ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 8:46

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 23:21

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 23:18

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 23:17

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 23:15

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 23:13

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 23:03

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 23:01

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 18:43

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 16:51

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 12:16

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 10:14

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 10:11

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 10:08

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 10:07

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:05

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 20 Aug 2024 - 20:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 20 Aug 2024 - 20:06

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 20 Aug 2024 - 19:48

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue 20 Aug 2024 - 19:31

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue 20 Aug 2024 - 18:55

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue 20 Aug 2024 - 18:53

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue 20 Aug 2024 - 18:51

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue 20 Aug 2024 - 18:32

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 20 Aug 2024 - 17:58

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 20 Aug 2024 - 15:45

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 20 Aug 2024 - 14:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue 20 Aug 2024 - 14:12

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue 20 Aug 2024 - 13:56

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue 20 Aug 2024 - 13:29

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 20 Aug 2024 - 13:27

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 20 Aug 2024 - 13:18

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue 20 Aug 2024 - 12:09

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue 20 Aug 2024 - 12:01

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue 20 Aug 2024 - 7:56

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue 20 Aug 2024 - 7:48

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue 20 Aug 2024 - 7:41

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 20 Aug 2024 - 1:30

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon 19 Aug 2024 - 22:05

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 16:43

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:59

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:57

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:57

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:54

» காதல் தேவதை
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:53

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:52

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:51

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:50

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:48

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:45

நிகழ்நிலை நிர்வாகிகள்

மருத்துவர்கள் வேலை நிறுத்தம் சட்டப்படி தடை செய்ய வேண்டும் கவிஞர் இரா .இரவி

2 posters

Go down

மருத்துவர்கள் வேலை நிறுத்தம் சட்டப்படி  தடை செய்ய வேண்டும்      கவிஞர் இரா .இரவி Empty மருத்துவர்கள் வேலை நிறுத்தம் சட்டப்படி தடை செய்ய வேண்டும் கவிஞர் இரா .இரவி

Post by eraeravi Thu 5 Jan 2012 - 11:12

மருத்துவர்கள் வேலை நிறுத்தம் சட்டப்படி தடை செய்ய வேண்டும் கவிஞர் இரா .இரவி

மருத்துவர்கள் உயிர் காக்கும் உன்னதப் பணி செய்பவர்கள் ,யாரோ ஒரு காட்டுமிராண்டி மருத்துவரை வெட்டிவிட்டான் என்பதற்காக அனைத்து மருத்துவர்களும் வேலை நிறுத்தம் செய்வது அபத்தம் .படிக்காத பாமரர்கள் போல ,படித்த மருத்துவர்கள் உணர்ச்சிவசப் படுவது தவறு .இன்று மருத்துவர்கள் வேலை நிறுத்தம் செய்கின்றனர் .இன்று போகும் உயிர்களுக்கு யார் ?பொறுப்பு .எத்தனை கோடி கொட்டிக் கொடுத்தாலும் இறந்த உயிரை திருப்பி தர முடியுமா ?

பகுத்தறிவு கொண்டு சிந்திக்க வேண்டாமா? ஏன் ? இந்த கொலை வெறி .கொலை வெறி பாடல் பாடியவருக்கு ,பாரதப் பிரதமர் பாராட்டி விருந்து கொடுத்த காரணத்தால் ,கொலை வெறி மருத்துவர்களையும் பற்றிக் கொண்டதோ !

மருத்துவர்கள் மீதான நன் மதிப்பை குறைப்பதற்குதான் இந்த வேலை நிறுத்தம் உதவும் .சட்டப்படி மருத்துவரை கொலை செய்த கொலைகாரகளை கைது செய்து விட்டனர் .மருத்துவர்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்றால் ஒவ்வொரு மருத்துவருக்கும் ஒரு காவலரை நியமிக்க வேண்டுமா ?மருத்துவர்களுக்கு அவர்களது செயல்தான் பாதுகாப்பு.

தன் உயிரைக் காப்பாற்றிய மருத்துவரை கடவுளாக வணங்கும் பலரை நான் பார்த்து இருக்கிறேன் .பணத்தை பெரிதாக எண்ணாமல் உயிர் காப்பதைக் கடமையாகக் கொண்ட மிகச் சிறந்த மருத்துவர்களை நான் சந்தித்து இருக்கிறேன் .பல நல்ல மருத்துவர்கள் என் நண்பர்கள் .எத்தனை கோடி கொடுத்தாலும் நான் பிறந்த மண்ணை விட்டு வர மாட்டேன் என்று சொல்லி, பிறந்த மண் மக்களுக்கு சேவை செய்யும் நல்ல மருத்துவர்களை நான் பார்த்து இருக்கிறேன் .இரவு, பகல் பாராமல் உயிர் காக்க உடனே வரும் மருத்துவர்கள் உண்டு .



மனைவி இறந்த கோபத்தில் கணவன் கொலை செய்து விட்டான் .மிகப் பெரிய தவறுதான் .தண்டிக்கப்பட வேண்டும் .மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அவன் செய்த கொலைக்கு பதிலாக இன்றைக்கு வேலை நிறுத்தம் என்ற பெயரில் நடுக்கும் கொலைக்கு யாருக்கு தண்டனை கொடுப்பது? மருத்துவர்கள் எல்லோரும் உயர்ந்த பணி செய்பவர்கள் , ஆனால் வானில் இருந்து இறங்கி வந்த தேவ தூதர்கள் அல்லவே .பெரும்பாலான மருத்துவர்கள் மனசாட்சிப்படி நடந்தாலும் .ஒரு சில மருத்துவர்கள் ரமணா திரைப்படத்தில் வருவது போல செத்தப் பிணத்திற்கு வைத்தியம் பார்த்து கட்டணம் வாங்கிய வரலாறு உண்டு .இன்றைக்கும் ஸ்கேன், எக்ஸ்ரே போன்றவற்றில் கமிசன் வாங்காத மருத்துவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம் .

நடந்தது நடந்ததாக இருக்கட்டும் இனி நடப்பவை நலதாக இருக்கட்டும் .

கார்போரேட் மருத்துவமனைகளில் நடக்கும் பகல் கொள்ளை ,பணக் கொள்ளை உலகம் அறிந்த ஒன்று .மருத்துவர்கள் யாருமே தவறே செய்தது இல்லை என்று அறுதி இட்டுக்கூற முடியுமா? நல்வர்கள் கேட்டவர்கள் எல்லாத் தொழிலும் உண்டு .ஆனால் உயர்ந்த பணியான அல்ல அல்ல சேவையான மருத்துவம் பார்க்கும் மருத்துவர்கள் மனசாட்சியோடு மிகவும் கவனமாகவும் அர்ப்பணிப்புடனும் நடந்து கொள்ள வேண்டும் .சமுதாயத்தில் உயிர் காக்கும் உன்னதப் பொறுப்பு மருத்துவர்களுக்கு உண்டு . மருத்துவர்கள் மருத்துவம் படிக்க அரசாங்கமும் பல கோடி பணம் செலவழித்து வருகின்றது .எனவே மருத்துவர்கள் சமூக சிந்தையுடன் வேலை நிறுத்தத்தை வாபஸ் வாங்க வேண்டும் .இனி எப்பொதும் வேலை நிறுத்தம் செய்வது இல்லை என்ற முடிவுக்கு வர வேண்டும் .வர வில்லைஎன்றால் அரசு ,அவசியப் பணி புரியும் மருத்துவர்கள் வேலை நிறுத்தம் சட்டப்படி தடை செய்ய வேண்டும்.
--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க

கண் தானம் செய்வோம் !!!!!

eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1818
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down

மருத்துவர்கள் வேலை நிறுத்தம் சட்டப்படி  தடை செய்ய வேண்டும்      கவிஞர் இரா .இரவி Empty Re: மருத்துவர்கள் வேலை நிறுத்தம் சட்டப்படி தடை செய்ய வேண்டும் கவிஞர் இரா .இரவி

Post by ராஜா Thu 5 Jan 2012 - 12:22

eraeravi wrote:மருத்துவர்கள் வேலை நிறுத்தம் சட்டப்படி தடை செய்ய வேண்டும்
நல்ல காமடி , தமிழ்நாட்டில் எந்த துறை சட்டப்படி ஒழுங்கா நடக்குது. எல்லா இடத்திலயும் பணம் தான் வேலை செய்யுது
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum