புதிய பதிவுகள்
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அ.தி.மு.க.,விலிருந்து சசிகலா நீக்கம்---செய்தி தொகுப்பு - Page 2 Poll_c10அ.தி.மு.க.,விலிருந்து சசிகலா நீக்கம்---செய்தி தொகுப்பு - Page 2 Poll_m10அ.தி.மு.க.,விலிருந்து சசிகலா நீக்கம்---செய்தி தொகுப்பு - Page 2 Poll_c10 
65 Posts - 64%
heezulia
அ.தி.மு.க.,விலிருந்து சசிகலா நீக்கம்---செய்தி தொகுப்பு - Page 2 Poll_c10அ.தி.மு.க.,விலிருந்து சசிகலா நீக்கம்---செய்தி தொகுப்பு - Page 2 Poll_m10அ.தி.மு.க.,விலிருந்து சசிகலா நீக்கம்---செய்தி தொகுப்பு - Page 2 Poll_c10 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
அ.தி.மு.க.,விலிருந்து சசிகலா நீக்கம்---செய்தி தொகுப்பு - Page 2 Poll_c10அ.தி.மு.க.,விலிருந்து சசிகலா நீக்கம்---செய்தி தொகுப்பு - Page 2 Poll_m10அ.தி.மு.க.,விலிருந்து சசிகலா நீக்கம்---செய்தி தொகுப்பு - Page 2 Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
அ.தி.மு.க.,விலிருந்து சசிகலா நீக்கம்---செய்தி தொகுப்பு - Page 2 Poll_c10அ.தி.மு.க.,விலிருந்து சசிகலா நீக்கம்---செய்தி தொகுப்பு - Page 2 Poll_m10அ.தி.மு.க.,விலிருந்து சசிகலா நீக்கம்---செய்தி தொகுப்பு - Page 2 Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
அ.தி.மு.க.,விலிருந்து சசிகலா நீக்கம்---செய்தி தொகுப்பு - Page 2 Poll_c10அ.தி.மு.க.,விலிருந்து சசிகலா நீக்கம்---செய்தி தொகுப்பு - Page 2 Poll_m10அ.தி.மு.க.,விலிருந்து சசிகலா நீக்கம்---செய்தி தொகுப்பு - Page 2 Poll_c10 
1 Post - 1%
viyasan
அ.தி.மு.க.,விலிருந்து சசிகலா நீக்கம்---செய்தி தொகுப்பு - Page 2 Poll_c10அ.தி.மு.க.,விலிருந்து சசிகலா நீக்கம்---செய்தி தொகுப்பு - Page 2 Poll_m10அ.தி.மு.க.,விலிருந்து சசிகலா நீக்கம்---செய்தி தொகுப்பு - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அ.தி.மு.க.,விலிருந்து சசிகலா நீக்கம்---செய்தி தொகுப்பு - Page 2 Poll_c10அ.தி.மு.க.,விலிருந்து சசிகலா நீக்கம்---செய்தி தொகுப்பு - Page 2 Poll_m10அ.தி.மு.க.,விலிருந்து சசிகலா நீக்கம்---செய்தி தொகுப்பு - Page 2 Poll_c10 
257 Posts - 44%
heezulia
அ.தி.மு.க.,விலிருந்து சசிகலா நீக்கம்---செய்தி தொகுப்பு - Page 2 Poll_c10அ.தி.மு.க.,விலிருந்து சசிகலா நீக்கம்---செய்தி தொகுப்பு - Page 2 Poll_m10அ.தி.மு.க.,விலிருந்து சசிகலா நீக்கம்---செய்தி தொகுப்பு - Page 2 Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
அ.தி.மு.க.,விலிருந்து சசிகலா நீக்கம்---செய்தி தொகுப்பு - Page 2 Poll_c10அ.தி.மு.க.,விலிருந்து சசிகலா நீக்கம்---செய்தி தொகுப்பு - Page 2 Poll_m10அ.தி.மு.க.,விலிருந்து சசிகலா நீக்கம்---செய்தி தொகுப்பு - Page 2 Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
அ.தி.மு.க.,விலிருந்து சசிகலா நீக்கம்---செய்தி தொகுப்பு - Page 2 Poll_c10அ.தி.மு.க.,விலிருந்து சசிகலா நீக்கம்---செய்தி தொகுப்பு - Page 2 Poll_m10அ.தி.மு.க.,விலிருந்து சசிகலா நீக்கம்---செய்தி தொகுப்பு - Page 2 Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
அ.தி.மு.க.,விலிருந்து சசிகலா நீக்கம்---செய்தி தொகுப்பு - Page 2 Poll_c10அ.தி.மு.க.,விலிருந்து சசிகலா நீக்கம்---செய்தி தொகுப்பு - Page 2 Poll_m10அ.தி.மு.க.,விலிருந்து சசிகலா நீக்கம்---செய்தி தொகுப்பு - Page 2 Poll_c10 
15 Posts - 3%
prajai
அ.தி.மு.க.,விலிருந்து சசிகலா நீக்கம்---செய்தி தொகுப்பு - Page 2 Poll_c10அ.தி.மு.க.,விலிருந்து சசிகலா நீக்கம்---செய்தி தொகுப்பு - Page 2 Poll_m10அ.தி.மு.க.,விலிருந்து சசிகலா நீக்கம்---செய்தி தொகுப்பு - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
அ.தி.மு.க.,விலிருந்து சசிகலா நீக்கம்---செய்தி தொகுப்பு - Page 2 Poll_c10அ.தி.மு.க.,விலிருந்து சசிகலா நீக்கம்---செய்தி தொகுப்பு - Page 2 Poll_m10அ.தி.மு.க.,விலிருந்து சசிகலா நீக்கம்---செய்தி தொகுப்பு - Page 2 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
அ.தி.மு.க.,விலிருந்து சசிகலா நீக்கம்---செய்தி தொகுப்பு - Page 2 Poll_c10அ.தி.மு.க.,விலிருந்து சசிகலா நீக்கம்---செய்தி தொகுப்பு - Page 2 Poll_m10அ.தி.மு.க.,விலிருந்து சசிகலா நீக்கம்---செய்தி தொகுப்பு - Page 2 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
அ.தி.மு.க.,விலிருந்து சசிகலா நீக்கம்---செய்தி தொகுப்பு - Page 2 Poll_c10அ.தி.மு.க.,விலிருந்து சசிகலா நீக்கம்---செய்தி தொகுப்பு - Page 2 Poll_m10அ.தி.மு.க.,விலிருந்து சசிகலா நீக்கம்---செய்தி தொகுப்பு - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
அ.தி.மு.க.,விலிருந்து சசிகலா நீக்கம்---செய்தி தொகுப்பு - Page 2 Poll_c10அ.தி.மு.க.,விலிருந்து சசிகலா நீக்கம்---செய்தி தொகுப்பு - Page 2 Poll_m10அ.தி.மு.க.,விலிருந்து சசிகலா நீக்கம்---செய்தி தொகுப்பு - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அ.தி.மு.க.,விலிருந்து சசிகலா நீக்கம்---செய்தி தொகுப்பு


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Dec 19, 2011 1:45 pm

First topic message reminder :

அ.தி.மு.க., அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து சசிகலா நீக்கப்பட்டுள்ளதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். மேலும், நடராஜன், தினகரன், சுதாகரன், திவாகர்(மன்னார்குடி), பாஸ்கரன்,ராமசந்திரன், வெங்கடேசன், ராஜராஜன், குலோத்துங்கன், ராவணன், மோகன் உள்ளிட்ட 12 பேரும் அ.தி.மு.க.,விலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். இவர்களுடன் கட்சியினர் யாரும் தொடர்பு வைத்துக்கொள்ளக்கூடாது எனவும் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.


dinamalar


பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Mon Dec 19, 2011 2:38 pm

ஆட்சியிலும் கட்சியிலும் 'நந்தி'யாக மாறிய சசி குடும்பம்-பொறுக்க முடியாமல் தூக்கிய ஜெ.!

அதிமுகவிலும் சரி, ஆட்சியிலும் சரி ஆரம்பம் முதலே சசிகலா நந்தியாக மாறி பெரும் குழப்பங்களை ஏற்படுத்தி வந்தபோதும் பொறுமையாக இருந்த ஜெயலலிதா, சமீப காலமாக தனது ஆட்சிக்கே உலை வைக்கும் அளவுக்கு ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு சிந்திக்கத் தொடங்கியதும், சீர்குலைவு நடவடிக்கைகளை முடுக்கி விட்டதாலும்தான் பொறுக்க முடியாமல் சசிகலா கும்பலை அதிமுகவை விட்டு தூக்கி விட்டதாக கூறப்படுகிறது.

1991ம் ஆண்டுக்கு முன்பு போக வேண்டும் ஜெயலலிதா, சசிகலா இடையிலான நட்பை அறிந்து கொள்ள. எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பின்னர் ஜெயலலிதா அரசியலில் புதிய சக்தியாக உருவெடுத்தபோது அவருக்கு சாதாரண முறையில்தான் அறிமுகமானார் சசிகலா.

ஆணாதிக்கம் மிக்க அரசியல் துறையில், உற்ற தோழியாக சசிகலா வந்ததாலும், தன்னைப் புரிந்து கொண்டு நடந்ததாலும் சசிகலாவை தனக்கு அருகிலேயே வைத்துக் கொண்டார் ஜெயலலிதா. சசிகலாவும், ஜெயலலிதாவின் மனதறிந்து அவருக்கு உற்ற தோழியாக நடந்து கொண்டார். இந்த நட்பு நாளுக்கு நாள் இறுகி இணை பிரியாத தோழிகளாக ஜெயலலிதாவும், சசிகலாவும் மாறிப் போயினர். நாளடைவில் ஜெயலலிதாவின் உதவியாளராக உருவெடுத்தார் சசிகலா. மேலும் ஜெயலலிதாவுக்கு அவ்வப்போது அறிவுரை கூறும் அளவுக்கும் அவர் மாறினார்.

1991ம் ஆண்டுதான் சசிகலாவின் விஸ்வரூபம் வெளிப்பட்டது. ஆட்சியிலும், கட்சியிலும் சசிகலா ஒரு முக்கிய அதிகார மையமாக உருவெடுத்தார். 91 முதல் 96 வரை நடந்த முதலாவது ஜெயலலிதா ஆட்சியின்போது சசிகலாவைத் தாண்டித்தான் காற்றாக இருந்தாலும் கூட ஜெயலலிதாவை சென்றடைய முடியும் என்ற நிலை ஏற்பட்டது.

சர்வ வல்லமை படைத்த அதிகார மையமாக மாறிய சசிகலா படிப்படியாக தனது குடும்பத்தினரையும் ஒவ்வொருவராக கட்சிக்குள் இழுத்து வந்தார். ஒரு கட்டத்தில் ஜெயலலிதாவுக்காக தனது கணவர் நடராஜனைக் கூட உதறித் தள்ளத் துணிந்தார். பல ஆண்டுகளாகி விட்டது சசிகலாவும் நடராஜனும் பிரிந்து (இருவரும் அவ்வப்போது ரகசியமாக சந்திப்பதுண்டு என்ற தகவலும் உண்டு).

ஜெயலலிதாவின் வலது கரமாகவும், இடதுகரமாகவும் மாறிப் போனதால் சசிகலா வைத்ததே சட்டம் என்ற நிலை கட்சிக்குள்ளும், ஆட்சியிலும் உண்டாகி விட்டது.

சசிகலாவின் செல்வாக்கைப் பயன்படுத்திக் கொண்டு அவரது அக்காள் மகன்களான சுதாகரன், திவாகரன், பாஸ்கரன் ஆகியோர் அதிமுகவில் தலை தூக்கினர். உறவினர்களான அக்காள் கணவர் விவேகானந்தன்,டாக்டர் வெங்கடேஷ், ராவணன் உள்ளிட்டோரும் அதிகார மையங்களாகினர்.

அதிமுகவில் ஏதாவது நடக்க வேண்டும் என்றால் இவர்களில் யாரையாவது ஒருவரைப் பார்த்தால் போதும் என்ற நிலைக்கு அதிமுகவினர் தள்ளப்பட்டனர். இந்த மன்னார்குடி வகையறாவின் ஆதிக்கத்தால், ஆளுமையால் பல மூத்த தலைவர்கள் கட்சியை விட்டு ஒதுங்கிச் சென்றனர், பலர் தூக்கியடிக்கப்பட்னர் - முத்துசாமி போல.

தற்போதைய கதைக்கு வருவோம். ஜெயலலிதாவின் 3வது ஆட்சி தொடங்கிய கடந்த 6 மாதங்களில் சசிகலாவின் ஆதிக்கமும், ஆட்டமும் கட்சிக்குள் அதிகரித்து விட்டதாக செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தன. மேலும் ஆட்சியிலும் அவர் பெருமளவில் தலையிடுகிறார் என்ற புகார்களும் கிளம்பின.

தனக்கு வேண்டியவர்களை முக்கியப் பதவிகளில் அமர்த்தினார் சசிகலா. அதேபோல அமைச்சர்கள் நியமனத்திலும் அவரது ஆட்டம் அதிகமாகவே இருந்தது. இடமாறுதல்கள் உள்ளிட்டவற்றிலும் பெரிய அளவில் விளையாடினார் சசி என்பது இன்னொரு குற்றச்சாட்டு.

இந்த குழப்பத்தால்தான் ஜெயலலிதாவின் இந்த ஆறு மாத கால ஆட்சியில் பல அதிகாரிகள், மாவட்ட ஆட்சித் தலைவர்கள், துறைச் செயலாளர்கள், பல அமைச்சர்கள் அடிக்கடி மாற்றப்பட்டு ஆட்சிக்கும், கட்சிக்கும் பெரும் கெட்ட பெயர் ஏற்படுத்த காரணமாகி விட்டதாக கூறப்படுகிறது.

குறிப்பாக உளவுத்துறை ஐஜியாக இருந்து வந்த பொன் மாணிக்கவேல் நியமனமும், இடமாற்றமும் ஒரு முக்கிய உதாரணமாக கூறப்படுகிறது. இவர் சசிகலாவுக்கு மிகவும் நெருங்கியவர். இதனால்தான் அந்தப் பதவிக்கு கொண்டு வரப்பட்டார். ஆனால் அவரது செயல்பாடுகள் ஜெயலலிதாவுக்குப் பிடிக்காததால் அதிரடியாக அந்தப் பதவியிலிருந்து தூக்கினார் ஜெயலலிதா. இது சசிகலாவுக்கு முதல் ஷாக் என்கிறார்கள்.

உளவுத்துறை தகவல்களை தன்னிடம் நேரடியாக கொடுக்காமல் சசிகலாவிடம் போய் பொன் மாணிக்கவேல் தொடர்ந்து கொடுத்து வந்ததாகவும், இதனால்தான் அதிர்ச்சி அடைந்த ஜெயலலிதா, பொன் மாணிக்கவேலை தூக்கினார் என்றும் கூறுகிறார்கள்.

அதேபோல நடராஜனுக்கு மிகவும் நெருக்கமானவரான ஐஏஎஸ் அதிகாரி பன்னீர்செல்வத்தையும் அதிரடியாக, அவருக்குக் கொடுக்கப்பட்ட சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை செயலாளர் பொறுப்பிலிருந்து தூக்கி 2வது ஷாக்கைக் கொடுத்தார் ஜெயலலிதா.

இப்படி அடுத்தடுத்து சசிகலாவுக்கு ஆப்பு வைத்தார் ஜெயலலிதா. இதன் பிறகாவது அவர் ஆட்சியில் தலையிடுவதை நிறுத்துவார் என்பதுதான் ஜெயலலிதாவின் எதிர்பார்ப்பு.

ஆனால் ஜெயலலிதாவே எதிர்பாராத வகையில் சசிகலா தரப்பின் சதிச் செயல்கள் இருந்ததாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதாவது தங்களுக்கு ஆதரவான அதிகாரிகளை வைத்து ஆட்சிக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்துவது, பின்னர் தங்களுக்குச் சாதகமாக எம்.எல்.ஏக்களை வளைத்து கட்சியைக் கைப்பற்றுவது என்ற திட்டமும் தீட்டப்பட்டதாக ரகசியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வரும் சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு பாதகமாக தீர்ப்பு வந்தால் வழக்கம் போல ஜெயலலிதாவின் விசுவாசி ஓ.பன்னீர் செல்வம் போன்றவர்கள் பதவிக்கு வந்து விடாமல் தடுத்து நடராஜனை முதல்வராக்கும் மிகப் பெரிய திட்டமும் சசிகலா தரப்பில் இருந்ததாக கூறப்படுகிறது.

இதெல்லாம் ஜெயலலிதாவின் கவனத்திற்குப் போனதால் அவர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளார். இதையடுத்தே சசிகலாவை நீக்கும் அதிரடி முடிவுக்கு அவர் வந்ததாக கூறுகிறார்கள்.

இதை விட இன்னொரு முக்கிய விஷயம் உள்ளது. அது வரைமுறையே இல்லாமல் தாறுமாறாக பணம் பார்க்க ஆரம்பித்து விட்டார் சசிகலா என்பதுதான். சாதாரண பியூன் நியமனம் முதல் அரசுத் துறை ஊழியர்களின் பதவி உயர்வு, இடமாறுதல் என எல்லாவற்றிற்கும் மிகப் பெரிய அளவில் காசு வாங்க ஆரம்பித்து விட்டார்கள் என்பதே அது.

டெண்டர், நியமனம், இடமாறுதல், பதவி உயர்வு என எதுவாக இருந்தாலும் ஒரு ரேட்டை நியமித்து சசிகலா தரப்பு கறாராக வாங்கி வந்ததாக கூறப்படுகிறது. இதெல்லாம் சேர்ந்துதான் சசிகலாவை கட்சியை விட்டு தூக்கும் முடிவுக்கு ஜெயலலிதாவைக் கொண்டு சென்றதாக பேசுகிறார்கள்.

நந்தி போல சசிகலா உட்கார்ந்து கொண்டு இருந்ததால் ஜெயலலிதாவின் நிழலைக் கூட அணுக முடியாமல் இருந்த அதிமுகவினரும், தலைவர்களும், விசுவாசிகளும் சசிகலாவின் நீக்கச் செய்தியால் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளதாக தெரிகிறது. இனிமேலாவது முதல்வரை நேரில் பார்க்க முடியும், அதற்கான வாய்ப்பு உருவாகும் என்றும் அவர்கள் நம்புகிறார்கள்.

இருப்பினும் ஜெயலலிதா, சசிகலாவை கட்சியை விட்டு தள்ளி வைப்பது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பும் 1997ம் ஆண்டு ஒருமுறை அவர் கட்சியை விட்டு நீக்கினார் ஜெயலலிதா. அப்போது 11 மாதங்களுக்கு போயஸ் கார்டன் பக்கமே வராமல் இருந்தார் சசிகலா. பின்னர் ஜெயலலிதாவே, சசிகலாவை தன்னுடன் சேர்த்துக் கொண்டார் என்பது நினைவிருக்கலாம்.

எனவே இன்றைய நீக்கம் எந்த அளவுக்கு வீரியம் மிகுந்தது என்பதை போகப் போகத்தான் தெரிந்து கொள்ள முடியும்.

நன்றி http://tamil.oneindia.in

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Dec 19, 2011 2:52 pm

20 வருடமாக இரண்டு பெண்கள் ஒரே வீட்டில் ஒற்றுமையாக இருந்திருக்கி றார்கள் என்பதே பெரிய விஷயம் தானே புன்னகை

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Dec 19, 2011 2:56 pm

நல்ல விஷயம் ஜாலி




அ.தி.மு.க.,விலிருந்து சசிகலா நீக்கம்---செய்தி தொகுப்பு - Page 2 Power-Star-Srinivasan
வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Postவின்சீலன் Mon Dec 19, 2011 2:59 pm

இது ஒரு நல்ல முடிவு , வரவேற்கிறேன் நன்றி



உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

அ.தி.மு.க.,விலிருந்து சசிகலா நீக்கம்---செய்தி தொகுப்பு - Page 2 Mgr
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Mon Dec 19, 2011 3:47 pm

திருப்பூர்: அதிமுகவை விட்டு சசிகலாவை முதல்வர் ஜெயலலிதா நீக்கியுள்ளதால் அதிமுகவினர் பெரும் உற்சாகமடைந்துள்ளனர். இதையடுத்து மாநிலத்தின் பல பகுதிகளிலும் அவர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடியுள்ளனர்.

ஜெயலலிதாவின் நிழலாக திகழ்ந்து வந்த சசிகலாவை இன்று அதிரடியாக கட்சியை விட்டு நீக்கிய ஜெயலலிதாவின் செயல், அதிமுகவினரிடையே பெரும் ஆச்சரியத்தையும், அதேசமயம், சசியின் ஆதிக்கத்தால் கடும் புழுக்கத்தில் இருந்த அதிமுகவினருக்கு பெரும் சந்தோஷத்தையும் கொடுத்துள்ளது.

சசிகலா நீக்கப்பட்டார் என்ற செய்தி பரவியதும் மாநிலத்தின் பல பகுதிகளில் அதிமுகவினர் அதைக் கொண்டாடியுள்ளனர்.

திருப்பூரில் எம்.ஜி.ஆர். சிலை முன்பு கூடிய அதிமுகவினர் பட்டாசு வெடித்தனர். பின்னர் எம்ஜிஆர் சிலை முன்பு அமர்ந்து மொட்டை போட்டுக் கொண்டனர். இனிப்புகளையும் வழங்கினர்.

இதேபோல திண்டிவனத்திலும் அதிமுகவினர் பட்டாசு வெடித்துக் கொண்டாடியுள்ளனர்.

இருப்பினும் சசிகலாவின் பெல்ட் ஆன மன்னார்குடி உள்ளிட்ட தஞ்சை மாவட்டப் பகுதிகளில் அமைதி காணப்படுகிறது.

தட்ஸ்தமிழ்



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,அ.தி.மு.க.,விலிருந்து சசிகலா நீக்கம்---செய்தி தொகுப்பு - Page 2 Image010ycm
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Dec 19, 2011 4:01 pm

ஸ்கார்பியோ காரில் வெளியேறினார் சசிகலா:
அ.தி.மு.க., விலிருந்து க்கப்படுவதை முன்னரே அறிந்த சசிகலா ஸ்கார்பியோ காரில் போயஸ் தோட்டத்திலிருந்து வெளியேறி விட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

dinamalar




பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Dec 19, 2011 4:13 pm

நல்ல முடிவு .. முடிவு மாறாமல் இருந்தால் சரி ... சூப்பருங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Dec 19, 2011 4:25 pm

அ.தி.மு.க.,வில் இருந்து சசிகலா திடீர் நீக்கம் - போயஸ் தோட்டத்தில் இருந்தும் வெளியேற்றம்

ஏறக்குறைய 25 ஆண்டு காலமாக சசிகலா மற்றும் அவரை சுற்றியுள்ள குடும்பத்தினர் கையில் இருந்த அ.தி.மு.க.,வில் முக்கிய மாற்றம் நிகழ்ந்துள்ளது. சசி இல்லாமல் அவர் இல்லை என்ற நிலையை தகர்த்து எறிந்திருக்கிறார் ஜெ., .


சமீப காலமாக ஜெ மற்றும் சசி குடும்பத்தினர் இடையே அரசல் புரசலாக புகைச்சல் இருந்து வந்ததாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில் கட்சியின் பொது செயலர் ஜெ., இன்று அ.தி.மு.,கவில் இருந்து மொத்தம் 12 பேரை நீக்குவதாக அறிவித்துள்ளார். இன்று ஜெ., வெளியிட்டுள்ள அறிவிப்பில் : சசிகலா. நடராஜன், தினகரன், சுதாகரன், திவாகர் (மன்னார்குடி),பாஸ்கரன்,ராமசந்திரன், வெங்கடேசன், ராஜராஜன், குலோத்துங்கன், ராவணன், மோகன் உள்ளிட்ட 12 பேரும் அ.தி.மு.க.,விலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.இந்த 12 பேருடன் கட்சிக்காரர்கள் யாரும் இனி எவ்வித தொடர்பும் கொள்ள கூடாது என்று கடும் எச்சரிப்பும் வெளியிட்டுள்ளார். 12 பேரும் சசியின் நெருங்கிய வட்டாரம் ஆகும்.

கடந்த 25 ஆண்டு கால வரலாற்றில் சசி குடும்பத்தினரும் அவருக்கு வேண்டப்பட்டவர்களும் கட்சியில் கோலோச்சி வந்திருந்தனர். கட்சியிலும் , ஆட்சிக்கு வந்தால் அரசிலும் இவர்கள் தலையீடு இல்லாமல் இருக்காது. அரசு துறை பொறுப்புகள் டிரான்ஸ்பர் மற்றும் கட்சியில் பதவி வேண்டுமானால் சசி வட்டராத்தையே நாட வேண்டிய நிலையில் அ.தி.மு.க., தொண்டர்கள் இருந்து வந்தனர். இந்நிலையில் இந்த கூட்டத்தினர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதற்கு அ.தி.மு.க, தொண்டர்கள் இடையே பெரும் வரவேற்பு கிட்டியிருக்கிறது. ஜெ.,யின் அதிரடி நடவடிக்கையால் சசி குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


அ.தி.மு.க.,வை கைப்பற்ற திட்டம் - சசி நீக்கம் குறித்து பரபரப்பு தகவல்:
சசியை கட்சியில் இருந்து நீக்க ஜெ., எடுத்த அதிரடி நடவடிக்கைக்கு பல பின்னணி தகவல்கள் இருந்துள்ளன. இது குறித்த விவரம் வருமாறு: சசிகலா மற்றும் அவரது வட்டாரத்தினர் கட்சியை தங்கள் வசம் கொண்டு வர திட்டமிட்டிருந்தனர். அதாவது பெங்களூரூ சிறப்பு கோர்ட்டில் ஜெ.,வுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கு நடந்து வருகிறது. இதில் அவருக்கு எதிராக தீர்ப்பு அமையும் பட்சத்தில் அவர் ஜெயிலுக்கு செல்ல நேரிட்டால் அந்நேரத்தில் என்ன செய்வது என பெரும் ஆலோசனை நடத்தியது சசி கூட்டம். இதன் ஒரு கட்டமாக நடராஜன் அ.தி.மு,.க.,வை தங்கள் வசம் கொண்டு வர தங்களுக்கு வேண்டிய கட்சி நிர்வாகிகள் மற்றும் அரசில் அதிகாரிகள் என பலரை தங்கள் இஷ்டம் போல் பொறுப்பில் கொண்டு வரதிட்டமிட்டார். இதற்கு சசியும் ஒப்புதல் தெரிவித்ததாக தெரிகிறது. மேலும் இந்த உள்ளடி வேலை நடந்த போது தொலைபேசி உரையாடல் தமிழக உளவுத்துறைக்கு கிடைத்தது. இந்த தகவலை உளவுத்துறை மூலம் அறிந்து கொண்ட ஜெ., இந்த அதிரடி நடவடிக்கை எடுத்திருப்பதாக உறுதி செய்யப்படாத ஒரு தகவல் தெரிவிக்கின்றன.கட்சியில் இருந்து நீக்கப்படவிருக்கிறோம் என தெரிந்த சசிகலா 2 ஸ்கார்பியோ வேனில் மூட்டை முடிச்சுகளுடன் மாற்று இடம் தேடி கிளம்பினார் .

அ.தி.மு.க.,வில் சேர தயாராகும் எம்.ஜி.ஆர்., விசுவாசிகள்: அ.தி.மு.க.,வில் இருந்து சசி வெளியேற்றப்பட்டதும், சசியின் நீக்கம் குறித்து அ.தி.மு.க, முன்னாள் அமைச்சரும், தி.மு.க.,வில் தற்போது இருப்பவருமான ஒருவரிடம் பேசிய போது அவர் தனது உள்ளகுமுறல்களை இவ்வாறு வெளியேற்றினார் ; “ இந்த கட்சியில் சசி கும்பல் செய்த அட்டகாசத்தினால் நாங்கள் வெளியேறினோம். ஜெ.,எடுத்த நடவடிக்கை வரவேற்க கூடியது. சசி வெளியேற்றம் மூலம் அ.தி.மு.க.,வை பலப்படுத்தி எம்.ஜி.ஆர்., வழியில் தூய நிர்வாகம் வழங்க நல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த தருணத்தில் ஜெ., மட்டும் ஒரு அழைப்பு விடுத்தால் எம்.ஜி.ஆர்., விசுவாசிகள் பலரும் மீண்டும் அ.தி.மு.க.,விற்கு வர தயாராக இருக்கின்றோம். இனி வரும் காலங்களில் அ.தி.மு.க., அரசில் ஊழல் இல்லாமல் தூய ஆட்சியை தரமுடியும். தவறான வழிகாட்டிகள் வெளியே போய் விட்டனரே ”என்றார் சந்தோஷமாக.,

திருப்பூரில் மொட்டை அடித்து மகிழ்ச்சி : அ.தி.மு.க.,வில் இருந்து சசி மற்றும் அவரது ஆதரவாளர்கள் நீக்ப்பட்டதற்கு அ.தி.மு.க,.வினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும், கொண்டாடினர். திருப்பூரில் உள்ள எம்.ஜி.ஆர்., சிலை அருகே அ.தி.மு.க.,தொண்டர்கள் பலரும் மொட்டை அடித்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.


dinamalar

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Mon Dec 19, 2011 5:02 pm

அப்படி போடு அருவாள!!! மகிழ்ச்சி

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Dec 19, 2011 5:06 pm

ஜேன் செல்வகுமார் wrote:அப்படி போடு அருவாள!!! மகிழ்ச்சி
யாரு மேலே போடணும் அ.தி.மு.க.,விலிருந்து சசிகலா நீக்கம்---செய்தி தொகுப்பு - Page 2 1sanglant



Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக