புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சாலை விபத்து விழிப்புணர்வுக் கட்டுரை Poll_c10சாலை விபத்து விழிப்புணர்வுக் கட்டுரை Poll_m10சாலை விபத்து விழிப்புணர்வுக் கட்டுரை Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
சாலை விபத்து விழிப்புணர்வுக் கட்டுரை Poll_c10சாலை விபத்து விழிப்புணர்வுக் கட்டுரை Poll_m10சாலை விபத்து விழிப்புணர்வுக் கட்டுரை Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
சாலை விபத்து விழிப்புணர்வுக் கட்டுரை Poll_c10சாலை விபத்து விழிப்புணர்வுக் கட்டுரை Poll_m10சாலை விபத்து விழிப்புணர்வுக் கட்டுரை Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
சாலை விபத்து விழிப்புணர்வுக் கட்டுரை Poll_c10சாலை விபத்து விழிப்புணர்வுக் கட்டுரை Poll_m10சாலை விபத்து விழிப்புணர்வுக் கட்டுரை Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
சாலை விபத்து விழிப்புணர்வுக் கட்டுரை Poll_c10சாலை விபத்து விழிப்புணர்வுக் கட்டுரை Poll_m10சாலை விபத்து விழிப்புணர்வுக் கட்டுரை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சாலை விபத்து விழிப்புணர்வுக் கட்டுரை Poll_c10சாலை விபத்து விழிப்புணர்வுக் கட்டுரை Poll_m10சாலை விபத்து விழிப்புணர்வுக் கட்டுரை Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
சாலை விபத்து விழிப்புணர்வுக் கட்டுரை Poll_c10சாலை விபத்து விழிப்புணர்வுக் கட்டுரை Poll_m10சாலை விபத்து விழிப்புணர்வுக் கட்டுரை Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
சாலை விபத்து விழிப்புணர்வுக் கட்டுரை Poll_c10சாலை விபத்து விழிப்புணர்வுக் கட்டுரை Poll_m10சாலை விபத்து விழிப்புணர்வுக் கட்டுரை Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
சாலை விபத்து விழிப்புணர்வுக் கட்டுரை Poll_c10சாலை விபத்து விழிப்புணர்வுக் கட்டுரை Poll_m10சாலை விபத்து விழிப்புணர்வுக் கட்டுரை Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
சாலை விபத்து விழிப்புணர்வுக் கட்டுரை Poll_c10சாலை விபத்து விழிப்புணர்வுக் கட்டுரை Poll_m10சாலை விபத்து விழிப்புணர்வுக் கட்டுரை Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாலை விபத்து விழிப்புணர்வுக் கட்டுரை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 28, 2011 1:58 pm

உலக சுகாதார அமைப்பு (WHO) 2009-ம் ஆண்டு ஒரு தகவல் வெளியிட்டது. `உலகில் மக்கள் தொகை அதிகம் கொண்ட சீனாவை விட இந்தியாவில் சாலை விபத்து அதிகம்' என்பது அந்த அதிர்ச்சி தகவல்! 70 சதவீத சாலை விபத்துகள் தவறாக வாகனம் ஓட்டும் முறையினால் நடைபெறுகின்றன.

லாரிகளில் இரும்பு கம்பிகள், ஏவுகணைகள் போன்று வண்டியின் வெளியே நீட்டிக் கொண்டிருக்கின்றன. வேகமாக செல்லும் அதுபோன்ற பல வாகனங்களில் சிவப்பு அபாய குறி அடையாளம் கூட இருப்பதில்லை. முறையான வேகம், தேவையுள்ள இடங்களில் ஒளி, ஒலி எழுப்புவது மிக முக்கியம். ஓட்டுனர் உரிமம் வழங்கும் முன் கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும். பெரும்பாலான வாகனங்களின் விளக்கு முகப் பினில் கருப்பு அடையாளம் முறையாக இருப்பதில்லை. சாலை ஓரத்தில் வாகனம் நிறுத்தப் படும்போது முறையான அடையாள வெளிச்சத்தை ஓட்டுனர்கள் பின்பற்றவேண்டும்.

சாலை விபத்து ஏற்பட்ட உடனே பாதிக்கப்பட்டவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லவேண்டும். சட்டப்பிரச்சினைகள் வருமே என பயந்து உயிருக்கு உதவ தயங்கக் கூடாது. உடனே போக்குவரத்து காவல்துறையினரிடம் விபத்து விவரம் கூறி உதவிக்கு அழைக்கவேண்டும். விபத்து ஏற்படுத்திய வாகன எண் குறிப்பெடுத்து வைத்திட வேண் டும். விபத்து, நஷ்ட ஈடு சிறப்பு வழக்கறிஞர் மற்றும் சட்ட ஆலோசகர்களை நாட வேண்டும். வாகன எண் தெரியாமல் வழக்கு போட இயலாது.

பாதிக்கப்பட்டவரை மருத்துவமனையில் சேர்த்தவுடன் `விபத்து பதிவேட்டில்' சாலை விபத்து என மருத்துவர் எழுதுவார். அதனில் முக்கிய விவரங்கள் அடங்கும், அவை சரிபார்க்கப்பட வேண்டும். விபத்து பதிவேடு, முதல் தகவல் அறிக்கை, வரைபடம் ஆகியவைகளின் நகல்களை காவல் நிலைய முத்திரையுடன் அதிகாரி கையெழுத்துடன் வாங்கிவைத்துக் கொள்ள வேண்டும். விபத்து ஏற்படுத்திய வாகனத்தின் ஆவண நகல்கள் முழுவதையும் பெறவேண்டும். விபத்து நஷ்ட ஈடு வழக்கில் சரியான ஆவணங்கள், வயது, வருமானம், சூழ்நிலை பொறுத்து லட்சத்தில் இருந்து கோடிகள் வரை நஷ்டஈடு கேட்டு பாதிக்கப் பட்டவர், அவர்களின் வாரிசுகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம்.

விபத்து நஷ்ட ஈடு வழக்கு தாக்கல் செய்ய அச்சம் தேவையில்லை. விபத்து ஏற்படுத்திய வாகனத்திற்கு அனைத்து ஆவணங்களும் சரியாக இருந்தால் காப்பீடு நிறுவனம் தான் நஷ்ட ஈடு வழங்கும். வாகன உரிமையாளருக்கு வழக்கு பற்றிய பயம் தேவையற்றது.

வாகனத்திற்கு முழு காப்பீடு திட்டம் (omprehensive Policy) எடுப்பது சிறந்தது. ஓட்டுனர் உரிமம் இல்லாதவரை, குடிபோதையில் உள்ளவரை, அளவுக்கு அதிகமாக நபர்கள் ஏற்றுபவரை வண்டி ஓட்ட அனுமதிக்கக்கூடாது. தவறி விபத்து நிகழ்ந்து விட்டால், நஷ்ட ஈட்டை வழங்க வண்டி உரிமையாளர் முழு பொறுப்பாகுவதற்கு வாய்ப்புகள் உண்டு. வண்டியை விற்க நேர்ந்தாலும் சட்ட விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படவேண்டும்.

விபத்து மற்றும் சிவில் வழக்குகளுக்கு விரைவில் தீர்வு காண லோக் அதாலத் (மக்கள் மன்றம்) என்ற அரசு அமைப்பு உள்ளது. சில தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் மிக அதிக நஷ்ட ஈடு தொகை இருப்பினும் நியாயம் இருந்தால் சுமூகமாக அங்கு வழக்கு விரைவில் முடிவுறுகின்றது.

சாலை விபத்துகளை தடுக்கும் முறைகள்:

1. கனரக வாகனங்கள் செல்லும் வழி தனியாக வகுக்கப்படவேண்டும்.

2. பாதுகாப்பான சாலைகள், முறையான வேகத்தடை அமைப்புகள், கண்காணிப்பு பதிவு கருவி போன்ற அதிநவீனமான விபத்து தடுப்பு நடைமுறை நிலைகள் தேவை. வேகத்தடைகளால் 35 சதவீதம் விபத்து குறையும்.

3. வளையக்கூடிய கயிறு தன்மையுடைய (Flexcible Barrier Cables) சாலை தடுப்பு சுவர்கள் அமைத்தால் 50 சதவீதம் விபத்துகள் குறையும்.

4. வாகனங்களின் தரம் மேம்படவேண்டும். சிறு விபத்து என்றாலும் வாகனம் அப்பளமாக நொறுங்கும் தரம் கொண்ட வாகனங்களே மேன்மேலும் இந்தியாவில் உற்பத்தி ஆகின்றன. வாகனத்தரம் சிறப்பாக இருந்தால் விபத்துகளின் பாதிப்புகள் குறையும்.

5. தரமற்ற தலைக்கவசம் அணிந்து விபத்து ஏற்படுவது என்பது தலைக்கவசம் இல்லாத விபத்து காயத்தின் தன்மையை விட கொடியதாக உள்ளது. அதனால் தரமான தலைக்கவசங்களை அணியவேண்டும்.

கட்டுரை: ஏ.எஸ்.பிலால், வழக்கறிஞர், சென்னை.



சாலை விபத்து விழிப்புணர்வுக் கட்டுரை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Dec 28, 2011 2:02 pm

சாலை விபத்து ஏற்பட்ட உடனே பாதிக்கப்பட்டவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லவேண்டும். சட்டப்பிரச்சினைகள் வருமே என பயந்து உயிருக்கு உதவ தயங்கக் கூடாது

இது மாதிரி எத்தனை பேர் நின்று வேடிக்கை பார்ப்பார்கள் அண்ணா. என்ன கொடுமை சார் இது


4. வாகனங்களின் தரம் மேம்படவேண்டும். சிறு விபத்து என்றாலும் வாகனம் அப்பளமாக நொறுங்கும் தரம் கொண்ட வாகனங்களே மேன்மேலும் இந்தியாவில் உற்பத்தி ஆகின்றன. வாகனத்தரம் சிறப்பாக இருந்தால் விபத்துகளின் பாதிப்புகள் குறையும்.

உண்மை தான்.

5. தரமற்ற தலைக்கவசம் அணிந்து விபத்து ஏற்படுவது என்பது தலைக்கவசம் இல்லாத விபத்து காயத்தின் தன்மையை விட கொடியதாக உள்ளது. அதனால் தரமான தலைக்கவசங்களை அணியவேண்டும்.

முற்றிலும் உண்மை..
தலைக்கவசம் அணிந்து இறந்தவர் அதிகம். சோகம்
உமா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் உமா




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Dec 28, 2011 2:16 pm

அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய கருத்துகள்.
பகிர்வுக்கு நன்றி



சாலை விபத்து விழிப்புணர்வுக் கட்டுரை Uசாலை விபத்து விழிப்புணர்வுக் கட்டுரை Dசாலை விபத்து விழிப்புணர்வுக் கட்டுரை Aசாலை விபத்து விழிப்புணர்வுக் கட்டுரை Yசாலை விபத்து விழிப்புணர்வுக் கட்டுரை Aசாலை விபத்து விழிப்புணர்வுக் கட்டுரை Sசாலை விபத்து விழிப்புணர்வுக் கட்டுரை Uசாலை விபத்து விழிப்புணர்வுக் கட்டுரை Dசாலை விபத்து விழிப்புணர்வுக் கட்டுரை Hசாலை விபத்து விழிப்புணர்வுக் கட்டுரை A
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக