Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
உணவுக்கும், உடலுக்கும் நிறைவைத் தரும் வடகம்!
3 posters
Page 1 of 1
உணவுக்கும், உடலுக்கும் நிறைவைத் தரும் வடகம்!
எமது அன்றாட உணவை எடுத்துக் கொள்வோம்.முக்கியமாக “மதியச்சாப்பாடு”.
நெல்லரிசியில் ஆக்கப்பட்ட சோற்றையே நாங்கள் மதியம் உட்கொள்வோம். சோறுடன்
பிரதான கறி, துணைக் கறி என்பவற்றுடன் மூன்று முக்கிய உப உணவுகளையும்
சேர்த்துக் கொண்வோம். அவை அப்பளம் - மிளகாய் - வடகம். அப்பளத்தை
அதிகளவானோர் நிச்சயம் தங்கள் உணவுடன் சேர்த்துக் கொள்வார்கள்.மிளகாயையும்
ஓரளவு மக்கள் உண்ணுவார்கள்.வடகத்தினை எல்லோரும் தங்கள் உணவில்
சேர்ப்பதில்லை. மிக மிக அருமையான சுவையும், ஊட்டச்சத்தும் இந்த வடகத்தில்
உண்டு. பெரும்பாலும் கிராமப்புற மக்கள் அதிகளவில் தங்கள் உணவுடன் வடகத்தைச்
சேர்த்துக் கொள்வார்கள்.
தாங்களே தயாரித்து தாங்களே உண்ணுவார்கள். அத்துடன் சிறு குடிசைக் கைத்
தொழிலாகவும் சிலர் வடகத்தினை ஈழத்தில் தயாரித்து வருகின்றனர். ஏனெனில்
இதற்கான பெருமளவு கிராக்கி (சந்தை வாய்ப்பு) நகரப்புரங்களிலும்,
வெளிநாடுகளில் வாழும் நம்மவர்களிடமும் உண்டு.
வடகத்தில் பல வகையுண்டு. வேப்பம்பூ வடகம், வாழைப்பூ வடகம், வெங்காய வடகம்,
அரிசி வடகம் என்பவை இவற்றுள் சிலவாகும். இலங்கையில் அதிகளவாக வேப்பம்பூ
வடகத்தையும் அதற்கு அடுத்த படியாக வாழைப்பூ வடகத்தையும் தயாரித்து
பயன்படுத்துகின்றனர்.
வடகத்தைப் பற்றி அறிந்து கொள்ள
விரும்பும் புதியவர்களுக்காக சுருக்கமான முறையில் அதன் செய்முறை பற்றியும்
பார்த்துவிடலாம் என நினைக்கிறேன்.
தேவையான பொருட்கள் :
வேப்பம்பூ மற்றும் வாழைப்பூ - ஒரு கிலோ
உடைத்த உழுந்து: கால் கிலோ
வெங்காயம் (சிறிதாக நறுக்கியது) : 100 கிராம்
செத்தல்மிளகாய் (சிறிதாக நறுக்கியது) : 50 கிராம்
பெருஞ்சீரகம், கடுகு, உள்ளி, கறிவேப்பிலை: சிறியளவு
உப்பு: தேவையான அளவு
எண்ணை: சிறியளவு
செய்முறை :
நன்கு கழுவிய வேப்பம்பூவுடன், சிறிது சிறிதாக நறுக்கி சுத்தம் செய்த
வாழைப்பூவினையும் ஊறவைத்துக் கழுவி சிறிதளவு அரைக்கப்பட்ட உழுந்தைச்
சேர்க்க வேண்டும். (மாவாக கரையும் வரை அரைக்கக் கூடாது) அவற்றுடன்
ஏற்கனவே தயாராக வைத்திருக்கும் வெங்காயம், மிளகாய், உப்பு மற்றும் இதர
பலசரக்குகளையும் இட்டு சிறியளவில் நீருற்றி பிசைய வேண்டும். தேவையான அளவு
எண்ணையையும் சேர்த்துக் கொள்ளலாம் (கையில் - பாத்திரத்தில் ஒட்டாமல் இருப்பதற்கு) பின்னர் சிறிது சிறிதாக (பெரிய நெல்லிக்காய் அளவில்) உள்ளங்கையினால் பிடித்து கைகளுக்கு இடையில் வைத்து தட்டி ஏதாவது ஒரு பெட்டியில் இட்டு வெயிலில் இரண்டு நாட்கள் காய வைக்க வேண்டும். (மழை காலங்களில் இவற்றைச் செய்வது நல்லதல்ல.ஈரப்பதன் இருப்பதால் பூஞ்சணம் (பங்கஸ்) பிடித்துக் கெட்டுவிடும்)
இதோ வடகம் தயார். அப்பளம், மிளகாய் பொரிக்கும் எண்ணையில் வடகத்தையும் இட்டு
பொரித்து எடுத்து உங்கள் பிரதான உணவுடன் சேர்த்துச் சாப்பிட்டு பாருங்கள்.
அதன் சுவையை நிச்சயம் உணருவீர்கள்.
பத்தோடு பதினொன்றாக சாப்பிடும் உணவு என நினைத்து இதனை ஒதுக்கிவிடாதீர்கள்.
இது உடலுக்கு மிகவும் ஆரோக்கியமான ஒரு உணவு. வேம்பின் மகத்துவம் பற்றி
நீங்கள் அறிந்திருப்பீர்கள். அதன் இலை, பட்டை, வேர், காய், பூ என
எல்லாவற்றிலும் மருத்துவ குணம் உண்டு. வேப்ப மரம் நிற்கும் சூழலின் வளி
சுத்தமாக இருக்கும் என்பார்கள். எனவே வேப்பம்பூ வடகம் உங்கள் உடலை
ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கு உதவும். அதே போல வாழைப்பூ மலச்சிக்கலை
நீக்கவல்லது என்பது மருத்துவர்களின் ஆலோசனையும் கூட.வாழைப்பூ வடகம்
சுவையானதாக இருக்கும். (வேப்பம்பூ வடகம் சிறியளவில் கசக்கும்). வெங்காய
வடகம் மிக மிக சுவையாக இருக்கும். காரணம் அதில் வெல்லம் உண்டு.
இனி வரும் காலங்களிலாவது உங்கள் பிரதான உணவில் இவ்வாறான ஊட்டச்சத்துள்ள உணவுகளை சேர்த்துக் கொள்ளுங்கள்.
அன்புச் ஸ்நேகிதி
குந்தவை.
http://www.eelavayal.com/2012/01/blog-post.html
ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்
உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்
கதீஜா மைந்தன்
முஹைதீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
Re: உணவுக்கும், உடலுக்கும் நிறைவைத் தரும் வடகம்!
மிகவும் நன்று...நன்றி
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: உணவுக்கும், உடலுக்கும் நிறைவைத் தரும் வடகம்!
இத்தனை வடகம் இருக்கிறதா
நன்றி பகிர்வுக்கு
நன்றி பகிர்வுக்கு
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Similar topics
» உடலுக்கும் உள்ளத்துக்கும் ஆரோக்கியம் தரும் டிப்ஸ்
» உடலுக்கும் மனதுக்கும் புது வாழ்வை தரும் ஒற்றைச்சொல் தியானம்
» சோற்று வடகம்
» சாத வடகம்
» தக்காளி வடகம்
» உடலுக்கும் மனதுக்கும் புது வாழ்வை தரும் ஒற்றைச்சொல் தியானம்
» சோற்று வடகம்
» சாத வடகம்
» தக்காளி வடகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|