Latest topics
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசுby ayyasamy ram Today at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Today at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Today at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Today at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Today at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Today at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Today at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Today at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Today at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:04 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ராவணனை தேடுகிறது ‘பெண் சிங்கம்’
Page 1 of 1
ராவணனை தேடுகிறது ‘பெண் சிங்கம்’
ராவணனை தேடுகிறது ‘பெண் சிங்கம்’
எனதருமை பெரியோர்களே… தாய்மார்களே… சின்ன சிறார்களே…
புத்தாண்டு வாழ்த்துக்களை உங்களுக்கு தெரிவித்துக் கொள்வதில் இந்த அம்பலவாணன் பெருமிதம் கொள்கிறான்.
போயஸ் தோட்டம் அருகே இருந்த பாதாள சாக்கடைகளை சுத்தம் செய்யும் பணியை கண்டு நாடே வியக்கிறது. நானும் வியந்தேன். அந்த சாக்கடையில் அடிக்கடி சுத்தம் நடக்கும் போது ஒரு சில சுண்டெலிகள் மட்டும் தான் ஓடும். ஆனால், இந்த முறை பெருச்சாளிகள் மட்டுமல்ல.. ஏகப்பட்ட முதலைகளும் வெளியே ஓடியதை கண்டு ஆச்சர்யப்பட்டேன்…
கடைசியாக, சுத்தம் செய்யும் பணியில்… அமைச்சர்களின் பாதுகாப்பு அதிகாரிகளையும் துரத்தி அடித்திருப்பதுதான் அதி விசேஷம்.
ஆமாம்… அமைச்சர்களுக்கு பாதுகாப்பு அதிகாரியாக யார் வர வேண்டும் என்று முடிவு செய்தது கூட மன்னார்குடி மாபியா கும்பல் தான் முடிவு செய்ததாம்.
அதுவும் எம்.நடராஜன் தம்பியும் மாஜி இன்ஸ்பெக்டரான பழனிவேலுவும் முதல்வரிடம் இருந்த பாதுகாப்பு அதிகாரியான திருமலைச்சாமியும் தான் முடிவு செய்தார்களாம். திருமலைச்சாமிதான் அதிக பாதுகாப்பு அதிகாரிகளை முடிவு செய்தது. அதில், ஏகப்பட்ட பணத்தை சுருட்டிக் கொண்டு, மாதம் தோறும் கமிஷனும் வாங்கிக் கொண்டு இருந்தவர் தான் இந்த திருமலைச்சாமி.
இதன் பின்னர் நிலைமை சீரியசாக போய்க் கொண்டிருக்கிறது என்பதை உறுதி செய்யும் செய்திகள், சம்பவங்கள், அசம்பாவிதங்கள், அதிரடிகள் நடந்துக் கொண்டிருக்கிறதே. அது ஏன்? என்று யாராவது கேட்டீர்களா?
ஓட ஓட துரத்தறாங்களே…
அம்மாவை பத்தி பாட பாட…
அம்மா விடமாட்டாங்கறாங்களே…
சொத்துக் கணக்கு எடுக்கறாங்களே…
ஆபீசை மூடச் சொல்றாங்களே…
ஊரை விட்டு ஓடச் சொல்றாங்களே…
மொத்தத்துல ஒண்ணும் புரியல…
என்று மன்னார்குடி ’மண்ணை கவ்வுடி’ ராகத்தில் ஆலாபணை செய்துக் கொண்டிருக்கிறது….
பொது ஜனங்களே…
ஆக… இந்த பேட்ச் அப் என்பது லேசில் நடக்கற மாதிரி தெரியலை. தொடர்ந்து பேக்கப் பேக்கப்….வேலைகள் தான் ஜரூராக நடந்துக் கொண்டிருக்கிறது.
இதில் ஒரு கூத்து நடந்ததாம்..
மன்னார்குடி கும்பல் பெங்களூருவில் கூடி, சதியாலோசனை நடத்தியதாம். அதில், கும்பலுக்கு தலைவர் என்று சொல்லப்படும் ‘பிக் பாஸ்’ ஆன எமன்… என்ன புரியலையா. அதாங்க… எம்.என். சொன்னாராம்..
‘இந்த கேசு புட்டுக்கும் போல இருக்கு. அம்மாவை எப்படியும் இரண்டு வருஷமாவது உள்ளே தள்ளிடுவாங்க போல… உடனே, ஐகோர்ட்டில் இல்லன்னா சுப்ரீம் கோர்ட்டில் போய் மேல் முறையீடு செய்யனும். ஆனா, அதுக்குள்ள முதல்வர் பதவியை விட்டு இறங்கியாகனும். அப்போ யாரு முதல்வரா இருக்கணும்ன்னு நாமளே முடிவு செஞ்சிடணும்… புரிதா…. இது பத்தி கலைஞர் கூட டிஸ்கஸ் செஞ்சிருக்காராம்… ”அந்த பொம்பளை போய்…. நம்ம நடராஜன் சி.எம்.மா வந்தாலும் நல்லா இருக்கும்யா”ன்னு அவரே சொல்லிட்டாராம்…” என்று சொல்லி ஜிலு ஜிலுத்து இருக்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்….
அட… என்ன இப்படி சிரித்தால்… நான் எப்படி பேசுவேன்…
உண்மைத்தான் நண்பர்களே… கதை, காவியங்களில் வரும் எமன் உயிரை எடுப்பார்… இந்த எமன் இன்று உயிரை காப்பாற்றிக் கொள்ள ஊர் ஊராக ஓடிக் கொண்டிருக்கிறார். ஆனால், பெங்களுருவில் பேச்சு பார்த்தீர்களா… எப்படி இருக்கிறது…?
நினைப்புத்தான் பொழப்பு கெடுக்கிறது என்பார்கள். அந்த பேச்சுத்தான் எமனின் பொழப்பை கெடுத்திருக்கிறது.
ஆனால், இந்த கும்பல் வசூலித்த தொகை பற்றி, போயஸ் தோட்டத்தின் அனுமதியோடு ஒரு கணக்கு எடுக்கப்பட்டு வருகிறது. அதில் தான் சூப்பரான தகவல் வந்துக் கொண்டிருக்கிறது.
அதில் ஒன்று தான் ராவணனை தேடி பெண் சிங்கம்(!) ஒன்று அலைந்துக் கொண்டிருக்கிறது என்ற தகவல்.
என்னது….? ராவணனைத் தேடி பெண் சிங்கம் அலைந்துக் கொண்டிருக்கிறதா?
என்ன சொல்கிறீர்கள் என்று அத்தகவல் சொன்னவரை பார்த்து நடு நடுங்கிக் கொண்டே கேட்டேன்…
எதிரே இருப்பவர் சிரித்தார்…
“இல்லீங்க.... வண்டலூரில் இருக்கும் ஜூவில் இருக்கும் பெண் சிங்கத்துக்கிட்ட கூடவா… துட்டு வாங்கி இருப்பாங்க. ஆமா… என்ன சொல்லி வாங்கி இருப்பாங்க… ராத்திரியில ஆண் சிங்கத்தை எப்படியாவது உன்னோட அறைக்கு அனுப்பி வைக்கறோம்னு சொல்லியா துட்டு வாங்கி இருப்பாங்க” என்று சும்மா நானும் கேலியாக கேட்டேன்….
அட…. அப்புறம் அந்த நபர் கேட்ட தகவலை கேட்டு ஆடிப்போய்விட்டேன்… அதாவது… பெண் சிங்கம் யார் தெரியுமா…
உலகத்திலேயே கதை, வசனம் எழுதி 35 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கிய ஒரு வசன கர்த்தா யார் தெரியுமா? அவர்தான் கருணாநிதி… தி.மு.க. தலைவர்… அவர் எழுதிய படங்களை ‘உளியின் ஓசை…. பெண் சிங்கம்…” என்று படங்களாக தயாரித்தவர் ஜெயமுருகன். இவரைத்தான் பெண் சிங்கம் என்று அந்த நண்பர் வர்ணித்தார்.
‘பெண் சிங்கம்’ ஜெயமுருகனுக்கு ஆரம்பத்தில் லாட்டரி தொழில். அதுவும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைதாகி, உள்ளே இருக்கும் மார்ட்டினின் பார்டனர். லாட்டரி போன பிறகு, அந்த பணத்தில் ஒரு பிராந்தி, பீர் தொழிற்சாலை ஆரம்பிக்க ஆசைப்பட்ட பிறகே, கருணாநிதியை அணுகி படம் எடுத்துக் கொண்டிருக்கும் போதே, பிராந்தி தயாரிக்கும் லைசென்ஸ் வாங்கியவர்….
அந்த ‘பெண் சிங்கம்’ நடத்தும் சரக்கு நிறுவனத்தின் பெயர் எஸ்.ஜெ டீஸ்லரீஸ்…. அந்த நிறுவனத்திலிருந்து தான் மார்பியஸ்…. பிரிட்டிஷ் எம்பயர்…. சரக்குகள்…..
தி.மு.க. ஆட்சி போய் அ.தி.மு.க. ஆட்சி வந்ததும் மார்பியஸ் மற்றும் பிரிட்டிஷ் எம்பயர் சரக்குகளை அதிக அளவில் விற்க வைக்க நான் ஏற்பாடு செய்கிறேன்… என்று சொல்லி ராவணன் 2 கோடி கேட்டு ஒரு கோடி அட்வான்ஸ் வாங்கிக் கொண்டாராம்…
ஆனால்… சொன்னபடி செய்யவில்லையாம்… இரண்டு மாதங்களாக இதோ செய்கிறேன்… அதோ செய்கிறேன்… என்று ராவணன்… வித்தை காட்ட… இப்போது, போய்ஸ் தோட்டத்திலிருந்து விரட்டப்பட, பெங்களூருவில் தஞ்சம் அடைந்திருக்கிறாராம்…
இது தெரிந்ததும் “பெண் சிங்கம்’ உறுமிக் கொண்டு புறப்பட்டு இருக்கிறது. ஒரு கோடி தராவிட்டால்… என்ன வேண்டுமானாலும் செய்ய தயங்க மாட்டேன்… என்று ‘பெண் சிங்கம்’ உறும…. சிலர் அந்த ‘பெண் சிங்கத்தை’ நாடி, “அண்ணே… எப்படியாச்சும் ஒரு புகார் மட்டும் கொடுங்க” என்று கொஞ்சிக் கொண்டிருக்கிறார்களாம்…?
ஆக…. ராவணன் மீது புகார் வரலாம். வந்தால்…. கைதாகலாம்…. கைதானால்… புழலா.. திருச்சியா…. கோவையா… பாளையங்கோட்டையா… என்பதை முடிவு செய்வதில் தான் ஏகப்பட்ட குழப்பம் வரும்?
நன்றியை தெரிவித்துக்கொண்டு விடை பெற்றுக்கொள்கிறேன்…
வணக்கம். !
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள், ARRKAY
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
எனதருமை பெரியோர்களே… தாய்மார்களே… சின்ன சிறார்களே…
புத்தாண்டு வாழ்த்துக்களை உங்களுக்கு தெரிவித்துக் கொள்வதில் இந்த அம்பலவாணன் பெருமிதம் கொள்கிறான்.
போயஸ் தோட்டம் அருகே இருந்த பாதாள சாக்கடைகளை சுத்தம் செய்யும் பணியை கண்டு நாடே வியக்கிறது. நானும் வியந்தேன். அந்த சாக்கடையில் அடிக்கடி சுத்தம் நடக்கும் போது ஒரு சில சுண்டெலிகள் மட்டும் தான் ஓடும். ஆனால், இந்த முறை பெருச்சாளிகள் மட்டுமல்ல.. ஏகப்பட்ட முதலைகளும் வெளியே ஓடியதை கண்டு ஆச்சர்யப்பட்டேன்…
கடைசியாக, சுத்தம் செய்யும் பணியில்… அமைச்சர்களின் பாதுகாப்பு அதிகாரிகளையும் துரத்தி அடித்திருப்பதுதான் அதி விசேஷம்.
ஆமாம்… அமைச்சர்களுக்கு பாதுகாப்பு அதிகாரியாக யார் வர வேண்டும் என்று முடிவு செய்தது கூட மன்னார்குடி மாபியா கும்பல் தான் முடிவு செய்ததாம்.
அதுவும் எம்.நடராஜன் தம்பியும் மாஜி இன்ஸ்பெக்டரான பழனிவேலுவும் முதல்வரிடம் இருந்த பாதுகாப்பு அதிகாரியான திருமலைச்சாமியும் தான் முடிவு செய்தார்களாம். திருமலைச்சாமிதான் அதிக பாதுகாப்பு அதிகாரிகளை முடிவு செய்தது. அதில், ஏகப்பட்ட பணத்தை சுருட்டிக் கொண்டு, மாதம் தோறும் கமிஷனும் வாங்கிக் கொண்டு இருந்தவர் தான் இந்த திருமலைச்சாமி.
இதன் பின்னர் நிலைமை சீரியசாக போய்க் கொண்டிருக்கிறது என்பதை உறுதி செய்யும் செய்திகள், சம்பவங்கள், அசம்பாவிதங்கள், அதிரடிகள் நடந்துக் கொண்டிருக்கிறதே. அது ஏன்? என்று யாராவது கேட்டீர்களா?
ஓட ஓட துரத்தறாங்களே…
அம்மாவை பத்தி பாட பாட…
அம்மா விடமாட்டாங்கறாங்களே…
சொத்துக் கணக்கு எடுக்கறாங்களே…
ஆபீசை மூடச் சொல்றாங்களே…
ஊரை விட்டு ஓடச் சொல்றாங்களே…
மொத்தத்துல ஒண்ணும் புரியல…
என்று மன்னார்குடி ’மண்ணை கவ்வுடி’ ராகத்தில் ஆலாபணை செய்துக் கொண்டிருக்கிறது….
பொது ஜனங்களே…
ஆக… இந்த பேட்ச் அப் என்பது லேசில் நடக்கற மாதிரி தெரியலை. தொடர்ந்து பேக்கப் பேக்கப்….வேலைகள் தான் ஜரூராக நடந்துக் கொண்டிருக்கிறது.
இதில் ஒரு கூத்து நடந்ததாம்..
மன்னார்குடி கும்பல் பெங்களூருவில் கூடி, சதியாலோசனை நடத்தியதாம். அதில், கும்பலுக்கு தலைவர் என்று சொல்லப்படும் ‘பிக் பாஸ்’ ஆன எமன்… என்ன புரியலையா. அதாங்க… எம்.என். சொன்னாராம்..
‘இந்த கேசு புட்டுக்கும் போல இருக்கு. அம்மாவை எப்படியும் இரண்டு வருஷமாவது உள்ளே தள்ளிடுவாங்க போல… உடனே, ஐகோர்ட்டில் இல்லன்னா சுப்ரீம் கோர்ட்டில் போய் மேல் முறையீடு செய்யனும். ஆனா, அதுக்குள்ள முதல்வர் பதவியை விட்டு இறங்கியாகனும். அப்போ யாரு முதல்வரா இருக்கணும்ன்னு நாமளே முடிவு செஞ்சிடணும்… புரிதா…. இது பத்தி கலைஞர் கூட டிஸ்கஸ் செஞ்சிருக்காராம்… ”அந்த பொம்பளை போய்…. நம்ம நடராஜன் சி.எம்.மா வந்தாலும் நல்லா இருக்கும்யா”ன்னு அவரே சொல்லிட்டாராம்…” என்று சொல்லி ஜிலு ஜிலுத்து இருக்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்….
அட… என்ன இப்படி சிரித்தால்… நான் எப்படி பேசுவேன்…
உண்மைத்தான் நண்பர்களே… கதை, காவியங்களில் வரும் எமன் உயிரை எடுப்பார்… இந்த எமன் இன்று உயிரை காப்பாற்றிக் கொள்ள ஊர் ஊராக ஓடிக் கொண்டிருக்கிறார். ஆனால், பெங்களுருவில் பேச்சு பார்த்தீர்களா… எப்படி இருக்கிறது…?
நினைப்புத்தான் பொழப்பு கெடுக்கிறது என்பார்கள். அந்த பேச்சுத்தான் எமனின் பொழப்பை கெடுத்திருக்கிறது.
ஆனால், இந்த கும்பல் வசூலித்த தொகை பற்றி, போயஸ் தோட்டத்தின் அனுமதியோடு ஒரு கணக்கு எடுக்கப்பட்டு வருகிறது. அதில் தான் சூப்பரான தகவல் வந்துக் கொண்டிருக்கிறது.
அதில் ஒன்று தான் ராவணனை தேடி பெண் சிங்கம்(!) ஒன்று அலைந்துக் கொண்டிருக்கிறது என்ற தகவல்.
என்னது….? ராவணனைத் தேடி பெண் சிங்கம் அலைந்துக் கொண்டிருக்கிறதா?
என்ன சொல்கிறீர்கள் என்று அத்தகவல் சொன்னவரை பார்த்து நடு நடுங்கிக் கொண்டே கேட்டேன்…
எதிரே இருப்பவர் சிரித்தார்…
“இல்லீங்க.... வண்டலூரில் இருக்கும் ஜூவில் இருக்கும் பெண் சிங்கத்துக்கிட்ட கூடவா… துட்டு வாங்கி இருப்பாங்க. ஆமா… என்ன சொல்லி வாங்கி இருப்பாங்க… ராத்திரியில ஆண் சிங்கத்தை எப்படியாவது உன்னோட அறைக்கு அனுப்பி வைக்கறோம்னு சொல்லியா துட்டு வாங்கி இருப்பாங்க” என்று சும்மா நானும் கேலியாக கேட்டேன்….
அட…. அப்புறம் அந்த நபர் கேட்ட தகவலை கேட்டு ஆடிப்போய்விட்டேன்… அதாவது… பெண் சிங்கம் யார் தெரியுமா…
உலகத்திலேயே கதை, வசனம் எழுதி 35 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கிய ஒரு வசன கர்த்தா யார் தெரியுமா? அவர்தான் கருணாநிதி… தி.மு.க. தலைவர்… அவர் எழுதிய படங்களை ‘உளியின் ஓசை…. பெண் சிங்கம்…” என்று படங்களாக தயாரித்தவர் ஜெயமுருகன். இவரைத்தான் பெண் சிங்கம் என்று அந்த நண்பர் வர்ணித்தார்.
‘பெண் சிங்கம்’ ஜெயமுருகனுக்கு ஆரம்பத்தில் லாட்டரி தொழில். அதுவும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைதாகி, உள்ளே இருக்கும் மார்ட்டினின் பார்டனர். லாட்டரி போன பிறகு, அந்த பணத்தில் ஒரு பிராந்தி, பீர் தொழிற்சாலை ஆரம்பிக்க ஆசைப்பட்ட பிறகே, கருணாநிதியை அணுகி படம் எடுத்துக் கொண்டிருக்கும் போதே, பிராந்தி தயாரிக்கும் லைசென்ஸ் வாங்கியவர்….
அந்த ‘பெண் சிங்கம்’ நடத்தும் சரக்கு நிறுவனத்தின் பெயர் எஸ்.ஜெ டீஸ்லரீஸ்…. அந்த நிறுவனத்திலிருந்து தான் மார்பியஸ்…. பிரிட்டிஷ் எம்பயர்…. சரக்குகள்…..
தி.மு.க. ஆட்சி போய் அ.தி.மு.க. ஆட்சி வந்ததும் மார்பியஸ் மற்றும் பிரிட்டிஷ் எம்பயர் சரக்குகளை அதிக அளவில் விற்க வைக்க நான் ஏற்பாடு செய்கிறேன்… என்று சொல்லி ராவணன் 2 கோடி கேட்டு ஒரு கோடி அட்வான்ஸ் வாங்கிக் கொண்டாராம்…
ஆனால்… சொன்னபடி செய்யவில்லையாம்… இரண்டு மாதங்களாக இதோ செய்கிறேன்… அதோ செய்கிறேன்… என்று ராவணன்… வித்தை காட்ட… இப்போது, போய்ஸ் தோட்டத்திலிருந்து விரட்டப்பட, பெங்களூருவில் தஞ்சம் அடைந்திருக்கிறாராம்…
இது தெரிந்ததும் “பெண் சிங்கம்’ உறுமிக் கொண்டு புறப்பட்டு இருக்கிறது. ஒரு கோடி தராவிட்டால்… என்ன வேண்டுமானாலும் செய்ய தயங்க மாட்டேன்… என்று ‘பெண் சிங்கம்’ உறும…. சிலர் அந்த ‘பெண் சிங்கத்தை’ நாடி, “அண்ணே… எப்படியாச்சும் ஒரு புகார் மட்டும் கொடுங்க” என்று கொஞ்சிக் கொண்டிருக்கிறார்களாம்…?
ஆக…. ராவணன் மீது புகார் வரலாம். வந்தால்…. கைதாகலாம்…. கைதானால்… புழலா.. திருச்சியா…. கோவையா… பாளையங்கோட்டையா… என்பதை முடிவு செய்வதில் தான் ஏகப்பட்ட குழப்பம் வரும்?
நன்றியை தெரிவித்துக்கொண்டு விடை பெற்றுக்கொள்கிறேன்…
வணக்கம். !
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள், ARRKAY
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Similar topics
» பெண் சிங்கம்- பட விமர்சனம்
» வனங்களை ஆண்ட பெண் சிங்கம்: வன அதிகாரி அபர்ணாவின் பயோபிக் ’ஷெர்னி’!
» ராவணனை சிக்க வைப்பாரா மகேஸ்வரன்?
» 20 ஆப்கானியர் எங்கே? மலேசியா தேடுகிறது
» 20 ஆப்கானியர் எங்கே? மலேசியா தேடுகிறது
» வனங்களை ஆண்ட பெண் சிங்கம்: வன அதிகாரி அபர்ணாவின் பயோபிக் ’ஷெர்னி’!
» ராவணனை சிக்க வைப்பாரா மகேஸ்வரன்?
» 20 ஆப்கானியர் எங்கே? மலேசியா தேடுகிறது
» 20 ஆப்கானியர் எங்கே? மலேசியா தேடுகிறது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|