புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சீனா -- மாயவலையும் மந்திர வேலைகளும் I_vote_lcapசீனா -- மாயவலையும் மந்திர வேலைகளும் I_voting_barசீனா -- மாயவலையும் மந்திர வேலைகளும் I_vote_rcap 
81 Posts - 67%
heezulia
சீனா -- மாயவலையும் மந்திர வேலைகளும் I_vote_lcapசீனா -- மாயவலையும் மந்திர வேலைகளும் I_voting_barசீனா -- மாயவலையும் மந்திர வேலைகளும் I_vote_rcap 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
சீனா -- மாயவலையும் மந்திர வேலைகளும் I_vote_lcapசீனா -- மாயவலையும் மந்திர வேலைகளும் I_voting_barசீனா -- மாயவலையும் மந்திர வேலைகளும் I_vote_rcap 
9 Posts - 7%
mohamed nizamudeen
சீனா -- மாயவலையும் மந்திர வேலைகளும் I_vote_lcapசீனா -- மாயவலையும் மந்திர வேலைகளும் I_voting_barசீனா -- மாயவலையும் மந்திர வேலைகளும் I_vote_rcap 
5 Posts - 4%
sureshyeskay
சீனா -- மாயவலையும் மந்திர வேலைகளும் I_vote_lcapசீனா -- மாயவலையும் மந்திர வேலைகளும் I_voting_barசீனா -- மாயவலையும் மந்திர வேலைகளும் I_vote_rcap 
1 Post - 1%
viyasan
சீனா -- மாயவலையும் மந்திர வேலைகளும் I_vote_lcapசீனா -- மாயவலையும் மந்திர வேலைகளும் I_voting_barசீனா -- மாயவலையும் மந்திர வேலைகளும் I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சீனா -- மாயவலையும் மந்திர வேலைகளும் I_vote_lcapசீனா -- மாயவலையும் மந்திர வேலைகளும் I_voting_barசீனா -- மாயவலையும் மந்திர வேலைகளும் I_vote_rcap 
273 Posts - 45%
heezulia
சீனா -- மாயவலையும் மந்திர வேலைகளும் I_vote_lcapசீனா -- மாயவலையும் மந்திர வேலைகளும் I_voting_barசீனா -- மாயவலையும் மந்திர வேலைகளும் I_vote_rcap 
221 Posts - 37%
mohamed nizamudeen
சீனா -- மாயவலையும் மந்திர வேலைகளும் I_vote_lcapசீனா -- மாயவலையும் மந்திர வேலைகளும் I_voting_barசீனா -- மாயவலையும் மந்திர வேலைகளும் I_vote_rcap 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
சீனா -- மாயவலையும் மந்திர வேலைகளும் I_vote_lcapசீனா -- மாயவலையும் மந்திர வேலைகளும் I_voting_barசீனா -- மாயவலையும் மந்திர வேலைகளும் I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
சீனா -- மாயவலையும் மந்திர வேலைகளும் I_vote_lcapசீனா -- மாயவலையும் மந்திர வேலைகளும் I_voting_barசீனா -- மாயவலையும் மந்திர வேலைகளும் I_vote_rcap 
18 Posts - 3%
prajai
சீனா -- மாயவலையும் மந்திர வேலைகளும் I_vote_lcapசீனா -- மாயவலையும் மந்திர வேலைகளும் I_voting_barசீனா -- மாயவலையும் மந்திர வேலைகளும் I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
சீனா -- மாயவலையும் மந்திர வேலைகளும் I_vote_lcapசீனா -- மாயவலையும் மந்திர வேலைகளும் I_voting_barசீனா -- மாயவலையும் மந்திர வேலைகளும் I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
சீனா -- மாயவலையும் மந்திர வேலைகளும் I_vote_lcapசீனா -- மாயவலையும் மந்திர வேலைகளும் I_voting_barசீனா -- மாயவலையும் மந்திர வேலைகளும் I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
சீனா -- மாயவலையும் மந்திர வேலைகளும் I_vote_lcapசீனா -- மாயவலையும் மந்திர வேலைகளும் I_voting_barசீனா -- மாயவலையும் மந்திர வேலைகளும் I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
சீனா -- மாயவலையும் மந்திர வேலைகளும் I_vote_lcapசீனா -- மாயவலையும் மந்திர வேலைகளும் I_voting_barசீனா -- மாயவலையும் மந்திர வேலைகளும் I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சீனா -- மாயவலையும் மந்திர வேலைகளும்


   
   
sharfultra
sharfultra
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 9
இணைந்தது : 20/12/2011

Postsharfultra Tue Dec 20, 2011 4:39 pm

1995 ஆம் ஆண்டு. பெய்ஜிங்கில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இரண்டு சீன விஞ்ஞானிகள் ஒரு ஆய்வுக்கட்டுரையை சமர்பித்தனர்.அதைத் தொடர்ந்து பல கட்டங்களாக இந்த ஆய்வுக்கட்டுரை சீனாவில் உள்ள பல துறைகளுக்குச் சென்றது. ஒவ்வொரு துறையைச் சார்ந்தவர்களும் அந்த கட்டுரையில் உள்ள சாத்தியக்கூற்றை ஆராய்ந்தனர்.

கடைசியாக "முடியும்" என்றும் நாம் செயலில் இறங்கலாம் என்று சீன அரசாங்கம் பச்சை கொடி காட்டியது. இன்று உலகின் கண்களுக்கு மண்ணைத்தூவி விட்டு, அந்தத் திட்டத்தின் வேலைதான் விரைவாக நடந்து கொண்டிருக்கிறது.

ஆமாம்.

சீனா தனது ஆதிக்கத்தில் உள்ள திபெத்தில் ஓடிவரும் சேங்போ என்றழைக்கப்படும் பிரம்மபுத்ரா நதியின் குறுக்கே அணை ஒன்றை கட்டிக் கொண்டிருக்கிறது. எந்த விளம்பரமும் இல்லாமல் வீண் விவாதங்கள் இல்லாமல் பணிகள் தொடர்ந்து கொண்டிருக்கிறது.


ஒவ்வொரு நாட்டின் வளர்ச்சிக்கும் சில துறைகள் முக்கிய பங்கு வகிக்கின்றது. நிதி, விவசாயத்துறை, தொழிற்துறை. ஆனால் இந்த மூன்றும் நிலையாக இருக்க உள்நாட்டில் சட்டம் ஒழுங்கு முக்கியமாக இருக்க வேண்டும். அதற்கு உள்துறை முக்கிய பங்காற்றுகின்றது.

இவற்றையெல்லாம் விட அதி முக்கியமானது வெளியுறவுத்துறை.

இந்தியாவின் நிதித்துறையை கையில் வைத்திருக்கும் பிராணாப் முகர்ஜியைப் பற்றி சொல்லவே தேவையில்லை. காலஞ்சென்ற பிரமோத் மகாஜன் எப்படி தன்னை நான் அம்பானிக்கு பிறக்காத மகன் என்று சொல்லியிருந்தாரோ அதனைப் போலவே இன்றைய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கும் நாட்டை விட நாட்டை ஆண்டு கொண்டிருக்கும் கார்ப்பரேட் கனவான்களே முக்கியமானவர்கள். நிதித்துறை குளறுபடிகளை கவனிப்பதை விட எப்படி பிரதமர் பதவியை கைப்பற்றுவது என்பதில் தான் அதிக கவனமாக இருக்கிறார். எங்கே மன்மோகன் சிங்கிற்கு அடுத்து ப.சிதம்பரம் வந்து விடுவாரோ என்று அவரால் முடிந்த அத்தனை தகடுகித்த வேலையை செய்து கொண்டிருந்த போதிலும் சோனியா ஆதரவில்லாத காரணத்தால் ஒவ்வொருமுறையும் தோற்றுக் கொண்டேயிருக்கிறார்.

கடந்த தேர்தலில் தமிழ்நாட்டில் உள்ள சிவகங்கை தொகுதியில் தோற்ற போதிலும் குளறுபடிகள் செய்து குறுக்குவழியில் சென்ற ப.சிதம்பரத்திற்கு உள்துறை அமைச்சர் பதவியென்பது வேப்பங்காய் போன்றது. அவர் எதிர்பார்த்திருந்தது நிதித்துறையே.

ஆனாலும் வேண்டா வெறுப்பாகவே காலம் தள்ளிக் கொண்டிருக்கிறார். காங்கிரஸின் முதல் ஐந்தாண்டு காலத்தில் ப.சிதம்பரம் நிதியமைச்சராக பதவியில் இருந்து ஆசியாவின் சிறந்த நிதியமைச்சர் என்ற பெரும்புகழை அடைந்தார். அத்துடன் உள்நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களை பஞ்சம் பிழைக்க வைத்ததில் முக்கிய பங்காற்றினார். இப்போது கூட பாகிஸ்தானிடம், மாவோஸிட்களிடம் கெஞ்சிக் கொண்டிருக்கிறார்.

அடுத்து தியாகச் செம்மல் சரத்பவார். இவர் பெயர் சொன்னாலே போதும். தரம் எளிதில் விளங்கும். அடுத்து 50 ஆண்டுகள் கழித்து கூட வரக்கூடிய விவசாயிகள் மறக்க முடியாத நபர்.

ஆனால் இவர்களுக்கு அப்பாற்பட்டு ஒரு திறமைசாலி தான் நம்முடைய வெளியுறவுத்துறை அமைச்சர் கர்நாடகாவைச் சேர்ந்த எஸ்.எம். கிருஷ்ணா. வெளியுறவுத்துறை என்றால் என்ன? என்று கேட்கக்கூடிய அதிபுத்திசாலி. அதிகாரிகள் எழுதிக் கொடுக்கும் அறிக்கையை கூட மாற்றி படித்து சிறிது கூட வெட்கப்படாமல் இந்தியாவின் அயலுறவுக் கொள்கையை அற்புதமாக கையாண்டு கொண்டிருக்கிறார்.

இதைவிட இந்தியாவிற்கு என்ன பெருமை வேண்டும். இவர்களை தேர்ந்தெடுத்த சோனியாவிற்கு தான் நாம் நன்றி சொல்ல வேண்டும்.

இந்த கிருஷ்ணா தான நாம் சீனாவைப் பார்த்து பயம் கொள்ளத் தேவையில்லை பாப்பா என்று பாடம் நடத்திக் கொண்டிருக்கிறார்.

ஆனால் சீனாவின் தொழிற் புரட்சி, உள்கட்டமைப்பு வளர்ச்சி கற்பனைக்கு எட்டாத வகையில் முன்னேறிக் கொண்டிருக்கிறது. இத்துடன் விவசாயத்துறையும் கூட.

உடனடி திட்டங்கள், அடுத்து வரும் திட்டங்கள், நீண்ட கால திட்டங்கள் என்று மூன்று விதமாக பிரித்து ஒவ்வொன்றையும் உடனடியாக போர்க்கால நடவடிக்கையாக சீன ஆட்சியாளர்கள். செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தியாவிற்கு எதிர்காலத்தில் வரக்கூடிய உணவுப் பஞ்சம் எப்படி சவாலைத் தரப்போகின்றதோ அதே சவால் சீனாவுக்கு உண்டு என்ற போதிலும் அதற்கான முயற்சியை 15 ஆண்டுகளுக்கு முன்னே தொடங்கி விட்டனர் என்பது தான் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று.

ஆப்ரிக்க நாடுகளில் நிலங்களை குத்தகை அடிப்படையில் வாங்கி அதில் பயிர் செய்து தங்கள் நாட்டுக்கு கொண்டு வந்து கொண்டிருக்கிறார்கள்.

சீனாவின் செயல்பாடுகள் அத்தனையும் நம் அமைச்சர்களுக்கு கண்களுக்கு தெரிவதில்லை. காரணம் இவர்களுக்கு உண்மையான வேலை பல இருக்கிறது. இது போன்ற விசயங்களில் கவனம் செலுத்த நேரம் இருப்பதில்லை.

சீனா பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே அணை கட்டுவதன் முக்கிய நோக்கம் மின்சாரத்திற்கு என்றபோதிலும் இந்த திட்டத்தின் மூலம் ஆற்றின் நீரை சீனாவின் வறண்ட பகுதிகளுக்கு திசை திருப்புவதே மற்றுமொரு நோக்கமாகும். ஆனால் இன்று வரைக்கும் இந்த செய்தியை சீனா உறுதிப்படுத்தவில்லை. ஊடகங்களில் இது குறித்து வரும் செய்திகள் அத்தனையும் அரசல்புரசல் தான். காரணம் சீன ஆட்சி என்பது இரும்புக்கோட்டையில் இருக்கும் முரட்டுச் சிங்கம்.

எவருக்கு அருகில் சென்று பார்க்கத் தைரியம் வரும்?.

இமயமலையில் இருந்து உற்பத்தியாகும் 19 ஆறுகளில் பிரம்மபுத்திராவும் ஒன்று. செமமயுங்டங் பனிப்பாறைகளில் இருந்து உற்பத்தியாகும் இந்த ஆறு சீனா, பூடான்,இந்தியா, பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் 2900 கிலோ மீட்டர் நீளத்திற்குப் பாய்கிற்து. திபெத்தில் யார்லாஸ் சாங்க்போ என்று அழைக்கப்படுகின்றது. உலகத்திலேயே மிக உயரத்தில் இருந்து பாயும் ஆறுகளில் இதுவும் ஒன்று என்று கூறலாம். இந்த ஆறு பலவிதமான நிலப்பரப்புகளையெல்லாம் கடந்து காடுகளையும் கடந்து பயிர்விளையும் நிலத்தை அடைந்து செழிக்கச் செய்கின்றது.

பிரம்மபுத்திரா டெல்டாப் பகுதி 580000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவாகும். இதில் 50 சதவிகிதம் அளவு சீனாவிலும். 33.6 சதவிகிதம் இந்தியாவிலும் 6 சதவிகிதம் பங்களாதேஷ் பகுதியிலும் 7.8 சதவிகிதம் பூடானிலும் உள்ளது.

திபெத்திலிருந்து இந்த ஆறு 3500 மீட்டர் உயரத்திலிருந்து பாய்ந்து வருகின்றது. இந்த ஆறு ஓடி வரும் மலைகளுக்கு இடையே உள்ள இடைவெளி என்பது உலகிலேயே மிகப் பெரியதாகும். இந்த நதி இறுதியாக அருணாசலப் பிரதேசத்தில் உள்ள பாஸிகட் என்ற இடத்தில் முடிவடைகின்றது.

3500 மீட்டர் உயரத்தில் இருந்து வரும் இந்த ஆறு இறுதியாக 155 மீட்டர் உயரத்திற்கு வருகின்றது. இதில் மற்றொரு ஆச்சரியம் என்னவென்றால் இந்த ஆறு ஒரு கிலோ மீட்டர் தொலைவில் 17 மீட்டர் என்ற அளவில் சாய்நது பயணித்துக் கொண்டு வருகின்றது. கவுகாத்தி பகுதியில் இதன் அளவு ஒரு கிலோ மீட்டருக்கு 10.செ.மீட்டர் என்ற அளவில் உள்ளது. இந்த நதியை தடுத்து நீரை தங்கள் நாட்டுக்கு திருப்பி விடத்தான் சீனா இப்போது முழுமூச்சாக செயலில் இறங்கியுள்ளது.

ஏற்கனவே நாம் பார்த்தோமே?

கங்கை காவேரி ஆற்றுகளை இணைத்தால் தேசிய பேரழிவு என்று நம்மவர்கள் சொன்னார்களே?

கங்கை காவேரி இணைப்புத்திட்டத்தில் உள்ளதை விட ஆயிரம் மடங்கு சவால் நிறைந்த வேலை.

எது குறித்தும் அச்சப்படாத வீரனைப் போலத்தான் இந்த நதியின் பயணமும் வேகமும் இருக்கிறது. இந்த வீரனைத் தான் சீனா அணுக்கதிர் என்ற மாயவித்தையைக் கொண்டு தன் வசமாக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். மொத்தத்தில் நம்மவர்களுக்கு எந்த திட்டத்தில் கைவைத்தால் தனக்கு என்ன கிடைக்கும் என்பதில் குறியாக இருப்பவர்கள். ஆனால் சீனாவில் லஞ்சம் ஊழல் இருந்தபோதிலும் ஒவ்வொன்றிலும் தன் நாட்டு நலனை முன்னிறுத்தி முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள்.


2000வது ஆண்டில் "சீனாவின் தானியப் பிரச்சினை" என்றதொரு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் "எதிர்கால சீன விவசாயம் மற்றும் உணவு பற்றாக்குறை" குறித்த விபரங்களை தெளிவாக எடுத்துரைக்கப்பட்டு இருக்கிறது. இதன் அடிப்படையிலேயே பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே அணைகட்டும் பணி விரைவாக நடந்து கொண்டிருக்கிறது.

ஆனால் சர்வதேச சமூகத்தின் பார்வையில் தங்கள் ஆதிக்கத்தில் உள்ள திபெத்க்கு சாலை வசதிகளை உருவாக்கும் பொருட்டே வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது என்று மழுப்பலாக பதில் அளித்துக் கொண்டிருக்கிறது.

தென் சீனப்பகுதி 700 மில்லியன் மக்கள் தொகை கொண்டது. அங்கு பயிரிடும் நிலப்பகுதி மூன்றில் ஒரு பங்கு என்றும் ஐந்தில் நான்கு பகுதி நீர்வளம் உள்ளதாகவும் உள்ளது. ஆனால் வடக்குச் சீனப் பகுதியில் 550 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர். இங்கு பயிரிடும் நிலப்பரப்பு மூன்றில் இரண்டு பங்கு என்றும், நீர்வளம் ஐந்தில் ஒரு பங்கு உள்ளதாகவும் இருப்பதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கின்றது.

உலக மக்கள் தொகை கண்க்கெடுப்பின்படி எதிர்காலத்தில் சீனாவின் ஜனத்தொகை 141 கோடி என்று கணித்துள்ளார்கள். ஆனால் சீனா எடுத்துள்ள கணக்கு 160 கோடி மக்கள். இதன் அடிப்படையில் பயிர் செய்யப்பட வேண்டிய நிலத்தின் அளவையும் அதிகப்படுத்தப்பட வேண்டும் என்பதே இப்போதைய சீனாவின் குறிக்கோள். ஆகவே சீனாவின் வட மேற்குப் பகுதியின் பல பகுதிகள் (கோபிப் பாலைவனம் உட்பட) பயிரிடப்படும் நிலமாக மாற்றப்பட வேண்டும்.

ஆனால் இந்த பகுதி துரதிஷ்டவசமாக சீனாவின் மொத்தப் பரப்பளவில் 45 சதவிகித அளவில் உள்ளது. ஆனால் நீர்வளம் 7 சதவிகித அளவுக்கு தான் உள்ளது. இதனை கருத்தில் கொண்டே சீனா தனது நாட்டின் எதிர்கால நலனுக்காக பிரம்மபுத்திரா நதியை திசை திருப்புவதற்கான திட்டத்தை தொடங்கி ஆரம்ப கட்ட பணிகளை நடத்தி வருகின்றது. இங்கு அணை கட்டப்படுவதோடு மட்டுமல்லாமல் இமயமலையின் பல பகுதிகளை குடைநது நீர் செல்ல பாதைகளை அமைக்கவும் திட்டமிட்டு உள்ளனர்.

இதற்காக சீன அரசு தனியாக ஒரு அமைப்பு ஒன்றை நிறுவி உள்ளது. இவர்களின் மேற்பார்வையில் இது நடந்தேறி வருகின்றது.

யார்லஸ் சாங்க்போ அணை கட்டப்பட்டு அதில் 26 மின் உற்பத்தி சாதனங்களை அமைத்தால், ஒரு மணி நேரத்திற்கு 40 மில்லியன் கிலோ வாட் அளவிற்கு மின் உற்பத்தி செய்யப்படும். யாங்சே என்னும் இடத்தில் உள்ள மூன்று திட்டங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை விட இது இரண்டு மடங்கு அதிகமாகும். இதைத்தவிர பிரம்மபுத்திரா நதியை திசைதிருப்பி விடுவதன் மூலம் வட மேற்குப் பகுதியில் உள்ள வறண்ட நிலப் பகுதிகளுக்கு நீரை அளிக்க முடியும்.

சீனப்பொறியாளர்களும், விஞ்ஞானிகளும் இதன் சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து இது முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இவர்களின் திட்டப்படி பிரம்மபுத்ர நதியை நம்சா பர்வா என்ற இடத்திற்கு முன் திசைமாற்ற முடியும் என்றும் கூறுகின்றனர். இதற்காக இமயமலையில் 15 கிலோ மீட்டர் தொலைவுக்கு குடைந்து வழியை உருவாக்க திட்டமிட்டுள்ளனர்.

3000 மீட்டர் உயரத்தில் இருந்து தண்ணீர் விழுவதால் மின் உற்பத்தியை மிகுந்த அளவில் ஏற்படுத்த முடியும் என்பதோடு ஆற்று நீர் பயணித்து வரும் 100 கிலோ மீட்டர் தொலைவை 15 கிலோ மீட்டர் தொலைவாகவும் குறைந்துள்ளது. உபரி நீரை 800 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பகுதிகளுக்கு வழங்கவும் முடியும்.

இந்த ஆறு உற்பத்தியாகும் இடத்திலிருந்து வழியெங்கும் நிலவி வரும் சுற்றுச் சூழல் மற்றும் அவற்றைப் செழிப்பாகும் முறை ஆகியவை வியக்கத்தக்க வகையில் உள்ளது. சீனாவின் திட்டத்தால் மொத்தமாக மாறிவிடும். மேலும் இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்கள் மற்றும் பங்களாதேஷ் ஆகிய இடங்களில் பருவமழை இல்லாத போது பிரம்மபுத்திரா நதியில் இருந்து வரும் நீரே ஆதாரமாக இருக்கிறது. சீனாவின்

இந்த திசை திருப்பலால் இந்த பகுதியின் மொத்த வளமும் பாதிக்கப்படும்

ஆற்றின் கீழ் மட்டத்தில் உள்ள நாடுகளுக்கு இதனால் ஏற்படும் பாதிப்புகளை சீனா கண்டு கொள்ளத்தயாராய் இல்லை. சர்வதேச அளவில் நாடுகளுக்கான நதிநீர் பங்கீடு குறித்து எவ்விதமான சட்டங்களும் இல்லாத காரணத்தால் பிரம்மபுத்ரா ஆற்றின் குறுக்கே அமைக்கப்படும் அணையினால் சுற்றுசூழல் பாதிக்கப்படுவதோடு 200 மில்லியன் மக்களுக்கும் பாதிக்கப்படும் சூழ்நிலையும் எதிர்காலத்தில் உருவாகும்.

ஆனால் இந்தியா எப்போதும் போல 2020 வல்லரசு இந்தியா என்ற கனவில் திளைத்துக் கொண்டிருக்கிறது. காரணம் நாம் கனவு காண பிறந்தவர்கள். சீனா கனவுகளை செயலில் காட்ட பிறந்தவர்கள்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Dec 20, 2011 6:00 pm

சீனாவின் செயல்பாடுகள் சற்று அச்சத்தை தருகிறது ..

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி , கேரளத்திலும் காங்கிரஸ் ஆட்சி ஆனால் மத்திய அரசு என்ன செய்கின்றது .. இரண்டு மாநிலங்கள் இடையே ஒரு பதற்றம் நிலவும் பொது பிரதமர் ரஷியா செல்கிறார் ..அங்கு கூடங்குளம் அணு மின் நிலையம் விரைவில் தொடங்கும் என்று உறுதி தருகிறார் . இந்தியாவில் உள்ள மாநிலத்தின் பிரச்சனையே தீர்க்க முடியவில்லை நாம் பிரதமரால் .. அப்புறம் எங்கே சீனாவை ...







http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Tue Dec 20, 2011 8:10 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
சீனா -- மாயவலையும் மந்திர வேலைகளும் 1357389சீனா -- மாயவலையும் மந்திர வேலைகளும் 59010615சீனா -- மாயவலையும் மந்திர வேலைகளும் Images3ijfசீனா -- மாயவலையும் மந்திர வேலைகளும் Images4px
பானு ஜெகன்
பானு ஜெகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 367
இணைந்தது : 18/12/2011

Postபானு ஜெகன் Tue Dec 20, 2011 9:34 pm

இப்படியே நம் தலைவர்கள் ஊழலில் திறன் வாய்ந்தவர்களாக இருந்தால் கூடியவிரைவில் நம் நாடு மீண்டும் வேறு எவருடைய கையிலோ சிக்கி அடிமைபடும் சோகம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக