Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
முல்லை பெரியாறு அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை
+15
kitcha
aswin2304
jesudoss
இளமாறன்
உதயசுதா
மகா பிரபு
பிஜிராமன்
ரேவதி
siddiqbasha
நேரு
ayyamperumal
மாணிக்கம் நடேசன்
சிவா
ராஜா
Dr.சுந்தரராஜ் தயாளன்
19 posters
Page 17 of 17
Page 17 of 17 • 1 ... 10 ... 15, 16, 17
முல்லை பெரியாறு அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை
First topic message reminder :
தாக்குதல் தொடர்ந்தால் ஒரு லாரியும் கேரளாவுக்குப் போகாது- தமிழக லாரி உரிமையாளர்கள் எச்சரிக்கை
நாமக்கல்: தமிழகத்திலிருந்து கேரளாவுக்குச் செல்லும் லாரிகளை தொடர்ந்து தாக்கினால் ஒரு லாரி கூட கேரளாவுக்கு போகாது. அதேபோல அங்கிருந்து ஒரு லாரியையும் இங்கேவர விட மாட்டோம் என்று தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து சம்மேளனத்தின் தலைவர் நல்லதம்பி நாமக்கல்லில் கூறுகையில், தமிழகத்திலிருந்துதான் கேரளாவுக்கு அரிசி, பருப்பு என அனைத்துப் பொருட்களும் போகின்றன. தினசரி தமிழகத்திலிருந்து 1000 லாரிகள் வரை கேரளாவுக்குப் போய் வருகின்றன.
ஆனால் தற்போது முல்லைப் பெரியாறு பிரச்சினை என்ற பெயரில் தமிழக லாரிகளைத் தாக்கத் தொடங்கியுள்ளனர். குமுளியில் தமிழக லாரிகளைத் தாக்கியதோடு,அதன் டிரைவர்களையும் ஓட ஓட விரட்டி தாக்கியுள்ளனர். இது கடும் கண்டனத்துக்குரியது.
இந்த சம்பவத்தால் தமிழக லாரிகளுக்கும், எங்களின் டிரைவர்களுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை கேரளாவில் நிலவுகிறது. எனவே எங்களது லாரிகளை இயக்க முடியாத நிலையில் இருக்கிறோம்.
இந்தநிலை தொடர்ந்தால் தமிழகத்திலிருந்து ஒரு லாரி கூட கேரளாவுக்குப் போகாது. எந்தப் பொருளையும் கேரளாவுக்கு எடுத்துச் செல்ல மாட்டோம். அதேபோல கேரளாவிலிருந்து ஒரு லாரியையும் இங்கே நுழைய அனுமதிக்க மாட்டோம்.
தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு வரும் லாரிகளுக்கும், அதன் டிரைவர்களுக்கும், கிளீனர்களுக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டியது கேரள அரசு மற்றும் காவல்துறையின் பொறுப்பாகும் என்றார் நல்லதம்பி.
தாக்குதல் தொடர்ந்தால் ஒரு லாரியும் கேரளாவுக்குப் போகாது- தமிழக லாரி உரிமையாளர்கள் எச்சரிக்கை
நாமக்கல்: தமிழகத்திலிருந்து கேரளாவுக்குச் செல்லும் லாரிகளை தொடர்ந்து தாக்கினால் ஒரு லாரி கூட கேரளாவுக்கு போகாது. அதேபோல அங்கிருந்து ஒரு லாரியையும் இங்கேவர விட மாட்டோம் என்று தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து சம்மேளனத்தின் தலைவர் நல்லதம்பி நாமக்கல்லில் கூறுகையில், தமிழகத்திலிருந்துதான் கேரளாவுக்கு அரிசி, பருப்பு என அனைத்துப் பொருட்களும் போகின்றன. தினசரி தமிழகத்திலிருந்து 1000 லாரிகள் வரை கேரளாவுக்குப் போய் வருகின்றன.
ஆனால் தற்போது முல்லைப் பெரியாறு பிரச்சினை என்ற பெயரில் தமிழக லாரிகளைத் தாக்கத் தொடங்கியுள்ளனர். குமுளியில் தமிழக லாரிகளைத் தாக்கியதோடு,அதன் டிரைவர்களையும் ஓட ஓட விரட்டி தாக்கியுள்ளனர். இது கடும் கண்டனத்துக்குரியது.
இந்த சம்பவத்தால் தமிழக லாரிகளுக்கும், எங்களின் டிரைவர்களுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை கேரளாவில் நிலவுகிறது. எனவே எங்களது லாரிகளை இயக்க முடியாத நிலையில் இருக்கிறோம்.
இந்தநிலை தொடர்ந்தால் தமிழகத்திலிருந்து ஒரு லாரி கூட கேரளாவுக்குப் போகாது. எந்தப் பொருளையும் கேரளாவுக்கு எடுத்துச் செல்ல மாட்டோம். அதேபோல கேரளாவிலிருந்து ஒரு லாரியையும் இங்கே நுழைய அனுமதிக்க மாட்டோம்.
தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு வரும் லாரிகளுக்கும், அதன் டிரைவர்களுக்கும், கிளீனர்களுக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டியது கேரள அரசு மற்றும் காவல்துறையின் பொறுப்பாகும் என்றார் நல்லதம்பி.
Last edited by புரட்சி on Thu Dec 22, 2011 3:00 pm; edited 31 times in total
Guest- Guest
Re: முல்லை பெரியாறு அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை
தமிழகம் பொங்கி எழுந்து விட்டது, இனி யாராலும் கட்டுப்படுத்த முடியாது-வைகோ
தேனி: கேரள முதல்வருக்கும், கேரள அச்சுதானந்தன் கூட்டத்தினருக்கும் சொல்லுகிறோம். எங்கள் வாழ்வை அழிக்க நினைக்காதீர்கள். தமிழகம் பொங்கி எழுந்துவிட்டது. யாரும் கட்டுப்படுத்த முடியாது. அணையை நீ நெருங்கினால் லட்சக்கணக்கானவர்கள் அணிவகுத்து வருவார்கள். எந்த மிலிட்டரியும் தடுக்க முடியாது என்று ஆவேசமாக கூறியுள்ளார் மதிமுக பொதுச் செயலாளர்கள்.
தேனி மாவட்டத்தில் இன்று கேரள சாலையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தி கைதானார் வைகோ. போராட்டத்தினபோது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
இந்த போராட்டத்திற்கு விவசாயிகள், வியாபாரிகள் என எல்லா தரப்பு மக்களுக்கும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இவர்களுக்கு தமிழகம் நன்றிக் கடன் பட்டிருக்கிறது. எனவே நம் எதிர்காலத்தை காக்கின்ற இந்த கிளர்ச்சி தானாகவே எழுந்துவிட்டது.
தமிழக பத்திரிகைகள், ஊடகங்கள் பொறுப்புணர்ச்சியோடு செயல்படுகின்றன. இவ்வளவுக்கும் காரணம் கேரளாவில் உள்ள பத்திரிக்கைகள், கேரள ஊடகங்கள். அவர்களுக்கு சொல்லுகிறோம். புத்தி வரட்டும் உங்களுக்கு. எங்களை அழிக்க வேண்டும் என்று நினைத்தால் பிறகு நீங்க பட்டிணி கிடைக்க வேண்டியதாகயிருக்கும்
13 சாலைகளிலும் நாங்கள் ஏற்கனவே அறிவித்திருக்கின்ற முற்றுகை போராட்டத்தை நடத்துவதற்காக நாங்கள் கம்பம் குமுளிக்கு செல்லுகின்ற வழியில் காவல்துறையினர் எங்களை உத்தமபாளையம் தாலுகா எல்லையில் 144 தடை உத்தரவு இருப்பதை கூறி எங்களை தடுத்து நிறுத்தியிருக்கிறார்கள்.
இந்த போராட்டம் மக்கள் போராட்டமாக வெடித்து விட்டது. கேரள அரசுக்கு சொல்லுகிறோம். தமிழக ஐயப்ப பக்தர்களையோ, அங்குள்ள எங்கள் மக்களையோ, தொழிலாளர்களையோ தொல்லைப்படுத்தாதீர்கள். இங்கு தமிழகம் பொறுமையை கையாண்டு வருகிறது.
முல்லைப் பெரியாறு அணையை காப்பாற்ற வேண்டும் என்றும், நம் மக்களை காப்பாற்ற வேண்டும் என்றும் ஒரு உயிர் ஊசலாடிக்கொண்டிருக்கிறது மதுரை அப்பல்லோ மருத்துவமனையிலே. ஜெயபிரகாஷ் நாராயணன் என்கிற அந்த இளைஞனின் உயிர் ஊசலாடிக்கொண்டிருக்கிறது.
மரணத்தின் நெருக்கத்திலே அவன் இருக்கிறான். அவன் பிழைக்க வேண்டும் என்று நாங்கள் பிராத்தனை செய்கிறோம். அந்த இளைஞன் முல்லைப் பெரியாறு அணையை காப்பாற்ற தன்னையே அழிக்க முடிவு செய்து, அவன் ஏன் தீக்குளித்தான் என்பதை மருத்துவமனையில் நான் பார்த்தபோது சொன்னான், மத்திய காங்கிரஸ் அரசின் துரோகத்தையும், கேரள காங்கிரஸ் அரசின் துரோகத்தையும் கண்டித்து நேரு சிலையிலே நான் தீக்குளித்தேன் என்று ஜெயபிரகாஷ் நாராயணன் சொன்னார்.
எனவே இந்த கொந்தளிப்பு, போராட்டம், மக்கள் கிளர்ச்சி பிரளயம்போல் எழுந்துவிட்டது. கேரள அரசும், அரசியல் கட்சிகளும் எங்கள் எதிர்காலத்தை அழிக்க நீங்கள் திட்டமிடுவதால் நாங்கள் இந்த பொருளாதார முற்றுகை போட வேண்டியது தவிர்க்க இயலாதது. இதுதொடர்ந்து நிரந்தர பொருளாதார முற்றுகையாக மாறுவதும் அல்லது நீங்கள் புத்தி வந்து, இந்த தப்பை செய்யமாட்டோம் எனறு பின்வாங்குவதும் உங்கள் கையில் இருக்கிறது.
இந்த போராட்டத்தில் ஈடுபட்டிருக்கக் கூடிய மக்களின் உணர்வு, நம்மை பாதுகாத்துக்கொள்ள, நம் எதிர்காலத்தை பாதுகாத்துக்கொள்ள என்ற முறையில் இந்த போராட்டம் நடக்கிறது. இந்த போராட்டத்தை நாங்கள் அறவழியில் நடத்துகிறோம் என்றார் வைகோ.
தட்ஸ் தமிழ்
தேனி: கேரள முதல்வருக்கும், கேரள அச்சுதானந்தன் கூட்டத்தினருக்கும் சொல்லுகிறோம். எங்கள் வாழ்வை அழிக்க நினைக்காதீர்கள். தமிழகம் பொங்கி எழுந்துவிட்டது. யாரும் கட்டுப்படுத்த முடியாது. அணையை நீ நெருங்கினால் லட்சக்கணக்கானவர்கள் அணிவகுத்து வருவார்கள். எந்த மிலிட்டரியும் தடுக்க முடியாது என்று ஆவேசமாக கூறியுள்ளார் மதிமுக பொதுச் செயலாளர்கள்.
தேனி மாவட்டத்தில் இன்று கேரள சாலையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தி கைதானார் வைகோ. போராட்டத்தினபோது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
இந்த போராட்டத்திற்கு விவசாயிகள், வியாபாரிகள் என எல்லா தரப்பு மக்களுக்கும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இவர்களுக்கு தமிழகம் நன்றிக் கடன் பட்டிருக்கிறது. எனவே நம் எதிர்காலத்தை காக்கின்ற இந்த கிளர்ச்சி தானாகவே எழுந்துவிட்டது.
தமிழக பத்திரிகைகள், ஊடகங்கள் பொறுப்புணர்ச்சியோடு செயல்படுகின்றன. இவ்வளவுக்கும் காரணம் கேரளாவில் உள்ள பத்திரிக்கைகள், கேரள ஊடகங்கள். அவர்களுக்கு சொல்லுகிறோம். புத்தி வரட்டும் உங்களுக்கு. எங்களை அழிக்க வேண்டும் என்று நினைத்தால் பிறகு நீங்க பட்டிணி கிடைக்க வேண்டியதாகயிருக்கும்
13 சாலைகளிலும் நாங்கள் ஏற்கனவே அறிவித்திருக்கின்ற முற்றுகை போராட்டத்தை நடத்துவதற்காக நாங்கள் கம்பம் குமுளிக்கு செல்லுகின்ற வழியில் காவல்துறையினர் எங்களை உத்தமபாளையம் தாலுகா எல்லையில் 144 தடை உத்தரவு இருப்பதை கூறி எங்களை தடுத்து நிறுத்தியிருக்கிறார்கள்.
இந்த போராட்டம் மக்கள் போராட்டமாக வெடித்து விட்டது. கேரள அரசுக்கு சொல்லுகிறோம். தமிழக ஐயப்ப பக்தர்களையோ, அங்குள்ள எங்கள் மக்களையோ, தொழிலாளர்களையோ தொல்லைப்படுத்தாதீர்கள். இங்கு தமிழகம் பொறுமையை கையாண்டு வருகிறது.
முல்லைப் பெரியாறு அணையை காப்பாற்ற வேண்டும் என்றும், நம் மக்களை காப்பாற்ற வேண்டும் என்றும் ஒரு உயிர் ஊசலாடிக்கொண்டிருக்கிறது மதுரை அப்பல்லோ மருத்துவமனையிலே. ஜெயபிரகாஷ் நாராயணன் என்கிற அந்த இளைஞனின் உயிர் ஊசலாடிக்கொண்டிருக்கிறது.
மரணத்தின் நெருக்கத்திலே அவன் இருக்கிறான். அவன் பிழைக்க வேண்டும் என்று நாங்கள் பிராத்தனை செய்கிறோம். அந்த இளைஞன் முல்லைப் பெரியாறு அணையை காப்பாற்ற தன்னையே அழிக்க முடிவு செய்து, அவன் ஏன் தீக்குளித்தான் என்பதை மருத்துவமனையில் நான் பார்த்தபோது சொன்னான், மத்திய காங்கிரஸ் அரசின் துரோகத்தையும், கேரள காங்கிரஸ் அரசின் துரோகத்தையும் கண்டித்து நேரு சிலையிலே நான் தீக்குளித்தேன் என்று ஜெயபிரகாஷ் நாராயணன் சொன்னார்.
எனவே இந்த கொந்தளிப்பு, போராட்டம், மக்கள் கிளர்ச்சி பிரளயம்போல் எழுந்துவிட்டது. கேரள அரசும், அரசியல் கட்சிகளும் எங்கள் எதிர்காலத்தை அழிக்க நீங்கள் திட்டமிடுவதால் நாங்கள் இந்த பொருளாதார முற்றுகை போட வேண்டியது தவிர்க்க இயலாதது. இதுதொடர்ந்து நிரந்தர பொருளாதார முற்றுகையாக மாறுவதும் அல்லது நீங்கள் புத்தி வந்து, இந்த தப்பை செய்யமாட்டோம் எனறு பின்வாங்குவதும் உங்கள் கையில் இருக்கிறது.
இந்த போராட்டத்தில் ஈடுபட்டிருக்கக் கூடிய மக்களின் உணர்வு, நம்மை பாதுகாத்துக்கொள்ள, நம் எதிர்காலத்தை பாதுகாத்துக்கொள்ள என்ற முறையில் இந்த போராட்டம் நடக்கிறது. இந்த போராட்டத்தை நாங்கள் அறவழியில் நடத்துகிறோம் என்றார் வைகோ.
தட்ஸ் தமிழ்
Guest- Guest
Re: முல்லை பெரியாறு அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை
30,000 லாரிகள் நிறுத்தம்-கேரளாவுக்கு பால், காய்கறி, முட்டை எதுவும் போகவில்லை!
சென்னை: தமிழக லாரிகள் மீது கேரளாவில் தாக்குதல் நடத்தப்படுவதை கண்டித்து கேரளாவிற்கு பொருட்களை கொண்டுசெல்லும் லாரிகள் அனைத்தும் இன்று கேரளாவுக்குப் போகவில்லை. இதனால் கேரளாவுக்கு இன்று தமிழகத்திலிருந்து பால், முட்டை, அரிசி, காய்கறி என எந்த அத்தியாவசியப் பொருட்களும் போகவில்லை.
முல்லைப்பெரியாறு அணைப்பிரச்சினையால் தமிழக லாரிகள் மீது கேரளாவில் தாக்குதல் நடத்தப்படுவதை கண்டித்து, கேரளாவுக்கு பொருட்களை கொண்டு செல்லும் 30000 லாரிகள் இன்று ஒரு நாள் நிறுத்தப்பட்டுள்ளன. இதுகுறித்து தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் சம்மேளனத்தின் இணைச்செயலாளர் சி.துரைசாமி ஈரோட்டில் செவ்வாய்கிழமையன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது
லாரிகள் மீது தாக்குதல்
முல்லைப்பெரியாறு அணை தொடர்பான பிரச்சினை நடந்து கொண்டு இருக்கும்போது கேரளாவுக்கு சென்ற தமிழகத்தை சேர்ந்த 50 லாரிகள் தாக்கப்பட்டுள்ளன. இதை கண்டித்தும், கேரள அரசின் நடவடிக்கைகளை கண்டித்தும் தமிழ்நாட்டில் இருந்து கேரளாவுக்கு பொருட்களை ஏற்றிச்செல்லும் லாரிகள் புதன்கிழமையன்று ஒரு நாள் வேலைநிறுத்த போராட்டத்தில் கலந்துகொள்கின்றன.
தமிழ்நாட்டில் மொத்தம் 25 லட்சம் லாரிகள் இயங்குகின்றன. இதில் கேரளாவுக்கு 30 ஆயிரம் லாரிகளில் பொருட்கள் தினமும் ஏற்றி செல்லப்படுகிறது. இந்த லாரிகள் அனைத்தும் புதன்கிழமையன்று போராட்டத்தில் கலந்து கொள்கின்றன.
வேலைநிறுத்தம்
ஈரோடு மாவட்டத்தில் சுமார் 5 ஆயிரம் லாரிகள் இயங்குகின்றன. இதில் 1,000 லாரிகள் மூலம் கேரளாவிற்கு காய்கறிகள், முட்டை, மஞ்சள், எண்ணெய் போன்ற பொருட்கள் ஏற்றி செல்லப்படுகின்றன. இந்த 1,000 லாரிகளும் இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்கின்றன என்றார் அவர்.
எங்கிருந்தும் லாரிகள் போகவில்லை
சேலம், நாமக்கல், ஈரோடு, கோவை, திருப்பூர், மதுரை, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய ஊர்களில் இருந்து கேரளாவுக்கு லாரிகள் செல்லவில்லை.
முன்னதாக தமிழக லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் நல்லதம்பி கூறுகையில்,
முல்லைப்பெரியாறு பிரச்சினை காரணமாக இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கேரளாவுக்கு அனைத்து வழித்தடங்களிலும் செல்லும் லாரிகள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் காய்கறி, பால், முட்டை, பருப்புவகைகள், கறிகோழி, உள்ளிட்டவை அங்கு கொண்டு செல்லப்படவில்லை.
மேலும் கேரளா அரசு உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி லாரிகளுக்கும், லாரி டிரைவர்களுக்கும், பாதுகாப்பு வழங்கி, லாரிகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
40 லட்சம் முட்டைகள் நிறுத்தம்
நாமக்கல்லில் இருந்து லாரிகள் மூலம் தினமும் 40 லட்சம் முட்டைகள் கேரளாவுக்கு அனுப்பப்பட்டு வந்தது. அவை நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. பல லாரிகள் இன்று காலை 5 மணிக்கு முன்னதாக கேரள எல்லைக்குள் சென்று விட்டன. பல்லடம் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து கறிக்கோழிகளும் இதேபோல லாரிகளில் நேற்று பகலிலேயே கேரளாவுக்கு அனுப்பப்பட்டன.
தர்மபுரி, கிருஷ்ணகிரி பகுதிகளில் இருந்து மாடுகள் இறைச்சிக்காக கேரளாவுக்கு லாரிகளில் கொண்டு செல்வது நிறுத்தப்பட்டு உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் இருந்து தினமும் 1000 லாரிகள் கேரளாவுக்கு சென்று வந்தன. இதன்மூலம் காய்கறிகள், முட்டை, மஞ்சள், எண்ணெய், ஜவுளி, மாட்டு தீவனம் போன்ற பல்வேறு பொருட்கள் அனுப்பப்பட்டு வந்தன.
லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக பல லட்சம் மதிப்பிலான முட்டை, மஞ்சள், எண்ணெய், ஜவுளி போன்ற பொருட்கள் தேக்கம் அடைந்துள்ளது. இவை குடோன்களில் தேக்கி வைக்கப்பட்டுள்ளது.
ரூ. 500 கோடி காய்கறி, மளிகைப் பொருட்கள் நிறுத்தம்
கோவையில் இருந்து தினமும் ரூ.500 கோடி மதிப்புள்ள மளிகை, காய்கறி மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் லாரிகளில் அனுப்பப்பட்டு வந்தன. கோவை மாவட்டத்தில் இருந்து நேற்று முதலே லாரிகள் கேரளாவுக்கு இயக்கப்படவில்லை. இன்று 2-வது நாளாக லாரிகள் ஓடவில்லை.
அத்தியாவசிய பொருட்கள் செல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இதனால் கேரளாவில் அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.
குமரியிலும் லாரிகள் ஓடவில்லை
இதுபோல குமரி மாவட்டத்தில் இருந்து காய்கறிகளை கேரளாவுக்கு கொண்டுச் செல்லும் லாரிகளும் இன்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் குதித்தன.
இதுபற்றி குமரி மாவட்ட லாரிகள் உரிமையாளர்கள் சங்க செயலாளர் கணேசன் கூறியதாவது,
முல்லை பெரியாறு பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும் வரை குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு எந்த சரக்குகளையும் கொண்டுச் செல்வதில்லை என்று முடிவு செய்து உள்ளோம். மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளதை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
குமரி மாவட்டத்தில் இருந்து தினமும் கேரளாவுக்கு 500 லாரிகள் இயக்கப்பட்டு வந்தது. இன்று முதல் இந்த லாரிகள் கேரளாவுக்கு செல்லாது என்றார்.
உப்பு கூட போகவில்லை
இதேபோல தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து உப்பு, நெல்லை மாவட்டத்திலிருந்து கட்டுமானத்திற்கு தேவையான மணல், குமரி மாவட்டத்தில் இருந்து காய்கறிகள், தோவாளை மார்க்கெட்டில் இருந்து பூக்கள் போன்றவை கேரளாவுக்கு கொண்டுச் செல்லப்பட்டு வந்தன.
இன்று முதல் இவை கேரளாவுக்கு போகவில்லை. ஏற்கனவே அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் திண்டாடி வரும் கேரளாவுக்கு குமரி மாவட்ட வழிப்பாதையும் மூடப்பட்டதால் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இதனால்தான் தெற்கு ரயில்வேயி்ல் மலையாள அதிகாரிகளின் உதவியோடு, ரயில்கள் மூலம் பொருட்களை அனுப்பி வைத்து வருகிறார்கள்.
தட்ஸ் தமிழ்
சென்னை: தமிழக லாரிகள் மீது கேரளாவில் தாக்குதல் நடத்தப்படுவதை கண்டித்து கேரளாவிற்கு பொருட்களை கொண்டுசெல்லும் லாரிகள் அனைத்தும் இன்று கேரளாவுக்குப் போகவில்லை. இதனால் கேரளாவுக்கு இன்று தமிழகத்திலிருந்து பால், முட்டை, அரிசி, காய்கறி என எந்த அத்தியாவசியப் பொருட்களும் போகவில்லை.
முல்லைப்பெரியாறு அணைப்பிரச்சினையால் தமிழக லாரிகள் மீது கேரளாவில் தாக்குதல் நடத்தப்படுவதை கண்டித்து, கேரளாவுக்கு பொருட்களை கொண்டு செல்லும் 30000 லாரிகள் இன்று ஒரு நாள் நிறுத்தப்பட்டுள்ளன. இதுகுறித்து தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் சம்மேளனத்தின் இணைச்செயலாளர் சி.துரைசாமி ஈரோட்டில் செவ்வாய்கிழமையன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது
லாரிகள் மீது தாக்குதல்
முல்லைப்பெரியாறு அணை தொடர்பான பிரச்சினை நடந்து கொண்டு இருக்கும்போது கேரளாவுக்கு சென்ற தமிழகத்தை சேர்ந்த 50 லாரிகள் தாக்கப்பட்டுள்ளன. இதை கண்டித்தும், கேரள அரசின் நடவடிக்கைகளை கண்டித்தும் தமிழ்நாட்டில் இருந்து கேரளாவுக்கு பொருட்களை ஏற்றிச்செல்லும் லாரிகள் புதன்கிழமையன்று ஒரு நாள் வேலைநிறுத்த போராட்டத்தில் கலந்துகொள்கின்றன.
தமிழ்நாட்டில் மொத்தம் 25 லட்சம் லாரிகள் இயங்குகின்றன. இதில் கேரளாவுக்கு 30 ஆயிரம் லாரிகளில் பொருட்கள் தினமும் ஏற்றி செல்லப்படுகிறது. இந்த லாரிகள் அனைத்தும் புதன்கிழமையன்று போராட்டத்தில் கலந்து கொள்கின்றன.
வேலைநிறுத்தம்
ஈரோடு மாவட்டத்தில் சுமார் 5 ஆயிரம் லாரிகள் இயங்குகின்றன. இதில் 1,000 லாரிகள் மூலம் கேரளாவிற்கு காய்கறிகள், முட்டை, மஞ்சள், எண்ணெய் போன்ற பொருட்கள் ஏற்றி செல்லப்படுகின்றன. இந்த 1,000 லாரிகளும் இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்கின்றன என்றார் அவர்.
எங்கிருந்தும் லாரிகள் போகவில்லை
சேலம், நாமக்கல், ஈரோடு, கோவை, திருப்பூர், மதுரை, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய ஊர்களில் இருந்து கேரளாவுக்கு லாரிகள் செல்லவில்லை.
முன்னதாக தமிழக லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் நல்லதம்பி கூறுகையில்,
முல்லைப்பெரியாறு பிரச்சினை காரணமாக இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கேரளாவுக்கு அனைத்து வழித்தடங்களிலும் செல்லும் லாரிகள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் காய்கறி, பால், முட்டை, பருப்புவகைகள், கறிகோழி, உள்ளிட்டவை அங்கு கொண்டு செல்லப்படவில்லை.
மேலும் கேரளா அரசு உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி லாரிகளுக்கும், லாரி டிரைவர்களுக்கும், பாதுகாப்பு வழங்கி, லாரிகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
40 லட்சம் முட்டைகள் நிறுத்தம்
நாமக்கல்லில் இருந்து லாரிகள் மூலம் தினமும் 40 லட்சம் முட்டைகள் கேரளாவுக்கு அனுப்பப்பட்டு வந்தது. அவை நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. பல லாரிகள் இன்று காலை 5 மணிக்கு முன்னதாக கேரள எல்லைக்குள் சென்று விட்டன. பல்லடம் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து கறிக்கோழிகளும் இதேபோல லாரிகளில் நேற்று பகலிலேயே கேரளாவுக்கு அனுப்பப்பட்டன.
தர்மபுரி, கிருஷ்ணகிரி பகுதிகளில் இருந்து மாடுகள் இறைச்சிக்காக கேரளாவுக்கு லாரிகளில் கொண்டு செல்வது நிறுத்தப்பட்டு உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் இருந்து தினமும் 1000 லாரிகள் கேரளாவுக்கு சென்று வந்தன. இதன்மூலம் காய்கறிகள், முட்டை, மஞ்சள், எண்ணெய், ஜவுளி, மாட்டு தீவனம் போன்ற பல்வேறு பொருட்கள் அனுப்பப்பட்டு வந்தன.
லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக பல லட்சம் மதிப்பிலான முட்டை, மஞ்சள், எண்ணெய், ஜவுளி போன்ற பொருட்கள் தேக்கம் அடைந்துள்ளது. இவை குடோன்களில் தேக்கி வைக்கப்பட்டுள்ளது.
ரூ. 500 கோடி காய்கறி, மளிகைப் பொருட்கள் நிறுத்தம்
கோவையில் இருந்து தினமும் ரூ.500 கோடி மதிப்புள்ள மளிகை, காய்கறி மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் லாரிகளில் அனுப்பப்பட்டு வந்தன. கோவை மாவட்டத்தில் இருந்து நேற்று முதலே லாரிகள் கேரளாவுக்கு இயக்கப்படவில்லை. இன்று 2-வது நாளாக லாரிகள் ஓடவில்லை.
அத்தியாவசிய பொருட்கள் செல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இதனால் கேரளாவில் அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.
குமரியிலும் லாரிகள் ஓடவில்லை
இதுபோல குமரி மாவட்டத்தில் இருந்து காய்கறிகளை கேரளாவுக்கு கொண்டுச் செல்லும் லாரிகளும் இன்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் குதித்தன.
இதுபற்றி குமரி மாவட்ட லாரிகள் உரிமையாளர்கள் சங்க செயலாளர் கணேசன் கூறியதாவது,
முல்லை பெரியாறு பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும் வரை குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு எந்த சரக்குகளையும் கொண்டுச் செல்வதில்லை என்று முடிவு செய்து உள்ளோம். மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளதை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
குமரி மாவட்டத்தில் இருந்து தினமும் கேரளாவுக்கு 500 லாரிகள் இயக்கப்பட்டு வந்தது. இன்று முதல் இந்த லாரிகள் கேரளாவுக்கு செல்லாது என்றார்.
உப்பு கூட போகவில்லை
இதேபோல தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து உப்பு, நெல்லை மாவட்டத்திலிருந்து கட்டுமானத்திற்கு தேவையான மணல், குமரி மாவட்டத்தில் இருந்து காய்கறிகள், தோவாளை மார்க்கெட்டில் இருந்து பூக்கள் போன்றவை கேரளாவுக்கு கொண்டுச் செல்லப்பட்டு வந்தன.
இன்று முதல் இவை கேரளாவுக்கு போகவில்லை. ஏற்கனவே அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் திண்டாடி வரும் கேரளாவுக்கு குமரி மாவட்ட வழிப்பாதையும் மூடப்பட்டதால் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இதனால்தான் தெற்கு ரயில்வேயி்ல் மலையாள அதிகாரிகளின் உதவியோடு, ரயில்கள் மூலம் பொருட்களை அனுப்பி வைத்து வருகிறார்கள்.
தட்ஸ் தமிழ்
Guest- Guest
Re: முல்லை பெரியாறு அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை
///காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை ///
கலைஞரின் உண்ணாவிரதம் போல் உள்ளது!
கலைஞரின் உண்ணாவிரதம் போல் உள்ளது!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: முல்லை பெரியாறு அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை
சிவா wrote:///காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை ///
கலைஞரின் உண்ணாவிரதம் போல் உள்ளது!
இரவுகளில் திருட்டுதனமாக செல்லும் வாகனங்களின் மூலம்தான் கேரளாவில் அடுப்பு எரிந்து கொண்டு இருக்கிறது அய்யா ...
Guest- Guest
Re: முல்லை பெரியாறு அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை
மதுரை , தேனி , சிவகங்கை , திண்டுக்கல் ஆகிய நான்கு மாவட்டங்களில் முழு கடை அடைப்பு ...
மேலும் திருச்சி , கூடலூர் , ஈரோடு உள்ளிட ஊர்களிலும் முழு கடை அடைப்பு ....
கேரளா அரசை கண்டிது தேனியை சேர்ந்த சேகர் என்பவர் விஷம் அருந்தி தற்கொலை ...
மேலும் திருச்சி , கூடலூர் , ஈரோடு உள்ளிட ஊர்களிலும் முழு கடை அடைப்பு ....
கேரளா அரசை கண்டிது தேனியை சேர்ந்த சேகர் என்பவர் விஷம் அருந்தி தற்கொலை ...
Guest- Guest
Page 17 of 17 • 1 ... 10 ... 15, 16, 17
Similar topics
» முல்லை பெரியாறு!
» முல்லை பெரியாறு யாருக்கு சொந்தம்?
» புதிய முல்லை பெரியாறு அணை: ரூ.50 கோடி ஒதுக்கீடு
» முல்லை பெரியாறு அணையின் உண்மை நிலை
» முல்லை பெரியாறு -142 அடி உயர்த்த தடை இல்லை -உச்ச நீதிமன்றம்
» முல்லை பெரியாறு யாருக்கு சொந்தம்?
» புதிய முல்லை பெரியாறு அணை: ரூ.50 கோடி ஒதுக்கீடு
» முல்லை பெரியாறு அணையின் உண்மை நிலை
» முல்லை பெரியாறு -142 அடி உயர்த்த தடை இல்லை -உச்ச நீதிமன்றம்
Page 17 of 17
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|