Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சேவாக்கின் சரித்திர சாதனையுடன் தொடரை கைப்பற்றியது இந்தியா!
+4
Dr.சுந்தரராஜ் தயாளன்
பிஜிராமன்
இளமாறன்
சிவா
8 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
சேவாக்கின் சரித்திர சாதனையுடன் தொடரை கைப்பற்றியது இந்தியா!
First topic message reminder :
இந்தூர்: ஒருநாள் போட்டிகளில் அதிகபட்ச ஸ்கோர் என்ற வீரேந்திர சேவாக்கின் சரித்திரச் சாதனையுடன், மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 4வது ஒருதினப் போட்டியில் இந்தியா 153 ரன்கள் வித்தியாசத்தில் இமாய வெற்றி பெற்றது.
இதன்மூலம், மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரை, இந்தியா 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
சேவாக்கில் தனிப்பட்ட சாதனையுடன், சர்வதேச ஒருநாள் போட்டியில் அதிகபட்ச ரன்கள் குவித்த அணி என்ற வரலாற்றுப் பெருமையும் இந்தியாவுக்குக் கிடைத்தது.
இந்தூரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் களமிறங்கியது இந்திய அணி.
துவக்கம் முதலே அதிரடியாக பேட் செய்த சேவாக் 149 பந்துகளில் 219 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். கார்த்திகைத் தீபத் திருநாளில் பவுண்டரிகள், சிக்ஸர்கள் என ரசிகர்களுக்கு வானவேடிக்கைக் காட்டினார், சேவாக்!
சச்சின் சாதனை முறியடிப்பு...
இதன் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிகபட்ச ரன்கள் எடுத்த வீரர் என்ற புதிய சாதனையை அவர் நிகழ்த்தினார். மேலும், ஒருநாள் போட்டிகளில் இரண்டாவது இரட்டைச் சதம் அடித்த பெருமையும் அவருக்கு கிடைத்தது.
இந்தியாவின் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 200 ரன்கள் விளாசியதே இதுவரை உலக சாதனையாக இருந்தது.
இந்தியா சாதனை ஸ்கோர்...
இந்தூர் ஒருநாள் போட்டியில், இந்தியா 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 418 ரன்கள் எடுத்தது. இதுவே ஒருநாள் போட்டியில் ஓர் அணி எடுத்த அதிகபட்ச ரன்களாகும்.
சேவாக்கின் சாதனை ஆட்டத்துக்கு எதிர்முனையில் பக்கபலமாக இருந்த கம்பீர் 67 ரன்களையும், ரெய்னா 55 ரன்களையும் சேர்த்தனர். ஜடெஜா 10 ரன்கள் எடுத்தார். ரோஹித் ஷர்மா 27 ரன்களையும், கோஹ்லி ஆட்டமிழக்காமல் 23 ரன்களையும் எடுத்தனர்.
ரம்தீன் போராட்டம்...
இப்போட்டியில் 419 ரன்கள் என்ற மிகக் கடினமான இலக்குடன் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, 49.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 265 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது.
எதிர்முனையில் அடுத்தடுத்து வீரர்கள் ஆட்டமிழக்க, ரம்தீன் தனியாக போராடி அதிகபட்சமாக 96 ரன்கள் சேர்த்தார். சிம்மன்ஸ் 36 ரன்களையும், சாமுவேல்ஸ் 33 ரன்களையும் எடுத்தனர். ரசல்ஸ் 29 ரன்கள் எடுத்தார். நரேன் 27 ரன்கள் எடுத்தார். ஏனையோர் சொற்ப ரன்களே எடுத்தனர்.
இந்திய தரப்பில் மிகச் சிறப்பாக பந்துவீசிய ராஜேஷ் ஷர்மா, ஜடேஜா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், ரெய்னா 2 விக்கெட்டுகளையும், அஸ்வின்ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
ஒருபோதும் எதிர்பாக்கவில்லை: சந்தோஷ சேவாக்
இந்தூரில் 219 ரன்கள் குவித்து, ஒருநாள் போட்டியில் அதிகபட்ச ஸ்கோர் என்ற வரலாற்றுச் சாதனையை நிழ்த்திய சேவாக், "நான் இரட்டைச் சதம் அடிப்பேன் என்று ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை," என்றார்.
தமது சாதனை குறித்து அவர் கூறுகையில், "இரட்டைச் சதம் அடிப்பேன் என ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. ஓபனிங் இறங்கியபோது, நிதானமாக விளையாடினால் கணிசமான ரன்களை குவிக்க முடியும் என்று கம்பீரிடம் சொன்னேன்.
பவர் ப்ளே தொடங்கிய பின்புதான் இரட்டை சதம் அடிக்க முடியும் என்ற நம்பிக்கை பிறந்தது. எனது கேட்சை சம்மி (170 ரன்கள் இருந்தபோது) தவறவிட்ட தருணத்தில்தான், கடவுள் என்னோடு இருக்கிறார் என்று உணர்ந்தேன்.
எனது குடும்பத்தினர், ரசிகர்கள் ஒவ்வொருவருக்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன். நான் இரட்டைச் சதம் அடிக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்த்தை அறிந்தேன். இன்று, சிக்ஸ் அடிக்க வேண்டும் என்று தோன்றும்போது அடித்தேன்," என்றார் சேவாக்.
நக்கீரன்
இந்தூர்: ஒருநாள் போட்டிகளில் அதிகபட்ச ஸ்கோர் என்ற வீரேந்திர சேவாக்கின் சரித்திரச் சாதனையுடன், மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 4வது ஒருதினப் போட்டியில் இந்தியா 153 ரன்கள் வித்தியாசத்தில் இமாய வெற்றி பெற்றது.
இதன்மூலம், மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரை, இந்தியா 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
சேவாக்கில் தனிப்பட்ட சாதனையுடன், சர்வதேச ஒருநாள் போட்டியில் அதிகபட்ச ரன்கள் குவித்த அணி என்ற வரலாற்றுப் பெருமையும் இந்தியாவுக்குக் கிடைத்தது.
இந்தூரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் களமிறங்கியது இந்திய அணி.
துவக்கம் முதலே அதிரடியாக பேட் செய்த சேவாக் 149 பந்துகளில் 219 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். கார்த்திகைத் தீபத் திருநாளில் பவுண்டரிகள், சிக்ஸர்கள் என ரசிகர்களுக்கு வானவேடிக்கைக் காட்டினார், சேவாக்!
சச்சின் சாதனை முறியடிப்பு...
இதன் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிகபட்ச ரன்கள் எடுத்த வீரர் என்ற புதிய சாதனையை அவர் நிகழ்த்தினார். மேலும், ஒருநாள் போட்டிகளில் இரண்டாவது இரட்டைச் சதம் அடித்த பெருமையும் அவருக்கு கிடைத்தது.
இந்தியாவின் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 200 ரன்கள் விளாசியதே இதுவரை உலக சாதனையாக இருந்தது.
இந்தியா சாதனை ஸ்கோர்...
இந்தூர் ஒருநாள் போட்டியில், இந்தியா 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 418 ரன்கள் எடுத்தது. இதுவே ஒருநாள் போட்டியில் ஓர் அணி எடுத்த அதிகபட்ச ரன்களாகும்.
சேவாக்கின் சாதனை ஆட்டத்துக்கு எதிர்முனையில் பக்கபலமாக இருந்த கம்பீர் 67 ரன்களையும், ரெய்னா 55 ரன்களையும் சேர்த்தனர். ஜடெஜா 10 ரன்கள் எடுத்தார். ரோஹித் ஷர்மா 27 ரன்களையும், கோஹ்லி ஆட்டமிழக்காமல் 23 ரன்களையும் எடுத்தனர்.
ரம்தீன் போராட்டம்...
இப்போட்டியில் 419 ரன்கள் என்ற மிகக் கடினமான இலக்குடன் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, 49.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 265 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது.
எதிர்முனையில் அடுத்தடுத்து வீரர்கள் ஆட்டமிழக்க, ரம்தீன் தனியாக போராடி அதிகபட்சமாக 96 ரன்கள் சேர்த்தார். சிம்மன்ஸ் 36 ரன்களையும், சாமுவேல்ஸ் 33 ரன்களையும் எடுத்தனர். ரசல்ஸ் 29 ரன்கள் எடுத்தார். நரேன் 27 ரன்கள் எடுத்தார். ஏனையோர் சொற்ப ரன்களே எடுத்தனர்.
இந்திய தரப்பில் மிகச் சிறப்பாக பந்துவீசிய ராஜேஷ் ஷர்மா, ஜடேஜா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், ரெய்னா 2 விக்கெட்டுகளையும், அஸ்வின்ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
ஒருபோதும் எதிர்பாக்கவில்லை: சந்தோஷ சேவாக்
இந்தூரில் 219 ரன்கள் குவித்து, ஒருநாள் போட்டியில் அதிகபட்ச ஸ்கோர் என்ற வரலாற்றுச் சாதனையை நிழ்த்திய சேவாக், "நான் இரட்டைச் சதம் அடிப்பேன் என்று ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை," என்றார்.
தமது சாதனை குறித்து அவர் கூறுகையில், "இரட்டைச் சதம் அடிப்பேன் என ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. ஓபனிங் இறங்கியபோது, நிதானமாக விளையாடினால் கணிசமான ரன்களை குவிக்க முடியும் என்று கம்பீரிடம் சொன்னேன்.
பவர் ப்ளே தொடங்கிய பின்புதான் இரட்டை சதம் அடிக்க முடியும் என்ற நம்பிக்கை பிறந்தது. எனது கேட்சை சம்மி (170 ரன்கள் இருந்தபோது) தவறவிட்ட தருணத்தில்தான், கடவுள் என்னோடு இருக்கிறார் என்று உணர்ந்தேன்.
எனது குடும்பத்தினர், ரசிகர்கள் ஒவ்வொருவருக்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன். நான் இரட்டைச் சதம் அடிக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்த்தை அறிந்தேன். இன்று, சிக்ஸ் அடிக்க வேண்டும் என்று தோன்றும்போது அடித்தேன்," என்றார் சேவாக்.
நக்கீரன்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: சேவாக்கின் சரித்திர சாதனையுடன் தொடரை கைப்பற்றியது இந்தியா!
வாழ்த்துக்கள் சேவாக்
அப்துல்- தளபதி
- பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010
Re: சேவாக்கின் சரித்திர சாதனையுடன் தொடரை கைப்பற்றியது இந்தியா!
40 ஆண்டு கால ஒரு நாள் கிரிக்கெட் போட்டி வரலாற்றில் அதிக ரன்கள் குவித்தவர் என்ற புதிய சரித்திரத்தை இந்திய அதிரடி மன்னன் 33 வயதான வீரேந்தர் ஷேவாக் நேற்று படைத்தார். வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக 219 ரன்கள் குவித்து, தெண்டுல்கரின் சாதனையை முறியடித்தார்.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் குவாலியரில் நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் இந்திய சாதனைகளின் நாயகன் சச்சின் தெண்டுல்கர் 200 ரன்கள் குவித்து (147 பந்து) கடைசி வரை களத்தில் இருந்தார். இதன் மூலம் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் அரங்கில் இரட்டை சதம் அடித்த முதல் வீரர் என்ற அரிய பெருமைக்கு சொந்தக்காரர் ஆனார். அவரது வரிசையில் இரட்டை சதத்தை பதிவு செய்துள்ள ஷேவாக், அவரது சாதனையையும் முந்தி விட்டார்.
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஹோல்கர் ஸ்டேடியத்தில் நேற்று நடந்த வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 4-வது ஒரு நாள் போட்டியில் ஷேவாக், நீண்ட நாளைக்கு பிறகு விசுவரூபத்தை காட்டினார். முந்தைய 3 ஆட்டங்களில் சரியாக விளையாடாத அவர், ஒட்டுமொத்த சுறுசுறுப்பையும் குத்தகைக்கு எடுத்து இந்தூர் மைதானத்தில் ரசிகர்களுக்கு பெரிய விருந்தே படைத்தார்.
தொடக்கத்தில் இருந்தே வெஸ்ட் இண்டீஸ் பவுலர்களை துவம்சம் செய்த அவர், மைதானத்தின் நாலாபுறமும் பந்துகளை ஓட விட்டார். 69 பந்துகளில் தனது 15-வது சதத்தை கடந்த ஷேவாக், தொடர்ந்து வாண வேடிக்கை நிகழ்த்தி ரசிகர்களை குதூகலத்தில் ஆழ்த்தினார். அடுத்த 71 பந்துகளில் மேலும் 100 ரன்களை சேர்த்து, புதிய சாதனை மகுடத்தை சூடிக் கொண்டார்.
பவுண்டரி அடித்து இரட்டை சதத்தை கடந்த அவர் தெண்டுல்கரின் சாதனையை முறியடித்து, ஒரு நாள்போட்டிகளில் அதிக ரன்கள் விளாசியவர் என்ற புதிய உலக சாதனையை படைத்தார். சாதனையை நேரில் கண்டு களித்த ரசிகர்களின் மகிழ்ச்சி ஆரவாரத்தினால் ஸ்டேடியமே அதிர்ந்து போனது.
தெண்டுல்கர் தனது இரட்டை சதத்தை 50-வது ஓவரில் தான் படைத்தார். ஆனால் ஷேவாக்கோ 44-வது ஓவரிலேயே அதனை எட்டி விட்டார். அதாவது 140 பந்துகளில் இரட்டை சதம் விளாசி, குறைந்த பந்துகளில் இரட்டை சதம் அடித்தவர் என்ற சிறப்பையும் தனதாக்கி இருக்கிறார்.
மொத்தம் 219 ரன்கள் (149 பந்து, 25 பவுண்டரி, 7 சிக்சர்) குவித்த அவர் 47-வது ஓவரில் சிக்சர் அடிக்க முயற்சித்து லாங்-ஆப் திசையில் கேட்ச் ஆனார். தனது 240-வது ஒரு நாள் போட்டியில் ஆடிய ஷேவாக் நேற்று 8 ஆயிரம் ரன்களை கடந்த 6-வது இந்தியர் என்ற சாதனை பட்டியலிலும் இணைந்தார். அவர் வெளியேறிய போது வெஸ்ட் இண்டீஸ் வீரர்களும் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தனர். முன்னதாக அவர் இரட்டை செஞ்சுரியை கடந்த போது, கிரிக்கெட் சங்கம் சார்பில் மைதானத்திற்குள்ளேயே அவருக்கு பூங்கொத்து கொடுக்கப்பட்டது. ஆனால் வெளியே வந்ததும் அதனை பெற்றுக்கொள்வதாக கூறி அவரை திருப்பி அனுப்பி விட்டார்.
1984-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் வீரர் விவியன் ரிச்சர்ட்ஸ் இங்கிலாந்துக்கு எதிராக 189 ரன்கள் எடுத்த போது, ஒரு நாள் போட்டியில் அது தனிநபரின் அதிகபட்ச ரன்னாக பதிவானது. அதன் பிறகு 13 ஆண்டுகள் கழித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் சயீத் அன்வர் 1997-ம் ஆண்டு சென்னையில் நடந்த இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 194 ரன்கள் சேர்த்து, ரிச்சர்ட்சின் சகாப்தத்திற்கு முடிவு கட்டினார். இதன் பிறகு அன்வரின் சாதனை 13 ஆண்டுகள் நீடித்தது. அந்த சாதனையைத்தான் தெண்டுல்கர் கடந்த ஆண்டு முறியடித்தார்.
ஆனால் தெண்டுல்கரின் சாதனைக்கு ஆயுசு ரொம்ப குறைவு. 2 1/2 மாதங்களிலேயே அது முடிவுக்கு வந்து விட்டது. ஒரு நாள் போட்டிகளில் பெரும்பாலான சாதனைகள் தெண்டுல்கர் வசம் தான் உள்ளன. அவற்றில் மிகவும் அத்திப்பூத்தாற் போன்ற ஒரு அரிய சாதனையை மட்டும் ஷேவாக் தட்டிப்பறித்து உள்ளார்.
கடந்த ஆண்டு இரட்டை சதத்தை கடந்த தெண்டுல்கர், அப்போது கூறும் போது, ''சாதனைகள் என்பதே முறியடிக்கப் படக்கூடியது தான். இந்த சாதனையும் என்றாவது ஒரு நாள் உடைக்கப்படும். எனது சாதனையை ஒரு இந்தியர் உடைத்தால் மகிழ்வேன்'' என்று கூறியிருந்தார். அவர் நினைத்தபடி, இப்போது அவரது சிஷ்யரே அந்த சாதனையை தகர்த்துள்ளார்.
டெஸ்டில் அதிக ரன்கள் குவித்த இந்தியர் (2008-ம் ஆண்டு தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக 319 ரன்) என்ற சிறப்புக்குரிய ஷேவாக், ஒரு நாள் போட்டியிலும் அந்த பெருமையை தன்னகத்தே வைத்துக் கொண்டுள்ளார்.
1999-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு நாள் போட்டியின் மூலம் தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கிய டெல்லியை சேர்ந்த ஷேவாக், 50 ஓவர்கள் முழுமையாக நின்றால் இரட்டை சதம் தன்னால் அடிக்க முடியும் என்று அடிக்கடி கூறுவார். ஆனால் அவர் இதுவரை ஒரு முறை கூட 50 ஓவர்கள் முழுமையாக நின்றது கிடையாது. அப்படி நிற்காவிட்டாலும் நேற்று அந்த அதிசயத்தை செய்து காட்டி விட்டார். ஒட்டுமொத்தத்தில் நேற்றைய தினம் அவருக்குரிய நாளாக அமைந்தது. இப்போது அவர் வாழ்த்து மழையில் திக்குமுக்காடி கொண்டிருக்கிறார்.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் குவாலியரில் நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் இந்திய சாதனைகளின் நாயகன் சச்சின் தெண்டுல்கர் 200 ரன்கள் குவித்து (147 பந்து) கடைசி வரை களத்தில் இருந்தார். இதன் மூலம் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் அரங்கில் இரட்டை சதம் அடித்த முதல் வீரர் என்ற அரிய பெருமைக்கு சொந்தக்காரர் ஆனார். அவரது வரிசையில் இரட்டை சதத்தை பதிவு செய்துள்ள ஷேவாக், அவரது சாதனையையும் முந்தி விட்டார்.
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஹோல்கர் ஸ்டேடியத்தில் நேற்று நடந்த வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 4-வது ஒரு நாள் போட்டியில் ஷேவாக், நீண்ட நாளைக்கு பிறகு விசுவரூபத்தை காட்டினார். முந்தைய 3 ஆட்டங்களில் சரியாக விளையாடாத அவர், ஒட்டுமொத்த சுறுசுறுப்பையும் குத்தகைக்கு எடுத்து இந்தூர் மைதானத்தில் ரசிகர்களுக்கு பெரிய விருந்தே படைத்தார்.
தொடக்கத்தில் இருந்தே வெஸ்ட் இண்டீஸ் பவுலர்களை துவம்சம் செய்த அவர், மைதானத்தின் நாலாபுறமும் பந்துகளை ஓட விட்டார். 69 பந்துகளில் தனது 15-வது சதத்தை கடந்த ஷேவாக், தொடர்ந்து வாண வேடிக்கை நிகழ்த்தி ரசிகர்களை குதூகலத்தில் ஆழ்த்தினார். அடுத்த 71 பந்துகளில் மேலும் 100 ரன்களை சேர்த்து, புதிய சாதனை மகுடத்தை சூடிக் கொண்டார்.
பவுண்டரி அடித்து இரட்டை சதத்தை கடந்த அவர் தெண்டுல்கரின் சாதனையை முறியடித்து, ஒரு நாள்போட்டிகளில் அதிக ரன்கள் விளாசியவர் என்ற புதிய உலக சாதனையை படைத்தார். சாதனையை நேரில் கண்டு களித்த ரசிகர்களின் மகிழ்ச்சி ஆரவாரத்தினால் ஸ்டேடியமே அதிர்ந்து போனது.
தெண்டுல்கர் தனது இரட்டை சதத்தை 50-வது ஓவரில் தான் படைத்தார். ஆனால் ஷேவாக்கோ 44-வது ஓவரிலேயே அதனை எட்டி விட்டார். அதாவது 140 பந்துகளில் இரட்டை சதம் விளாசி, குறைந்த பந்துகளில் இரட்டை சதம் அடித்தவர் என்ற சிறப்பையும் தனதாக்கி இருக்கிறார்.
மொத்தம் 219 ரன்கள் (149 பந்து, 25 பவுண்டரி, 7 சிக்சர்) குவித்த அவர் 47-வது ஓவரில் சிக்சர் அடிக்க முயற்சித்து லாங்-ஆப் திசையில் கேட்ச் ஆனார். தனது 240-வது ஒரு நாள் போட்டியில் ஆடிய ஷேவாக் நேற்று 8 ஆயிரம் ரன்களை கடந்த 6-வது இந்தியர் என்ற சாதனை பட்டியலிலும் இணைந்தார். அவர் வெளியேறிய போது வெஸ்ட் இண்டீஸ் வீரர்களும் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தனர். முன்னதாக அவர் இரட்டை செஞ்சுரியை கடந்த போது, கிரிக்கெட் சங்கம் சார்பில் மைதானத்திற்குள்ளேயே அவருக்கு பூங்கொத்து கொடுக்கப்பட்டது. ஆனால் வெளியே வந்ததும் அதனை பெற்றுக்கொள்வதாக கூறி அவரை திருப்பி அனுப்பி விட்டார்.
1984-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் வீரர் விவியன் ரிச்சர்ட்ஸ் இங்கிலாந்துக்கு எதிராக 189 ரன்கள் எடுத்த போது, ஒரு நாள் போட்டியில் அது தனிநபரின் அதிகபட்ச ரன்னாக பதிவானது. அதன் பிறகு 13 ஆண்டுகள் கழித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் சயீத் அன்வர் 1997-ம் ஆண்டு சென்னையில் நடந்த இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 194 ரன்கள் சேர்த்து, ரிச்சர்ட்சின் சகாப்தத்திற்கு முடிவு கட்டினார். இதன் பிறகு அன்வரின் சாதனை 13 ஆண்டுகள் நீடித்தது. அந்த சாதனையைத்தான் தெண்டுல்கர் கடந்த ஆண்டு முறியடித்தார்.
ஆனால் தெண்டுல்கரின் சாதனைக்கு ஆயுசு ரொம்ப குறைவு. 2 1/2 மாதங்களிலேயே அது முடிவுக்கு வந்து விட்டது. ஒரு நாள் போட்டிகளில் பெரும்பாலான சாதனைகள் தெண்டுல்கர் வசம் தான் உள்ளன. அவற்றில் மிகவும் அத்திப்பூத்தாற் போன்ற ஒரு அரிய சாதனையை மட்டும் ஷேவாக் தட்டிப்பறித்து உள்ளார்.
கடந்த ஆண்டு இரட்டை சதத்தை கடந்த தெண்டுல்கர், அப்போது கூறும் போது, ''சாதனைகள் என்பதே முறியடிக்கப் படக்கூடியது தான். இந்த சாதனையும் என்றாவது ஒரு நாள் உடைக்கப்படும். எனது சாதனையை ஒரு இந்தியர் உடைத்தால் மகிழ்வேன்'' என்று கூறியிருந்தார். அவர் நினைத்தபடி, இப்போது அவரது சிஷ்யரே அந்த சாதனையை தகர்த்துள்ளார்.
டெஸ்டில் அதிக ரன்கள் குவித்த இந்தியர் (2008-ம் ஆண்டு தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக 319 ரன்) என்ற சிறப்புக்குரிய ஷேவாக், ஒரு நாள் போட்டியிலும் அந்த பெருமையை தன்னகத்தே வைத்துக் கொண்டுள்ளார்.
1999-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு நாள் போட்டியின் மூலம் தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கிய டெல்லியை சேர்ந்த ஷேவாக், 50 ஓவர்கள் முழுமையாக நின்றால் இரட்டை சதம் தன்னால் அடிக்க முடியும் என்று அடிக்கடி கூறுவார். ஆனால் அவர் இதுவரை ஒரு முறை கூட 50 ஓவர்கள் முழுமையாக நின்றது கிடையாது. அப்படி நிற்காவிட்டாலும் நேற்று அந்த அதிசயத்தை செய்து காட்டி விட்டார். ஒட்டுமொத்தத்தில் நேற்றைய தினம் அவருக்குரிய நாளாக அமைந்தது. இப்போது அவர் வாழ்த்து மழையில் திக்குமுக்காடி கொண்டிருக்கிறார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: சேவாக்கின் சரித்திர சாதனையுடன் தொடரை கைப்பற்றியது இந்தியா!
கடந்த ஆண்டு இரட்டை சதத்தை கடந்த தெண்டுல்கர், அப்போது கூறும் போது, ''சாதனைகள் என்பதே முறியடிக்கப் படக்கூடியது தான். இந்த சாதனையும் என்றாவது ஒரு நாள் உடைக்கப்படும். எனது சாதனையை ஒரு இந்தியர் உடைத்தால் மகிழ்வேன்'' என்று கூறியிருந்தார். அவர் நினைத்தபடி, இப்போது அவரது சிஷ்யரே அந்த சாதனையை தகர்த்துள்ளார்.
வீரூ கலக்குங்ங்க.
வீரூ கலக்குங்ங்க.
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: சேவாக்கின் சரித்திர சாதனையுடன் தொடரை கைப்பற்றியது இந்தியா!
ஜேன் செல்வகுமார் wrote:கடந்த ஆண்டு இரட்டை சதத்தை கடந்த தெண்டுல்கர், அப்போது கூறும் போது, ''சாதனைகள் என்பதே முறியடிக்கப் படக்கூடியது தான். இந்த சாதனையும் என்றாவது ஒரு நாள் உடைக்கப்படும். எனது சாதனையை ஒரு இந்தியர் உடைத்தால் மகிழ்வேன்'' என்று கூறியிருந்தார். அவர் நினைத்தபடி, இப்போது அவரது சிஷ்யரே அந்த சாதனையை தகர்த்துள்ளார்.
வீரூ கலக்குங்ங்க.
அப்படியா.... சச்சினின் ஆசை நிறைவேறியது.சச்சின் கிரேட் மென்.
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: சேவாக்கின் சரித்திர சாதனையுடன் தொடரை கைப்பற்றியது இந்தியா!
Sehwag 219 For 149 Balls Vs West Indies 4th ODI 2011 Highlights Full Inning
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: சேவாக்கின் சரித்திர சாதனையுடன் தொடரை கைப்பற்றியது இந்தியா!
ஓடி ஓடி கலைத்த வெஸ்ட் இண்டீஸ்
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Page 2 of 2 • 1, 2
Similar topics
» டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இந்தியா
» இந்தியா-தெ.ஆ. தொடரை இழந்தது இந்தியா..!
» பரபரப்பான ஆட்டத்தில் இந்தியா த்ரில் வெற்றி: தொடரை 2-0 எனக் கைப்பற்றியது
» மழையால் 8 ஓவர்களாக குறைப்பு: கடைசி 20 ஓவர் போட்டியில் இந்தியா வெற்றி தொடரை கைப்பற்றியது
» பரபரப்பான கடைசி நேரத்தில் ஷர்துல் தாகூர் அதிரடி ஆட இந்தியா த்ரில் வெற்றி: தொடரை கைப்பற்றியது
» இந்தியா-தெ.ஆ. தொடரை இழந்தது இந்தியா..!
» பரபரப்பான ஆட்டத்தில் இந்தியா த்ரில் வெற்றி: தொடரை 2-0 எனக் கைப்பற்றியது
» மழையால் 8 ஓவர்களாக குறைப்பு: கடைசி 20 ஓவர் போட்டியில் இந்தியா வெற்றி தொடரை கைப்பற்றியது
» பரபரப்பான கடைசி நேரத்தில் ஷர்துல் தாகூர் அதிரடி ஆட இந்தியா த்ரில் வெற்றி: தொடரை கைப்பற்றியது
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|