புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெற்றி நிச்சயம் - Page 2 Poll_c10வெற்றி நிச்சயம் - Page 2 Poll_m10வெற்றி நிச்சயம் - Page 2 Poll_c10 
53 Posts - 42%
heezulia
வெற்றி நிச்சயம் - Page 2 Poll_c10வெற்றி நிச்சயம் - Page 2 Poll_m10வெற்றி நிச்சயம் - Page 2 Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
வெற்றி நிச்சயம் - Page 2 Poll_c10வெற்றி நிச்சயம் - Page 2 Poll_m10வெற்றி நிச்சயம் - Page 2 Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
வெற்றி நிச்சயம் - Page 2 Poll_c10வெற்றி நிச்சயம் - Page 2 Poll_m10வெற்றி நிச்சயம் - Page 2 Poll_c10 
6 Posts - 5%
ayyamperumal
வெற்றி நிச்சயம் - Page 2 Poll_c10வெற்றி நிச்சயம் - Page 2 Poll_m10வெற்றி நிச்சயம் - Page 2 Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
வெற்றி நிச்சயம் - Page 2 Poll_c10வெற்றி நிச்சயம் - Page 2 Poll_m10வெற்றி நிச்சயம் - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
வெற்றி நிச்சயம் - Page 2 Poll_c10வெற்றி நிச்சயம் - Page 2 Poll_m10வெற்றி நிச்சயம் - Page 2 Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெற்றி நிச்சயம் - Page 2 Poll_c10வெற்றி நிச்சயம் - Page 2 Poll_m10வெற்றி நிச்சயம் - Page 2 Poll_c10 
304 Posts - 50%
heezulia
வெற்றி நிச்சயம் - Page 2 Poll_c10வெற்றி நிச்சயம் - Page 2 Poll_m10வெற்றி நிச்சயம் - Page 2 Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
வெற்றி நிச்சயம் - Page 2 Poll_c10வெற்றி நிச்சயம் - Page 2 Poll_m10வெற்றி நிச்சயம் - Page 2 Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
வெற்றி நிச்சயம் - Page 2 Poll_c10வெற்றி நிச்சயம் - Page 2 Poll_m10வெற்றி நிச்சயம் - Page 2 Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
வெற்றி நிச்சயம் - Page 2 Poll_c10வெற்றி நிச்சயம் - Page 2 Poll_m10வெற்றி நிச்சயம் - Page 2 Poll_c10 
21 Posts - 3%
prajai
வெற்றி நிச்சயம் - Page 2 Poll_c10வெற்றி நிச்சயம் - Page 2 Poll_m10வெற்றி நிச்சயம் - Page 2 Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
வெற்றி நிச்சயம் - Page 2 Poll_c10வெற்றி நிச்சயம் - Page 2 Poll_m10வெற்றி நிச்சயம் - Page 2 Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
வெற்றி நிச்சயம் - Page 2 Poll_c10வெற்றி நிச்சயம் - Page 2 Poll_m10வெற்றி நிச்சயம் - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
வெற்றி நிச்சயம் - Page 2 Poll_c10வெற்றி நிச்சயம் - Page 2 Poll_m10வெற்றி நிச்சயம் - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
வெற்றி நிச்சயம் - Page 2 Poll_c10வெற்றி நிச்சயம் - Page 2 Poll_m10வெற்றி நிச்சயம் - Page 2 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெற்றி நிச்சயம்


   
   

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

avatar
Guest
Guest

PostGuest Fri Jan 16, 2009 2:22 pm

First topic message reminder :

வெற்றி நிச்சயம் - சுகி சிவம்


1. கேள்விகளே சாவிகள்!

வாழ்க்கை என்பது ஒரு சூதாட்டம் என்றே பலர் கருதுகிறார்கள். இதன் வெற்றி, தோல்விகள் அதிருஷ்டத்தின் மூலமாகவே நிர்ணயிக்கப்படுகின்றன என்றும் நிறைய பேர் நினைக்கிறார்கள். வாழ்க்கையின் வெற்றி, தோல்விகள் தேர்தல் முடிவுகள் போல் குழப்பமானவை அல்ல. தேர்வின் முடிவுபோல் தீர்க்கமானவை.

வாழ்க்கையில் வெற்றிபெற நினைப்பவர்களுக்கு என் நல்வாழ்த்துகள். உங்களுக்கு நன்மை உண்டாகட்டும். உங்களால் வீடும் நாடும் விரிந்த உலகமும் நன்மை பெறட்டும். வெற்றிக்கு வழி என்ன? வெற்றி உலகின் மொழி என்ன? சொல்கிறேன்.

என்னிடத்தில் உதவிகள் கேட்டுச் சில இளைஞர்கள் வருவதுண்டு. அதில் அதிகமான பேர் வேலை வாங்கித் தரும்படித்தான் கேட்பார்கள். ""என்ன வேலை?'' என்றால், ""ஏதாவது வேலை'' என்பார்கள். வருத்தப்படாதீர்கள். இவர்கள் வெற்றி பெறுவது கடினம். என்ன வேலை என்கிற தெளிவு இல்லாமல் ஏதாவது ஒரு வேலை என்றால் நான் அவருக்கு எந்த வேலைக்கு முயற்சி செய்வது? என்னுடைய வேலையைத்தான் அவருக்குத் தரமுடியும்!

இது மிக முக்கியமான விஷயம். எதை அடைய வேண்டும் என்கிற தெளிவு உங்களுக்கு இருந்தால்தான் அதை நீங்கள் அடைய முடியும். அடைய வேண்டியது எது என்கிற முடிவே இல்லை என்றால் எதை அடைய முடியும்? நமக்கு எது வேண்டும் என்கிற தெளிவு இருந்தால்தான் அது கிடைக்கும். கிடைத்தாலும் ருசிக்கும். இல்லையென்றால் கிடைக்காது. கிடைத்தாலும் ருசிக்காது. காரணம், கிடைத்ததே தெரியாது.

ஹோட்டலில்கூட பல பேர் என்ன சாப்பிடுவது என்ற தெளிவேயின்றி மெனுகார்டை, பட்சணப் பட்டியலை வெறித்து வெறித்துப் பார்ப்பார்கள். எதையும் முடிவு செய்யமாட்டார்கள். இந்தக் குழப்பவாதிகள் முறையாக வெற்றிக் கனியைப் பறிப்பது கடினம். எனவே, வாழ்க்கையில் உங்களுக்கு என்ன வேண்டும் என்கிற தெளிவு கண்டிப்பாக இருக்க வேண்டும்.

இப்போது நாம் இருக்கும் நிலை என்ன? இனி அடைய வேண்டிய நிலை என்ன? அதற்கு நாம் செய்ய வேண்டிய முயற்சிகள் எவை? எவை என்கிற விழிப்பு நம்முள் தோன்றிவிட்டால் நமக்கு வெற்றி நிச்சயம். எங்கே இருக்கிறோம்? எங்கே போகவேண்டும்? எப்படிப் போகப் போகிறோம் என்கிற தெளிவு பிறந்துவிட்டால் வெற்றி நிச்சயம்.
அமெரிக்க ஜனாதிபதியாகப் புகழுடன் விளங்கியவர் ஜான் எஃப். கென்னடி. அவர் வெள்ளை மாளிகையில் தம்மைக் காண வந்திருக்கும் பார்வையாளர்களுடன் நாள்தோறும் சில நிமிடங்கள் செலவிடுவார். தம்மைப் பார்க்க வந்திருந்த இளைஞர்கள், பள்ளி மாணவர்களுடன் சிறிது நேரம் பேசுவார். பார்வையாளர்களில் பளிச்சென்ற புன்னகையுடன் இருந்த மாணவன் கன்னத்தைத் தட்டி, ""உன் எதிர்கால லட்சியம் என்ன?'' என்றார் கென்னடி. பளீரென்று பதில் சொன்னான் அந்த மாணவன். ""இன்று நீங்கள் இருக்கும் இடத்தில் நாளை நான் இருக்க வேண்டும். இதுதான் என் லட்சியம்'' என்றான். விழிகளை உயர்த்திவிட்டு, ""குட்'' என்று வாழ்த்திவிட்டு கென்னடி நகர்ந்தார்.


avatar
Guest
Guest

PostGuest Fri Jan 16, 2009 2:31 pm

6. காலத்தைக் கொண்டாடுங்கள்!

கரண்ட் கம்பிகளில் காக்காய்கள் உட்கார்ந்திருக்கிறதே... அதைக் கவனித்தது உண்டா? அண்டங் காக்காய்களும் ஆர்டினரி காக்காய்களும் மூக்கை மூக்கைக் கம்பியில் தேய்த்துக்கொண்டு தெருவில் கிடக்கிற குப்பை மேட்டை வெறித்துக் கொண்டு, எச்சில் விஷயங்களை எதிர்பார்த்து ஏங்கியபடிக் "கராபுரா' என்று கத்திக்கொண்டு காலம் கழிக்குமே... கவனித்ததுண்டா?

இந்தக் காக்காய்களுக்குப் போட்டியாக - காலேஜ் கட்டடத்தின் காம்பவுண்டுகளின் குட்டிச் சுவர்களில் காலை, காலை விரித்துக்கொண்டு உட்கார்ந்திருக்கிற கல்லூரிக் காளைகளையும் கவனித்தது உண்டா? எனக்கென்னமோ காக்கைகள் கெüரவமானவை என்றே தோன்றுகிறது. எச்சில் இலைகளை எதிர்பார்த்து கரண்ட் கம்பங்களில் காத்திருப்பது அவற்றின் வாழ்க்கைப் பிரச்சினை. ஆனால் குட்டிச் சுவர்களில் "குட்டி'களுக்காகக் குடியிருக்கிற கல்லூரிக் காளைகளோ நாட்டின் பிரச்சினை.

இப்படி நேரத்தைப் பாழாக்க, வெட்டியாய் வீணடிக்க எதிர்கால இந்தியாவால் எப்படி முடிகிறது! சீரழிவுச் சிற்பிகளான சினிமாக்காரர்கள் வேறு, காலேஜ் மாணவர்களின் இந்த காலக் கொலைகளைக் கலர்கலராய் வளர்க்கிறார்கள். கிளாûஸக் கட் அடிப்பதும், கிளாசிக்கான இளசை சைட் அடிப்பதும் ஏதோ வீரதீரச் செயல்போல் விவரிக்கப்படுவது வேதனை தருகிற விஷயம்.

கலர் பார்ப்பது, கலகலப்பாய் இருப்பது பெரிய பாவம் அல்ல! ஆனால் அது முழுநேர வேலையாய் இருப்பது நியாயம் அல்ல. ஜாலியாய் இருக்கலாம்... அதுவே ஜோலியாய் இருக்கலாமா? காதல் வசப்படலாம்... குற்றமில்லை. எப்போதும் காமவசமாகக் காரியம் செய்வதா? கேட்க முடியாத ஆபாச வசனங்கள், சேட்டைகள், சில்மிஷங்கள்... இவை பெருமைக்குரியவைதானா? நேரத்தை மிதிக்கலாமா? காலத்தைக் கொல்லலாமா? நிகழ்கால நிர்வாகமே எதிர்கால வெற்றி ரகசியம். காலத்தைக் கொண்டாடுகிறவரையே காலம் கொண்டாடுகிறது. மற்றையோரைக் காலம் கொண்டு போகிறது.

"கழுதை கெட்டால் குட்டிச் சுவர்' என்ற பழமொழியை நிரூபிக்கக் கல்லூரிக் காம்பவுண்டுகளைக் காவல் காக்கும் வேலையை விடலாம். அறிவுள்ள மனிதனாக நூலகத்தில் நேரம் போக்கலாம். படிப்பு உயரும். அப்துல்கலாமாகலாம். அணு விஞ்ஞானி ஆகலாம். ஆயிரம் ஆயிரம் சாதனைகள் புரியலாம்.

விருப்பமில்லையா? விளையாடப் போகலாம். விண் என்று இருக்கலாம். விறுவிறுப்பாக வியர்த்து வடியலாம். டெண்டுல்கர் ஆகலாம். பி.டி. உஷா ஆகலாம். தங்கமும் வெள்ளியும் தட்டிப் பறிக்கலாம். டெண்டுல்கராகி பூஸ்ட் விளம்பரங்களில் பூரிப்பாய்ச் சிரிக்கலாம். ஆடுகளாய்த் திரியாமல் ஆடுகளத்தில் திரிவதன் மூலம் அகில உலகப் புகழ் பெறலாம். பாதி நேரம் கல்லூரி, மீதி நேரம் சின்ன வேலை என்று நமது படிப்புக்கு நாமே சம்பாதிக்கலாம்.

பண்ணை வேலை பார்த்தபடியே படிப்பு வேலையும் பார்த்த ஆபிரஹாம் லிங்கன் ஆகலாம். செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரியில் பயின்ற மாணவர் டாக்டர் குமாரவேலு என்பவர் படிக்கப் பணம் கட்டப் பெற்றோரை எதிர்பார்க்கவில்லை. கராத்தே கற்றுக் கொடுத்துக் காசு சம்பாதித்தார். கல்லூரிப் படிப்பைக் காலத்தில் முடித்தார்.
"தம்' அடிப்பதைத் தவிர்த்துவிட்டு "ஜிம்'முக்குப் போகலாம்... ஜம் என்று ஆகலாம். நிஜமான ஆரோக்கியத்துடன் நிஜமான ஹீரோவாய் நிஜ வாழ்வு வாழலாம். கவிதை எழுதலாம். கட்டுரை எழுதலாம். கற்பனை இருந்தால் விற்பனை செய்து காசு சேர்க்கலாம். தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஆகலாம். வானொலி மூலம் வலம் வந்து பார்க்கலாம்.

avatar
Guest
Guest

PostGuest Fri Jan 16, 2009 2:31 pm

காலத்தைக் கொலை செய்வது கடுமையான பாவம் அல்லவா? ஒரு வருடத்தின் அருமை யாருக்குத் தெரியும்? ஃபெயில் ஆன மாணவனுக்குத் தெரியும். தன்னோடு படித்தவர்கள் அடுத்த வகுப்பில் அணிவகுக்கும்போது அவமானம் அணி வகுக்கும்! என்ன செய்யப் போகிறீர்கள்?

ஒரு மாசத்தின் அருமை யாருக்குத் தெரியும்? குறைப் பிரசவத்தில் பிள்ளை பெற்ற குணவதிக்குத் தெரியும். ஒரு மாசம் குறைவாய்ப் பெற்ற பிள்ளை பிழைப்பதே துர்லபம். பாதுகாப்பதோ பணச் செலவு. தேறும் வரை பதைபதைப்பு.

ஒரு வாரத்தின் அருமை யாருக்குத் தெரியும்? வாரப் பத்திரிகை ஆசிரியருக்குத் தெரியும்.

ஒரு நாளின் அருமை யாருக்குத் தெரியும்? ஒரு நாள் முன்னதாகப் பதவியில் சேர்ந்து பதவி உயர்வு பெற்றவனைப் பார்த்த பதவி உயர்வு பெறாதவனுக்குத் தெரியும்.

ஒரு மணியின் அருமை யாருக்குத் தெரியும்? பரிட்சை எழுதும் மாணவனுக்குத் தெரியும். மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை செய்யும் மருத்துவருக்குத் தெரியும்.

ஒரு நிமிடத்தின் அருமை யாருக்குத் தெரியும்? ரயிலைக் கோட்டைவிட்டவனைக் கேட்டால் தெரியும்.

ஒரு விநாடியின் அருமை யாருக்குத் தெரியும்? விபத்தில் இறந்துபோனவனுக்கே விவரமாய்த் தெரியும்.

ஒரு மைக்ரோ செகண்டின் அருமை ஒலிம்பிக்கில் ஓடும் ஓட்டக்காரனுக்குத் தெரியும்.

காலத்தின் அருமை உனக்குத் தெரியுமா நண்பனே? தெரிந்தால் வெற்றி நிச்சயம்.

avatar
Guest
Guest

PostGuest Fri Jan 16, 2009 2:32 pm

7. தினப் பத்திரிகைகள் படிக்கும் பெண்கள் எத்தனை பேர்?

ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் ஒரு வழக்காடு மன்றம் நடந்து கொண்டிருந்தது. எனக்கு நீதிபதி பொறுப்பு. "குடும்ப வாழ்வின் வெற்றியைத் தீர்மானிப்பவர் ஆண்களா? பெண்களா?' என்பது தலைப்பு. பெண்களைத் தாக்கிப் பேசிய பேச்சாளர் ஒரு வெடிகுண்டை வீசினார். எப்படி?

""பெண்களுக்குப் பொது அறிவு கிடையாது'' என்றார். அதிர்ச்சியுடன், ""என்ன?'' என்றேன். பேச்சாளர் நிதானமாக, ""பொது அறிவு என்ன பொது அறிவு...? பொதுவா அறிவே கிடையாது?'' என்று குற்றம் சாட்டிப் பேசினார். சபை சிரித்தது. என்னால் சிரிக்க முடியவில்லை.

கோபம் வந்தது. ""கவனமாகப் பேசுங்கள்'' என்று எச்சரித்தேன். ஆனால் அவர் கூறிய காரணங்கள் என்னை அசைக்கத் தொடங்கின. ""வாரப் பத்திரிகை, மாதப் பத்திரிகை படிக்கிற பெண்கள் அதிகம். ஆனால் தினப்பத்திரிகை படிக்கிற பெண்கள் எத்தனை பேர்..? நாட்டு நடப்பு பற்றி எத்தனை பெண்கள் அக்கறை காட்டுகிறார்கள்?'' என்று கேட்டார். மிகவும் யோசிக்க வேண்டிய விஷயம்.

""அதைவிட தொலைக்காட்சிப் பெட்டியில் சினிமா பார்க்கும்போது குடும்பமே பார்க்கிறது. ஆனால் செய்திகள் தொடங்கியதும் பெண்கள் அடுப்படிக்குள் பாய்ந்து உணவைத் தயார் செய்வது ஏன்? செய்தி நேரம் வந்ததும் சினிமாவில் இடைவேளை மாதிரி அதைச் சாப்பாட்டுக்குப் பயன்படுத்த பல பெண்கள் விரும்புவது உண்மைதானே! இது சரிதானா? செய்தி நேரம் என்ன சினிமா இடைவேளையா? இப்படி இருந்தால் நாடு உருப்படுமா?'' என்றார்.

யோசிக்க ஆரம்பித்தேன். படித்த பெண்கள், அலுவலகம் போகிறவர்கள் இந்தக் குற்றச்சாட்டுக்கு விதிவிலக்கு என்று நம்பினேன். ஆனால் என் நம்பிக்கையை உலுக்கிவிட்டது ஒரு ஃபோன் கால். "பொதிகை'யில் செய்தி பார்த்துக் கொண்டிருந்தேன். நம்ப முடியவில்லையா? "சன்'னிலும் "ஜெயா'விலும் நியூûஸ விட "வியூஸ்' அதிகம். எனவே "பொதிகை'யில் செய்தி பார்ப்பது வழக்கம். ஷோபனா ரவி செய்தி வாசித்தார். அவர் என் குடும்ப நண்பரும்கூட. அப்போது என் தொலைபேசி அலறியது. தில்லியில் இருந்து எஸ்.டி.டி. கால். என்னவோ ஏதோ என்று பரபரப்பாகப் பேச ஆரம்பித்தேன்.

எதிர் முனையில் என் நண்பரின் மனைவி, ""ஷோபனா ரவி உங்கள் நண்பர்தானே..?'' என்றார். ""ஆம்... எதற்காகக் கேட்கிறீர்கள்?'' என்றேன். ""வழக்கமாகக் கழுத்தைப் போர்த்திக் கொண்டு செய்தி வாசிப்பார். இன்று அப்படிப் போர்த்தவில்லை. அவர் கழுத்தில் போட்டிருக்கும் ஒரு மணி மாலையைப் பார்த்தீர்களா? அது நேச்சுரல் ஸ்டோனா... அல்லது செயற்கையா? எங்கே கிடைக்கும்? என்ன விலை என்று விசாரிச்சுச் சொல்ல முடியுமா?'' என்றார்.

செய்தியைவிட செய்தி வாசிப்பவரை வாசிக்கும் அம்மணி எம்.ஏ., பிஹெச்.டி., போதுமா? நான் அதிர்ந்து போனேன். பெண் விடுதலை, பெண் முன்னேற்றம் குறித்த முயற்சிக்கு இத்தகைய குணநலன்கள் நல்லதுதானா என்று இப்போது யோசிக்கிறேன். வாழ்க்கையை வண்ணப்படுத்துவது பெண்மை. அதற்கு அழகுணர்ச்சி இருப்பது அவசியம். அழகுப் பொருள்கள், அலங்காரப் பொருள்கள் மீதான பெண்களின் ஈடுபாட்டை நான் இவ்வளவு நாளாக எதிர்ப்பது இல்லை. ஆனால் இப்போது என் கருத்து மறுபரிசீலனைக்குரியது என்றே கருதுகிறேன்.

avatar
Guest
Guest

PostGuest Fri Jan 16, 2009 2:33 pm

பெண்களின் அழகுணர்ச்சிக்கான விலை இன்று மிக மிக அதிகம். காலக் கொலையோ அதைவிட அதிகம். எப்படி? நகங்களை வண்ணப்படுத்தி, பழைய வண்ணங்களை நீக்கிப் புதுவண்ணம் பூச நெயில் பாலிஷ், ரிமூவர்; உதடுகளை உயிர்ப்பேற்ற உதட்டுச் சாயம் (லிப்ஸ்டிக்), கன்னங்களில் கவர்ச்சி கூட்ட ரூஜ், கண்ணிமைகளைப் பெரிதுபடுத்தி அழகைக் கூட்ட மஸ்காரா, அழகாய்க் காட்ட ஐ லைனர், கழுத்தை, முகத்தைக் கழுவிக் காட்ட கிளென்சிங் மில்க், மாஸ்க் ப்ளீச், தோலின் இயற்கை மணத்தை வாசனையில் புதைக்க பாடி ஸ்ப்ரே மற்றும் சென்ட் வகைகள், கொண்டை தொடங்கி கெண்டைக்கால் வரை "மாட்சிங்' பார்த்து அலங்கரிக்கத் தேவையான விதவிதமான உபகரணங்கள் (க்ளிப், ரிப்பன், பான்ட், விதவிதமான செருப்புகள்).

பொருட்செலவும் நேரச் செலவும் இவ்வளவு தேவையா? யோசியுங்கள். அறிவார்ந்த விஷயங்களில் அதிக கவனம் செலுத்துங்கள். அதற்காக மம்தா பானர்ஜியாகவும், மாயாவதியாகவும் மாறச் சொல்லவில்லை. கொஞ்சம் சிக்கனம்... தேவை இக்கணம்.

எல்லா நாடுகளிலும் இந்த வியாதி இருக்கிறது. உதாரணம் சொல்கிறேன். அமெரிக்காவில் பல விஞ்ஞானிகள் பங்கேற்ற விருந்து ஒன்றினுக்கு உலகப் புகழ் பெற்ற விஞ்ஞானி ஐன்ஸ்டீன் போயிருந்தார். அவர் மனைவி அவருடன் போக வேண்டியவர். போக முடியவில்லை. கடைசி நேரத்தில் உடம்பு சரியில்லை. விருந்து முடிந்து வீட்டுக்குத் திரும்பிய ஐன்ஸ்டீனிடம் அவர் மனைவி கேட்டார்...

""விருந்து எப்படி நடந்தது?''

""நன்றாக இருந்தது'' என்று சுருக்கமாகக் கூறிவிட்டு அங்கு தாம் சந்தித்த விஞ்ஞானிகள் பற்றியும் அவர்களுடன் விவாதித்த அறிவுபூர்வமான விஷயங்கள் பற்றியும் ஆவலுடன் ஐன்ஸ்டீன் சொல்லத் தொடங்கினார். அவர் மனைவிக்குப் பிடிக்கவில்லை. முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க, ""நான் இந்த அறுவையைக் கேட்கவில்லை. அங்கு விருந்துக்கு வந்திருந்த பெண்கள் எந்த எந்த மாதிரி கவுன் அணிந்திருந்தார்கள்... கவனித்தீர்களா?' என்று சீறினார்.

ஐன்ஸ்டீன் பொறுமையாக, ""இதோ பார்... விருந்து மேஜைக்கு மேலே பெண்களின் முகம் மட்டும்தான் தெரிந்தது. அதனால் அவர்கள் அணிந்து வந்த ஆடை எப்படிப்பட்ட ஆடை எனக்குத் தெரியாது. உனது விருப்பத்தை நிறைவேற்ற வேண்டுமென்றால் நான் மேஜையின் கீழே குனிந்து பார்த்திருக்க வேண்டும். அது அவ்வளவு கவுரவமாக இருக்காது'' என்றார்.

பெண் பிள்ளைகளுக்கு ஒன்று சொல்கிறேன். நீங்கள் சில விஷயங்களுக்கு அடிமைகளாக இருக்கும் வரை ஆண்கள் உங்களை அடிமைகளாக வைத்திருப்பார்கள். அந்த அடிமைத்தனத்திலிருந்து நீங்கள் வெளிவந்துவிட்டால் ஆண்களால் உங்களை அடிமைப்படுத்தவே முடியாது. என் பெண்மக்களே... என் அக்கறையைப் புரிந்து கொள்ளுங்கள். புரிந்து கொண்டால் வெற்றி நிச்சயம்!

avatar
Guest
Guest

PostGuest Fri Jan 16, 2009 2:34 pm

8. அந்த அதிசயக் கிழவர்!

கட்சிகளிலும் சரி... கம்பெனிகளிலும் சரி... தலைமைக்கு வேண்டியவராகச் சிலர் விளங்குவார்கள். தலைமையின் நம்பிக்கைக்கு உரியவராகச் செல்வாக்கு உள்ளவராக வலம் வருவார்கள். இத்தனைக்கும் சீனியாரிட்டிபடிப் பார்த்தால் மிகப் பின்தங்கியவராக இருப்பார். ஆனால் அவர் செல்வாக்கு கொடிகட்டிப் பறக்கும். இது எப்படி நடக்கிறது?

இதைச் சிலர் கொச்சையாகக் ""காக்காய் பிடித்து முன்னுக்கு வருகிறான்'' என்கிறார்கள். ஆனால் நுட்பமாக, முன்னுக்கு வரும் இரகசியத்தைக் கவனிக்க மறுக்கிறார்கள். நீங்கள் முக்கியமான நபராக விளங்க நிறைய வழிகள் இருக்கின்றன. அதைப் பற்றிக் கொஞ்சம் சொல்கிறேன்.

திருமண வீடுகளில், அலுவலகங்களில், விழாக்களில் சிலரைச் சுற்றிக் கூட்டம் எப்போதும் இருக்கும். அவர் இருக்கும் இடம் கலகலப்பாக இருக்கும். குபீர் குபீர் என்று சிரிப்பலைகள் அவரைச் சுற்றி எழும். எந்த இடத்திலும் முக்கியத்துவம் பெற்றுவிடுவார். காரணம், சாமர்த்தியமாக, நகைச்சுவையாக அவர் பேசுவதே.
எனவே நல்ல நகைச்சுவைகளைச் சந்தர்ப்பத்திற்கேற்பப் பயன்படுத்துகிறவர்களை எல்லோரும் நேசிப்பார்கள். ஒரு முக்கியமான மனிதராகக் கருதுவார்கள். ஆனால் நகைச்சுவை தரம் உடையதாக, புதிது புதிதாக, நினைத்து நினைத்துச் சிரிக்கக் கூடியதாக இருக்க வேண்டும். பலர் மத்தியில் சொல்லத் தகாத ஆபாசத் துணுக்குகளை, இடத்திற்குப் பொருந்தாத நகைச்சுவைகளைச் சொன்னால் இருக்கிற மரியாதையும் போய்விடும்.

இன்னும் கொஞ்சம் அதிக முக்கியத்துவம் பெறும் வழி என்ன? நகைச்சுவைகளைக் கடந்து அதிகத் தகவல்களைத் தெரிந்துவைத்திருக்கும் ஒருவர் இன்னும் முக்கியத்துவம் பெறுவார். ரயில் நேரம், விமான நேரம், பொருள்களின் விலை, எது எங்கே சுலபமாகக் கிடைக்கும் என்ற தகவல், நுட்பமான பல விவரங்களை அறிந்து வைத்திருந்தால் உங்கள் மேலதிகாரிகளால் நீங்கள் மிகவும் விரும்பப்படுவீர்கள்.

நிறைய விவரங்களைக் கை வசம் வைத்திருக்கும் நபர் தலைமையால் அதிகம் தேடப்படுவார். தலைமை அவரை அதிகம் சார்ந்திருக்க விரும்பும். புதிதாகப் பொறுப்பேற்கும் சூட்டிகையான கலெக்டர்கள் அலுவலகத்திலேயே விவரமான கிளார்க்கைக் கண்டுபிடித்துத் தம் அருகிலேயே வைத்திருப்பார்கள்.
சென்னைப் பல்கலைக் கழகத்தில் விசாரணைப் பகுதியில் மிக நீண்ட காலம் ஒரு பெரியவர் பணி புரிந்தார். அவரை மிக நீண்ட காலம் பணி நீட்டிப்புக் கொடுத்து வைத்திருந்தனர். ஒரே காரணம்... அவர் பல்கலைக் கழகம், பரிட்சை, துறைகள் எது பற்றிய கேள்விக்கும் விரல் நுனியில் விடை வைத்திருப்பார்.
துல்லியமாக, கோபம், பதற்றம் இன்றி உடனுக்குடன் விடையளித்த அந்த அதிசயக் கிழவரை என்னால் மறக்கவே முடியாது. அதிக விவரங்கள் அறிந்த மனிதர் தன் முக்கியத்துவத்தை ஒரு போதும் இழக்க முடியாது.

நிரந்தர முக்கியத்துவம் பெறுவதற்கான உன்னத மாமந்திரத்தை இப்போது சொல்லுகிறேன் - ஐய்ஸ்ர்ப்ஸ்ங்ம்ங்ய்ற் ம்ஹந்ங்ள் ஹ்ர்ன் ண்ம்ல்ர்ழ்ற்ஹய்ற். ஈடுபாடு ஆழமாக ஆழமாக மேம்பாடு நிச்சயம். இதனை உணர்ந்தவர்கள் தோற்பதில்லை. ஒரு திருமண வீட்டிற்கு ஆயிரம் பேர் வந்து போனாலும், அக்கறையுடன் பல விஷயங்களில் ஈடுபடுகிறவர் மறக்கப்பட முடியாதவராக மாறிவிடுகிறார்.

திருமணத்தின் ஒவ்வொரு சடங்கிலும், ஒவ்வொரு கட்டத்திலும், ஒவ்வொரு இடத்திலும் அந்த நபர் தேடப்படுகிறார். அவரை மையப்படுத்தி அங்கு நிகழ்ச்சிகள் நடைபெறத் தொடங்கும். கட்சியில் கடைசியில் சேர்ந்த ஒருவர் அளவு கடந்த ஈடுபாடு காட்டும்போது அவர் முக்கியத்துவம் பெற்று முன்னேறுகிறார்.

தலைவருக்கு இரண்டாம் இடத்தில் இருக்கும் சிலர், தலைவரின் மறைவுக்குப் பின்னும் இரண்டாம் இடத்தில் இருக்க நேரிடும். ஆனால் கடைசியில் வந்தவர் முதல் இடத்தைப் பெற்றுவிடுவார். இரண்டாம் இடத்தார் புலம்புவார். "நான்தான் சீனியர்' என்பார். என்ன பயன்? அவருக்கு எப்போதும் இரண்டாம் இடமே கிடைக்கும். கட்சியின் மீது அவரது ஈடுபாடு இரண்டாம் பட்சம். எனவே கட்சிக்கும் அவர் இரண்டாம் பட்சம்.

கல்லூரியில் வேலைக்குச் சேரும் ஒருவர், தனது துறையின் வேலைகளை மட்டும் அளந்து செய்தால் மானேஜ்மெண்ட் அவருக்குச் சம்பளம் கொடுக்கும். மரியாதை கொடுக்காது. தனது பணி, தனது துறையில் பிறரது பணி, மாணவர்கள் பிரச்சினை, கல்லூரி விழாக்கள், அட்மிஷன், கட்டட நன்கொடை இப்படி எல்லா வேலையையும் தனது வேலையாக இழுத்துப் போட்டுக்கொண்டு செய்கிறவர் மானேஜ்மெண்டின் நம்பிக்கைக்குரியவர் ஆகிறார். நியமிக்கப்படாத முதல்வராக முக்கியத்துவம் பெறுகிறார்.
எந்த விஷயத்திலும் ஈடுபாடும் மேம்பாடும் கைகோர்த்து நிற்கின்றன. முக்கியதுவமும் முதலிடமும் முழு மூச்சுடன் ஈடுபட்டவருக்கான உரிமைச் சொத்து. புரிந்து கொண்டால் வெற்றி நிச்சயம்.

avatar
Guest
Guest

PostGuest Fri Jan 16, 2009 2:35 pm

9. பின்பற்றாதே; முன்னேறு!

புத்தகங்கள் படிப்பதால் மட்டும் ஒருவர் அறிவாளி ஆகிவிட முடியுமா? முடியாது. முடியவே முடியாது. அறிவு என்பது புத்தகத்திலிருந்து ஒருவருக்கு வருவதா? கிடையாது. கிடையவே கிடையாது. புத்தகங்கள் படிப்பது என்பது மணற்கேணியைத் தோண்டுகிற மாதிரி. அறிவு பிறப்பது என்பது மணல் கேணியில் தண்ணீர் ஊறுகிற மாதிரி. மண்ணைத் தோண்டுவதால் மட்டுமே தண்ணீர் வந்துவிடாது. மண்ணின் மார்பகத்தில் நீரூற்று இருந்தால் மட்டுமே நீர் சுரக்க முடியும்.

அதனால்தான் நிறைய புத்தகங்கள் படித்தும், மனப்பாடம் செய்தும் பலர் அறிவாளிகளாக ஆகாமலேயே செத்துப் போகிறார்கள். அவர்கள் சுயமாகச் சிந்திப்பதே இல்லை. தோண்டுவதால் மட்டுமே தண்ணீர் வந்துவிடுமா? பாலைவனங்களிலும் பாறை நிலங்களிலும் பல நூறு அடி தோண்டியும் தண்ணீர் வருவதே இல்லை. ஏன்? ஆனால் ஆற்றங்கரையிலும் கடற்கரையிலும் ஐந்தடியிலேயே தண்ணீர் வருகிறது.

ஏன்? பலநூறு தடவை பல நூறு புத்தகங்கள் படித்தும் சிலர் அறிவாளி ஆவதே இல்லை!

ஒரு புத்தகத்தை ஒரு தடவை படித்தாலும் சிலர் அதன் அடிஆழத்தை உணருகிறார்கள். எந்தப் புத்தகத்தைக் கையில் எடுத்தாலும் இந்த உணர்வோடு எடுங்கள். வெற்றி நிச்சயம். திருக்குறள் படிக்கிறபோது இந்த உண்மையை நான் உணர்ந்து கொண்டேன். "தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு' என்பது தமிழ் மறை. "அறிவு புத்தகத்திலிருந்து வருவதில்லை. அது கற்பவன் மனத்தகத்தில் இருந்து வருகிறது' என்று உணர வேண்டும்.

"தாய் சொல்லைத் தட்டாதே' என்று புத்தகத்தில் உள்ளது. வரதட்சிணை கேட்கச் சொல்கிறாள் தாய். தாய் சொல்லைக் கேட்கிறவன் மூடன். மறுக்கிற மகன்தான் அறிவாளி. "மருமகளை மதிக்காதே... மண்ணெண்ணெயை ஊற்று' என்கிறாள் தாய்! தாய்மையே அன்பு... அன்பே தாய்மை. அன்பே இன்றி ஒரு பெண்ணை அழிக்க நினைக்கும் தாய், தாயே இல்லை என்று அறிவது நுட்பமான அறிவு.

"கட்டினவள் கண் கலங்காமல் குடும்பம் நடத்த வேண்டும்' என்பது இல்லற தர்மம். "இந்த நிமிடம் உன் அம்மாவை வெளியில் அனுப்பு' என்று மனைவி அழுது ஆர்ப்பரிக்கும்போது, கண்ணீரைக் காலால் எற்றும் கம்பீரமே இல்லற தர்மம். பெற்றவளை வணங்கி வீட்டில் வைத்திருப்பது நுட்பமான இல்லற தர்மம். இவை புத்தகம் படிப்பதால் வருவதில்லை. சுயமாகச் சிந்திப்பதால் மட்டுமே வருகிறது.

"முன்னோரை மதிக்க வேண்டும். மூத்தோர் சொல் பேண வேண்டும்' என்பது அவசியம். "குரு வார்த்தைக்கு மறு வார்த்தை இல்லை' என்பது மகாவாக்யம். ஆனால் குரு தவறாகச் சொன்னால் மரியாதையோடு மறுக்கக் கூடாதா? மறுப்பது அகங்காரமா? மறுப்பதே மானுடப் பரிணாமம். இராமானுஜர் தமது குரு தவறாகச் சொன்னபோது உறுதியாக மறுத்தவர் தெரியுமா? சரியான ஒன்றை அவமதிப்பது தவறு. தவறான ஒன்றை அனுமதிப்பதோ மிகமிகத் தவறு.

இராமனுடைய குலகுரு வசிட்டர். தந்தை ஆணையை ஏற்றுக் காடு போகும் இராமனைத் தடுக்கிறார். "நான் உன் குரு... மீறிப் போக வேண்டாம்' என்கிறார். "குருவே... சத்தியம் எல்லா தருமங்களையும்விட மேலானது என்று போதித்தவர் நீர். இப்போது நீர் என் தந்தைக்குக் கொடுத்த சத்தியத்தை மீறச் சொல்கிறீர். நான் உம்மை மதிக்கிறேன். ஆனால் நீர் உணர்த்திய தருமத்தை உம்மைவிட மேலாக மதிக்கிறேன்' என்று வசிட்டர் வார்த்தையை மீறுகிறான் இராமன். ஆஹா... "இராமன் குருவை அவமதிக்கிறான்' என்று குமுற முடியுமா? குருவைவிட மேலாகத் தருமத்தை மதிக்கிறான் என்று கொண்டாட வேண்டும்.

avatar
Guest
Guest

PostGuest Fri Jan 16, 2009 2:35 pm

பெரியோரை அவமதிப்பது அயோக்கியத்தனம். அதற்காகப் பெரியோர் சொல்கிற எல்லாமே சரி... சரி என்பது அசட்டுத்தனம். அயோக்கியனாக இருப்பது தவறு என்றால்... அசடாக இருப்பதுவும் தவறுதான். சுயம்... சுயம்... சுயம். இந்த விழிப்பு நிலையோடு எப்போதும் இருக்கப் பழகுங்கள். வெற்றி நிச்சயம்.
இன்றைக்கு உலகின் பெரும் பிரச்சினை என்ன? மதவெறி. என்ன காரணம்? தங்கள் மத நூல்களில் சொல்லப்பட்ட எல்லாமே சரி... என்கிற அசட்டுத்தனம். அதே சமயம் பிற மத நூல்களில் சொல்லப்பட்ட எல்லாமே பிழை என்கிற அயோக்கியத்தனம். அசட்டுத்தனமும் வேண்டாம்... அயோக்கியத்தனமும் வேண்டாம். சுயமாகச் சிந்திக்கப் பழகு. இந்த உலகத்தில் எல்லாமே விசாரணைக்குட்பட்டவை! விவாதத்துக்குட்பட்டவை.

எவ்வளவு பெரிய மனிதன் என்றாலும் - ஏன் கடவுளே என்றாலும்கூட விமர்சனத்துக்குரியவர் - ஆராய்ச்சிக்குரியவர். இதுதான் விவேகமான, விழிப்பான நிலை. "எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும்...' என்கிற குறளில், யார் யார் என்றால் என்ன பொருள்? அதில் திருவள்ளுவர் அடங்கமாட்டாரா? திருவள்ளுவரே சொன்னாலும் அப்படியே ஏற்பது கூடாது.

தனக்கு ஆமாம் போடும் கூட்டத்தைவிடத் தன்னை விழிப்புடன் விமர்சிப்பவனைத்தான் திருவள்ளுவர் விரும்புவார். காரணம் தன்னைப் பின்பற்றுபவனைவிடத் தன்னையும் தாண்டி முன்னால் போகிறவனையே திருவள்ளுவர் தேடுகிறார். ஆதாரம் சொல்லட்டுமா? "தம்மின் தம்மக்கள் அறிவுடைமை' என்ற குறளுக்கு என்ன பொருள்? தம்மையும் தாண்டி அடுத்த தலைமுறை வளருவதையே வள்ளுவர் விரும்புகிறார்.

"திருக்குறளில் என்ன இருக்கிறது! எதுவுமே இல்லை' என்பது அயோக்கியத்தனம். "அதில் எல்லாமே இருக்கிறது... அதைத் தாண்டி எதுவுமே இருக்க முடியாது' என்பது படு அசட்டுத்தனம். "பரிமேலழகரும் மணக்குடவரும் என்ன உரை எழுதிக் கிழித்தார்கள்' என்று பேசினால் அயோக்கியத்தனம்! "பரிமேலழகரும் மணக்குடவரும் சொல்வது மட்டும்தான் சரி... மற்ற எவனுக்கும் எதைச் சொல்லவும் உரிமை இல்லை' என்று எண்ணுவது அகில உலக அசட்டுத்தனம்.
நமது மத நூல்களில் சொல்லப்பட்ட சில விஷயங்கள் மறுபரிசீலனைக்குரியவை... தவறானவை என்கிற தெளிவு ஒவ்வொரு மதத்தவனுக்கும் ஏற்பட்டுவிட்டால் பூமியில் ரத்தம் பாயாது... யுத்தம் நேராது.

புத்தகங்களைப் பிடித்துத் தொங்கிக் கொண்டு சுயமாகச் சிந்திக்க மறுக்கும் மூடத்தனமே எல்லாக் குழப்பங்களுக்கும் காரணம்.
உண்மையைத் தேடும் நெருப்போடு நான் வள்ளுவரின் தாள்களை வணங்கினேன். வாரி எடுத்து இந்தப் பிள்ளையைத் தோள்களில் அமர்த்தினான்
என் பாட்டன். பாசத்தின் பரிசு அது. அவனது தயவால் அவனைவிட அதிக தூரத்தை என்னால் பார்க்க முடிகிறது! நான் அசடுமல்ல... அயோக்கியனுமல்ல... வள்ளுவரால் ஆசீர்வதிக்கப்பட்டவன். அதனால் தமிழினத்தை உயர்த்தும் எனது போர் ஓயாது

avatar
Guest
Guest

PostGuest Fri Jan 16, 2009 2:41 pm

10. ராம ஜயமா? ராம் டீம் ஜயமா?

இந்தியாவின் "நேஷனல் ஹீரோ' யார் தெரியுமா? ராமன். காரணம், அவரது வீரக் கதை. இந்திய மொழிகள் அத்தனையிலும் அந்தந்த மொழியின் தலைசிறந்த கவிஞர்களால் ராமாயணம் எழுதப்பட்டது. இந்தப் பெருமை ராமருக்கு முன்னும் பின்னும் எவருக்கும் கிடைத்திருக்க முடியாது. அப்படிப்பட்ட "நேஷனல் ஹீரோ' ராமனுடைய படம் மட்டும் தனியாக எங்காவது நீங்கள் பார்த்ததுண்டா? வெறும் ராமனுக்கு மட்டும் சந்நிதி எந்தக் கோவிலிலாவது பார்த்ததுண்டா? இருக்காது.
அவரது புகழ் பெற்ற படம் ஸ்ரீராம பட்டாபிஷேகப் படம். குறைந்த பட்சம் சீதை, லட்சுமணன், ஹனுமனோடு சேர்ந்துதான் ராமன் படம் இருக்கும்.

என்ன காரணம்?

எப்போதும் "க்ரூப் ஃபோட்டோ'வில் மட்டுமே ராமன் காட்சி தரும் காரணம் என்ன என்று யோசித்தது உண்டா?

ராமனது வெற்றி ஒரு குழுவினரின் வெற்றி. எந்தச் சீதையை மீட்க ராமன் போராடினாரோ அந்தச் சீதை கற்புடன் காத்திருந்ததால்தான் ராமனது வெற்றிக்கு அர்த்தம் விளைந்தது. ராமன் எங்கே கடல் கடந்து வரப்போகிறார்... நாம் ராவணன் அரண்மனையில் அடைக்கலம் புகுந்தால் என்ன என்று சீதை நினைத்திருந்தால் ராமனது வெற்றி அர்த்தமற்ற அவமானமாகி இருக்கும்.

ராமன் காடு போனதும் மக்கள் மனத்தை மாற்றி ராஜ்ஜியத்தைத் தன்பக்கம் கொண்டுபோக பரதன் நினைத்திருந்தால், ராமன் நாட்டை விட்டுக் கொடுத்த தியாகம் கேலிக்குரியதாகி இருக்கும். பாதுகையுடன் பரதன் காத்திருந்த பண்புதான் ராமனது வெற்றியைக் கவுரவப்படுத்தியது... அர்த்தமுள்ளதாக ஆக்கியது.
காட்டில் பெண்ணுக்கும், நாட்டில் மண்ணுக்கும் இலக்குவன் ஆசைப்பட்டிருந்தால் ராமஜயம் காமஜயமாகக் களையிழந்து போயிருக்கும். இளைய பெருமாளின் இதயஉறுதியே ராமனது வெற்றியை உண்மையான வெற்றியாக்கியது.

சுயநலமற்ற, எந்த எதிர்பார்ப்புமற்ற தூய தொண்டன் அனுமன் கிடைக்கவில்லையென்றால் ராமன் இத்தனை வெற்றிகளை அடைந்திருக்க முடியுமா?
தற்கொலை செய்ய இருந்த சீதையைக் காத்தான். பிரம்மாஸ்திரத்தால் சாய்ந்து கிடந்த இளையவனைச் சஞ்சீவி மலையால் எழுப்பினான். ராமன் வரவேண்டிய பதினான்கு வருடம் முடிந்தது என்று நெருப்பில் விழ இருந்த பரதனைத் தடுத்து நெருப்பை அவித்துப் பலரை மரணத்திலிருந்து மீட்டான் அனுமன். சீதை, இலக்குவன், பரதன் இந்த மூவரில் யார் இறந்து போயிருந்தாலும் ஸ்ரீராமன் பட்டாபிஷேகத்தன்று சந்தனத்திற்குப் பதில் சாம்பலை அல்லவா முகத்தில் பூச வேண்டியிருந்திருக்கும்.
எனவே, ஸ்ரீராமஜயம் என்பது ஒரு தனிமனித வெற்றி அன்று. ஒரு குழுவின் வெற்றி. ஒரு கூட்டத்தின் வெற்றி.

குறிப்பறிந்த, கொள்கைப் பிடிப்புடைய ஒரு குழு நிச்சயம் வெற்றி பெற முடியுமா என்கிற "டீம் வொர்க்' பற்றிய இந்தியப் பிரகடனம் ராமஜயம். அதனால்தான் ராமனுக்குத் தனியாகச் சந்நிதி இல்லை. ராமனுக்குத் தனியாகப் படமும் இல்லை. அறமே அவனது ஆத்மா. சீதை, பரதன், இலக்குவன், அனுமன் யாவரும் அவனது அங்க அவயவங்கள். அவர்கள் யாருமே தங்களைத் தனித்தனியாகப் பிரித்துப் பார்ப்பதே இல்லை. அந்தக் குழு பிரிக்க முடியாதது.
""எவ்வளவு பலசாலியும் தனக்கேற்ற குழுவுடன் இணைகிற போதுதான் அதி உயர்வான வெற்றி பெறுகிறான்'' என்கிற அற்புதமான "மெúஸஜ்' ராமபட்டாபிஷேக "க்ரூப் ஃபோட்டோ'வில் எழுதப்பட்டுள்ளது.

avatar
Guest
Guest

PostGuest Fri Jan 16, 2009 2:41 pm

இந்தியாவில் பலர் தனித்தனியாகப் பலசாலி... திறமைசாலி... அறிவாளி. ஆனால் குழுவாகப் பணியாற்றத் தகுதி அற்றவர்கள். தன்முனைப்புக் காரணமாக ஒருவரை ஒருவர் வெட்கமில்லாமல் கவிழ்க்கும் இயல்பினர். ஒரு முழுக் குழுவும் வேலைகளைப் பங்குபோட்டால் சுலபமான வெற்றி பெறலாம் என்பதை உணராமல், யார் சிக்கினார்களோ அவர்களை அதிகம் வேலை வாங்கும் நீசத்தனம் நமது நிஜ குணம்.

அகப்பட்ட மருமகளை அதிகம் கசக்கியதால் கூட்டுக்குடும்பங்கள் அழிந்தன. உழைக்கும் தொண்டனை மட்டுமே ஓடஓட விரட்டியதால் கட்சிகள் கலை இழந்தன. களை அடைந்தன.

இந்தியக் கிரிக்கெட் டீமை எடுத்துக் கொள்ளுங்கள். தனித்தனியாக எல்லோரும் நட்சத்திரங்கள்தான். கூட்டமாக ஆடவந்தால் கூட்டு முயற்சி குழம்பிப் போவது ஏன்?
நான் கேள்விப்பட்ட ஒரு ஜோக். ஒரு டைவர்ஸ் கேஸ்... குழந்தை அப்பாவிடமா... அம்மாவிடமா என்பது பிரச்சினை. ""அப்பாவும் அடிப்பார். அம்மாவும் அடிப்பாள். போகமாட்டேன்'' என்கிறது குழந்தை. ""அடிக்காத ஒருவரிடம் குழந்தையை ஒப்படைப்பது என்றால் இந்தியக் கிரிக்கெட் டீமிடம்தான் ஒப்படைக்க வேண்டும். ஏன் என்றால் அவர்கள்தான் பந்தைக்கூட அடிப்பதில்லை'' என்கிறார் நீதிபதி. இப்போது நிலைமை கொஞ்சம் மாறியிருக்கிறது. மகிழ்ச்சி.

கண்டம் விட்டுக் கண்டம் பறக்கும் பறவைகளிடமிருந்து "டீம் ஒர்க்' பற்றி நாம் கற்றுக்கொள்ள வேண்டும். எப்படிப் பறக்கும் தெரியுமா? முதலில் ஒரு பறவை. அதன் இரண்டு இறக்கைகளையும் ஒட்டி இரண்டு. அவற்றின் இறகுகளை ஒட்டி நான்கு... இப்படி அவை அம்பு மாதிரி அணிவகுக்கும்.
ஏன் முதல் பறவையின் இறக்கைகளைப் பின்பற்றி நிற்கின்றன தெரியுமா? அதன் இறகு அசைப்பில் காற்று விலகுவதைப் பயன்படுத்திக் கொண்டு அடுத்த பறவை சுலபமாக முன்னேறிவிடலாம்.

ஆனால் அலகாலும் இறகாலும் காற்றைக் கிழிப்பதால் முதல் பறவை மிக விரைவில் சோர்ந்து விடும். ஆனால் கடைசிப் பறவை சுகமாகக் களைப்படையாமல் வரும். மனித இனமாக இருந்தால் முதல் பறவையைச் சாகும்வரை வேலை வாங்குவோம். ஆனால் பறவைகள் பண்பானவை. முதல் பறவை களைத்ததும் பின்னால் கடைசி வரிசைக்கு வந்துவிடும். அடுத்து நிற்கும் பறவை தலைமை ஏற்கும். களைப்பேற்பட்டதும், சுலபமாகப் பறக்கும் கடைசி வரிசைக்கு வந்துவிடும். இப்படி மாறிமாறித் துயரங்களைப் பங்கு வைத்து அந்தக் குழுவே சுலபமாக முன்னேறும்.

குடும்பம், அலுவலகம், பொது இயக்கம் எதுவானாலும் "நானே எல்லாம்' என்று இழுத்துப் போட்டுக் கொண்டு துயரப்படாது கஷ்டங்களைப் பிறருக்கும் புரியவைப்பவர்கள், பிறரையும் பங்கேற்கச் செய்பவர்கள், அவர்கள் பங்களிப்பை மறவாது பாராட்டுபவர்கள் குழுவாக வெற்றி பெறுகிறார்கள். அந்தக் குழுவிற்கு வெற்றி நிச்சயம்!

avatar
Guest
Guest

PostGuest Fri Jan 16, 2009 2:42 pm

11. அன்று நடராஜா; இன்று ஏழு கார்!

நீங்கள் அவமதிக்கப்பட்டவரா? பிறரால் அலட்சியப்படுத்தப்பட்டவரா? யாராவது உங்களை அவமானப்படுத்தியிருக்கிறார்களா? "ஆம்' என்றால் நீங்கள் அதிர்ஷ்டசாலி. முன்னேறுவதற்கான மூலப்பொருள் உங்களிடம் உள்ளது. நம்ப முடியவில்லையா? இதிகாசங்களைப் பாருங்கள்.

தாய், தந்தை யார் என்று அறிய முடியாத அனாதை என்று கர்ணனைத் துரோணர் இகழ்ந்தார். ""நீ என்ன ராஜகுமாரனா? தேரோட்டி மகன்'' என்று அலட்சியப்படுத்தினார். விளைவு..? வளர்ந்தான்... வளர்ந்தான்... வானளாவ வளர்ந்தான். தேரோட்டி மகன் என்று கேலி பேசப்பட்டவன், சல்லியன் என்ற அரசன் தேரோட்டத் தேரேறி வந்தான். இகழ்ச்சியே அவனது வாழ்வைப் புகழ்ச்சி நோக்கிய பயணம் ஆக்கியது. எப்படி?

அள்ளிக் கொடுத்து, அள்ளிக் கொடுத்து வள்ளலாக வாழ்ந்தான். அவனிடம் மக்கள் கைஏந்தினர். புலவர்கள் கை ஏந்தினர். அனாதை ஆக்கிய அம்மா குந்தியே கை ஏந்தினாள். அடுத்து தேவேந்திரன் வந்து, அருமை மகன் அர்ஜுனனுக்காகக் கவசகுண்டலங்களைக் கை ஏந்தி வாங்கினான். அதுவும் போதாது என்று அண்டசராசரங்களின் அருமைத் தலைவனாம் ஆண்டவன் கண்ணனே வந்து கை ஏந்தி, ""கொடையால் விளைந்த புண்ணியத்தைக் கொடு'' என்று கேட்டான். அம்மா, அப்பா பெயர் தெரியாத அனாதை என்று அவமானப்படுத்தப்பட்ட கர்ணன், "அம்மா தாயே, நான் அனாதை' என்று கை ஏந்தாது அம்மா முதல் ஆண்டவன் வரை கை ஏந்திக் கேட்ட வள்ளலான வரலாற்றுக்கான வீர்ய வித்து அவமதிப்பு.

அவமதிப்பு... அலட்சியம்... அவமானம். இவை யாவும் அக்கினிக் குஞ்சுகள். விண்ணில் பாயும் நம் வெற்றிக் கலனுக்கான எரிசக்திகள். பழைய ரயில் என்ஜினில் தகதகவென்று எரியும் நெருப்பைக் கண்டதுண்டா? அந்த நெருப்புதான் ரயிலை நகர்த்தும் ஜீவ சக்தி. அந்த என்ஜினின் நெஞ்சில் நின்று எரியும் நெருப்பு எத்தனை நெடிய பயணத்தை நிறைவேற்றும் தெரியுமா? அப்படியே உங்கள் நெஞ்சில் எரியும் நெருப்பை, அவமதிப்பை, வெற்றிக்கான எரிசக்தியாக்குங்கள்.

Sponsored content

PostSponsored content



Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக