ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்நாட்டில் இருந்து 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கேரள எல்லையை நோக்கி பேரணி

2 posters

Go down

தமிழ்நாட்டில் இருந்து 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கேரள எல்லையை நோக்கி பேரணி Empty கேரளா நோக்கி படையெடுத்த 25 ஆயிரம் பேர்

Post by இளமாறன் Sun Dec 11, 2011 2:07 am

கூடலூர்: முல்லை பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக கூடலூரில் இருந்து கேரளா நோக்கி புறப்பட்ட 25 ஆயிரம் பேர் எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டனர். அணையின் நீர்மட்டத்தை உயர்த்த வேண்டும், புதிய அணை கட்டக்கூடாது என கடந்த ஒரு வார காலமாக தேனி மாவட்டத்தில் பல்வேறு அமைப்பினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அய்யப்ப பக்தர்கள் இந்த வழியாக கேரள செல்ல வேண்டாம் என தடுத்தனர். கேரள பகுதிக்குள் வந்த அய்யப்ப பக்தர்கள் சென்ற வாகனம் அடித்து நொறுக்கப்பட்டது.

கம்பம் உள்ளிட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழக கேரள எல்லை பகுதியில் பெரும் பதட்டம் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் இதன் சுற்று வட்டார விவசாயிகள் மற்றும் பல்வேறு கிராமத்தை சேர்ந்தவர்கள் இன்று பேரணியாக புறப்பட்டு லோயர்கேம்ப் வழியாக ( குமுளி ) கேரளா செல்ல புறப்பட்டு சென்றனர். மேலும் முதல்வர் உம்மன்சாண்டியின் உருவ பொம்மையையும் எரித்தனர்.

யாரும் செல்ல வேண்டாம் என தேனி மாவட்ட கலெக்டர் பழனிச்சாமி கேட்டும் யாரும் பொருட்படுத்தவில்லை. தொடர்ந்து போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தி வைக்க போலீசார் எவ்வளவோ சிரமப்பட்டும் அவர்களை தள்ளி விட்டபடி முன்னேறினர். எல்லை வழி மூடப்பட்டது. இதனையடுத்து அணையை முற்றுகையிட போவதாக அறிவித்தனர். இதனால் இன்று மதியத்திற்கு மேல் இங்கு கூடுதல் பதட்டம் ஏற்பட்டுள்ளது.

4 இடங்களில் தடுத்தும் பயனில்லை: போராட்டக்காரர்கள் தேனி மாவட்டம் முழுவதுமிருந்து ஆண்கள், பெண்கள், என 20 ஆயிரத்திற்கும் அதிகமானோரர்வந்தனர். தடை அமலில் இருந்தும் , பவரும் வழியில் 4 இடங்களில் போலீசார் தடுத்தும் பொருட்படுத்தாமல் முன்னேறி வந்தனர். தற்போது குமுளி பகுதியில் அனைவரும் நின்று கோஷங்கள் எழுப்பினர். அங்கு அவர்களுடன் தென் மண்டல ஐ.ஜி., ராஜேஷ் தாஸ் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர்கள், கேரளாவிற்கு செல்லும் 13 பாதைகளை அடைக்க வேண்டும். பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த வேண்டும் என வலியுறுத்தினர். தொடர்ந்து இந்த கோரிக்கையை தமிழக அரசிடம் தெரிவிப்பதாக கூறியதை தொடர்ந்து மக்கள் கலைந்து சென்றனர்.

கோரிக்கைகள் என்ன? இன்றைய போராட்டக்களத்தில் மக்கள் வலியுறுத்திய கோரிக்கைகள் வருமாறு: அணைக்கு மத்திய த‌ொழில் பாதுகாப்பு படையினர‌ை அமர்த்த வேண்டும், தமிழக அமைச்சரவை கூட்டத்தை கூட்டி இது தொடர்பான தீர்மானத்தை நி‌றைவேற்ற வேண்டும். தமிழகத்தில் இருந்து கேரளா நோக்கி செல்லும் 13 பாதைகளை அடைக்க வேண்டும், பால் மற்றும் காய்கறி பொருட்கள் கேரளாவுக்கு கொண்டு செல்ல அனுமதிக்க கூடாது உள்ளிட்ட கோரிக்கை‌களை வலியுறுத்தியுள்ளனர்.
தினமலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





தமிழ்நாட்டில் இருந்து 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கேரள எல்லையை நோக்கி பேரணி Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

தமிழ்நாட்டில் இருந்து 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கேரள எல்லையை நோக்கி பேரணி Empty Re: தமிழ்நாட்டில் இருந்து 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கேரள எல்லையை நோக்கி பேரணி

Post by இளமாறன் Sun Dec 11, 2011 2:17 am


எல்லையில் ஐந்து இடங்களில் பதட்டம் : பெரியாறு அணையை நோக்கி தமிழக மக்கள்!

கூடலூர்:தேனி மாவட்டம் கம்பம், கூடலூர் பகுதிகளை சேர்ந்த 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள், நேற்று ஐந்து இடங்களில், போலீஸ் ஏற்படுத்திய தடைகளை மீறி குமுளிக்குள் அணிவகுத்தனர். "கேரளா செல்லும் 13 பாதைகளையும் அடைக்க வேண்டும்; தமிழக சட்டசபையை உடனடியாக கூட்டி இதற்காக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்' என வலியுறுத்தி போராட்டம் நடத்துவதால், எல்லையில் பெரும் பதட்டம் உருவாகி உள்ளது.

பெரியாறு அணை பிரச்னையில், கடந்த ஒரு வாரமாக, தேனி மாவட்டம், கம்பம், கூடலூர் பகுதிகளில், பெரும் போராட்டம் நடந்து வருகிறது. தேனி மாவட்டத்தில் இருந்து கேரளா செல்லும் போடி மெட்டு, கம்பம் மெட்டு, குமுளி வழியாக போக்குவரத்து முழுமையாக தடைபட்டுள்ளது.சபரிமலை சென்று விட்டு, திரும்பும் தமிழக பக்தர்கள் மீது, கேரள கும்பல் தாக்குதல் நடத்தி வருகிறது. இது தமிழக மக்களை மேலும் கொதிப்படைய செய்துள்ளது. இந்நிலையில், கேரள சட்டசபை விசேஷ கூட்டத்தை கூட்டி, "பெரியாறு அணைக்கு பதிலாக புதிய அணை கட்ட வேண்டும்; தற்போதைய நீர் மட்டத்தை 120 அடியாக குறைக்க வேண்டும்' என தீர்மானம் நிறைவேற்றியது. கேரள அரசின் இந்த செயல் தமிழக மக்களை மேலும் கொந்தளிக்க வைத்து விட்டது.

50 ஆயிரம் பேர் திரண்டனர் : கம்பம், கூடலூர், ராயப்பன்பட்டி, சுருளிப்பட்டி, காமயகவுண்டன்பட்டி, குள்ளப்பகவுண்டன்பட்டி உட்பட 26 கி.மீ., சுற்றளவில் இருந்து, 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நேற்று காலை கூடலூரில் திரண்டனர். இவர்களில் பாதி பேர் பெண்கள். இவர்கள் அனைவரும், கேரள எல்லையான குமுளியை நோக்கி நடக்க ஆரம்பித்தனர்.பாதுகாப்பு பணியில் இருந்த 1,500 போலீசார் தடுக்க முயற்சி செய்தும், 50 ஆயிரம் மக்கள் திரண்டதால், தடுக்க முடியாமல் தவித்தனர். கூடலூர், பகவதியம்மன் கோவில், லோயர்கேம்ப் பகுதியில் இரண்டு இடங்கள் என ஐந்து இடங்களில் போலீசார் தடைகளை ஏற்படுத்தினர். போலீசாரின் தடைகளை தகர்த்த மக்கள், குமுளியின் தமிழக பகுதிக்குள் நுழைந்தனர். தமிழக அரசின் போக்குவரத்துக் கழக பணிமனை முன்பாக ஒன்று திரண்டனர்.அங்கு தென்மண்டல ஐ.ஜி., ராஜேஷ் தாஸ்,தேனி கலெக்டர் பழனிசாமி ஆகியோர் பேச்சு நடத்தினர்.

"கேரளா செல்லும் 13 பாதைகளையும் உடனே சீல் வைத்து மூட வேண்டும்; கேரளாவிற்கு எதிரான பொருளாதார முற்றுகையை உடனே துவக்க வேண்டும்; தமிழக சட்டசபையின் விசேஷ கூட்டத்தை கூட்டி, அணை நீர் மட்டத்தை 152 அடியாக உயர்த்தும் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும்' என, மக்கள் அவர்களிடம் கோரிக்கை வைத்தனர்.

தென்மண்டல ஐ.ஜி., ராஜேஷ் தாஸ், இந்த கோரிக்கைகளை உடனே அரசுக்கு தெரிவிப்பதாகவும், மக்கள் கோரிக்கையை அமல்படுத்தும் வகையில், குமுளி பாதையை உடனே மூடுவதாகவும் தெரிவித்தார்.

கலெக்டர் பழனிசாமி, "அரிசி, பால், காய்கறி, மணல் உட்பட எதையும் நாங்கள் கேரளாவிற்கு அனுப்ப மாட்டோம்; தடை விதித்து விடுகிறோம். அரசின் தடைக்கு பொதுமக்கள் தரப்பில் இருந்தும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்' என்றார். இதற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தருவதாக உறுதியளித்தனர். பின், தொடர்ந்து கேரள அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

குமுளியில் கடைகள் அடைப்பு ரோடுகள் வெறிச்சோடின:குமுளியில் தமிழக குமுளி, கேரள குமுளி என இரண்டு குமுளிகள் உள்ளன. 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், தமிழக குமுளியில் கூடினர். மக்கள் கூடியிருந்த இடத்தை அடுத்து, குமுளி தமிழக பஸ் ஸ்டாண்ட் உள்ளது. இதை ஒட்டி, குமுளி கேரள பஸ் ஸ்டாண்ட் உள்ளது. மக்கள் கூடியிருந்த இடத்தில் இருந்து, இரண்டு நிமிடத்திற்குள், கேரள குமுளிக்குள் புகுந்து விட முடியும்.கேரள குமுளியில் இருந்த மக்கள், தமிழக மக்கள் திரண்டு வந்து நிற்பதை, வாசலிலும், தங்கள் வீட்டு மாடியிலும் நின்று வேடிக்கை பார்த்தனர். கேரள தரப்பில், இடுக்கி எஸ்.பி., ஜார்ஜ் வர்க்கீஸ் தலைமையில்,100 போலீசார் மட்டுமே எல்லையில் நின்றிருந்தனர். மக்கள் குமுளிக்குள் புகுந்தால், விபரீதம் ஏற்பட்டு விடும் என, பயந்த கேரள வியாபாரிகள் கடைகளை அடைத்து விட்டனர். மக்கள் வீடுகளை பூட்டி விட்டனர். மக்கள் திரண்ட ஓரிரு நிமிடத்தில், கேரள குமுளி முழுக்க வெறிச்சோடி விட்டது.

திரண்டு எழுந்த திராட்சை விவசாயிகள் : கம்பம்: நேற்று காலை கம்பம் அருகே உள்ள, சுருளிப்பட்டி கிராமத்தில் இருந்து, திராட்சை விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள், 3,000 பேர், ஊர்வலமாக புறப்பட்டனர். 500 க்கும் மேற்பட்ட பெண்கள் இந்த ஊர்வலத்தில் வந்தனர். சுருளிப்பட்டியில் இருந்து நடந்தே வந்த இவர்களை கம்பம், வ.உ.சி., திடலில் போலீசார், மறித்தனர். போலீசாரின் எச்சரிக்கையையும் மீறி, பொதுமக்கள் கூட்டம் குமுளி ரோட்டில் சென்றது. பின்னர் கம்பம், புதுப்பட்டி, காமயகவுண்டன்பட்டி பகுதியைச் சேர்ந்த, 15 ஆயிரம் பேர், நடந்தே லோயர்கேம்ப் சென்று, அங்கு கூடியிருந்த கூடலூர் மக்களுடன் சேர்ந்து கொண்டனர்.


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





தமிழ்நாட்டில் இருந்து 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கேரள எல்லையை நோக்கி பேரணி Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

தமிழ்நாட்டில் இருந்து 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கேரள எல்லையை நோக்கி பேரணி Empty தமிழ்நாட்டில் இருந்து 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கேரள எல்லையை நோக்கி பேரணி

Post by சிவா Sun Dec 11, 2011 7:35 am

தமிழ்நாட்டில் இருந்து 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கேரள எல்லையை நோக்கி பேரணி St2

முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையில் கேரள அரசின் நடவடிக்கையை கண்டித்து, அந்த மாநில எல்லையை நோக்கி 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பேரணியாக திரண்டு சென்றனர். குமுளி எல்லையில் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தியதால் பதற்றம் ஏற்பட்டது.

தேனி, டிச.11- சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி, முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த மறுக்கும் கேரளா, அந்த அணைக்கு பதிலாக புதிய அணை கட்ட முயற்சித்து வருகிறது.

புதிய அணை கட்ட முயற்சி

ஆனால் இதற்கு தமிழ்நாடு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனால் கேரளாவில் தமிழர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த பிரச்சினை தீவிரம் அடைந்து வரும் நிலையில், முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 120 அடியாக குறைக்க வேண்டும் என்றும், புதிய அணை கட்டவேண்டும் என்றும் கோரி கேரள சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதனால் கேரள எல்லையையொட்டி அமைந்துள்ள தேனி மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது.

போக்குவரத்து துண்டிப்பு


குமுளி, கம்பம் மெட்டு, போடிமெட்டு ஆகிய 3 எல்லைச்சாலைகளிலும் கடந்த 5-ந் தேதி முதல் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டு உள்ளது. தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகாவில் 144 தடைஉத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. கம்பம், கூடலூர், லோயர்கேம்ப் பகுதி மக்கள் கடந்த ஒருவாரமாக கடையடைப்பு மற்றும் மறியல் போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று முன்தினம் கூடலூர் பகுதி பொதுமக்கள் சுமார் 500 பேர் குமுளி எல்லை சோதனைச்சாவடி அருகே செல்ல முயன்று, பின்னர் கூடலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே மறியலில் ஈடுபட்டனர்.

முற்றுகை போராட்டம்

இந்த நிலையில், தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா சுருளிப்பட்டி பகுதியில் உள்ள திராட்சை தோட்ட தொழிலாளர்கள் மற்றும் பெண்கள் என சுமார் 2,000 பேர் நேற்று காலை 11 மணியளவில் சுருளிப்பட்டியில் இருந்து குமுளி எல்லை சோதனைச்சாவடியில் முற்றுகை போராட்டம் நடத்த ஊர்வலமாக சென்றனர்.

இதனைப்பார்த்த கம்பம், புதுப்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதி மக்களும் ஆங்காங்கே திரண்டு வந்து சுருளிப்பட்டி கிராம மக்களுடன் சேர்ந்து ஊர்வலமாக வரத்தொடங்கினர். சுருளிப்பட்டி மற்றும் கம்பம் சுற்றுவட்டார பகுதி மக்கள் சாரை சாரையாக கூடலூர் பகுதிக்கு திரண்டு வந்தனர்.

25 ஆயிரம் பேர் பேரணி

இதனால் கூடலூர் பகுதியில் பகல் 12 மணியளவில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. கட்சி பாகுபாடு இன்றி பொதுமக்கள் ஆட்டோக்களிலும், இருசக்கர வாகனங்களிலும் கூடலூரில் குவிந்த வண்ணமாக இருந்தனர். சுமார் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அங்கிருந்து குமுளியை நோக்கி பேரணியாக புறப்பட்டு சென்றனர். வழியில் கூடலூரை அடுத்துள்ள குருவனூத்து பாலம் அருகே அவர்களை அதிரடிப்படை போலீசார் தடுத்த நிறுத்த முயன்றனர்.

ஆனால் அவர்கள் போலீசாரின் தடையை மீறி பகல் 12.30 மணி அளவில் லோயர் கேம்ப் பகுதியை நோக்கி சென்றனர்.

லோயர் கேம்ப் மின்உற்பத்தி நிலையம் முன்பு தேனி மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிச்சாமியும், தென்மண்டல போலீஸ் ஐ.ஜி.ராஜேஷ்தாசும் நூற்றுக்கணக்கான அதிரடிப்படை போலீசாருடன் நின்று பொதுமக்களை தடுத்து நிறுத்தினார்கள்.

கூட்டத்தினரை அத்துமீறி சென்று விடாமல் இருப்பதற்காக சாலையின் குறுக்கே 2 கார்கள் நிறுத்தப்பட்டன.

தமிழ்நாட்டில் இருந்து 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கேரள எல்லையை நோக்கி பேரணி St3

கலெக்டர் சமரசம்

பின்னர் கலெக்டர் கே.எஸ்.பழனிச்சாமியும், போலீஸ் ஐ.ஜி.ராஜேஷ்தாசும், ஒரு காரில் ஏறி நின்று ஒலிப்பெருக்கி மூலம் கூட்டத்தினர் மத்தியில் பேசினார்கள். கலெக்டர் பழனிச்சாமி பேசும் போது; "பொதுமக்களும் அரசும் சேர்ந்து போராடினால்தான் வெற்றி பெற முடியும். இங்கு கூடியுள்ள மக்கள் உங்கள் எதிர்ப்பை தெரிவித்து உள்ளீர்கள். நிச்சயம் உங்களின் கோரிக்கை குறித்து அரசு நடவடிக்கை எடுக்கும்'' என்றார்.

தொடர்ந்து அவர் பேசும் போது, `முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்புக்கு மத்திய போலீஸ் படையை நிறுத்த வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கை பற்றி அரசுக்கு தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றும் கூறினார்.

அப்போது அங்கு திரண்டிருந்த மக்கள் கேரளாவுக்கு செல்லும் 13 எல்லைச்சாலைகளையும் உடனடியாக மூட வேண்டும் என்றும், குமுளி சோதனைச்சாவடி வரை சென்று தாங்கள் முற்றுகை போராட்டம் நடத்தப்போவதாகவும் கூறினார்கள்.

எல்லை வரை செல்ல அனுமதி

அதற்கு கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி; குமுளி சோதனைச்சாவடி பூட்டு போட்டு மூடப்பட்டுள்ளதாகவும், சந்தேகம் இருந்தால் இங்குள்ள 50 பேரை அனுப்பி பார்த்து வந்த பிறகு நீங்கள் இங்கிருந்து கலைந்து செல்லலாம் என்றார்.

அப்போது போலீஸ் ஐ.ஜி. ராஜேஷ்தாஸ்; ``உங்களை பகுதி பகுதியாக பிரித்து நமது எல்லைப்பகுதி வரை செல்ல அனுமதிக்கிறோம். அங்கு சென்ற பிறகு நீங்கள் எந்த வன்முறை செயலிலும் ஈடுபடக்கூடாது. நீங்கள் மிகுந்த அமைதியுடன் எல்லை வரை சென்று கோஷங்கள் எழுப்பிவிட்டு திரும்பி வரவேண்டும்'' என்று அறிவித்தார்.

இதற்கு ஆட்சேபம் தெரிவித்த கலெக்டர் பழனிச்சாமி, "குமுளி மலைப் பாதையில் போதிய போலீஸ் பாதுகாப்பு இல்லாத நிலையில் இங்கு திரண்டுள்ள மக்களை அங்கு அனுப்புவது சரி அல்ல'' என்றார். அதற்கு ஐ.ஜி., `நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்' என்று கூறி பொதுமக்களை நடந்து செல்ல அனுமதித்தார். இருசக்கர வாகனங்களில் சென்றவர்களை அந்த வாகனங்களை நிறுத்திவிட்டு நடந்து செல்லுமாறு கூறினார்.

குமுளிக்கு சென்றனர்

இதனயைடுத்து பிற்பகல் 2.20 மணிக்கு லோயர்கேம்ப் மின்நிலையத்தில் இருந்து பொதுமக்கள் சுமார் 2 ஆயிரம் பேர் தமிழக எல்லைப்பகுதியான குமுளி எல்லை சோதனைச்சாவடிக்கு நடந்து செல்ல தொடங்கினார்கள். அவர்களுக்கு முன்பாக போலீஸ் ஐ.ஜி ராஜேஷ்தாசும், கலெக்டர் கே.எஸ்.பழனிச்சாமியும் பொதுமக்களுக்கு முன்னதாக நடந்து சென்றனர். 6 கிலோ மீட்டர் தூரம் அவர்கள் பொதுமக்களுடன் நடந்து சென்றனர். மாலை 4 மணியளவில் குமுளி எல்லை சோதனைச்சாவடிக்கு மக்கள் சென்றனர். சோதனைச்சாவடிக்கு 100 மீட்டர் தொலைவுக்கு முன்னதாக பொதுமக்கள் நிறுத்தப்பட்டனர்.

அதேநேரத்தில் குமுளி எல்லை சோதனைச்சாவடியின் கேரள பகுதியில் 300-க்கும் மேற்பட்ட கேரள போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டு இருந்தனர்.

கல்வீச்சு

தமிழக விவசாயிகளும் பொதுமக்களும் குமுளி சோதனைச்சாவடி அருகே தடுத்து நிறுத்தப்பட்டு இருந்தபோது, கேரள பகுதியில் இருந்து சரமாரியாக கற்கள் வீசப்பட்டன. கேரள மாநிலத்தை சேர்ந்த சிலர், சோதனைச்சாவடி அருகே மலைப்பாதை வழியாக சென்று, அங்கிருந்தபடி தமிழக விவசாயிகள் மீது கற்களை வீசினார்கள். இதில் 2 பேர் காயம் அடைந்தனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், தமிழக பகுதியில் நின்று கொண்டிருந்தவர்களும் மலைப்பாதையை நோக்கி கற்களை வீசினர்.

குமுளி சோதனைச்சாவடி அருகே கேரள அரசை கண்டித்து முற்றுகை போராட்டம் நடத்திய பொதுமக்கள், பின்னர் அங்கிருந்து மீண்டும் கூடலூர் பகுதிக்கு திரும்பினார்கள்.

பலத்த பாதுகாப்பு

தமிழர்கள் குமுளி சோதனைச்சாவடி அருகே திரண்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டபோது, கேரள பகுதிக்குள் சிலர் திரண்டு எதிர் போராட்டம் நடத்த முயன்றனர். அவர்களை அந்த மாநில போலீசார் திருப்பி அனுப்பினார்கள்.

கேரள அதிகாரிகள் தேனி மாவட்ட அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு பேசி எல்லைப்பகுதியில் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக இடுக்கி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜார்ஜ் வர்க்கீஸ் கூறினார்.

அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்க கேரள எல்லைப்பகுதியில் தொடர்ந்து பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

தினதந்தி


தமிழ்நாட்டில் இருந்து 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கேரள எல்லையை நோக்கி பேரணி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழ்நாட்டில் இருந்து 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கேரள எல்லையை நோக்கி பேரணி Empty Re: தமிழ்நாட்டில் இருந்து 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கேரள எல்லையை நோக்கி பேரணி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» கனடாவை உலுக்கியெடுத்த மனித சங்கிலிப் பேரணி: 80 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பங்கேற்பு
» இன்று விவசாயிகள் பார்லி. நோக்கி பேரணி
» ஈழத் தமிழர்களை விடுதலை செய்யக் கோரி மலேசியப் பாராளுமன்றம் நோக்கி பேரணி!
» சென்னை நோக்கி வந்த போது விபத்தில் சிக்கிய காரில் இருந்து ரூ.20 கோடி மரகதலிங்கம் பறிமுதல்
» டெல்லியில் பேட்டரி தொழிற்சாலையில் தீவிபத்து 10-க்கும் மேற்பட்டவர்கள் சிக்கி உள்ளனர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum