ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிணத்து கழுதையும் நம் வாழ்வியலும்.

Go down

கிணத்து கழுதையும் நம் வாழ்வியலும்.   Empty கிணத்து கழுதையும் நம் வாழ்வியலும்.

Post by முஹைதீன் Sat Jan 07, 2012 2:06 pm


கிணத்து கழுதையும் நம் வாழ்வியலும்.






கிணத்து கழுதையும் நம் வாழ்வியலும்.   L559025451

'Shake it off and take a step up' என்ற
அந்த ஆங்கிலக் கதை ஞாபகம் வந்தது.

விவசாயி ஒருவரிடம் ஒரு கழுதை இருந்தது. அது அவரது நீண்டகால சொத்து. ஒரு
நாள் இந்த விவசாயியைத் தேடிவந்த சரசு அக்காவோடு அவரது தோட்டத்துக்
கொட்டிலினுள் இருந்து அளவளாவிக்கொண்டு இருந்த பொழுது (??) அவரது கழுதையின்
அழுகை சத்தம் தோட்டத்தின் தெற்கு பக்கமிருந்து ஓலமாய் ஒலித்தது. தனது
கழுதைக்கு ஏதோ ஆபத்து வந்துவிட்டது என தீர்க்கமாய் அறிந்த விவசாயி கழுதையின் அழுகைச் சத்தம் வந்த திசை நோக்கி ஓட
ஆரம்பித்தார்.

கிணத்து கழுதையும் நம் வாழ்வியலும்.   Download


அங்கு
சென்று பார்க்கும் பொழுதுதான் அவரது கழுதை தவறுதலாக அருகில் இருந்த பெரிய
கிணற்றினுள் விழுந்து விட்டதை பார்த்த அந்த விவசாயி அதற்கு என்ன செய்யலாம்
என அவசர அவசரமாக சிந்திக்கத் தொடங்கினார். இரண்டு விடயங்கள் அவர்
சிந்தனையில் வந்து டமார் என விழுந்தது. ஒன்று அந்த கழுதை மிகவும் வயதான்
ஒரு ஓல்டு கழுதை. அதனால் முன்பு போல அது இது என்று எதுவுமே செய்ய
முடிவதில்லை. சாவுக்கு இந்தா அந்தா என்று இருக்கிறது அந்த கழுதை.
இரண்டாவது, அந்த கிணற்றை மூடிவிட வேண்டும் என்று முடிவெடுத்து இன்று பல
வருடங்கள் ஆகிவிட்டன. அந்த பாழடைந்த கிணறு இப்பொழுதெல்லாம் எதற்கும்
பிரயோசனப் படுவதில்லை.

ஆக, இந்த இரண்டு விடயங்களையும் ஆராய்ந்த இந்த பாவி மனுஷன் ஒரு முடிவிற்கு
வந்தது. 'ஓகே. கழுதைக்கும் சாகிற வயசு. கிணறும் மூடவேண்டி இருக்கு. ஆகவே,
அப்படியே கழுதைய உள்ளே விட்டு இந்த கிணற்றை மண்ணையும் குப்பைகளையும் கொட்டி
மூடிவிடுவோம்.' இதுதான் அந்த விவசாயி எடுத்த இறுதி முடிவு. (அட பாவி.. பட்
இந்த டீலிங் நல்லாதானே இருக்கு..) எனவே, ஊராரை உதவிக்கு அழைத்து அந்த
கிணற்றை மூட ஆரம்பித்தனர் அனைவரும்.

கிணத்து கழுதையும் நம் வாழ்வியலும்.   Download+%25281%2529

சவலை எடுத்து ஒவ்வொரு தடவையாக ஒவ்வொருவரும் சுற்றியிருந்த அழுக்குகளையும்
மண்ணையும் வாரி அள்ளி அந்த கிணற்றினுள் போட ஆரம்பித்தனர். ஒவ்வொரு சவல்
அழுக்கும் கிணற்றினுள்ளே விழும் பொழுதும், அதுதான் கிணற்றினுள் இருக்கும்
அந்த கழுதையின் மேல் விழும் பொழுதும் அந்த கழுதை குவீர் குவீர் என
சத்தமிட்டு அழுதது. இவர்களும் விடுவதாய் இல்லை. சிறிது நேரம் சென்றதும்
கழுதையின் சத்தம் இல்லாமல் போக அந்த விவசாயி 'அப்பாடா அது செத்துட்டுது..
சத்தத்த காணோம்..' என எண்ணியபடி கிணற்றை எட்டிப் பார்த்து மலைத்து
நின்றார்.

ஒவ்வொரு முறை தனக்கு மேலே இந்த அழுக்குகள் விழுந்ததும் தனது உடலை ஒருமுறை
குலுக்கியதும் அந்த அழுக்குகளும் மண்ணும் கீழே விழுந்துவிடுகின்றன. பின்னர்
கீழே விழுந்த அந்த அழுக்குகள் மீது ஒரு எட்டு வைத்து மேலே ஏறி
நின்றுகொண்டிருந்தது அந்த கழுதை. இதைப் பார்த்த விவசாயி, அதன்
புத்திசாதூரியத்தை எண்ணி வியந்து தொடர்ந்தும் அழுக்குகளையும் மண்ணையும்
அள்ளிப் போடும் படி மற்றவர்களை கேட்டுக்கொண்டார். அவர்களும் அவ்வாறே
தொடர்ந்து அவற்றை கழுதை மேலே போட்டுக்கொண்டிருந்தனர். நம்ம புத்திசாலிக்
கழுதையும் அவரது பாணியிலே உடலை உலுப்பி கீழே தட்டிவிடுவதும் பின்னர் அதன்
மேல் ஒரு படி ஏறி மேலே வருவதுமாய் இருந்தது.

சொற்ப நேரத்தில் கிணற்றை திரும்பிப் பார்த்து மலைத்துப் போய் நின்றனர்
அனைவரும். காரணம் மேலே மேலே வந்து வந்து இப்பொழுது கிணற்றின் மேல்
விளிம்பில் சிரித்தபடி நின்றுகொண்டிருந்தது கழுதை. அடுத்த சவல் அழுக்கை
அள்ள, சிம்பிள் ஆக வெளியே குதித்து தனது எஜமான் அருகே போய் நின்றது
கழுதை. இறுதியில் கிணறு மூடப்பட்டாலும் கழுதை தப்பிக் கொண்டது.

கிணத்து கழுதையும் நம் வாழ்வியலும்.   Download+%25282%2529



பாடம். (ஓடாதேங்கோ, இது அந்த பாடம் இல்ல... வாழ்க்கைப் பாடம்.. ஹி ஹி ஹி)

வாழ்க்கை உங்கள் மேலே எல்லா வகையான குப்பைகளையும் கொட்டிக்கொண்டே
இருக்கும். அதிலிருந்து வெளியே வருவதற்கான ஒரே வழி இந்த கழுதை செய்தது
போன்று அழுக்கை தட்டிவிட்டு அதன் மேல் ஏறி நடப்பது தான். 'Shake it off and take a step up'. அதிலும்,
நாம் உடனடியாகவே அந்த கிணற்றிலிருந்து வெளியில் வர முடியாது.. கொஞ்சம்
கொஞ்சமாய் தொடர்ந்தும் அதே முயற்சியை செய்யும் போதுதான் வெளியே வரமுடியும்.



சந்தோசமாக இருக்க பிரதானமாக 5 வழிகள்.

  1. மன்னிப்பு. வெறுப்பு, பகைமையிலிருந்து உங்கள் மனங்களை அப்புறப்படுத்திக்கொள்ளுங்கள்.
  2. கவலைகளிலிருந்து இலகுவாக வெளியே வரக்கூடிய வழிகளைத் தேடிக்கொள்ளுங்கள்.
  3. எளிமையாக வாழுங்கள், உங்களிடம் இருப்பதைக் கொண்டு திருப்திப் பட்டுக்கொள்ளுங்கள்.
  4. அதிகம் கொடுங்கள்.
  5. கொஞ்சமாய் எதிர்பாருங்கள்.
http://rajamal.blogspot.com/2012/01/blog-post_06.html


ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum