ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னையில் "தானே' புயல் தாக்கும் அபாயம்: தயார் நிலையில் மாநகராட்சி

2 posters

Go down

சென்னையில் "தானே' புயல் தாக்கும் அபாயம்: தயார் நிலையில் மாநகராட்சி Empty சென்னையில் "தானே' புயல் தாக்கும் அபாயம்: தயார் நிலையில் மாநகராட்சி

Post by krishnaamma Thu Dec 29, 2011 7:30 pm

சென்னை: சென்னையில், "தானே' புயல் தாக்குதல் அபாயம் உள்ளதால், அவற்றை எதிர்கொள்ளும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, தயார் நிலையில் உள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள "தானே' புயல், சென்னையை நோக்கி நகர்ந்து வருகிறது. நாளை காலை தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் கரையைக் கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் புயல் சென்னையைத் தாக்கும் அபாயம் உள்ளதால், சென்னை மாநகராட்சி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

* மாநகராட்சியின் 15 மண்டலங்களிலும், 24 மணி நேரமும் செயல்படும் வகையில், உதவி செயற்பொறியாளர், உதவி பொறியாளர் கொண்ட சிறப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

* மண்டலங்களில் நீர் இரைக்கும் இயந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

* விரிவாக்க பகுதிகளில் நீர் இரைக்கும் இயந்திரங்கள், ஜே.சி.பி., இயந்திரங்களும் வாடகைக்கு எடுத்து தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

* புயல், மழையால் சாலையின் குறுக்கே அறுந்து விழும் மரங்களை, உடனுக்குடன் அகற்றும்வகையில், மரம் அறுக்கும் இயந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

* மாநகராட்சி வசம் உள்ள நான்கு நிவாரண மையங்களும் (பேசின்பாலம், சிந்தாதிரிபேட்டை, கோபாலபுரம், பெரம்பூர் பேரக்ஸ் சாலை) தயார் நிலையில் உள்ளன.

* அனைத்து மண்டலங்களிலும் உள்ள சமூக நலக்கூடங்கள், பள்ளிக்கூடங்கள் எந்த நேரமும் திறந்து வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

* தேவைப்படும் இடங்களில் சமையற்கூடங்கள் திறக்க முடிவு

* சுரங்கப்பாதையில் தேங்கும் மழைநீரை உடனே வெளியேற்ற நீர்இரைக்கும் இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன.

* பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவக்குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. புயல் காரணமாக காற்று அதிகமாக வீசி, மரங்கள் முறிந்து விழ வாய்ப்புள்ளதால், வாகனங்களை சாலையோர மரங்களின் கீழ் நிறுத்த வேண்டாம் எனவும் மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

சென்னை துறைமுகத்தில் 2ம் எண் புயல் கூண்டு: வங்கக்கடலில் உருவான "தானே' புயலால், சென்னையில் கடல் சீற்றம் அதிகமாக உள்ளது. திருவொற்றியூர், எண்ணூர் பகுதிகளில் கடல் நீர் குடியிருப்பு பகுதிகளில் புகுந்துள்ளது. கடலில் சீற்றம் அதிகம் உள்ளதால், மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை. படகுகள் அனைத்தும் கரையோரங்களில் ஓய்வெடுக்கின்றன. சென்னைத்துறைமுகத்தில் நேற்று இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதனால், மீனவர்கள் அச்சமடைந்துள்ளன.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சென்னையில் "தானே' புயல் தாக்கும் அபாயம்: தயார் நிலையில் மாநகராட்சி Empty Re: சென்னையில் "தானே' புயல் தாக்கும் அபாயம்: தயார் நிலையில் மாநகராட்சி

Post by Guest Thu Dec 29, 2011 8:55 pm

அது சரி அம்மா .. புயல் வந்து விட்டு போன பிறகு தானா தெரியும் .. ஏற்பாடு எப்டினு .. பார்க்கலாம் அதிர்ச்சி
avatar
Guest
Guest


Back to top Go down

சென்னையில் "தானே' புயல் தாக்கும் அபாயம்: தயார் நிலையில் மாநகராட்சி Empty Re: சென்னையில் "தானே' புயல் தாக்கும் அபாயம்: தயார் நிலையில் மாநகராட்சி

Post by இளமாறன் Fri Dec 30, 2011 2:12 am

சென்னை: தானே புயல் சென்னை மற்றும் புதுச்சேரி இடையே நாளை காலையில் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று மாலை 5.30 மணி நிலவரப்படி தானே புயலானது, இரு நகரங்களிலிருந்தும் 180 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டிருந்தது.

புயல் நெருங்கியதைத் சென்னை, புதுச்சேரி, காரைக்கால், நாகப்பட்டனம், கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.

புயல்-'லேட்டஸ்ட்' எச்சரிக்கை:

இன்று மாலை 4. 30 மணியளவில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட லேட்டஸ்ட் புயல் தகவல்:

மிகத் தீவிர புயலான தானே, இன்று மதியம் 2.30 மணி நிலவரப்படி வங்கக் கடலின் தென் மேற்கில், சென்னை மற்றும் புதுவையிலிருந்து 180 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டிருந்தது.

இது மேற்கு நோக்கி நகர்ந்து, வட தமிழக கடல் பகுதியில், நாகைக்கும், சென்னைக்கும் இடையே, புதுச்சேரி அருகே நாளை அதிகாலையில் கரையைக் கடக்கும். புயல் கரையை நெருங்கும்போது அது பலவீனமடைந்து விடும்.

பல புயல்களை தமிழக கடலோர மக்கள் பார்த்துள்ள நிலையிலும் இந்த சீசனில் வந்துள்ள முதல் புயலே படு தீவிரமாக இருப்பதாக கூறப்படுவதால் மக்களிடையே ஒருவிதமான அச்ச நிலை காணப்படுகிறது.

புயல் நெருங்கி வருவதன் எதிரொலியாக சென்னை நகரில் காற்றுடன் கூடிய கன மழை பெய்ய பல பகுதிகளில் பெய்யத் தொடங்கியுள்ளது. அதேபோல புதுச்சேரி, நாகை உள்ளிட்ட மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது.

நாகையில் விடுமுறை


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





சென்னையில் "தானே' புயல் தாக்கும் அபாயம்: தயார் நிலையில் மாநகராட்சி Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

சென்னையில் "தானே' புயல் தாக்கும் அபாயம்: தயார் நிலையில் மாநகராட்சி Empty Re: சென்னையில் "தானே' புயல் தாக்கும் அபாயம்: தயார் நிலையில் மாநகராட்சி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» குஜராத், மகாராஷ்டிராவில் புயல் தாக்கும் அபாயம் : பள்ளிகளுக்கு விடுமுறை
» நெருங்கும் அம்பன் புயல்- தயார் நிலையில் பேரிடர் மீட்புக் குழுவினர்
» சென்னையில் பெருகும் குண்டு பையன்கள்; நீரிழிவு நோய் தாக்கும் அபாயம்
» ஈழத்திற்கு உதவ தயார் நிலையில் அமெரிக்கக் கடற்படை
»  தானே புயல் கேரளாவை நோக்கி நகர்ந்தது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum