக்க
தேமதுரச் சுவையிற் - கனி
தின்று களித்தனை காண்

சாமரை வீசிநிற்க - இன்பஞ்
சார்ந்த மலர் முகத்தில்
சோகமிழையக் கண்டேன் - நின்
சுந்தரமென் னுடலும்
பூமரம் போல் புயலில் - பட்டுப்
போய் விழுமா மதுபோல்
நீமனம் மாறியதேன் - உந்தன்
நிம்மதி போனதெங்கே?

பொன்முடி வேந்தன் வர - அவர்
புன்னகை செய்வதெல்லாம்
நின்மனம் பேதலித்தோ - அவை
நீசமென உரைத்தாய்
என்னடி நின்நினைவு - அன்பு
எத்தனைஆழமென
என்மனம் தானறியும் - ஆயின்
ஏனிந்த கோபமெலாம்

புன்னை மரத்தடியில் - எழில்
பூக்கள் உதிர்ந்து நிற்க
பன்னெடும்வேளை அவர் - பெரும்
பாசமுரைத்து நின்றாய்
பின்னர் அவரருகில் - நீயும்
பேசிட ஏகும்கணம்
புன்மை மனமெடுத்தே - பல
பொல்லா துரைத்த தென்ன?


தலைவி:
என்ன நினைத்தென துள்ளம் வருந்திடும்
ஏதும் புரியவில்லை - இரு
கன்னம் வழிந்திடும் கண்களின் நீர்வரும்
காரணம் தோன்றவில்லை
இன்னும் மனதினில் சின்னவள் நானெனச்
சொல்லத் தெரியவில்லை - ஏனோ
இன்னலை கண்டதென் றின்பமிழந்திடும்
என்நிலை மாறவில்லை

பென்னம் பெரிதொரு சோலை எழில்த் தரு
பேசரும் பொன்நிழலாம் - அதில்
சின்னக் குருவிகள் சேர்ந்துமகிழ்வது
சொல்லப் பெருங் கதையாம்
மின்னி இரவினில் விண்ணொளி மீன்களை
மேனியணிந்த பெண்ணாய் - அந்தப்
பொன்னொளி வான்மதி பூத்தமரத்திடை
புள்ளியிற் கோலமிட

நீலக்கரு விண்ணில் நீந்துவெண் மேகமும்
நேசமிழை தென்றலும் - பல
கோலமிடு மிசைகூடும் கருவிகள்
கொண்டவை போல்நிதமும்
காலம் பொழுதுயர் காற்றெழும் புள்ளினம்
கூடி இசை படிக்க - பெரும்
சீலமுடன் சுவை சேர்ந்திடவே அதன்
சூழல்தனை வியந்தேன்

சோலை மலர்மணம் சொல்லித் திரிந்திடும்
சுந்தரமென் வளியும் - நல்ல
பாலை பழித்திடும் பஞ்சு வண்ணமுகில்
பக்கமணை மதியும்
ஓலை படித்தும் அறியேனடி எந்தனுள்ளம்
உவகைகொள்ள - இன்பம்
நூலை விடமிக நுண்ணியதாய் மனம்
நேரக் களித்திருந்தேன்

ஓடித் திரிந்திடும் மேகங்களில் பல
உற்ற உருவமது - கணம்
ஆடியெனைக் கொல்லும் ஆவியெனப் பகை
ஆவது போலுணர்ந்தேன்
தேடி திரிந்தென்னைத் தீண்டுவதாய் ஒரு
தீங்கெனும் எண்ணமிட - மனம்
வாடிக் கணந்தன்னில் வாழ்வு முடிவதாய்
வார்த்தை தவறிவிட்டேன்

காடு நடந்திடும் வேழம் மென முகில்
கன்னியென ஒருத்தி - அத
னூடு சிறுபிள்ளை ஓடிவரப் பெரும்
ஓங்கியெழும் அருவி
போடுஎன உயிர்போக்கும் அரக்கரும்
பூதங்கள் போற்பலவும் - விழி
மூடும்பொழுதிலும் ஊடுவர மனம்
முற்று மிழந்து விட்டேன்

கண்ட கனவு விழித் தெழுந்தேன் என்ன
காரணம் ஏதறியேன் - அதில்
கொண்டதென்ன உளங் கூறிய தென்னொரு
கோலம் புரிவதிலேன்
மண்டபமும் மலர் மாமரமும் நிழல்
தந்திட நானிருந்தேன் - அங்கு
கண்டது மோர்கன வென்ன உரைத்திடக்
காலையில் நான் மறந்தேன்

கற்பனையில் எனக்காணவைத்த தென்ன
காதலின் வேதனையோ - எனை
சிற்பமெனச் சிலையென்று நினைத்தவர்
சென்றதன் காரணமோ ?
அற்புதவேந்தன் அருகிருந்தால் இது
ஆகிடுமோஅதுவே - இந்த
சொற்புயல் தந்தெனைச் சீண்டி மகிழ்வதின்
செய்கை புரியேனடி!
*********************

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Dec 30, 2011 7:58 pm

ஓடித் திரிந்திடும் மேகங்களில் பல
உற்ற உருவமது - கணம்
ஆடியெனைக் கொல்லும் ஆவியெனப் பகை
ஆவது போலுணர்ந்தேன்
தேடி திரிந்தென்னைத் தீண்டுவதாய் ஒரு
தீங்கெனும் எண்ணமிட - மனம்
வாடிக் கணந்தன்னில் வாழ்வு முடிவதாய்
வார்த்தை தவறிவிட்டேன்

நல்ல கவிதை அகநானூறு படிப்பது போல ve இருக்கிறது மகிழ்ச்சி மகிழ்ச்சி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





மதி மயங்கும் மாலைவேளை (கவிதை) Ila
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Fri Jan 06, 2012 8:30 pm

மதிமயங்கும் மாலை வேளை (தொடர்ச்சி) 2 வது பகுதி

தலைவியின் சோகங்கண்டு தோழி உரைத்தமை

சீரும்செறிவாய் சிந்தைகொள்
சேருமன்பு பொலிவானால்
போருமூடே உண்டாகும்
புண்ணாய் மனதும் நோவாகும்
தேரும் மனதில் நல்லன்பும்
தெளிவைத் தாரும் கணமாக
நீரும் வற்றும் விழிமீது
நெஞ்சின் கருணை ஒளிகூடும்

யாரு மற்றேன் நானென்று
யாதும் எண்ணல் வேண்டாமென்
சேரும் அன்புச் செல்வமடி
சிற்றூர்தேசத் திளவரசி
பாருன் அன்பைப் புரிவாருன்
பக்கங் காணும் துயர்தானும்
நீரும்வற்றும் வெய்யோன்முன்
நேர்நிற் கும்பனி யாய்வற்றும்

தலைவியின் ஆற்றாமை தோழியின் சொற்களால் தீரவில்லை,
தலைவன் தன்னைப்பிரிந்துவிட்டான். இனி தனைக்காண
வரமாட்டான் என்றெண்ணித் தொடர்கிறாள்

நீர்வற்றிப் போகலாம் நீள்வான் வெயில்பட்டு
நெஞ்சத்தின் ஈரமும் வற்றுவதோ
காயொன்று வீசுவர் கல்லும்பட்டுக் கனி
யாகிடமுன் நிலம் வீழுவதோ
வாய்விட்டுப்பேசிட வண்ணம் கலைந்துமே
வாழ்வெட்டா தூரம் இருப்பதுவோ
போய் எட்டிதொட்டிட பொன்னொளி வானமும்
பொய்த்துவிடும் இதுஅப்படியோ

சேய் விட்டுப் போஎன்று சொல்லுவளோ தாயும்
சேராது எட்டி யிருப்பதுண்டோ
பூமொட்டு தன்னை பறிப்பதுண்டோ அது
பூத்திடும் வண்ணம்சி றப்பல்லவோ
மைதொட்டுபூசிடும் கண்களை மூடுமி
மைவிட்டு மூடா திருந்திடுமோ
பொய்சொட்டும் பேசாதோர் நீதியின்முன்ஏதும்
போய்மதி கெட்டுப் புழுகுவரோ

தெய்வத்தில் பட்டிடப்பூ எறிந்தால் வரம்
தெய்வஞ் சினந்து மறுப்பதுண்டோ
எய்அம்பி னோடுவில் லேந்திய வேடனும்
மெய்யன்பினால் வென்ற ஈசனல்லோ
தெய்யெனப் பாடிக் குதித்திடினு மவர்
தேருங்கலை தனும் பார்வையிலே
நெய்விட்ட தீபமென் றேஒளிர்ந்தால் அதை
நீர்விட்டு பார்ப்பது நேசமென்றோ?

அந்தவேளை தலைவன் திடீரென தோன்றுகிறான். தவிக்கும் மனதுடன்
காணப்பட்ட தலைவியின் பூமுகம் படும் வேதனையைப்புரிந்து கொண்டவனாக
கூறுகிறான்!

கண்களில்நீருடன் பொன்முகம் ஆனதென்
காண்பதென்ன மனம்வேதனையோ
வெண்பனி போய்விடும் இன்பமென்காலையில்
வந்ததுயாது இளம்புயலோ
தண்ணொளி வீசிடும்சூரியனின்கதிர்
தானும் மலர்முகம் சுட்டதுண்டோ
விண்நிறை மாயஇருள்கலைந்தால் பின்னர்
வேறெது காலை புதிதல்லவோ

சிறிதுநேரம் அவள் முகத்தையே பார்த்துக் கொண்டவன்
அவள்துயரம் நீங்க....

பூக்கும் மலர்களைக் காண்புது நெல்வயல்
புன்னகைக்கும் கதிர் புள்ளினம்காண்
தீக்குள் எரிந்திடும் வீறினைப்பார் எங்கள்
தேகம் படைத்தவர் கோவிலைக்காண்
மாக்கள் மனிதன்மரம் செடிகாண் இந்த
மாபெரும் மண்ணும் மதிவெயில் காண்
ஆக்கும் கடவுளின் நோக்கமும்பார் இனி
அன்புகொண்டே என்றும் வாழ்வினைக் காண்!

****************************
மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம்

அனந்தம் ஜீவ்னி
அனந்தம் ஜீவ்னி
பண்பாளர்

பதிவுகள் : 211
இணைந்தது : 03/11/2011

Postஅனந்தம் ஜீவ்னி Fri Jan 06, 2012 9:21 pm

நீர்வற்றிப் போகலாம் நீள்வான் வெயில்பட்டு
நெஞ்சத்தின் ஈரமும் வற்றுவதோ
காயொன்று வீசுவர் கல்லும்பட்டுக் கனி
யாகிடமுன் நிலம் வீழுவதோ
வாய்விட்டுப்பேசிட வண்ணம் கலைந்துமே
வாழ்வெட்டா தூரம் இருப்பதுவோ
போய் எட்டிதொட்டிட பொன்னொளி வானமும்
பொய்த்துவிடும் இதுஅப்படியோ

அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு பன்முக தன்மை சுடரும் வரிகள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jan 06, 2012 9:24 pm

அழகிய கவிதைப் படைப்பு அண்ணா! சூப்பருங்க



மதி மயங்கும் மாலைவேளை (கவிதை) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Fri Jan 06, 2012 11:00 pm

சிவா wrote:அழகிய கவிதைப் படைப்பு அண்ணா! சூப்பருங்க

நன்றிகள் !சும்மா இருக்க முடியவில்லை. இதைத் தவிர வேறெதிலும் மனம் போகவுமில்லை அதனால் எழுதிக்கொண்டிருக்கிறேன்!!
மீண்டும் தங்களுக்கும்

அனந்தம் ஜிவ்னி அவர்களுக்கும் நன்றிகள் உரித்தாகுக!

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sat Jan 07, 2012 11:28 am

நீர்வற்றிப் போகலாம் நீள்வான் வெயில்பட்டு
நெஞ்சத்தின் ஈரமும் வற்றுவதோ
காயொன்று வீசுவர் கல்லும்பட்டுக் கனி
யாகிடமுன் நிலம் வீழுவதோ
வாய்விட்டுப்பேசிட வண்ணம் கலைந்துமே
வாழ்வெட்டா தூரம் இருப்பதுவோ
போய் எட்டிதொட்டிட பொன்னொளி வானமும்
பொய்த்துவிடும் இதுஅப்படியோ

சேய் விட்டுப் போஎன்று சொல்லுவளோ தாயும்
சேராது எட்டி யிருப்பதுண்டோ
பூமொட்டு தன்னை பறிப்பதுண்டோ அது
பூத்திடும் வண்ணம்சி றப்பல்லவோ
மைதொட்டுபூசிடும் கண்களை மூடுமி
மைவிட்டு மூடா திருந்திடுமோ
பொய்சொட்டும் பேசாதோர் நீதியின்முன்ஏதும்
போய்மதி கெட்டுப் புழுகுவரோ


....................சங்க கால இலக்கியம் படித்ததுபோன்ற உணர்வுகள்.
தமிழ் இவர்வழி சங்க நாதம் முழங்கிக்கொண்டுதான் இருக்கிறது.
வாழ்க, வளர்க கிரிகாசன் இந்த உலகு உள்ளமட்டும்.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sun Jan 08, 2012 7:16 am

Kaa Na Kalyanasundaram wrote:நீர்வற்றிப் போகலாம் நீள்வான் வெயில்பட்டு..

....................சங்க கால இலக்கியம் படித்ததுபோன்ற உணர்வுகள்.
தமிழ் இவர்வழி சங்க நாதம் முழங்கிக்கொண்டுதான் இருக்கிறது.
வாழ்க, வளர்க கிரிகாசன் இந்த உலகு உள்ளமட்டும்.

தங்கள் வாழ்த்தை பெரும் வெகுமதியாக ஏற்றுக்கொள்கிறேன்.
நன்றிகள்!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jan 08, 2012 11:27 am

kirikasan wrote:
சிவா wrote:அழகிய கவிதைப் படைப்பு அண்ணா! சூப்பருங்க

நன்றிகள் !சும்மா இருக்க முடியவில்லை. இதைத் தவிர வேறெதிலும் மனம் போகவுமில்லை அதனால் எழுதிக்கொண்டிருக்கிறேன்!!
மீண்டும் தங்களுக்கும்

அனந்தம் ஜிவ்னி அவர்களுக்கும் நன்றிகள் உரித்தாகுக!

படைப்பாளன் சும்மா இருந்துவிட்டால் அதன் இழப்பு சமுதாயத்திற்குத்தானே! தொடர்ந்து எழுதுங்கள்.



மதி மயங்கும் மாலைவேளை (கவிதை) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக