புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D | ||||
Shivanya | ||||
prajai | ||||
D. sivatharan | ||||
சண்முகம்.ப |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கூடங்குளம் போராட்டம் -நாராயணசாமி மீது சட்டப்பூர்வமாக வழக்கு தொடர்வேன்- உதயகுமார்ி[ (செய்தி தொகுப்பு 18.12.2011)
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
கூடங்குளம் போராட்டம் -நாராயணசாமி மீது சட்டப்பூர்வமாக வழக்கு தொடர்வேன்- உதயகுமார்ி[ (செய்தி தொகுப்பு 18.12.2011)
#695938- GuestGuest
அணு உலைக்கு எதிராக மூன்று கட்டப் போராட்டம்- மக்கள் அறிவிப்பு
தேதி 18.12.2011, நேரம் : மாலை 06.16
இடிந்தகரை: கூடங்குளம் அணு உலை செயல்படத் தொடங்கினால் குடும்பம் குடும்பமாக அதனை முற்றுகையிட்டு தடுத்து நிறுத்துவோம் என கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு குழுவினர் அறிவித்துள்ளனர்.
கூடங்குளம் அணுஉலை சில வாரங்களில் செயல்பட தொடங்கும் என பிரதமர் மன்மோகன சிங் அறிவித்துள்ள நிலையில் போராட்டக்குழு இன்று அவசர ஆலோசனை நடத்தி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முக்கிய முடிவு எடுத்துள்ளது.
அதன்படி முன்று கட்ட போராட்டத்தை அணுஉலை எதிர்ப்பாளர் உதயகுமார் அறிவித்தார்.
முதல் கட்டமாக அணு உலைக்கு எதிராக நாளை கூடங்குளதிலிருந்து ராதாபுரம் வரை 10 கீ.மி பேரணி நடத்தப்படும்.
அடுத்து, அணுஉலை செயல்பாடுகள் தொடங்கினால் அங்கு குடும்பம் குடும்பமாக முற்றுகை போராட்டம் நடத்தப்படும். அனைவரும் அணு உலைக்கு முன்பாக திரண்டு போராடுவோம்.
இறுதிக்கட்டமாக, கூடங்குளம் அணு உலையிலிருந்து யுரேனியத்தை டிசம்பர் 31-க்குள் அகற்றாவிட்டால் ஜனவரி 1-முதல் மாபெரும் மக்கள் போராட்டம் நடத்தப்படும். அனைத்துக் கட்சிகளின் ஆதரவையும் இதற்காக கேட்க உள்ளோம், என்றார்.
தட்ஸ் தமிழ்
தேதி 18.12.2011, நேரம் : மாலை 06.16
இடிந்தகரை: கூடங்குளம் அணு உலை செயல்படத் தொடங்கினால் குடும்பம் குடும்பமாக அதனை முற்றுகையிட்டு தடுத்து நிறுத்துவோம் என கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு குழுவினர் அறிவித்துள்ளனர்.
கூடங்குளம் அணுஉலை சில வாரங்களில் செயல்பட தொடங்கும் என பிரதமர் மன்மோகன சிங் அறிவித்துள்ள நிலையில் போராட்டக்குழு இன்று அவசர ஆலோசனை நடத்தி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முக்கிய முடிவு எடுத்துள்ளது.
அதன்படி முன்று கட்ட போராட்டத்தை அணுஉலை எதிர்ப்பாளர் உதயகுமார் அறிவித்தார்.
முதல் கட்டமாக அணு உலைக்கு எதிராக நாளை கூடங்குளதிலிருந்து ராதாபுரம் வரை 10 கீ.மி பேரணி நடத்தப்படும்.
அடுத்து, அணுஉலை செயல்பாடுகள் தொடங்கினால் அங்கு குடும்பம் குடும்பமாக முற்றுகை போராட்டம் நடத்தப்படும். அனைவரும் அணு உலைக்கு முன்பாக திரண்டு போராடுவோம்.
இறுதிக்கட்டமாக, கூடங்குளம் அணு உலையிலிருந்து யுரேனியத்தை டிசம்பர் 31-க்குள் அகற்றாவிட்டால் ஜனவரி 1-முதல் மாபெரும் மக்கள் போராட்டம் நடத்தப்படும். அனைத்துக் கட்சிகளின் ஆதரவையும் இதற்காக கேட்க உள்ளோம், என்றார்.
தட்ஸ் தமிழ்
Re: கூடங்குளம் போராட்டம் -நாராயணசாமி மீது சட்டப்பூர்வமாக வழக்கு தொடர்வேன்- உதயகுமார்ி[ (செய்தி தொகுப்பு 18.12.2011)
#695939- GuestGuest
பிரதமர் அறிவிப்பால் அதிர்ச்சி: அடுத்த போராட்டத்துக்கு தயாராகும் கூடங்குளம் மக்கள்!
கூடங்குளம்: ரஷ்யா போன இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், அங்கிருந்தபடியே கூடங்குளம் அணுமின் நிலைய உற்பத்தி அடுத்த வாரம் தொடங்கும் என அறிவித்துள்ளது, அணுமின்நிலையத்துக்கு எதிரான போராட்டக்குவுவுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.
தங்கள் அடுத்த கட்டப் போராட்டம் குறித்து இன்று கலந்தாலோசிக்கிறார்கள்.
கூடங்குளத்தில் 1000 மெகாவாட் மின் உற்பத்தி திறனை கொண்ட முதல் அணு உலை பணிகள் 99.2 சதவீதம் முடிந்துவிட்டன. இதுபோல் மற்றொரு யூனிட் பணிகளும் பெருமளவு முடிந்துவிட்டன. இதுவும் 1000 மெகாவாட் மின் உற்பத்தி திறனை கொண்டது. இந்த அணுஉலைகளால் மக்களுக்கு பெரும் ஆபத்து காத்திருக்கிறது என்பதால் மூட வலியுறுத்தி மக்கள் இடிந்தகரை கிராமத்தில் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதனால் கூடங்குளம் அணு மின்நிலைய பணிகள் முடங்கியது. ஆகவே போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு சார்பில் நிபுணர் குழு அமைக்கப்பட்டது. அந்த நிபுணர் குழுவினர் போராட்டக்காரர்கள் அடங்கிய மாநில குழுவுடன் 3 கட்டம் நடத்திய பேச்சு வார்த்தைகளும் தோல்வி அடைந்தன.
இந்த நிலையில் பிரதமர் மன்மோகன்சிங் 3 நாள் பயணமாக ரஷ்யா சென்றுள்ளார். அவரது பயணத்தின் போது கூடங்குளத்தில் கூடுதலாக அணு உலைகள் அமைப்பது தொடர்பாக ரஷ்யாவுடன் ஒப்பந்தம் கையெழுத்தாகுமென தகவல் வெளியானது. எனவே பிரதமர் மன்மோகன்சிங்கின் ரஷ்யா பயணத்தை கண்டித்து இடிந்த கரையில் அணுமின் நிலைய எதிர்ப்பாளர்கள் நேற்று கறுப்பு கொடி ஏற்றி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.
இடிந்தகரை உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட மீனவ கிராம மக்கள் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டனர். கூடங்குளம், வைராவிகிணறு கிராம மக்கள் கடைகளை அடைத்து விட்டு உண்ணாவிரதத்தில் பங்கேற்றனர். அணுமின் எதிர்ப்பாளர்கள் வீடுகளிலும், கடைகளிலும் கறுப்பு கொடி ஏற்றி இருந்தனர்.
மீனவர்கள் தங்கள் படகுகளில் கறுப்பு கொடி ஏற்றினர். ஏற்கனவே இடிந்த கரையில் அணுமின் நிலைய எதிர்ப்பாளர்கள் இருந்துவரும் தொடர் உண்ணாவிரத போராட்டம் இன்று 61-வது நாளை எட்டியுள்ள நிலையில், பிரதமரின் ரஷ்ய பயணத்தை கண்டித்து நேற்று தொடங்கிய 3 நாள் இரவும், பகலும் நடைபெறும் உண்ணாவிரத போராட்டம் நாளை வரை நடைபெறுகிறது.
இந்த நிலையில் கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதல் உலை ஓரிரு வாரங்களில் செயல்பட தொடங்குமென பிரதமர் மன்மோகன்சிங் வெளியிட்ட அறிவிப்பபு பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த கட்ட தீவிரப் போராட்டத்துக்கு மக்கள் தயாராகிறார்கள். இதுகுறித்த ஆலோசனைக் கூட்டமும் இன்று நடக்கிறது.
மக்கள் நலன் பற்றி கிஞ்சித்தும் அக்கறையற்று, மேலும் மேலும் அணு உலை அமைக்க திட்டமிடும் மன்மோகன் சிங்கின் நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க மக்கள்அனைவரும் திரண்டு வர வேண்டும் என போராட்டக் குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.
அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் இந்தப் போராட்டம் நடக்க வேண்டும் என போராட்டக்குழு முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் கூறுகையில், "தமிழக மக்களுக்கு எதிரான திட்டமிட்ட சதிதான் இப்போது நடக்கிறது. பிரதமர் நம் உணர்வுகளை கொஞ்சமும் கருத்தில் கொள்ளவில்லை. இன்னும் இரண்டே வாரங்களில் அணு உலை தொடங்கும் என்று அவர் அறிவிக்கிறார் என்றால், ரகசியமாக அணு உலைப் பணிகள் நடந்துள்ளதாகத்தானே அர்த்தம்?," என்றார்.
கூடங்குளம்: ரஷ்யா போன இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், அங்கிருந்தபடியே கூடங்குளம் அணுமின் நிலைய உற்பத்தி அடுத்த வாரம் தொடங்கும் என அறிவித்துள்ளது, அணுமின்நிலையத்துக்கு எதிரான போராட்டக்குவுவுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.
தங்கள் அடுத்த கட்டப் போராட்டம் குறித்து இன்று கலந்தாலோசிக்கிறார்கள்.
கூடங்குளத்தில் 1000 மெகாவாட் மின் உற்பத்தி திறனை கொண்ட முதல் அணு உலை பணிகள் 99.2 சதவீதம் முடிந்துவிட்டன. இதுபோல் மற்றொரு யூனிட் பணிகளும் பெருமளவு முடிந்துவிட்டன. இதுவும் 1000 மெகாவாட் மின் உற்பத்தி திறனை கொண்டது. இந்த அணுஉலைகளால் மக்களுக்கு பெரும் ஆபத்து காத்திருக்கிறது என்பதால் மூட வலியுறுத்தி மக்கள் இடிந்தகரை கிராமத்தில் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதனால் கூடங்குளம் அணு மின்நிலைய பணிகள் முடங்கியது. ஆகவே போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு சார்பில் நிபுணர் குழு அமைக்கப்பட்டது. அந்த நிபுணர் குழுவினர் போராட்டக்காரர்கள் அடங்கிய மாநில குழுவுடன் 3 கட்டம் நடத்திய பேச்சு வார்த்தைகளும் தோல்வி அடைந்தன.
இந்த நிலையில் பிரதமர் மன்மோகன்சிங் 3 நாள் பயணமாக ரஷ்யா சென்றுள்ளார். அவரது பயணத்தின் போது கூடங்குளத்தில் கூடுதலாக அணு உலைகள் அமைப்பது தொடர்பாக ரஷ்யாவுடன் ஒப்பந்தம் கையெழுத்தாகுமென தகவல் வெளியானது. எனவே பிரதமர் மன்மோகன்சிங்கின் ரஷ்யா பயணத்தை கண்டித்து இடிந்த கரையில் அணுமின் நிலைய எதிர்ப்பாளர்கள் நேற்று கறுப்பு கொடி ஏற்றி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.
இடிந்தகரை உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட மீனவ கிராம மக்கள் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டனர். கூடங்குளம், வைராவிகிணறு கிராம மக்கள் கடைகளை அடைத்து விட்டு உண்ணாவிரதத்தில் பங்கேற்றனர். அணுமின் எதிர்ப்பாளர்கள் வீடுகளிலும், கடைகளிலும் கறுப்பு கொடி ஏற்றி இருந்தனர்.
மீனவர்கள் தங்கள் படகுகளில் கறுப்பு கொடி ஏற்றினர். ஏற்கனவே இடிந்த கரையில் அணுமின் நிலைய எதிர்ப்பாளர்கள் இருந்துவரும் தொடர் உண்ணாவிரத போராட்டம் இன்று 61-வது நாளை எட்டியுள்ள நிலையில், பிரதமரின் ரஷ்ய பயணத்தை கண்டித்து நேற்று தொடங்கிய 3 நாள் இரவும், பகலும் நடைபெறும் உண்ணாவிரத போராட்டம் நாளை வரை நடைபெறுகிறது.
இந்த நிலையில் கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதல் உலை ஓரிரு வாரங்களில் செயல்பட தொடங்குமென பிரதமர் மன்மோகன்சிங் வெளியிட்ட அறிவிப்பபு பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த கட்ட தீவிரப் போராட்டத்துக்கு மக்கள் தயாராகிறார்கள். இதுகுறித்த ஆலோசனைக் கூட்டமும் இன்று நடக்கிறது.
மக்கள் நலன் பற்றி கிஞ்சித்தும் அக்கறையற்று, மேலும் மேலும் அணு உலை அமைக்க திட்டமிடும் மன்மோகன் சிங்கின் நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க மக்கள்அனைவரும் திரண்டு வர வேண்டும் என போராட்டக் குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.
அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் இந்தப் போராட்டம் நடக்க வேண்டும் என போராட்டக்குழு முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் கூறுகையில், "தமிழக மக்களுக்கு எதிரான திட்டமிட்ட சதிதான் இப்போது நடக்கிறது. பிரதமர் நம் உணர்வுகளை கொஞ்சமும் கருத்தில் கொள்ளவில்லை. இன்னும் இரண்டே வாரங்களில் அணு உலை தொடங்கும் என்று அவர் அறிவிக்கிறார் என்றால், ரகசியமாக அணு உலைப் பணிகள் நடந்துள்ளதாகத்தானே அர்த்தம்?," என்றார்.
Re: கூடங்குளம் போராட்டம் -நாராயணசாமி மீது சட்டப்பூர்வமாக வழக்கு தொடர்வேன்- உதயகுமார்ி[ (செய்தி தொகுப்பு 18.12.2011)
#695941- GuestGuest
கூடங்குளம் மின் நிலையத்தை துவக்க தூத்துக்குடியில் டிசம்பர் 20ம் தேதி கடையடைப்பு போராட்டம்
தூத்துக்குடி: கூடங்குளம் அணு மின் நிலையத்தில் மின் உற்பத்தியை துவக்க கோரி தூத்துக்குடியில் வரும் 20ம் தேதி சிறுத்தொழில் நிறுவனங்கள் சார்பில் ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்க பொது செயலாளர் நேரு பிரகாஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
கூடங்குளம் அணு மின் நிலைய மின் உற்பத்தி ஒன்றே தமிழத்தின் மின் தட்டுபாட்டை ஓரளவு நிறைவேற்றும் என்று கருதுகிறோம். மின் தட்டுபாட்டால் தமிழகத்தின் சிறு, குறுந்தொழில்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன.
இதனால் கூடங்குளம் அணு மின் நிலைய உற்பத்தியை துவக்க கோரி வரும் 20ம் தேதி மாநில அளவில் கடையடைப்பு போராட்டம் நடத்த தமிழக குறு, சிறு தொழில் சங்கம் முடிவு செய்துள்ளது.
தடையற்ற மின்சாரம் பெற்று மாவட்டத்தில் சிறு தொழில்களை பாதுகாக்கவும், புதிய தொழில்கள் பெருகிடவும், தூத்துக்குடி மாவட்ட சிறு தொழிற்சாலைகள் இந்த போராட்டத்தில் கலந்து கொள்வது என்று துடிசியா நிர்வாக குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
துடிசியா உறுப்பினர்களும் இதர தொழிற்சாலைகளும் கூடங்குளம் அணு மின் உற்பத்தியை துவங்க வேண்டி வரும் 20ம் தேதி ஒரு நாள் கடையடைப்பு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது, என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தூத்துக்குடி: கூடங்குளம் அணு மின் நிலையத்தில் மின் உற்பத்தியை துவக்க கோரி தூத்துக்குடியில் வரும் 20ம் தேதி சிறுத்தொழில் நிறுவனங்கள் சார்பில் ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்க பொது செயலாளர் நேரு பிரகாஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
கூடங்குளம் அணு மின் நிலைய மின் உற்பத்தி ஒன்றே தமிழத்தின் மின் தட்டுபாட்டை ஓரளவு நிறைவேற்றும் என்று கருதுகிறோம். மின் தட்டுபாட்டால் தமிழகத்தின் சிறு, குறுந்தொழில்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன.
இதனால் கூடங்குளம் அணு மின் நிலைய உற்பத்தியை துவக்க கோரி வரும் 20ம் தேதி மாநில அளவில் கடையடைப்பு போராட்டம் நடத்த தமிழக குறு, சிறு தொழில் சங்கம் முடிவு செய்துள்ளது.
தடையற்ற மின்சாரம் பெற்று மாவட்டத்தில் சிறு தொழில்களை பாதுகாக்கவும், புதிய தொழில்கள் பெருகிடவும், தூத்துக்குடி மாவட்ட சிறு தொழிற்சாலைகள் இந்த போராட்டத்தில் கலந்து கொள்வது என்று துடிசியா நிர்வாக குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
துடிசியா உறுப்பினர்களும் இதர தொழிற்சாலைகளும் கூடங்குளம் அணு மின் உற்பத்தியை துவங்க வேண்டி வரும் 20ம் தேதி ஒரு நாள் கடையடைப்பு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது, என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Re: கூடங்குளம் போராட்டம் -நாராயணசாமி மீது சட்டப்பூர்வமாக வழக்கு தொடர்வேன்- உதயகுமார்ி[ (செய்தி தொகுப்பு 18.12.2011)
#696021- GuestGuest
கூடங்குளம் போராட்டம் “ரொம்ப ஓவர்”: பிரதமர் மன்மோகன் சிங
புதுடில்லி: கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிரான போராட்டம் மிகையானது என்ற கருத்து உள்ளதாக பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
3 நாள் அரசுமுறை பயணமாக ரஷ்யா சென்று விட்டு, நாடு திரும்பும் வழியில் விமானத்தில் நிருபர்களிடம் பிரதமர் மன்மோகன் சிங் பேசினார். அப்போது, கூடங்குளம் அணுமின் நிலையம் உலகில் மற்றெங்கும் இல்லாத வகையில் மிகவும் பாதுகாப்பானதாக கட்டப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், கூடங்குளம் அணு மின் நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மிகச்சிறப்பானதாக வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் உறுதியளித்தார். கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிரான போராட்டம் குறித்து கருத்து தெரிவித்த பிரதமர், அணு மின் நிலையத்திற்கு எதிரான போராட்டம் மிகையாக உள்ளதாக தெரிவித்தார். ரூ. 14 ஆயிரம் கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள அணுமின் நிலையத்தை, போராட்டம் காரணமாக பயனற்றதாக விட்டுவிடமுடியாது என்றும் பிரதமர் தெரிவித்தார்.
பின்னர் லோக்பால் மசோதா குறித்து பிரதமர் கூறுகையில், வலுவான லோக்பால் மசோதாவை நடந்து வரும் பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடரிலேயே லோக்பால் மசோதாவை நிறைவேற்ற அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுத்து வருவதாக தெரிவித்தார். இது தொடர்பாக, நாளை மத்திய அமைச்சரவையின் ஆலோசனைக்காக லோக்பால் மசோதா கொண்டுவரப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.
நாட்டிற்கு தேவையான அத்தியாவதிய சீர்திருத்தங்களை கூட்டணிக்கட்சிகளுடன் கலந்தாலோசித்து மத்திய அரசு மேற்கொள்ளும் என்று தெரிவித்த பிரதமர், இந்திய பொருளாதாரத்தில் தற்போது ஏற்பட்டுள்ள சிக்கல்கள் தற்காலிகமானது என்றும் கூறினார். சிதம்பரம் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து பதிலளித்த பிரதமர், தான் சிதம்பரத்தை சந்திப்பதற்கான வாய்ப்பு இதுவரை கிடைக்க வில்லை என்றும், தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள சிதம்பரத்தின் பதிலையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
தினமலர்
புதுடில்லி: கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிரான போராட்டம் மிகையானது என்ற கருத்து உள்ளதாக பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
3 நாள் அரசுமுறை பயணமாக ரஷ்யா சென்று விட்டு, நாடு திரும்பும் வழியில் விமானத்தில் நிருபர்களிடம் பிரதமர் மன்மோகன் சிங் பேசினார். அப்போது, கூடங்குளம் அணுமின் நிலையம் உலகில் மற்றெங்கும் இல்லாத வகையில் மிகவும் பாதுகாப்பானதாக கட்டப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், கூடங்குளம் அணு மின் நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மிகச்சிறப்பானதாக வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் உறுதியளித்தார். கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிரான போராட்டம் குறித்து கருத்து தெரிவித்த பிரதமர், அணு மின் நிலையத்திற்கு எதிரான போராட்டம் மிகையாக உள்ளதாக தெரிவித்தார். ரூ. 14 ஆயிரம் கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள அணுமின் நிலையத்தை, போராட்டம் காரணமாக பயனற்றதாக விட்டுவிடமுடியாது என்றும் பிரதமர் தெரிவித்தார்.
பின்னர் லோக்பால் மசோதா குறித்து பிரதமர் கூறுகையில், வலுவான லோக்பால் மசோதாவை நடந்து வரும் பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடரிலேயே லோக்பால் மசோதாவை நிறைவேற்ற அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுத்து வருவதாக தெரிவித்தார். இது தொடர்பாக, நாளை மத்திய அமைச்சரவையின் ஆலோசனைக்காக லோக்பால் மசோதா கொண்டுவரப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.
நாட்டிற்கு தேவையான அத்தியாவதிய சீர்திருத்தங்களை கூட்டணிக்கட்சிகளுடன் கலந்தாலோசித்து மத்திய அரசு மேற்கொள்ளும் என்று தெரிவித்த பிரதமர், இந்திய பொருளாதாரத்தில் தற்போது ஏற்பட்டுள்ள சிக்கல்கள் தற்காலிகமானது என்றும் கூறினார். சிதம்பரம் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து பதிலளித்த பிரதமர், தான் சிதம்பரத்தை சந்திப்பதற்கான வாய்ப்பு இதுவரை கிடைக்க வில்லை என்றும், தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள சிதம்பரத்தின் பதிலையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
தினமலர்
Re: கூடங்குளம் போராட்டம் -நாராயணசாமி மீது சட்டப்பூர்வமாக வழக்கு தொடர்வேன்- உதயகுமார்ி[ (செய்தி தொகுப்பு 18.12.2011)
#696022- GuestGuest
கூடங்குளம் எதிர்ப்பாளர்களுக்கு பணம் வருவதற்கான ஆதாரம் சிக்கியது: விசாரணை துரிதம்
சென்னை: ""கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டக்காரர்களுக்கு, பணம் வரும் பின்னணி குறித்து, மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு, நம்பத் தகுந்த ஆதாரங்கள் கிடைத்துள்ளன. அதன் அடிப்படையில், பணம் வரும் வழி குறித்து விசாரிக்கும் வகையில், நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது'' என, மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.
பிரதமர் அலுவலக இணை அமைச்சர் நாராயணசாமி, புதுச்சேரி செல்வதற்கு முன், சென்னை விமான நிலையத்தில் நேற்று அளித்த பேட்டி: மத்திய நிபுணர் குழுவுடன் பேச்சு நடத்திய, கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டக்காரர்கள், அணுமின் நிலையத்தின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து விளக்கம் கேட்காமல், வரை படம், ரஷ்ய ஒப்பந்தத்தின் நகல், செலவினம் குறித்த தகவல்களை கேட்டுள்ளனர். அணுமின் நிலைய திட்டத்தை தாமதப்படுத்துவதற்காகவே, அவர்கள், இவ்வாறு நடந்து கொள்கின்றனர். ஆனால், சமீபத்தில் பிரதமர் மன்மோகன்சிங் அறிவித்தபடி, அடுத்த சில வாரங்களில், கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதல் உலை செயல்படத் துவங்கும். அடுத்த ஆறு மாதங்களில், இரண்டாவது உலையும் இயக்கப்படும். கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டத்தை நடத்தும் தொண்டு நிறுவனத்திற்கு, போராட்டத்திற்கு ஆள் சேர்க்கவும், ஆடம்பர வாழ்க்கை வாழ்வதற்கும், பணம் தேவைப்படுகிறது. இதனால், அந்த நிறுவனத்திற்கு பணம் வரும் பின்னணி குறித்து, மத்திய அரசு, தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறது. இதில், நம்பத் தகுந்த சில ஆதாரங்கள், மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு தற்போது கிடைத்துள்ளன. இந்த ஆதாரங்களின் அடிப்படையில், விசாரணை நடந்து வருகிறது.
முதற்கட்டமாக, பணம் வரும் பின்னணி குறித்து விளக்கம் அளிக்கும்படி, போராட்டத்தை முன்னின்று நடத்தும் தொண்டு நிறுவனத்திற்கு, உள்துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வரும் 2020ம் ஆண்டில், இந்தியாவின் மின் தேவை, 40 ஆயிரம் மெகாவாட் என்ற அளவில் இருக்கும் என்பதால், மேலும் புதிய அணுமின் நிலையங்களை, ஆந்திரா, உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் நிறுவ, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அணுமின் நிலையங்களுக்கு தேவையான யுரேனியத்தைத் தர, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, தென்கொரியா உள்ளிட்ட நாடுகள் சம்மதித்துள்ளன. கூடங்குளம் அணுமின் நிலைய திட்டத்திற்கு, தமிழக அரசு முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறது. அறவழிப் போராட்டம் என்ற பெயரில், வன்முறை போராட்டம் நடக்கிறது. இது சம்பந்தமாக, 160க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், இதுவரை சம்பந்தப்பட்டவர்கள் மேல், போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. இவ்வாறு, இணை அமைச்சர் நாராயணசாமி கூறினார்.(புளுகினார் )
தமிழகத்திற்கு கூடுதல் மின்சாரம்: தமிழகத்தில் நிலவும் மின் பற்றாக்குறையை சமாளிக்க, மத்திய தொகுப்பில் இருந்து கூடுதல் மின்சாரம் வழங்க வேண்டும் என்று, முதல்வர் ஜெயலலிதா சமீபத்தில் பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு கடிதம் எழுதியிருந்தார். இது குறித்து, இணை அமைச்சர் நாராயணசாமி கூறுகையில், "முதல்வர் ஜெயலலிதாவின் கோரிக்கையை ஏற்று, மத்திய தொகுப்பில் இருந்து தமிழகத்திற்கு கூடுதல் மின்சாரம் வழங்க, பிரதமர் மன்மோகன்சிங் உத்தரவிட்டுள்ளார். இதன்படி, விரைவில் பகல் நேரத்தில் 100 மெகாவாட்டும், இரவில் 750 மெகாவாட்டும், மத்திய தொகுப்பில் இருந்து, தமிழகத்திற்கு வழங்கப்படும்' என்றார்.
சென்னை: ""கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டக்காரர்களுக்கு, பணம் வரும் பின்னணி குறித்து, மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு, நம்பத் தகுந்த ஆதாரங்கள் கிடைத்துள்ளன. அதன் அடிப்படையில், பணம் வரும் வழி குறித்து விசாரிக்கும் வகையில், நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது'' என, மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.
பிரதமர் அலுவலக இணை அமைச்சர் நாராயணசாமி, புதுச்சேரி செல்வதற்கு முன், சென்னை விமான நிலையத்தில் நேற்று அளித்த பேட்டி: மத்திய நிபுணர் குழுவுடன் பேச்சு நடத்திய, கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டக்காரர்கள், அணுமின் நிலையத்தின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து விளக்கம் கேட்காமல், வரை படம், ரஷ்ய ஒப்பந்தத்தின் நகல், செலவினம் குறித்த தகவல்களை கேட்டுள்ளனர். அணுமின் நிலைய திட்டத்தை தாமதப்படுத்துவதற்காகவே, அவர்கள், இவ்வாறு நடந்து கொள்கின்றனர். ஆனால், சமீபத்தில் பிரதமர் மன்மோகன்சிங் அறிவித்தபடி, அடுத்த சில வாரங்களில், கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதல் உலை செயல்படத் துவங்கும். அடுத்த ஆறு மாதங்களில், இரண்டாவது உலையும் இயக்கப்படும். கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டத்தை நடத்தும் தொண்டு நிறுவனத்திற்கு, போராட்டத்திற்கு ஆள் சேர்க்கவும், ஆடம்பர வாழ்க்கை வாழ்வதற்கும், பணம் தேவைப்படுகிறது. இதனால், அந்த நிறுவனத்திற்கு பணம் வரும் பின்னணி குறித்து, மத்திய அரசு, தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறது. இதில், நம்பத் தகுந்த சில ஆதாரங்கள், மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு தற்போது கிடைத்துள்ளன. இந்த ஆதாரங்களின் அடிப்படையில், விசாரணை நடந்து வருகிறது.
முதற்கட்டமாக, பணம் வரும் பின்னணி குறித்து விளக்கம் அளிக்கும்படி, போராட்டத்தை முன்னின்று நடத்தும் தொண்டு நிறுவனத்திற்கு, உள்துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வரும் 2020ம் ஆண்டில், இந்தியாவின் மின் தேவை, 40 ஆயிரம் மெகாவாட் என்ற அளவில் இருக்கும் என்பதால், மேலும் புதிய அணுமின் நிலையங்களை, ஆந்திரா, உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் நிறுவ, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அணுமின் நிலையங்களுக்கு தேவையான யுரேனியத்தைத் தர, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, தென்கொரியா உள்ளிட்ட நாடுகள் சம்மதித்துள்ளன. கூடங்குளம் அணுமின் நிலைய திட்டத்திற்கு, தமிழக அரசு முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறது. அறவழிப் போராட்டம் என்ற பெயரில், வன்முறை போராட்டம் நடக்கிறது. இது சம்பந்தமாக, 160க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், இதுவரை சம்பந்தப்பட்டவர்கள் மேல், போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. இவ்வாறு, இணை அமைச்சர் நாராயணசாமி கூறினார்.(புளுகினார் )
தமிழகத்திற்கு கூடுதல் மின்சாரம்: தமிழகத்தில் நிலவும் மின் பற்றாக்குறையை சமாளிக்க, மத்திய தொகுப்பில் இருந்து கூடுதல் மின்சாரம் வழங்க வேண்டும் என்று, முதல்வர் ஜெயலலிதா சமீபத்தில் பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு கடிதம் எழுதியிருந்தார். இது குறித்து, இணை அமைச்சர் நாராயணசாமி கூறுகையில், "முதல்வர் ஜெயலலிதாவின் கோரிக்கையை ஏற்று, மத்திய தொகுப்பில் இருந்து தமிழகத்திற்கு கூடுதல் மின்சாரம் வழங்க, பிரதமர் மன்மோகன்சிங் உத்தரவிட்டுள்ளார். இதன்படி, விரைவில் பகல் நேரத்தில் 100 மெகாவாட்டும், இரவில் 750 மெகாவாட்டும், மத்திய தொகுப்பில் இருந்து, தமிழகத்திற்கு வழங்கப்படும்' என்றார்.
Re: கூடங்குளம் போராட்டம் -நாராயணசாமி மீது சட்டப்பூர்வமாக வழக்கு தொடர்வேன்- உதயகுமார்ி[ (செய்தி தொகுப்பு 18.12.2011)
#696023- GuestGuest
கூடங்குளம்: பிரதமரின் அறிவிப்பு வியப்பளிக்கிறது: ஜெ.,
சென்னை: கூடங்குளம் அணு மின் நிலையம் இன்னும் சில தினங்களில் செயல்படத் துவங்கும் என பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்திருப்பது வியப்பை ஏற்படுத்துவதாக உள்ளது என, முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர், பிரதமருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: கூடங்குளம் மக்களின் அச்சத்தை போக்கிய பின்னரே அணு மின் நிலையம் தொடர்பான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என, தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த சூழலில், கூடங்குளம் அணு மின் நிலையம் இன்னும் சில தினங்களில் இயங்கும்' என நீங்கள் தெரிவித்திருப்பது வியப்பை ஏற்படுத்துவதாக உள்ளது. அப்பகுதி மக்களின் அச்சத்தை போக்கும் வகையில் மத்திய அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதா? கூடங்குளம் பகுதி மக்கள் தெரிவிக்கும் திருப்திகரமான கருத்துதான் எனக்கும், தமிழக அரசுக்கும் முக்கியம். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
ஆலோசனை: முல்லைப் பெரியாறு அணை பிரச்னையால், தேனி மாவட்டத்தில் நிலவும் பதட்டமான நிலை குறித்து, முதல்வர் ஜெயலலிதா, தலைமைச் செயலகத்தில் நேற்று மாலை, காவல் துறை உயர் அதிகாரிகளுடன் விரிவாக ஆலோசனை நடத்தினார்.
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில், கேரளாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மாநிலம் முழுவதும் பரவலாக ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகின்றன. பல ஆயிரக்கணக்கான மக்கள் தினமும் ஒன்றுதிரண்டு, கேரளத்திற்குள் நுழைய முயற்சிப்பது, கேரள முதல்வர் கொடும்பாவி எரிப்பு, கண்டன ஆர்ப்பாட்டம் என, தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மக்களை கட்டுப்படுத்த முடியாமல், போலீசார் திணறி வருகின்றனர். மக்களின் போராட்டங்களை போலீசார் அடக்க முயலும்போது, இரு தரப்பினரும் ஒருவருக்கு ஒருவர் தாக்குதலில் ஈடுபடும் சம்பவங்களும் நடக்கின்றன. கடந்த 15ம் தேதி நடந்த, சட்டசபை சிறப்புக் கூட்டத்தில், "முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில், தமிழகத்தின் உரிமையை விட்டுக் கொடுக்க மாட்டோம்; மக்கள் அமைதியாக இருக்க வேண்டும்' என, முதல்வர் ஜெயலலிதா அழைப்பு விடுத்தார். எனினும், மக்களிடையே ஏற்பட்டுள்ள கொந்தளிப்பு அடங்கவில்லை. அவர்களின் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருகிறது. இதனால், அங்குள்ள சட்டம் - ஒழுங்கு நிலவரம் குறித்தும், மாநிலத்தின் பிற பகுதிகளில் உள்ள சட்டம் - ஒழுங்கு நிலவரம் குறித்தும், முதல்வர் ஜெயலலிதா, நேற்று மாலை, காவல் துறை உயர் அதிகாரிகளுடன் திடீரென ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.
தலைமைச் செயலர் தேபேந்திரநாத் சாரங்கி, உள்துறை செயலர் ரமேஷ்ராம் மிஸ்ரா, டி.ஜி.பி., ராமானுஜம், சட்டம் - ஒழுங்கு ஏ.டி.ஜி.பி., ஜார்ஜ், உளவுப்பிரிவு ஐ.ஜி., தாமரைக்கண்ணன் மற்றும் மின்வாரிய தலைவர் ராஜிவ்ரஞ்சன், செயலர் ரமேஷ்குமார் கன்னா ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர். தேனி மாவட்டத்தில் நிலவும் பதட்டமான நிலையை தணிப்பது குறித்தும், எவ்வித அசம்பாவிதங்களும் நடந்துவிடாதபடி, போதிய பாதுகாப்பு பணிகளை பலப்படுத்துவது குறித்தும், முதல்வர் விரிவாக ஆலோசித்தார்.
தினமலர்
சென்னை: கூடங்குளம் அணு மின் நிலையம் இன்னும் சில தினங்களில் செயல்படத் துவங்கும் என பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்திருப்பது வியப்பை ஏற்படுத்துவதாக உள்ளது என, முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர், பிரதமருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: கூடங்குளம் மக்களின் அச்சத்தை போக்கிய பின்னரே அணு மின் நிலையம் தொடர்பான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என, தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த சூழலில், கூடங்குளம் அணு மின் நிலையம் இன்னும் சில தினங்களில் இயங்கும்' என நீங்கள் தெரிவித்திருப்பது வியப்பை ஏற்படுத்துவதாக உள்ளது. அப்பகுதி மக்களின் அச்சத்தை போக்கும் வகையில் மத்திய அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதா? கூடங்குளம் பகுதி மக்கள் தெரிவிக்கும் திருப்திகரமான கருத்துதான் எனக்கும், தமிழக அரசுக்கும் முக்கியம். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
ஆலோசனை: முல்லைப் பெரியாறு அணை பிரச்னையால், தேனி மாவட்டத்தில் நிலவும் பதட்டமான நிலை குறித்து, முதல்வர் ஜெயலலிதா, தலைமைச் செயலகத்தில் நேற்று மாலை, காவல் துறை உயர் அதிகாரிகளுடன் விரிவாக ஆலோசனை நடத்தினார்.
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில், கேரளாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மாநிலம் முழுவதும் பரவலாக ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகின்றன. பல ஆயிரக்கணக்கான மக்கள் தினமும் ஒன்றுதிரண்டு, கேரளத்திற்குள் நுழைய முயற்சிப்பது, கேரள முதல்வர் கொடும்பாவி எரிப்பு, கண்டன ஆர்ப்பாட்டம் என, தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மக்களை கட்டுப்படுத்த முடியாமல், போலீசார் திணறி வருகின்றனர். மக்களின் போராட்டங்களை போலீசார் அடக்க முயலும்போது, இரு தரப்பினரும் ஒருவருக்கு ஒருவர் தாக்குதலில் ஈடுபடும் சம்பவங்களும் நடக்கின்றன. கடந்த 15ம் தேதி நடந்த, சட்டசபை சிறப்புக் கூட்டத்தில், "முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில், தமிழகத்தின் உரிமையை விட்டுக் கொடுக்க மாட்டோம்; மக்கள் அமைதியாக இருக்க வேண்டும்' என, முதல்வர் ஜெயலலிதா அழைப்பு விடுத்தார். எனினும், மக்களிடையே ஏற்பட்டுள்ள கொந்தளிப்பு அடங்கவில்லை. அவர்களின் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருகிறது. இதனால், அங்குள்ள சட்டம் - ஒழுங்கு நிலவரம் குறித்தும், மாநிலத்தின் பிற பகுதிகளில் உள்ள சட்டம் - ஒழுங்கு நிலவரம் குறித்தும், முதல்வர் ஜெயலலிதா, நேற்று மாலை, காவல் துறை உயர் அதிகாரிகளுடன் திடீரென ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.
தலைமைச் செயலர் தேபேந்திரநாத் சாரங்கி, உள்துறை செயலர் ரமேஷ்ராம் மிஸ்ரா, டி.ஜி.பி., ராமானுஜம், சட்டம் - ஒழுங்கு ஏ.டி.ஜி.பி., ஜார்ஜ், உளவுப்பிரிவு ஐ.ஜி., தாமரைக்கண்ணன் மற்றும் மின்வாரிய தலைவர் ராஜிவ்ரஞ்சன், செயலர் ரமேஷ்குமார் கன்னா ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர். தேனி மாவட்டத்தில் நிலவும் பதட்டமான நிலையை தணிப்பது குறித்தும், எவ்வித அசம்பாவிதங்களும் நடந்துவிடாதபடி, போதிய பாதுகாப்பு பணிகளை பலப்படுத்துவது குறித்தும், முதல்வர் விரிவாக ஆலோசித்தார்.
தினமலர்
Re: கூடங்குளம் போராட்டம் -நாராயணசாமி மீது சட்டப்பூர்வமாக வழக்கு தொடர்வேன்- உதயகுமார்ி[ (செய்தி தொகுப்பு 18.12.2011)
#696024தமிழர்களை முல்லை பெரியாறு பக்கம் திசை திருப்பி, வெற்றிகரமாக மன்மோகன்சிங் ரஷ்யா சென்று அனைத்துக் காரியங்களையும் முடித்துத் திரும்பியுள்ளார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கூடங்குளம் போராட்டம் -நாராயணசாமி மீது சட்டப்பூர்வமாக வழக்கு தொடர்வேன்- உதயகுமார்ி[ (செய்தி தொகுப்பு 18.12.2011)
#696025- GuestGuest
ரூ.14 ஆயிரம் கோடியை வீணாக்க முடியாது: பிரதமர் மன்மோகன் எச்சரிக்கை
புதுடில்லி: "கூடங்குளம் அணு மின் திட்டத்துக்காக, 14 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. எனவே, அந்த திட்டத்தை, தொடர்ந்து கிடப்பில் போட முடியாது. அணு மின் நிலையத்தை செயல்படாமல் வைத்திருக்க முடியாது' என, பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.
ரஷ்யாவுக்கு, அரசு முறைப் பயணம் மேற்கொண்ட பிரதமர் மன்மோகன் சிங், நேற்று டில்லி திரும்பும் போது, சிறப்பு விமானத்தில், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது: கூடங்குளம் அணு மின் திட்டத்தின் பாதுகாப்புத் தன்மை குறித்து, சிலர் கவலை எழுப்புகின்றனர். இதனால், சில பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன. உலகில் உள்ள அணு மின் திட்டங்களிலேயே, மிகவும் பாதுகாப்பானது கூடங்குளம் திட்டம் என்பதை உறுதி செய்ய, மத்திய அரசு அதிக முயற்சி எடுத்துள்ளது. இந்த திட்டத்துக்காக, 14 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வளவு தொகையை முதலீடு செய்த பின், அந்த திட்டத்தை கிடப்பில் போட முடியாது. அந்த மின் நிலையத்தை செயல்படாமல் வைத்திருக்க முடியாது. தமிழகத்தில், ஏற்கனவே மின் பற்றாக்குறை உள்ளது. இந்நிலையில், 2,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் இந்த திட்டத்தை கிடப்பில் போடுவது சரியல்ல என்பதை, தமிழக மக்களும் புரிந்து கொள்வர் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. இந்த அணு மின் நிலையத்தில் உற்பத்தி செய்யப்படும், 1,000 மெகாவாட் மின்சாரம், தமிழகத்துக்கு வழங்கப்படும். மீதமுள்ள மின்சாரம், தென் மாநிலங்களுக்கு வழங்கப்படும். அங்கு நடந்து வரும் போராட்டங்கள், மிகையானது; அளவுக்கு மீறியது. நான் மட்டுமல்ல, எம்.பி.,க்கள் உள்ளிட்ட அனைவரின் கருத்தும் இது தான். இந்த விவகாரத்தில், இறுதியாக நல்ல தீர்வு ஏற்படும் என்று நம்பிக்கை உள்ளது.
முல்லைப் பெரியாறு: முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில், தற்போது ஏற்பட்டுள்ள பிரச்னைக்கு, தமிழக முதல்வரும், கேரள முதல்வரும் இணைந்து, நல்ல தீர்வு காண்பார்கள் என நம்புகிறேன். இவ்வாறு, பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.
நடப்பு கூட்டத் தொடரில்லோக்பால் மசோதா தாக்கல்: பிரதமர் மன்மோகன் சிங் கூறுகையில், "பார்லிமென்ட் நடப்பு கூட்டத் தொடரிலேயே, லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என, அரசு உறுதியாக உள்ளது. இந்த விஷயத்தில், அரசின் நேர்மையான செயல்பாட்டை சந்தேகிக்கக் கூடாது. மசோதாவுக்கு இறுதி வடிவம் கொடுக்கும் பணிகள், இரவு பகலாக நடக்கின்றன. நாளை (இன்று) இந்த மசோதா குறித்து, அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு, முடிவு எடுக்கப்படும். இதற்கு பின், மசோதா, பார்லிமென்டில் தாக்கல் செய்யப்படும். நாளை மறுநாள் அல்லது அதற்கு அடுத்த நாட்களில், பார்லிமென்டில் மசோதா தாக்கல் செய்யப்பட வாய்ப்பு உள்ளது. அதற்கு பின், இந்த விவகாரம் குறித்து, பார்லிமென்ட் தான் முடிவு செய்யும்' என்றார்.
தினமலர்
புதுடில்லி: "கூடங்குளம் அணு மின் திட்டத்துக்காக, 14 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. எனவே, அந்த திட்டத்தை, தொடர்ந்து கிடப்பில் போட முடியாது. அணு மின் நிலையத்தை செயல்படாமல் வைத்திருக்க முடியாது' என, பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.
ரஷ்யாவுக்கு, அரசு முறைப் பயணம் மேற்கொண்ட பிரதமர் மன்மோகன் சிங், நேற்று டில்லி திரும்பும் போது, சிறப்பு விமானத்தில், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது: கூடங்குளம் அணு மின் திட்டத்தின் பாதுகாப்புத் தன்மை குறித்து, சிலர் கவலை எழுப்புகின்றனர். இதனால், சில பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன. உலகில் உள்ள அணு மின் திட்டங்களிலேயே, மிகவும் பாதுகாப்பானது கூடங்குளம் திட்டம் என்பதை உறுதி செய்ய, மத்திய அரசு அதிக முயற்சி எடுத்துள்ளது. இந்த திட்டத்துக்காக, 14 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வளவு தொகையை முதலீடு செய்த பின், அந்த திட்டத்தை கிடப்பில் போட முடியாது. அந்த மின் நிலையத்தை செயல்படாமல் வைத்திருக்க முடியாது. தமிழகத்தில், ஏற்கனவே மின் பற்றாக்குறை உள்ளது. இந்நிலையில், 2,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் இந்த திட்டத்தை கிடப்பில் போடுவது சரியல்ல என்பதை, தமிழக மக்களும் புரிந்து கொள்வர் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. இந்த அணு மின் நிலையத்தில் உற்பத்தி செய்யப்படும், 1,000 மெகாவாட் மின்சாரம், தமிழகத்துக்கு வழங்கப்படும். மீதமுள்ள மின்சாரம், தென் மாநிலங்களுக்கு வழங்கப்படும். அங்கு நடந்து வரும் போராட்டங்கள், மிகையானது; அளவுக்கு மீறியது. நான் மட்டுமல்ல, எம்.பி.,க்கள் உள்ளிட்ட அனைவரின் கருத்தும் இது தான். இந்த விவகாரத்தில், இறுதியாக நல்ல தீர்வு ஏற்படும் என்று நம்பிக்கை உள்ளது.
முல்லைப் பெரியாறு: முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில், தற்போது ஏற்பட்டுள்ள பிரச்னைக்கு, தமிழக முதல்வரும், கேரள முதல்வரும் இணைந்து, நல்ல தீர்வு காண்பார்கள் என நம்புகிறேன். இவ்வாறு, பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.
நடப்பு கூட்டத் தொடரில்லோக்பால் மசோதா தாக்கல்: பிரதமர் மன்மோகன் சிங் கூறுகையில், "பார்லிமென்ட் நடப்பு கூட்டத் தொடரிலேயே, லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என, அரசு உறுதியாக உள்ளது. இந்த விஷயத்தில், அரசின் நேர்மையான செயல்பாட்டை சந்தேகிக்கக் கூடாது. மசோதாவுக்கு இறுதி வடிவம் கொடுக்கும் பணிகள், இரவு பகலாக நடக்கின்றன. நாளை (இன்று) இந்த மசோதா குறித்து, அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு, முடிவு எடுக்கப்படும். இதற்கு பின், மசோதா, பார்லிமென்டில் தாக்கல் செய்யப்படும். நாளை மறுநாள் அல்லது அதற்கு அடுத்த நாட்களில், பார்லிமென்டில் மசோதா தாக்கல் செய்யப்பட வாய்ப்பு உள்ளது. அதற்கு பின், இந்த விவகாரம் குறித்து, பார்லிமென்ட் தான் முடிவு செய்யும்' என்றார்.
தினமலர்
Re: கூடங்குளம் போராட்டம் -நாராயணசாமி மீது சட்டப்பூர்வமாக வழக்கு தொடர்வேன்- உதயகுமார்ி[ (செய்தி தொகுப்பு 18.12.2011)
#696026- GuestGuest
கருத்து :
தமிழ்நாட்டிற்கு 1500 mw மின்சாரம் தர அனுமதித்தால் மேலும் கூடங்குளத்தில் வாழும் மக்களுக்கு வேலை கிடைக்கவும் மற்றும் அங்கு வாழும் மக்களுக்கு ஒரு குறிப்பிட்ட காப்பீட்டு தொகையை மத்திய அரசு செலுத்திவந்தால், அங்கு அனுமதி கொடுக்கலாம். இல்லையெனில் இதனால் வரும் ஆபத்தை எந்த மாநிலம் வரவேற்கிறதோ, அங்கு போகட்டும். நமக்கு தேவை இல்லை. கூடங்குளம் அணுமின்நிலையத்தை ஆதரிக்கும் தமிழர்கள் அங்கு வாழ்வதில்லை. அவர்கள் வெளிமாநிலத்தில் அல்லது வெளி மாவட்டத்தில் வாழ்ந்துகொண்டு அவர்கள் சொகுசாக டிவியில் நமிதா டான்ஸ் பார்க்க மின்சாரம் வேண்டும். அதற்காக மற்ற கூடங்குளத்தில் வாழும் தமிழர்களை பலிகொடுக்க தயாராகி நமக்கு கட்டுபடியாகாது என்று கதை விடுகின்றனர். ராஜாவினால் ரெண்டு லட்சம் கோடி அரசுக்கு நஷ்டம் என்று கூறுபவர்களுக்கு பதினாலாயிரம் கோடி ஒன்றும் பெருசல்ல. காமன்வெல்த் விளையாட்டிற்கு மத்திய அரசு தொண்ணூறு ஆயிரம் கோடி செலவழித்தது. ரஷ்யாவை நம்பி இறங்குவது மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்குவது போன்றது. ரஷ்யாவில் நடந்த செர்நோபில் விபத்து பற்றி மக்களுக்கு தெரிந்து இருக்கும். இன்றைக்கு அணு மின் உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் நாடு பிரான்ஸ். அதையாவது நம்பலாம். ரஷ்யாவை நம்பி போவது ஆபத்து. அதனால் இது பெரிய ஆபத்து இல்லை என்று கூறுபவர்கள் கூடங்குளத்தில் வாழ வேண்டும். அறிவுரை கூறுவது எளிது. ஆபத்தை உணரும் மக்களுக்கு உரிய சன்மானம் கிடைத்தால், ஓகே. ரிஸ்க் அவன் எடுப்பான். நான் பழம் சாப்பிடுவேன் என்ற கதை வேண்டாம்.இதேபோல்தான் கேரளாவில் அணை உடைந்து உயிர்போயவிடும் என்று சொல்லும் கும்பலுக்கும் ஆதரவு இருக்கிறது. அதனால் நமக்கொரு தீர்ப்பு, மலையாளிக்கு ஒரு தீர்ப்பு என்று சொல்ல முடியாது.
ரவி , கனடா
தமிழ்நாட்டிற்கு 1500 mw மின்சாரம் தர அனுமதித்தால் மேலும் கூடங்குளத்தில் வாழும் மக்களுக்கு வேலை கிடைக்கவும் மற்றும் அங்கு வாழும் மக்களுக்கு ஒரு குறிப்பிட்ட காப்பீட்டு தொகையை மத்திய அரசு செலுத்திவந்தால், அங்கு அனுமதி கொடுக்கலாம். இல்லையெனில் இதனால் வரும் ஆபத்தை எந்த மாநிலம் வரவேற்கிறதோ, அங்கு போகட்டும். நமக்கு தேவை இல்லை. கூடங்குளம் அணுமின்நிலையத்தை ஆதரிக்கும் தமிழர்கள் அங்கு வாழ்வதில்லை. அவர்கள் வெளிமாநிலத்தில் அல்லது வெளி மாவட்டத்தில் வாழ்ந்துகொண்டு அவர்கள் சொகுசாக டிவியில் நமிதா டான்ஸ் பார்க்க மின்சாரம் வேண்டும். அதற்காக மற்ற கூடங்குளத்தில் வாழும் தமிழர்களை பலிகொடுக்க தயாராகி நமக்கு கட்டுபடியாகாது என்று கதை விடுகின்றனர். ராஜாவினால் ரெண்டு லட்சம் கோடி அரசுக்கு நஷ்டம் என்று கூறுபவர்களுக்கு பதினாலாயிரம் கோடி ஒன்றும் பெருசல்ல. காமன்வெல்த் விளையாட்டிற்கு மத்திய அரசு தொண்ணூறு ஆயிரம் கோடி செலவழித்தது. ரஷ்யாவை நம்பி இறங்குவது மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்குவது போன்றது. ரஷ்யாவில் நடந்த செர்நோபில் விபத்து பற்றி மக்களுக்கு தெரிந்து இருக்கும். இன்றைக்கு அணு மின் உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் நாடு பிரான்ஸ். அதையாவது நம்பலாம். ரஷ்யாவை நம்பி போவது ஆபத்து. அதனால் இது பெரிய ஆபத்து இல்லை என்று கூறுபவர்கள் கூடங்குளத்தில் வாழ வேண்டும். அறிவுரை கூறுவது எளிது. ஆபத்தை உணரும் மக்களுக்கு உரிய சன்மானம் கிடைத்தால், ஓகே. ரிஸ்க் அவன் எடுப்பான். நான் பழம் சாப்பிடுவேன் என்ற கதை வேண்டாம்.இதேபோல்தான் கேரளாவில் அணை உடைந்து உயிர்போயவிடும் என்று சொல்லும் கும்பலுக்கும் ஆதரவு இருக்கிறது. அதனால் நமக்கொரு தீர்ப்பு, மலையாளிக்கு ஒரு தீர்ப்பு என்று சொல்ல முடியாது.
ரவி , கனடா
Re: கூடங்குளம் போராட்டம் -நாராயணசாமி மீது சட்டப்பூர்வமாக வழக்கு தொடர்வேன்- உதயகுமார்ி[ (செய்தி தொகுப்பு 18.12.2011)
#696030- GuestGuest
கூடங்குளம் விவகாரம் பிரதரமரின் கருத்தை வரவேற்கின்றேன் - கருணாநிதி
கூடங்குளம் அணுமின் நிலையப் பணிகள் 2 வாரங்களில் தொடங்கப்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியிருப்பதை திமுக தலைவர் கருணாநிதி வரவேற்றுள்ளார்.
சென்னையில் திமுக தலைவர் கருணாநிதி அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
கேள்வி: மாஸ்கோவில் பேட்டியளித்த பிரதமர் மன்மோகன் சிங், கூடங்குளம் அணுமின் நிலையப் பணிகள் இன்னும் இரண்டு வாரங்களில் தொடங்கும் என்று கூறியிருக்கிறார். அப்படிச் செய்தால் போராட்டத்தைப் பெரிதாக்குவோம் என்று போராட்டக்காரர்கள் கூறுகின்றனர். உங்கள் கருத்து?
பதில்: பணிகள் தொடங்கும் என்று பிரதமர் கூறியிருக்கிறார் என்றால் அனைவரையும் கலந்துகொண்டுதான் சொல்லியிருக்க முடியும். கலந்து கொண்டு சொல்லியிருந்தால் அந்தக் கருத்து வரவேற்கத்தக்கதாகவே அமையும்.
கே: அஜீத் சிங் மத்திய அமைச்சராக இரண்டு நாள்களில் பதவியேற்க உள்ளார். திமுகவிற்கு இரண்டு அமைச்சர் இடங்கள் காலியாக உள்ளதை இப்போது நினைவுப்படுத்தி ஏற்றுக் கொள்வீர்களா?
ப: அதைப்பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை. பதவி பெறுவதில் அவ்வளவாக அவசரப்படவில்லை.
கே: முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக நீங்கள் அவசரக் கடிதம் எழுதியும் கேரளத்தில் தமிழர்கள் தாக்கப்படும் சம்பவம் தொடர்கிறது. அரசு என்ன செய்யலாம்?
ப: அதனால்தான் நான் ஏற்கெனவே அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்ட வேண்டுமென்று சொல்லியிருந்தேன். ஆனால் அது கூட்டப்படாமல் சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் மட்டுமே கூட்டப்பட்டது. அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்பட்டிருந்தால் மற்ற கட்சிகளையும் கலந்துகொண்டு ஒருவருக்கொருவர் கருத்துகளைக் கூறி விவாதித்திருக்க முடியும் என்று அவர் கூறினார்.
தினமலர்
கூடங்குளம் அணுமின் நிலையப் பணிகள் 2 வாரங்களில் தொடங்கப்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியிருப்பதை திமுக தலைவர் கருணாநிதி வரவேற்றுள்ளார்.
சென்னையில் திமுக தலைவர் கருணாநிதி அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
கேள்வி: மாஸ்கோவில் பேட்டியளித்த பிரதமர் மன்மோகன் சிங், கூடங்குளம் அணுமின் நிலையப் பணிகள் இன்னும் இரண்டு வாரங்களில் தொடங்கும் என்று கூறியிருக்கிறார். அப்படிச் செய்தால் போராட்டத்தைப் பெரிதாக்குவோம் என்று போராட்டக்காரர்கள் கூறுகின்றனர். உங்கள் கருத்து?
பதில்: பணிகள் தொடங்கும் என்று பிரதமர் கூறியிருக்கிறார் என்றால் அனைவரையும் கலந்துகொண்டுதான் சொல்லியிருக்க முடியும். கலந்து கொண்டு சொல்லியிருந்தால் அந்தக் கருத்து வரவேற்கத்தக்கதாகவே அமையும்.
கே: அஜீத் சிங் மத்திய அமைச்சராக இரண்டு நாள்களில் பதவியேற்க உள்ளார். திமுகவிற்கு இரண்டு அமைச்சர் இடங்கள் காலியாக உள்ளதை இப்போது நினைவுப்படுத்தி ஏற்றுக் கொள்வீர்களா?
ப: அதைப்பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை. பதவி பெறுவதில் அவ்வளவாக அவசரப்படவில்லை.
கே: முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக நீங்கள் அவசரக் கடிதம் எழுதியும் கேரளத்தில் தமிழர்கள் தாக்கப்படும் சம்பவம் தொடர்கிறது. அரசு என்ன செய்யலாம்?
ப: அதனால்தான் நான் ஏற்கெனவே அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்ட வேண்டுமென்று சொல்லியிருந்தேன். ஆனால் அது கூட்டப்படாமல் சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் மட்டுமே கூட்டப்பட்டது. அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்பட்டிருந்தால் மற்ற கட்சிகளையும் கலந்துகொண்டு ஒருவருக்கொருவர் கருத்துகளைக் கூறி விவாதித்திருக்க முடியும் என்று அவர் கூறினார்.
தினமலர்
Re: கூடங்குளம் போராட்டம் -நாராயணசாமி மீது சட்டப்பூர்வமாக வழக்கு தொடர்வேன்- உதயகுமார்ி[ (செய்தி தொகுப்பு 18.12.2011)
#0- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» கூடங்குளம் எதிர்ப்பாளர்களில் 6,800 பேர் மீது தேசதுரோக வழக்கு
» கூடங்குளம் அணுமின் நிலையம் 15 நாட்களில் திறக்கப்படும் - நாராயணசாமி
» புதுச்சேரி முதல்வராகிறார் நாராயணசாமி; எதிர் கோஷ்டியினர் போராட்டம்
» வழக்கு போட்ட போலீஸ் மீது வழக்கு: அன்புமணி ராமதாஸ்
» ஆம்புலன்ஸ் ஊழல் வழக்கு: கார்த்தி சிதம்பரம் மீது வழக்கு
» கூடங்குளம் அணுமின் நிலையம் 15 நாட்களில் திறக்கப்படும் - நாராயணசாமி
» புதுச்சேரி முதல்வராகிறார் நாராயணசாமி; எதிர் கோஷ்டியினர் போராட்டம்
» வழக்கு போட்ட போலீஸ் மீது வழக்கு: அன்புமணி ராமதாஸ்
» ஆம்புலன்ஸ் ஊழல் வழக்கு: கார்த்தி சிதம்பரம் மீது வழக்கு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2