Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள் by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kavithasankar | ||||
prajai |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கடலூரின் தொடரும் சோகம் 15 அமைச்சர்கள் முகாமிட்டும் மின்சாரமில்லை
2 posters
Page 1 of 1
கடலூரின் தொடரும் சோகம் 15 அமைச்சர்கள் முகாமிட்டும் மின்சாரமில்லை
கடலூர்: கடலூர் மாவட்டத்தில், புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் புனரமைக்க, 15 அமைச்சர்கள் முகாமிட்டுள்ளதால், மினி தலைமைச் செயலகம் போல அங்குள்ள நிலை காட்சியளிக்கிறது. ஆனால், மின் வினியோகம் சீராகாததால், மக்கள் அதிருப்தி அதிக அளவில் எதிரொலிக்கிறது. "தானே' புயலில் சிக்கிய கடலூர் மாவட்டத்தில், மீட்புப் பணிகளில் ஒவ்வொரு ஒன்றியம், நகராட்சிக்கும், ஒரு அமைச்சர் வீதம் பொறுப்பாளர்களாக தமிழக முதல்வர் ஜெயலலிதா நியமித்துள்ளார். அதைத் தொடர்ந்து, அமைச்சர்கள் அனைவரும், தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பகுதிகளில், மீட்பு மற்றும் சீரமைப்புப் பணிகள் மேற்கொண்டு வருகின்றனர். அவ்வப்போது மாவட்ட நிர்வாக அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு, புள்ளி விவரங்களை கேட்டு வருகின்றனர். கலெக்டரிடம் தாராளமாக புள்ளி விவரங்கள் வழங்கி வந்த அதிகாரிகள், துறை சார்ந்த அமைச்சர்களிடம் கொடுக்கத் திணறி வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில், 15 அமைச்சர்கள் மற்றும் மாநில அளவிலான அதிகாரிகள் முகாமிட்டுள்ளதால், ஏராளமான சுழல் விளக்கு வாகனங்கள் வலம் வருவது, ஒரு மினி தலைமைச் செயலகம் செயல்படுவது போல் காட்சியளிக்கிறது. அப்படி இருந்தும், அதிக பயனில்லை என்பதற்கு அடையாளமாக, சேத விவரக் கணக்கெடுப்பு பணிகள் கூட தாமதமாக, ஆமை வேகத்தில் நடக்கிறது.பல கிராமங்களில் மின்சாரத்தைப் பார்க்க மாதக்கணக்கில் ஆகும் நிலை ஏற்பட்டுள்ளது என்பதால், மக்கள் அதிருப்தியில் உள்ளனர். பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள, 41 ஊராட்சிகளில், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடிசை வீடுகள், சாலையோரங்களில் இருந்த பல்லாயிரக்கணக்கான மரங்கள், ஒரு லட்சம் ஏக்கருக்கும் மேற்பட்ட நெற்பயிர்கள், மணிலா, வாழை என அனைத்து பயிர் வகைகளும் சேதமடைந்துள்ளன. சேதம் குறித்து கிராமங்களில் கணக்கெடுக்கும் பணி இன்னும் எடுக்க முடியாமல் உள்ளது. அதேபோன்று, பு.முட்லூர் துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில், 1,500க்கும் மேற்பட்ட மி ன் கம்பங்கள் சேதமடைந்துள்ளன. போர்க்கால அடிப்படையில் அனைத்து இடங்களிலும் மின் கம்பங்களை சீரமைக்கப் போதுமான ஊழியர்கள் பற்றாக்குறை, மின் ஒயர்கள், எலக்ட்ரானிக் மின் பொருட்கள் இல்லாததால், நிவாரணப் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
நகரப் பகுதிகளில் மட்டும் புதிய மின் கம்பங்கள் நட்டு சீரமைக்கப்படுகிறது. பல கிராமங்களில் புயலால் விழுந்த மின் கம்பங்கள் அப்படியே கிடக்கின்றன. இதனால், மின்சாரம் கிடைக்க மாதக்கணக்கில் ஆகும் நிலை ஏற்பட்டுள்ளது. குடிநீர் வசதி, வீடுகளில் மின் வசதி இல்லாமல், 60 ஆண்டுகளுக்கு முன்பிருந்த அவல நிலையில் மக்கள் இருக்கும் வகையில் சேதம் உள்ளது.
சலுகை யாருக்கு? : "தானே' புயலால் மூன்றரை லட்சம் வீடுகள் கடலூரில் சேதமடைந்தன.
நான்கு லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த விவசாய பயிர்கள் முற்றிலும் அழிந்தன. மின்சாரம் மற்றும் குடிநீர் வினியோகம் அடியோடு தடைபட்டு, மக்கள் கடந்த ஒரு வாரமாக பரிதவித்து வருகின்றனர். இங்கு, புயல் பாதிப்பு குறித்து அதிகாரிகள் கணக்கெடுப்பு நடத்தினர். இந்தக் கணக்கெடுப்பு பல பகுதிகளில் அந்தந்தப் பகுதி ஆளுங்கட்சி பிரமுகர்களின் விருப்பத்திற்கு ஏற்ப, ரேஷன் கார்டு அடிப்படையிலும், சில இடங்களில் சேதத்தின் அடிப்படையிலும் நடந்துள்ளன.
நிவாரண உதவியை அரசு ஊழியர்கள் தான் தர வேண்டும். ஆனால், பல இடங்களில் அந்தந்தப் பகுதி ஆளுங்கட்சியினர் மற்றும் அவரது ஆதரவாளர்களே வழங்கி வருகின்றனர். இவர்கள், முழுமையாக சேதம் அடைந்த வீடுகளுக்கு, 5,000 ரூபாய்க்கு பதிலாக, 2,500 ரூபாயும், பகுதி சேத வீட்டிற்கு, 2,500 ரூபாய்க்கு பதில், 2,000 ரூபாயும் வழங்குகின்றனர்.
மேலும், தங்களுக்கு வேண்டப்பட்டவர்கள் எனில், ஒரே வீட்டில் இரண்டுக்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுகளுக்குக் கூட நிவாரணத் தொகை வழங்குகின்றனர். மற்றக் கட்சியினர் என்றால், பட்டியலில் பெயர் இல்லை என, திருப்பி அனுப்புகின்றனர். மேலும், அரசின் மீது மக்கள் கடும் அதிருப்தி கொண்டு, அரசு அதிகாரிகளைக் கொண்டு நிவாரணத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கருத்து தெரிவிக்கின்றனர்.
மந்திரி சிறைபிடிப்பு! : நெல்லிக்குப்பத்தில் முறையான நிவாரணம் வழங்க வலியுறுத்தி அமைச்சரை, மக்கள் சிறை பிடித்தனர். கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம் நகராட்சியில் புயல் நிவாரணப் பணிகளை கண்காணிக்க, நேற்று மதியம் நகராட்சி அலுவலகம் வந்த தொழிலாளர் நலத்துறை அமைச்சர் செல்லபாண்டியன், நிவாரணப் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின், கலெக்டரை நேரடியாக சந்திப்பதாகக் கூறி அமைச்சர் கிளம்பினார். அப்போது, முன்னாள் நகராட்சித் தலைவர் கெய்க்வாட் பாபு தலைமையில் நூற்றுக்கணக்கானோர் நகராட்சி அலுவலக வாயிலில் கூடி, அமைச்சர் செல்லபாண்டியன் வெளியே செல்ல முடியாமல் ஒரு மணி நேரம் சிறை பிடித்தனர்.
அனைவருக்கும், 5,000 ரூபாய் நிவாரணம் கேட்டு கோஷம் எழுப்பினர். "கலெக்டரிடம் பேசி நடவடிக்கை எடுக்கிறேன்' என கூறிவிட்டு, விட்டால் போதும் எனக் கிளம்பிச் சென்றார் அமைச்சர்.
கடலூர் முதுநகர் பகுதியில் மின்சாரம் வழங்காததைக் கண்டித்து, மின் வாரிய அலுவலகத்தை மக்கள் முற்றுகையிட்டதால், அதிர்ச்சியில் அதிகாரி மயங்கி விழுந்தார்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ள மின் வாரிய ஊழியர்கள், தடைகளை சீரமைத்து வருகின்றனர்; ஆனால், இன்னமும் நிலைமை சீரடையவில்லை. கடலூர் முதுநகர் பகுதியில் பெரும்பாலான தெருக்களுக்கு மின்சாரம் வழங்கிய நிலையில், இருசப்ப செட்டித் தெருவிற்கு மட்டும் மின்சாரம் வழங்கவில்லை. ஆனால், அதே தெருவில் உள்ள மின் வாரிய அலுவலகத்திற்கு மட்டும் நேற்று மின்சாரம் வழங்கப்பட்டது.
ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், நேற்று காலை, 11:20 மணிக்கு அங்குள்ள மின் வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர், அலுவலகத்தைப் பூட்ட முயன்றனர். பின்னர் சமாதானப் பேச்சு நடந்தாலும், அலுவலகத்தில் இருந்த உதவிப் பொறியாளர் கோவிந்தராஜ் திடீரென மயங்கி விழுந்தார். உடன், அவரை ஆம்புலன்ஸ் மூலம் கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத் தொடர்ந்து, முற்றுகை கைவிடப்பட்டது.
தினமலர்
நகரப் பகுதிகளில் மட்டும் புதிய மின் கம்பங்கள் நட்டு சீரமைக்கப்படுகிறது. பல கிராமங்களில் புயலால் விழுந்த மின் கம்பங்கள் அப்படியே கிடக்கின்றன. இதனால், மின்சாரம் கிடைக்க மாதக்கணக்கில் ஆகும் நிலை ஏற்பட்டுள்ளது. குடிநீர் வசதி, வீடுகளில் மின் வசதி இல்லாமல், 60 ஆண்டுகளுக்கு முன்பிருந்த அவல நிலையில் மக்கள் இருக்கும் வகையில் சேதம் உள்ளது.
சலுகை யாருக்கு? : "தானே' புயலால் மூன்றரை லட்சம் வீடுகள் கடலூரில் சேதமடைந்தன.
நான்கு லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த விவசாய பயிர்கள் முற்றிலும் அழிந்தன. மின்சாரம் மற்றும் குடிநீர் வினியோகம் அடியோடு தடைபட்டு, மக்கள் கடந்த ஒரு வாரமாக பரிதவித்து வருகின்றனர். இங்கு, புயல் பாதிப்பு குறித்து அதிகாரிகள் கணக்கெடுப்பு நடத்தினர். இந்தக் கணக்கெடுப்பு பல பகுதிகளில் அந்தந்தப் பகுதி ஆளுங்கட்சி பிரமுகர்களின் விருப்பத்திற்கு ஏற்ப, ரேஷன் கார்டு அடிப்படையிலும், சில இடங்களில் சேதத்தின் அடிப்படையிலும் நடந்துள்ளன.
நிவாரண உதவியை அரசு ஊழியர்கள் தான் தர வேண்டும். ஆனால், பல இடங்களில் அந்தந்தப் பகுதி ஆளுங்கட்சியினர் மற்றும் அவரது ஆதரவாளர்களே வழங்கி வருகின்றனர். இவர்கள், முழுமையாக சேதம் அடைந்த வீடுகளுக்கு, 5,000 ரூபாய்க்கு பதிலாக, 2,500 ரூபாயும், பகுதி சேத வீட்டிற்கு, 2,500 ரூபாய்க்கு பதில், 2,000 ரூபாயும் வழங்குகின்றனர்.
மேலும், தங்களுக்கு வேண்டப்பட்டவர்கள் எனில், ஒரே வீட்டில் இரண்டுக்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுகளுக்குக் கூட நிவாரணத் தொகை வழங்குகின்றனர். மற்றக் கட்சியினர் என்றால், பட்டியலில் பெயர் இல்லை என, திருப்பி அனுப்புகின்றனர். மேலும், அரசின் மீது மக்கள் கடும் அதிருப்தி கொண்டு, அரசு அதிகாரிகளைக் கொண்டு நிவாரணத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கருத்து தெரிவிக்கின்றனர்.
மந்திரி சிறைபிடிப்பு! : நெல்லிக்குப்பத்தில் முறையான நிவாரணம் வழங்க வலியுறுத்தி அமைச்சரை, மக்கள் சிறை பிடித்தனர். கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம் நகராட்சியில் புயல் நிவாரணப் பணிகளை கண்காணிக்க, நேற்று மதியம் நகராட்சி அலுவலகம் வந்த தொழிலாளர் நலத்துறை அமைச்சர் செல்லபாண்டியன், நிவாரணப் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின், கலெக்டரை நேரடியாக சந்திப்பதாகக் கூறி அமைச்சர் கிளம்பினார். அப்போது, முன்னாள் நகராட்சித் தலைவர் கெய்க்வாட் பாபு தலைமையில் நூற்றுக்கணக்கானோர் நகராட்சி அலுவலக வாயிலில் கூடி, அமைச்சர் செல்லபாண்டியன் வெளியே செல்ல முடியாமல் ஒரு மணி நேரம் சிறை பிடித்தனர்.
அனைவருக்கும், 5,000 ரூபாய் நிவாரணம் கேட்டு கோஷம் எழுப்பினர். "கலெக்டரிடம் பேசி நடவடிக்கை எடுக்கிறேன்' என கூறிவிட்டு, விட்டால் போதும் எனக் கிளம்பிச் சென்றார் அமைச்சர்.
கடலூர் முதுநகர் பகுதியில் மின்சாரம் வழங்காததைக் கண்டித்து, மின் வாரிய அலுவலகத்தை மக்கள் முற்றுகையிட்டதால், அதிர்ச்சியில் அதிகாரி மயங்கி விழுந்தார்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ள மின் வாரிய ஊழியர்கள், தடைகளை சீரமைத்து வருகின்றனர்; ஆனால், இன்னமும் நிலைமை சீரடையவில்லை. கடலூர் முதுநகர் பகுதியில் பெரும்பாலான தெருக்களுக்கு மின்சாரம் வழங்கிய நிலையில், இருசப்ப செட்டித் தெருவிற்கு மட்டும் மின்சாரம் வழங்கவில்லை. ஆனால், அதே தெருவில் உள்ள மின் வாரிய அலுவலகத்திற்கு மட்டும் நேற்று மின்சாரம் வழங்கப்பட்டது.
ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், நேற்று காலை, 11:20 மணிக்கு அங்குள்ள மின் வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர், அலுவலகத்தைப் பூட்ட முயன்றனர். பின்னர் சமாதானப் பேச்சு நடந்தாலும், அலுவலகத்தில் இருந்த உதவிப் பொறியாளர் கோவிந்தராஜ் திடீரென மயங்கி விழுந்தார். உடன், அவரை ஆம்புலன்ஸ் மூலம் கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத் தொடர்ந்து, முற்றுகை கைவிடப்பட்டது.
தினமலர்
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: கடலூரின் தொடரும் சோகம் 15 அமைச்சர்கள் முகாமிட்டும் மின்சாரமில்லை
என்னடா தமிழகத்திற்கு வந்த சோதனை? அனைத்திற்கும் காரணம் தமிழக மக்களுக்கு கருணாநிதி குடும்பத்தினர் செய்வினை செய்து வைத்ததுதான்.
விரைவில் நல்ல மந்திரவாதியைப் பார்த்து இதற்குப் பரிகாரம் செய்ய வேண்டும்.
விரைவில் நல்ல மந்திரவாதியைப் பார்த்து இதற்குப் பரிகாரம் செய்ய வேண்டும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
» இடுகாடுகளில் குவியும் சவப்பெட்டிகள்: ஸ்பெயினில் தொடரும் சோகம்
» நீட் தேர்வு தோல்வியால் தொடரும் சோகம்: தெலுங்கானா, டில்லி மாணவர் தற்கொலை
» பதிமூன்று ஆண்டுகளாக தொடரும் சோகம்: கார்கில் வீரரின் குடும்பத்துக்கு நியாயம் கிடைக்குமா?
» என் சோகம்
» பூவன் கவிதைகள்
» நீட் தேர்வு தோல்வியால் தொடரும் சோகம்: தெலுங்கானா, டில்லி மாணவர் தற்கொலை
» பதிமூன்று ஆண்டுகளாக தொடரும் சோகம்: கார்கில் வீரரின் குடும்பத்துக்கு நியாயம் கிடைக்குமா?
» என் சோகம்
» பூவன் கவிதைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|