புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Yesterday at 9:27 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தந்திர மந்திரி   - கதை  Poll_c10தந்திர மந்திரி   - கதை  Poll_m10தந்திர மந்திரி   - கதை  Poll_c10 
6 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தந்திர மந்திரி   - கதை  Poll_c10தந்திர மந்திரி   - கதை  Poll_m10தந்திர மந்திரி   - கதை  Poll_c10 
251 Posts - 52%
heezulia
தந்திர மந்திரி   - கதை  Poll_c10தந்திர மந்திரி   - கதை  Poll_m10தந்திர மந்திரி   - கதை  Poll_c10 
153 Posts - 32%
Dr.S.Soundarapandian
தந்திர மந்திரி   - கதை  Poll_c10தந்திர மந்திரி   - கதை  Poll_m10தந்திர மந்திரி   - கதை  Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
தந்திர மந்திரி   - கதை  Poll_c10தந்திர மந்திரி   - கதை  Poll_m10தந்திர மந்திரி   - கதை  Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
தந்திர மந்திரி   - கதை  Poll_c10தந்திர மந்திரி   - கதை  Poll_m10தந்திர மந்திரி   - கதை  Poll_c10 
18 Posts - 4%
prajai
தந்திர மந்திரி   - கதை  Poll_c10தந்திர மந்திரி   - கதை  Poll_m10தந்திர மந்திரி   - கதை  Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
தந்திர மந்திரி   - கதை  Poll_c10தந்திர மந்திரி   - கதை  Poll_m10தந்திர மந்திரி   - கதை  Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
தந்திர மந்திரி   - கதை  Poll_c10தந்திர மந்திரி   - கதை  Poll_m10தந்திர மந்திரி   - கதை  Poll_c10 
2 Posts - 0%
Barushree
தந்திர மந்திரி   - கதை  Poll_c10தந்திர மந்திரி   - கதை  Poll_m10தந்திர மந்திரி   - கதை  Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
தந்திர மந்திரி   - கதை  Poll_c10தந்திர மந்திரி   - கதை  Poll_m10தந்திர மந்திரி   - கதை  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தந்திர மந்திரி - கதை


   
   
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Dec 14, 2011 2:50 am

தந்திர மந்திரி
- தா.ஆறுமுகம்

மன்னர் இந்திரசேனருக்குப் பிறகு தானே நாட்டை ஆள வேண்டும் என்று நப்பாசை கொண்டிருந்தார், மந்திரி. அதனால், மன்னரை எப்போதும் தன் பிடிக்குள் வைத்திருந்தார். அவரைச் சிந்தித்து முடிவு எடுக்க விடாமல், தான் சொல்வதையே வேதவாக்காகக் கொண்டு செயல்பட வைத்தார்.

"மன்னா, அறிவாளிகளுக்கு மட்டுமே தெரியும், பச்சை நிற காகம் அதோ... வானில் பறக்கிறதே, உங்கள் கண்ணுக்குத் தெரிகிறதா?'' என்று மன்னரிடம் கேட்டார், மந்திரி.

வானில் அவர் சொன்னது போல் பச்சை நிற காகம் எதுவும் பறக்கவில்லை. கறுப்பு நிற காகம் தான் பறந்து கொண்டு இருந்தது. அறிவாளிகளுக்கு மட்டுமே பச்சை நிற காகம் தெரிவது போல் அவர் சொல்லி இருந்ததால், தன்னை முட்டாள் என்று மந்திரி நினைத்து விடக்கூடாது என்று நினைத்தார், மன்னர். அதனால், "மந்திரியாரே, தெரிகிறது. பச்சை நிற காகம் என் கண்ணுக்கு நன்றாகத் தெரிகிறது'' என்றார்.

மன்னர் சரியான முட்டாளாக மாறி விட்டார். `இனி நான் வைத்தது தான் சட்டம்' என்று மனதுக்குள் சந்தோஷப்பட்டார், மந்திரி.

மன்னர் மந்திரி சொல்லும் அறிவுரைப்படி முட்டாள்தனமாக நடப்பதைக் கண்டு நாடே வேதனைப்பட்டது.

இதை அறிந்த விகடகவி ஒருவர் மன்னரை மந்திரியின் பிடியில் இருந்து மீட்க முடிவு செய்தார்.

மன்னரை சந்தித்தார், விகடகவி. மந்திரியின் புத்திசாலித்தனத்தை மதிப்பிட, அறிவுப்போட்டி ஒன்றை நடத்தலாம் என்று ஆலோசனை கூறினார்.

மன்னரும் விகடகவியின் ஆலோசனையை ஏற்று, அதன்படி அறிவித்தார். விகடகவி தன்னிடம் வந்து பணிவோடு ஆலோசனை சொன்னது, மன்னரை உள்ளம் குளிரச் செய்தது. உடனே, அவரது ஆலோசனையை நிறைவேற்ற உத்தரவிட்டார்.

அறிவுப்போட்டி நடக்கும் நாள் வந்தது.

மன்னரும், மந்திரியும் வருகை தந்தனர். போட்டியில் பங்கேற்ற அறிவாளிகள் பலர் ஆளாளுக்குத் தங்கள் திறமையைக் காட்டிக் கொண்டிருந்தனர். விகடகவி வெள்ளைப் புறா ஒன்றை மேடையில் ஒரு ஓரமாக மறைந்து நின்று கொண்டு, பறக்க விட்டார்.

"மந்திரியாரே இந்த புறா, எவ்வளவு வெண்மையாகவும், அழகாகவும் இருக்கிறது'' என்றார்.

உடனே மந்திரி வழக்கம்போல, மன்னரை முட்டாளாக்க எண்ணினார். "மன்னரே, என் கண்களுக்கு பச்சை நிறமாக அல்லவா தெரிகிறது?'' என்றார்.

மன்னரும் முட்டாள் பட்டத்தில் இருந்து தப்ப, "ஆமாம்...ஆமாம்...புறா, பச்சை நிறமாகத் தான் தெரிகிறது'' என்றார்.

இருவர் உரையாடலையும் மேடையின் பின்புறமாக நின்று கவனித்துக் கொண்டிருந்தார், விகடகவி.

விகடகவியின் சீடன், இதுதான் சரியான தருணம் என்று நினைத்து, மேடையின் பின்புறம் நின்று கொண்டு இருந்த விகடகவியை வரவழைக்க பச்சை நிறத் துண்டைக் காட்டினான்.

உடனே, விகடகவி புறாவைப் பிடித்துக் கையில் வைத்துக் கொண்டு, "இந்தப் புறாவின் நிறம் என்ன என்பதை நீங்களே சொல்லுங்கள்?'' என்று கேட்டார்.

அனைவரும் ஒட்டுமொத்தமாக, "வெண்மை நிறம்'' என்றனர்.

மன்னர் எழுந்து, "இல்லை. இது பச்சை நிறத்தில் உள்ளது'' என்று கத்தினார்.

இதைக் கேட்டு போட்டியில் பங்கேற்ற அனைவரும் சிரித்தனர். இதைப் பார்த்து மன்னர் குடும்பத்தார், அவமானத்தால் தலைகுனிந்தனர்.

அப்போது, மந்திரியைப் பார்த்து, "இந்த புறாவின் நிறம் என்ன?'' என்று விகடகவி கேட்டார். அவரும் வேறுவழியின்றி, பச்சை நிறம் என்றார்.

புறா வளர்க்கும் பெரியவரை மேடைக்கு வரவழைத்து, அவரிடமும் கேட்டனர். அவரும் "என்னோட புறா, வெள்ளை நிறம்'' என்றார்.

உடனே மன்னர், அவமானம் தாங்காமல் அரண்மனைக்குள் சென்றார். விகடகவியும், மன்னரின் பின்னால் சென்று, மந்திரியின் மோசடியைப் பற்றி விளக்கமாக எடுத்துக் கூறினார். தன்னை இவ்வளவு நாளும் முட்டாளாக்கிய மந்திரியை சிறையில் அடைத்தார். புத்திசாலியான விகடகவிக்கு பரிசாக பொன்னும், பொருளும் அள்ளிக் கொடுத்தார்.

தினத்தந்தி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





தந்திர மந்திரி   - கதை  Ila
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Wed Dec 14, 2011 3:53 am

நல்ல கதை.

எங்கு மன்னரோடு மக்களும் சிந்திக்கும் திறன் இழந்து விடுவாா்களோ என நினைத்தேன். மந்திாியின் வாா்த்தை மன்னரோடு நின்றது நலம்.மன்னாின் கருத்து தவறு என அறிந்தும் அதிகாரத்திற்கு பயப்படாமல் உண்மையில் உறுதியாக இருந்து பொய்யை அலட்சியப்டுத்திய மக்களை, காரணமாயிருந்த விகடகவியை பாராட்்ட வேண்டும்.
நல்ல கருத்துள்ள கதை. தந்திர மந்திரி   - கதை  224747944



தந்திர மந்திரி   - கதை  154550தந்திர மந்திரி   - கதை  154550தந்திர மந்திரி   - கதை  154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” தந்திர மந்திரி   - கதை  154550தந்திர மந்திரி   - கதை  154550தந்திர மந்திரி   - கதை  154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக