ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருவண்ணாமலையில் 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது

3 posters

Go down

திருவண்ணாமலையில் 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது Empty திருவண்ணாமலையில் 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது

Post by சிவா Fri Dec 09, 2011 11:29 am

திருவண்ணாமலையில் 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது First

2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது, திருவண்ணாமலையில் 20 லட்சம் பக்தர்கள் தீப தரிசனம்


திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீப திருவிழாவையொட்டி 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. இதில் 20 லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டு தீப தரிசனம் செய்தனர்.

கார்த்திகை தீப திருவிழா

உலகில் உள்ள சிவாலயங்களில் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமுமாகவும் விளங்குவது திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில். இங்கு ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் 10 நாட்கள் நடைபெறும் தீபத் திருவிழா சிறப்பு வாய்ந்ததாகும்.

மலையே சிவனாக வணங்கப்படும் திருவண்ணாமலையில், இந்த ஆண்டுக்கான கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து 10 நாட்கள் பல்வேறு வாகனங்களில் சாமி வீதி உலா நடைபெற்றது.

பரணி தீபம்

விழாவின் சிகர நிகழ்ச்சியான தீபத்திருநாள் நேற்று நடைபெற்றது. அதிகாலை 4 மணிக்கு சாமி சன்னதியில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. முன்னதாக அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டது.

தொடர்ந்து சாமி, அம்மனுக்கு பால், தேன், பஞ்சாமிர்தம், மஞ்சள், இளநீர் மற்றும் வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. அபிஷேகம் முடிந்ததும் சாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டு, 5 பெரிய அகல் விளக்குகளில் பஞ்சமுக தீபம் ஏற்றப்பட்டது.

பக்தி கோஷம்

பரணி தீபம் சாமி சன்னதியின் உள்பிரகாரத்தை சுற்றி வந்து வைகுண்ட வாசல் வழியாக அம்மன் சன்னதிக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கும் 5 அகல் விளக்குகள் பஞ்சமுக தீபம் ஏற்பட்டது. தொடர்ந்து பரணி தீபம் பக்தர்கள் பார்வைக்காக வெளிப்பிரகாரம் கொண்டு வரப்பட்டது.

இதனை பார்த்ததும் கோவில் வளாகத்தில் குவிந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், `அண்ணாமலையாருக்கு அரோகரா' என்று கோஷமிட்டனர். அந்த பக்தி கோஷம் மலையில் எங்கும் எதிரொலித்தது.

திருவண்ணாமலையில் 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது Ms03

மலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது

பின்னர் பரணி தீபம் காலபைரவர் சன்னதியில் காலை 11 மணி வரை வைக்கப்பட்டிருந்தது. அதன்பிறகு பரணி தீபம் பர்வதராஜ குலத்தினரால் மலை உச்சிக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இதனால் இறைவன் மலைக்கு சென்று விட்டதாக கருத்தில் கொண்டு கோவில் சன்னதிகள் அனைத்தும் சாத்தப்பட்டன.

மாலை நேரம் கோவிலில் இருந்தபடி சாமி தரிசனம் செய்து விட்டு மலையில் மகா தீபம் ஏற்றுவதை காண்பதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலில் குவியத் தொடங்கினர்.

மகா தீபம் ஏற்றப்பட்டது

அப்போது அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் ஒன்றன்பின் ஒன்றாக பஞ்சமூர்த்திகள் சன்னதியில் இருந்து வெளியே வந்து கொடி மரம் முன்பு உள்ள மண்டபத்தில் எழுந்தருளினார்கள். மாலை 5.58 மணி அளவில் சன்னதியில் இருந்து அர்த்தநாரீஸ்வரர் ஆடியபடியே வெளியே வந்தார். ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே அர்த்தநாரீஸ்வரர் காட்சியளிப்பது குறிப்பிடத்தக்கது.

அர்த்தநாரீஸ்வரர் வெளியே வந்ததும் கோவில் கொடிமரம் முன்பு உள்ள அகண்ட தீபத்தில் சரியாக மாலை 6 மணிக்கு தீபம் ஏற்றப்பட்டது. அதேநேரத்தில் 2,668 அடி உயர மலை உச்சியிலும் ராட்சத கொப்பரையில் மகா தீபம் ஏற்றப்பட்டது.

அப்போது கோவிலுக்கு உள்ளேயும், வெளியேயும் குவிந்திருந்த பக்தர்கள் பக்தி பரவசத்துடன் பக்தி கோஷங்களை எழுப்பினர். மலை உச்சியில் தீபம் ஏற்றியது தென்பட்டதும், திருவண்ணாமலை நகரில் ஆவலுடன் காத்திருந்த பக்தர்கள், பொதுமக்கள் அனைவரும் தங்களது வீடுகள் தீப ஒளியை பரவவிட்டனர். வாணவேடிக்கை விண்ணை பிளக்கும் வகையில் இருந்தது.

மலை உச்சியில் ஏற்றப்பட்ட மகா தீபத்தை காண ஏராளமான பக்தர்கள் மலைக்கு சென்றனர். மலையேறும் பக்தர்களின் பாதுகாப்பிற்காகவும், வழிதவறி செல்பவர்களை அழைத்து வருவதற்காகவும் மலையின் மீது போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

20 லட்சம் பக்தர்கள்

தீப விழாவை காணவரும் பக்தர்களுக்காக தமிழகம் முழுவதும் இருந்து 2 ஆயிரம் சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேலும் சிறப்பு ரெயில்களும் இயக்கப்பட்டன. இதன் பயனாக தீப விழாவில் சுமார் 20 லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டு தீப தரிசனம் செய்தனர்.

தினதந்தி


திருவண்ணாமலையில் 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

திருவண்ணாமலையில் 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது Empty Re: திருவண்ணாமலையில் 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது

Post by ரேவதி Fri Dec 09, 2011 11:30 am

நான் நேற்று டிவியில் பார்த்தேன்..கண்கொள்ளா காட்சி திருவண்ணாமலையில் 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது 2825183110


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

திருவண்ணாமலையில் 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது Empty Re: திருவண்ணாமலையில் 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது

Post by இளமாறன் Fri Dec 09, 2011 12:05 pm

யார் யார் வீட்டில் தீபம் அகல்விளக்கு ஏற்றினீர்கள்

தீபம் ஏற்றியவர்கள் கொஞ்சம் போட்டோவையும் எனக்கு அனுப்பி வையுங்கள் சிரி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





திருவண்ணாமலையில் 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

திருவண்ணாமலையில் 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது Empty Re: திருவண்ணாமலையில் 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum