Latest topics
» தமிழ் அன்னை by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
இபூலீஷு பேசுகிறான்
3 posters
Page 1 of 1
இபூலீஷு பேசுகிறான்
இபுலீசு பேசுகிறான் !
பீ. எம். கமால், கடையநல்லூர்)
தோழனே ! வா !
உன்
தோல்விகள்தானே
என்
வெற்றிப் படிக்கட்டுக்கள் ?
கல்லெறிந்து என்னைக்
கழற்றி விட்டதாய்க்
கனவு காண்பவனே !
உன்
உள்ளத்தின் மூலையில்
உட்கார்ந்து உன்மீது
கல்லெறிந்து
உன்செயலைக்
காயப்படுத்துபவன்
நான்தானே !
நீ
எந்தக் கல்லெறிந்து
என்னை விரட்டுவாய் ?
விரட்டப்பட்ட ஷைத்தான் என்று
வீராப்புப் பேசுபவனே !
பொய் பொறாமை
புறம்கூறும் புத்தி
வட்டி விபச்சாரம்
வாரி வழங்காத
கருமித் தனமென்று
கல்லெறிந்து உன்னைக்
காயப் படுத்தினாலும்
பூவென்றுதானே நீ
புளகாங்கிதப் படுகின்றாய் ?
வீரமாய்க் கல்லெறிந்து
விரட்டுபவனா நீ ?
சகோதர மாமிசம்
சாப்பிடும் நீ என்
சகோதரன் அல்லவா ?
நான் இருட்டுத்
தெரு விளக்கை உன்
இருகையில் திணித்து விட்டு
ஒளியான இருவிளக்கை
உன்னிடமிருந்து
பிடுங்கிக் கொண்டேன் !
அதனால்தான்
நீ
மாற்றான் தோட்டத்தில்
மல்லிகையாய் ஆகாமல்
உன் தோட்டத்திலேயே
அழகிழந்த அரளிப்பூவாய்
ஆகிப் போனாய் !
கள்ளிப்பூ மணக்கு மென்று
கதை பேச வைத்துன்னை
புள்ளிக்கும் உதவாத
புள்ளியாய் ஆக்கி விட்டேன் !
நானிலம் போற்றுகின்ற
நபிகளை அவர்தம்
நிழலைப் பின்பற்றி
நீடு புகழ் பெற்றவரை
நீ
இழித்துப் பேசுவது
என் வழி அல்லவா ?
எப்படியப்பா அது
நபிவழியாகும் ?
உன்
கடிவாளம் என்கையில்
இருக்கின்ற காரணத்தால்
பிடிவாதமாக உன்னைப்
பேசவைத்து நரகத்து
விறகாக்கி நான்
விலா நோகச்
சிரிக்கின்றேன் !
என் வழி நடக்கின்ற
இனிய என் தோழனே !
உன்னைப் போராளியாகப்
புறப்பட்டு வரச் செய்து
தீவிர வாதியாகத்
தெருவில் நிற்க வைத்தேன் !
நீயா என்னைக்
கல்லெறிந்து விரட்டுகிறாய் ?
உன்
தொப்பியைக் கழற்றித்
தூர எறிந்தவன்
நான்தான் !
உன்
ஒழுங்கற்ற தாடியில்
உட்கார்ந்திருப்பதும்
நான் தான் !
என் வழியைப் பின்பற்றி
எல்லாம் செய்துவிட்டு
நபிவழி என்றுநீ
நாப்பறை சாற்றுகின்றாய் !
மெத்த மகிழ்ச்சி !
நான் சொல்லிக் கொடுப்பதனை
அட்சர சுத்தமாய்
அப்படியே செய்கின்றாய் !
நீதான் எனது
கொள்கை பரப்பு
குலக் கொழுந்து !
உன்பெயரை எல்லோரும்
உச்சரிக்க வேண்டுமென்று
தனி தனியாய்க் கொடிகளை
தலைக்குமேல் பிடிக்கின்றாய் !
ஒற்றுமையின் கயிற்றை
உதறித் தள்ளிவிட்டு
வேற்றுமை யோடுதானே
வெளியில் வருகின்றாய் !
முஸ்லிம் பெயர்களால்
முக்காடு போட்டுக் கொண்டு
இஸ்லாத்தை ஒழிக்க
என்வழியில் நடக்கின்றாய் !
என்
உபதேச வார்த்தைகளில்
உளம் மகிழும் சோதரனே !
என் வாய் மொழிகள்
நரகத்தில் வேர்விட்டு
உங்கள்
நாவுகளில் கிளை பரப்பும் !
பரமனுக்கு உங்களை
பரம எதிரிகளாய்
ஆக்குகின்றவரை
அடியேன் ஓயமாட்டேன் !
நண்பனே !
நரக நெருப்புக்கு
விறகு கொடுக்கின்ற
வியாபாரி நான்தான் !
உன்னைக்
கொள்முதல் செய்யக்
கும்பிட்டு வருகின்றேன் !
நண்பனே ! நீ இருக்க
எனக்கென்ன நஷ்டமா
வந்து விடும் ?
இறைவனுக்கு உருவம்
இருக்குதென்று நான்கூட
எப்போதும் சொன்னதில்லை !
உருவத்தைத் தொழுகின்ற
ஒருவரும் சொன்னதில்லை !
நீயோ
என்னையே விஞ்சிவிட்டாய் !
என்
பல்கலைக் கழகத்தில்
உனக்குத்தான்
தலைமைப் பொறுப்பைத்
தரப்போ கின்றேன் !
ஞானிகளும் சூபிகளும்
ஒளியாய்க் கண்ட
ஒப்பற்ற இறைவனை
உருவத்தால் காண
உபதேசிக் கின்றவனே!
உன் பேச்சை
உண்மையென்று
ஒப்புக் கொள்ளுகின்ற
துப்பற்ற கூட்டத்தை
என்னோடு இணைக்க
இலவச சேவை செய்கின்றாய் !
உனக்கு என்
ஒருகோடி நன்றிகள் !
உனக்கு
இபுலீஷு விருது
எப்படியும் கிடைத்துவிடும் !
வா ! வா !
என் இரத்தத்தின் இரத்தமான
என் உடன் பிறப்பே!
நரகத்து வாசலில்
நானுக்காய்க் காத்திருப்பேன் !
பீ. எம். கமால், கடையநல்லூர்)
தோழனே ! வா !
உன்
தோல்விகள்தானே
என்
வெற்றிப் படிக்கட்டுக்கள் ?
கல்லெறிந்து என்னைக்
கழற்றி விட்டதாய்க்
கனவு காண்பவனே !
உன்
உள்ளத்தின் மூலையில்
உட்கார்ந்து உன்மீது
கல்லெறிந்து
உன்செயலைக்
காயப்படுத்துபவன்
நான்தானே !
நீ
எந்தக் கல்லெறிந்து
என்னை விரட்டுவாய் ?
விரட்டப்பட்ட ஷைத்தான் என்று
வீராப்புப் பேசுபவனே !
பொய் பொறாமை
புறம்கூறும் புத்தி
வட்டி விபச்சாரம்
வாரி வழங்காத
கருமித் தனமென்று
கல்லெறிந்து உன்னைக்
காயப் படுத்தினாலும்
பூவென்றுதானே நீ
புளகாங்கிதப் படுகின்றாய் ?
வீரமாய்க் கல்லெறிந்து
விரட்டுபவனா நீ ?
சகோதர மாமிசம்
சாப்பிடும் நீ என்
சகோதரன் அல்லவா ?
நான் இருட்டுத்
தெரு விளக்கை உன்
இருகையில் திணித்து விட்டு
ஒளியான இருவிளக்கை
உன்னிடமிருந்து
பிடுங்கிக் கொண்டேன் !
அதனால்தான்
நீ
மாற்றான் தோட்டத்தில்
மல்லிகையாய் ஆகாமல்
உன் தோட்டத்திலேயே
அழகிழந்த அரளிப்பூவாய்
ஆகிப் போனாய் !
கள்ளிப்பூ மணக்கு மென்று
கதை பேச வைத்துன்னை
புள்ளிக்கும் உதவாத
புள்ளியாய் ஆக்கி விட்டேன் !
நானிலம் போற்றுகின்ற
நபிகளை அவர்தம்
நிழலைப் பின்பற்றி
நீடு புகழ் பெற்றவரை
நீ
இழித்துப் பேசுவது
என் வழி அல்லவா ?
எப்படியப்பா அது
நபிவழியாகும் ?
உன்
கடிவாளம் என்கையில்
இருக்கின்ற காரணத்தால்
பிடிவாதமாக உன்னைப்
பேசவைத்து நரகத்து
விறகாக்கி நான்
விலா நோகச்
சிரிக்கின்றேன் !
என் வழி நடக்கின்ற
இனிய என் தோழனே !
உன்னைப் போராளியாகப்
புறப்பட்டு வரச் செய்து
தீவிர வாதியாகத்
தெருவில் நிற்க வைத்தேன் !
நீயா என்னைக்
கல்லெறிந்து விரட்டுகிறாய் ?
உன்
தொப்பியைக் கழற்றித்
தூர எறிந்தவன்
நான்தான் !
உன்
ஒழுங்கற்ற தாடியில்
உட்கார்ந்திருப்பதும்
நான் தான் !
என் வழியைப் பின்பற்றி
எல்லாம் செய்துவிட்டு
நபிவழி என்றுநீ
நாப்பறை சாற்றுகின்றாய் !
மெத்த மகிழ்ச்சி !
நான் சொல்லிக் கொடுப்பதனை
அட்சர சுத்தமாய்
அப்படியே செய்கின்றாய் !
நீதான் எனது
கொள்கை பரப்பு
குலக் கொழுந்து !
உன்பெயரை எல்லோரும்
உச்சரிக்க வேண்டுமென்று
தனி தனியாய்க் கொடிகளை
தலைக்குமேல் பிடிக்கின்றாய் !
ஒற்றுமையின் கயிற்றை
உதறித் தள்ளிவிட்டு
வேற்றுமை யோடுதானே
வெளியில் வருகின்றாய் !
முஸ்லிம் பெயர்களால்
முக்காடு போட்டுக் கொண்டு
இஸ்லாத்தை ஒழிக்க
என்வழியில் நடக்கின்றாய் !
என்
உபதேச வார்த்தைகளில்
உளம் மகிழும் சோதரனே !
என் வாய் மொழிகள்
நரகத்தில் வேர்விட்டு
உங்கள்
நாவுகளில் கிளை பரப்பும் !
பரமனுக்கு உங்களை
பரம எதிரிகளாய்
ஆக்குகின்றவரை
அடியேன் ஓயமாட்டேன் !
நண்பனே !
நரக நெருப்புக்கு
விறகு கொடுக்கின்ற
வியாபாரி நான்தான் !
உன்னைக்
கொள்முதல் செய்யக்
கும்பிட்டு வருகின்றேன் !
நண்பனே ! நீ இருக்க
எனக்கென்ன நஷ்டமா
வந்து விடும் ?
இறைவனுக்கு உருவம்
இருக்குதென்று நான்கூட
எப்போதும் சொன்னதில்லை !
உருவத்தைத் தொழுகின்ற
ஒருவரும் சொன்னதில்லை !
நீயோ
என்னையே விஞ்சிவிட்டாய் !
என்
பல்கலைக் கழகத்தில்
உனக்குத்தான்
தலைமைப் பொறுப்பைத்
தரப்போ கின்றேன் !
ஞானிகளும் சூபிகளும்
ஒளியாய்க் கண்ட
ஒப்பற்ற இறைவனை
உருவத்தால் காண
உபதேசிக் கின்றவனே!
உன் பேச்சை
உண்மையென்று
ஒப்புக் கொள்ளுகின்ற
துப்பற்ற கூட்டத்தை
என்னோடு இணைக்க
இலவச சேவை செய்கின்றாய் !
உனக்கு என்
ஒருகோடி நன்றிகள் !
உனக்கு
இபுலீஷு விருது
எப்படியும் கிடைத்துவிடும் !
வா ! வா !
என் இரத்தத்தின் இரத்தமான
என் உடன் பிறப்பே!
நரகத்து வாசலில்
நானுக்காய்க் காத்திருப்பேன் !
P. M. KAMAL- புதியவர்
- பதிவுகள் : 12
இணைந்தது : 04/02/2011
Re: இபூலீஷு பேசுகிறான்
இங்குதான் உங்கள் கவிதைகள் இடம்பெறும் என்றால் அனைத்துக் கவிதைகளும் நீக்கப்படும். சரியான பகுதியில் பதிவிடுங்கள் நண்பரே! |
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: இபூலீஷு பேசுகிறான்
கவிதைகளை பதிவு செய்யும் முன்னர் கவிதைகளின் பகுதியில் புதுக்கவிதையா மரபு கவிதையா இல்லை சொந்த கவிதையா அல்லது ரசித்த கவிதையா என்று பகுதி பார்த்து பதிவிடுங்கள் நண்பரே
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|