புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
'...அப்படியென்றால் ஜெ ஒன்றும் தெரியாத நேர்மையாளரா?' I_vote_lcap'...அப்படியென்றால் ஜெ ஒன்றும் தெரியாத நேர்மையாளரா?' I_voting_bar'...அப்படியென்றால் ஜெ ஒன்றும் தெரியாத நேர்மையாளரா?' I_vote_rcap 
5 Posts - 45%
ayyasamy ram
'...அப்படியென்றால் ஜெ ஒன்றும் தெரியாத நேர்மையாளரா?' I_vote_lcap'...அப்படியென்றால் ஜெ ஒன்றும் தெரியாத நேர்மையாளரா?' I_voting_bar'...அப்படியென்றால் ஜெ ஒன்றும் தெரியாத நேர்மையாளரா?' I_vote_rcap 
3 Posts - 27%
mohamed nizamudeen
'...அப்படியென்றால் ஜெ ஒன்றும் தெரியாத நேர்மையாளரா?' I_vote_lcap'...அப்படியென்றால் ஜெ ஒன்றும் தெரியாத நேர்மையாளரா?' I_voting_bar'...அப்படியென்றால் ஜெ ஒன்றும் தெரியாத நேர்மையாளரா?' I_vote_rcap 
2 Posts - 18%
VENKUSADAS
'...அப்படியென்றால் ஜெ ஒன்றும் தெரியாத நேர்மையாளரா?' I_vote_lcap'...அப்படியென்றால் ஜெ ஒன்றும் தெரியாத நேர்மையாளரா?' I_voting_bar'...அப்படியென்றால் ஜெ ஒன்றும் தெரியாத நேர்மையாளரா?' I_vote_rcap 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
'...அப்படியென்றால் ஜெ ஒன்றும் தெரியாத நேர்மையாளரா?' I_vote_lcap'...அப்படியென்றால் ஜெ ஒன்றும் தெரியாத நேர்மையாளரா?' I_voting_bar'...அப்படியென்றால் ஜெ ஒன்றும் தெரியாத நேர்மையாளரா?' I_vote_rcap 
5 Posts - 45%
ayyasamy ram
'...அப்படியென்றால் ஜெ ஒன்றும் தெரியாத நேர்மையாளரா?' I_vote_lcap'...அப்படியென்றால் ஜெ ஒன்றும் தெரியாத நேர்மையாளரா?' I_voting_bar'...அப்படியென்றால் ஜெ ஒன்றும் தெரியாத நேர்மையாளரா?' I_vote_rcap 
3 Posts - 27%
mohamed nizamudeen
'...அப்படியென்றால் ஜெ ஒன்றும் தெரியாத நேர்மையாளரா?' I_vote_lcap'...அப்படியென்றால் ஜெ ஒன்றும் தெரியாத நேர்மையாளரா?' I_voting_bar'...அப்படியென்றால் ஜெ ஒன்றும் தெரியாத நேர்மையாளரா?' I_vote_rcap 
2 Posts - 18%
VENKUSADAS
'...அப்படியென்றால் ஜெ ஒன்றும் தெரியாத நேர்மையாளரா?' I_vote_lcap'...அப்படியென்றால் ஜெ ஒன்றும் தெரியாத நேர்மையாளரா?' I_voting_bar'...அப்படியென்றால் ஜெ ஒன்றும் தெரியாத நேர்மையாளரா?' I_vote_rcap 
1 Post - 9%

நிகழ்நிலை நிர்வாகிகள்

'...அப்படியென்றால் ஜெ ஒன்றும் தெரியாத நேர்மையாளரா?'


   
   
pgasok
pgasok
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 327
இணைந்தது : 02/10/2009

Postpgasok Wed Dec 21, 2011 11:34 am

-எஸ்எஸ்

எந்த காரியத்துக்கும் ஒரு காரணம் இருக்கும்... எந்த வினைக்கும் ஒரு எதிர்வினையுமிருக்கும்.

அப்படி கிளம்பியிருக்கும் எதிர்வினை...

'சசிகலா மோசமானவர்... மோசடியானவர் என்பதாகவே இருக்கட்டும்.... 25 ஆண்டுகள் அந்த மோசடிக்காரருடன் வாழ்ந்த ஜெயலலிதா அத்தனை நேர்மையாளரா... சசிகலாவின் மோசடிகள் அனைத்துக்கும் ஜெயலலிதாவும் பொறுப்பாளர்தானே?

என்னமோ ஜெயலலிதா ஒன்றுமே தெரியாத அப்பாவி போலவும், சசிகலா மற்றும் குடும்பத்தினரால்தான் அவர் முழுமையாக மோசடி செய்யப்பட்டதாகவும் கூறுவது எத்தனை அபத்தம். அப்படிப் பார்த்தால் ஜெயலலிதாவுக்கு உண்மையிலேயே ஒன்றுமே தெரியாது... ஆட்சிக்கே அவர் லாயக்கில்லை என்றல்லவா ஆகிறது?'

-என்பதுதான் சசிகலாவுக்கு ஆதரவாகக் கிளம்பியிருக்கும் வாதம்!

இன்னொரு பக்கம் இப்போதைய ஜெயலலிதா நடவடிக்கையை வைத்து ஜெயலலிதாவை புனிதராக்கும் முயற்சியில் சசிகலா எதிர்ப்பு ஊடகங்கள் மும்முரமாக இருப்பதாகவும் ஒரு தரப்பு அரசியல் விமர்சகர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

இவர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு ஜெயலலிதாவால் மட்டுமல்ல, அவரது மந்திராலோசனையில் பிரதானமாக இடம் பெற்றுள்ள அந்த மூத்த பத்திரிகையாளராலும் கூட பதில் சொல்ல முடியாது!

சசிகலா தவறானவர் என்பது 25 வருடங்கள் கழித்துதானா ஜெயலலிதாவுக்கு தெரிந்தது?

அப்படியெனில் 1991-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்ததிலிருந்து இருவரும் இணைந்தே செய்த தவறுகளுக்கு யார் பொறுப்பேற்பது? சொத்துக் குவிப்பு வழக்கு என்பது சசிகலா குடும்பத்தினர் மீது மட்டுமில்லையே... அதில் பிரதான குற்றவாளியே ஜெயலலிதாதானே!

சசிகலாவுடன் இணைந்து ஜெயலலிதா வாங்கிக் குவித்த சொத்துக்கள் எந்த கணக்கில் சேரும்? சிறுதாவூர், கொடநாடு, பையனூர்... இன்னும் பத்திரிகைகளில் வெளிவராத எஸ்டேட்டுகள் என அத்தனை சொத்துக்களும் சசிகலா பெயரில் அல்லது அவரது உறவினர்கள் பெயர்களில் பதிவு செய்யப்பட்டது எதனால்? ஜெயலலிதாவின் நம்பிக்கையான பினாமியாக அவர் இருந்ததால்தானே? அப்படிப் பார்த்தால் பினாமியான சசியை விட, அவரை பினாமியாக்கிய ஜெயலலிதாதானே பெரிய குற்றவாளி?

கொடநாடு எஸ்டேட் யாருடையது என்று கேட்டால், அது சசிகலாவுக்குச் சொந்தமானது என்கிறார் ஜெயலலிதா. ஒருவேலையும் செய்யாத, முன்னாள் வீடியோ கடை உரிமையாளர் ஒருவருக்கு இத்தனை பெரிய எஸ்டேட், அரண்மனைக்கு நிகரான எஸ்டேட் பங்களா எப்படி சொந்தமானது? அந்த பங்களாவை தமிழக அரசின் தற்காலிக தலைமைச் செயலகமாகவே மாற்றிவைத்துள்ளது எப்படி?

ஜெ-சசி இருவரும் இணைந்தே அனைத்து காரியங்களையும் செய்தனர். அதற்காகவே சசிகலாவை கணவரிடமிருந்து பிரித்து தன்னுடனே வைத்துக் கொண்டார் ஜெயலலிதா. சசிகலாவின் 'ஊரறிந்த' இந்த 'தோன்றாத் துணைக்காக' ஜெயலலிதாவே அவருக்குத் தந்த சலுகைகள்தான், அதிமுக செயற்குழு உறுப்பினர் பதவி தொடங்கி, யாருடன் கூட்டணி வைக்கலாம், யார் யாரை கட்சிக்குள் இழுக்கலாம், எந்தக் கட்சியை எப்படி உடைக்கலாம் என்பதில் முதன்மை ஆலோசகர் பதவி வரை! இத்தனையும் செய்ய தேவைப்பட்ட சசி, இப்போது மட்டும் சதியாளரா?

'ஜெயலலிதா மீண்டும் முதல்வராக அனைத்து வித உபாயங்களையும் கையாண்டது சசிகலாவின் மன்னார்குடி கோஷ்டிதான். விஜயகாந்துடன் பேரம் பேசியதிலிருந்து அடிப்படை வேலைகளைச் செய்ததும் இவர்கள்தான். அந்த உரிமையை அவர்கள் ஆட்சியில் நிலைநாட்டப் பார்ப்பதைப் பொறுக்காத குறிப்பிட்ட மீடியா கும்பலும், 'அவாள்' கோஷ்டியும்தான் இப்போதைய நிலைக்குக் காரணம்' என்றும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். இதில் நிறையவே உண்மைகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

"ஜெயலலிதாவின் தவறுகளுக்கெல்லாம் மூல காரணம் சசிகலா குடும்பம்தான் என்றால், சமச்சீர் கல்வி குளறுபடிகள், தலைமைச் செயலக மாற்றம், அண்ணா நூலக இடமாற்றம், பஸ் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, கவனிப்பற்ற தமிழக சாலைகள், ஆட்சிக்கு வந்த ஆறே மாதங்களில் திறமையற்ற நிர்வாகி என பெயரெடுத்தது போன்றவற்றுக்கும் சசிகலாதான் காரணம் என்று கூற முடியுமா?

ஜெயலலிதா என்ற மோசமான நிர்வாகியை, போற்றிப் பாதுகாக்க அல்லது மிஸ் க்ளீன் இமேஜ் தர சில ஊடகங்கள் முனைகின்றன... அது இன்னும் சில தினங்களில் பல்லிளிக்க ஆரம்பித்துவிடும்," என்கிறார்கள் சசிகலா ஆதரவு தரப்பினர்.

ஆனால் இதெல்லாம் தற்காலிகமே என்கின்றனர் நடுநிலைப் பார்வையாளர்கள்.

"ஜெயலலிதா - சசிகலா இருவராலுமே, இப்போது மட்டுமல்ல, இனி எப்போதுமே பிரிய முடியாது. பாகப் பிரிவினையே செய்ய முடியாத அளவுக்கு அனைத்திலும் பின்னிப் பிணைந்தே இருக்கிறார்கள்.

ஜெயலலிதா தன்னை விரட்டிவிட்டாரே என்ற கோபத்தில் அவருக்கு எதிராக எதையும் செய்யக்கூடியவரல்ல சசிகலா. இதற்கு முன்பு ஜெயலலிதா அவரை விரட்டியபோதும் விசுவாசமாகவே நடந்துகொண்டார். சசியின் குடும்பத்தினரும் அப்படியே. அதேபோல வெளிப்படையாக அவர்களை விலக்கி வைத்தாலும், மீண்டும் எந்த நேரத்திலும் அவசியம் அல்லது நெருக்கடி கருதி ஜெயலலிதா அவர்களைச் சேர்த்துக் கொள்வது சாத்தியமே.

அவர்கள் இருவரின் நட்பும் பிரிவும் அவர்களுக்கு எந்த வகையில் நன்மை பயக்கிறதோ தெரியாது... ஆனால் தமிழக மக்களுக்கு நூறு சதவீதம் தீமையானதே. எனவே சசிகலா நீக்கத்துக்காக நடத்தப்படும் கொண்டாட்டமும் சரி, புலம்பலும் சரி அர்த்தமற்றவை!"

-இது பிரபல தேசிய ஆங்கிலப் பத்திரிகையின் ஒரு மூத்த பத்திரிகையாளர் நம்மிடம் சொன்ன கருத்து. பெயரை ஏன் வெளியிடவில்லை என்று சிலர் கேட்கக் கூடும்... பாவம், பெயர் வெளியிட்டால் ஆட்டோ வரும் அல்லது ஹை ஹீல்ஸ் அர்ச்சனை விழும் என்ற பயம் இன்னும் தெளியாத அந்தக்கால செய்தியாளர் அவர்!

நன்றி தட்ஷ்டமில்

பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Wed Dec 21, 2011 11:36 am

முடியலை...

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 21, 2011 11:42 am

///என்னமோ ஜெயலலிதா ஒன்றுமே தெரியாத அப்பாவி போலவும், சசிகலா மற்றும்
குடும்பத்தினரால்தான் அவர் முழுமையாக மோசடி செய்யப்பட்டதாகவும் கூறுவது
எத்தனை அபத்தம். அப்படிப் பார்த்தால் ஜெயலலிதாவுக்கு உண்மையிலேயே ஒன்றுமே
தெரியாது... ஆட்சிக்கே அவர் லாயக்கில்லை என்றல்லவா ஆகிறது?'////

அட, ஆமாங்கண்ணா! இது சரியாத்தானே இருக்கு! ஜெ மேடம், இதுக்கு பதில் சொல்லுங்க!



'...அப்படியென்றால் ஜெ ஒன்றும் தெரியாத நேர்மையாளரா?' Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Wed Dec 21, 2011 11:44 am

சிவா wrote:///என்னமோ ஜெயலலிதா ஒன்றுமே தெரியாத அப்பாவி போலவும், சசிகலா மற்றும்
குடும்பத்தினரால்தான் அவர் முழுமையாக மோசடி செய்யப்பட்டதாகவும் கூறுவது
எத்தனை அபத்தம். அப்படிப் பார்த்தால் ஜெயலலிதாவுக்கு உண்மையிலேயே ஒன்றுமே
தெரியாது... ஆட்சிக்கே அவர் லாயக்கில்லை என்றல்லவா ஆகிறது?'////

அட, ஆமாங்கண்ணா! இது சரியாத்தானே இருக்கு! ஜெ மேடம், இதுக்கு பதில் சொல்லுங்க!

எம்சியாரிடம் போய் கேள் என்பரோ??

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 21, 2011 11:46 am

விஜயகுமார் wrote:

எம்ஜியாரிடம் போய் கேள் என்பரோ??

MGR-க்கும் சசிகலாவுக்கும் என்ன தொடர்பு? '...அப்படியென்றால் ஜெ ஒன்றும் தெரியாத நேர்மையாளரா?' 440806



'...அப்படியென்றால் ஜெ ஒன்றும் தெரியாத நேர்மையாளரா?' Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Dec 21, 2011 11:50 am

pgasok wrote:ஜெயலலிதா அத்தனை நேர்மையாளரா...
அஃப்கோர்ஸ் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை



பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Wed Dec 21, 2011 11:51 am

சிவா wrote:
விஜயகுமார் wrote:

எம்ஜியாரிடம் போய் கேள் என்பரோ??

MGR-க்கும் சசிகலாவுக்கும் என்ன தொடர்பு? '...அப்படியென்றால் ஜெ ஒன்றும் தெரியாத நேர்மையாளரா?' 440806

கிடையாதா?

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Dec 21, 2011 12:03 pm

இது நல்லா இருக்கே , உடனே இப்படி பேச ஆரம்பிச்சாங்கையா ஒரு குருப்.

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Dec 21, 2011 12:06 pm

தமிழ் மக்களின் கேரளா எல்லைகளின் கோபம் அணுமின் கூடத்தின் போராட்டம் எல்லாம் ஜெ ஒரு செய்தியால் மக்கள் பிரிக்க பட்டார்கள் சோகம்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





'...அப்படியென்றால் ஜெ ஒன்றும் தெரியாத நேர்மையாளரா?' Ila
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Wed Dec 21, 2011 1:38 pm

அவரது மந்திராலோசனையில் பிரதானமாக இடம் பெற்றுள்ள அந்த மூத்த பத்திரிகையாளராலும் கூட பதில் சொல்ல முடியாது!

கூடிய விரைவில் சோ ராமசாமிக்கு சுளுக்கு இருக்கு..!



'...அப்படியென்றால் ஜெ ஒன்றும் தெரியாத நேர்மையாளரா?' 0018-2'...அப்படியென்றால் ஜெ ஒன்றும் தெரியாத நேர்மையாளரா?' 0001-3'...அப்படியென்றால் ஜெ ஒன்றும் தெரியாத நேர்மையாளரா?' 0010-3'...அப்படியென்றால் ஜெ ஒன்றும் தெரியாத நேர்மையாளரா?' 0001-3
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக