புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மெளனகுரு - திரைப்பட விமர்சனம் Poll_c10மெளனகுரு - திரைப்பட விமர்சனம் Poll_m10மெளனகுரு - திரைப்பட விமர்சனம் Poll_c10 
366 Posts - 49%
heezulia
மெளனகுரு - திரைப்பட விமர்சனம் Poll_c10மெளனகுரு - திரைப்பட விமர்சனம் Poll_m10மெளனகுரு - திரைப்பட விமர்சனம் Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
மெளனகுரு - திரைப்பட விமர்சனம் Poll_c10மெளனகுரு - திரைப்பட விமர்சனம் Poll_m10மெளனகுரு - திரைப்பட விமர்சனம் Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
மெளனகுரு - திரைப்பட விமர்சனம் Poll_c10மெளனகுரு - திரைப்பட விமர்சனம் Poll_m10மெளனகுரு - திரைப்பட விமர்சனம் Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
மெளனகுரு - திரைப்பட விமர்சனம் Poll_c10மெளனகுரு - திரைப்பட விமர்சனம் Poll_m10மெளனகுரு - திரைப்பட விமர்சனம் Poll_c10 
25 Posts - 3%
prajai
மெளனகுரு - திரைப்பட விமர்சனம் Poll_c10மெளனகுரு - திரைப்பட விமர்சனம் Poll_m10மெளனகுரு - திரைப்பட விமர்சனம் Poll_c10 
6 Posts - 1%
sugumaran
மெளனகுரு - திரைப்பட விமர்சனம் Poll_c10மெளனகுரு - திரைப்பட விமர்சனம் Poll_m10மெளனகுரு - திரைப்பட விமர்சனம் Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
மெளனகுரு - திரைப்பட விமர்சனம் Poll_c10மெளனகுரு - திரைப்பட விமர்சனம் Poll_m10மெளனகுரு - திரைப்பட விமர்சனம் Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
மெளனகுரு - திரைப்பட விமர்சனம் Poll_c10மெளனகுரு - திரைப்பட விமர்சனம் Poll_m10மெளனகுரு - திரைப்பட விமர்சனம் Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
மெளனகுரு - திரைப்பட விமர்சனம் Poll_c10மெளனகுரு - திரைப்பட விமர்சனம் Poll_m10மெளனகுரு - திரைப்பட விமர்சனம் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மெளனகுரு - திரைப்பட விமர்சனம்


   
   
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sun Dec 18, 2011 11:06 am

மெளனகரு - ஒரே பாதையில் சுற்றிக் கொண்டிருக்கும் தமிழ்ப் படங்கள் மத்தியில் வந்துள்ள நல்லதொரு மாற்றுப் படம்.

மெளனகுரு - திரைப்பட விமர்சனம் 1_77673f7e-0004-41c1-85d7-fe5381deaf89
பணத்திற்கு ஆசைப்பட்டு ஒரு கொலை செய்கிறார் காவல் துறை உதவி ஆணையர். அவருக்கு மூன்று காவல்துறை அதிகாரிகள் உதவி செய்கின்றனர். பின் அந்தத் தவறை மறைக்க அவர்கள் மேலும் தவறுகள் செய்ய வேண்டி வருகிறது. இவர்களிடம் கருணாகரன் என்னும் கல்லூரி மாணவன் சந்தர்ப்ப வசத்தால் சிக்கிக் கொண்டு அல்லாடுகிறான். கருணாகரனின் எதிர்காலம் என்ன ஆனது என்பதற்கும், தவறிழைக்கும் காவல்துறையினர்கள் நிலைமை என்ன ஆனது என்பதற்கும் பதிலுடன் படம் நிறைவுறுகிறது.

மருத்துவ மாணவி ஆர்த்தி ஆக இனியா. படத்தின் நாயகி என்றே சொல்ல முடியாது. திரையில் மட்டுமே தோன்றக் கூடிய பெண் போலில்லாமல் அன்றாட வாழ்வில் நாம் காணும் எண்ணற்ற கல்லூரிப் பெண்களில் ஒருவராக தெரிகிறார். எந்தவித பூச்சுகளும் அற்று நெற்றியில் பருக்கள் கொண்ட பெண். நாயகன் மீது அக்கறை ததும்பும் பாசாங்கற்ற பார்வைகள். வெளிநாடுகளுக்கு சென்று இறுக்கமான ஆடைகளுடன் ஆடி, பாடாத தமிழ்ப்பட நாயகி. சொல்லிக் கொள்ளும்படியான பாத்திரம் இல்லை எனினும் அவர் நெற்றியில் உள்ள உறுத்தாத பருக்கள் போல அழகான திரைக்கதையில் உறுத்தாமல் வந்து செல்கிறார்.

"வ" படத்தில் இரு வேடங்களில் கலக்கிய ஜான் விஜய் இப்படத்தில் காவல்துறை உதவி ஆணையராக மிரட்டி உள்ளார். ஒரு கொலையைச் செய்து விட்டு பிறகு மாட்டிக் கொள்வோமோ என ஒவ்வொரு முறை தவறு செய்யும் பொழுதும் கலக்கமுறுகிறார். 'நமக்கு நேரம் சரி இல்லையோ!?' என தன்னைத் தானே நொந்துக் கொள்கிறார். அதிகாரத்தைத் தவறாக உபயோகப்படுத்தி விட்டு மாட்டிக் கொள்வோமோ என்ற பயத்தை அழகாக வெளிப்படுத்தி உள்ளார்.

ஆய்வாளர் பழனியம்மாள் ஆக வரும் உமா ரியாஸ் கான் அருமையாக நடித்துள்ளார். கர்ப்பிணி ஆக வருபவர் வழக்கை ஆராய்ந்து நூல் பிடித்து உதவி ஆணையரை நெருங்கும் விதம் அருமை. ஒருபுறம் காவல்துறை மேல் கலக்கத்தை உண்டு பண்ணுவது போல் உதவி ஆணையர் நடந்துக் கொண்டாலும் தனது ஆளுமையால் நிதானமாக காவல்துறை மீது நம்பிக்கையை ஏற்பட செய்கிறார். ஆனால் வழக்கை இடையிலேயே நிறுத்த வேண்டிய கட்டாயம் நேரும் பொழுது அமைதியாக பரிதவிப்பை வெளிப்படுத்துகிறார். கல்லூரி முதல்வரின் மகனை அமர வைத்து நிதானமாக கேள்வி கேட்கிறார். எதையும் நுணக்கமாகவும், தீவிரமாகவும் அணுகுகிறார். கண்டிப்பாக இப்படம் உமா ரியாஸ் கானுக்கு பெயர் சொல்லும் நல்லப் படமாக அமையும்.

கருணாகரனாக அருள்நிதி. நாயகத்தனம் இல்லாத ஒரு படத்தில் சரியாக பொருந்துகிறார். பெரும்பாலும் மெளனமாக, நிலைமை கை மீறும் பொழுது செயல்பட தொடங்குகிறார். முகத்திற்கு நேராக துப்பாக்கி பிடிக்கப் படும்பொழுதும், மனநிலை மருத்துவமனையில் சிக்கி தவிக்கும் பொழுதும், அனைவரும் இவரை நம்ப மறுக்கும் பொழுது அருள்நிதி பரிதாபப்பட வைக்கிறார். படத்தின் இறுதிக் காட்சிகளின் நீளம் அதிகமாக உள்ளது. எதார்த்தமாக செல்லும் படத்தின் முடிவிலும் தர்மத்தைக் காப்பாற்றி விடுகிறார் இயக்குனர் சாந்தகுமார். எனினும் சராசரி தமிழ்ப் படத்தை தராததற்கு பாராட்டப்பட வேண்டியவர். கதாப்பாத்திர தேர்வை செதுக்கியுள்ளார் என்றே சொல்ல வேண்டும். வெறும் பார்வைகளாலேயே நாயகனின் அண்ணி் குணத்தை சித்தரித்து இருப்பது; 'கைலி கட்டிக் கொண்டும்; கருப்பாகவும் இருந்தால் விசாரிக்காமலேயே அடிப்பீங்களா!?' என்று கோபப்படும் கல்லூரி விடுதிப் பொறுப்பாளர்; பொறாமையும், வஞ்சக எண்ணமும் கொண்ட நாயகனின் சக வகுப்பு மாணவன்; குற்றவுணர்வுடன் கல்லூரி முதல்வர்; நிராகரிக்கப்படும் வலியுடன் கல்லூரி முதல்வரின் மகன்; உதவி ஆணையர் மீது எரிச்சலுறும் காவல்துறை அதிகாரி; காவல்துறையினருக்கு பிரதியுதவி செய்ய அதிகாரத்தை தவறாக பயன்படுத்தும் மனநல மருத்துவமனை மருத்துவர் என இயக்குனர் பார்த்து பார்த்து ஆட்களையும் அவர்களின் குண நலங்களையும் சித்தரித்துள்ளார். போகிற போக்கில் சர்வ சாதாரணமாய் கொலைகள் நடப்பதாக காட்டி வரும் தமிழ்த் திரைப்படங்கள் மத்தியில், ஒரு கொலையைச் செய்து விட்டு உதவி ஆணையர் படும் அவஸ்தைகளை அழகாக காட்டியுள்ளனர். அதிகாரம் தவறாக உபயோகப்படுத்தும் பொழுது சராசரி ஆட்கள் எவ்வாறு பாதிக்கப்படுகின்றனர் என்பதையும் படத்தில் காட்டி உள்ளனர். பேசி பேசி பிரச்சனைகளைப் பெரிது படுத்தாமல் மெளனமாக இருப்பது சிறந்தது எனினும் மெளனமாகவே எப்பொழுதும் இருந்து விட முடியாது. மேலும் மெளனங்களை சரியாக புரிந்துக் கொள்ள எத்தனைப் பேரால் முடியும் என்பதும் ஐயமே!!


பகிர்வு - http://www.ithutamil.com/

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Dec 18, 2011 1:16 pm

இதுவும் மொக்கை படம் தானா சோகம்




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Dec 18, 2011 1:32 pm

சமீபகாலமாய் பார்த்த திரைப்படங்களில் தமிழுணர்வோ,
அல்லது வன்முறை உணர்வோ ஏதோ ஒரு உணர்வு இருந்தாலேயன்றி தமிழ் சினிமா இல்லை
என்றிருந்த நேரத்தில் வந்த வித்யாசமான படம் தான். குத்துப்பாட்டு இல்லை,
அச்சுபிச்சு காதல் இல்லை, எட்டு அடிக்கு பறந்து பறந்து அடிக்கவில்லை.
இப்படி வழக்கமாய் தமிழ் சினிமாவில் இருக்கும் பல விஷயங்கள் இல்லாத ஒரு
படம்.



மூன்று கரப்டட் போலீஸ்காரர்களால் சம்பந்தமேயில்லாமல் மாட்டிக் கொண்டு
எதிர்காலம் கேள்விக்குறியாகி நிற்கும் இளைஞனின் கதை. அவன் அந்த
ப்ரச்சனையிலிருந்து எப்படி மீண்டு வருகிறான் என்பதை கொஞ்சம் கூட சூப்பர்
ஹீரோத்தனம் இல்லாமல் ஒரு ஸ்லீக்கான ஆக்‌ஷன் த்ரில்லரை தந்திருக்கிறார்கள்.

இதற்கு முந்தைய படங்களில் எப்படியோ அருள்நிதிக்கு இந்த கேரக்டர் சரியாய்
பொருந்தியிருக்கிறது. படம் முழுவதும் டைட்டிலுக்கு ஏற்றார்ப் போல
மெளனகுருவாகவே வருகிறார். அதிகம் பேசாமல் நம் பக்கத்துவீட்டு பையன்
போலிருக்கிறார். அண்ணன் வீட்டில் தன்னை அவாய்ட் செய்கிறார்கள் என்று
புரிந்து கொண்டு வெளியேறும் போதும், டெலிபோன் கடையில் இரண்டு ரூபாய்க்காக
சண்டை போடும் போதும், என்ன ஏது என்று கேட்காமல் அடித்த போலீஸ்காரரை
அடித்துவிட்டு அவரின் குழந்தையை ஸ்டேஷனில் கொண்டு வந்து சேர்க்கும் இடம்.
போலீஸ்காரர்களின் சதியால் மனநிலை பிழன்றவர் என்று காப்பகத்தில் கையாலாகாமல்
மாட்டிக் கொண்டு மெளனம் காக்கும் போதும், வேறு வழியேயில்லை எனும் போது
சாதாரணன் கூட எதிர்த்து போராடுவான் என்பது போல போராடும் இடமாகட்டும்
அருள்நிதி பேசாமலேயே மனதில் நிற்கிறார். என்ன அவர் வாய் திறந்து பேசினால்
கொஞ்சம் குழந்தைத்தனம் தெரிகிறது. அது அவர் பேசும் சில வசனங்களுக்கு
பொருந்த மாட்டேன் என்கிறது. மற்றபடி இந்த படம் அருள்நிதிக்கு சொல்லிக்
கொள்ளும் படமே.
மெளனகுரு - திரைப்பட விமர்சனம் Mouna-guru-4_thumb%25255B3%25255D
வாகை சூடவாவிற்கு பிறகு இனியா நடித்து வரும் படம். சின்னச் சின்ன
ரியாக்‌ஷனில் மனதில் நிற்கிறார். அருள்நிதியை காதலிப்பதை தவிர பெரிதாய்
ஏதும் செய்ய ஸ்கோப் இல்லாத கேரக்டர். ஆனால் அது தான் கதையின் கட்டாயமும்
கூட என்பதால் பெரிதாய் நெருடவில்லை. மொட்டை மாடி காட்சிகளில் அவர்
முகத்தில் மிக இயல்பாய் தெரியும் அந்த வெட்கம் கலந்த க்யூட்டான பார்வைகள்.
அஹா..


கரப்டட் போலீஸ் உதவி கமிஷனராக ஜான் விஜய்.அருமையாய்
செய்திருக்கிறார்.பாடிலேங்குவேஜிலாகட்டும், டயலாக் டெலிவரியிலாகட்டும்
மனிதர் கலக்கியிருக்கிறார். அவருடன் வரும் மற்ற இன்ஸ்பெக்டர்கள்,
கான்ஸ்டபிள் கிருஷ்ணமூர்த்தி எல்லோரும் தங்களுக்கு கொடுத்த பர்பாமென்ஸில்
கலக்கியிருக்கிறார்கள். இவருக்கு பிறகு முக்கியமாய் பாராட்டப்பட வேண்டிய
ஒரு பர்பாமென்ஸ் உமா ரியாஸினுடயது. காலேஜ் பாதர், அதன் வாட்ச்மேன்,
காலேஜில் வில்லத்தனம் செய்யும் அந்த மாணவன், ஹாஸ்டல் வார்டன் என்று
சின்னக்கேரக்டர்கள் கூட தங்கள் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
மெளனகுரு - திரைப்பட விமர்சனம் Mouna-guru-8_thumb%25255B3%25255D
மகேஷ் முத்துசாமியின் ஒளிப்பதிவு சிறப்பு. ஆரம்பக் காட்சியில் வேனில்
ஹீரோவுடன் அறிமுகமாகும் காட்சியில் ரோட்டின் வெளிச்சம் வரும் போது மட்டுமே
ஒவ்வொரு கேரக்டராய் ப்ரேமில் கொண்டு வரும் இடம் குறிப்பிடத்தக்கது. படம்
நெடுக உறுத்தாத இயல்பான வெளிச்சத்தை கொடுத்திருக்கிறார். இசை தமன்.
பாடல்கள் என்று பார்த்தால் இரண்டு பாட்டுக்கள் தான் வருகிறது என்று
நினைக்கிறேன். அவைகள் ஏதும் குறிப்பிடத்தக்கதாய் இல்லாவிட்டாலும்,
பின்னணியிசையில் மனிதர் நிரம்ப உழைத்திருக்கிறார். க்ளைமாக்ஸ் காட்சிகளில்
வரும் ஆர்கெஸ்ட்ரேஷன் அருமை. க்ளைமாக்ஸில் வசனமேயில்லாமல் வரும் சண்டைக்
காட்சியும், அதன் பிறகு வரும் காட்சிகள் தமன் பேர் சொல்லும்.



எழுதி இயக்கியவர் சாந்தகுமார். தரணியின் உதவியாளர். தன் முதல் படத்திலேயே
தன்னை நிருபித்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். முதல் படத்திலேயே ஒரு
ஆக்‌ஷன் த்ரில்லரை கொடுப்பது, அதுவும் முழுக்க,முழுக்க திரைக்கதையை மட்டுமே
நம்பி ஆரம்பிப்பது தன் ஸ்கிரிப்ட்டில் நல்ல நம்பிக்கையிருந்தால் மட்டுமே
முடியும். அதற்காக இவரின் உழைப்பு படம் முழுக்க தெரிகிறது. அருள்நிதியின்
கேரக்டரை பற்றி அறிமுகப்படுத்துவதில் ஆரம்பித்து, கதையின் முக்கிய
கேரக்டர்கள் இன்வால்வ் ஆகும் அந்த விபத்து, மற்றும் பணம் கொள்ளையை ஹீரோவின்
கதையோடு இணைத்து, அதன் பிறகு நடக்கும் அத்துனை காட்சிகளிலும் யதார்த்தமான
ட்விஸ்டுகளை வைத்து பண்ணியிருப்பது பாராட்டுக்குரியது. முக்கியமாய்
உமாரியாஸின் கர்பவதி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாத்திரம்.படு யதார்த்தம். அவர்
இன்வெஸ்டிகேட் செய்யும் விதமும், அதை காட்சிப்படுத்திய அழகும் வாவ்.. தமிழ்
சினிமாதான் பார்க்கிறோமா? என்று ஆச்சர்யப்படுத்துகிறது. ஒவ்வொரு
கேரக்டருக்கும் ஒரு காரண காரியம் வைத்திருப்பதும், விபச்சாரி, பாதரின்
பையன், கல்லூரி ரவுடி மாணவன் ஆகிய கேரக்டர்களுக்கான ஆர்டிஸ்ட் செலக்‌ஷன்
என்று நிறையவே உழைத்திருக்கிறார். காட்சிகளை நகர்த்தும் விதமும், போலீஸ்
நினைத்தால் என்னவெல்லாம் செய்ய முடியும் என்பதற்கான இரண்டு எக்ஸ்ட்ரீம்
கேரக்டர்களான ஜான் விஜய், உமா ரியாஸ் மூலம் அழகாக உணர்த்தியிருக்கிறார்.
மெளனகுரு - திரைப்பட விமர்சனம் Mouna-guru-9_thumb%25255B3%25255D
படத்தின் மைனஸ் என்று பார்த்தால் முக்கியமானது படத்தின் நீளமும்,
க்ளைமாக்சும்தான். முடிந்த வரை யதார்த்தை சினிமாவாக்கி, ஹீரோயிசமில்லாத
படமாய் எடுக்க முயற்சித்திருந்தாலும், நிஜ வாழ்கையில் நடக்கும் அதே
மெத்தனம் படத்திலும் ஆங்காங்கே எட்டிப் பார்ப்பதை எடிட்டுட்டு, நீளம்
குறைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். சில பல லாஜிக் மீறல்கள்
இருந்தாலும் குறையில்லை. பரபரப்பான ஃப்ரீ க்ளைமாக்ஸுக்கு பின் வரும்
க்ளைமாக்ஸ் ஒரு மாற்றுக் குறைவுதான். இம்மாதிரியான படங்களுக்கு வெளியின்
வரும்போது கதாநாயகனின் ப்ரச்சனையோடு உழன்ற நமக்கு அதிலிருந்து அவன்
விடுபடும் போது கிடைக்கும் ரிலீப்பை உணர்ந்தால் அது பெரிய இம்பாக்டாக
இருந்திருக்கும். மிக இயல்பான க்ளைமாக்ஸால் அது கொஞ்சம் குறைந்துவிட்டது
என்றே சொல்ல வேண்டும். எது எப்படியிருந்தாலும் மொத்தத்தில் நல்ல ஆக்‌ஷன்
திரில்லரை கொடுத்ததிற்காக சாந்தகுமாரை பாராட்ட வேண்டும்.

மெளனகுரு – அழுத்தம்.

நன்றி :கேபிள் சங்கர்
மெளனகுரு - திரைப்பட விமர்சனம் 678642




வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Dec 25, 2011 11:59 pm

ஈகரை திரைவிமர்சனமும் ஈர்க்கிறது நண்பர்களே...
நல்ல முயற்சி...
நடுநிலையான முயற்சி...
தொடரட்டும்...
வாழ்த்துகள்...



மெளனகுரு - திரைப்பட விமர்சனம் 224747944

மெளனகுரு - திரைப்பட விமர்சனம் Rமெளனகுரு - திரைப்பட விமர்சனம் Aமெளனகுரு - திரைப்பட விமர்சனம் Emptyமெளனகுரு - திரைப்பட விமர்சனம் Rமெளனகுரு - திரைப்பட விமர்சனம் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக