புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 11, 2024 11:53 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு உளறல் பதிவு !!!! - Page 3 Poll_c10ஒரு உளறல் பதிவு !!!! - Page 3 Poll_m10ஒரு உளறல் பதிவு !!!! - Page 3 Poll_c10 
37 Posts - 36%
heezulia
ஒரு உளறல் பதிவு !!!! - Page 3 Poll_c10ஒரு உளறல் பதிவு !!!! - Page 3 Poll_m10ஒரு உளறல் பதிவு !!!! - Page 3 Poll_c10 
35 Posts - 34%
Dr.S.Soundarapandian
ஒரு உளறல் பதிவு !!!! - Page 3 Poll_c10ஒரு உளறல் பதிவு !!!! - Page 3 Poll_m10ஒரு உளறல் பதிவு !!!! - Page 3 Poll_c10 
17 Posts - 17%
Rathinavelu
ஒரு உளறல் பதிவு !!!! - Page 3 Poll_c10ஒரு உளறல் பதிவு !!!! - Page 3 Poll_m10ஒரு உளறல் பதிவு !!!! - Page 3 Poll_c10 
7 Posts - 7%
mohamed nizamudeen
ஒரு உளறல் பதிவு !!!! - Page 3 Poll_c10ஒரு உளறல் பதிவு !!!! - Page 3 Poll_m10ஒரு உளறல் பதிவு !!!! - Page 3 Poll_c10 
4 Posts - 4%
Guna.D
ஒரு உளறல் பதிவு !!!! - Page 3 Poll_c10ஒரு உளறல் பதிவு !!!! - Page 3 Poll_m10ஒரு உளறல் பதிவு !!!! - Page 3 Poll_c10 
1 Post - 1%
mruthun
ஒரு உளறல் பதிவு !!!! - Page 3 Poll_c10ஒரு உளறல் பதிவு !!!! - Page 3 Poll_m10ஒரு உளறல் பதிவு !!!! - Page 3 Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
ஒரு உளறல் பதிவு !!!! - Page 3 Poll_c10ஒரு உளறல் பதிவு !!!! - Page 3 Poll_m10ஒரு உளறல் பதிவு !!!! - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒரு உளறல் பதிவு !!!! - Page 3 Poll_c10ஒரு உளறல் பதிவு !!!! - Page 3 Poll_m10ஒரு உளறல் பதிவு !!!! - Page 3 Poll_c10 
110 Posts - 45%
ayyasamy ram
ஒரு உளறல் பதிவு !!!! - Page 3 Poll_c10ஒரு உளறல் பதிவு !!!! - Page 3 Poll_m10ஒரு உளறல் பதிவு !!!! - Page 3 Poll_c10 
82 Posts - 34%
Dr.S.Soundarapandian
ஒரு உளறல் பதிவு !!!! - Page 3 Poll_c10ஒரு உளறல் பதிவு !!!! - Page 3 Poll_m10ஒரு உளறல் பதிவு !!!! - Page 3 Poll_c10 
21 Posts - 9%
mohamed nizamudeen
ஒரு உளறல் பதிவு !!!! - Page 3 Poll_c10ஒரு உளறல் பதிவு !!!! - Page 3 Poll_m10ஒரு உளறல் பதிவு !!!! - Page 3 Poll_c10 
12 Posts - 5%
Rathinavelu
ஒரு உளறல் பதிவு !!!! - Page 3 Poll_c10ஒரு உளறல் பதிவு !!!! - Page 3 Poll_m10ஒரு உளறல் பதிவு !!!! - Page 3 Poll_c10 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
ஒரு உளறல் பதிவு !!!! - Page 3 Poll_c10ஒரு உளறல் பதிவு !!!! - Page 3 Poll_m10ஒரு உளறல் பதிவு !!!! - Page 3 Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
ஒரு உளறல் பதிவு !!!! - Page 3 Poll_c10ஒரு உளறல் பதிவு !!!! - Page 3 Poll_m10ஒரு உளறல் பதிவு !!!! - Page 3 Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
ஒரு உளறல் பதிவு !!!! - Page 3 Poll_c10ஒரு உளறல் பதிவு !!!! - Page 3 Poll_m10ஒரு உளறல் பதிவு !!!! - Page 3 Poll_c10 
2 Posts - 1%
manikavi
ஒரு உளறல் பதிவு !!!! - Page 3 Poll_c10ஒரு உளறல் பதிவு !!!! - Page 3 Poll_m10ஒரு உளறல் பதிவு !!!! - Page 3 Poll_c10 
2 Posts - 1%
mruthun
ஒரு உளறல் பதிவு !!!! - Page 3 Poll_c10ஒரு உளறல் பதிவு !!!! - Page 3 Poll_m10ஒரு உளறல் பதிவு !!!! - Page 3 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு உளறல் பதிவு !!!!


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Dec 10, 2011 6:50 pm

First topic message reminder :

நேற்று படுக்கையிலிருந்து எழுந்திரிக்கும் போது, ‘காலை உதயத்தில் எழுவோமா’ என்று எஸ்.பி.பி குரலில் ஒரு வரி மட்டும் மனசுக்குள் கேட்டது. அந்தப் பாட்டைக் கேட்டு ஏறக்குறைய பல வருஷம் இருக்கும். பாட்டின் இதர வரிகளோ, பல்லவியோ சுத்தமாக நினைவு வராவிட்டால் பரவாயில்லை. தும்மல் வரும் போல இருந்து தலையை அண்ணாந்து ஹாங் என்று இழுப்போம் ஆனால் தும்மல் வராதே அந்த மாதிரி ஒரு அவஸ்தை இது. வேக்காக கொஞ்சம் நினைவு வருவது போல இருக்கும், கொஞ்சம் ஆழ்ந்து தேடினால் எல்லாம் பிளாங்க் ஆகிவிடும்.

மூக்கை விடைத்துக் கொண்டு, அரைக் கண் மூடி, தலையைச் சாய்த்து அதே வரியைத் திரும்பத் திரும்பப் பாடியபடி கேட்டுக்கும் போர்டிகோவுக்குமாக நடந்தேன். பக்கத்து பிளாட் நண்பர்,

“என்ன சார், கருக்கல்லயே எளுந்துட்டீங்க?” என்றார்.

“ஆக்சுவலா ராத்திரியே எழுந்துட்டேன். ஞாபகம் வந்துதுன்னா காலைல தூங்கலாம்ன்னு இருக்கேன்” என்றேன் பாட்டை முணுமுணுத்தபடி.

ராபிஸ் வந்த நாயைப் பார்ப்பது போல என்னைப் பார்த்து விட்டு கேட்டைத் திறக்காமலே ஏறிக் குதித்து ஓடினார்.

மணி காலை நாலரை என்பதால் யாரும் பார்த்திருக்க மாட்டார்கள் என்று நினைத்தது தப்பு. விடிந்த பிறகு பக்கத்து வீட்டு ஆசாமி என் ரூம்மெட்டிடம் தாழ்ந்த குரலில் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்க நேர்ந்தது. அவர் அக்கா பையனுக்கு இதை விட முற்றின ஸ்டேஜாக இருந்து சரியாகி விட்டதாம். நாகர்கோயில் பக்கத்தில் ஏதோ ஒரு ஸ்தலத்தை சிபாரிசு செய்தார். ”சோட்டானிக்கரை எல்லாம் வேண்டாம். உக்கிரம் ஜாஸ்தி. மரத்தில நெத்தியாலயே ஆணி அடிக்கிற அளவுக்குப் போய்டும்” என்று பிரிகாஷணும் கொடுத்தார்.

என் கவனத்துக்கு இதெல்லாம் போகவில்லை. மாடிப்படியில் தடுக்கி விழுந்து முட்டிக்கால் சிராய்த்த போதும் என் தேடல் தொடர்ந்தது. மெய் வருத்தம் பாரார், காப்பி குடியார், பம்ப் போடார், செடிக்கு தண்ணீர் ஊற்றார் கருமமே கண்ணாயினார் (இவர் யார் புது நாயனார்?) என்று டூண்ட்தே ரெஹெ ஜாயேகி!

“விட்டுத் தொலை மச்சி. ஏன் இப்படி பைல்ஸ் வந்த மாதிரி முழிக்கிறே?” என்று என் நண்பன் கைவிடச் சொல்லி சிபாரிசு செய்த போதும் நிறுத்தவில்லை.

“அதான் உங்க அக்கா பையன் இருக்கானே உங்க குடும்பத்து அப்துல் ஹமீத், அவனைக் கேட்கிறதுதானே?”

“ம்ம்ஹூம், நானேதான் கண்டுபிடிப்பேன்”

“கிழிஞ்சது கிருஷ்ணகிரி”

“அப்ப கிழியாதது ஹோசூரா?”

“இதுக்கொண்ணும் குறைச்சல் இல்லை. எனக்கு ஆஃபீசுக்கு நேரமாச்சு. டிஃபன் சாபிடபோறியா, இல்லை இதே பைல்ஸ் முழியோட மாடிலயே இருக்கப் போறியா?”

“………………………………………………………………………..”

“வாயை மூடிகிட்டு யோசி, பல்லி கில்லி விழுந்துடப் போகுது”

இதற்கெல்லாம் நான் அசரவில்லை.

சுமார் பதினோரு மணிக்கு ‘குங்குமச் சாந்துக்கு மேலே’ என்று இன்னொரு வரி ஃப்ளாஷ் அடித்தது. போகப் போக கே.வி.மஹாதேவனின் டண்டர டண்டர.. டிங்.. டிங் ம்யூசிக் எல்லாம் கூட நினைவு வந்தது. அப்படியே தூங்கிப் போய் விட்டேன். கனவில் ஜெய் ஷங்கரும் லட்சுமியும் ஆடியோவை ம்யூட் செய்துவிட்டு வீடியோவில் மட்டும் தெரிந்தார்கள். நெற்றி நிறைய விபூதியுடன் கே.பி.சுந்தராம்பாள் “மகனே இன்னுமா ஞாபகம் வரவில்லை?” என்று கேட்டார். அவர் தோளில் மாட்டியிருந்த டிரான்ஸிஸ்டரில், பாட்டின் பல்லவியைக் கேட்டுவிட்டு,

“வந்திருச்சு.. வந்திருச்சு” என்றேன்.

“அடக் கடவுளே, இன்னும் டாய்லெட் கூடப் போகல்லியா?”

கே.பி.சுந்தராம்பாளுக்கு என் நண்பன் டப் செய்திருப்பதை வியந்த போது முழிப்பு வந்து ஒரே இருட்டு. ஆஃபீசிலிருந்து திரும்பி வந்த என் நண்பன்,

“வீட்டைத் திறந்து போட்டுட்டு இப்படி குடிகாரன் போலத் தூங்கறீயே, ஹால்ல நாய் வந்து படுத்திருக்கு” என்றதும் சுயநினைவு வந்து,

“கண்டு பிடிச்சிட்டேன்” என்றேன்.

“என்ன, மாணிக்கப் பதுமைக்கு காணிக்கையாக என் மனதைத் தரலாமாதானே?”

“உனக்கெப்படித் தெரியும்?”

“நேத்து ராத்திரி தூக்கத்துல உளறும் போது பல்லவியைத்தான் உளறிகிட்டு இருந்த, எழுந்ததும் மறந்து போச்சு உனக்கு”

“அடக் கடவுளே, இதைக் காலைலயே சொல்லக் கூடாதா?”

“எவ்வளவோ உளர்ர, அதைப் பாட்டுன்னு நான் என்ன கண்டேன், ஆஃபீஸ்ல கேட்டப்புறம்தான் அது பாட்டுன்னு தெரிஞ்சது”

“எவ்வளவோன்னா? வேறென்ன உளறினேன்?”

“அதெல்லாம் ஞாபகமில்லை. தூக்கத்தைவிட முழிச்சப்புறம்தான் ஜாஸ்தி உளர்ர மச்சி ”

எப்படியோ அந்த பாட்டு நியாபகம் வந்ததுல ரொம்ப மகிழ்ச்சித்தான் இதோ அந்த பாடல் வரிகள்

"திரைப் படம்: நீதி தேவன் 1971

இசை: K V மகாதேவன்

பாடியவர்கள்: SPB, PS"

[b]மாணிக்க பதுமைக்கு காணிக்கையாக என் மனதை தரலாமா... நான் மடியில் வரலாமா...

காணிக்கையானபின் ஆனிபொன் ஊஞ்ஜலில் கவிதைகள் பெறலாமா...அதிலே கனவுகள் வரலாமா...

மாணிக்க பதுமைக்கு காணிக்கையாக என் மனதை தரலாமா... நான் மடியில் வரலாமா...

காணிக்கையானபின் ஆனிபொன் ஊஞ்ஜலில் கவிதைகள் பெறலாமா...அதிலே கனவுகள் வரலாமா...

குங்கும சாந்துக்கு மேலே... இளம் கூந்தலின் சாலைக்கு கீழே... மங்களமாய் ஒரு முத்தம் கொடுத்திட மாப்பிள்ளை வரலாமா..அதில் மனவினை பெறலாமா...

செங்கனி இதழ்களின் மேலே...அது தேன் மொழி பேசிடும் போதே...பங்குக்கு நாலெனெ பழங்கல் பறித்து பந்தியில் இடலாமா.. அதை நான் பசியுடன் பெறலாமா...

மாணிக்க பதுமைக்கு காணிக்கையாக என் மனதை தரலாமா...

நான் மடியில் வரலாமா...

மேடிட்ட மணலினில் படுத்து.. சிறு கோடிட்ட புன்னகை விரித்து..தேனிட்ட முகத்துக்கு நான் இட்ட நகைகளை சோதனை இடலாமா..இன்ப வேதனை படலாமா...

பொங்கிடும் ஆற்றினில் குளித்து...வரும் போதையிலெ மனம் நனைத்து... சங்கு முழங்கிட வண்டுகள் பாடிட சரசம் பெறுவோமா...அதிலும் சமரசம் அறிவொமா...

முப்பால் முழுவதும் படித்து.. படித்து அதற்கப்பாலும் நடை எடுத்து..

எப்போதும் இது தப்பாதென்பதை இதயத்தில் அறிவோமா...

காலை உதயத்தில் எழுவோமா....


முடிஞ்சா தரவிறக்கி கேட்டுபாருங்கள்

http://www.divshare.com/i/11709224-317

நன்றி:- பாடல் வரிகள் மற்றும் தரவிறக்க சுட்டி http://asokarajanandaraj.blogspot.com



ஈகரை தமிழ் களஞ்சியம் ஒரு உளறல் பதிவு !!!! - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Mar 22, 2012 12:16 am

ரா.ரா3275 wrote:
பைண்டிங்கா?...இழுத்து வெச்சு இறுக்கித் தைச்சு அட்டப் போட்டு மூலைக்கு மூல வெட்டீட்டாங்களோ?...
இந்த காலிப் பசங்களுக்கு காலிகோ கிளாத்தும் வெச்சு வெட்டி ஒட்டி பைண்டிங் போடுவாங்க ராரா. போல்டா இருக்கறவங்களுக்கு மோல்டு பெர்பெக்டா இருக்கனும்ல.




இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Mar 22, 2012 12:17 am

Aathira wrote:மீண்டும் பாலா....

அட கல்யாணத்துக்கு அப்பரமும் அதே உளறல்.... கொஞ்சம் கூட பிசிறு இல்லாமல்... அருமையிருக்கு

நலமா... திருமண வாழ்க்கை எப்படி..? தனிமடலில் சொல்லவும்.

Post by balakarthik on Sat Dec 10, 2011 2:20

அதிர்ச்சி அதிர்ச்சி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஒரு உளறல் பதிவு !!!! - Page 3 Ila
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Mar 22, 2012 12:24 am

இளமாறன் wrote:
Aathira wrote:மீண்டும் பாலா....

அட கல்யாணத்துக்கு அப்பரமும் அதே உளறல்.... கொஞ்சம் கூட பிசிறு இல்லாமல்... அருமையிருக்கு

நலமா... திருமண வாழ்க்கை எப்படி..? தனிமடலில் சொல்லவும்.

Post by balakarthik on Sat Dec 10, 2011 2:20

அதிர்ச்சி அதிர்ச்சி
இப்ப தேதியவும் மாத்திட்டாங்களா? அடப்பாவிங்களா..



ஒரு உளறல் பதிவு !!!! - Page 3 Aஒரு உளறல் பதிவு !!!! - Page 3 Aஒரு உளறல் பதிவு !!!! - Page 3 Tஒரு உளறல் பதிவு !!!! - Page 3 Hஒரு உளறல் பதிவு !!!! - Page 3 Iஒரு உளறல் பதிவு !!!! - Page 3 Rஒரு உளறல் பதிவு !!!! - Page 3 Aஒரு உளறல் பதிவு !!!! - Page 3 Empty
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Mar 22, 2012 12:26 am

Aathira wrote:
இளமாறன் wrote:
Aathira wrote:மீண்டும் பாலா....

அட கல்யாணத்துக்கு அப்பரமும் அதே உளறல்.... கொஞ்சம் கூட பிசிறு இல்லாமல்... அருமையிருக்கு

நலமா... திருமண வாழ்க்கை எப்படி..? தனிமடலில் சொல்லவும்.

Post by balakarthik on Sat Dec 10, 2011 2:20

அதிர்ச்சி அதிர்ச்சி
இப்ப தேதியவும் மாத்திட்டாங்களா? அடப்பாவிங்களா..
நீங்க ரொம்ப அசதியா இருக்கிங்க ஆதிரா ஒன்னும் புரியல



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஒரு உளறல் பதிவு !!!! - Page 3 Ila
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Mar 24, 2012 7:07 pm

இப்பொழுதெல்லாம் எனக்கு பழைய பாடல் கேட்பது தவிர்க்க முடியாததாகிவிட்டது. வாணி ஜெயராமின் குரல் சில நேரங்களீல் நம் மனதை என்னென்னவோ செய்துவிடும் அதுவும் எஸ்‌பி‌பியுடன் சேர்ந்து பாடும் அந்த ஷார்ப் குரல் நம் பழைய நினவுகளை கிளறி நம்மை சொர்க்கத்துக்கே அழைத்து சென்றுவிடும். அந்த வகையில் நவரச திலகம் நடிகர் முத்துராமன் நடித்த படம் "பேரும் புகழும்" மெல்லிசை மன்னரின் இசையமைப்பில் உருவான பழைய படமானதால் "அவளே என் காதலி" பாடல் காட்சி கண்முன் வரமறுக்கிறது. என்னவொரு இனிமை ஆஹா ஆஹா ஆஹா.. ஒரு கிலோ அல்வாவை முழுங்கின மாதிரி இருந்துச்சி இருப்பினும் இந்த பாடலில் நான் ரசித்தது தப்பான வார்த்தைகள் ஏதுமின்றி, ஒரு பாடல் வரிகள் படு கவர்ச்சியான காட்சியை மனக்கண்ணில் நிறுத்த முடியுமா?

இந்த வரிகளைப் பாருங்கள் :

‘கொடி நீருக்குள்ளே மலர் மேலே-
பெண் குளிப்பது தாமரை போலே’

இந்த வரிகளை படிச்சதும் காட்சி மனசிலே தெரியுதூல

இதுவும் கண்ணதாசனின் சிறப்புக்களில் ஒன்று. அவர் எழுதிய இந்தப் பாடலின் அடுத்த வரி கொஞ்சம் விவாதத்துக்குரியது.

‘நான் நீராய்ப் பிறந்திருந்தாலோ
இந்நேரம் என்னென்னவோ’

‘நீரா இல்லை மீனா ஏத்துவாய் பிறந்திருக்கணுமுணு இளைஞர்களுக்குள் விவாதம் நடக்கலாம்.

படம்: பேரும் புகழும்
பாடியவர்கள்: எஸ்.பி.பி,வாணிஜெயராம்
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
வருடம்: 1976


அவளே என் காதலி
அவளே என் காதலி
கொடி நீருக்குள்ளே மலர் மேலே
பெண் குளிப்பது தாமரை போலே

கொடி நீருக்குள்ளே மலர் மேலே
பெண் குளிப்பது தாமரை போலே
நான் நீராய் பிறந்திருந்தாலும்
இந்நேரம் என்னென்னவோ

அவனே என் காதலன்
அவனே என் காதலன்
நடை மேடையிலே விழி இங்கே
அவன் நாடகம் பார்ப்பது எங்கே
நடை மேடையிலே விழி இங்கே
அவன் நாடகம் பார்ப்பது எங்கே
அவன் நீராய் பிறந்திருந்தாலும்
இந்நேரம் என்னென்னவோ

பாராட்டும் பிள்ளை ஒன்று
தாலாடும் பெண்ணைக்கண்டு
போராட்டம் செய்வதென்ன
இலையோ மலரோ கனியோ

பால் வாசம் சிந்தும் சின்ன
பாப்பாவின் உள்ளம் இன்று
பூவாசம் கொண்டதென்ன
அதுவோ இதுவோ எதுவோ

அவளே என் காதலி

நடை மேடையிலே விழி இங்கே
அவன் நாடகம் பார்ப்பது எங்கே
அவன் நீராய் பிறந்திருந்தாலும்
இந்நேரம் என்னென்னவோ

தொட்டாலும் ஒட்டிக் கொள்ளும்
பட்டான வெள்ளி க்கன்னம்
எட்டாமல் செய்வதென்ன
இனமோ குலமோ பயமோ

பேராசை வெள்ளம் வந்து
போராடும் போதும் பெண்கள்
தாய்வீடு தந்த செல்வம்
அச்சம் நாணம் வெட்கம்

அவனே என் காதலன்

கொடி நீருக்குள்ளே மலர் மேலே
பெண் குளிப்பது தாமரை போலே
நான் நீராய் பிறந்திருந்தாலும்
இந்நேரம் என்னென்னவோ

பாடலை தரவிறக்க
http://download.tamilwire.com/songs/__P_T_By_Movies/Perum%20Pugazhum/Avale%20En%20Kadhali%20-%20TamilWire.com.mp3



ஈகரை தமிழ் களஞ்சியம் ஒரு உளறல் பதிவு !!!! - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Mar 31, 2012 10:49 am

சிவாஜி நடித்த தவப்புதல்வன் படத்தையும் ரசித்துப் பார்த்திருக்கிறேன், அந்தப் படத்தின் பாடல்களும் என் அபிமானப் பாடல்களாகவே இருக்கின்றன.

ஆனால், அந்தப் படத்தில் வரும் இசை கேட்டால் புவி அசைந்தாடும் பாடலையும் அந்தக் காட்சியையும் இன்று பார்த்தால் வேறு மாதிரி சிந்தனைகள் வருகின்றன.

அந்தக் காட்சியில் வரும் முதியவர் அக்பர் என்கிற கண்ணோட்டத்துடன் சின்ன வயதில் பார்த்தேன். அவர் ஒரு வைத்தியர் என்று இப்போது புரிகிறது. தான்சென், வைத்தியர், ஒரு இளம்(?)பெண். அந்தப் பெண் அக்பர் மகள் மெஹருன்னிஸாவாக இருக்கலாம். அவள் தான்செனுக்கு ரூட் விட்டதால்தான் அவர் இஸ்லாமியராக மதம் மாறி அவளை மணந்து கொண்டார் என்கிறது சரித்திரம். ஆகவே அது மெஹருன்னிஸா என்பது தொண்ணூறு சதவீதம் சரியாக இருக்க வாய்ப்பிருக்கிறது.

காட்சி அமைப்பைப் பார்த்தால் அந்தப் பெண் உடல்நிலை சரியில்லாமல் படுத்திருப்பதும், பாட்டைக் கேட்டதும் குணமாகி எழுந்திருப்பதும் புரிகிறது. தான்சென் பாடியது குணமாகவா? தீபத்துக்காகவா அல்லது இரண்டுக்குமா?

சீக்காளிக்குப் பாடியதாக சரித்திரத்தில் எனக்குத் தெரிந்து இல்லை. தீபத்துக்காகப் பாடியதாகவும் இல்லை. அவருடைய இசை தீபங்களை ஒளிபெறச் செய்யுமளவு சக்தி வாய்ந்தது என்று சரித்திரம் சொல்கிறது. சரி, அது ஒரு கனவுக் காட்சி; கனவுகள் சரித்திர வரையரைக்கு உட்பட்டவையாக இருக்க வேண்டிய அவசியமில்லை.

ஆனால், ஒளி பெருங்கள் தீபங்களே, இன்னும் ஒளி வரவில்லையே பாவியா நான், ஒளி வேண்டும் என்று கெஞ்சுகிறேன் என்கிற அர்த்தத்திலெல்லாம் அந்தப் பாடல் எழுதப்பட்டுள்ளது. ஏதோ தான்சென் கெஞ்சிக் கூத்தாடி ஒளி வரவழைத்தது போல இருக்கிறது இது. சரித்திரத்தில் இடம் பெற்ற ஒரு இசை வித்தகனை இது இழிவு படுத்துவது போலில்லை?

இந்தக் காம்ப்ரமஸுக்கு காரணம் என்னவாக இருந்திருக்கும் என்று யோசித்தேன். சிவாஜி படங்களுக்கென்று சில ஸ்டாண்டர்ட் காட்சிகள் அவசியம் என்று அன்றைக்கு தயாரிப்பாளர்களும், டைரக்டர்களும், ஏன்… சிவாஜியும் கூட நினைத்தார்கள். தான்சென் ஒரு ஹிந்துஸ்தானி கிளாஸிக்கல் இசைக் கலைஞர். தத்தித் தகஜுண தகதிமி தகஜுண என்று குதித்து வீரு கொண்டு எழுகின்ற பாடல்களை ஹிந்துஸ்தானியில் பார்க்க சாரி கேட்க முடியாது. அதே படத்தில் வரும் போட்டிப் பாடலில் கூட ஹிந்துஸ்தானி கலைஞருக்கு பி.பி.ஸ்ரீநிவாஸ் பாடும் பகுதிகள் ரொம்பக் குழைவாகத்தான் இருக்கும்.

நடிப்பது சிவாஜி என்பதால் தான்சென் ஒரு ஹிந்துஸ்தானி கலைஞர் என்பதை சௌகர்யமாக மறந்து விட்டு எம்.கே.டி. பாணி பாடல் ஒன்றை அமைத்திருக்கிறார்கள். அதை அங்கும் இங்கும் சினங்கொண்ட வேங்கை மாதிரி நடந்தபடி பாடி நடித்திருக்கிறார் சிவாஜி. இது காலத்தின் கட்டாயம். அவர் ரசிகர்கள் இதை எதிர்பார்த்தார்கள், ரசிக்கவும் செய்தார்கள்.அது சரி நமக்கு எதுக்கு இந்த வீண் வம்பு அப்புறம் சிவாஜி ரசிகர்கள் ஆட்டோவ அனுப்பிடபோறாங்க அய்யோ, நான் இல்லை

நாம பாடலை கேட்போம் அன்பு மலர்





ஈகரை தமிழ் களஞ்சியம் ஒரு உளறல் பதிவு !!!! - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Apr 09, 2012 7:38 pm

இது எனக்கு மிகவும் பிடித்த பாட்டு காரணம் அதன் வரிகள் மற்றும் புரட்சித்தலைவரின் நடனம்

காதலி காதலனின் இதழில் ஒரு கவிதை எழுதுகிறாள். அதன் பாதிப்பு என்னவென்று அவன் விழியில் படிக்கிறாள், அத்தனை நெருக்கத்தில் விழிகள்தானே தெரியும்! இந்தக் கவிதையை எழுதிய அவளே ஒரு கவிதை என்கிறான் காதலன்.

இதழில் எழுதி
விழியில் படிக்கும்
கவிதை நயமும் நீ….


இதற்கப்புறம் வரும் வரிகள் இன்னமும் பொருட்செறிவு நிறைந்தவை.

சின்ன விஷயங்கள் பெரிய அனுபவங்களைத் தருவது நம் எல்லோருக்குமே இருக்கும் அனுபவம். ஒரு உடனடி உதாரணம் திருக்குறள்.இங்கே காதலன் சொல்கிற சின்ன விஷயம் எது தெரியுமா?

சிறு இடையில் உலகின்
சுகத்தை உணர்த்தும்
விளக்க உரையும் நீ….


மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் படத்தில் வரும் இந்தப் பாட்டை எழுதியவர் புலமைப் பித்தன் என்று நினைவு.

இந்தப் பாட்டின் இன்னொரு சிறப்பு த்வஜாவந்தி ராகத்தில் அமைக்கப்பட்ட ஒரே சினிமாப் பாட்டு இதுதான்.(கேள்விபட்டது மத்தபடி நமக்கும் ராகங்களுக்கும் பத்தாம்பொருத்தம்)

பரிமேலழகருக்குப் பிறகு நல்ல உரையாசிரியர்கள் இல்லை என்று வருத்தப் பட்டவர்கள் இந்த நரி மேல்(male) அழகரைப் பார்த்து திருப்திப் பட்டுக் கொள்ளலாம்.

பாடல் வரிகள்
அமுத தமிழில் எழுதும் கவிதை
புதுமை புலவன் நீ
புவி அரசர்குலமும் வணங்கும் புகழின்
புரட்சி தலைவன் நீ (2)

இதழில் எழுதி விழியில் படிக்கும்
கவிதை நயமும் நீ
சிறு இடையில் உலகின் சுகத்தை உணர்த்தும்
விளக்க உரையும் நீ (2)

ஞானம் ஒரு புறமும் ஆசை ஒரு புறமும்
நெஞ்சில் மிதப்பதென்ன
உன்னை ஒரு கணமும்
என்னை மறு கணமும்
உள்ளம் நினைப்பதென்ன (2)
நாதம் இசைத்துவரும் பாத மணிச்சிலம்பு
என்னை அழைப்பதென்ன
ஊஞ்சல் அசைந்துவரும் நீல விழி இரண்டின்
வண்ணம் சிவப்பதென்ன

எதுகை அது உனது இருக்கை
அதில் எனது பெண்மை ஆடட்டுமே
ஒரு கை குழல் தழுவ
மறுகை உடல் தழுவ இன்பம் தேடட்டுமே (2)
வைகை என்னை நெருங்கி
வைகை அணை மதுரை
வைகை அணை போலவே
மங்கை எனும் அமுத கங்கை
பெருகுவது நீந்தி கரை காணவே
பாடல் :புலமைபித்தன்

இசை :எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடியவர்கள் :வாணி ஜெயராம் ,ஜெயச்சந்திரன்





ஈகரை தமிழ் களஞ்சியம் ஒரு உளறல் பதிவு !!!! - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக