ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 8:54 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 8:53 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெரிய அய்யம்பாளையம் - மலைமேல் காட்சி தந்த மாதவன்

Go down

பெரிய அய்யம்பாளையம் - மலைமேல் காட்சி தந்த மாதவன் Empty பெரிய அய்யம்பாளையம் - மலைமேல் காட்சி தந்த மாதவன்

Post by சிவா Fri Jan 06, 2012 6:38 pm


"ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி..' என்று பரந்தாமனைப் போற்றுகிறாள் ஆண்டாள்.

ஆனால், அந்த நாரணன் நாமத்தைப் பாட, ஏன் சொல்லக் கூட முடியாமல் தவித்தான் ஒரு பக்தன். காரணம், அந்த இறைவனே அவனை அப்படிப் படைத்திருந்ததுதான். கடவுளின் படைப்பை அந்தக் கடவுளைத் தவிர வேறு யாரால் மாற்ற முடியும்? அதனால் தெய்வமே கதி என இருந்தான் அவன்.

அவன் நம்பிக்கைக்கு இரங்கினார் நாரணன். உத்தமனான அவனைப் பேச வைத்து தன பெயரையும் உத்தமராயப் பெருமாள் என்றே கொண்டார்.

அது என்ன கதை? எங்கே நடந்தது?

முன்னொரு காலத்தில் அய்யம்பாளையம் என்னும் தலத்தில் (இன்று பெரிய அய்யம்பாளையம்) ஆடுமாடு மேய்க்கும் சிறுவன் ஒருவன் இருந்தான். அவன் பெயரோ ஊரோ யாருக்கும் தெரியவில்லை. காரணம் அவனுக்குப் பேசவே இயலாது என்பதுதான்.

எல்லோர் வீட்டு ஆடு, மாடுகளையும் மேய்த்து விட்டு தந்ததை உண்டு, கிடைத்த இடத்தில் உறங்கி காலம் தள்ளினான் அவன். தீய குணம் எதுவும் இல்லாத அவனை உத்தமன் என்றே போற்றினார்கள் அனைவரும்.

ஒரு நாள் மேய்ச்சலுக்கான இடம் தேடி அங்கிருந்த மலை ஒன்றின் மீது ஏறியவன், அங்கே திருமாலின் சிலை ஒன்று புதர்களின் இடையே இருக்கக் கண்டான்.

அந்த தெய்வத்தின் பெயரைக்கூட அறியாத அவன் ஏனோ அந்தச் சிலையிடம் தன் மனதை பறிகொடுத்தான். தன்னைப் பேச வைக்கவே அந்தக் கடவுள் அங்கே தோன்றியிருப்பதாக நம்பினான். கண்களில் நீர் வழிய வேண்டினான். தினமும் இது தொடர்ந்தது.

சில நாட்களுக்குப்பின் ஸ்ரீதேவி நாதன் மனம் இரங்கினார். அன்று தன்னையும் அறியாமல் அந்தச் சிலை முன் ஏதேதோ பேசத் தொடங்கினான் சிறுவன்.

அந்தப் பக்கமாக வந்த சிலர் அவன் பேசுவதைக் கண்டு (கேட்டு) அதிசயித்தனர். தனக்குப் பேச்சு வந்த சந்தோஷத்தில் அந்தப் பெரிமாள் சிலையைக் கட்டிக் கொண்டு அழுதான் சிறுவன்.

அப்போதுதான் எல்லோரும் அச்சிலையைப் பார்த்தார்கள். மகத்துவம் மிக்க திருமாலின் வடிவம் அது என்பதை உணர்ந்தார்கள். அச்செய்தி ஊர் முழுவதும் பரவியது. எல்லோரும் வந்து எம்பிரானை தரிசித்தார்கள்.

வேண்டியோர் வேண்டியன கிடைத்ததால், பெருமாளுக்கும் சிறியதாக ஒரு ஆலயம் எழுந்தது. அது படிப்படியாக வளர்ந்தது. உத்தமச் சிறுவனுக்கு அருளியதால், பெருமாள் உத்தமராயப் பெருமாளானார்.

ஊரின் வடக்கே ஒரு குன்றின் மேல் அமைந்துள்ளது ஆலயம். விஜயநகரப் பேரரசர் காலத்து பாணியில் கட்டப்பட்டுள்ளதால் இதன் காலப் பழமை விளங்குகிறது.

இயற்கை அழகுடன் உள்ள குன்றின் மேல் இருநூறு படிகளேறிச் சென்றால், கோயிலை அடையலாம். ஒரு திருச்சுற்றுடன் மகாமண்டபம், இடை மண்டபம், கருவறை என்ற அமைப்பில் உள்ளது கோயில்.

கருவறையில் அபய, கடி ஹஸ்தங்களுடன் சங்கு, சக்கரம், தாங்கி சேவைசாதிக்கிறார், உத்தமராயப் பெருமாள். இவரை வழிபடுவோர்க்கு வாக்கு வன்மையும், தேயாத செல்வமும் கிட்டும் என்பது நம்பிக்கை.

கருடாழ்வார், அனுமன் சன்னதிகள் இருக்கின்றன. ஆழ்வார்கள் தரிசனமும் கிடைக்கிறது. பெருமாள் திருத்தலத்தில் தாயார் இருக்க வேண்டுமல்லவா? தேடினால் அப்படி ஒரு சன்னதி இல்லவே இல்லை. கேட்டால் இங்கு பெருமாளின் திருமார்பிலேயே திருமகள் நீங்காது வாசம் செய்வதால் தனிச்சன்னதி இல்லை என்கிறார்கள்.

சனிக்கிழமைகளில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடக்கின்றன. இவருக்கு அபிஷேகிக்கப்படும் தேன், பேச்சுக் குறைபாடுள்ளோருக்கு வாக்கு வன்மையைத் தரும் என நம்பப்படுகிறது.

ஆண்டுதோறும் புரட்டாசி சனிக்கிழமைகளிலும், பொங்கலை ஒட்டி, காணும் பொங்கலுக்கு மறுநாளும் சிறப்பு விழாக் காணுகிறார் இத்தலத்துப் பெருமாள்.

உத்தமமான மனதுடன், உத்தமராயப் பெருமாளை தரிசிப்போர் வாழ்வில் எல்லா நலனும் வளமும் பெறுவர் என்பது நிச்சயம்!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியிலிருந்து வேலூர் செல்லும் சாலையில் அத்திமலைப்பட்டி எனும் இடத்தில் இருந்து சுமார் 3 கி.மீ.யில் உள்ளது பெரிய அய்யம்பாளையம். வேலூர், ஆரணியில் இருந்து பேருந்து வசதி உண்டு.


குமுதம் பக்தி


பெரிய அய்யம்பாளையம் - மலைமேல் காட்சி தந்த மாதவன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum