ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரியவோ உறவு ? வருந்தவோ உள்ளம் ? (கவிதை)

5 posters

Go down

பிரியவோ உறவு ? வருந்தவோ உள்ளம் ? (கவிதை) Empty பிரியவோ உறவு ? வருந்தவோ உள்ளம் ? (கவிதை)

Post by kirikasan Mon Jan 02, 2012 3:12 pm

தெரியவில்லை அழகுமுல்லை பூக்களும்கண்முன் - நேர்
விரியவில்லை உரியதங்கு வேறிடமாயின்
திரிவதில்லை தென்றல் விட்டு தேனிதழ்வாசம் - கொண்டு
உரியமுல்லை மணமிதுவென் றெம்மிடம் கூறும்

உரியதுள்ள எதுவென்றுள்ள உண்மைகள்தானும் - நல்ல
திரியுமுள்ள எரியும்வல்ல தீபமென்றாகும்
பெரியதுள்ள குன்றில்வைக்க இருளதுபோகும் அந்த
எரியவைத்த தீபமென்று எம்முகம் காட்டும்

பெரியசொல்லை வரிகளுள்ள கவிதையில் தானும் - நல்ல
பிரியமுள்ள வகையில் சொல்லும் கவிதைகள் யாவும்
உரியவல்ல சுவரில் தீட்டும் ஓவியம் போலும் - கண்ணில்
தெரியும்வண்ணம் தீட்டி வைத்த அழகென ஆகும்

சொரிவதில்லை மதுவுமில்லை காகிதப் பூவும் ஆயின்
எறிவதில்லை வரிகள் கொண்ட பொழுதினில் தானும்
அரியதென்று மனதில் தோன்றும் அன்பினைத்தானும் கூறும்
பரிவுகொண்ட மடலும் வாசப் பூவெனக்காணும்

கரியுமில்லை களங்கமில்லை காண்மதிமீதில் என்ற
வரிகள் சொல்லி வைத்தபின்னும் வான்மதி தேயும்
பெரிய் வில்லை போலுமந்த வான்வெளிதோறும் மதி
திரிவதென்ன தனிமைகொண்டு உருகிடக்காணும்

சரிவதெல்லை சரியதில்லை என்கிறபோதும் ஒரு
சரிவினெல்லை காணல்என்றும் சரியில்லை ஆகும்
எரியும்கல்லை எறிவதில்லை என்கிறபோதும் - அதை
விரியும்கைகள் கொள்ளக் காணின் உடலதுநாணும்

விரியவில்லை சரியவில்லை வெண்ணொளி வானம் - அங்கு
தெரியுமெல்லை முடிவுமல்ல ஒன்றெனக்காணும்
புரியுமந்த உறவும் என்றும் பொய்யென ஆகும் - தூரம்
தெரியும் பாதை செல்லச்செல்லப் பிரிந்திடக் காணும்

நரியுமில்லைக் காகமில்லை நம்மதுவாழ்வும் - கொண்ட
குறியும் வீழத் தவறுசெய்யின் குற்றமும் கொள்ளும்
சரியுமில்லை தவறுமில்லை இடையினில்வாழும் வெறும்
கருவியில்லை காணுமுள்ளம், கரும்பினில் சாறும்

பிழிவதில்லை பெருமைகொண்டு உள்ளவர்யாவும் - அவர்
விழியினுள்ளே கருமைகொண்ட கண்மணிதானும்
பழியும்சொல்லி விடுவதில்லை பாலென விழியும் காணும்
தெளிவுகொள்ள உதவும் வில்லை கருமை யென்றாலும்

கரியுமல்லை கனியுமில்லை காலமென்றாகும் -நல்ல
கருப்புமில்லை இனிப்புமில்லை கண்டிடும் வாழ்வும்
பெரியதல்ல பிழைகள் என்றும் வாழ்வதில் நேரும் பின்னர்
தெரிய உள்ளம் வருந்துமாயின் திருந்திய தாகும்
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

பிரியவோ உறவு ? வருந்தவோ உள்ளம் ? (கவிதை) Empty Re: பிரியவோ உறவு ? வருந்தவோ உள்ளம் ? (கவிதை)

Post by இளமாறன் Mon Jan 02, 2012 3:17 pm

உரியதுள்ள எதுவென்றுள்ள உண்மைகள்தானும் - நல்ல
திரியுமுள்ள எரியும்வல்ல தீபமென்றாகும்
பெரியதுள்ள குன்றில்வைக்க இருளதுபோகும் அந்த
எரியவைத்த தீபமென்று எம்முகம் காட்டும்

அருமையான கோர்வு சூப்பருங்க


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பிரியவோ உறவு ? வருந்தவோ உள்ளம் ? (கவிதை) Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

பிரியவோ உறவு ? வருந்தவோ உள்ளம் ? (கவிதை) Empty Re: பிரியவோ உறவு ? வருந்தவோ உள்ளம் ? (கவிதை)

Post by உமா Mon Jan 02, 2012 3:21 pm

எனக்கு பொறாமையை உள்ளது தங்கள் கவிகளை படிக்கயிலே.
எப்படி உங்களால் மட்டும் இப்படியெல்லாம் வார்த்தைகளில் விளையாட முடிகிறது. சூப்பருங்க



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

பிரியவோ உறவு ? வருந்தவோ உள்ளம் ? (கவிதை) Empty Re: பிரியவோ உறவு ? வருந்தவோ உள்ளம் ? (கவிதை)

Post by kirikasan Mon Jan 02, 2012 3:59 pm

பாராட்டிய இளமாறன் , உமா தங்கள் இருவருக்கும் நன்றிகள்!

அன்போடு வழங்கிய தங்கள் பாராட்டை ஏற்று மகிழ்கிறேன்!! நன்றிகள்!!
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

பிரியவோ உறவு ? வருந்தவோ உள்ளம் ? (கவிதை) Empty Re: பிரியவோ உறவு ? வருந்தவோ உள்ளம் ? (கவிதை)

Post by ஜாஹீதாபானு Mon Jan 02, 2012 4:20 pm

அனைத்து வரிகளும் அருமை சூப்பருங்க சூப்பருங்க


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

பிரியவோ உறவு ? வருந்தவோ உள்ளம் ? (கவிதை) Empty Re: பிரியவோ உறவு ? வருந்தவோ உள்ளம் ? (கவிதை)

Post by ஹர்ஷித் Mon Jan 02, 2012 4:55 pm

அதீதமான உங்களின் தமிழ் புலமை,உண்மையாகவே உங்களின் வரிகளை புரிந்துகொள்ள என்னால் முடியவில்லை.நானும் இந்நாட்டில் தான்
பிறந்தேன் இருந்தும் புரிய மறுக்கிறது ஏன்???? சோகம்
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

பிரியவோ உறவு ? வருந்தவோ உள்ளம் ? (கவிதை) Empty Re: பிரியவோ உறவு ? வருந்தவோ உள்ளம் ? (கவிதை)

Post by kirikasan Thu Jan 05, 2012 3:58 am

ஜேன் செல்வகுமார் wrote:அதீதமான உங்களின் தமிழ் புலமை,உண்மையாகவே உங்களின் வரிகளை புரிந்துகொள்ள என்னால் முடியவில்லை.நானும் இந்நாட்டில் தான்
பிறந்தேன் இருந்தும் புரிய மறுக்கிறது ஏன்???? சோகம்
ஜேன் செல்வகுமார் wrote:அதீதமான உங்களின் தமிழ் புலமை,உண்மையாகவே உங்களின் வரிகளை புரிந்துகொள்ள என்னால் முடியவில்லை.நானும் இந்நாட்டில் தான்
பிறந்தேன் இருந்தும் புரிய மறுக்கிறது ஏன்???? சோகம்

இதுகொஞ்சம் புரியாத முறையில்தான் எழுதினேன். உண்மையில் நடந்த ஒரு சம்பவத்தினால் இந்தக்கவி எழுதினேன்.
ஒருசிறிய மனக்கசப்பு எனக்கும் நண்பரொருவருக்கும்.
அவரும் கவிதை எழுதுவார்!

மனகசப்பு மறந்துகொள்ள தொடங்கியபோது சிறுமன்னிப்பு கேட்பதுபோல் ஒரு கவிதை எழுதினேன் அவரதைப் பார்க்கவில்லையோ அல்லது அதையும் புரிந்துகொள்ள முடியவில்லையோ. என்னிடமிருந்து பதில் இல்லையென்று பாணியில் கவிதை தந்தார் அதற்குப் பதிலாக இதை எழுதினேன்.

மனதில் உள்ள உணர்வுகள் வெளிச்சம்போட்டுகாட்டியதாகவும்
அதன்பின்னும் ஏன் நிலவுபோல தேய்வதாகவும் மற்றும் கருத்துக்களை வைத்தேன். இப்படி சந்தர்ப்பம் கூறினால் புரிந்துகொள்ள முடிகிறதா?
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

பிரியவோ உறவு ? வருந்தவோ உள்ளம் ? (கவிதை) Empty Re: பிரியவோ உறவு ? வருந்தவோ உள்ளம் ? (கவிதை)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum