ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வரலாற்று குறிப்புகள், தொழில்நுட்ப தகவல்கள் மூலம் கேரளத்தின் பொய்யை தூள்தூளாக்கிய ஜெயலலிதா!

3 posters

Go down

வரலாற்று குறிப்புகள், தொழில்நுட்ப தகவல்கள் மூலம் கேரளத்தின் பொய்யை தூள்தூளாக்கிய ஜெயலலிதா! Empty வரலாற்று குறிப்புகள், தொழில்நுட்ப தகவல்கள் மூலம் கேரளத்தின் பொய்யை தூள்தூளாக்கிய ஜெயலலிதா!

Post by Guest Thu Dec 15, 2011 8:40 pm

மத்திய நீர் ஆணையத்தின் பரிந்துரைகளின்படி, கட்டுமானத்தை வலுப்படுத்தும் அதே சமயத்தில், புதிய கட்டுமானத்தில் 10 அடி மற்றும், 45 அடி உயரத்திற்கு இரண்டு வடிகால் மாடங்கள், அதாவது Drainage Galleries அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், அணையிலிருந்து கசியும் நீர் அன்றாடம் கணக்கிடப்படுகிறது. அணை பாதுகாப்பாக, வலுவாக, ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், ஒரளவு நீர் கசிவு அணையிலிருந்து வெளியேறுவது அவசியம் என்பது விஞ்ஞானரீதியாக நிரூபிக்கப்பட்டு, நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறது என்பதை இந்தத் தருணத்தில் சுட்டிக்காட்ட விழைகிறேன்.

மேலும், அணையின் நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவான, 152 அடிக்கும் மேலாக உயர்கையில், அணையை பாதுகாக்கும் பொருட்டு உபரி நீர், ஏற்கெனவே உள்ள 36 x 16 அடி கொண்ட 10 மதகுகள் வழியாக வெளியேற்றப்படும். இதன் மூலம், ஒரு வினாடிக்கு 86,000 கன அடி நீரை வெளியேற்ற முடியும். இது மட்டுமல்லாமல், மத்திய நீர் ஆணையத்தின் ஆலோசனையின் பேரில், கூடுதலாக வினாடிக்கு 36,000 கன அடி நீரை வெளியேற்றும் திறன் கொண்ட 40 x 16 அடி அளவுள்ள மூன்று மதகுகள் கட்டப்பட்டுள்ளன. எனவே, தற்போது அணையிலிருந்து தோராயமாக வினாடிக்கு 1,22,000 கன அடி உபரி நீரை வெளியேற்ற முடியும்.

இதிலிருந்து, அணை மிகவும் பாதுகாப்பாக உள்ளது என்பதும் பாதுகாப்பை உறுதி செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை தமிழ்நாடு எடுத்துள்ளது என்பதும் தெள்ளத் தெளிவாகிறது.

இந்தச் சூழ்நிலையில், முல்லைப் பெரியாறு தொடர்பாக, ஏற்கெனவே நிலுவையில் இருந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் தமிழ்நாடு மற்றும் கேரள மாநில அரசுகள் எடுத்துரைத்த வாதங்களின் அடிப்படையிலும்; வல்லுநர்கள் அளித்த அறிக்கையின் அடிப்படையிலும்; முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை தற்போதுள்ள 136 அடியிலிருந்து 142 அடி வரை உயர்த்திக் கொள்ளலாம் என்றும்; அணையை வலுப்படுத்துவதற்கான எஞ்சிய பணிகளை தமிழ்நாடு மேற்கொள்ளலாம் என்றும்; மத்திய நீர் ஆணையம் திருப்தியடையும் வகையில், அணை பலப்படுத்தப் படுவதற்கான எஞ்சிய பணிகள் முடிவடைந்த பிறகு, அணையின் நீர்மட்டத்தை 152 அடி அளவுக்கு உயர்த்தப்பட அனுமதிப்பதற்கு முன்னர், தனிப்பட்ட வல்லுநர்கள் அணையின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்வார்கள் என்றும்; உச்ச நீதிமன்றம் 27.2.2006 அன்று தீர்ப்பளித்தது.

இந்த ஆணையில், அணை பாதுகாப்பாக உள்ளது குறித்து உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளவற்றை இங்கு எடுத்துக் கூறுவது பொருத்தமாக அமையும் என கருதுகிறேன்.

“… Regarding the issue as to the safety of the dam on water level being raised to 142 ft. from the present level of 136 ft., the various reports have examined the safety angle in depth including the view point of earthquake resistance. The apprehensions have been found to be baseless. …”

அதாவது, “தற்போதுள்ள 136 அடியிலிருந்து 142 அடி வரை அணையின் நீர் மட்டத்தை உயர்த்தும் போது, அணையின் பாதுகாப்பை பொறுத்த வரையில், நிலநடுக்கத்தினை எதிர்க்கும் சக்தி உட்பட அனைத்து பாதுகாப்பு கோணங்களையும் பல்வேறு அறிக்கைகள், ஆழமாக ஆராய்ந்துள்ளன. இதன்படி, முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பற்றது என்ற கவலை, ஐயப்பாடு ஆகிய அனைத்தும் ஆதாரமற்றவை ...” என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்து இருக்கிறது.

உச்ச நீதிமன்றம் மேலும் தனது தீர்ப்பில், “… The experts having reported about the safety of the dam and the Kerala Government having adopted an obstructionist approach, cannot now be permitted to take shelter under the plea that these are disputed questions of fact. There is no report to suggest that the safety of the dam would be jeopardized if the water level is raised for the present to 142 ft. …”

அதாவது, “அணை பாதுகாப்பாக உள்ளது என்று வல்லுநர்கள் தெரிவித்துள்ள நிலையில், இவைகள் எல்லாம் சர்ச்சைக்குரிய விஷயங்கள் என்ற சாக்கு போக்கை வைத்து, அதற்குத் தடை ஏற்படுத்தும் விதமான அணுகுமுறையை கேரள அரசு கடைபிடிப்பது அனுமதிக்க முடியாது. அணையின் நீர்மட்டத்தை 142 அடிக்கு உயர்த்தினால், அணையின் பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிக்கும் என்று எந்த அறிக்கையும் சுட்டிக்காட்டவில்லை ...” என்று உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் இந்த ஆணையை முடக்கும் வகையில், “கேரள பாசன மற்றும் நீர் பாதுகாப்பு (திருத்தச்) சட்டம், 2006”, கேரள சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்பட்டு; இந்தத் திருத்தச் சட்டம் 18.3.2006 முதல் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. இந்தச் சட்டத்தின்படி, முல்லைப் பெரியாறு அணையின் முழு நீர்மட்டம் 136 அடியாக நிர்ணயிக்கப்பட்டது. இந்தத் திருத்தச் சட்டம், அரசமைப்புச் சட்டத்திற்கு முரணானது என்று கூறி, தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த சிவில் வழக்கு இன்னமும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இவ்வழக்கில், கேரள அரசின் 2006-ஆம் ஆண்டைய சட்டத் திருத்தம் செல்லத்தக்கதா என்பது உட்பட சட்ட மற்றும் அரசமைப்பு ரீதியான அம்சங்களை தவிர, ஏனைய நிலைகளை பரிசீலிக்கும் பொருட்டு உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதியரசர் டாக்டர் ஏ.எஸ். ஆனந்த் தலைமையில், அதிகாரம் படைத்த குழு, அதாவது Empowered Committee ஒன்றை உச்ச நீதிமன்றம் 18.2.2010 அன்று நியமித்தது.

தமிழ்நாடும், கேரளாவும் தங்கள் மாநிலங்களின் சார்பாக இரண்டு உச்ச நீதிமன்ற முன்னாள் நீதியரசர்களை நியமித்தன. தற்போது, இந்த அதிகாரம் படைத்த குழு, முல்லைப் பெரியாறு அணை பகுதி மற்றும் பரிசோதனைக் கூடங்களில் பல்வேறு ஆய்வு மற்றும் சோதனைகளை மேற்கொள்வதற்காக மத்திய நீர் ஆணையம் (Central Water Commission); மத்திய நீர் மற்றும் மின்சார ஆராய்ச்சி நிலையம் (Central Water and Power Research Station); இந்திய புவியியல் அளவைத் துறை (Geological Survey of India); பாபா அணு ஆராய்ச்சி மையம் (Bhabha Atomic Research Centre) மற்றும் மத்திய மண் மற்றும் கட்டுமான பொருள்கள் ஆராய்ச்சி நிலையம் (Central Soil and Material Research Station) போன்ற அமைப்புகளின் சேவைகளை பயன்படுத்திக் கொண்டு வருகிறது. இந்தக் குழு தனது அறிக்கையை 2012ம் ஆண்டு பிப்ரவரி மாதம் உச்ச நீதிமன்றத்தின் முன் அளிக்க இருக்கிறது.

இந்தச் சூழ்நிலையில், அரசியல் ஆதாயத்திற்காக, முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பற்றது என்ற புரளியை கிளப்பி, கேரள மக்களை பீதியடையச் செய்யும் வகையில், விஷமப் பிரச்சாரத்தை, கேரள அரசு மேற்கொண்டு வருவது மிகவும் வருந்தத்தக்கது என்று கூறிய முதல்வர் ஜெயலலிதா, பின்னர் தீர்மானத்தை முன் மொழிந்தார்.

தட்ஸ் தமிழ்
avatar
Guest
Guest


Back to top Go down

வரலாற்று குறிப்புகள், தொழில்நுட்ப தகவல்கள் மூலம் கேரளத்தின் பொய்யை தூள்தூளாக்கிய ஜெயலலிதா! Empty Re: வரலாற்று குறிப்புகள், தொழில்நுட்ப தகவல்கள் மூலம் கேரளத்தின் பொய்யை தூள்தூளாக்கிய ஜெயலலிதா!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Thu Dec 15, 2011 9:09 pm

நன்று மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

வரலாற்று குறிப்புகள், தொழில்நுட்ப தகவல்கள் மூலம் கேரளத்தின் பொய்யை தூள்தூளாக்கிய ஜெயலலிதா! Empty Re: வரலாற்று குறிப்புகள், தொழில்நுட்ப தகவல்கள் மூலம் கேரளத்தின் பொய்யை தூள்தூளாக்கிய ஜெயலலிதா!

Post by கே. பாலா Thu Dec 15, 2011 9:14 pm

அணையின் வலுவை நிலைநாட்ட , ஒரு வலுவான முதல்வரை பெற்றிருப்பதில் நாம் பெருமை படலாம்


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

வரலாற்று குறிப்புகள், தொழில்நுட்ப தகவல்கள் மூலம் கேரளத்தின் பொய்யை தூள்தூளாக்கிய ஜெயலலிதா! Empty Re: வரலாற்று குறிப்புகள், தொழில்நுட்ப தகவல்கள் மூலம் கேரளத்தின் பொய்யை தூள்தூளாக்கிய ஜெயலலிதா!

Post by சார்லஸ் mc Thu Dec 15, 2011 9:19 pm

முதல்வருக்கு பாராட்டுக்கள்


வரலாற்று குறிப்புகள், தொழில்நுட்ப தகவல்கள் மூலம் கேரளத்தின் பொய்யை தூள்தூளாக்கிய ஜெயலலிதா! 154550வரலாற்று குறிப்புகள், தொழில்நுட்ப தகவல்கள் மூலம் கேரளத்தின் பொய்யை தூள்தூளாக்கிய ஜெயலலிதா! 154550வரலாற்று குறிப்புகள், தொழில்நுட்ப தகவல்கள் மூலம் கேரளத்தின் பொய்யை தூள்தூளாக்கிய ஜெயலலிதா! 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” வரலாற்று குறிப்புகள், தொழில்நுட்ப தகவல்கள் மூலம் கேரளத்தின் பொய்யை தூள்தூளாக்கிய ஜெயலலிதா! 154550வரலாற்று குறிப்புகள், தொழில்நுட்ப தகவல்கள் மூலம் கேரளத்தின் பொய்யை தூள்தூளாக்கிய ஜெயலலிதா! 154550வரலாற்று குறிப்புகள், தொழில்நுட்ப தகவல்கள் மூலம் கேரளத்தின் பொய்யை தூள்தூளாக்கிய ஜெயலலிதா! 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

வரலாற்று குறிப்புகள், தொழில்நுட்ப தகவல்கள் மூலம் கேரளத்தின் பொய்யை தூள்தூளாக்கிய ஜெயலலிதா! Empty Re: வரலாற்று குறிப்புகள், தொழில்நுட்ப தகவல்கள் மூலம் கேரளத்தின் பொய்யை தூள்தூளாக்கிய ஜெயலலிதா!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» திருச்சியில் 14-ந்தேதி ஜெயலலிதா ஆர்ப்பாட்டம்; எஸ்.எம்.எஸ். மூலம் ஆதரவு திரட்டும் அ.தி.மு.க.வினர்
» ஜவ்வாதுமலை வரலாற்று தகவல்கள்
» சீனாவும் இரசியாவும் இணைய ஊடுருவிகள்(Hackers) மூலம் தகவல்கள் திருடுகின்றன - அமெரிக்கா குற்றச் சாட்டு.
» ஜெயலலிதா புகழை காங்கிரஸ் கெடுக்கிறது: உங்கள் (ஜெயலலிதா) காலடியில் நான்...: சீமான் ஆவேசம்
» ஜெயலலிதா, விஜயகாந்த மோதல்;விஜயகாந்த ஆப்சென்ட்;ஜெயலலிதா அப்செட்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum