புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அளவற்ற பாவங்களையும் பனிபோல் விலக்கும் அனகலட்சுமிதேவி! Poll_c10அளவற்ற பாவங்களையும் பனிபோல் விலக்கும் அனகலட்சுமிதேவி! Poll_m10அளவற்ற பாவங்களையும் பனிபோல் விலக்கும் அனகலட்சுமிதேவி! Poll_c10 
1 Post - 50%
வேல்முருகன் காசி
அளவற்ற பாவங்களையும் பனிபோல் விலக்கும் அனகலட்சுமிதேவி! Poll_c10அளவற்ற பாவங்களையும் பனிபோல் விலக்கும் அனகலட்சுமிதேவி! Poll_m10அளவற்ற பாவங்களையும் பனிபோல் விலக்கும் அனகலட்சுமிதேவி! Poll_c10 
1 Post - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அளவற்ற பாவங்களையும் பனிபோல் விலக்கும் அனகலட்சுமிதேவி! Poll_c10அளவற்ற பாவங்களையும் பனிபோல் விலக்கும் அனகலட்சுமிதேவி! Poll_m10அளவற்ற பாவங்களையும் பனிபோல் விலக்கும் அனகலட்சுமிதேவி! Poll_c10 
284 Posts - 45%
heezulia
அளவற்ற பாவங்களையும் பனிபோல் விலக்கும் அனகலட்சுமிதேவி! Poll_c10அளவற்ற பாவங்களையும் பனிபோல் விலக்கும் அனகலட்சுமிதேவி! Poll_m10அளவற்ற பாவங்களையும் பனிபோல் விலக்கும் அனகலட்சுமிதேவி! Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
அளவற்ற பாவங்களையும் பனிபோல் விலக்கும் அனகலட்சுமிதேவி! Poll_c10அளவற்ற பாவங்களையும் பனிபோல் விலக்கும் அனகலட்சுமிதேவி! Poll_m10அளவற்ற பாவங்களையும் பனிபோல் விலக்கும் அனகலட்சுமிதேவி! Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
அளவற்ற பாவங்களையும் பனிபோல் விலக்கும் அனகலட்சுமிதேவி! Poll_c10அளவற்ற பாவங்களையும் பனிபோல் விலக்கும் அனகலட்சுமிதேவி! Poll_m10அளவற்ற பாவங்களையும் பனிபோல் விலக்கும் அனகலட்சுமிதேவி! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
அளவற்ற பாவங்களையும் பனிபோல் விலக்கும் அனகலட்சுமிதேவி! Poll_c10அளவற்ற பாவங்களையும் பனிபோல் விலக்கும் அனகலட்சுமிதேவி! Poll_m10அளவற்ற பாவங்களையும் பனிபோல் விலக்கும் அனகலட்சுமிதேவி! Poll_c10 
20 Posts - 3%
prajai
அளவற்ற பாவங்களையும் பனிபோல் விலக்கும் அனகலட்சுமிதேவி! Poll_c10அளவற்ற பாவங்களையும் பனிபோல் விலக்கும் அனகலட்சுமிதேவி! Poll_m10அளவற்ற பாவங்களையும் பனிபோல் விலக்கும் அனகலட்சுமிதேவி! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
அளவற்ற பாவங்களையும் பனிபோல் விலக்கும் அனகலட்சுமிதேவி! Poll_c10அளவற்ற பாவங்களையும் பனிபோல் விலக்கும் அனகலட்சுமிதேவி! Poll_m10அளவற்ற பாவங்களையும் பனிபோல் விலக்கும் அனகலட்சுமிதேவி! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
அளவற்ற பாவங்களையும் பனிபோல் விலக்கும் அனகலட்சுமிதேவி! Poll_c10அளவற்ற பாவங்களையும் பனிபோல் விலக்கும் அனகலட்சுமிதேவி! Poll_m10அளவற்ற பாவங்களையும் பனிபோல் விலக்கும் அனகலட்சுமிதேவி! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
அளவற்ற பாவங்களையும் பனிபோல் விலக்கும் அனகலட்சுமிதேவி! Poll_c10அளவற்ற பாவங்களையும் பனிபோல் விலக்கும் அனகலட்சுமிதேவி! Poll_m10அளவற்ற பாவங்களையும் பனிபோல் விலக்கும் அனகலட்சுமிதேவி! Poll_c10 
7 Posts - 1%
mruthun
அளவற்ற பாவங்களையும் பனிபோல் விலக்கும் அனகலட்சுமிதேவி! Poll_c10அளவற்ற பாவங்களையும் பனிபோல் விலக்கும் அனகலட்சுமிதேவி! Poll_m10அளவற்ற பாவங்களையும் பனிபோல் விலக்கும் அனகலட்சுமிதேவி! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அளவற்ற பாவங்களையும் பனிபோல் விலக்கும் அனகலட்சுமிதேவி!


   
   
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Fri Dec 30, 2011 9:01 pm


அத்திரி, ப்ருகு, குப்தர், வசிஷ்டர், கௌதமர், காச்யபர், ஆங்கீரசர் ஆகிய ஏழு முனிவர்களையும் சப்த ரிஷிகள் என்று இந்து மதம் போற்றி வழிபடுகிறது. இவர்கள் சப்தரிஷி மண்டலம் எனப்படும் நட்சத்திரக் கூட்டமாக விளங்கிக் கொண்டிருப்பதாக ஐதீகம். சப்த ரிஷிகளில் முதன்மையானவரான அத்திரி மாமுனிவரின் மனைவி அனசூயா தேவி ஆவார். கர்த்தம பிரஜாபதி- தேஹூதி தம்பதிக்குப் பிறந் தவர் அனசூயா தேவி. "மற்றவர்கள்மீது கொஞ்சமும் பொறாமை இல்லாதவள்' என்ற பொருள் தரும் அனசூயா என்ற பெயர் கொண்ட இந்த ரிஷிபத்தினி கற்பிற் சிறந்த பதிவிரதையாகப் போற்றி வணங்கப்படுகிறாள். ஸ்ரீ இராமபிரான் சீதாதேவியோடு வனவாசம் சென்றபோது அத்திரி- அனசூயா ஆசிரமத் திற்குச் சென்று இருவரையும் வணங்கினராம். மேலும் அனசூயா தேவி சீதாதேவிக்கு பெண்களின் பல்வேறு கடமைகளைப் பற்றி விளக்கமாக எடுத்துக் கூறியதாக இராமாயணம் குறிப்பிடுகிறது.

ஒருமுறை மும்மூர்த்திகளும் அனசூயா தேவியின் கற்பினைச் சோதிக்கும் பொருட்டு அத்திரி முனிவரின் ஆசிரமத்திற்கு வந்து அவளுக்கு மிகவும் கடினமான ஒரு சோதனையை ஏற்படுத்த, அனசூயா தன் கற்பின் வலிமையால் மூவரையும் சிறு குழந்தைகளாக மாற்றிவிட்டதாகவும், பின்னர் மும்மூர்த்திகளின் தேவியர்கள் வேண்டுகோளுக் கிணங்க அவள் அவர்களை மன்னித்ததாகவும் புராணங் கள் குறிப்பிடுகின்றன. அனசூயா தேவி அந்த தெய்வீகக் குழந்தைகளை ஒன்று சேர்த்து எடுக்கவே, மூன்று முகங்கள், ஆறு கரங்களோடு தத்தாத்ரேயர் அவதரித்தார். மும்மூர்த்திகளின் அம்சமாகத் திகழுகின்ற தத்தாத் ரேயரின் ஆறு கரங்களில் மும்மூர்த்திகளுக்குரிய ஆயுதங் களும், அவருக்கு அருகில் நான்கு வேதங்கள் நான்கு நாய்களாகவும் சித்தரிக்கப் பட்டுள்ளதை நாம் படங்களில் பார்க்க முடியும்.

தத்தாத்ரேயர் அனைத்தையும் துறந்த அவதூத சந்நியாசிகளின் தெய்வமாக வழிபடப் படுகிறார். மகாராஷ்டிரா மற்றும் ஆந்திர மாநிலங்களில் தத்தாத்ரேயர் வழிபாடு மிகப் பிரபலமானது. தத்தாத்ரேயருக்கென்று ஆலயங்களும், பிற ஆலயங்களில் தத்தாத் ரேயரின் சந்நிதிகளையும் காண முடியும். ஆந்திர மாநிலத்தில் முப்பதுக்கும் மேற்பட்ட தத்தாத்ரேயர் ஆலயங்கள் உள்ளன. இவர் அனக தத்தர், அனகசுவாமி என்ற பெயர்களில், அனகா தேவி என்ற தேவியோடு காட்சியளிப்பதையும் காண முடியும். அனகா என்ற சொல் "பாவமற்ற' என்ற பொருளைத் தரும். அனகசுவாமியும் மகாலட்சுமியின் அம்சமாகக் கருதப்படும் அவரது தேவியான அனகாதேவியும் நம் பாவங் களை முழுதாகக் களையும் கண்கண்ட தெய்வங் களாகப் போற்றி வணங்கப்படுகின்றனர். இருவரும் இணைபிரியாத தம்பதிகள் ஆவர்.

இந்த அனகாதேவியைக் குறித்த அனகதத்தா விரதத்தினை அனுஷ்டிப்பதன் மூலம் தம்பதிகளிடையே ஒற்றுமை ஏற்படும். ஆண்டில் ஒருமுறை மட்டும் இதைச் செய்யலாம். கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள ஸ்ரீகணபதி சச்சிதானந்த சுவாமியின் தத்த பீடம் மிகப் பிரசித்தமானது. அவர் வெளிநாடுகள் உட்பட பல இடங்களில் தத்தாத்ரேயர் மற்றும் அனக தத்தர் ஆலயங்களை எழுப்பி தத்தாத்ரேயர் வழிபாட்டினைப் பிரபலப்படுத்தியுள்ளார். மேலும் அனகாதேவி விரதம், பூஜை முறைகளையும் அவர் எளிமைப்படுத்தியுள்ளார்.

அவரது அறிவுரைப்படி இந்தியாவில் மட்டு மின்றி வெளிநாடுகளிலும் இந்த அனகாதேவி விரதம் தம்பதியரால் அனுஷ்டிக்கப்படுகிறது. ஸ்ரீ பாத ஸ்ரீ வல்லப ஸ்ரீ நரசிம்ம சரசுவதி, ஸ்ரீஅக்கலக்கோட்ட ஸ்ரீ சாமி சாம்ராட், ஷீரடி சாயிபாபா போன்ற மகான்கள் தத்தாத்ரேயரின் அம்சமாகக் கருதப்படுகின்றனர்.

அனகலட்சுமி என்ற லட்சுமி தேவியின் அம்சமாகவும்; சிவபெருமானின் அம்சமாக நெற்றியில் மூன்றாவது கண், ஜடை, ருத்திராட்சங்கள் அணிந் தும் அனகாதேவி காணப் படுகிறாள். இரு புறங் களிலும் சங்கு, சக்கரம் உள்ளன. மேலும் சிரசில் சந்திரன், கங்கையைச் சூடியுள்ளாள். வலக்கை அபயம் காட்ட, இடக்கரம் திரிசூலம் ஏந்தியுள் ளது. வலது கால் மடக்கி இடக்காலை தொங்க விட்டு ஆதிசேஷன்மீது அமர்ந்துள்ளாள். பூவின்மீது வைத்துள்ள அவளது இடது பாதத்தின்கீழ் சிறிய நந்தி விக்ரகம் காட்டப் பட்டுள்ளது. இந்த அனகாதேவி மகாலட்சுமி மற்றும் மும்மூர்த்திகளின் அம்சமாகவும் வழி படப்படுகிறாள். ஸ்ரீ லட்சுமி அஷ்டோத்திரத்தில் கீழ்க்கண்ட 32-ஆவது நாமம் ஸ்ரீ அனகா தேவியைக் குறிக்கிறது.

"அனுக்ரஹ ப்ரதாம் புத்திம், அனகாம் ஹரிவல்லபாம்,
அசோகாம் அம்ருதாம், தீப்தாம், லோகசோக விநாசினீம்.'

மேலும்,

""யோனி முத்ரா, த்ரிகண்டேசி
த்ரிகுணாம்பா, த்ரிகோணகா' அனகா,
அத்புதசாரித்ரா, வாஞ்சிதார்த்த ப்ரதாயினி'

என்ற 180-ஆவது லலிதா ஸஹஸ்ரநாம சுலோகத் திலும் ஸ்ரீ அனகாதேவியைப் பற்றிய குறிப்பு உள்ளது. 987-ஆவது நாமமான அனகா என்ற சொல்லுக்கு பாபம், துக்கம் யாதொன்றும் அணுகாதவள்' என்பதே பொருள்.

ஆந்திர மாநிலம் குண்டூரிலுள்ள தத்தநாத க்ஷேத்திரத்தில் கணபதி, ராஜராஜேஸ்வரி, தத்தாத்ரேயர், அனகாதேவி ஆகியோருக்கு சந்நிதிகள் உள்ளன. புனேயில் உள்ள தத்த மந்திருக்கு டக்டூ ஹல்வாயி தத்த மந்திர் என்ற பெயர் உண்டு. இந்த ஆலயம் நூறாண்டுகள் பழமை வாய்ந்ததாகக் கூறப்படுகிறது. தத்தாத்ரேயரின் உபாசகரான இந்தூர் மாதவநாத் என்பவரின் ஆணைப்படி டக்டூ ஹல்வாயி லட்சுமிபாய் என்பவரால் இந்த ஆயலம் கட்டப்பட்டுள்ளது.

அனகாதேவியைக் குறித்த விரதம் தத்த அனகலட்சுமி விரதம் என்றும்; அனகாஷ்டமி விரதம் என்றும் அழைக்கப்படுகிறது. இதைத் துவக்கி வைத்தவர் ஸ்ரீபாத வல்லப சுவாமிகள் ஆவார். ஒவ்வொரு மாதமும் தேய்பிறை (கிருஷ்ண பட்ச) அஷ்டமி நாட்களில் இந்த விரதத்தை அனுஷ்டித்து ஸ்ரீ அனகா தேவி பூஜை செய்வது சிறப் பானது. அல்லது ஓராண்டில் மாக (மாசி) மாதம் தேய் பிறை அஷ்டமி நாளன்று செய்யலாம். தம்பதியராக இந்தப் பூஜை செய்வது சிறந்தது. இந்த பூஜையைச் செய்வதன் மூலம் மணப் பேறு, மகப்பேறு, செல்வம், குடும்ப அமைதி, மனநலம், உடல்நலம் கிட்டும் என்று கூறப்படுகிறது. விரத நாள் முழுவதும் உபவாசம் இருப்பது நல்லது.

இந்த விரத பூஜை செய்ய நான்கு கால்கள் கொண்ட ஒரு சிறிய பீடத்தின்மீது கிழக்கு நோக்கி பச்சரிசி நிரப்பப்பட்ட கலசம் வைத்து அலங்கரித்து, பூஜைக்குரிய பொருட்களை சேகரித்துக் கொண்டு பூஜையைத் துவக்க வேண்டும். கலசத்தின்மீது தரையில் சிறிது பச்சரிசி பரப்பி, விநாயகர், தத்தர், மகாலட்சுமி சிலைகள் அல்லது படங்களை வைத்து ஆவாஹனம் செய்து பூஜை செய்ய வேண்டும். விநாயகர் பூஜை, கலச பூஜை, ஆவாஹனம் (ஸ்ரீ அனக லட்சுமி சகித ஸ்ரீ அனக தத்தாய நமஹ- ப்ரம்ம விஷ்ணு மஹேஸ்வர சும்பன் த்ரிகுணாத்மக நமோஸ்துதே), குங்கும அர்ச்சனை செய்து தத்தாத்ரேயர், அனகா தேவி கதையைப் படிக்க வேண்டும்.

தத்த அனகலட்சுமி தேவி பூஜை செய்ய இயலாதவர்கள் தேவியைக் குறித்து கீழ்க்கண்ட சுலோகத்தைக் கூறி மனதார வழிபடலாம்.

"காளீ தாரா சின்னமஸ்தா ஷோடசீ
மஹேஸ்வரி த்ரிபுரா பைரவீ தூம்ரவதீ பகலாமுகீ மாதங்கீ
கமலாலயா தசமஹாவித்யா ஸ்வரூபிணி
அனகாதேவீ நமோஸ்துதே

நன்றி http://www.nakkheeran.in/users/frmArticles.aspx?A=8618



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
அளவற்ற பாவங்களையும் பனிபோல் விலக்கும் அனகலட்சுமிதேவி! 1357389அளவற்ற பாவங்களையும் பனிபோல் விலக்கும் அனகலட்சுமிதேவி! 59010615அளவற்ற பாவங்களையும் பனிபோல் விலக்கும் அனகலட்சுமிதேவி! Images3ijfஅளவற்ற பாவங்களையும் பனிபோல் விலக்கும் அனகலட்சுமிதேவி! Images4px

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக