புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழகம்-கேரளா எல்லையில் மோதலை தடுக்க மேலும் போலீஸ் படை குவிப்பு
Page 1 of 1 •
தமிழகம் - கேரளா எல்லையில் 2-வது நாளாக பதற்றம் நீடித்து வருகிறது. எல்லைப்பகுதியில் மோதலை தடுப்பதற்காக கூடுதல் போலீஸ் படை குவிக்கப்பட்டு உள்ளது.
முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையில், கேரள மாநிலம், குமுளியில் தமிழர்கள் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து எல்லைப் பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டது.
2-வது நாளாக மறியல்
தமிழர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து, தேனி மாவட்டம் கூடலூரில் குமுளி நெடுஞ்சாலையில் நேற்றும் சாலை மறியல் நடந்தது. இதனால் தமிழ்நாட்டில் இருந்து குமுளி மலைச்சாலை வழியாக கேரளாவுக்கு 2-வது நாளாக போக்குவரத்து முடங்கியது.
சபரிமலை சென்று திரும்பும் அய்யப்ப பக்தர்கள் வாகனங்கள் மட்டும் மலைச்சாலை வழியாக கூடலூருக்கு வந்தன. அந்த வாகனங்கள் மட்டும் சாலையில் செல்ல அனுமதிக்கப்பட்டன. அந்த வாகனங்களில் வந்த பக்தர்கள், வண்டிப்பெரியாறு அருகே தாங்கள் தாக்கப்பட்டதாக தெரிவித்தனர்.
போக்குவரத்து முடக்கம்
அதைத் தொடர்ந்து கேரளாவில் தமிழர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து கூடலூரில் நேற்று அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. மேலும் மறியல் காரணமாக தமிழக எல்லையில் கூடலூர் வரை மட்டுமே பஸ்கள் இயக்கப்படுகின்றன. கூடலூருக்கு வந்த கேரள வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன.
தேனி மாவட்ட எல்லைப்பகுதியான கம்பம் மெட்டு சாலையில் கடந்த 2 நாட்களாக போக்குவரத்து முடக்கப்பட்டு உள்ளது. கேரளாவிற்குச் செல்லும் மற்றொரு மலைச்சாலையான போடிமெட்டு பாதையில் நேற்று முன்தினம் இரவு முதல் வாகனப் போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளது.
இதற்கிடையில் தேனி மற்றும் போடி பகுதியில் இருந்து நூற்றுக்கு மேற்பட்ட கேரளாவை சேர்ந்தவர்கள் 2 பஸ்களில் போலீஸ் பாதுகாப்புடன் கேரள எல்லைக்கு பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டனர்.
கம்பத்தில் கடை அடைப்பு
குமுளியில் தமிழர்கள் தாக்கப்பட்டதற்கு பதிலடியாக நேற்று முன்தினம் இரவில் கம்பத்தில் கேரளாவை சேர்ந்தவர்களின் கடைகள் மீது தாக்குதல் நடந்தது. பரபரப்பான இந்த சூழ்நிலையில், நேற்று 2-வது நாளாக கம்பத்தில் முழு கடையடைப்பு நடைபெற்றது. கம்பம் அருகே உள்ள காமயக்கவுண்டன்பட்டியில் கேரள லாரிக்கு நேற்று முன்தினம் இரவில் தீ வைக்கப்பட்டது.
நாராயணதேவன்பட்டியில் கேரள பதிவு எண் கொண்ட ஒரு ஜீப் மற்றும் இரு சக்கர வாகனம் ஆகியவை தீ வைத்து எரிக்கப்பட்டன. கம்பம் மெட்டு சாலையில் 150-க்கு மேற்பட்ட இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் ஊர்வலமாகச் சென்று கேரள அரசைக் கண்டித்து கோஷங் களை எழுப்பினார்கள். பகல் 12 மணி அளவில் கேரள முதல்-மந்திரி உம்மன்சாண்டியின் உருவ பொம்மை எரிக்கப்பட்டது.
பதற்றம் நீடிப்பு
இந்த போராட்டங்களினால் கம்பம் நகரில் பதற்றம் நீடிப்பதுடன் வீதிகள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன. கம்பம் மெட்டுச்சாலையில் போக்குவரத்து முடக்கப்பட்டதால், இரு மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் ஏறத்தாழ 12 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று தங்கள் மாநிலங்களுக்கு திரும்பி வருகிறார்கள்.
கேரளாவில் சிறை பிடிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்ட ஏலத்தோட்ட பெண் தொழிலாளர்கள், கேரள மாநிலத்தவர்கள் தங்களை கடுமையாக நடத்தியதாக தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து நேற்று பிற்பகலில் கம்பம் மெட்டு சோதனைச்சாவடியில் ஏராளமான தமிழர்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அருகில் இருந்த கேரள பதிவு எண் கொண்ட காரும், தனியார் மண்புழுக்கூடமும் தீவைத்து எரிக்கப்பட்டன.
நடந்து சென்ற அய்யப்ப பக்தர்கள்
குமுளியில் இருந்து தமிழக எல்லைக்கு வரும் பயணிகளை கூடலூர் வரை ஏற்றிச்செல்ல போலீஸ் வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன. வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும், ஒரு சில அய்யப்ப பக்தர்களும் கூடலூரில் இருந்து நடந்தே குமுளிக்குச் சென்றனர்.
இதற்கிடையில் கூடலூரில் சாலை மறியல் போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என்றும், கூடலூர் பஸ் நிலையம் அருகே இன்று (புதன் கிழமை) உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்றும், முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு குழு அறிவித்து உள்ளது.
மாற்று வழியில் போக்குவரத்து
கம்பம், லோயர் கேம்ப், கூடலூர் மற்றும் குமுளியில் பதற்ற நிலை நீடிப்பதால், கேரளாவுக்குச் செல்லும் வாகனங்களை மாற்றுப்பாதையில் செல்லும்படி போலீசார் அறிவுரை வழங்கினார்கள். அவசர வேலையாக செல்பவர்கள் நெல்லை மாவட்டம், செங்கோட்டை, கோவை அருகில் உள்ள பாலக்காடு வழியாக கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதற்கிடையில் தேனி மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிச்சாமி, கேரளாவின் இடுக்கி மாவட்ட கலெக்டர் இ.தேவதாசன் ஆகியோர் நேற்று டெலிபோன் மூலம் தொடர்பு கொண்டு பேசி எல்லைப் பகுதி நிலைமை குறித்து ஆய்வு செய்தனர்.
கோவை பக்தர்கள் பஸ் மீது தாக்குதல்
இந்தநிலையில் கோவையை சேர்ந்த அய்யப்ப பக்தர்கள் நேற்று ஒரு பஸ்சில் குமுளி வழியாக சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு சென்று கொண்டு இருந்தனர். குமுளி அருகே ஹோலிடே ஹோம் என்ற இடத்தில் மாலை 3.15 மணியளவில் பஸ் சென்ற போது ஜீப்பில் வந்த சிலர் அய்யப்ப பக்தர்களின் பஸ்சை வழிமறித்தனர். பின்னர் அவர்கள் திடீரென அய்யப்ப பக்தர்கள் சென்ற பஸ் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் பஸ்சின் கண்ணாடிகள் நொறுங்கின. திடீரென நடந்த இந்த தாக்குதலை சற்றும் எதிர்பாராத பக்தர்கள் செய்வதறியாது கூச்சல் போட்டனர். இதையடுத்து இந்த ஜீப்பில் வந்த அந்த கும்பல் அங்கிருந்து வண்டிப்பெரியார் சாலையை நோக்கி தப்பி சென்று விட்டனர்.
1,500 போலீசார் குவிப்பு
பதற்றத்தை தணிப்பதற்காக தேனி மாவட்டத்தில் உள்ள 3 எல்லைச் சாலைகளிலும் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
குமுளி, கம்பம் மெட்டு, போடி மெட்டு மலைச்சாலைகள் மற்றும் போராட்டம் தீவிரமாக நடைபெறும் லோயர் கேம்ப், கூடலூர், கம்பம் பகுதிகளில் போலீஸ்படை குவிக்கப்பட்டு உள்ளது. தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. ராஜேஷ்தாஸ் தலைமையில் நெல்லை, சிவகங்கை, விருதுநகர், மதுரை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 3 மலைச்சாலை களையும் கண்காணிக்கும் பணியில் திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி. சஞ்சய்மாத்தூர், திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன், மதுரை 6-வது பட்டாலியன்படை போலீஸ் சூப்பிரண்டு ஈஸ்வரன், பழனி 14-வது படை போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன், நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரபிதாரி ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது.
26 மதுபானக்கடைகள் அடைப்பு
அசம்பாவிதங்களை தடுப்பதற்காக தேனி மாவட்டம், உத்தம பாளையம் உட்கோட்ட பகுதிகளில் உள்ள 26 அரசு மதுபானக்கடைகளை மறு உத்தரவு வரும் வரை மூடும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அதன்படி சின்னமனூர், கம்பம், க.புதுப்பட்டி, கூடலூர், காமயகவுண்டன்பட்டி, ஓடைப் பட்டி, உத்தமபாளையம், ராயப்பன்பட்டி, காமாட்சிபுரம், சுருளிப்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள 26 அரசு மதுபானக்கடைகள் நேற்று முதல் மூடப்பட்டு உள்ளன. நிர்வாக நடுவர்கள் மேலும் கம்பம் பகுதியில் மீண்டும் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாதவண்ணம் தடுத்து கண்காணிப்பில் ஈடுபட வருவாய்த்துறை அலுவலர்கள் நிர்வாக நடுவர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.
தினதந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
மத்திய அரசு என்ன செய்துக்கொண்டிருக்கிறது. மன்மோகன் சிங் என்ன மண் மோக சிங் ஆகிவிட்டாரா?
கூடங்குளம் அணு உலையைத் திறக்கவிடாததால் பிரச்சனையை இப்படித் திசை திருப்பி விட்டுள்ளார்கள் என நினைக்கிறேன்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உண்மை தல , மத்தியில் ஆளும் மலையாளிகள் நடத்தும் சதிவேலை தான் இது . அனைத்து அரசியல் வாதிகளும் இந்த விஷயத்தில் ஒன்று கூடி தமிழக மக்களை ஏமாற்றுகிறார்களோ என்று என்ன தோன்றுகிறது இப்போதுசிவா wrote:கூடங்குளம் அணு உலையைத் திறக்கவிடாததால் பிரச்சனையை இப்படித் திசை திருப்பி விட்டுள்ளார்கள் என நினைக்கிறேன்!
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
ராஜா wrote:உண்மை தல , மத்தியில் ஆளும் மலையாளிகள் நடத்தும் சதிவேலை தான் இது . அனைத்து அரசியல் வாதிகளும் இந்த விஷயத்தில் ஒன்று கூடி தமிழக மக்களை ஏமாற்றுகிறார்களோ என்று என்ன தோன்றுகிறது இப்போதுசிவா wrote:கூடங்குளம் அணு உலையைத் திறக்கவிடாததால் பிரச்சனையை இப்படித் திசை திருப்பி விட்டுள்ளார்கள் என நினைக்கிறேன்!
நூற்றுக்கு நூறு உண்மை தல.....
Similar topics
» சாதி மோதலை உருவாக்கிய பிள்ளையார்! 3 பேர் கவலைக்கிடம்! போலீசார் குவிப்பு!
» அடிக்கடி ஊடுருவ முயற்சி: 1 லட்சம் இந்திய வீரர்கள் சீனா எல்லையில் குவிப்பு
» வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரி விவசாயிகள் இன்று உண்ணாவிரதம் டெல்லி எல்லையில் போலீசார் குவிப்பு
» யாழ் கடல் எல்லையில் மேலும் 24 இந்திய மீனவர்கள் கைது
» எல்லையில் வீரர்கள் பலியாவதை தடுக்க "ரோபோ'க்களை பயன்படுத்த திட்டம்
» அடிக்கடி ஊடுருவ முயற்சி: 1 லட்சம் இந்திய வீரர்கள் சீனா எல்லையில் குவிப்பு
» வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரி விவசாயிகள் இன்று உண்ணாவிரதம் டெல்லி எல்லையில் போலீசார் குவிப்பு
» யாழ் கடல் எல்லையில் மேலும் 24 இந்திய மீனவர்கள் கைது
» எல்லையில் வீரர்கள் பலியாவதை தடுக்க "ரோபோ'க்களை பயன்படுத்த திட்டம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|