புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழகத்தின் மறைமுகப் பொருளாதாரத் தடை-விண்ணைத் தொடும் விலைவாசி-த்தளிக்கிறது கேரளா! Poll_c10தமிழகத்தின் மறைமுகப் பொருளாதாரத் தடை-விண்ணைத் தொடும் விலைவாசி-த்தளிக்கிறது கேரளா! Poll_m10தமிழகத்தின் மறைமுகப் பொருளாதாரத் தடை-விண்ணைத் தொடும் விலைவாசி-த்தளிக்கிறது கேரளா! Poll_c10 
5 Posts - 63%
heezulia
தமிழகத்தின் மறைமுகப் பொருளாதாரத் தடை-விண்ணைத் தொடும் விலைவாசி-த்தளிக்கிறது கேரளா! Poll_c10தமிழகத்தின் மறைமுகப் பொருளாதாரத் தடை-விண்ணைத் தொடும் விலைவாசி-த்தளிக்கிறது கேரளா! Poll_m10தமிழகத்தின் மறைமுகப் பொருளாதாரத் தடை-விண்ணைத் தொடும் விலைவாசி-த்தளிக்கிறது கேரளா! Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
தமிழகத்தின் மறைமுகப் பொருளாதாரத் தடை-விண்ணைத் தொடும் விலைவாசி-த்தளிக்கிறது கேரளா! Poll_c10தமிழகத்தின் மறைமுகப் பொருளாதாரத் தடை-விண்ணைத் தொடும் விலைவாசி-த்தளிக்கிறது கேரளா! Poll_m10தமிழகத்தின் மறைமுகப் பொருளாதாரத் தடை-விண்ணைத் தொடும் விலைவாசி-த்தளிக்கிறது கேரளா! Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகத்தின் மறைமுகப் பொருளாதாரத் தடை-விண்ணைத் தொடும் விலைவாசி-த்தளிக்கிறது கேரளா!


   
   

Page 1 of 2 1, 2  Next

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Fri Dec 23, 2011 5:32 pm

சென்னை: முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழக மக்கள் இதுவரை இல்லாத அளவுக்கு கொந்தளித்துப் போயிருப்பதால் மறைமுகப் பொருளாதாரத் தடையில் கேரள மாநிலம் சிக்கியுள்ளது. இதனால் அங்கு பல அத்தியாவசியப் பொருட்களின் விலை பெருமளவில் உயர்ந்துள்ளது. ஆனால் இதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அங்குள்ள அரசு மறைத்து வருவதாக கூறப்படுகிறது.

சாதாரண அணைப் பிரச்சினையை கிட்டத்தட்ட இரு நாடுகளுக்கு இடையிலான பிரச்சினை போல மாற்றி விட்டது கேரள அரசு. தேவையில்லாமல் அங்குள்ள அரசியல்வாதிகள் மக்களை கொந்தளிக்கும் வகையில் பேசப் போக தற்போது அவர்களாலேயே கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு கேரளாவில் தமிழர்கள் மீதும், தமிழக வாகனங்கள் மீதும் தாக்குதல் நடத்தி வருகிறார்கள் சமூக விரோதிகள்.

இதன் விளைவு -தமிழகத்தில் இதுவரை யாரும் எதிர்பாராத பதிலடி. எங்கு பார்த்தாலும் முல்லைப் பெரியாறு அணைக்காக போராடுகிறார்கள் தமிழக மக்கள். உண்ணாவிரதம், பேரணி, கடையடைப்பு, கேரளக்காரர்களின் கடைகள் உடைப்பு, மறியல் என சகலவிதமான போராட்டங்களும் நடந்து வருகின்றன.

தேனி மாவட்டம்தான் போராட்டத்தில் முன்னணியில் உள்ளது. இங்கு கம்பம், கூடலூர், உத்தமபாளையம், தேனி என கிட்டத்தட்ட மாவட்டம் முழுவதுமே வீறு கொண்ட போராட்டங்கள் நடந்து வருகின்றன. அதிலும் பல நகரங்களில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக கடைகள் திறக்கப்படவில்லை. மக்கள் சாரை சாரையாக சாலைகளில் குழுமி போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

அதேபோல தமிழகம் முழுவதும் ஒவ்வொரு தரப்பு மக்களும் போராடி வருகின்றனர். சலூன் கடைக்காரர்கள், ஆட்டோடிரைவர்கள், டாக்சி டிரைவர்கள், சலவைத் தொழிலாளர்கள், மீன் வியாபாரிகள், வியாபாரிகள், வக்கீல்கள், மாணவர்கள் என சமூகத்தின் ஒவ்வொரு அங்கத்தினரும் தங்களது தரப்பு எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். தமிழகத்தில் இப்படி ஒரு போராட்டம் இதுவரை நடந்ததில்லை என்று கூறும் அளவுக்கு போராட்டங்கள் தொய்வின்றி நடந்து வருகின்றன.

அதேபோல அரசியல் கட்சிகளும் கூட போராடி வருகின்றன. அதிமுகவைத் தவிர அத்தனை கட்சிகளுமே ஒரு சுற்றுப் போராட்டத்தை முடித்து விட்டன.

இந்தப் போராட்டங்கள் போதாது என்று பல்வேறு வகையான பொருளாதார முற்றுகையும் நடந்து வருகிறது. தேனி மாவட்டத்திலிருந்து காய்கறி, பால், ஆடு, மாடுகள் என எதுவுமே கேரளாவுக்கு போவதில்லை. அத்தனையும் நிறுத்தப்பட்டு விட்டது.

அதேபோல சரக்கு லாரிகளும் கேரளாவுக்குப் போகாது என்று லாரி புக்கிங் ஏஜென்டு சங்கம் கூறி விட்டது. இதனால் சரக்கு லாரிகள் கேரளாவுக்குப் போகவில்லை.

அதேபோல மாநிலத்தின் பல பக்கங்களிலும் பல்வேறு வகையான பொருட்கள் போக்குவரத்து தடைபட்டுள்ளது. தங்களுக்காகத்தானே பொருட்களை கொண்டு வருகிறார்கள் என்ற அடிப்படை உணர்வு கூட இல்லாமல் கேரளாவுக்குள் கொண்டு வரப்படுகிற சரக்கு வாகனங்களையும் கேரளக்காரர்கள் தாக்கி வருவதால் இந்த நிறுத்தம்.

நாமக்கல் மாவட்டத்திலிருந்து தற்போது கறிக்கோழிகளை அனுப்புவதை நிறுத்தி விட்டனராம். காரணம், கோழிகளைக் கொண்டு போகிற வாகனங்களைத் தாக்கியதால். இதனால் நாமக்கல் மாவட்டத்திலிருந்து குறிப்பாக பல்லடத்திலிருந்து கிட்டத்தட்ட ரூ. 5 லட்சம் மதிப்புள்ள கறிக் கோழிகள் கேரளாவுக்குப் போகாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாம்.

இதேபோல பிற பொருள் போக்குவரத்தும் கூட பாதிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவு கேரளாவில் வரலாறு காணாத விலை உயர்வு என்று கூறப்படுகிறது.

காய்கறி விலை விண்ணைத் தொட்டுள்ளதாம். கிலோ தக்காளி ரூ. 300 வரை விற்பதாக கூறப்படுகிறது. மற்ற காய்கறிகளின் நிலையும் கூட அதுதான் என்கிறார்கள். அதேபோல பூக்கள், பழங்கள், பால் உள்ளிட்டவற்றின் விலையும் படு உயரத்திற்குப் போயுள்ளதாம். பாலை பெருமளவில் தமிழகத்திலிருந்துதான் கேரளா வாங்குகிறது. பெருமளவிலான பால் கர்நாடகத்திலிருந்தும் போகிறது. தற்சமயம், தமிழகத்திலிருந்து வரும் பாலுக்குத் தடை இல்லை என்று கூறப்படுகிறது.

இப்படி தமிழகத்திலிருந்து கிட்டத்தட்ட மறைமுகமாக கிளம்பியுள்ள பொருளாதாரத் தடையால் கேரளாவில் அத்தியாவசியப் பொருட்களின் விலை பெருமளவில் உயர்ந்து மக்களை பாதிப்புக்குள்ளாக்கியிருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல தமிழகத்திலிருந்து கேரளாவுக்குப் போகும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டமும் வெகுவாக குறைந்து விட்டதாம். குறிப்பாக தேக்கடிக்கு வரும் தமிழக பயணிகளின் எண்ணிக்கை அடியோடு நின்று விட்டது. இதனால் படகு குழாமில் மயான அமைதி நிலவுகிறது.

கேரளாவில்தான் இந்த நிலை என்றில்லை தமிழகத்திலும் கூட மலையாளிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக கூறுகிறார்கள். தமிழகம் முழுவதும் விரவிப் பரந்துள்ள கேரளக்காரர்களின் கடைகள் தினசரி தாக்குதலுக்குள்ளாகி வருகின்றன.

டீக்கடை, பேக்கரிக் கடை, நகைக் கடை, நிதி நிறுவனக் கடைகள் என பல வகையான தொழிலில் மலையாள மக்கள் தமிழகத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தக் கடைகள் தினசரி ஆங்காங்கு தாக்கப்பட்டு வருகின்றன. இதனால் அவர்களுக்கு பெரும் பொருள் நஷ்டமும், பீதியும் ஏற்பட்டுள்ளது. தாக்கப்படுவோமோ என்ற அச்சத்தில் தமிழகத்தில் வசிக்கும் மலையாளிகள் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தங்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த அவல நிலைக்கு கேரள அரசையும், கேரள அரசியல்வாதிகளையுமே அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

தமிழகத்தில் பெருமளவில் மலையாளிகள் வசிக்கிறார்களே என்ற உணர்வு கொஞ்சம் கூட இல்லாமல் கேரள அரசியல்வாதிகள் பொறுப்பின்றி நடந்து கொள்வதாக அவர்கள் புலம்புகின்றனர். பல காலமாக நாங்கள் தமிழகத்தில் வசித்து வருகிறோம். தமிழகத்தில் எங்களுக்கு மிக மிக அதிக சுதந்திரம் உள்ளது. கேரளாவில் கூட நாங்கள் இப்படி இருக்க முடியாது. தமிழர்களைப் போலவே நாங்களும் மாறி விட்டோம். இப்படிப்பட்ட நிலையில் எங்கள் மீது தாக்குதல் நடைபெறும் என்று கனவில் கூட எதிர்பார்க்கவில்லை, என்ன செய்வது என்று புரியவில்லை என்று அவர்கள் கூறுகிறார்கள்.

இப்படி பல பக்கங்களிலும் தமிழகத்தின் போராட்டத்தால் கேரள அரசுக்கும், அங்குள்ள மக்களுக்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் இந்த பாதிப்புகள் வெளியே தெரியாத அளவுக்கு 'மேக்கப்' செய்து வருகிறது கேரள அரசு என்கிறார்கள்.



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Fri Dec 23, 2011 5:41 pm

நடக்கட்டும் நடக்கட்டும், எல்லாம் நன்மைக்கே.
வந்தே மாதரம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 23, 2011 5:46 pm

சரியான பதிலடி கேரளாவுக்கு. சூப்பருங்க



தமிழகத்தின் மறைமுகப் பொருளாதாரத் தடை-விண்ணைத் தொடும் விலைவாசி-த்தளிக்கிறது கேரளா! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Fri Dec 23, 2011 6:30 pm

பாவம் மக்கள்



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
தமிழகத்தின் மறைமுகப் பொருளாதாரத் தடை-விண்ணைத் தொடும் விலைவாசி-த்தளிக்கிறது கேரளா! 1357389தமிழகத்தின் மறைமுகப் பொருளாதாரத் தடை-விண்ணைத் தொடும் விலைவாசி-த்தளிக்கிறது கேரளா! 59010615தமிழகத்தின் மறைமுகப் பொருளாதாரத் தடை-விண்ணைத் தொடும் விலைவாசி-த்தளிக்கிறது கேரளா! Images3ijfதமிழகத்தின் மறைமுகப் பொருளாதாரத் தடை-விண்ணைத் தொடும் விலைவாசி-த்தளிக்கிறது கேரளா! Images4px
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Dec 23, 2011 7:42 pm

இருதரப்பிலும் பாதிக்கப்படுபவர்கள் அப்பாவி மக்கள் தான். விலைவாசி அதிகம் கொடுத்து பொருட்களை வாங்கும் மக்களும் தாக்குதலுக்கு உள்ளாகும் நம் தமிழக மலையாளிகளும் எந்த தவறும் செய்யாதவர்கள். தவறிழைப்பவர்கள் காங்கிரஸ்காரர்கள் தான். அவர்களை நாட்டைவிட்டே விரட்டவேன்டும்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Dec 23, 2011 7:57 pm

அசுரன் wrote:இருதரப்பிலும் பாதிக்கப்படுபவர்கள் அப்பாவி மக்கள் தான். விலைவாசி அதிகம் கொடுத்து பொருட்களை வாங்கும் மக்களும் தாக்குதலுக்கு உள்ளாகும் நம் தமிழக மலையாளிகளும் எந்த தவறும் செய்யாதவர்கள். தவறிழைப்பவர்கள் காங்கிரஸ்காரர்கள் தான். அவர்களை நாட்டைவிட்டே விரட்டவேன்டும்.

அந்த மக்கள் தானே இங்கிருந்து விரதம் இருந்து சுவாமி சேவிக்க சென்றவர்களை கூட தாக்கினார்கள? சோகம் அது ரொம்ப மோசம் இல்லையா? இன்னும் எவ்வளவு நாள் தாக்கு பிடிப்பார்கள்? அந்த காலத்தில் கோட்டையை மூடிக்கொண்டு ராஜா உள்ளே இருந்தார் போல, ஒருநாள் இல்லாவிட்டால் ஒருநாள் அவர்கள் வெளியே வரத்தானே வேண்டும்? கோபம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Dec 23, 2011 8:01 pm

krishnaamma wrote:
அசுரன் wrote:இருதரப்பிலும் பாதிக்கப்படுபவர்கள் அப்பாவி மக்கள் தான். விலைவாசி அதிகம் கொடுத்து பொருட்களை வாங்கும் மக்களும் தாக்குதலுக்கு உள்ளாகும் நம் தமிழக மலையாளிகளும் எந்த தவறும் செய்யாதவர்கள். தவறிழைப்பவர்கள் காங்கிரஸ்காரர்கள் தான். அவர்களை நாட்டைவிட்டே விரட்டவேன்டும்.

அந்த மக்கள் தானே இங்கிருந்து விரதம் இருந்து சுவாமி சேவிக்க சென்றவர்களை கூட தாக்கினார்கள? சோகம் அது ரொம்ப மோசம் இல்லையா? இன்னும் எவ்வளவு நாள் தாக்கு பிடிப்பார்கள்? அந்த காலத்தில் கோட்டையை மூடிக்கொண்டு ராஜா உள்ளே இருந்தார் போல, ஒருநாள் இல்லாவிட்டால் ஒருநாள் அவர்கள் வெளியே வரத்தானே வேண்டும்? கோபம்
அங்குள்ள கெட்டவர்களால் நல்லவர்களும் பாதிக்கபடுகிறார்களே என்று தான் சொன்னேன் கி.அம்மா. சோகம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Dec 23, 2011 8:04 pm

அசுரன் wrote:
krishnaamma wrote:
அசுரன் wrote:இருதரப்பிலும் பாதிக்கப்படுபவர்கள் அப்பாவி மக்கள் தான். விலைவாசி அதிகம் கொடுத்து பொருட்களை வாங்கும் மக்களும் தாக்குதலுக்கு உள்ளாகும் நம் தமிழக மலையாளிகளும் எந்த தவறும் செய்யாதவர்கள். தவறிழைப்பவர்கள் காங்கிரஸ்காரர்கள் தான். அவர்களை நாட்டைவிட்டே விரட்டவேன்டும்.

அந்த மக்கள் தானே இங்கிருந்து விரதம் இருந்து சுவாமி சேவிக்க சென்றவர்களை கூட தாக்கினார்கள? சோகம் அது ரொம்ப மோசம் இல்லையா? இன்னும் எவ்வளவு நாள் தாக்கு பிடிப்பார்கள்? அந்த காலத்தில் கோட்டையை மூடிக்கொண்டு ராஜா உள்ளே இருந்தார் போல, ஒருநாள் இல்லாவிட்டால் ஒருநாள் அவர்கள் வெளியே வரத்தானே வேண்டும்? கோபம்
அங்குள்ள கெட்டவர்களால் நல்லவர்களும் பாதிக்கபடுகிறார்களே என்று தான் சொன்னேன் கி.அம்மா. சோகம்

ஆமாம் அசுரன், அது தான் சோகம் சோகம் இங்கு நாம் தமிழகத்து மலையாளிகள் என்ன பாவம் செய்தார்கள் பாவம் அவர்களின் கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன என்று டி‌வி இல் பார்த்தேன் சோகம் என்னவோ இந்தியா பாக்கிஸ்தான் பார்டர் மாதிரி இருக்கு , என்று விடியுமோ? அழுகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Dec 23, 2011 8:16 pm

krishnaamma wrote:
அசுரன் wrote:
krishnaamma wrote:
அசுரன் wrote:இருதரப்பிலும் பாதிக்கப்படுபவர்கள் அப்பாவி மக்கள் தான். விலைவாசி அதிகம் கொடுத்து பொருட்களை வாங்கும் மக்களும் தாக்குதலுக்கு உள்ளாகும் நம் தமிழக மலையாளிகளும் எந்த தவறும் செய்யாதவர்கள். தவறிழைப்பவர்கள் காங்கிரஸ்காரர்கள் தான். அவர்களை நாட்டைவிட்டே விரட்டவேன்டும்.

அந்த மக்கள் தானே இங்கிருந்து விரதம் இருந்து சுவாமி சேவிக்க சென்றவர்களை கூட தாக்கினார்கள? சோகம் அது ரொம்ப மோசம் இல்லையா? இன்னும் எவ்வளவு நாள் தாக்கு பிடிப்பார்கள்? அந்த காலத்தில் கோட்டையை மூடிக்கொண்டு ராஜா உள்ளே இருந்தார் போல, ஒருநாள் இல்லாவிட்டால் ஒருநாள் அவர்கள் வெளியே வரத்தானே வேண்டும்? கோபம்
அங்குள்ள கெட்டவர்களால் நல்லவர்களும் பாதிக்கபடுகிறார்களே என்று தான் சொன்னேன் கி.அம்மா. சோகம்

ஆமாம் அசுரன், அது தான் சோகம் சோகம் இங்கு நாம் தமிழகத்து மலையாளிகள் என்ன பாவம் செய்தார்கள் பாவம் அவர்களின் கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன என்று டி‌வி இல் பார்த்தேன் சோகம் என்னவோ இந்தியா பாக்கிஸ்தான் பார்டர் மாதிரி இருக்கு , என்று விடியுமோ? அழுகை
க.க.க.போ :நல்வரவு:

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri Dec 23, 2011 9:02 pm

சூப்பருங்க

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக