ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Today at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சோதிடம் 100% உண்மை. சவால்!

+10
Dr.சுந்தரராஜ் தயாளன்
சதாசிவம்
T.N.Balasubramanian
ரா.ரா3275
சிவா
பிஜிராமன்
ராஜா
ரேவதி
உதயசுதா
ANTHAPPAARVAI
14 posters

Page 3 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Go down

சோதிடம் 100% உண்மை. சவால்! - Page 3 Empty சோதிடம் 100% உண்மை. சவால்!

Post by ANTHAPPAARVAI Thu Jan 05, 2012 3:17 pm

First topic message reminder :


சோதிடம் பொய்யேன்றும், ஏமாற்று வேலை என்றும், அதை நம்பாதீர்கள் என்றும் அரைத்த மாவையே பல காலங்களாக அரைத்துப் பார்க்கின்றனர் பலர். ஆனால் இன்றுவரை அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பது அவர்களுக்கே தெரியவில்லை என்பது தான் உண்மை! அவர்கள் சோதிடர்களைக் குறை கூறுகிறார்களா? அல்லது சோதிடத்தையே குறை கூறுகிறார்களா என்பது அவர்களின் விமர்சன முழக்கத்தில் இருந்து தெளிவாக எனக்குப் புரியவில்லை!!

சிறுவயதில் எனக்கு ஜலதோஷம் பிடித்திருந்தது, நான் மிகவும் தொந்தரவாக உணர்ந்தேன். அதனால் எனது பெற்றோர்களின் முயற்சியால் நான் மருத்துவ மனைக்கு சென்றேன். அவர்கள் எண்ணன்னோவோ சோதித்துவிட்டு, ஒரு பக்க அளவில் புரியாத கதை வசனத்தை எழுதிக் கொடுத்தார்கள். அதைக் கொண்டு பக்கத்தில் இருக்கும் ஒரு மருந்துக் கடையில் கொடுத்தேன். (எனக்கு இன்றுவரை புரியாத ஒன்று என்னவென்றால். எழுதிக் கொடுக்கும் மருந்துகளை ஏன் அந்த மருத்துவரே கொடுக்கக் கூடாது என்பது தான்? யாராவது மருத்துவம் படித்தவர்கள் இதற்கு பதில் சொல்லட்டும்!...) பிறகு அவரும் அதை திருப்பித் திருப்பி பார்த்து விட்டு மருந்து மாத்திரைகளைக் கொடுத்தார்... நானும் அதையெல்லாம் சாப்பிட்டுப் பார்த்தேன் ஒருவாரத்திற்குப் பிறகு ஜலதோஷம் சரியாகிவிட்டது.

மீண்டும் ஒருநாள் அதே ஜலதோஷம்! நான் மருத்துவமனைக்கு போகவில்லை. ஆனால் அதே ஒருவாரத்தில் அது சரியாகி விட்டது! என்ன ஆச்சரியம்?.... எனக்கு அப்போது தான் மருத்துவத்தின் மகத்துவம் புரிந்தது. அதாவது நாம் ஒரு நோய்க்காக மருத்துவ மனைக்கு சென்று மருந்து சாப்பிட்டு விட்டால், அந்த நோய் எப்போது வந்தாலும் அந்த மருந்து உள்ளே இருந்து கொண்டு அதே கால கட்டத்திற்குள் வந்த நோயை அடித்து விரட்டிவிடும்" என்று. அதனால் நான் இப்போதெல்லாம் மருத்துவமனைக்கே செல்வதில்லை. ஆனால் அதன் பிறகு காய்ச்சல், தலைவலி, பல் வலி, என்று எத்தனையோ நோய்கள் வந்திருக்கிறது. ஆனால் குறிப்பிட்ட காலங்களில் அந்த நோய்களெல்லாம் சரியாகிவிட்டன...

மனித உடல் கூறு என்பது ஒரு அற்புதமான ரகசியம்! அதில் இல்லாத மருந்துகளும் கிடையாது! வராத நோய்களும் கிடையாது. எந்த நோய்க்கான மருந்து நமது உடம்பிற்குள் இருக்கிறதோ, அந்த நோய் மட்டும் தான் நமக்கு வருகிறதாம். இதை நான் சொல்லவில்லை. மருத்துவம் தான் சொல்கிறது!! (யாரும் ஆதாரம் கேட்டுவிடாதீர்கள் இது கிண்டல் ஜாலி ) சாதாரண நோய்களெல்லாம் சிறிது நேரம் படுத்துத் தூங்கினால் சரியாகிவிடுமாம். மிகப்பெரிய நோய்களுக்குத் தான் மருந்தே கிடையாதே பிறகு ஏன் நாம் கவலைப் படவேண்டும். "தூங்கினால்" அல்லது "தாங்கினால்" எல்லாம் சரியாகிவிடும்!!

சரி இப்போது தலைப்பிற்கு செல்வோம்...

"சோதிடம் பொய்யேன்றும், ஏமாற்று வேலை என்றும், அதை நம்பாதீர்கள் என்றும் அரைத்த மாவையே பல காலங்களாக அரைத்துப் பார்க்கின்றனர் பலர்.... ஆனாலும் கடவுளைப் போல இந்த சோதிடத்தையும் அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அவர்கள் ஒப்பிடுவதெல்லாம் அறிவியல்! அறிவியல்! அறிவியல்!! (ஒருவேளை அவர்களெல்லாம் அறிவியல் மேதைகளாக இருப்பார்களோ என்னவோ...)

அறிவியல் என்பது ஒன்றும் வானத்தில் இருந்து திடீரென்று குதித்ததில்லை. மனிதன் சொல்லிக் கொடுத்ததைத் தான் அது திரும்ப சொல்லிக் கொண்டிருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்!!


அப்படியென்றால் கிளி ஜோசியம் போல, இது கிளி அறிவியலாக இருக்குமோ...

சரி, நான் இப்போது மருத்துவமனைக்கு செல்கிறேன்....

என்னை ஒரு நாள் முழுதும் பரிசோதித்துக் கொள்ளட்டும்.....
(அறிவியல் மிகச்சிறந்த சக்தி வாய்ந்தது அல்லவா? அதனால் இந்த ஒருநாள் போதும் என்று நினைக்கிறேன்)
எந்த (அறிவியல்)மருத்துவராவது எனக்கு என்ன நோய் இருக்கிறது? அது எதனால் வந்தது? அது எப்போது தீரும்? அதன் பிறகு எனக்கு அந்த நோய் வராமல் செய்ய முடியுமா? போன்ற விவரங்களை எழுத்து மூலம் அளிப்பார்களா?

குற்றவாளி என்று தெரிந்தே அவருக்கு வக்காலத்து வாங்கும் வக்கீல்களைப் பார்த்து யாராவது இது போன்ற ஒரு குற்றச்சாட்டை வைக்க முடியுமா?

2000 ரூபாய் கொடுத்தால் பெயிலில் விடும் சட்டம் ஏமாற்று வேலை என்பதை இவர்களால் பகிரங்கமாக சொல்ல முடியுமா?

அப்படி சொன்னால் மறுநாளே போராட்டம், வேலை நிறுத்தம், உண்ணாவிரதம் என்று புரட்சி வெடிக்கும்.

வக்கீல்களைப் அழைத்து வந்து ஏன் இப்படி பொய்யாக வாதிடுகிறீர்கள் என்று எந்தத் தொலைக்காட்சியாவது நிகழ்ச்சி நடத்த முடியுமா?

அரசியல் வாதிகளை அழைத்து வந்து ஏன் மக்களுக்கு சேவை செய்ய லஞ்சம் கேட்கிறீர்கள் என்று எந்தத் தொலைக்காட்சியாவது நிகழ்ச்சி நடத்த முடியுமா?

சோதிடர்களை மட்டும் ஏன் குறிவைக்கிறீர்கள்? அவர்களால் எதிர்த்துப் போராட்டம் செய்ய முடியாது... அவர்கள் எல்லாம் ஏழைகள் என்பதற்காகவா? சோதிடம் பொய்யேன்று எதைவைத்து முடிவு செய்தீர்கள்? சோதிடர்கள் ஏமாற்றுகிறார்கள் என்று எதை வைத்து கூறுகிறீர்கள்?

சோதிடர்கள் பணம் வாங்குகிறார்கள் என்பது தான் உங்களின் தவிப்புக்குக் காரணமா? எங்கே எந்தத் தொலைக்காட்சியாவது பணம் வாங்காமல் நிகழ்ச்சி நடத்துவார்களா? எந்த மருத்துவராவது பணம் வாங்காமல் மருத்துவம் பார்ப்பார்களா? எந்த வழக்கறிஞராவது பணம் வாங்காமல் வழக்கு நடத்துவார்களா?

தான் படித்தக் கல்வியை சொல்லிக் கொடுக்க ஆசிரியர்கள் சம்பளம் கேட்கும் போது... எனக்கு ஒட்டத் தெறிந்த வாகனத்தை லைசென்ஸ் எடுத்துத் தான் ஒட்டவேண்டும் என்று ஓட்டுனர் உரிமம் வாங்கச் சொல்லும் போது.... அந்த வாகனத்தை ஓட்டுவதற்கு ரோடு டாக்ஸ் கட்டச்சொல்லும் போது... இந்த நாட்டில் வாழ்வதற்கு வீட்டுவரி, காட்டுவரி, வருமான விரி என்று இப்படிப் பல வழிகளில் பணத்தைப் பிடுக்கிக் கொண்டிருக்கும் போது....
நேர்மையான வழியில்... தனது உழைப்பிற்குத் தகுந்த கூலியை சோதிடர்கள் கேட்பது மட்டும் எப்படி ஏமாற்று வேலையாகும். அவர்களும் சொல்லித்தானே கேட்கிறார்கள்? அல்லது உங்கள் பாக்கெட்டில் இருந்து பிடுங்கிக் கொள்கிறார்களா? அல்லது என்னிடம் சோதிடம் பார்த்தே ஆகவேண்டும் என்று உங்களைக் கட்டாயப் படுத்துகிறார்களா? பேச வாய்ப்புக் கிடைக்கிறது என்பதற்காக கண்டதையும் பேசிக்கொண்டிருக்க வேண்டாம். அதற்கு வேறு பெயர் உண்டு!!

செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ முடியுமா என்ற ஆராய்ச்சியை நாம் இப்போது தான் செய்து கொண்டிருக்கிறோம். ஆனால் இதை சோதிடம் பல காலங்களுக்கு முன்னதாகவே சொல்லியிருக்கிறது. சோதிடத்தில் செவ்வாய் கிரகத்திற்கு "பூமிகாரகன்" என்று பெயர். அதாவது ஒருவன் ஜாதகத்தில் செவ்வாய் கிரகமானது வலுவாக இருந்தால் அவனுக்கு வீடு, மனை வாங்கும் யோகம் இருக்கிறது என்று பொருள். சோதிடம் சொன்ன இந்தத் தகவலை வைத்துக்கொண்டு தான் இந்த அறிவியல் ஆராய்ச்சியே மேற்கொண்டிருக்கிறது!!

சோதிடம் பொய்யேன்று வாதிடும் யாருக்காவது முழுமையான சோதிடம் தெரியுமா? அப்படித் தெரிந்தால் "சக்ராதி ஜடனேக" என்பதற்கு என்ன பொருள் என்று கூறுங்கள் பார்ப்போம்!!

சோதிடர்களாக இருந்தாலும் கூட இதற்கு பதில் சொல்லலாம். (இதில் எல்லாமே புரிந்து விடும்!!)

"இதைத் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் எனக்கில்லை" என்பது போன்ற முட்டாள் தனமான பதிலை யாரும் சொல்ல முயற்சிக்க வேண்டாம். எதையும் முழுமையாகத் தெரிந்து கொள்ளாமல் அதைப் பற்றி விமர்சனம் செய்வது அறியாமையிலும் அறியாமை!!

இப்போது சவாளுக்கு வருகிறேன்...

என்னிடம் 2 கோடி ரூபாய் கொடுத்தீர்களேயானால் 85 வருடங்கள் முழுமையான ஆராய்ச்சி செய்து உங்களின் முற்பிறப்பில் இருந்து மறுபிறப்பு வரை எல்லா விவரங்களையும் மிகத் துள்ளியமாக கணித்து உங்களிடம் என்னால் சொல்ல முடியும்!! அப்படி இல்லை என்றால் மறு நிமிடமே எனது தோல்வியை ஒத்துக் கொண்டு நான் என் உயிரை விடவும் தயார்!!

சவால்!!

யாருக்கு துணிச்சலும், தைரியமும் இருக்கிறது?

குறிப்பு: தெரிந்த நோயைக் குணப்படுத்த பல கோடிவரை வசூல் செய்யும் அறிவியலை விட, தெரியாத பல தகவல்களுக்காக 2 கோடி கேட்கும் எனது சோதிடக் கலை சிறந்ததுதான்!!

"அந்தப்பார்வை"


Last edited by ANTHAPPAARVAI on Sun Jan 08, 2012 1:05 pm; edited 1 time in total (Reason for editing : Delete my Name)


சோதிடம் 100% உண்மை. சவால்! - Page 3 Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

Back to top Go down


சோதிடம் 100% உண்மை. சவால்! - Page 3 Empty Re: சோதிடம் 100% உண்மை. சவால்!

Post by ANTHAPPAARVAI Thu Jan 05, 2012 8:32 pm

T.N.Balasubramanian wrote:பிறந்த நேரம், பிறந்த இடம் துல்லியமாக தெரிந்தால் ஒரு கை தேர்ந்த ஜோதிட நிபுணர் ஜாதக பலன்களை நிச்சயமாக தவறில்லாமல் கூறமுடியும். எனக்கு தெரிந்து 1955 வருடம் intermediate இல் தோல்வி அடைந்து , அவரது பெற்றோர் ஜாதகரை நாட, அவர் கூறிய வார்த்தை ,"இந்த ஜாதகர் படிப்பால் பேறும் புகழும் அடைவார்.கவலையே வேண்டாம் ." யாரும் நம்பாத போதும், அவர் படித்து டிக்ரீ பரீட்சைகளில் தங்க பதக்கம் , பத்மஸ்ரீ பட்டம் பெற்றார். அவர் உறவினர் நான் என்பதில் எனக்குப் பெருமை.
ரமணியன்..

ஆதாரத்திற்கு நன்றி ஐயா! நன்றி


சோதிடம் 100% உண்மை. சவால்! - Page 3 Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

Back to top Go down

சோதிடம் 100% உண்மை. சவால்! - Page 3 Empty Re: சோதிடம் 100% உண்மை. சவால்!

Post by சதாசிவம் Thu Jan 05, 2012 9:04 pm

உங்கள் முதல் பக்கத்தை படித்த பிறகு தான் இந்த குழப்பம்.

செவ்வாய் பூமிகாரகன் என்றால் அங்கு மனிதர்கள் வசிக்கலாம் என்று எந்த ஜோதிடம் கூறியது. சுக்கிரன் களத்திர காரகன், அப்படியானால் காதல், திருமணம் செய்ய வெள்ளி கிரகம் தான் சரி, பூமியில் காதல்/ திருமணம் செய்யக்கூடாது என்று கூறலாமா. செவ்வாய் போர் / சண்டை / ஆயுதம் போன்றவைக்கு காரகன். அப்படியானால் செவ்வாய் கிரகத்தில் தினமும் போர் நடக்கும் என்று கூறலாமா ? சனி ஆயுள் காரகன், அப்படியானால் சனி கிரகத்தில் ஒருவர் சென்றால் அவருக்கு மரணம் ஏற்படாது என்று சொல்லாமா ? புதன் கல்வி காரகன் அப்படியானால் மேற்படிப்புக்கு புதன் கிரகம் செல்லவேண்டுமா ?

ஒரு சமஸ்க்ரித வார்த்தை தெரியவில்லை என்றால் அவர் ஜோதிடர் ஆக முடியாதா ?

சவால் விடுங்கள், சரியாய் விடுங்கள்.

உங்கள் இரண்டு கோடி சவால் ஜோதிடம் தெரிந்தவர் அல்லது ஜோதிடம் நம்புபவர் கூறும் வார்தையாகத் தெரியவில்லை.


சதாசிவம்
சோதிடம் 100% உண்மை. சவால்! - Page 3 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

சோதிடம் 100% உண்மை. சவால்! - Page 3 Empty Re: சோதிடம் 100% உண்மை. சவால்!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Thu Jan 05, 2012 9:16 pm

எவனுக்கு தன்மீதே நம்பிக்கை இல்லையோ அவனுக்குத்தான் ஜோதிடத்தின் மீது நம்பிக்கை இருக்க முடியும் என்பது என் கருத்து. புன்னகை
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

சோதிடம் 100% உண்மை. சவால்! - Page 3 Empty Re: சோதிடம் 100% உண்மை. சவால்!

Post by ANTHAPPAARVAI Thu Jan 05, 2012 9:27 pm

சதாசிவம் wrote:உங்கள் முதல் பக்கத்தை படித்த பிறகு தான் இந்த குழப்பம்.

செவ்வாய் பூமிகாரகன் என்றால் அங்கு மனிதர்கள் வசிக்கலாம் என்று எந்த ஜோதிடம் கூறியது. சுக்கிரன் களத்திர காரகன், அப்படியானால் காதல், திருமணம் செய்ய வெள்ளி கிரகம் தான் சரி, பூமியில் காதல்/ திருமணம் செய்யக்கூடாது என்று கூறலாமா. செவ்வாய் போர் / சண்டை / ஆயுதம் போன்றவைக்கு காரகன். அப்படியானால் செவ்வாய் கிரகத்தில் தினமும் போர் நடக்கும் என்று கூறலாமா ? சனி ஆயுள் காரகன், அப்படியானால் சனி கிரகத்தில் ஒருவர் சென்றால் அவருக்கு மரணம் ஏற்படாது என்று சொல்லாமா ? குரு ஞான காரகன் , அப்படியானால் மேற்படிப்புக்கு குரு கிரகம் செல்லவேண்டுமா ?

ஒரு சமஸ்க்ரித வார்த்தை தெரியவில்லை என்றால் அவர் ஜோதிடர் ஆக முடியாதா ?

சவால் விடுங்கள், சரியாய் விடுங்கள்.

உங்கள் இரண்டு கோடி சவால் ஜோதிடம் தெரிந்தவர் அல்லது ஜோதிடம் நம்புபவர் கூறும் வார்தையாகத் தெரியவில்லை.

அப்பா... எத்தனை கேள்விகள்? திறமையானவர் தான் நீங்கள்!!
உங்கள் கேள்விகளில் என்ன அர்த்தம் இருக்கிறது என்று எனக்குப் புரியவில்லை!

ஆமா... அது சமஸ்கிருத வார்த்தை என்று நான் எப்போது சொன்னேன்? அல்லது அது சமஸ்கிருதம் தான் என்பதை உங்களால் உறுதியாகச் சொல்ல முடியுமா? உங்களுக்கு தமிழ் தெரியுமா?

புரியவில்லை அல்லது தெரியவில்லை என்றால் அது சமஸ்கிருதமா?
தயவு செய்து கற்பனையில் பேசாதீர்கள்!!

2 கோடி சவால் காமெடியாக சொன்னேன் என்பதற்காக அதை சாதாரணமாக நினைத்து விடாதீர்கள்! அதில் நிறையா அர்த்தம் இருக்கிறது! (சில காரணங்களுக்காக அந்தக் காமெடி செய்ய வேண்டிய கட்டாயம்) அறிவியல் ஆராய்ச்சி என்பது நீங்கள் நினைப்பது போல தூங்கி எழும் விஷயம் அல்ல.

சோதிடம் என்பது அறிவியல்!!

பூமி உருண்டை என்பது எவ்வளவு காலங்களுக்குப் பின்னால் கண்டறியப் பட்டது என்று தெரியுமா உங்களுக்கு?


சோதிடம் 100% உண்மை. சவால்! - Page 3 Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

Back to top Go down

சோதிடம் 100% உண்மை. சவால்! - Page 3 Empty Re: சோதிடம் 100% உண்மை. சவால்!

Post by T.N.Balasubramanian Fri Jan 06, 2012 9:40 am

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:எவனுக்கு தன்மீதே நம்பிக்கை இல்லையோ அவனுக்குத்தான் ஜோதிடத்தின் மீது நம்பிக்கை இருக்க முடியும் என்பது என் கருத்து. புன்னகை
எவனுக்கு தன் மீது நம்பிக்கை இல்லையோ அவனுக்கு எல்லாமே சூன்யம் தான் . ஜோதிடத்தை அறிவியலாக பார்த்து ,கற்று தேர்ந்த நிபுணர்களிடம் உரையாடினால், அதிசய தக்க விஷயங்கள் கிடைக்கும் என்பது என் கருத்து. அரைகுறை அலம்பல்கள் எல்லாத் துறையிலும் இருக்கின்றனர்.அவர்களால் நன்மையை தவிர தீமையே அதிகம் விளைகிறது.
ரமணியன்.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சோதிடம் 100% உண்மை. சவால்! - Page 3 Empty Re: சோதிடம் 100% உண்மை. சவால்!

Post by கபாலி Fri Jan 06, 2012 10:58 am

நல்ல விவாதம்... இன்னும் பலர் கருத்துகளை எதிர்நோக்கி இருக்கிறேன்..

நன்றி அந்தப்பார்வை நண்பரே..


நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
avatar
கபாலி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 578
இணைந்தது : 09/04/2011

http://உங்கள் இதயம் தான்..

Back to top Go down

சோதிடம் 100% உண்மை. சவால்! - Page 3 Empty Re: சோதிடம் 100% உண்மை. சவால்!

Post by சிவா Fri Jan 06, 2012 11:21 am

///எத்தனையோ பேர் எவ்வளவோ முயற்சி செய்தும் குழந்தை இல்லாமல் இருக்கிறார்களே///

கோழி முட்டை அனைத்துமே குஞ்சு பொரிப்பதில்லையே? அதுபோலத்தான் மனிதர்களில் சிலருக்கு இயற்கையாகவோ, அல்லது அதிகமான மது, புகைப் பழக்கத்தாலோ ஏற்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய முடிவதில்லை. அதற்காக மருத்துவத்துறையை ஒன்றுக்கும் உதவாத ஜோதிடத்துடன் தாங்கள் தொடர்புபடுத்துவதை குழந்தை கூட ஏற்றுக் கொள்ளாது.

///ஆகாயத்தில் இத்தனை கோள்கள் இருக்கிறது என்றும், அதற்கு இதுதான் பெயர் என்றும் முதலில் சொன்னதே இந்த சோதிடம் தானே///

இதைச் சொன்னதற்காக இன்று எந்த ஜோதிடன் வரலாற்றில் இடம் பிடித்துள்ளான். விடை பூஜ்யம்.

///என்னைப் பொறுத்தவரை அமெரிக்கா எப்போதும் எனக்குக் கீழே தான் இருக்கிறது!!!///

இது மற்றவர்களின் உண்மையான திறமையை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் இல்லாததைக் குறிக்கிறது.

///நீங்கள் சோதிடம் பொய் என்று கூறுகிறீர்களா? அப்படியென்றால் நான் கேட்டிருக்கும் கேள்விக்கு கண்டிப்பாக பதில் அளிக்கவும்!///

கேள்வியா? எங்கே? எங்கே? அதிர்ச்சி


சோதிடம் 100% உண்மை. சவால்! - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சோதிடம் 100% உண்மை. சவால்! - Page 3 Empty Re: சோதிடம் 100% உண்மை. சவால்!

Post by சதாசிவம் Fri Jan 06, 2012 11:29 am


அப்பா... எத்தனை கேள்விகள்? திறமையானவர் தான் நீங்கள்!!
உங்கள் கேள்விகளில் என்ன அர்த்தம் இருக்கிறது என்று எனக்குப் புரியவில்லை!

ஆமா... அது சமஸ்கிருத வார்த்தை என்று நான் எப்போது சொன்னேன்? அல்லது அது சமஸ்கிருதம் தான் என்பதை உங்களால் உறுதியாகச் சொல்ல முடியுமா? உங்களுக்கு தமிழ் தெரியுமா?

புரியவில்லை அல்லது தெரியவில்லை என்றால் அது சமஸ்கிருதமா?
தயவு செய்து கற்பனையில் பேசாதீர்கள்!!

2 கோடி சவால் காமெடியாக சொன்னேன் என்பதற்காக அதை சாதாரணமாக நினைத்து விடாதீர்கள்! அதில் நிறையா அர்த்தம் இருக்கிறது! (சில காரணங்களுக்காக அந்தக் காமெடி செய்ய வேண்டிய கட்டாயம்) அறிவியல் ஆராய்ச்சி என்பது நீங்கள் நினைப்பது போல தூங்கி எழும் விஷயம் அல்ல.

சோதிடம் என்பது அறிவியல்!!

பூமி உருண்டை என்பது எவ்வளவு காலங்களுக்குப் பின்னால் கண்டறியப் பட்டது என்று தெரியுமா உங்களுக்கு?

நண்பரே, உங்கள் அளவுக்கு எனக்கு தமிழ் தெரியாது, பூமி உருண்டை எப்போது கண்டு பிடிக்கப்பட்டது என்றும் தெரியாது.
இது அறிவியல் என்றால் பால அரிஸ்ட்ட யோகம் இன்றைக்குப் பொருந்துமா ? ஜோதிடத்தில் சொல்லப்பட்ட எல்லாப் பாவங்களும், யோகங்களும் இந்த யுகத்தில் ஒத்து வருமா ? பலிக்குமா ?

ஒருவன் தவறு செய்தால் நாடு கடதப்படுவான் ?இதற்கு கூறும் கிரக நிலைகளும் , வெளிநாட்டுக்கு இன்று வேலைக்கு செல்பவர் கிரக நிலையும் ஒன்றா , வேறு வேறா ? வெளிநாட்டு வேலை செல்வது ஜோதிட சாஸ்திரப்படி யோகமா? தோசமா ?

இந்த சந்தேகத்தை தீருங்கள், உங்கள் இரண்டு கோடியை பற்றி பிறகு விவாதிக்கலாம்.


சதாசிவம்
சோதிடம் 100% உண்மை. சவால்! - Page 3 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

சோதிடம் 100% உண்மை. சவால்! - Page 3 Empty Re: சோதிடம் 100% உண்மை. சவால்!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Fri Jan 06, 2012 11:33 am

T.N.Balasubramanian wrote:
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:எவனுக்கு தன்மீதே நம்பிக்கை இல்லையோ அவனுக்குத்தான் ஜோதிடத்தின் மீது நம்பிக்கை இருக்க முடியும் என்பது என் கருத்து. புன்னகை
எவனுக்கு தன் மீது நம்பிக்கை இல்லையோ அவனுக்கு எல்லாமே சூன்யம் தான் . ஜோதிடத்தை அறிவியலாக பார்த்து ,கற்று தேர்ந்த நிபுணர்களிடம் உரையாடினால், அதிசய தக்க விஷயங்கள் கிடைக்கும் என்பது என் கருத்து. அரைகுறை அலம்பல்கள் எல்லாத் துறையிலும் இருக்கின்றனர்.அவர்களால் நன்மையை தவிர தீமையே அதிகம் விளைகிறது.
ரமணியன்.
அரைகுறை அலம்பல்கள் எல்லாத் துறையிலும் இருக்கின்றனர்என்று ஒத்துக்கொண்டதற்க்கு நன்றி. எனக்குத் தெரிந்தவரை ஜோதிடமே ஒரு முளு அலம்பல் என்றுதான் கூறுவேன்.
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

சோதிடம் 100% உண்மை. சவால்! - Page 3 Empty Re: சோதிடம் 100% உண்மை. சவால்!

Post by ANTHAPPAARVAI Fri Jan 06, 2012 2:18 pm

சதாசிவம் wrote:
நண்பரே, உங்கள் அளவுக்கு எனக்கு தமிழ் தெரியாது, பூமி உருண்டை எப்போது கண்டு பிடிக்கப்பட்டது என்றும் தெரியாது.
இது அறிவியல் என்றால் பால அரிஸ்ட்ட யோகம் இன்றைக்குப் பொருந்துமா ? ஜோதிடத்தில் சொல்லப்பட்ட எல்லாப் பாவங்களும், யோகங்களும் இந்த யுகத்தில் ஒத்து வருமா ? பலிக்குமா ?

ஒருவன் தவறு செய்தால் நாடு கடதப்படுவான் ?இதற்கு கூறும் கிரக நிலைகளும் , வெளிநாட்டுக்கு இன்று வேலைக்கு செல்பவர் கிரக நிலையும் ஒன்றா , வேறு வேறா ? வெளிநாட்டு வேலை செல்வது ஜோதிட சாஸ்திரப்படி யோகமா? தோசமா ?

இந்த சந்தேகத்தை தீருங்கள், உங்கள் இரண்டு கோடியை பற்றி பிறகு விவாதிக்கலாம்.

உங்களுக்குத் தமிழ் தெரியுமா என்று கேட்டதற்கு மட்டும் மன்னித்து விடுங்கள் நண்பரே! ஆனால் அப்படிக் கேட்டதற்கு ஒரு காரணம் இருக்கிறது அதை நான் பின்பு கூறுகிறேன்...

பூமி உருண்டை எப்போது கண்டு பிடிக்கப்பட்டது என்றும் தெரியாது.
பிறகு சோதிடம் பொய் என்பதை மட்டும் எப்படித் தெரிந்து கொண்டீர்கள்?
இது அறிவியல் என்றால் பால அரிஸ்ட்ட யோகம் இன்றைக்குப் பொருந்துமா ? ஜோதிடத்தில் சொல்லப்பட்ட எல்லாப் பாவங்களும், யோகங்களும் இந்த யுகத்தில் ஒத்து வருமா ? பலிக்குமா ?
பால அரிட்டம் என்பது யோகம் இல்லை! மற்றும் அது எல்லாக் காலங்களிலும் பொருந்தும்!!
பால அரிட்டம் என்பது என்ன என்று தெரிந்திருந்தால் இந்தக் கேள்வியை நீங்கள் கேட்டிருக்க மாட்டீர்கள் நண்பரே...
சோதிடம் என்பது "டிரையல் வெர்ஷன்" இல்லை. அது எல்லா யுகத்திலும் நிலைத்து நிற்கும். சோதிடத்தை நீங்கள் என்ன இப்போது "தேடியா"க் கண்டு பிடித்தீர்கள்...?
ஒருவன் தவறு செய்தால் நாடு கடதப்படுவான் ?இதற்கு கூறும் கிரக நிலைகளும் , வெளிநாட்டுக்கு இன்று வேலைக்கு செல்பவர் கிரக நிலையும் ஒன்றா , வேறு வேறா ? வெளிநாட்டு வேலை செல்வது ஜோதிட சாஸ்திரப்படி யோகமா? தோசமா ?
நான் தவறு செய்தால் என்னை அமெரிக்காவிற்கு கடத்தி விடுவார்களா? முதலில் நாடு கடத்துவது என்றால் என்ன என்று எனக்கு விலக்குங்கள் நண்பரே...
பிறகு நான் உங்களுக்கு சோதிடத்தைப் பற்றி விளக்குகிறேன்.


சோதிடம் 100% உண்மை. சவால்! - Page 3 Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

Back to top Go down

சோதிடம் 100% உண்மை. சவால்! - Page 3 Empty Re: சோதிடம் 100% உண்மை. சவால்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum