ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிந்து சமவெளி நாகரிகம்

4 posters

Go down

சிந்து சமவெளி நாகரிகம் Empty சிந்து சமவெளி நாகரிகம்

Post by balakarthik Wed Dec 07, 2011 1:22 pm

"கல் தோண்றி மண் தோன்றா காலத்து முன் தோன்றி மூத்த குடி" என்ற பெருமை தமிழ் மக்களுக்கு உண்டு.
தமிழர் இனம் உலகில் மிகத் தொன்மை வாய்ந்ததாகும்.

இந்திய நாட்டின் தென்பகுதியில் "நாவலந் தீவு" என்னும் பெரும் நிலப்பரப்பு இருந்தது. அப்பகுதியில் தோண்றிய மக்களே தமிழ் மக்கள் ஆவர். இப்பகுதி பின்னாளில் ஐரோப்பிய மக்களால் "லெமூரியா" என்றும் "கொந்துவானா" என்றும் அழைக்கப்பட்டது.

தென்பகுதியிலிருந்து தமிழர்கள் படிப்படியாக இந்தியாவின் வடமேற்குப் பகுதியான சிந்து சமவெளி வரை பரவலாயினர்.
சிந்து சமவெளி நாகரீகம் என்பதெல்லாம் தமிழர் நாகரீகமே என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

அக்காலத்தில் தமிழர்கள் மிகத் திருந்திய நாகரீகம் பெற்றவர்களாக இருந்தனர்.
முதல் தமிழ்சங்கம் தோண்றிய காலத்தில் தமிழகத்தின் தென்பகுதி தற்போதுள்ள குமரிமுனைக்கு பல நூறு கிலோ மீட்டர் தெற்கே விரிந்து கிடந்தது.
அப்போதிருந்த மதுரை, தென்மதுரை என்று அழைக்கப்பட்டது.

அத்தென் மதுரையில் தான் தமிழ்ச் சங்கம் நிறுவப்பட்டிருந்தது. பல்லாண்டுகளுக்குப் பின் கடல் கொந்தளிப்பால் தென்மதுரை அழிந்து போனது.
அதனால் கடைச்சங்கம் கபாடாபுரம் என்னும் இடத்தில் நிறுவப்பட்டது. பின்னர் கபாடாபுரத்தையும் கடல் விழுங்கியபோது தற்போதுள்ள மதுரையில் கடைச்சங்கம் நிறுவப்பட்டது.

தலைச்சங்கத்தின் இலக்கியங்கள் அனைத்தும் கடல்கோளால் அழிந்தன. தலைச்சங்கக் காலத்தில் உருவான பாடல்கள் 4440 ஆண்டுகள் ஆவதாக கணக்கிடப்பட்டுள்ளது. அவற்றுள் பரிபாடலும், முதுநாரையும், முதுகுறுகும், களரியா விரையும் அடங்கும். இடைச் சங்கக்காலப் பாடல்களான கலி, குருகு, வெண்டாளி, வியாழமாலை அகவல் ஆகியன அகத்தியர், தொல்காப்பியர், இருந்தையூர்க் கிழார் ஆகியோரால் இயற்றப்பட்டு 3700 ஆண்டுகள் ஆவதாக கருதப்படுகிறது.

நல்லந்துவனார், மதுரை மருதனின் நாகனார், நக்கீரனார் முதலான பலர் எழுதிய நூற்றைம்பது கலி, எழுது பரிபா, எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகியன 1850 ஆண்டுகளுக்கு முந்தியது என அறிய முடிகிறது.

இந்நூல்களுள் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினென்கீழ்க்கணக்கு ஆகியனவும் அடங்கும். பதினென் கீழ்க்கணக்கு நூல்களுள் களவழி நாற்பது தவிர்த்த மற்ற நூல்களுள் எல்லாம் அகத்தைச் சார்ந்த அறிவை வளர்க்கக் கூடியனவாக அமைந்துள்ளன. அவற்றுள் மிக முக்கியமானவையாகக் கருதப்படுவன திருக்குறள், நாலடியார், பழமொழி நானூறு, நான்மனிக்கடிகை, திரிகடுகம், சிறுபஞ்சமூலம், ஆசாரக்கோவை, ஏலாதி, இன்னா நாற்பது, இனியவை நாற்பது போன்றனவாகும். மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் அகத்துறையாகிய யோகக் கலையில் தேர்ந்திருந்தனர். அவர்களின் வாழ்க்கையில் அரசியல், பொருளாதாரம், சுகாதாரம், சமூகவியல் அனைத்தும் நன்கு வளர்ந்திருந்தன.

சிந்துவெளி நாகரீகத்தின் போது வாழ்ந்தவர்கள் தமிழர் வழி வந்தவர்களாகவே கருதப்படுகின்றனர். அவர்கள் யோகக் கலையில் சிறந்து விளங்கியிருந்தனர் என்பதற்கான அடையாளங்கள் அகழ்வாய்விலிருந்து அண்மைக் காலங்களில் கண்டு அறியப்பட்டுள்ளன.

6000 ஆண்டுகளுக்கு முன்பு மொகஞ்சதாரோ, ஹரப்பாவில் வாழ்ந்த தமிழர் வழிவந்த மக்கள், தியான நிலையில் அமர்ந்திருக்கும் தோற்றமுடைய கடவுளை வழிபட்டனர் என்பதற்கான படிவம் கிடைக்கப் பெற்றதிலிருந்து, அக்காலத்திலேயே தமிழர்கள் யோகக் கலையில் தேர்ந்திருந்தனர் என்பதை எளிதில் உணர்ந்து கொள்ளலாம்.

திருவள்ளுவரின் கருத்துக்களை ஒட்டிய சிந்தனையாளர்களாகத் தமிழகத்தில் தோண்றிவர்களே சித்தர் பெருமக்கள் ஆவர். அவர்களுடைய சிந்தனை அனைத்தும் யோக நெறியில் வலியுறுத்தப்படும் அகத் துறையையே பெரிதும் சார்ந்திருக்கின்றன.

நன்றி:- இந்தியா கலாசார புரட்சி அமைப்பு


ஈகரை தமிழ் களஞ்சியம் சிந்து சமவெளி நாகரிகம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

சிந்து சமவெளி நாகரிகம் Empty Re: சிந்து சமவெளி நாகரிகம்

Post by ராஜா Wed Dec 07, 2011 1:29 pm

பகிர்வுக்கு நன்றி பாலா , சிந்து சமவெளி நாகரிகம் 678642
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சிந்து சமவெளி நாகரிகம் Empty Re: சிந்து சமவெளி நாகரிகம்

Post by ரேவதி Wed Dec 07, 2011 1:49 pm

பகிர்தமைக்கு நன்றி சிந்து சமவெளி நாகரிகம் 678642


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

சிந்து சமவெளி நாகரிகம் Empty Re: சிந்து சமவெளி நாகரிகம்

Post by பேகன் Wed Dec 07, 2011 1:55 pm

நன்றி
பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Back to top Go down

சிந்து சமவெளி நாகரிகம் Empty Re: சிந்து சமவெளி நாகரிகம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum