ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகத்தின் எதிர்ப்பையும் மீறி பாலாற்றின் குறுக்கே புதிய அணை ஆய்வுப் பணியை தொடங்கிய ஆந்திரா

4 posters

Go down

தமிழகத்தின் எதிர்ப்பையும் மீறி பாலாற்றின் குறுக்கே புதிய அணை ஆய்வுப் பணியை தொடங்கிய ஆந்திரா Empty தமிழகத்தின் எதிர்ப்பையும் மீறி பாலாற்றின் குறுக்கே புதிய அணை ஆய்வுப் பணியை தொடங்கிய ஆந்திரா

Post by Guest Thu Dec 08, 2011 2:45 pm

வேலூர்: தமிழகத்தின் எதிர்ப்பையும் மீறி பாலாற்றின் குறுக்கே அணை கட்டும் ஆய்வுப் பணியை ஆந்திர மாநில அரசு தொடங்கியுள்ளது. ரூ. 65 கோடி செலவில் இந்தப் பணிகளை அது மேற்கொள்ளவுள்ளது.

வேலூர் மாவட்ட எல்லையில், பாலாற்றின் குறுக்கே கணேசபுரம் என்ற இடத்தில் ஆந்திர மாநில அரசு அணைகட்டும் திட்டத்தை முதலில் கொண்டு வந்தது. இதனை எதிர்த்து தமிழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அத்துடன் உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது.

தற்போது அந்த இடத்திற்கு பதிலாக புதிய இடத்தில் வருவாய்த்துறைக்கு சொந்தமான இடத்தில் அணையை கட்டும் பணிக்கான இடத்தை தேர்வு செய்து அதற்கான அடிப்படை பணிகளை ஆந்திர மாநில அரசு தொடங்கி உள்ளது.

கர்நாடகாவில் உற்பத்தியாகும் பாலாறு, ஆந்திரா வழியாக 38 கிலோ மீட்டர் கடந்து வந்து, தமிழ்நாட்டில் 222 கிலோ மீட்டர் ஓடி செங்கல்பட்டு அருகே சட்ராஸ் எனப்படும் சதுரங்கப்பட்டினத்தில் கடலில் கலக்கிறது.

ஆந்திர மாநில முதல்வராக இருந்த சந்திரபாபு நாயுடுவின் தொகுதியான குப்பம் பகுதியில் ஏற்கனவே ஒரு கிலோ மீட்டருக்கு ஒரு தடுப்பணை என்று 20 இடங்களில் ஆந்திர அரசு தடுப்பணைகளை கட்டி உள்ளது. கர்நாடக அரசோ ஏற்கனவே 15 இடங்களில் தடுப்பணைகளை கட்டி உள்ளது. இதன் காரணமாக தமிழகத்திற்கு வர வேண்டிய பாலாறு முற்றிலும் தடைபட்டுக் காணப்படுகிறது.

விவசாயத்திற்கும், குடிநீருக்கும் பாலாறையே பிரதானமாக நம்பி உள்ள வேலூர், காஞ்சீபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு மாவட்ட மக்கள் மழை வரும்போதெல்லாம் பாலாற்றில் தண்ணீர் வருமா? என ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கின்றனர். ஆற்றில் சிறிதளவு தண்ணீர் வந்தாலே அது பெரிய செய்தியாக இருக்கிறது. காரணம், ஆந்திராவும், கர்நாடகாவும் கட்டி வைத்துள்ள தடுப்பணைகள்.

ராஜசேகர ரெட்டி ஆட்சியின் போது குப்பம் அருகே உள்ள கணேசபுரத்தில் ரூ.55 கோடி செலவில் பாலாற்றின் குறுக்கே அணை கட்ட முடிவு செய்யப்பட்டது. தற்போது சிவராமபுரத்தில் ரூ.65 கோடி செலவில் அணை கட்டப்பட உள்ளது.

இதற்கான ஆய்வுப்பணிக்காக தென் ஆப்பிரிக்காவில் இருந்து என்ஜினீயர்களை வரவழைத்து குப்பம்-சந்திரபுரம் இடையே உள்ள சிவராமபுரத்தில் ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வில் ஆந்திர மாநில நீர்ப்பாசனத்துறை உயர் அதிகாரி ராமேஷ்முண்டா தலைமையில் பொறியாளர்களும், அதிகாரிகளும் ஈடுபட்டனர்.

ஏற்கனவே கணேசபுரத்தில் அணைகட்ட இருந்த இடம் வனத்துறைக்கு சொந்தமானதாக இருந்தது. எனவே, கடந்த வாரம் ஆந்திர மாநில சுரங்கத்துறை மந்திரி கல்ல அருணகுமாரி, வருவாய்த்துறை, வனத்துறை அதிகாரிகளுடன் நேரில் வந்து முழுக்க முழுக்க வருவாய்த்துறைக்கு சொந்தமான இடத்தையே தேர்வு செய்து அணைகட்ட பணிகளை தொடங்கி இருப்பதால் இதில் தடை ஏதும் இருக்காது என்று நீர்ப்பாசனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த அணைக்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. தமிழகத்தில் இதுதொடர்பாக பல்வேறு கட்டங்களில் போராட்டங்களும் நடந்துள்ளன என்பது நினைவிருக்கலாம். தற்போது முல்லைப் பெரியாறு விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் பாலாறு அணை விவகாரத்தை ஆந்திரா கையில் எடுத்திருக்கிறது.

முல்லைப் பெரியாறு விவகாரத்திலிருந்து தமிழகத்தின் கவனத்தைத் திருப்பும் காங்கிரஸ் கட்சியின் திட்டமா இது என்ற சந்தேகமும் மக்களிடையே எழுந்துள்ளது. ஆந்திராவிலும் தெலுங்கானா விவகாரம் விறுவிறுப்பாக உள்ளது. எனவே பாலாறு பிரச்சினையை எழுப்பி அங்குள்ள அரசியல்வாதிகளையும் திசை திருப்ப முயல்கிறார்களா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
avatar
Guest
Guest


Back to top Go down

தமிழகத்தின் எதிர்ப்பையும் மீறி பாலாற்றின் குறுக்கே புதிய அணை ஆய்வுப் பணியை தொடங்கிய ஆந்திரா Empty Re: தமிழகத்தின் எதிர்ப்பையும் மீறி பாலாற்றின் குறுக்கே புதிய அணை ஆய்வுப் பணியை தொடங்கிய ஆந்திரா

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Thu Dec 08, 2011 3:22 pm

அடுத்தது ஆந்திராகாரனும் ஆரம்பித்து விட்டானா? சோகம் அதிர்ச்சி கோபம் :joker:
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

தமிழகத்தின் எதிர்ப்பையும் மீறி பாலாற்றின் குறுக்கே புதிய அணை ஆய்வுப் பணியை தொடங்கிய ஆந்திரா Empty Re: தமிழகத்தின் எதிர்ப்பையும் மீறி பாலாற்றின் குறுக்கே புதிய அணை ஆய்வுப் பணியை தொடங்கிய ஆந்திரா

Post by ayyamperumal Thu Dec 08, 2011 3:38 pm

டேய் ஒவ்வொருத்தனா ஆரம்பிங்கடா ! ஒரே நேரத்தில் எத்தனை நோக்கத்திற்காக தான் போராடுவது


தமிழகத்தின் எதிர்ப்பையும் மீறி பாலாற்றின் குறுக்கே புதிய அணை ஆய்வுப் பணியை தொடங்கிய ஆந்திரா Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

தமிழகத்தின் எதிர்ப்பையும் மீறி பாலாற்றின் குறுக்கே புதிய அணை ஆய்வுப் பணியை தொடங்கிய ஆந்திரா Empty Re: தமிழகத்தின் எதிர்ப்பையும் மீறி பாலாற்றின் குறுக்கே புதிய அணை ஆய்வுப் பணியை தொடங்கிய ஆந்திரா

Post by சிவா Thu Dec 08, 2011 3:40 pm

இந்த நிலை தொடர்ந்தால் சோவியத் ரஷ்யாவிற்கு ஏற்பட்ட நிலைதான் இந்தியாவிற்கும் வருமோ?


தமிழகத்தின் எதிர்ப்பையும் மீறி பாலாற்றின் குறுக்கே புதிய அணை ஆய்வுப் பணியை தொடங்கிய ஆந்திரா Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழகத்தின் எதிர்ப்பையும் மீறி பாலாற்றின் குறுக்கே புதிய அணை ஆய்வுப் பணியை தொடங்கிய ஆந்திரா Empty Re: தமிழகத்தின் எதிர்ப்பையும் மீறி பாலாற்றின் குறுக்கே புதிய அணை ஆய்வுப் பணியை தொடங்கிய ஆந்திரா

Post by ராஜா Thu Dec 08, 2011 4:07 pm

அய்யம் பெருமாள் .நா wrote:டேய் ஒவ்வொருத்தனா ஆரம்பிங்கடா ! ஒரே நேரத்தில் எத்தனை நோக்கத்திற்காக தான் போராடுவது
சிவா wrote:இந்த நிலை தொடர்ந்தால் சோவியத் ரஷ்யாவிற்கு ஏற்பட்ட நிலைதான் இந்தியாவிற்கும் வருமோ?

எல்லோரும் ஒரே நேரத்தில் ஆரம்பிக்கட்டும் அப்போது தான் , எல்லாபக்கமும் அடி விழுந்தால் தான் நமக்கென்ன பக்கத்து வீடு தானே பற்றி எரிகிறது என்ற நிலை மாறும் தமிழர்களுக்கு ஒற்றுமையின் வலிமை தெரியும்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

தமிழகத்தின் எதிர்ப்பையும் மீறி பாலாற்றின் குறுக்கே புதிய அணை ஆய்வுப் பணியை தொடங்கிய ஆந்திரா Empty Re: தமிழகத்தின் எதிர்ப்பையும் மீறி பாலாற்றின் குறுக்கே புதிய அணை ஆய்வுப் பணியை தொடங்கிய ஆந்திரா

Post by ayyamperumal Thu Dec 08, 2011 4:12 pm

எல்லோரும் ஒரே நேரத்தில் ஆரம்பிக்கட்டும் அப்போது தான் , எல்லாபக்கமும்
அடி விழுந்தால் தான் நமக்கென்ன பக்கத்து வீடு தானே பற்றி எரிகிறது என்ற
நிலை மாறும் தமிழர்களுக்கு ஒற்றுமையின் வலிமை தெரியும்.

அப்படினா வாங்க ராஜா அண்ணா நாம் கர்நாடக அரசுக்கும் எதிராக கண்டனம் தெரிவிப்போம்.


தமிழகத்தின் எதிர்ப்பையும் மீறி பாலாற்றின் குறுக்கே புதிய அணை ஆய்வுப் பணியை தொடங்கிய ஆந்திரா Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

தமிழகத்தின் எதிர்ப்பையும் மீறி பாலாற்றின் குறுக்கே புதிய அணை ஆய்வுப் பணியை தொடங்கிய ஆந்திரா Empty Re: தமிழகத்தின் எதிர்ப்பையும் மீறி பாலாற்றின் குறுக்கே புதிய அணை ஆய்வுப் பணியை தொடங்கிய ஆந்திரா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» அமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி வடகொரியாவிலிருந்து ஆயுதங்கள் தருவிக்கப்பட்டுள்ளது
» தமிழர்களின் எதிர்ப்பையும் மீறி கொழும்பு விழாவில் நடிகை ஜெனிலியா
» கடும் எதிர்ப்பையும் மீறி, பாலியல் பலாத்காரம் தொடர்பான ஆவணப்படத்தை ஒளிபரப்பியது பி.பி.சி.
»  கடும் எதிர்ப்பையும் மீறி அன்னிய நேரடி முதலீட்டு கொள்கை அமலுக்கு வந்தது
» சீனாவின் கடும் எதிர்ப்பையும் மீறி தைவான் சென்ற அமெரிக்க சபாநாயகர் - பதற்றம் அதிகரிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum