புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடலூர் - தானே புயலின் இழப்பும் மீட்பும் - தொடர் பதிவு  Poll_c10கடலூர் - தானே புயலின் இழப்பும் மீட்பும் - தொடர் பதிவு  Poll_m10கடலூர் - தானே புயலின் இழப்பும் மீட்பும் - தொடர் பதிவு  Poll_c10 
366 Posts - 49%
heezulia
கடலூர் - தானே புயலின் இழப்பும் மீட்பும் - தொடர் பதிவு  Poll_c10கடலூர் - தானே புயலின் இழப்பும் மீட்பும் - தொடர் பதிவு  Poll_m10கடலூர் - தானே புயலின் இழப்பும் மீட்பும் - தொடர் பதிவு  Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
கடலூர் - தானே புயலின் இழப்பும் மீட்பும் - தொடர் பதிவு  Poll_c10கடலூர் - தானே புயலின் இழப்பும் மீட்பும் - தொடர் பதிவு  Poll_m10கடலூர் - தானே புயலின் இழப்பும் மீட்பும் - தொடர் பதிவு  Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
கடலூர் - தானே புயலின் இழப்பும் மீட்பும் - தொடர் பதிவு  Poll_c10கடலூர் - தானே புயலின் இழப்பும் மீட்பும் - தொடர் பதிவு  Poll_m10கடலூர் - தானே புயலின் இழப்பும் மீட்பும் - தொடர் பதிவு  Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
கடலூர் - தானே புயலின் இழப்பும் மீட்பும் - தொடர் பதிவு  Poll_c10கடலூர் - தானே புயலின் இழப்பும் மீட்பும் - தொடர் பதிவு  Poll_m10கடலூர் - தானே புயலின் இழப்பும் மீட்பும் - தொடர் பதிவு  Poll_c10 
25 Posts - 3%
prajai
கடலூர் - தானே புயலின் இழப்பும் மீட்பும் - தொடர் பதிவு  Poll_c10கடலூர் - தானே புயலின் இழப்பும் மீட்பும் - தொடர் பதிவு  Poll_m10கடலூர் - தானே புயலின் இழப்பும் மீட்பும் - தொடர் பதிவு  Poll_c10 
6 Posts - 1%
sugumaran
கடலூர் - தானே புயலின் இழப்பும் மீட்பும் - தொடர் பதிவு  Poll_c10கடலூர் - தானே புயலின் இழப்பும் மீட்பும் - தொடர் பதிவு  Poll_m10கடலூர் - தானே புயலின் இழப்பும் மீட்பும் - தொடர் பதிவு  Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
கடலூர் - தானே புயலின் இழப்பும் மீட்பும் - தொடர் பதிவு  Poll_c10கடலூர் - தானே புயலின் இழப்பும் மீட்பும் - தொடர் பதிவு  Poll_m10கடலூர் - தானே புயலின் இழப்பும் மீட்பும் - தொடர் பதிவு  Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
கடலூர் - தானே புயலின் இழப்பும் மீட்பும் - தொடர் பதிவு  Poll_c10கடலூர் - தானே புயலின் இழப்பும் மீட்பும் - தொடர் பதிவு  Poll_m10கடலூர் - தானே புயலின் இழப்பும் மீட்பும் - தொடர் பதிவு  Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
கடலூர் - தானே புயலின் இழப்பும் மீட்பும் - தொடர் பதிவு  Poll_c10கடலூர் - தானே புயலின் இழப்பும் மீட்பும் - தொடர் பதிவு  Poll_m10கடலூர் - தானே புயலின் இழப்பும் மீட்பும் - தொடர் பதிவு  Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடலூர் - தானே புயலின் இழப்பும் மீட்பும் - தொடர் பதிவு


   
   
avatar
Guest
Guest

PostGuest Thu Jan 05, 2012 10:05 pm

விவசாயிகளுக்கு பணம் வேண்டாம், வாழ வழி செய்யுங்கள்- தங்கர்பச்சான் கோரிக்கை

சென்னை: தானே புயலால் வாழ்வாரதாரம் இழந்து நிற்கும் மக்களுக்கு அரசு தக்க நிவாரணம் ஏற்படுத்தி தரவேண்டும் என்று திரைப்பட இயக்குநர் தங்கர்பச்சான் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

கடலூர் சென்று புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட்டு வந்த அவர் சென்னையில் பத்திரிக்கையாளர்களிடம் கூறியதாவது, .

மிகவும் பின்தங்கிய மாவட்டங்களான விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் இனி மீண்டும் பழைய வாழ்கைக்கு எழவே வாய்ப்பில்லாத அளவுக்கு தானே புயலால் சேதம் அடைந்துள்ளது. உயிர்ச்சேதம் அதிகம் இல்லை என்பதால் யாரும் கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர்.

வாழ்வாதாரம் பாதிப்பு

உயிர்ச்சேதம் என்பதை விட இரு மாவட்டங்களின் வாழ்வாதாரமான பயிர்ச்சேதம், பொருள் சேதம், வாழ்வாதார சேதம் ஏற்பட்டுள்ளது. புயல் தாக்கி 5 நாட்கள் ஆகியும், இன்றும் அங்குள்ள மக்கள் குடிக்க நீரீன்றி, உண்ண உணவின்றி, படுக்க இடமின்றி கேட்பாரற்று கிடக்கிறார்கள்.

அம்மாவட்டங்களிலுள்ள விவசாயிகள் புயல் தாக்கிய அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளாமல் இருக்கிறார்கள். அப்பகுதி மக்களின் குரலாக தமிழக அரசிடமும், மத்திய அரசிடமும் சில கோரிக்கைகளை வைக்கிறேன்.

அழிந்து போன பயிர்கள் எல்லாம் நெல், கரும்பு போன்ற குறுகியகாலப் பயிர்கள் இல்லை. நட்டு வைத்த பிறகு 12 ஆண்டுகள் கழித்து ஆயுள் வரை பலன் தரக்கூடிய மரப் பயிர்களான முந்திரி, பலா, மா போன்றவைகளெல்லாம் அழிந்து போய்விட்டன.

வாழ வழி தேவை

தமிழக முதல்வர் அவர்கள் ஒருமுறை நேரில் சென்று அம்மாவட்டங்களை சுற்றிப் பார்க்க வேண்டுகிறேன். இப்பகுதி மக்கள் உங்களைத்தான் நம்பியிருகிறார்கள். அவர்களிடம் இனி இழப்பதற்கு உயிரைத் தவிர வேறேதும் இல்லை.

நிவாரணம் என்ற பெயரில் அம்மக்களுக்கு பண உதவி கொடுக்கவேண்டாம். வெறும் நிவாரணம், மானியம், கடன் தள்ளுபடியால் மட்டும் விவசாயிகளின் வாழ்வு உயர்ந்து விடாது. நமது அரசு விவசாயம் குறித்து நன்கு அறிந்த முதல் நிலை அமைச்சர்களையும், ஐ.ஏ.எஸ். அதிகாரிகளையும் நியமித்து துரிதமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அவர்களுக்கு வேண்டிய வாழ்வாதாரங்களை உடனே செய்து தாருங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.

அடிப்படை தேவை இல்லை

ஐந்து நாட்களாகியும் அடிப்படைத் தேவைகளில் 5 சதவீதம் கூட தீர்க்க முடியாத அம்மாவட்ட ஆட்சியரை மாற்றி செயலில் இறங்க வேண்டும். பாதிக்கப்பட்ட மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் வேலை வாய்ப்பையும் மற்றும் மாற்றுப் பயிர் திட்டத்தையும், விவசாய உற்பத்திக்கான அனைத்து இடுபொருட்களையும் அரசே தரவேண்டும். விவசாய மக்களுக்கு தண்ணீர் வசதியை அரசு செலவில் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். விவசாயத்திற்கான பொருட்களை அரசே குறைந்த விலையில் விற்பனை செய்ய வேண்டும்.

மதுக்கடைகளை மூடவேண்டும்

பாதிக்கப்பட்ட மாவட்ட மக்களின் பிள்ளைகளுக்கு, வரும் பத்தாண்டுகளுக்கான அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளின் படிப்பு செலவுகள் முழுவதையும் அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும். அத்துடன் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பினை தகுதியுள்ளவர்களுக்கு உடனடியாக ஏற்படுத்தித் தரவேண்டும்.

பள்ளிகளில் காலை, பிற்பகல் என இரண்டு வேளைகளிலும் உணவு தரவேண்டும். மேலும் மேலும் மக்களை சிந்திக்க விடாத, சோம்பேறிகளாக, ஏழைகளாக, உயிர்கொல்லிகளாக மாற்றும் மதுக்கடைகளை உடனே அகற்றிட வேண்டும்.

அம்மாவட்ட மக்களின் மனதில் உள்ள வேதனைகளைத் தீர்க்க முதலமைச்சர் அவர்கள் உடனடியாக, மத்திய அரசிடம் நிதியைக் கேட்டு பெற்று அம்மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டுக் கொடுக்க வேண்டும் என்று தங்கர்பச்சான் வேண்டுகோள் விடுத்தார்.

தட்ஸ் தமிழ்

avatar
Guest
Guest

PostGuest Thu Jan 05, 2012 10:06 pm

கடலூர் மாவட்டத்தை தேசிய பேரிடர் மாவட்டமாக அறிவியுங்கள்-வைகோ

கடலூர்: தானே புயலின் தாண்டவத்தால் முற்றிலும் உருக்குலைந்து போயுள்ள கடலூர் மாவட்டத்தை தேசிய பேரிடர் மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கேட்டுக்கொண்டுள்ளார்.

கடலூர் மாவட்டத்தில் புயலால் சேதமடைந்துள்ள பகுதிகளை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று பார்வையிட்டார். காடாம்புலியூர் பகுதியில் புயலால் முற்றிலும் அழிந்துபோன முந்திரி, பலா மரங்களை பார்வையிட்ட வைகோ விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினார்.

தேசிய பேரிடர் மாவட்டம்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, புயலால் கீழே விழுந்த மரங்களை அகற்ற போதுமான ஆட்களையும், இயந்திரங்களையும் வழங்கி அரசு உதவ வேண்டும். இதற்காக ஏக்கர் ஒன்றுக்கு ரூ 15 ஆயிரம் தர வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், நிர்வாக காரணங்களை கூறி காலம் தாழ்த்தாமல், கடலூர் மாவட்டத்தை பேரிடர் மாவட்டமாக அறிவித்து நிவாரண பணிகளை துரிதப்படுத்த வேண்டும் எனவும் தமிழக அரசை அவர் கேட்டுக்கொண்டார்.

avatar
Guest
Guest

PostGuest Thu Jan 05, 2012 10:16 pm

புதுப்பொலிவு பெற்ற பாரதி சாலை : கடலூரில் மட்டும் எப்படி சாத்தியமானது?

கடலூர்: புயலால் பாதித்த கடலூர் மாவட்டத்தில், மீட்பு பணி மந்த கதியில் நடப்பதால், கடந்த ஐந்து நாட்களாக அலங்கோலமாக கிடக்கிறது. ஆனால், முதல்வர் வருகையை அறிந்து கொண்ட அதிகாரிகள், நேற்று ஒரே இரவில், பாரதி சாலையை புதுப்பித்து விட்டனர். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மக்கள், விரக்தியின் உச்சிக்குச் சென்றனர்.
கடந்த 30ம் தேதி, "தானே' புயல் புரட்டிப் போட்டதில், கடலூர் மாவட்டமே உருக்குலைந்து போனது. மீட்பு பணி மந்தகதியில் நடப்பதால், ஐந்து நாட்களாக, மாவட்டம் அலங்கோலமாகவே கிடக்கிறது. குடிநீர் கூட கிடைக்காமல், மக்கள் கடும் கொதிப்புடன் உள்ளனர்.

நிவாரணம் வழங்க, முதல்வர் ஜெ., கடலூர் வருவதற்கான அறிவிப்பு, நேற்று முன்தினம் மாலை, 5 மணிக்கு வெளியானது. மீட்புப் பணிகளில் சுறுசுறுப்பு காட்டாத அதிகாரிகள், ஜெ., வருவதையொட்டி, விறுவிறுவென செயல்பட்டனர். நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு, நிதியமைச்சர் பன்னீர்செல்வம் தலைமையில், ஆறு அமைச்சர்கள் வந்தனர். ஹெலிகாப்டர் தளம், நிவாரண உதவி வழங்கும் இடமான, சுப்பராயலு ரெட்டியார் திருமண மண்டபத்தை பார்த்தனர். மண்டபத்தின் முன், 50க்கும் மேற்பட்ட பழமையான மரங்கள், புயலில் முறிந்து விழுந்து கிடந்தன. அவற்றை, உடனடியாக அப்புறப்படுத்த உத்தரவிடப்பட்டது.

உடனே, அந்த இடத்திற்கு, 30 லாரிகள் குவிந்தன; அதில், 500 பேர் இருந்தனர். மரங்களை வேகமாக அப்புறப்படுத்தினர். பின், மண்டபத்தின் எதிரில் உள்ள சாலை, இயந்திரம் மூலம் செப்பனிடப்பட்டது. பின், மண் மற்றும் குப்பைகள் அகற்றப்பட்டன. சில நிமிடங்களில், சாலை பளபளப்பானது. "மீடியனில்' புதிய பெயின்ட் அடிக்கப்பட்டது.
நேற்று முன்தினம் நள்ளிரவு வரை, கந்தல் கோலமாகக் கிடந்த சுப்பராயலு ரெட்டியார் திருமண மண்டபம் மற்றும் பாரதி சாலை, நேற்று காலை 8 மணிக்கு, புயல் பாதித்த சுவடே தெரியாமல், புத்தம் புதிதாக ஜொலித்தன. அமைச்சர்களையும், அதிகாரிகளையும் என்னவென்று சொல்வது? இதே வேகத்தில், மற்ற பகுதிகளையும் கவனித்தால் என்ன என, மக்கள் கேட்க துவங்கியுள்ளனர்.


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக