புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 9:53 am
» கருத்துப்படம் 30/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:32 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:28 pm
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Yesterday at 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Yesterday at 6:11 pm
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:48 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:20 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Yesterday at 12:09 pm
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Yesterday at 12:04 pm
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
by D. sivatharan Today at 9:53 am
» கருத்துப்படம் 30/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:32 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:28 pm
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Yesterday at 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Yesterday at 6:11 pm
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:48 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:20 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Yesterday at 12:09 pm
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Yesterday at 12:04 pm
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
rajuselvam | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
ஜாஹீதாபானு | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முல்லை பெரியாறு அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை
Page 1 of 17 •
Page 1 of 17 • 1, 2, 3 ... 9 ... 17
- GuestGuest
தாக்குதல் தொடர்ந்தால் ஒரு லாரியும் கேரளாவுக்குப் போகாது- தமிழக லாரி உரிமையாளர்கள் எச்சரிக்கை
நாமக்கல்: தமிழகத்திலிருந்து கேரளாவுக்குச் செல்லும் லாரிகளை தொடர்ந்து தாக்கினால் ஒரு லாரி கூட கேரளாவுக்கு போகாது. அதேபோல அங்கிருந்து ஒரு லாரியையும் இங்கேவர விட மாட்டோம் என்று தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து சம்மேளனத்தின் தலைவர் நல்லதம்பி நாமக்கல்லில் கூறுகையில், தமிழகத்திலிருந்துதான் கேரளாவுக்கு அரிசி, பருப்பு என அனைத்துப் பொருட்களும் போகின்றன. தினசரி தமிழகத்திலிருந்து 1000 லாரிகள் வரை கேரளாவுக்குப் போய் வருகின்றன.
ஆனால் தற்போது முல்லைப் பெரியாறு பிரச்சினை என்ற பெயரில் தமிழக லாரிகளைத் தாக்கத் தொடங்கியுள்ளனர். குமுளியில் தமிழக லாரிகளைத் தாக்கியதோடு,அதன் டிரைவர்களையும் ஓட ஓட விரட்டி தாக்கியுள்ளனர். இது கடும் கண்டனத்துக்குரியது.
இந்த சம்பவத்தால் தமிழக லாரிகளுக்கும், எங்களின் டிரைவர்களுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை கேரளாவில் நிலவுகிறது. எனவே எங்களது லாரிகளை இயக்க முடியாத நிலையில் இருக்கிறோம்.
இந்தநிலை தொடர்ந்தால் தமிழகத்திலிருந்து ஒரு லாரி கூட கேரளாவுக்குப் போகாது. எந்தப் பொருளையும் கேரளாவுக்கு எடுத்துச் செல்ல மாட்டோம். அதேபோல கேரளாவிலிருந்து ஒரு லாரியையும் இங்கே நுழைய அனுமதிக்க மாட்டோம்.
தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு வரும் லாரிகளுக்கும், அதன் டிரைவர்களுக்கும், கிளீனர்களுக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டியது கேரள அரசு மற்றும் காவல்துறையின் பொறுப்பாகும் என்றார் நல்லதம்பி.
நாமக்கல்: தமிழகத்திலிருந்து கேரளாவுக்குச் செல்லும் லாரிகளை தொடர்ந்து தாக்கினால் ஒரு லாரி கூட கேரளாவுக்கு போகாது. அதேபோல அங்கிருந்து ஒரு லாரியையும் இங்கேவர விட மாட்டோம் என்று தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து சம்மேளனத்தின் தலைவர் நல்லதம்பி நாமக்கல்லில் கூறுகையில், தமிழகத்திலிருந்துதான் கேரளாவுக்கு அரிசி, பருப்பு என அனைத்துப் பொருட்களும் போகின்றன. தினசரி தமிழகத்திலிருந்து 1000 லாரிகள் வரை கேரளாவுக்குப் போய் வருகின்றன.
ஆனால் தற்போது முல்லைப் பெரியாறு பிரச்சினை என்ற பெயரில் தமிழக லாரிகளைத் தாக்கத் தொடங்கியுள்ளனர். குமுளியில் தமிழக லாரிகளைத் தாக்கியதோடு,அதன் டிரைவர்களையும் ஓட ஓட விரட்டி தாக்கியுள்ளனர். இது கடும் கண்டனத்துக்குரியது.
இந்த சம்பவத்தால் தமிழக லாரிகளுக்கும், எங்களின் டிரைவர்களுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை கேரளாவில் நிலவுகிறது. எனவே எங்களது லாரிகளை இயக்க முடியாத நிலையில் இருக்கிறோம்.
இந்தநிலை தொடர்ந்தால் தமிழகத்திலிருந்து ஒரு லாரி கூட கேரளாவுக்குப் போகாது. எந்தப் பொருளையும் கேரளாவுக்கு எடுத்துச் செல்ல மாட்டோம். அதேபோல கேரளாவிலிருந்து ஒரு லாரியையும் இங்கே நுழைய அனுமதிக்க மாட்டோம்.
தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு வரும் லாரிகளுக்கும், அதன் டிரைவர்களுக்கும், கிளீனர்களுக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டியது கேரள அரசு மற்றும் காவல்துறையின் பொறுப்பாகும் என்றார் நல்லதம்பி.
- GuestGuest
தேனி, கேரளா போக்குவரத்து ஸ்தம்பிப்பு- ஒரு வண்டியும் வரவில்லை, போகவில்லை- தொழிலாளர்களும் போகவில்லை
இடுக்கி: முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினையை கையில் எடுத்துக் கொண்டு தமிழர்களையும், ஐயப்ப பக்தர்களையும், தமிழக வாகனங்களையும் விஷமிகள் தொடர்ந்து தாக்கி வருவதைத் தொடர்ந்து தமிழக, கேரள மாநில எல்லையில் உள்ள குமுளியில் 144 தடை உத்தரவை இடுக்கி கலெக்டர் பிறப்பித்துள்ளார்.
மேலும் தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு வாகனப் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டுள்ளது. இதனால் ஒரு வாகனமும் இந்த வழியாக போகவில்லை, வரவும் இல்லை. கேரள ஏலக்காய் தோட்டங்களில் பணியாற்றி வரும் தமிழக தொழிலாளர்களும் ஒருவர் கூட வேலைக்குப் போகவில்லை. இதனால் இடுக்கி மாவட்டத்துக்கும், தமிழகத்திற்கும் இடையிலான தொடர்புகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளன.
முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினையை சில அரசியல் கட்சிகள் தூண்டி விட்டு வருவதால் கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் சிலர் தமிழர்களுக்கு எதிரான வன்முறையில் குதித்துள்ளனர். தமிழகத்தில் கேரள மக்களுக்கு எதிராக ஒரு சம்பவம் கூட நடைபெறாமல், தமிழக மக்கள் மிகப் பொறுமையுடனும், பொறுப்புடனும் நடந்து வரும் நிலையில் கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் தமிழர்களைத் தாக்குவது, வாகனகங்களைத் தாக்குவது, ஐயப்ப பக்தர்களைத் தாக்குவது என்று அடாவடி ரகளையில் ஈடுபட்டுள்ளனர்.
கேரள, தமிழக எல்லையில் உள்ள குமுளியில் தொடர்ந்து தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் அதிகரித்தவண்ணம் உள்ளன. இதையடுத்து அங்கு நேற்று இரவு முதல் 144 தடை உத்தரவை இடுக்கி மாவட்ட கலெக்டர் பிறப்பித்துள்ளார்.
இதன் மூலம் ஆர்ப்பாட்டம், சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்கள், கூட்டமாக சேருவது, ஊர்வலம் போவது போன்றவை தடை செய்யப்பட்டுள்ளன.
குமுளி வழியாக வாகனங்கள் செல்லத் தடை
இந்த நிலையில் குமுளி வழியாக தமிழக வாகனங்கள் செல்வதற்கு தமிழக போலீஸார் தடை விதித்துள்ளனர். தமிழக வாகனங்களும், தமிழர்களும் தாக்கப்படுவதால், குமுளி வழியாக ஒரு வாகனமும் அனுமதிக்கப்படவில்லை.
பழனி சென்று பாலக்காடு வழியாகப் போகுமாறு ஐயப்ப பக்தர்கள் அறிவுறுத்தப்பட்டு வருகிறார்கள். குமுளிக்கு இன்று காலை முதல் ஒரு தமிழக வாகனமும் போகவில்லை. அதேபோல அங்கிருந்தும் ஒரு வாகனமும் வரவில்லை.
கம்பத்தில் கடையடைப்பு
கேரளாவின் போக்கைக் கண்டித்து கம்பத்தில் இன்றும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. எந்தக் கடையும் திறக்கப்படவில்லை. மேலும் கேரளத்தினர் நடத்தி வரும் கடைகளும் மூடப்பட்டு விட்டன. அந்தக் கடைகளின் உரிமையாளர்கள் கேரளாவுக்குப் போய் விட்டனர்.
ரூ. 6 கோடி வர்த்தகம் பாதிப்பு
கேரளாவுக்கு தேனி மாவட்டத்திலிருந்து ஒரு நாளைக்கு ரூ. 6 கோடிக்கும் மேலான வர்த்தகம் நடைபெறுகிறது. தேனி மாவட்டத்தையொட்டியுள்ள பல்வேறு கேரள பகுதிகளுக்கும் தேவையான பொருட்களில் 90 சதவீத அளவுக்கு தேனி மாவட்டத்திலிருந்துதான் போகிறதாம்.
மேலும் தேனி மாவட்டத்தையொட்டியுள்ள கேரளப் பகுதிகளில் ஏலக்காய் தோட்டங்கள் அதிகம். இங்கு பணியாற்றும் தொழிலாளர்களில் 90 சதவீதம் பேர் தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்கள். தற்போதைய பதட்டத்தைத் தொடர்ந்து இந்தத் தொழிலாளர்கள் யாரும் கேரளாவுக்குப் போகவில்லை, போகவும் தயாராக இல்லை.
ஒரு பஸ்ஸும் ஓடவில்லை
அரசு பஸ்களும் போகவில்லை, தனியார் பஸ்களும் போகவில்லை. அதேபோல கேரளாவிலிருந்தும் ஒரு வாகனமும் வரவில்லை. ஐயப்ப பக்தர்கள் பழனி வழியாகவும், செங்கோட்டை வழியாகவும் போகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்தத் தடை காரணமாக தேனி மாவட்டம் வழியாக தமிழகத்திற்கும், கேரளாவுக்கும் இடையிலான தொடர்புகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளன.
இருப்பினும் கோவை மாவட்டம் வாலையாறு, கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை ஆகிய எல்லைப் பகுதிகளில் பிரச்சினை இல்லை.
இடுக்கி: முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினையை கையில் எடுத்துக் கொண்டு தமிழர்களையும், ஐயப்ப பக்தர்களையும், தமிழக வாகனங்களையும் விஷமிகள் தொடர்ந்து தாக்கி வருவதைத் தொடர்ந்து தமிழக, கேரள மாநில எல்லையில் உள்ள குமுளியில் 144 தடை உத்தரவை இடுக்கி கலெக்டர் பிறப்பித்துள்ளார்.
மேலும் தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு வாகனப் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டுள்ளது. இதனால் ஒரு வாகனமும் இந்த வழியாக போகவில்லை, வரவும் இல்லை. கேரள ஏலக்காய் தோட்டங்களில் பணியாற்றி வரும் தமிழக தொழிலாளர்களும் ஒருவர் கூட வேலைக்குப் போகவில்லை. இதனால் இடுக்கி மாவட்டத்துக்கும், தமிழகத்திற்கும் இடையிலான தொடர்புகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளன.
முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினையை சில அரசியல் கட்சிகள் தூண்டி விட்டு வருவதால் கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் சிலர் தமிழர்களுக்கு எதிரான வன்முறையில் குதித்துள்ளனர். தமிழகத்தில் கேரள மக்களுக்கு எதிராக ஒரு சம்பவம் கூட நடைபெறாமல், தமிழக மக்கள் மிகப் பொறுமையுடனும், பொறுப்புடனும் நடந்து வரும் நிலையில் கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் தமிழர்களைத் தாக்குவது, வாகனகங்களைத் தாக்குவது, ஐயப்ப பக்தர்களைத் தாக்குவது என்று அடாவடி ரகளையில் ஈடுபட்டுள்ளனர்.
கேரள, தமிழக எல்லையில் உள்ள குமுளியில் தொடர்ந்து தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் அதிகரித்தவண்ணம் உள்ளன. இதையடுத்து அங்கு நேற்று இரவு முதல் 144 தடை உத்தரவை இடுக்கி மாவட்ட கலெக்டர் பிறப்பித்துள்ளார்.
இதன் மூலம் ஆர்ப்பாட்டம், சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்கள், கூட்டமாக சேருவது, ஊர்வலம் போவது போன்றவை தடை செய்யப்பட்டுள்ளன.
குமுளி வழியாக வாகனங்கள் செல்லத் தடை
இந்த நிலையில் குமுளி வழியாக தமிழக வாகனங்கள் செல்வதற்கு தமிழக போலீஸார் தடை விதித்துள்ளனர். தமிழக வாகனங்களும், தமிழர்களும் தாக்கப்படுவதால், குமுளி வழியாக ஒரு வாகனமும் அனுமதிக்கப்படவில்லை.
பழனி சென்று பாலக்காடு வழியாகப் போகுமாறு ஐயப்ப பக்தர்கள் அறிவுறுத்தப்பட்டு வருகிறார்கள். குமுளிக்கு இன்று காலை முதல் ஒரு தமிழக வாகனமும் போகவில்லை. அதேபோல அங்கிருந்தும் ஒரு வாகனமும் வரவில்லை.
கம்பத்தில் கடையடைப்பு
கேரளாவின் போக்கைக் கண்டித்து கம்பத்தில் இன்றும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. எந்தக் கடையும் திறக்கப்படவில்லை. மேலும் கேரளத்தினர் நடத்தி வரும் கடைகளும் மூடப்பட்டு விட்டன. அந்தக் கடைகளின் உரிமையாளர்கள் கேரளாவுக்குப் போய் விட்டனர்.
ரூ. 6 கோடி வர்த்தகம் பாதிப்பு
கேரளாவுக்கு தேனி மாவட்டத்திலிருந்து ஒரு நாளைக்கு ரூ. 6 கோடிக்கும் மேலான வர்த்தகம் நடைபெறுகிறது. தேனி மாவட்டத்தையொட்டியுள்ள பல்வேறு கேரள பகுதிகளுக்கும் தேவையான பொருட்களில் 90 சதவீத அளவுக்கு தேனி மாவட்டத்திலிருந்துதான் போகிறதாம்.
மேலும் தேனி மாவட்டத்தையொட்டியுள்ள கேரளப் பகுதிகளில் ஏலக்காய் தோட்டங்கள் அதிகம். இங்கு பணியாற்றும் தொழிலாளர்களில் 90 சதவீதம் பேர் தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்கள். தற்போதைய பதட்டத்தைத் தொடர்ந்து இந்தத் தொழிலாளர்கள் யாரும் கேரளாவுக்குப் போகவில்லை, போகவும் தயாராக இல்லை.
ஒரு பஸ்ஸும் ஓடவில்லை
அரசு பஸ்களும் போகவில்லை, தனியார் பஸ்களும் போகவில்லை. அதேபோல கேரளாவிலிருந்தும் ஒரு வாகனமும் வரவில்லை. ஐயப்ப பக்தர்கள் பழனி வழியாகவும், செங்கோட்டை வழியாகவும் போகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்தத் தடை காரணமாக தேனி மாவட்டம் வழியாக தமிழகத்திற்கும், கேரளாவுக்கும் இடையிலான தொடர்புகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளன.
இருப்பினும் கோவை மாவட்டம் வாலையாறு, கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை ஆகிய எல்லைப் பகுதிகளில் பிரச்சினை இல்லை.
- GuestGuest
கேரளாவின் நிலக்கல் பகுதியில் 10க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்களின் வாகனங்கள் மீது தாக்குதல்
நிலக்கல்: சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குச் செல்லும் தமிழக பக்தர்கள் மீதான தாக்குதல் தொடர்கதையாகியுள்ளது. நிலக்கல் பகுதியில் தமிழக ஐயப்ப பக்தர்களின் வாகனங்களை நிறுத்தி சரமாரியாக ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது. டிரைவர்களிடமிருந்து பணத்தையும் அக்கும்பல் பறித்துச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குச் செல்லும் பக்தர்கள் தங்கிச் செல்லும் முக்கியப் பகுதி நிலக்கல் ஆகும். இங்கு பிரபலமான சிவன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். மேலும், நிலக்கல்லானது பிரபலமான சுற்றுலாத் தலமும் கூட.
இந்த நிலையில், இப்பகுதியில் ஒரு கும்பல் இன்று தமிழகத்தைச் சேர்ந்த பக்தர்களின் வாகனங்களை நிறுத்தி சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளது. அப்பகுதியில் வந்த தமிழக பக்தர்களின் வாகனங்களை நிறுத்திய அக்கும்பல் 10க்கும் மேற்பட்ட வாகனங்களை தாக்கி சேதப்படுத்தியது. பின்னர் டிரைவர்களிடமிருந்து பணத்தையும் அவர்கள் பறித்துக் கொண்டு ஓடி விட்டனர்.
இந்த சம்பவத்தால் நிலக்கல் பகுதியில் பெரும் பதட்டமும், பரபரப்பும் நிலவுகிறது.
நிலக்கல்: சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குச் செல்லும் தமிழக பக்தர்கள் மீதான தாக்குதல் தொடர்கதையாகியுள்ளது. நிலக்கல் பகுதியில் தமிழக ஐயப்ப பக்தர்களின் வாகனங்களை நிறுத்தி சரமாரியாக ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது. டிரைவர்களிடமிருந்து பணத்தையும் அக்கும்பல் பறித்துச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குச் செல்லும் பக்தர்கள் தங்கிச் செல்லும் முக்கியப் பகுதி நிலக்கல் ஆகும். இங்கு பிரபலமான சிவன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். மேலும், நிலக்கல்லானது பிரபலமான சுற்றுலாத் தலமும் கூட.
இந்த நிலையில், இப்பகுதியில் ஒரு கும்பல் இன்று தமிழகத்தைச் சேர்ந்த பக்தர்களின் வாகனங்களை நிறுத்தி சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளது. அப்பகுதியில் வந்த தமிழக பக்தர்களின் வாகனங்களை நிறுத்திய அக்கும்பல் 10க்கும் மேற்பட்ட வாகனங்களை தாக்கி சேதப்படுத்தியது. பின்னர் டிரைவர்களிடமிருந்து பணத்தையும் அவர்கள் பறித்துக் கொண்டு ஓடி விட்டனர்.
இந்த சம்பவத்தால் நிலக்கல் பகுதியில் பெரும் பதட்டமும், பரபரப்பும் நிலவுகிறது.
- GuestGuest
இரு மாநிலங்களுக்கிடையே வன்முறையைத் தூண்டும் கேரள அரசை டிஸ்மிஸ் செய்க- பாஜக கோரிக்கை
சென்னை: தமிழக, கேரள மக்களுக்கிடையே துவேஷத்தை அதிகரிக்கும் வகையிலும், குரோதத்தை அதிகரிக்கும் வகையிலும் நடைபெற்று வரும் வன்முறைச் செயல்களைத் தடுக்காமல் ஊக்கமளித்து வரும் கேரள அரசை உடனடியாக மத்திய அரசு டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துல்லார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் பொன்.ராதாகிருஷ்ணன். அப்போது அவர் கூறுகையில், முல்லைப் பெரியாறு விவகாரத்தில் மக்களின் உணர்ச்சியைத் தூண்டி விட்டு தமிழர்கள் மீதான தாக்குதலை ஊக்குவித்து வருகிறது கேரள அரசு. தேசிய ஒருமைப்பாட்டை நிலைகுலையச் செய்து வரும் கேரள அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்.
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழக கட்சிகள் ஓரணியில் நிற்கின்றன என்பதை உறுதி செய்யும் வகையி்ல தமிழக அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.
சபரிமலைக்குச் செல்லும் தமிழக ஐயப்ப பக்தர்கள் யாருக்கேனும் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் அதற்கு கேரள அரசுதான் பொறுப்பாகும். மேலும், கேரள அரசு மோசமான விளைவுகளையும் சந்தித்தாக வேண்டும்.
முல்லைப் பெரியாறு அணைக்கு மத்திய பாதுகாப்புப் படையினரை, தேவைப்பட்டால் ராணுவத்தையும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த வேண்டும்.
கள நிலவரங்களை ஆராயவும், மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் பாஜக மாநிலத் துணைத் தலைவர் திருமலை தலைமையில் ஐவர் குழு நாளை கம்பம் செல்கிறது என்றார் பொன்.ராதாகிருஷ்ணன்.
சென்னை: தமிழக, கேரள மக்களுக்கிடையே துவேஷத்தை அதிகரிக்கும் வகையிலும், குரோதத்தை அதிகரிக்கும் வகையிலும் நடைபெற்று வரும் வன்முறைச் செயல்களைத் தடுக்காமல் ஊக்கமளித்து வரும் கேரள அரசை உடனடியாக மத்திய அரசு டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துல்லார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் பொன்.ராதாகிருஷ்ணன். அப்போது அவர் கூறுகையில், முல்லைப் பெரியாறு விவகாரத்தில் மக்களின் உணர்ச்சியைத் தூண்டி விட்டு தமிழர்கள் மீதான தாக்குதலை ஊக்குவித்து வருகிறது கேரள அரசு. தேசிய ஒருமைப்பாட்டை நிலைகுலையச் செய்து வரும் கேரள அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்.
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழக கட்சிகள் ஓரணியில் நிற்கின்றன என்பதை உறுதி செய்யும் வகையி்ல தமிழக அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.
சபரிமலைக்குச் செல்லும் தமிழக ஐயப்ப பக்தர்கள் யாருக்கேனும் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் அதற்கு கேரள அரசுதான் பொறுப்பாகும். மேலும், கேரள அரசு மோசமான விளைவுகளையும் சந்தித்தாக வேண்டும்.
முல்லைப் பெரியாறு அணைக்கு மத்திய பாதுகாப்புப் படையினரை, தேவைப்பட்டால் ராணுவத்தையும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த வேண்டும்.
கள நிலவரங்களை ஆராயவும், மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் பாஜக மாநிலத் துணைத் தலைவர் திருமலை தலைமையில் ஐவர் குழு நாளை கம்பம் செல்கிறது என்றார் பொன்.ராதாகிருஷ்ணன்.
- GuestGuest
குமுளியில் தமிழர்களின் கடைகள் உடைப்பு- தொழிலாளர்களை சிறைப்பிடித்து கேரளத்தினர் அக்கிரமம்
தேனி: குமுளியில் தமிழர்கள் நடத்தி வரும் கடைகளைத் தாக்கி கேரளத்தினர் சூறையாடியுள்ளனர். மேலும் தமிழக தொழிலாளர்கள் 500 பேரை சிறைப்பிடித்து ரவுடித்தனம் செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீஸாரின் நடவடிக்கையைத் தொடர்ந்து தமிழக தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர்.
தமிழர்களுக்கு எதிரான கலவரமாக முல்லைப் பெரியாறு பிரச்சினையை கேரளத்தினர் மாற்றி வருகின்றனர்.இடுக்கி மாவட்டம் குமுளியில் இந்த அக்கிரமச் செயல் தலைவிரித்தாடி வருகிறது. இதைத் தடுக்கவோ, ஒடுக்கவோ கேரள காவல் துறையும் சரி, அரசும் சரி உறுதியான நடவடிக்கை எதையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்து வருகின்றன.
நேற்று முன்தினம் இரவு குமுளி எல்லையில் தமிழக லாரிகளை அந்த பகுதியை சேர்ந்த சில அமைப்பினர் அடித்து நொறுக்கியதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
இதனை அடுத்து குமுளி மலை சாலையில் வாகனங்கள் போக்குவரத்து நள்ளிரவில் திடீர் என்று நிறுத்தப்பட்டன. குறிப்பாக தமிழக அய்யப்ப பக்தர்கள் வாகனங்கள் நீண்ட வரிசையில் குமுளியில் இருந்து லோயர்கேம்ப் வரை அணி வகுத்து நின்றன. நள்ளிரவு நேரத்தில் நிலவிய இந்த பதற்றமான சூழலையை தொடர்ந்து, குமுளி, போடிமெட்டு, கம்பம் மெட்டு மலைச்சாலையில் உள்ள வாகன சோதனைச்சாவடி அருகே தமிழக போலீசார் கூடுதலாக குவிக்கப்பட்டனர்.
தேனி மற்றும் இடுக்கி மாவட்ட கலெக்டர்கள் பேச்சு வார்த்தையை அடுத்து எல்லை வழியாக மலைப் பாதையில் நின்ற வாகனங்கள் மட்டுமே நேற்று அதிகாலையில் குமுளிக்கு அனுப்பப்பட்டன. மேலும் தமிழக போலீஸார் கேரள போலீஸாரிடம் கண்டிப்புடன் பேசியதைத் தொடர்ந்து கேரள மாநில பகுதியில் அடித்து நொறுக்கப்பட்ட லாரிகளுக்கு நஷ்ட ஈடு வழங்கப்பட்டது.
இதனிடையே நேற்று முன்தினம் நள்ளிரவில் தமிழக லாரிகள் அடித்து நொறுக்கப்பட்ட சம்பவம் நேற்று அதிகாலையில் காட்டுத் தீ போன்று கூடலூர், லோயர்கேம்ப், கம்பம் பகுதியில் பரவியது.
இதைத்தொடர்ந்து நேற்று அதிகாலையில் தமிழக எல்லைப்பகுதியில் உள்ள குமுளி மலைப்பாதை பகுதிக்கு லோயர்கேம்ப், கூடலூர் பகுதி மக்கள் சென்றனர். அங்கு தேனி மற்றும் கம்பம் பகுதியில் இருந்து குமுளிக்கு பால் மற்றும் மளிகைப்பொருட்கள் ஏற்றிச்செல்லும் வாகனங்கள் அனைத்தையும் தமிழக எல்லைப் பகுதியான குமுளியில் இருந்து தமிழ்நாட்டிற்கு திருப்பி அனுப்பினர்.
கேரள மாநிலத்திற்கு செல்லும் தமிழக வாகனங்களுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் தரும்வரை வாகனங்களை இயக்க கூடாது என்று பொதுமக்கள் கூறினார்கள். இதனை அடுத்து காய்கறி மற்றும் பால் வேன்கள் அங்கிருந்து தமிழ்நாட்டிற்கு திருப்பி விடப்பட்டன.
மேலும், கம்பம் நகரில் இருந்து கம்பம் மெட்டு சாலையில் பொதுமக்கள் காலை 11 மணியளவில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக கம்பம் நகரிலும் பதற்றமான சூழ்நிலை நிலவியது. நேற்று பிற்பகல் வரை இந்த மலை சாலை வழியாகவும் கேரள மாநிலத்திற்கு வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. அங்கிருந்தும் எந்த ஒரு வாகனங்களும் வரவில்லை.
இந்தப் பின்னணியில் நேற்று அதிகாலையில் கம்பம் மெட்டு மலைப்பாதை வழியாக புளியன்மலை, கட்டப்பனை, பாரத்தோடு, அன்னியார் தொழு, நெடுங்கண்டனம் பகுதியில் உள்ள ஏலத்தோட்டங்களுக்கு ஜீப்களில் வேலைக்கு சென்ற கூலித்தொழிலாளர்கள் ஏறத்தாழ 500 பேர் கேரள பகுதியில் உள்ள சேத்துக்குளி என்ற இடத்தில் சிறைபிடிக்கப்பட்டனர்.
இதனால் தேனி மாவட்டத்தில் பரபரப்பு அதிகரித்தது. நிலைமையின் விபரீதத்தை உணர்ந்த தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் பழனிச்சாமி, உடனடியாக இடுக்கி மாவட்ட ஆட்சித் தலைவர் தேவதாசனை போனில் பிடித்து 500 பேரையும் பத்திரமாக அனுப்ப கேட்டுக் கொண்டார். அதன் பின்னர் போலீஸார் தலையிட்டு தமிழக தொழிலாளர்களை மீட்டு ஊர்களுக்கு திருப்பி அனுப்பினர்.
இந்த சூழ்நிலையில் நேற்று இரவு குமுளியில் முல்லைப் பெரியாறு அணை பிரச்சினை எதிரொலியாக கலவரம் வெடித்தது. இரவு 8 மணியளவில் குமுளியில் திரண்டிருந்த கேரள மக்களில் சிலர் திடீரென தமிழர்களின் கடைகளை அடித்து நொறுக்க ஆரம்பித்தனர். ஓட்டல்கள், டீக்கடைகள், பல்பொருள் அங்காடிகளை உருட்டுக் கட்டைகளால் அடித்து நொறுக்கினர். அப்போது கடைகளில் இருந்த தமிழர்களையும் அவர்கள் தாக்கி உள்ளனர்.
கும்பல் கும்பலாக வந்து கடைகளை கேரள மக்கள் தாக்க ஆரம்பித்ததும் கடைகளில் இருந்த தமிழர்கள் செய்வதறியாது திகைத்துப்போய் வெளியே ஓடி வந்தனர். அவர்களை போராட்டக்காரர்கள் துரத்தி துரத்தி அடித்தனர். 20-க்கும் மேற்பட்ட கடைகள் அடித்து நொறுக்கப்பட்டு உள்ளன.
கம்பத்தில் பதிலடி
குமுளியில் வசிக்கும் தமிழர்கள் மற்றும் அவர்களது கடைகள் தாக்கப்பட்டதை அறிந்ததும் தேனி மாவட்டம் கம்பம் நகரில் நேற்று இரவு கேரளாவை சேர்ந்தவர்களின் கடைகள் மீது தமிழர்கள் தாக்குதல் நடத்தினர். இரவு 9 மணியளவில் கம்பம் நகரில் காந்திசிலை, மெயின்ரோடு, அரசமரம் சிக்னல் பகுதிகளில் ரோடுகளில் நின்றிருந்த நூற்றுக்கணக்கானவர்கள் திரண்டு வந்து கேரளத்தினரின் ஓட்டல்கள், கடைகளை அடித்து நொறுக்கினார்கள்.
பிரபல பைனான்ஸ் நிறுவனம் ஒன்றும் அடித்து நொறுக்கப்பட்டது. ஏற்கனவே தமிழக-கேரள எல்லையில் பதற்றம் நிலவிவருவதால் கம்பம் நகரில் உள்ள கேரளத்தை சேர்ந்த கடை உரிமையாளர்கள் கடைகளை நேற்று முன்தினமே பூட்டிவிட்டு ஓடி விட்டனர்.
தேனி: குமுளியில் தமிழர்கள் நடத்தி வரும் கடைகளைத் தாக்கி கேரளத்தினர் சூறையாடியுள்ளனர். மேலும் தமிழக தொழிலாளர்கள் 500 பேரை சிறைப்பிடித்து ரவுடித்தனம் செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீஸாரின் நடவடிக்கையைத் தொடர்ந்து தமிழக தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர்.
தமிழர்களுக்கு எதிரான கலவரமாக முல்லைப் பெரியாறு பிரச்சினையை கேரளத்தினர் மாற்றி வருகின்றனர்.இடுக்கி மாவட்டம் குமுளியில் இந்த அக்கிரமச் செயல் தலைவிரித்தாடி வருகிறது. இதைத் தடுக்கவோ, ஒடுக்கவோ கேரள காவல் துறையும் சரி, அரசும் சரி உறுதியான நடவடிக்கை எதையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்து வருகின்றன.
நேற்று முன்தினம் இரவு குமுளி எல்லையில் தமிழக லாரிகளை அந்த பகுதியை சேர்ந்த சில அமைப்பினர் அடித்து நொறுக்கியதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
இதனை அடுத்து குமுளி மலை சாலையில் வாகனங்கள் போக்குவரத்து நள்ளிரவில் திடீர் என்று நிறுத்தப்பட்டன. குறிப்பாக தமிழக அய்யப்ப பக்தர்கள் வாகனங்கள் நீண்ட வரிசையில் குமுளியில் இருந்து லோயர்கேம்ப் வரை அணி வகுத்து நின்றன. நள்ளிரவு நேரத்தில் நிலவிய இந்த பதற்றமான சூழலையை தொடர்ந்து, குமுளி, போடிமெட்டு, கம்பம் மெட்டு மலைச்சாலையில் உள்ள வாகன சோதனைச்சாவடி அருகே தமிழக போலீசார் கூடுதலாக குவிக்கப்பட்டனர்.
தேனி மற்றும் இடுக்கி மாவட்ட கலெக்டர்கள் பேச்சு வார்த்தையை அடுத்து எல்லை வழியாக மலைப் பாதையில் நின்ற வாகனங்கள் மட்டுமே நேற்று அதிகாலையில் குமுளிக்கு அனுப்பப்பட்டன. மேலும் தமிழக போலீஸார் கேரள போலீஸாரிடம் கண்டிப்புடன் பேசியதைத் தொடர்ந்து கேரள மாநில பகுதியில் அடித்து நொறுக்கப்பட்ட லாரிகளுக்கு நஷ்ட ஈடு வழங்கப்பட்டது.
இதனிடையே நேற்று முன்தினம் நள்ளிரவில் தமிழக லாரிகள் அடித்து நொறுக்கப்பட்ட சம்பவம் நேற்று அதிகாலையில் காட்டுத் தீ போன்று கூடலூர், லோயர்கேம்ப், கம்பம் பகுதியில் பரவியது.
இதைத்தொடர்ந்து நேற்று அதிகாலையில் தமிழக எல்லைப்பகுதியில் உள்ள குமுளி மலைப்பாதை பகுதிக்கு லோயர்கேம்ப், கூடலூர் பகுதி மக்கள் சென்றனர். அங்கு தேனி மற்றும் கம்பம் பகுதியில் இருந்து குமுளிக்கு பால் மற்றும் மளிகைப்பொருட்கள் ஏற்றிச்செல்லும் வாகனங்கள் அனைத்தையும் தமிழக எல்லைப் பகுதியான குமுளியில் இருந்து தமிழ்நாட்டிற்கு திருப்பி அனுப்பினர்.
கேரள மாநிலத்திற்கு செல்லும் தமிழக வாகனங்களுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் தரும்வரை வாகனங்களை இயக்க கூடாது என்று பொதுமக்கள் கூறினார்கள். இதனை அடுத்து காய்கறி மற்றும் பால் வேன்கள் அங்கிருந்து தமிழ்நாட்டிற்கு திருப்பி விடப்பட்டன.
மேலும், கம்பம் நகரில் இருந்து கம்பம் மெட்டு சாலையில் பொதுமக்கள் காலை 11 மணியளவில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக கம்பம் நகரிலும் பதற்றமான சூழ்நிலை நிலவியது. நேற்று பிற்பகல் வரை இந்த மலை சாலை வழியாகவும் கேரள மாநிலத்திற்கு வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. அங்கிருந்தும் எந்த ஒரு வாகனங்களும் வரவில்லை.
இந்தப் பின்னணியில் நேற்று அதிகாலையில் கம்பம் மெட்டு மலைப்பாதை வழியாக புளியன்மலை, கட்டப்பனை, பாரத்தோடு, அன்னியார் தொழு, நெடுங்கண்டனம் பகுதியில் உள்ள ஏலத்தோட்டங்களுக்கு ஜீப்களில் வேலைக்கு சென்ற கூலித்தொழிலாளர்கள் ஏறத்தாழ 500 பேர் கேரள பகுதியில் உள்ள சேத்துக்குளி என்ற இடத்தில் சிறைபிடிக்கப்பட்டனர்.
இதனால் தேனி மாவட்டத்தில் பரபரப்பு அதிகரித்தது. நிலைமையின் விபரீதத்தை உணர்ந்த தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் பழனிச்சாமி, உடனடியாக இடுக்கி மாவட்ட ஆட்சித் தலைவர் தேவதாசனை போனில் பிடித்து 500 பேரையும் பத்திரமாக அனுப்ப கேட்டுக் கொண்டார். அதன் பின்னர் போலீஸார் தலையிட்டு தமிழக தொழிலாளர்களை மீட்டு ஊர்களுக்கு திருப்பி அனுப்பினர்.
இந்த சூழ்நிலையில் நேற்று இரவு குமுளியில் முல்லைப் பெரியாறு அணை பிரச்சினை எதிரொலியாக கலவரம் வெடித்தது. இரவு 8 மணியளவில் குமுளியில் திரண்டிருந்த கேரள மக்களில் சிலர் திடீரென தமிழர்களின் கடைகளை அடித்து நொறுக்க ஆரம்பித்தனர். ஓட்டல்கள், டீக்கடைகள், பல்பொருள் அங்காடிகளை உருட்டுக் கட்டைகளால் அடித்து நொறுக்கினர். அப்போது கடைகளில் இருந்த தமிழர்களையும் அவர்கள் தாக்கி உள்ளனர்.
கும்பல் கும்பலாக வந்து கடைகளை கேரள மக்கள் தாக்க ஆரம்பித்ததும் கடைகளில் இருந்த தமிழர்கள் செய்வதறியாது திகைத்துப்போய் வெளியே ஓடி வந்தனர். அவர்களை போராட்டக்காரர்கள் துரத்தி துரத்தி அடித்தனர். 20-க்கும் மேற்பட்ட கடைகள் அடித்து நொறுக்கப்பட்டு உள்ளன.
கம்பத்தில் பதிலடி
குமுளியில் வசிக்கும் தமிழர்கள் மற்றும் அவர்களது கடைகள் தாக்கப்பட்டதை அறிந்ததும் தேனி மாவட்டம் கம்பம் நகரில் நேற்று இரவு கேரளாவை சேர்ந்தவர்களின் கடைகள் மீது தமிழர்கள் தாக்குதல் நடத்தினர். இரவு 9 மணியளவில் கம்பம் நகரில் காந்திசிலை, மெயின்ரோடு, அரசமரம் சிக்னல் பகுதிகளில் ரோடுகளில் நின்றிருந்த நூற்றுக்கணக்கானவர்கள் திரண்டு வந்து கேரளத்தினரின் ஓட்டல்கள், கடைகளை அடித்து நொறுக்கினார்கள்.
பிரபல பைனான்ஸ் நிறுவனம் ஒன்றும் அடித்து நொறுக்கப்பட்டது. ஏற்கனவே தமிழக-கேரள எல்லையில் பதற்றம் நிலவிவருவதால் கம்பம் நகரில் உள்ள கேரளத்தை சேர்ந்த கடை உரிமையாளர்கள் கடைகளை நேற்று முன்தினமே பூட்டிவிட்டு ஓடி விட்டனர்.
- GuestGuest
முல்லைப் பெரியாறு- கேரளாவைக் கண்டித்து தமிழகத்தில் தியேட்டர்கள் மூடப்படுகின்றன
முல்லைப் பெரியாறு பிரச்சினையில் கேரளம் நடந்து கொள்ளும் போக்கைக் கண்டித்து ஒரு நாள் தியேட்டர்களை மூடி போராட்டம் நடத்த தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து சங்க பொதுச் செயலாளர் பன்னீர் செல்வம் கூறுகையில்,
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில், கேரள அரசின் அராஜக போக்கை திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் கண்டிக்கிறது. இந்த பிரச்சினையில் எங்களின் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில், தமிழக மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில், முதல்வர் ஜெயலலிதாவின் நிலைப்பாட்டை உறுதிப்படுத்தும் வகையில், அவர் கரத்தை வலுப்படுத்தும் வகையில், திரையரங்குகளை மூட முடிவு செய்து இருக்கிறோம்.
சென்னை முதல் கன்னியாகுமரி வரை உள்ள 1450 திரையரங்குகளும் அன்று மூடப்படும். அந்த தியேட்டர்களில் அன்று ஒருநாள் மட்டும் அனைத்து காட்சிகளும் ரத்து செய்யப்படும் என்றார் அவர்.
தியேட்டர்கள் எப்போது மூடப்படும் என்பதை இன்று சங்கம் அறிவிக்கவுள்ளது.
முல்லைப் பெரியாறு பிரச்சினையில் கேரளம் நடந்து கொள்ளும் போக்கைக் கண்டித்து ஒரு நாள் தியேட்டர்களை மூடி போராட்டம் நடத்த தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து சங்க பொதுச் செயலாளர் பன்னீர் செல்வம் கூறுகையில்,
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில், கேரள அரசின் அராஜக போக்கை திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் கண்டிக்கிறது. இந்த பிரச்சினையில் எங்களின் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில், தமிழக மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில், முதல்வர் ஜெயலலிதாவின் நிலைப்பாட்டை உறுதிப்படுத்தும் வகையில், அவர் கரத்தை வலுப்படுத்தும் வகையில், திரையரங்குகளை மூட முடிவு செய்து இருக்கிறோம்.
சென்னை முதல் கன்னியாகுமரி வரை உள்ள 1450 திரையரங்குகளும் அன்று மூடப்படும். அந்த தியேட்டர்களில் அன்று ஒருநாள் மட்டும் அனைத்து காட்சிகளும் ரத்து செய்யப்படும் என்றார் அவர்.
தியேட்டர்கள் எப்போது மூடப்படும் என்பதை இன்று சங்கம் அறிவிக்கவுள்ளது.
- GuestGuest
கேரளாவைக் கண்டித்த நாளை வைகோ நடைபயணம்- 8ம் தேதி கூடலூரில் உண்ணாவிரதம்
மதுரை: முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரளாவின் போக்கைக் கண்டித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நாளை மதுரையிலிருந்து கூடலூர் நோக்கி நடைபயணத்தைத் தொடங்குகிறார். 8ம் தேதி கூடலூரில் அவர் ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுகிறார்.
முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக வைகோ ஆரம்பத்திலிருந்தே தீவிரமாக செயல்பட்டு வருகிறார். பல்வேறு வகையான போராட்டங்களையும் அவர் நடத்தியுள்ளார்.நேற்று கூட அவர் பிரதமரை நேரில் சந்தித்து முல்லைப் பெரியாறு விவகாரம் தொடபாக மிக நீண்ட கடிதம் ஒன்றைக் கொடுத்து விட்டு தமிழகத்தின் பக்கம் உள்ள நியாயத்தை வலியுறுத்தி விட்டு வந்துள்ளார்.
இந்த நிலையில் நாளை அவர் நடைபயணம் ஒன்றை தொடங்குகிறார். நாளை காலை மதுரையிலிருந்து கூடலூர் நோக்கி நடைபயணமாக கிளம்புகிறார். அவருடன் முல்லைப் பெரியாறு பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் அப்பாஸ் உள்ளிட்ட பெரும் திரளானோர் கலந்து கொள்கின்றனர்.
மதுரை மாரியம்மன் கோவில் தெப்பக்குளத்திலிருந்து நடைபயணம் கிளம்புகிறது. கூடலூரை சென்றடைகிறது. அங்கு 8ம் தேதி வைகோ உண்ணாவிரதத்தில் ஈடுபடுகிறார். அவருடன் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்கிறார்கள்.
மதுரை: முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரளாவின் போக்கைக் கண்டித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நாளை மதுரையிலிருந்து கூடலூர் நோக்கி நடைபயணத்தைத் தொடங்குகிறார். 8ம் தேதி கூடலூரில் அவர் ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுகிறார்.
முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக வைகோ ஆரம்பத்திலிருந்தே தீவிரமாக செயல்பட்டு வருகிறார். பல்வேறு வகையான போராட்டங்களையும் அவர் நடத்தியுள்ளார்.நேற்று கூட அவர் பிரதமரை நேரில் சந்தித்து முல்லைப் பெரியாறு விவகாரம் தொடபாக மிக நீண்ட கடிதம் ஒன்றைக் கொடுத்து விட்டு தமிழகத்தின் பக்கம் உள்ள நியாயத்தை வலியுறுத்தி விட்டு வந்துள்ளார்.
இந்த நிலையில் நாளை அவர் நடைபயணம் ஒன்றை தொடங்குகிறார். நாளை காலை மதுரையிலிருந்து கூடலூர் நோக்கி நடைபயணமாக கிளம்புகிறார். அவருடன் முல்லைப் பெரியாறு பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் அப்பாஸ் உள்ளிட்ட பெரும் திரளானோர் கலந்து கொள்கின்றனர்.
மதுரை மாரியம்மன் கோவில் தெப்பக்குளத்திலிருந்து நடைபயணம் கிளம்புகிறது. கூடலூரை சென்றடைகிறது. அங்கு 8ம் தேதி வைகோ உண்ணாவிரதத்தில் ஈடுபடுகிறார். அவருடன் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்கிறார்கள்.
- GuestGuest
இடைத் தேர்தலில் வெல்ல முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தை கையில் எடுத்த கேரள கட்சிகள்!
திருவனந்தபுரம்: கடந்த ஒரு மாதம் வரை முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் அமைதி காத்து வந்த கேரள காங்கிரஸ் முதல்வர் உம்மன் சாண்டியும், எதிர்க் கட்சிகளும் திடீரென அந்த விவகாரத்தைக் கிளப்பியுள்ளதற்கு அந்த மாநிலத்தில் நடக்கவுள்ள இடைத் தேர்தலே காரணம் என்று தெரியவந்துள்ளது.
டேம்999 படம் மூலமாக திடீரென இந்தப் பிரச்சனைக்கு பெரிய அளவில் முக்கியத்துவம் தந்தது கேரளா. இடைத் தேர்தலை மனதில் வைத்து படத்தையும் அதை ஒட்டி ரிலீஸ் செய்து தங்களது 'கேரள விவரத்தை' காட்டி வருகின்றனர் அந்த மாநில அரசியல்வாதிகள்.
இத்தனை நாளாய் சும்மா இருந்த சங்கை காங்கிரஸ் கட்சியும் அந்த மாநில மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு ஊதிப் பெரிதாக்குவதற்குக் காரணமே, எர்ணாகுளம் மாவட்டம் பிரவம் சட்டமன்றத் தொகுதிக்கு நடக்கவுள்ள இடைத் தேர்தல் தான் என்று தெரிகிறது. இந்தத் தொகுதி முல்லைப் பெரியாறு அணைக்கு அருகாமையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
முல்லைப் பெரியாறு அணையிலிருந்து திறந்து விடப்படும் நீர் பிரவம் தொகுதி வழியே ஓடும் மூவாற்றுப் புழை ஆற்றின் வழியாகத் தான் செல்கிறது. இதனால் முல்லைப் பெரியாறு அணை உடைந்தால் பிரவம் தொகுதி உள்பட எர்ணாகுளம் மாவட்டமே மூழ்கிவிடும் என்ற டுபாக்கூர் பிரச்சாரத்தை அந்த மாநில கட்சிகள் கிளப்பி விட்டுள்ளன.
மேலும் நடக்கப் போவது வெறும் இடைத் தேர்தல் மட்டுமல்ல. இந்தத் தொகுதியில் வெல்லப் போவது யார் என்பதை வைத்து தான், கேரளத்தில் காங்கிரஸ் அரசு நீடிக்குமா அல்லது கவிழுமா என்பதே உறுதியாகப் போகிறது.
பலவீனமாக உள்ள முல்லைப் பெரியாறு அணை உடைந்து இடுக்கி, ஆலப்புழா, எர்ணாகுளம் மாவட்டங்களே நீரில் மூழ்கிவிடும் என்று கேரளா அரசு கூறுகிறது. ஆனால், இந்த இடைத் தேர்தலில் காங்கிரஸ் தோற்றால் முதல்வர் உம்மன் சாண்டி தலைமையிலான அரசு மூழ்கிவிடும் என்பது மட்டும் தான் உண்மை.
2011ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 72 இடங்களையும் மார்க்சிஸ்ட் தலைமையிலான இடதுசாரிகளின் முற்போக்குக் கூட்டணி 68 இடங்களையும் கைப்பற்றின.
இதில், கேரள காங்கிரஸ் கட்சியின் (ஜேக்கப் பிரிவின்) தலைவர் டி.எம். ஜேக்கப், எர்ணாகுளம் மாவட்டம் பிரவம் சட்டப் பேரவைத் தொகுதியில் வென்றார். 5வது முறையாக இதே தொகுதியில் வென்ற இவர் காங்கிரஸ் அமைச்சரவையில் உணவுத்துறை அமைச்சரானார். ஆனால், கடந்த அக்டோபர் மாதம் அவர் மரணமடைந்தார்.
இதையடுத்து பிரவம் தொகுதிக்கு அடுத்த மாதம் இடைத் தேர்தல் நடக்கவுள்ளது.
140 உறுப்பினர்களைக் கொண்ட கேரள சட்டசபையில் ஆளும் ஐக்கிய ஜனநாயக முன்னணி 72 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. டி.எம். ஜேக்கப் மறைவுக்குப் பிறகு 71 ஆகக் குறைந்துவிட்டது.
இடைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியைத் தழுவினால் சட்டசபையில் இடதுசாரி எம்எல்ஏக்களின் எண்ணிக்கையும் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்களின் எண்ணிக்கையும் கிட்டத்தட்ட சமமாகிவிடும்.
மேலும் கடந்த தேர்தலில்தான் டி.எம். ஜேக்கப் வெறும் 157 வாக்கு வித்தியாசத்தில்தான் தன்னை எதிர்த்து போட்டியிட்ட இடதுசாரி வேட்பாளரை தோற்கடித்தார். இதனால் இந்தத் தொகுதியில் இந்தமுறை காங்கிரஸ் வெல்வது சந்தேகமே.
இதனால் தான் கேரள முதல்வர் உம்மன் சாண்டி இந்த அணை விவகாரத்தைக் கையில் எடுத்துக் கொண்டுள்ளார்.
அணையை வைத்து காங்கிரஸ் ஓட்டு வாங்குவதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியால் பார்த்துக் கொண்டிருக்க முடியுமா?. அதனால், தான் சமீபத்தில் எர்ணாகுளத்துக்கு வந்த முன்னாள் முதல்வரும் மூத்த மார்க்சிஸ்ட் தலைவருமான அச்சுதானந்தன், புதிய அணையைக் கட்டுவதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனில்ட் கட்சி விரைவிலேயே பொது மக்களிடம் நிதி திரட்டும் பணியைத் தொடங்கும். இங்கே அணையைக் கட்டுவதற்காக மத்திய அரசிடமோ, தமிழக அரசிடமோ நாம் ஏன் உதவி கேட்க வேண்டும்?. அணையைக் கட்ட மத்திய அரசோ அல்லது உச்ச நீதிமன்றமோ அனுமதி மட்டும் தந்தால் போதும், நிதியை நாங்களே மக்களிடம் திரட்டிக் கொள்வோம் என்று பேசிவிட்டுச் சென்றார்.
1979ம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் முல்லைப் பெரியாறு அணையில் விரிசல் ஏற்பட்டுவிட்டதாகக் கூறத் தொடங்கியது கேரள அரசு. அதை நம்பிய தமிழக அரசும் நீரின் அளவை 136 அடிக்குக் குறைத்தது. அதையடுத்து, அணையின் நீரின் அளவை 142 அடியாக உயர்த்த 2006ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை கேரளா இன்று வரை நிறைவேற்றவில்லை.
இந்த அழகில் தான், நாங்கள் புதிய அணையைக் கட்டினாலும் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தருவோம் என்று உறுதியளிக்கிறார் உம்மன் சாண்டி. இவரது உறுதிமொழியை எப்படி நம்புவது?
இதற்கிடையே இந்த அணையின் ஸ்திரத்தன்மை குறித்து ஆய்வு செய்ய உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஏ.எஸ். ஆனந்த் தலைமையில் அமைக்கப்பட்ட குழு அடுத்த மாதம் உச்ச நீதிமன்றத்தில் தனது முதல் கட்ட அறிக்கையை தாக்கல் செய்யவுள்ளது.
அதில், அணை பலமாகவே உள்ளது என்று கூறப்பட்டிருந்தால், இடைத் தேர்தல் நேரத்தில் அது தங்களுக்கு பெரும் பாதகத்தை ஏற்படுத்தும் என்றும் கேரள காங்கிரஸ் அரசு கருதுகிறது. இதனால் இப்போதே இந்த விவகாரத்தை கையில் எடுத்துக் கொண்டுள்ளது.
திருவனந்தபுரம்: கடந்த ஒரு மாதம் வரை முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் அமைதி காத்து வந்த கேரள காங்கிரஸ் முதல்வர் உம்மன் சாண்டியும், எதிர்க் கட்சிகளும் திடீரென அந்த விவகாரத்தைக் கிளப்பியுள்ளதற்கு அந்த மாநிலத்தில் நடக்கவுள்ள இடைத் தேர்தலே காரணம் என்று தெரியவந்துள்ளது.
டேம்999 படம் மூலமாக திடீரென இந்தப் பிரச்சனைக்கு பெரிய அளவில் முக்கியத்துவம் தந்தது கேரளா. இடைத் தேர்தலை மனதில் வைத்து படத்தையும் அதை ஒட்டி ரிலீஸ் செய்து தங்களது 'கேரள விவரத்தை' காட்டி வருகின்றனர் அந்த மாநில அரசியல்வாதிகள்.
இத்தனை நாளாய் சும்மா இருந்த சங்கை காங்கிரஸ் கட்சியும் அந்த மாநில மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு ஊதிப் பெரிதாக்குவதற்குக் காரணமே, எர்ணாகுளம் மாவட்டம் பிரவம் சட்டமன்றத் தொகுதிக்கு நடக்கவுள்ள இடைத் தேர்தல் தான் என்று தெரிகிறது. இந்தத் தொகுதி முல்லைப் பெரியாறு அணைக்கு அருகாமையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
முல்லைப் பெரியாறு அணையிலிருந்து திறந்து விடப்படும் நீர் பிரவம் தொகுதி வழியே ஓடும் மூவாற்றுப் புழை ஆற்றின் வழியாகத் தான் செல்கிறது. இதனால் முல்லைப் பெரியாறு அணை உடைந்தால் பிரவம் தொகுதி உள்பட எர்ணாகுளம் மாவட்டமே மூழ்கிவிடும் என்ற டுபாக்கூர் பிரச்சாரத்தை அந்த மாநில கட்சிகள் கிளப்பி விட்டுள்ளன.
மேலும் நடக்கப் போவது வெறும் இடைத் தேர்தல் மட்டுமல்ல. இந்தத் தொகுதியில் வெல்லப் போவது யார் என்பதை வைத்து தான், கேரளத்தில் காங்கிரஸ் அரசு நீடிக்குமா அல்லது கவிழுமா என்பதே உறுதியாகப் போகிறது.
பலவீனமாக உள்ள முல்லைப் பெரியாறு அணை உடைந்து இடுக்கி, ஆலப்புழா, எர்ணாகுளம் மாவட்டங்களே நீரில் மூழ்கிவிடும் என்று கேரளா அரசு கூறுகிறது. ஆனால், இந்த இடைத் தேர்தலில் காங்கிரஸ் தோற்றால் முதல்வர் உம்மன் சாண்டி தலைமையிலான அரசு மூழ்கிவிடும் என்பது மட்டும் தான் உண்மை.
2011ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 72 இடங்களையும் மார்க்சிஸ்ட் தலைமையிலான இடதுசாரிகளின் முற்போக்குக் கூட்டணி 68 இடங்களையும் கைப்பற்றின.
இதில், கேரள காங்கிரஸ் கட்சியின் (ஜேக்கப் பிரிவின்) தலைவர் டி.எம். ஜேக்கப், எர்ணாகுளம் மாவட்டம் பிரவம் சட்டப் பேரவைத் தொகுதியில் வென்றார். 5வது முறையாக இதே தொகுதியில் வென்ற இவர் காங்கிரஸ் அமைச்சரவையில் உணவுத்துறை அமைச்சரானார். ஆனால், கடந்த அக்டோபர் மாதம் அவர் மரணமடைந்தார்.
இதையடுத்து பிரவம் தொகுதிக்கு அடுத்த மாதம் இடைத் தேர்தல் நடக்கவுள்ளது.
140 உறுப்பினர்களைக் கொண்ட கேரள சட்டசபையில் ஆளும் ஐக்கிய ஜனநாயக முன்னணி 72 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. டி.எம். ஜேக்கப் மறைவுக்குப் பிறகு 71 ஆகக் குறைந்துவிட்டது.
இடைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியைத் தழுவினால் சட்டசபையில் இடதுசாரி எம்எல்ஏக்களின் எண்ணிக்கையும் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்களின் எண்ணிக்கையும் கிட்டத்தட்ட சமமாகிவிடும்.
மேலும் கடந்த தேர்தலில்தான் டி.எம். ஜேக்கப் வெறும் 157 வாக்கு வித்தியாசத்தில்தான் தன்னை எதிர்த்து போட்டியிட்ட இடதுசாரி வேட்பாளரை தோற்கடித்தார். இதனால் இந்தத் தொகுதியில் இந்தமுறை காங்கிரஸ் வெல்வது சந்தேகமே.
இதனால் தான் கேரள முதல்வர் உம்மன் சாண்டி இந்த அணை விவகாரத்தைக் கையில் எடுத்துக் கொண்டுள்ளார்.
அணையை வைத்து காங்கிரஸ் ஓட்டு வாங்குவதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியால் பார்த்துக் கொண்டிருக்க முடியுமா?. அதனால், தான் சமீபத்தில் எர்ணாகுளத்துக்கு வந்த முன்னாள் முதல்வரும் மூத்த மார்க்சிஸ்ட் தலைவருமான அச்சுதானந்தன், புதிய அணையைக் கட்டுவதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனில்ட் கட்சி விரைவிலேயே பொது மக்களிடம் நிதி திரட்டும் பணியைத் தொடங்கும். இங்கே அணையைக் கட்டுவதற்காக மத்திய அரசிடமோ, தமிழக அரசிடமோ நாம் ஏன் உதவி கேட்க வேண்டும்?. அணையைக் கட்ட மத்திய அரசோ அல்லது உச்ச நீதிமன்றமோ அனுமதி மட்டும் தந்தால் போதும், நிதியை நாங்களே மக்களிடம் திரட்டிக் கொள்வோம் என்று பேசிவிட்டுச் சென்றார்.
1979ம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் முல்லைப் பெரியாறு அணையில் விரிசல் ஏற்பட்டுவிட்டதாகக் கூறத் தொடங்கியது கேரள அரசு. அதை நம்பிய தமிழக அரசும் நீரின் அளவை 136 அடிக்குக் குறைத்தது. அதையடுத்து, அணையின் நீரின் அளவை 142 அடியாக உயர்த்த 2006ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை கேரளா இன்று வரை நிறைவேற்றவில்லை.
இந்த அழகில் தான், நாங்கள் புதிய அணையைக் கட்டினாலும் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தருவோம் என்று உறுதியளிக்கிறார் உம்மன் சாண்டி. இவரது உறுதிமொழியை எப்படி நம்புவது?
இதற்கிடையே இந்த அணையின் ஸ்திரத்தன்மை குறித்து ஆய்வு செய்ய உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஏ.எஸ். ஆனந்த் தலைமையில் அமைக்கப்பட்ட குழு அடுத்த மாதம் உச்ச நீதிமன்றத்தில் தனது முதல் கட்ட அறிக்கையை தாக்கல் செய்யவுள்ளது.
அதில், அணை பலமாகவே உள்ளது என்று கூறப்பட்டிருந்தால், இடைத் தேர்தல் நேரத்தில் அது தங்களுக்கு பெரும் பாதகத்தை ஏற்படுத்தும் என்றும் கேரள காங்கிரஸ் அரசு கருதுகிறது. இதனால் இப்போதே இந்த விவகாரத்தை கையில் எடுத்துக் கொண்டுள்ளது.
- GuestGuest
முல்லைப் பெரியாறு அணை உடையப்போகிறது என்றால் தேக்கடி படகு சவாரியை ஏன் நிறுத்தவில்லை?
சென்னை: முல்லைப் பெரியாறு அணை எந்நேரமும் உடையும் என்று கூறி தொடர் போராட்டங்கள் நடத்தும் கேரளா தேக்கடியில் ஏன் படகு சவாரியை நிறுத்தவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது.
முல்லைப் பெரியாறு அணை நீர் தேங்கியிருக்கும் தேக்கடி ஏரியில் கேரள வனத்துறை மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் 12 படகுகள் இயக்கப்படுகின்றன. இந்த படகு சவாரி மிகவும் பிரபலம். இந்தியா முழுவதிலும் இருந்து கேரளாவுக்கு சுற்றுலா செல்பவர்கள் தவறாது தேக்கடி ஏரியில் படகு சவாரி செய்வார்கள். தினமும் 5 முறை படகுகள் இயக்கப்படுகின்றன. தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்கின்றனர். இதன் மூலம் நாள் ஒன்றுக்கு ரூ.1 லட்சம் வரை வருமானம் வருகிறது.
சில வருடங்களுக்கு முன்பு பணம் பார்ப்பதற்காக அதிக அளவில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்று பலரைக் கொன்றது கேரள சுற்றுலாத்துறை. இந்த சம்பவத்திற்குப் பிறகும் கூட அது படகு சவாரியை தொடர்ந்து கொண்டுதான் உள்ளது. படகுகளும் நிரம்பி வழிந்தபடிதான் போகின்றன.
இந்த நிலையில், முல்லைப் பெரியாறு அணை உடையும் அபாயத்தில் இருப்பதாகவும், அது உடைந்தால் பல லட்சம் மக்கள் பலியாவார்கள் என்று கூறி கேரளாவில் தொடர் போராட்டங்கள் ந்டந்து வருகின்றன. அணை எப்பொழுது வேண்டுமானாலும் உடையும் என்று கூறி அணையை ஒட்டியுள்ள வல்லக்கடவு, வண்டிபெரியாறில் இருந்து 450 குடும்பங்கள் வெளியேற்றப்பட்டுள்ளன.
ஆனால் இந்நிலையும் தேக்கடி படகு சவாரி மட்டும் நிறுத்தப்படவில்லை. அணை உடைந்தால் படகு சவாரி செய்பவர்களுக்கு மட்டும் எந்தவித பாதிப்பும் வராதா என்ன? அணை உண்மையிலேயே உடையும் அபாயத்தில் இருந்தால் படகு சவாரியை ஏன் நிறுத்தவில்லை என்ற கேள்வி தமிழக மக்கள் மனதில் எழுந்துள்ளது.
தமிழக மக்கள் மற்றும் நாட்டின் இதர பகுதி மக்களிடமிருந்து வரும் பணம் மட்டும் சுளையாக வேண்டும் என்ற சுயநலம்தான் இந்த படகு சவாரி தொடருவதற்கு முக்கியக் காரணம் என்று கூறப்படுகிறது.
சென்னை: முல்லைப் பெரியாறு அணை எந்நேரமும் உடையும் என்று கூறி தொடர் போராட்டங்கள் நடத்தும் கேரளா தேக்கடியில் ஏன் படகு சவாரியை நிறுத்தவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது.
முல்லைப் பெரியாறு அணை நீர் தேங்கியிருக்கும் தேக்கடி ஏரியில் கேரள வனத்துறை மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் 12 படகுகள் இயக்கப்படுகின்றன. இந்த படகு சவாரி மிகவும் பிரபலம். இந்தியா முழுவதிலும் இருந்து கேரளாவுக்கு சுற்றுலா செல்பவர்கள் தவறாது தேக்கடி ஏரியில் படகு சவாரி செய்வார்கள். தினமும் 5 முறை படகுகள் இயக்கப்படுகின்றன. தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்கின்றனர். இதன் மூலம் நாள் ஒன்றுக்கு ரூ.1 லட்சம் வரை வருமானம் வருகிறது.
சில வருடங்களுக்கு முன்பு பணம் பார்ப்பதற்காக அதிக அளவில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்று பலரைக் கொன்றது கேரள சுற்றுலாத்துறை. இந்த சம்பவத்திற்குப் பிறகும் கூட அது படகு சவாரியை தொடர்ந்து கொண்டுதான் உள்ளது. படகுகளும் நிரம்பி வழிந்தபடிதான் போகின்றன.
இந்த நிலையில், முல்லைப் பெரியாறு அணை உடையும் அபாயத்தில் இருப்பதாகவும், அது உடைந்தால் பல லட்சம் மக்கள் பலியாவார்கள் என்று கூறி கேரளாவில் தொடர் போராட்டங்கள் ந்டந்து வருகின்றன. அணை எப்பொழுது வேண்டுமானாலும் உடையும் என்று கூறி அணையை ஒட்டியுள்ள வல்லக்கடவு, வண்டிபெரியாறில் இருந்து 450 குடும்பங்கள் வெளியேற்றப்பட்டுள்ளன.
ஆனால் இந்நிலையும் தேக்கடி படகு சவாரி மட்டும் நிறுத்தப்படவில்லை. அணை உடைந்தால் படகு சவாரி செய்பவர்களுக்கு மட்டும் எந்தவித பாதிப்பும் வராதா என்ன? அணை உண்மையிலேயே உடையும் அபாயத்தில் இருந்தால் படகு சவாரியை ஏன் நிறுத்தவில்லை என்ற கேள்வி தமிழக மக்கள் மனதில் எழுந்துள்ளது.
தமிழக மக்கள் மற்றும் நாட்டின் இதர பகுதி மக்களிடமிருந்து வரும் பணம் மட்டும் சுளையாக வேண்டும் என்ற சுயநலம்தான் இந்த படகு சவாரி தொடருவதற்கு முக்கியக் காரணம் என்று கூறப்படுகிறது.
- GuestGuest
கேரளாவின் நாச காரியத்தை தடுக்க அறப் போர் களம் காண வேண்டியது அவசியம்- வைகோ
சென்னை: குமரி மாவட்டத்தில் பெருந்தலைவர் காமராஜர் காலத்தில் அமைக்கப்பட்ட நெய்யாறு இடதுகரை சாணலில் நமக்கு உரிமையுள்ள தண்ணீரைத் தரமறுக்கும் கேரளம், நெல்லை மாவட்டத்தில் செண்பகவல்லி தடுப்பணை உடைப்பை சரி செய்ய அனுமதி வழங்க மறுக்கும் கேரளம், கொங்குச் சீமையில் பாம்பாற்றுக்கு குறுக்கே அணை கட்டத் துடிக்கும் கேரளம், நல்லாறு இடமலை ஆறு பிரச்சினையில் வஞ்சகம் செய்யும் கேரளம், முல்லைப் பெரியாறு அணையை உடைக்கும் நாசகாரியத்தில் ஈடுபட்டு விடாமல் தடுக்க நாம் அறப்போர் களம் காண வேண்டியது மிகவும் அவசியம் ஆகும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
இதுகுறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை:
முல்லைப் பெரியாறு அணையை எப்படியும் உடைத்தே தீருவோம் என்று கேரள அரசும், அங்குள்ள அரசியல் கட்சிகளும் கங்கணம் கட்டிக்கொண்டு அந்த அக்கிரமத்தை செயல்படுத்த மிகத் தீவிரமான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள நிலைமை நமக்கு மிகுந்த கவலையை தருகிறது.
999 ஆண்டுகளுக்கு நமக்கு உரிமையுள்ள முல்லைப் பெரியாறு அணை இந்தியாவில் உள்ள அணைகளிலேயே மிகவும் வலுவான அணையாகும். 7 ரிக்டர் அளவுக்கு பூகம்பமே வந்தாலும் நமது அணை சேதம் அடையாது.
இந்த பகுதியில் 3.5 ரிக்டருக்கு மேல் பூமி அதிர்ச்சிக்கு வாய்ப்பில்லை. 5 ரிக்டர் ஏற்பட்டால் குமுளிப் பகுதியில் உள்ள அனைத்து கட்டிடங்களுக்கும், 550 அடி உயரத்திற்கு கேரளம் கட்டியிருக்கின்ற இடுக்கி அணைக்கும் சேதம் ஏற்படலாம். நமது அணைக்கு எந்த சேதமும் வராது.
குமரி மாவட்டத்தில் பெருந்தலைவர் காமராஜர் காலத்தில் அமைக்கப்பட்ட நெய்யாறு இடதுகரை சாணலில் நமக்கு உரிமையுள்ள தண்ணீரைத் தரமறுக்கும் கேரளம், நெல்லை மாவட்டத்தில் செண்பகவல்லி தடுப்பணை உடைப்பை சரி செய்ய அனுமதி வழங்க மறுக்கும் கேரளம், கொங்குச் சீமையில் பாம்பாற்றுக்கு குறுக்கே அணை கட்டத் துடிக்கும் கேரளம், நல்லாறு இடமலை ஆறு பிரச்சினையில் வஞ்சகம் செய்யும் கேரளம், முல்லைப் பெரியாறு அணையை உடைக்கும் நாசகாரியத்தில் ஈடுபட்டு விடாமல் தடுக்க நாம் அறப்போர் களம் காண வேண்டியது மிகவும் அவசியம் ஆகும்.
அணையை உடைத்தால் நிரந்தரப் பொருளாதார முற்றுகைக்கு கேரளம் ஆளாகும் என எச்சரிப்பதற்காகத்தான் தமிழ்நாட்டில் இருந்து கேரளத்திற்கு செல்லும் அனைத்து சாலைகளிலும் போக்குவரத்து வாகனங்களை தடுத்து நிறுத்தும் மறியல் அறப்போரை கடந்த 2010 மே 28-ம் நாள் நடத்தினோம்.
அதேபோல வருகிற 21-ம் தேதி நடத்திடத் திட்டமிடப்பட்டுள்ளது. அன்றைய போராட்டத்தில் பங்கேற்ற அனைத்து அமைப்புகளும் இந்த அறப்போரிலும் பங்கேற்க உள்ளன. தென்தமிழ்நாட்டின் வாழ்வாதார உரிமையைக்காக்க இந்த போராட்டத்திற்கு தமிழகத்தின் விவசாயப் பெருமக்களும் அனைத்து தரப்பினரும் ஆதரவு தர அன்போடு வேண்டுகிறேன் என்று கூறியுள்ளார் வைகோ.
சென்னை: குமரி மாவட்டத்தில் பெருந்தலைவர் காமராஜர் காலத்தில் அமைக்கப்பட்ட நெய்யாறு இடதுகரை சாணலில் நமக்கு உரிமையுள்ள தண்ணீரைத் தரமறுக்கும் கேரளம், நெல்லை மாவட்டத்தில் செண்பகவல்லி தடுப்பணை உடைப்பை சரி செய்ய அனுமதி வழங்க மறுக்கும் கேரளம், கொங்குச் சீமையில் பாம்பாற்றுக்கு குறுக்கே அணை கட்டத் துடிக்கும் கேரளம், நல்லாறு இடமலை ஆறு பிரச்சினையில் வஞ்சகம் செய்யும் கேரளம், முல்லைப் பெரியாறு அணையை உடைக்கும் நாசகாரியத்தில் ஈடுபட்டு விடாமல் தடுக்க நாம் அறப்போர் களம் காண வேண்டியது மிகவும் அவசியம் ஆகும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
இதுகுறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை:
முல்லைப் பெரியாறு அணையை எப்படியும் உடைத்தே தீருவோம் என்று கேரள அரசும், அங்குள்ள அரசியல் கட்சிகளும் கங்கணம் கட்டிக்கொண்டு அந்த அக்கிரமத்தை செயல்படுத்த மிகத் தீவிரமான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள நிலைமை நமக்கு மிகுந்த கவலையை தருகிறது.
999 ஆண்டுகளுக்கு நமக்கு உரிமையுள்ள முல்லைப் பெரியாறு அணை இந்தியாவில் உள்ள அணைகளிலேயே மிகவும் வலுவான அணையாகும். 7 ரிக்டர் அளவுக்கு பூகம்பமே வந்தாலும் நமது அணை சேதம் அடையாது.
இந்த பகுதியில் 3.5 ரிக்டருக்கு மேல் பூமி அதிர்ச்சிக்கு வாய்ப்பில்லை. 5 ரிக்டர் ஏற்பட்டால் குமுளிப் பகுதியில் உள்ள அனைத்து கட்டிடங்களுக்கும், 550 அடி உயரத்திற்கு கேரளம் கட்டியிருக்கின்ற இடுக்கி அணைக்கும் சேதம் ஏற்படலாம். நமது அணைக்கு எந்த சேதமும் வராது.
குமரி மாவட்டத்தில் பெருந்தலைவர் காமராஜர் காலத்தில் அமைக்கப்பட்ட நெய்யாறு இடதுகரை சாணலில் நமக்கு உரிமையுள்ள தண்ணீரைத் தரமறுக்கும் கேரளம், நெல்லை மாவட்டத்தில் செண்பகவல்லி தடுப்பணை உடைப்பை சரி செய்ய அனுமதி வழங்க மறுக்கும் கேரளம், கொங்குச் சீமையில் பாம்பாற்றுக்கு குறுக்கே அணை கட்டத் துடிக்கும் கேரளம், நல்லாறு இடமலை ஆறு பிரச்சினையில் வஞ்சகம் செய்யும் கேரளம், முல்லைப் பெரியாறு அணையை உடைக்கும் நாசகாரியத்தில் ஈடுபட்டு விடாமல் தடுக்க நாம் அறப்போர் களம் காண வேண்டியது மிகவும் அவசியம் ஆகும்.
அணையை உடைத்தால் நிரந்தரப் பொருளாதார முற்றுகைக்கு கேரளம் ஆளாகும் என எச்சரிப்பதற்காகத்தான் தமிழ்நாட்டில் இருந்து கேரளத்திற்கு செல்லும் அனைத்து சாலைகளிலும் போக்குவரத்து வாகனங்களை தடுத்து நிறுத்தும் மறியல் அறப்போரை கடந்த 2010 மே 28-ம் நாள் நடத்தினோம்.
அதேபோல வருகிற 21-ம் தேதி நடத்திடத் திட்டமிடப்பட்டுள்ளது. அன்றைய போராட்டத்தில் பங்கேற்ற அனைத்து அமைப்புகளும் இந்த அறப்போரிலும் பங்கேற்க உள்ளன. தென்தமிழ்நாட்டின் வாழ்வாதார உரிமையைக்காக்க இந்த போராட்டத்திற்கு தமிழகத்தின் விவசாயப் பெருமக்களும் அனைத்து தரப்பினரும் ஆதரவு தர அன்போடு வேண்டுகிறேன் என்று கூறியுள்ளார் வைகோ.
- Sponsored content
Page 1 of 17 • 1, 2, 3 ... 9 ... 17
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 17
|
|