Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்by heezulia Today at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கமல் டைரியில் 23 பேர்
2 posters
Page 1 of 1
கமல் டைரியில் 23 பேர்
![கமல் டைரியில் 23 பேர் 391958_288886627815722_264721000232285_735305_1483091244_n](https://2img.net/h/a3.sphotos.ak.fbcdn.net/hphotos-ak-ash4/391958_288886627815722_264721000232285_735305_1483091244_n.jpg)
இன்று நான் நானாக
இருக்கக் காரணமாக இருப்பவர்கள் என்று எழுதினார் கமல். ''இந்தத் தலைப்பில்
ஒரு கட்டுரை எழுதலாமா?'' என்று கேட்டார். ''என்னையும் அறியாமல் ஏதோ ஒரு
விதத்தில் சிலருடைய Influence என் மீது படிந்து விட்டிருக்கிறது. ஆரம்பம்
முதல் என்னைப் பாதித்தவர்களைப்பற்றி ஒரு நாள் இரவு ஓர் பட்டியல் எடுத்தேன்.
அதாவது,‘About those who have influenced me’ என்று...'' என விவரித்தார்.
இதோ, கமலின் டைரியில் இடம் பெற்ற சிலர்...
ராஜலட்சுமி:
என்னுடைய கருப் பருவத்தில் இருந்து துவங்கி, என்னை, என் பாரங்களை,
பலவீனங்களை, 24 ஆண்டுகள் சுமந்தவள். என் சிறகுகளை முறிக்காமல் பறக்கக்
கற்றுத்தந்தவள். இணை இல்லாத இந்த உறவால் நிரப்ப முடியாத ஒரு சூன்யத்தைத்
தன் பிரிவால் ஏற்படுத்தியவள் - என் தாய்.
ஸ்ரீநிவாசன்: நான்
கரு உருப்பெறக் காரணமானவர். எனக்கு எளிமையைக் கற்றுத்தந்தவர். எனக்கு என்
திறமை மேல் உள்ள நம்பிக்கையைவிட, அவருக்கு என் திறமைகளில் அபார நம்பிக்கை.
நான் ஒரு சிகரத்தை எட்டிவிட்டதாக நினைத்தபோதெல்லாம்... அதைவிட உயரத்தைக்
காட்டி, என் லட்சியத்தை உயர்த்திக்கொண்டே செல்பவர் - என் தந்தை.
சிவாஜி: இந்த நடிகரின் பாதிப்பு இல்லாத தமிழ் நடிகன் 1954-க்குப் பிறகு இருப்பதாகத் தெரியவில்லை. நானும் அதற்கு விதிவிலக்கு அல்ல.
எம்.ஜி.ஆர்.:
ஒரு நடிகன், மனிதனாக, மாபெரும் தலைவனாகத் தன்னை உயர்த்திக்கொள்ள முடியும்
என்று என் போன்ற நடிகர்களுக்கு, சொல்லாலும் செயலாலும் செய்து காட்டிய
முன்னோடி.
ஏவி.எம்.: என் வாழ்க்கையையே திசை திருப்பியவர்.
அவர் இல்லை என்றால், நான் இன்று லட்சணமான பெர்சனாலிட்டியோடு கூடிய ஒரு
கிளர்க்காகவோ, பியூனாகவோ குறைந்த ஊதியத்துக்கு வேலை செய்துகொண்டு
இருப்பேன்.
சாருஹாசன்: என் சிந்தனைகளில் ஓர் ஆழமான பாதிப்பை
ஏற்படுத்தியவர். கேள்வியும் பதிலாகவும், கேள்வியையே பதிலாகவும், பதிலையே
கேள்வியாகவும் மாற்றும் இவரின் பரந்த சிந்தனையோட்டத்தின் பாதிப்பு எனக்கும்
உண்டு. என்னை விட 24 வயது மூத்த ஒரு நண்பர்.
Incidentally என் சகோதரர்.
சந்திரஹாசன்:
என் முதல் நடிப்பு குரு. கட்டபொம்மன் வசனத்தை மூன்று வயதில் என்னை
மனப்பாடம் செய்ய வைத்தவர். என்னை எப்படியாவது வாழ்க்கையில் பொறுப்புள்ள ஒரு
மனிதனாக, செலவுகளில் சிக்கனமாக, எதிர்காலத்துக்குச் சேர்த்து வைக்கும்
தன்மை உடையவனாக மாற்ற வேண்டும் என்று பல வருடங்களாய் முயன்று
தோற்றுக்கொண்டு இருப்பவர். தோற்றாலும் தொடரும் கஜினி முகம்மது - என்
அண்ணன்.
திருமதி கோமளவல்லி: என் அண்ணி. ஈன்ற பொழுதுதான்
பெரிதுவக்கும் என்றில்லை. என்னைச் சான்றோன் எனக் கேட்டால் பெருமைகொள்ளும்
மனம் அது. கோமளவல்லி என்ற என் அறிமுகம் பிடிக்காது. நான் எழுதுகிற கோழிக்
கிறுக்கல் தமிழை காப்பி எடுப்பவர்.
டி.கே. சண்முகம்,
டி.கே.பகவதி: என்னை Professional நடிகனாவதற்கு ஆயத்தப்படுத்தியவர்கள்.
கண்டிப்பும் கண்ணியமும் நிறைந்த இந்த நடிகர்களின் பாதிப்பு எனக்கு உண்டு.
என்.எஸ்.
நடராஜன்: எனக்குப் பரத நாட்டியம் கற்றுத்தந்தவர். இப்பொழுதும் கடினமான
நடனக் காட்சிகள் வரும்போது, அவர் முகம் மனதில் தோன்றி மறையும்.
Click Here!
தங்கப்பன்: எனக்குப் புனர்ஜென்மம் தந்தவர். என்னை மீண்டும் திரை உலகுக்குக் கொல்லைப் பக்கமாய் அழைத்துச் சென்றவர் -நடன உதவியாளராக.
ஆர்.சி.சக்தி:
என்னை ரசித்தே என் திறமையை வளர்த்தவர். சகோதரர் போன்றவர். நல்ல
எழுத்தாளர். என் 19 வயதுச் சேட்டைகள் ஒரு சிலவற்றில் என்னோடு
பங்குகொண்டவர்.
கே.பி. (பாலசந்தர்): என்னை மீண்டும் ஈன்ற தாய் - நடிகனாக. கண்டிப்பான தந்தையும்கூட.
அனந்து:
என்னை இலக்கியத்தில், லட்சியத்தில் உயரச் செய்தவர். என்னைப் போலவே ஒரு
சினிமா பைத்தியம் - A Friend and a philosopher. சினிமாவைப்பற்றிய என்
சித்தாந்தத்தை மாற்றிச் செதுக்கியவர்.
ராஜன்: எனக்கு நட்பு
கற்றுத்தந்தவன். சிரிக்கக் கற்றுத்தந்தவன். நகைச்சுவையின் முக்கியத்துவத்தை
உணர்த்தியவன். Blood cancer பற்றி நிறைய ஜோக்குகள் சொல்பவன். அவனைக்
கடைசியாகக் கொல்லப்போகும் வியாதி அது என்று தெரிந்தும், மரண தேதியைக்
குறித்துவைத்துவிட்டுச் சிரித்துக்கொண்டு இருந்தவன்.
வாணி:
என்னை சாந்தப்படுத்தியவள். எனக்குக் காதலிக்கக் கற்றுத்தந்தவள். பெண்களின்
மேல் எனக்குள்ள மதிப்பை உயர்த்தியவள். என் மனச் சுமைதாங்கி.
பாலுமகேந்திரா:
நல்ல நண்பர், நல்ல மனிதர், நல்ல கேமெராமேன், நல்ல வசனகர்த்தா, நல்ல
இயக்குநர், நல்ல கதாசிரியர், நல்ல ரசிகர். மேற்சொன்னவற்றில் சிலதைத்தான்
சிலர் ஒப்புக்கொண்டுள்ளனர். அத்தனையும் உண்மை என்று எல்லோரும் உணரும் நாள்
தொலைவில் இல்லை. நாங்கள் இருவரும் ஒரு மதத்தைச் சேர்ந்தவர்கள். சினிமா என்ற
மாபெரும் மதத்தின் சக பூசாரிகள், சினிமாவை என் ஸிமீறீவீரீவீஷீஸீ ஆக
ஆக்கியவர்.
பாரதிராஜா: தீர்க்க அறிவுக்கும் எளிமைக்கும்
நெருங்கிய தொடர்பு உள்ளதைப் புரிய வைத்தவர். எனக்கும் ரசிகர்களுக்கும்
சினிமாவில் மண் வாசனை காட்டியவர்.
பஞ்சு அருணாசலம்: என்னை
கமர்ஷியல் சினிமா பக்கம் உந்தித் தள்ளியவர். (நல்ல) சினிமாவைப்பற்றி என்
மனக் குமைச்சல்களையும் புரிந்துகொண்டு வாதித்து எனக்கு சினிமாவின் வர்த்தக
நிஜத்தைத் தரிசிக்க வாய்ப்பு அளித்தவர்.
எல்.வி.பிரசாத்: என்
வருமானத்தைக் கூட்டியவர். கலா ரசிகர். 26 வருடங்களுக்குப் பிறகு
என்அழைப்பை ஏற்று நடிக்க வந்தவர். தான் செய்த எந்தச் சாதனையையும்
பெரிதென்று நினையாமல் தன்னையே பலமாக சுய விமரிசனம் செய்பவர் - இந்தக்
கலையுலகில் உள்ள மிகச் சில ஜாம்பவான்களில் ஒருவர்.
நரேந்தர் பேடி: என் திறமை மேல் அபார நம்பிக்கைகொண்டவர். குடியால் வரும் கெடுதலை, தன் அகால மரணத்தால் என் மனத்தில் ஆழப் பதித்தவர்.
பர்க்கா
ராய்: ஒரு மாபெரும் வர்த்தக ரிஸ்க் எடுத்து வென்றவர். மூன்று ஆண்களுக்குச்
சமம் (மனோ பலத்தில்). என் கடுமையான விமர்சனங்களைப் பொறுமையாகக்
கேட்டுக்கொள்பவர்.
எஸ்பி.முத்துராமன்: பணிவாய் நடந்துகொள்வது
பிறவியில் வந்தது இல்லை. பழக்கத்தால்தான் வரும் என்பதற்கு உதாரணம் ஆனவர்.
ஆரவாரம் இல்லாமல் வெல்பவர்.
விகடன்
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: கமல் டைரியில் 23 பேர்
23 பேரைப் பற்றி இவர் சொல்லி இருப்பது உண்மையாரேவதி wrote:என்ன ஆனால்ஜாஹீதாபானு wrote:நல்ல பதிவு![]()
![]()
ஆனால்........................![]()
![]()
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: கமல் டைரியில் 23 பேர்
கமலுக்கே வெளிச்சம்ஜாஹீதாபானு wrote:23 பேரைப் பற்றி இவர் சொல்லி இருப்பது உண்மையாரேவதி wrote:என்ன ஆனால்ஜாஹீதாபானு wrote:நல்ல பதிவு![]()
![]()
ஆனால்........................![]()
![]()
![]()
![]()
![]()
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: கமல் டைரியில் 23 பேர்
அது சரிரேவதி wrote:கமலுக்கே வெளிச்சம்ஜாஹீதாபானு wrote:23 பேரைப் பற்றி இவர் சொல்லி இருப்பது உண்மையாரேவதி wrote:என்ன ஆனால்ஜாஹீதாபானு wrote:நல்ல பதிவு![]()
![]()
ஆனால்........................![]()
![]()
![]()
![]()
![]()
![சியர்ஸ்](/users/1813/71/41/02/smiles/359383.gif)
![சியர்ஸ்](/users/1813/71/41/02/smiles/359383.gif)
![சியர்ஸ்](/users/1813/71/41/02/smiles/359383.gif)
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» கமல் படப்பிடிப்பில் விபத்து; 3 பேர் பலி
» என் வளர்ச்சிக்கு உதவிய 17 பேர்! - கமல்
» கமல் தமிழகத்தை விட்டு வெளியேறினால் ரேஷன் கார்டை ஒப்படைத்துவிடுவோம்- இது கமல் ரசிகர்கள்
» மோகன், அஜித்துக்கு பாடிய பின்னணிப் பாடகர் கமல்; கமல் 61 ஸ்பெஷல்!
» 'அன்புள்ள கமல்' படத்தில் ரஜினி பற்றி கமல்!
» என் வளர்ச்சிக்கு உதவிய 17 பேர்! - கமல்
» கமல் தமிழகத்தை விட்டு வெளியேறினால் ரேஷன் கார்டை ஒப்படைத்துவிடுவோம்- இது கமல் ரசிகர்கள்
» மோகன், அஜித்துக்கு பாடிய பின்னணிப் பாடகர் கமல்; கமல் 61 ஸ்பெஷல்!
» 'அன்புள்ள கமல்' படத்தில் ரஜினி பற்றி கமல்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|