புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:23 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 2:19 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 1:58 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 1:23 pm

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 1:16 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 12:58 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 12:18 am

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 12:16 am

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 12:14 am

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 12:12 am

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 12:10 am

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 12:09 am

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 12:08 am

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 12:07 am

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 12:07 am

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 12:04 am

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 12:03 am

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 11:59 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 11:57 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 11:56 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 11:55 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 11:54 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 11:53 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 11:52 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05 am

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 12:51 am

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 10:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 10:05 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 12:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 12:46 am

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 10:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:27 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:18 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:59 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:49 am

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 10:01 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:59 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:57 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:56 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:54 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:52 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:50 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:48 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:46 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 6:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 5:52 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் மகனைக் கடத்தியதால், பிறழ் சாட்சியம் அளித்தேன்! Poll_c10என் மகனைக் கடத்தியதால், பிறழ் சாட்சியம் அளித்தேன்! Poll_m10என் மகனைக் கடத்தியதால், பிறழ் சாட்சியம் அளித்தேன்! Poll_c10 
37 Posts - 82%
heezulia
என் மகனைக் கடத்தியதால், பிறழ் சாட்சியம் அளித்தேன்! Poll_c10என் மகனைக் கடத்தியதால், பிறழ் சாட்சியம் அளித்தேன்! Poll_m10என் மகனைக் கடத்தியதால், பிறழ் சாட்சியம் அளித்தேன்! Poll_c10 
3 Posts - 7%
வேல்முருகன் காசி
என் மகனைக் கடத்தியதால், பிறழ் சாட்சியம் அளித்தேன்! Poll_c10என் மகனைக் கடத்தியதால், பிறழ் சாட்சியம் அளித்தேன்! Poll_m10என் மகனைக் கடத்தியதால், பிறழ் சாட்சியம் அளித்தேன்! Poll_c10 
3 Posts - 7%
mohamed nizamudeen
என் மகனைக் கடத்தியதால், பிறழ் சாட்சியம் அளித்தேன்! Poll_c10என் மகனைக் கடத்தியதால், பிறழ் சாட்சியம் அளித்தேன்! Poll_m10என் மகனைக் கடத்தியதால், பிறழ் சாட்சியம் அளித்தேன்! Poll_c10 
1 Post - 2%
dhilipdsp
என் மகனைக் கடத்தியதால், பிறழ் சாட்சியம் அளித்தேன்! Poll_c10என் மகனைக் கடத்தியதால், பிறழ் சாட்சியம் அளித்தேன்! Poll_m10என் மகனைக் கடத்தியதால், பிறழ் சாட்சியம் அளித்தேன்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

என் மகனைக் கடத்தியதால், பிறழ் சாட்சியம் அளித்தேன்!


   
   
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Thu Jan 05, 2012 3:05 pm

என் மகனைக் கடத்தியதால், பிறழ் சாட்சியம் அளித்தேன்!

'மு.க.அழகிரியும் அவரது அடி யாட்களும் சேர்ந்து மதுரையில் தா.கிருட்டிண னை படுகொலை செய்த இடத்தின் அருகில் குடியிருக்கும் மிக...மிக முக்கியமான கண்ணால் கண்ட சாட்சியுமான நான் எங்கே, எப்பொழுது, யாரால், எப்படி மிரட்டப்பட்டேன் என்பதையும்...

முன்பு, தங்களின் பொற்கால ஆட்சிக் காலத்தில் தைரியமாக கீழ்கோர்ட்டில், நான் பார்த்தவற்றையும் நடந்தவற் றையும் கூறினேன். பிறகு ஏன் மேல்கோர்ட்டில் கூறவில்லை என்பதை தங்களின் ஆணைக்கு இணங்க நீதியின் முன்பாக தைரியமாக, பயமில்லாமல் கூறி அழகிரி வகையறாக்களுக்குத் தகுந்த தண்டனையை

என் மகனைக் கடத்தியதால், பிறழ் சாட்சியம் அளித்தேன்! P6b

பெற்றுத்தர உண்மையுடனும் உறுதியுடனும் நீதியின் பக்கம் நின்று செயல்படுவேன் என்று தங்களின் பொற்பாதங்களில் இந்தக் கடிதத்தை சமர்ப்பிக்கின்றேன்’ - தா.கிருட்டிணன் கொலை வழக்கின் முக்கிய சாட்சியான பிளம்பர் பிரபாகர், முதல்வர் ஜெயலலிதாவுக்கு இப்படி ஒரு கடிதத்தை எழுதி, மதுரை தி.மு.க. சர்க்கிளை அதிர விட்டிருக்கிறார்!

தா.கிருட்டிணன் கொலையை நேரில் பார்த்த ஒரே சாட்சியான பிரபாகரை, வழக்கில் 22-வது சாட்சி யாக சேர்த்திருந்தது போலீஸ். ஜெ. பேரவையின் வட்ட இணைச் செயலாளராக பிரபாகர் இருப்பதால், இவர் எந்தக் காலத்திலும் புரண்டு பேச மாட்டார் என மலை போல் நம்பியது போலீஸ். ஆனால், பிறழ் சாட்சியாகிப் போனார் பிரபாகர். இதற்கு நடுவில் தான் வழக்கு விசாரணை ஆந்திர மாநிலம் சித்தூர் கோர்ட்டுக்கு மாறியது. அதில் மிரண்டு போய்த்தான், பிறழ் சாட்சியம் அளித்து தன்னையும் தனது குடும்பத்தையும் தற்காத்துக் கொண்டதாக இப்போது வாய் திறக்கிறார் பிரபாகர்.

என் மகனைக் கடத்தியதால், பிறழ் சாட்சியம் அளித்தேன்! P6a
பிரபாகரை அவரது வீட்டில் சந்தித்தோம். ''மோட்டார் ரிப்பேர் பார்த்த பணத்தை வாங்குறதுக்காக அன்னைக்கு அதிகாலை 5 மணிக்கு கௌம்பிப் போனேன். போற வழியில, அந்த நேரத்துல நாலஞ்சு பேரு சீருல்லாம நின்னுக்கிட்டு இருந்தாங்க. பக்கத்தில யமாஹா பைக் ஒண்ணு ஹெட் லைட் எரிஞ்ச மேனிக்கு உறுமிக்கிட்டு இருந்துச்சு. கொஞ்சம் தள்ளி இன்னொரு பைக்கும் நின்னுச்சு. பக்கத்துல போனதும்தான் தெரிஞ்சுது... அவங்க அத்தனை பேரும் தி.மு.க.காரங்க. 'இவனுக எதுக்கு இந்த நேரத்துல இங்க நிக்குறானுங்க'ன்னு சந்தேகப் பட்டுக்கிட்டே, கொஞ்ச தூரம் தள்ளிப்போய் நின்னேன்.
அப்ப, ஒரு பெரியவர் அந்த வழியா நடந்து வந்தார். அவரைப் பார்த்து அவனுக கையெடுத்து

என் மகனைக் கடத்தியதால், பிறழ் சாட்சியம் அளித்தேன்! P5கும்பிட்டானுங்க. பதிலுக்கு அவரும் கும்பிட்டார். கண் இமைக்கிற நேரத்தில அவரை நெருங்குனவங்க, சினிமா கணக்கா சட்டுபுட்டுனு அரிவாளை எடுத்து கழுத்தை அறுத்துப் போட்டுட்டு வண்டியை கௌப்பிட்டாய்ங்க. என்னையை கிராஸ் பண்ணுற சமயம், 'கெழவனை முடிச்சுட்டோம்னு அண்ணன்கிட்ட சொல்லிட்டுப் போயிருவோம்டா’னு ஒருத்தன் சொன்னது என் காதுல விழுந்துச்சு. அவங்க போனதுமே பதறிக்கிட்டு ஓடிப்போயி பார்த்தேன். வெட்டுப் பட்டுக்கிடந்தது 'தா'வன்னா கிருஷ்ணன்னு அப்பத்தான் தெரிஞ்சுது. தொண்டைக்கும் நெஞ்சுக் குமா இழுத்துக்கிட்டு இருந்தவரை தூக்குறதுக்கு முயற்சி செஞ்சேன் என்னால முடியல.


அப்ப, எனக்குத் தெரிஞ்ச அந்த ஏரியா பால்காரர் வந்தாரு. 'அண்ணே... ஒரு கை போடுங்க; இவரை தூக்கிக் கொண்டுபோய் ஆஸ்பத்திரியில் சேர்த்துருவோம்’னு சொன்னேன். 'டேய்... என்ன காரியம் நடந்துருக்கு! நீ என்ன பண்ணிக்கிட்டு இருக்கே’ன்னு சொல்லி என்னைய அதட்டுனார். அப்புறம்தான் எனக்கே சீரியஸ்னஸ் தெரிஞ்சுது. அதுக்கப்புறம் அந்த இடத்துல நிக்காம வீட்டுக்கு வந்துட்டேன். விஷயம் தெரிஞ்சு என்கிட்ட வந்த போலீஸ்கிட்ட, 'நான் பார்த்ததை சொல்றேன். ஆனா, என்னைய சாட்சியாப் போடாதீங்க; எனக்கும் குடும்பம் குட்டி இருக்கு’ன்னு சொன்னேன். அதையும் மீறி என்னைய சாட்சியாக்கி ரகசிய வாக்குமூலம் கொடுக்க வெச்சாங்க. அதுல இருந்தே எனக்குப் பிரச்னைதான்'' என்று பழைய சம்பவங்களைச் சொன்னவர்... அடுத்து நடந்ததாக சில சம்பவங்களை விவரித்தார்.

''நான் சாட்சி சொல்லக்கூடாதுன்னு பல வழிகளிலும் மிரட்டுனவங்க, என்னோட கடைசிப் பையன் கபிலனைக் கடத்துற அளவுக்கு துணிஞ்சப்பத்தான் பதறித் துடிச்சிட்டேன். இது, தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்னாடி நடந்தது. அப்ப கபிலனுக்கு மூன்றரை வயசு. வீட்டு வாசல்ல வெளையாடிக்கிட்டு இருந்தவன், திடீர்னு காணாமப் போயிட்டான். முதலில், தா.கி. வழக்கில் அழகிரிக்காக ஆஜரானவரும், ஆட்சி மாறியதும் அரசு வக்கீலாகவும் இருந்த மோகன்குமார் கொஞ்ச நேரத்தில எனக்கு போன் பண்ணி, 'உம் புள்ளயைத் தேட வேண்டாம்; பத்திரமா இருக்கான்’னு சொன்னார். ஒருநாள் முழுக்க நாங்க நெருப்புல விழுந்தாப்புல தவிச்சோம்.

மறுநாள் காலையில, அவரே காருல என்னைய ஏத்திக்கிட்டு தி.மு.க. முக்கியப் புள்ளியோட வீட்டுக்கு போனார். தா.கி. வழக்குல சம்பந்தப்பட்ட அத்தனை பேரும் அங்க இருந்தாங்க. அழகிரிக்கு வேண்டப்பட்ட போலீஸ் உதவி கமிஷனர்கள் இரண்டு பேரும், ஒரு இன்ஸ்பெக்டரும் இருந்தாங்க. அவங்க முன்னாடியே, 'மோகன்குமார் சொல்றபடி நடந்துக்க’னு முக்கியப் புள்ளி மிரட்டினார். 'நீங்க சொல்றதக் கேக்குறேன்; எம் புள்ளயக் குடுத்து ருங்க’னு கதறுனேன். அதுக்கப்புறம்தான் கபிலனைக் கண்ணுல காட்டுனாங்க.
என் மகனைக் கடத்தியதால், பிறழ் சாட்சியம் அளித்தேன்! P6

அப்புறமும் என்னை விடலை. சித்தூர் கோர்ட்டுக்கு நான் சாட்சி சொல்லப் போறதுக்கு மூணு நாள் முன்கூட்டியே என்னையும் என் மனைவி மக்களையும் அவங்க கஸ்டடிக்குக் கொண்டு போயிட்டாங்க. எங்களை அவசரமா மதுரை ஏர்போர்ட்டுக்கு அழைச்சிட்டுப் போயி, சென்னைக்கு ஃபிளைட் ஏத்திட்டாங்க. சென்னை ஏர்போர்ட்டுல இன்ஸ்பெக்டர் ஒருவர்தான் எங்களை ரிஸீவ் பண்ணி இம்பாலா ஹோட்டல்ல தங்க வெச்சார்.

அங்கருந்து சித்தூருக்கு ஏ.ஸி. கார்ல கூட்டிட்டுப் போயி, சித்தூர் கோர்ட்டுக்கு எதிர்லயே காஸ்ட்லி ஹோட்டல்ல தங்க வெச்சாங்க. அப்ப எங்களை சந்திச்ச மதுரை போலீஸ் ஆட்கள், 'இவனுக உங்க அம்மாவையே (ஜெயலலிதா) படாதபாடு படுத்துறானுங்க. உனக்கு எதுக்கு பொல்லாப்பு? பேசாம, 'எனக்கு எதுவும் தெரியாது’னு சொல்லிட்டுப் போயிக் கிட்டே இரு’ன்னாங்க. குடும்பத்தைக் பணயம் ஆக்கி மிரட்டுனதால, நானும் அவங்க சொன்னபடியே மனசாட்சியை ஒதுக்கி வெச்சிட்டு பிறழ் சாட்சியம் சொல் லிட்டு வந்துட்டேன். வரும்போதும் அதே மாதிரி ஃப்ளைட்ல எங்களை மதுரைக்கு அனுப்பி வெச்சாங்க.

அத்தோட முடிஞ்சிடுச்சினுதான் நெனச்சேன். ஆனா, 'தா.கி. கொலை வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுப்போம்’னு அம்மா சொன்னதும்தான் எனக்கு புது தைரியமும் தெம்பும் வந்துச்சு. அப்புறம்தான் கடந்த ஜூலை மாதம் அம்மாவுக்குக் கடிதம் எழுதினேன். நான் எழுதுன கடிதம் உடனடியாக மதுரை போலீஸுக்கு வந்து, துணை கமிஷனர் திருநாவுக்கரசு, உதவிக் கமிஷனர் வெள்ளத்துரை அரசு வழக்கறிஞர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் என்கிட்டயும் மனைவி மற்றும் மகனிடமும் விசாரிச்சாங்க. அம்மா ஆட்சியில் தா.கி. கொலை வழக்கை மறுவிசாரணை நடத்தினால், யாருக்கும் பயப்படாமல் கூண்டில் ஏறி உண்மையைச் சொல்வேன்'' என்றார்.

இவரது அதிரடி குற்றச்சாட்டு குறித்து, அழகிரிக்காக ஆஜராகும் மதுரை மாநகர் மாவட்ட தி.மு.க. வழக்கறிஞர் அணி செயலாளர் மோகன்குமாரிடம் கேட்டதற்கு, ''சித்தூர் கோர்ட்டில் வழக்கு நடந்த நேரத்தில் நான் அரசு வழக்கறிஞராக இருந்ததால், அந்த வழக்கை விட்டு ஒதுங்கி இருந்தேன். அந்த பிரபாகர் ஒரு டூப் மாஸ்டர். அந்தாளுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவரை நான் எனது காரில் அழைத்துச் சென்றதாக சொல்வது, அவரது மகன் தொடர்பாக நான் போனில் பேசியதாகச் சொல்லி இருக்கும் விஷயங்கள் உள்பட அனைத்துமே அக்மார்க் பொய். அரசியல் உள்நோக்கத்துடன் எங்கள் மீது இப்படியரு புகார் கொடுக்க வைக்கப்பட்டிருக்கிறார் பிரபாகர். புகாரில் உண்மை இருக்கிறதா என்பதை போலீஸ் தாராளமாக விசாரித்துப் பார்க்கட்டும்'' என்று சொன்னார்.

மதுரை அரசு வழக்கறிஞரும் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. வழக்கறிஞர் அணி செயலாளருமான தமிழ்ச்செல்வனிடம் பேசினோம். ''தா.கி. கொலை வழக்கில் முக்கியமான 20 சாட்சிகளை விசாரிக்கவே இல்லை கோர்ட். 'அவர்கள் இருக்கும் இடம் தெரியவில்லை’ என்று வி.ஏ.ஓ. மூலமாக சான்றளிக்க வைத்து சித்தூர் கோர்ட்டை ஏமாற்றி இருக்கிறது, அப்போது வழக்கை கவனித்த போலீஸ். தா.கி-யின் மனைவி பத்மாவதி யையே கண்டுபிடிக்க முடியவில்லை என்று எழுதி இருக்காங்க! முக்கிய சாட்சியான பிரபாகரின் மனைவி, குழந்தைகள் கடத்தப்பட்டு இருக்கிறார்கள். அவர்கள் சொன்னபடி நடந்தால் மட்டுமே தானும் தன்னுடைய குடும்பமும் பத்திரமாய் இருக்க முடியும் என்பதால் பிரபாகர் பிறழ்சாட்சியம் அளித்திருக்கிறார். தா.கி. வழக்கை ஆந்திர உயர் நீதிமன்றத்தில் அப்பீல் செய்வதற்கு இந்த ஒரு காரணமே போதுமானது'' என்று சொன்னார்.

போலீஸ் துணை கமிஷனர் திருநாவுக் கரசுவோ, ''தனக்கு எதுவும் தெரியாது என நீதிபதி முன்பாக சாட்சியம் அளித்துவிட்டு வந்து இப்போது, 'மிரட்டப்பட்டதால் தான் அப்படிச் சொன்னேன்’ என்கிறார் பிரபாகர். இதை வைத்துக் கொண்டு நடவடிக்கை எடுக்க முடியுமா என்பது குறித்து சட்ட நுணுக்கங்களைப் பார்க் கணும். விசாரணை ஆரம்ப நிலையில் இருப்பதால் இப்போதைக்கு இவ்வளவு தான் சொல்ல முடியும்'' என்கிறார்.

போலீஸ் வட்டாரத்திலோ, ''பிரபாகரின் மகனைக் கடத்தியவர்கள் மீதும் அதற்கு உடந்தையாக இருந்த போலீஸ் அதிகாரிகள் மீதும் கடத்தல் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க லாம்’ என்று ஸ்டேட் பி.பி. ஒப்பீனியன் கொடுத்து ஒரு மாதத்துக்கு மேலாகி விட்டது. அதன் பேரில் நடவ டிக்கை எடுத்தால் அழகிரிக்கே பிரச்னை வரலாம். எங்கள் அதிகாரிகள் தயங்குவதுதான் எங்களுக்கும் புரியாத புதிராக இருக்கிறது'' என்கிறார்கள். ஆக, எட்டு ஆண்டுகளை கடந்தும் படபடத்துக் கொண்டே இருக்கிறது தா.கி. கொலை வழக்கு!

- குள.சண்முகசுந்தரம்

படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள், ARRKAY
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Thu Jan 05, 2012 5:28 pm

இதன் பெயர் தான் அராஜகம் என்பதா ? கொடுமை சோகம்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Jan 05, 2012 6:20 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக