Latest topics
» கருத்துப்படம் 26/09/2024by mohamed nizamudeen Yesterday at 9:40 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆங்கில புத்தாண்டையொட்டி சென்னை கோவில்களில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்
3 posters
Page 1 of 1
ஆங்கில புத்தாண்டையொட்டி சென்னை கோவில்களில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்
ஆங்கில புத்தாண்டையொட்டி சென்னையில் உள்ள கோவில்களில் அதிகாலையிலேயே நீண்ட வரிசையில் நின்று ஏராளமான பக்தர்கள் இறைவனை தரிசனம் செய்தனர்.
பிறந்தது புத்தாண்டு
2011-ம் ஆண்டு இனிதே நம்மிடம் இருந்து விடைபெற்று, 2012-ம் ஆண்டு நேற்று பிறந்தது. 2012-ம் ஆண்டில் அமைதியும், சமாதானமும் அமைய வேண்டிய பல்வேறு தரப்பினரும் ஆண்டின் முதல் நாளில் கோவில்களில் சிறப்பு பிராத்தனைகள் செய்தனர். நேற்று முன்தினம் நள்ளிரவு முதலே கோவில்கள், தேவாலயங்களில் சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இதற்காக சென்னை நகரின் பல்வேறு கோவில்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் கோவில்களில் நீண்ட வரிசையில் நின்று இறைவனை தரிசனம் செய்தனர்.
திருவேற்காடு கருமாரி அம்மன் கோவிலில் புத்தாண்டு தின சிறப்பு பூஜைகள், நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு கோ பூஜையுடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து கருமாரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரத்துடன் பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை தரிசனம் செய்தனர். பக்தர்கள் தரிசனத்துக்காக, பொது தரிசனம், ரூ.25, ரூ.50 சிறப்பு கட்டண தரிசனங்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
வடபழனி முருகன்
வடபழனி முருகன் கோவிலில், நேற்று அதிகாலை முதலே, மூலவருக்கு சிறப்பு அபிஷேக அலங்காரத்துடன் பூஜைகள் நடைபெற்றது. காலை 4 மணியில் இருந்து பகல் 12 மணி வரை வெள்ளி நாணய அலங்காரமும், பகல் 1 மணியில் இருந்து மாலை 4 மணி வரை தங்க கவச அலங்காரமும், 5 மணியில் இருந்து இரவு 11 மணி வரை புஷ்ப அங்கி அலங்காரத்துடன் கூடிய பூஜைகளும் நடைபெற்றது.
மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு கபாலீஸ்வரருக்கும், அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரத்துடன் கூடிய பூஜைகள் நடைபெற்றது. கோவில் பிரகாரத்தை சுற்றிலும் ஏராளமான பக்தர்கள் நீண்ட கியூவில் நின்று இறைவனையும், இறைவியையும் வணங்கினர். கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
திருமலை-திருப்பதி தேவஸ்தானம்
பூங்கா நகர் தங்கசாலைத்தெருவில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோவிலில், புத்தாண்டு தினத்தை முன்னிட்டு, ஏகாம்பரேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், சந்தனக்காப்பு அலங்காரத்துடன் பூஜைகள் நடைபெற்றது. காமாட்சி அம்மனுக்கு ஏகதின லட்சார்ச்சனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டு, விழா நடைபெற்றது.
சென்னை தியாகராயர் நகரில் உள்ள திருமலை-திருப்பதி தேவஸ்தான தகவல் மைய வெங்கடாசலபதி கோவிலில், அதிகாலை 2.30 மணிக்கு நடை திறக்கப்பட்டது. கடும் பனியையும் பொருட்படுத்தாமல் அதிகாலை நேரத்திலேயே கோவிலில் திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள் பெருமாளை தரிசனம் செய்தனர். பகல் 11.30 மணி, பகல் 12 மணியில் இருந்து 3 மணி, மாலை 4 மணியில் இருந்து 7.30 மணி, இரவு 8 மணியில் இருந்து இரவு 11.30 மணி வரை சர்வதரிசனத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
சாய்பாபா கோவில்
எழும்பூர் மார்ஷல் சாலையில் உள்ள கற்பக விநாயகர் மற்றும், திருச்சடை அம்மன் கோவில்களில் காலை 6 மணிக்கு மகா அபிஷேகமும் அதைத்தொடர்ந்து சிறப்பு அலங்காரத்துடன் பூஜைகளும் நடைபெற்றது.
சென்னை மைலாப்பூரில் உள்ள அகில இந்திய சாய் சமாஜம் சாய்பாபா கோவிலில் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. காலை 8 மணிக்கு, உலக நன்மைக்காக, ஸ்ரீமகாலட்சுமி யாகம், தன்வந்திரி மற்றும் ம்ருத்யுஜய யாகமும், சத்குரு சாய்நாதர் யாகமும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாய்பாபாவின் அருள் பெற்று பெற்றனர்.
கொடுங்கையூர் ஆர்.வி.நகர். அய்யப்பன் கோவில், நாகத்தமன் கோவில், பெரம்பூர் பாலம் விநாயகர் கோவில், நுங்கம்பாக்கம் அகஸ்தீஸ்வரர் கோவில், வானகரம், மேட்டுக்குப்பத்தில் உள்ள மச்சக்கார சாமிநாத பாலமுருகன், ராம ஆஞ்சநேயர் கோவிலில் காலை 5.30 மணியில் இருந்து இரவு 8 மணி வரையில், சிறப்பு அபிஷேக அலங்காரத்துடன் பூஜைகள் நடைபெற்றது.
கிறிஸ்தவ தேவாலயங்களில்...
சாந்தோம் தேவாலயம், மைலாப்பூர் லஸ் சந்திப்பில் உள்ள புனித பிரகாச மாதா ஆலயம் உள்பட சென்னையில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் புத்தாண்டு பிரார்த்தனை மிகச்சிறப்பாக நடைபெற்றன.
சிறுவர், சிறுமிகள் புத்தாடை அணிந்து பட்டாசு கொளுத்தியும், பலூன்களை பறக்கவிட்டும் புத்தாண்டை வரவேற்றனர்.
மெரினா கடற்கரையில்
சென்னை மெரினா கடற்கரை இரவு 11 மணிக்கு மேல் களை கட்டியது. கல்லூரி மாணவ-மாணவிகள் அதிக அளவில் காணப்பட்டனர். மெரினா கடற்கரையில் உழைப்பாளர் சிலையில் இருந்து காந்தி சிலை வரையில் இளைஞர் பட்டாளம் புத்தாண்டை வரவேற்க திரளாக கூடியிருந்தனர்.
நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டு பிறந்ததும், ஒருவருக்கொருவர் கை குலுக்கி புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.
மெரினா கடற்கரை மட்டுமின்றி, எலியட்ஸ் கடற்கரை, திருவான்மியூர், கொட்டிவாக்கம் கடற்கரையில் திரண்டிருந்த சிறுவர் சிறுமிகள் மட்டுமின்றி பெரியவர்களும் வண்ண வண்ண பலூன்களை பறக்கவிட்டு புத்தாண்டை வரவேற்று மகிழ்ந்தனர்.
புத்தாண்டு பிறப்பையொட்டி, சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் விடிய விடிய புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற்றன. ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்துடன் புத்தாண்டு தின விழா நடைபெற்றன. இதேபோல், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நட்சத்திர விடுதிகள், மாமல்லபுரத்தில் உள்ள ஓட்டல்களிலும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு வந்திருந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் புத்தாண்டு தினத்தைக் கொண்டாடினார்கள்.
பாதுகாப்பு பணியில் 12,000 போலீசார்
புத்தாண்டு தினத்தில் அசம்பாவிதம் நிகழாதவாறு, 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
தினத்தந்தி.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஆங்கில புத்தாண்டையொட்டி சென்னை கோவில்களில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்
டாஸ்மார்க் கடைகளில் பேரலையாக மோதிய குடிகாரக்கூட்டம்
நிச்சயம் இந்த பக்தர் கூட்டத்தை விட மிக அதிகமாகவே இருந்திருக்கும்.
நிச்சயம் இந்த பக்தர் கூட்டத்தை விட மிக அதிகமாகவே இருந்திருக்கும்.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: ஆங்கில புத்தாண்டையொட்டி சென்னை கோவில்களில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்
மாணிக்கம் நடேசன் wrote:டாஸ்மார்க் கடைகளில் பேரலையாக மோதிய குடிகாரக்கூட்டம்
நிச்சயம் இந்த பக்தர் கூட்டத்தை விட மிக அதிகமாகவே இருந்திருக்கும்.
உண்மை ....
எவ்ளோ டிராபிக் இந்த கூட்டாத்தாலே.
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Similar topics
» சேலம் அண்ணா பூங்காவில் அலைமோதிய மக்கள் கூட்டம்
» கோவில்களில் ஆங்கில புத்தாண்டு வழிபாடுக்கு ஆந்திர அரசு தடை
» யுகாதி, தமிழ் புத்தாண்டையொட்டி சென்னை மெட்ரோ ரயிலில் இன்று, நாளை கட்டணத்தில் 50% தள்ளுப்படி
» இன்று மகரஜோதி: சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்
» திருமலையில் பக்தர்கள் கூட்டம் உண்டியலில் கூடுதல் காணிக்கை
» கோவில்களில் ஆங்கில புத்தாண்டு வழிபாடுக்கு ஆந்திர அரசு தடை
» யுகாதி, தமிழ் புத்தாண்டையொட்டி சென்னை மெட்ரோ ரயிலில் இன்று, நாளை கட்டணத்தில் 50% தள்ளுப்படி
» இன்று மகரஜோதி: சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்
» திருமலையில் பக்தர்கள் கூட்டம் உண்டியலில் கூடுதல் காணிக்கை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|