Latest topics
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்by ayyasamy ram Today at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
முல்லை பெரியாறு அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை
+15
kitcha
aswin2304
jesudoss
இளமாறன்
உதயசுதா
மகா பிரபு
பிஜிராமன்
ரேவதி
siddiqbasha
நேரு
ayyamperumal
மாணிக்கம் நடேசன்
சிவா
ராஜா
Dr.சுந்தரராஜ் தயாளன்
19 posters
Page 15 of 17
Page 15 of 17 • 1 ... 9 ... 14, 15, 16, 17
முல்லை பெரியாறு அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை
First topic message reminder :
தாக்குதல் தொடர்ந்தால் ஒரு லாரியும் கேரளாவுக்குப் போகாது- தமிழக லாரி உரிமையாளர்கள் எச்சரிக்கை
நாமக்கல்: தமிழகத்திலிருந்து கேரளாவுக்குச் செல்லும் லாரிகளை தொடர்ந்து தாக்கினால் ஒரு லாரி கூட கேரளாவுக்கு போகாது. அதேபோல அங்கிருந்து ஒரு லாரியையும் இங்கேவர விட மாட்டோம் என்று தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து சம்மேளனத்தின் தலைவர் நல்லதம்பி நாமக்கல்லில் கூறுகையில், தமிழகத்திலிருந்துதான் கேரளாவுக்கு அரிசி, பருப்பு என அனைத்துப் பொருட்களும் போகின்றன. தினசரி தமிழகத்திலிருந்து 1000 லாரிகள் வரை கேரளாவுக்குப் போய் வருகின்றன.
ஆனால் தற்போது முல்லைப் பெரியாறு பிரச்சினை என்ற பெயரில் தமிழக லாரிகளைத் தாக்கத் தொடங்கியுள்ளனர். குமுளியில் தமிழக லாரிகளைத் தாக்கியதோடு,அதன் டிரைவர்களையும் ஓட ஓட விரட்டி தாக்கியுள்ளனர். இது கடும் கண்டனத்துக்குரியது.
இந்த சம்பவத்தால் தமிழக லாரிகளுக்கும், எங்களின் டிரைவர்களுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை கேரளாவில் நிலவுகிறது. எனவே எங்களது லாரிகளை இயக்க முடியாத நிலையில் இருக்கிறோம்.
இந்தநிலை தொடர்ந்தால் தமிழகத்திலிருந்து ஒரு லாரி கூட கேரளாவுக்குப் போகாது. எந்தப் பொருளையும் கேரளாவுக்கு எடுத்துச் செல்ல மாட்டோம். அதேபோல கேரளாவிலிருந்து ஒரு லாரியையும் இங்கே நுழைய அனுமதிக்க மாட்டோம்.
தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு வரும் லாரிகளுக்கும், அதன் டிரைவர்களுக்கும், கிளீனர்களுக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டியது கேரள அரசு மற்றும் காவல்துறையின் பொறுப்பாகும் என்றார் நல்லதம்பி.
தாக்குதல் தொடர்ந்தால் ஒரு லாரியும் கேரளாவுக்குப் போகாது- தமிழக லாரி உரிமையாளர்கள் எச்சரிக்கை
நாமக்கல்: தமிழகத்திலிருந்து கேரளாவுக்குச் செல்லும் லாரிகளை தொடர்ந்து தாக்கினால் ஒரு லாரி கூட கேரளாவுக்கு போகாது. அதேபோல அங்கிருந்து ஒரு லாரியையும் இங்கேவர விட மாட்டோம் என்று தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து சம்மேளனத்தின் தலைவர் நல்லதம்பி நாமக்கல்லில் கூறுகையில், தமிழகத்திலிருந்துதான் கேரளாவுக்கு அரிசி, பருப்பு என அனைத்துப் பொருட்களும் போகின்றன. தினசரி தமிழகத்திலிருந்து 1000 லாரிகள் வரை கேரளாவுக்குப் போய் வருகின்றன.
ஆனால் தற்போது முல்லைப் பெரியாறு பிரச்சினை என்ற பெயரில் தமிழக லாரிகளைத் தாக்கத் தொடங்கியுள்ளனர். குமுளியில் தமிழக லாரிகளைத் தாக்கியதோடு,அதன் டிரைவர்களையும் ஓட ஓட விரட்டி தாக்கியுள்ளனர். இது கடும் கண்டனத்துக்குரியது.
இந்த சம்பவத்தால் தமிழக லாரிகளுக்கும், எங்களின் டிரைவர்களுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை கேரளாவில் நிலவுகிறது. எனவே எங்களது லாரிகளை இயக்க முடியாத நிலையில் இருக்கிறோம்.
இந்தநிலை தொடர்ந்தால் தமிழகத்திலிருந்து ஒரு லாரி கூட கேரளாவுக்குப் போகாது. எந்தப் பொருளையும் கேரளாவுக்கு எடுத்துச் செல்ல மாட்டோம். அதேபோல கேரளாவிலிருந்து ஒரு லாரியையும் இங்கே நுழைய அனுமதிக்க மாட்டோம்.
தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு வரும் லாரிகளுக்கும், அதன் டிரைவர்களுக்கும், கிளீனர்களுக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டியது கேரள அரசு மற்றும் காவல்துறையின் பொறுப்பாகும் என்றார் நல்லதம்பி.
Last edited by புரட்சி on Thu Dec 22, 2011 3:00 pm; edited 31 times in total
Guest- Guest
Re: முல்லை பெரியாறு அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை
கேரள அரசைக் கண்டித்து போடிநாயக்கனூர் விவசாயி தீக்குளிப்பு- உயிருக்குப் போராடுகிறார்
போடி: முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரளா நடந்து வரும் விதத்தைக் கண்டித்தும், அணையின் நீர்மட்டத்தை அதன் உண்மையான அளவுக்கு உயர்த்தக் கோரியும் தமிழக விவசாயி ஒருவர் தீக்குளித்து விட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவரை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
சமீபத்தில் கம்பத்தில் நடந்த போராட்டத்தின்போது ஒருவர் தீக்குளித்தார். இருப்பினும் அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினார். இந்த நிலையில் இன்னொருவர் தீக்குளித்துள்ளார்.
போடி நாயக்கனூர், காமராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்.இவர் ஒரு விவசாயி. முல்லைப் பெரியாறு அணை தொடர்பான போராட்டங்களில் பங்கெடுத்து வந்த ராஜ், கேரள அரசைக் கண்டித்தும், அணையின் நீர் மட்டத்தை உயர்த்தக் கோரியும் தீக்குளித்து விட்டார்.
உடனடியாக அவரை அங்குள்ள அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். பின்னர் அவர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு சென்று மேல் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அவரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவத்தால் போடியிலும், தேனி மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பு நிலவுகிறது
தட்ஸ் தமிழ்
Guest- Guest
Re: முல்லை பெரியாறு அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை
தமிழர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து கம்பத்தில் ஒன்றரை லட்சம் பேர் திரண்டு மாபெரும் பேரணி!
கம்பம்: கேரளாவில் தமிழர்களைத் தாக்கி விரட்டியடிப்பதைக் கண்டித்தும், மத்திய மாநில அரசுகள் தமிழர்களைக் காப்பாற்றக் கோரியும், கம்பத்தில் இன்று பெரும் திரளான பெண்களின் தலைமையில் கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் திரண்டு மாபெரும் பேரணி நடத்தினர்.
இன்று காலையிலிருந்தே மக்கள் அணி அணியாக இதில் பங்கேற்க திரண்டு வந்தனர். பெருமளவில் பெண்கள் வந்திருந்தனர். கம்பம் மற்றும் சுற்றுப் பகுதி கிராமங்களைச் சேர்ந்தவர்கள் சாரை சாரையாக திரண்டதால் கம்பத்தில் பரபரப்பு நிலவியது.
நாலாபுறமும் இருந்து ஆயிரக்கணக்கில் ஆண்களும், பெண்களும் குவிந்து வந்ததைப் பார்க்கும்போது அரபு நாடுகளில் சமீபத்தில் நடந்த மிகப் பெரிய மக்கள் கிளர்ச்சியைப் போல இருப்பதாக அங்கிருந்து நமக்குக் கிடைத்த தகவல் தெரிவிக்கிறது.
காலை 9 மணியில் இருந்தே கம்பம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து மக்கள் அணி, அணியாக வரத்தொடங்கினார்கள். இந்தப் பேரணிக்கு யாரும் திட்டமிடவில்லை. மக்களே தாங்களாக முன்வந்து கூடி பேரணியை நடத்தினர். மேலும் கம்பம் மற்றும் சுற்றுப் பகுதிகளில் ஒரு கடையும், வர்த்தக நிறுவனமும் செயல்படவில்லை. அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
இடுக்கி மாவட்டத்தில் பெண்களையும், தமிழர்களையும் தாக்கி விரட்டியடித்த மலையாளிகளின் செயலால் கம்பம் மற்றும் சுற்றுப் பகுதிகளில் மக்கள் பெரும் கொந்தளிப்புடன் காணப்படுகின்றனர். தமிழகத்திற்கு அகதிகள் போல வந்த தமிழர்களை தேவாரம் பகுதியில் தங்க வைத்து பொதுமக்களே உணவு கொடுத்து ஆறுதல் கூறி அடைக்கலம் கொடுத்துள்ளனர்.
இந்த செயல்கள் கம்பம் பகுதியில் பெரும் கிளர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மிகப் பெரிய ஆவேசத்துடன் இன்று கம்பத்தில் திரண்ட இந்த மக்கள் கூட்டம் கேரள அரசையும், தமிழர்கள் மீதான தாக்குதலையும் கண்டித்து ஆவேச கோஷமெழுப்பினர்.
மிகப் பெரிய அளவில் மக்கள் திரண்டிரு்பபதால் கம்பத்தில் பெரும் பதட்டம் நிலவுகிறது. இந்த மக்கள் கூட்டம் அப்படியே கேரளாவை நோக்கி நகரக் கூடும் என்றும் ஒரு தகவல் கூறுகிறது. இதனால் எல்லைப் பகுதியில் மீண்டும் பதட்டம் தொற்றிக் கொண்டுள்ளது. போலீஸாரும் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.
தட்ஸ் தமிழ்
கம்பம்: கேரளாவில் தமிழர்களைத் தாக்கி விரட்டியடிப்பதைக் கண்டித்தும், மத்திய மாநில அரசுகள் தமிழர்களைக் காப்பாற்றக் கோரியும், கம்பத்தில் இன்று பெரும் திரளான பெண்களின் தலைமையில் கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் திரண்டு மாபெரும் பேரணி நடத்தினர்.
இன்று காலையிலிருந்தே மக்கள் அணி அணியாக இதில் பங்கேற்க திரண்டு வந்தனர். பெருமளவில் பெண்கள் வந்திருந்தனர். கம்பம் மற்றும் சுற்றுப் பகுதி கிராமங்களைச் சேர்ந்தவர்கள் சாரை சாரையாக திரண்டதால் கம்பத்தில் பரபரப்பு நிலவியது.
நாலாபுறமும் இருந்து ஆயிரக்கணக்கில் ஆண்களும், பெண்களும் குவிந்து வந்ததைப் பார்க்கும்போது அரபு நாடுகளில் சமீபத்தில் நடந்த மிகப் பெரிய மக்கள் கிளர்ச்சியைப் போல இருப்பதாக அங்கிருந்து நமக்குக் கிடைத்த தகவல் தெரிவிக்கிறது.
காலை 9 மணியில் இருந்தே கம்பம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து மக்கள் அணி, அணியாக வரத்தொடங்கினார்கள். இந்தப் பேரணிக்கு யாரும் திட்டமிடவில்லை. மக்களே தாங்களாக முன்வந்து கூடி பேரணியை நடத்தினர். மேலும் கம்பம் மற்றும் சுற்றுப் பகுதிகளில் ஒரு கடையும், வர்த்தக நிறுவனமும் செயல்படவில்லை. அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
இடுக்கி மாவட்டத்தில் பெண்களையும், தமிழர்களையும் தாக்கி விரட்டியடித்த மலையாளிகளின் செயலால் கம்பம் மற்றும் சுற்றுப் பகுதிகளில் மக்கள் பெரும் கொந்தளிப்புடன் காணப்படுகின்றனர். தமிழகத்திற்கு அகதிகள் போல வந்த தமிழர்களை தேவாரம் பகுதியில் தங்க வைத்து பொதுமக்களே உணவு கொடுத்து ஆறுதல் கூறி அடைக்கலம் கொடுத்துள்ளனர்.
இந்த செயல்கள் கம்பம் பகுதியில் பெரும் கிளர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மிகப் பெரிய ஆவேசத்துடன் இன்று கம்பத்தில் திரண்ட இந்த மக்கள் கூட்டம் கேரள அரசையும், தமிழர்கள் மீதான தாக்குதலையும் கண்டித்து ஆவேச கோஷமெழுப்பினர்.
மிகப் பெரிய அளவில் மக்கள் திரண்டிரு்பபதால் கம்பத்தில் பெரும் பதட்டம் நிலவுகிறது. இந்த மக்கள் கூட்டம் அப்படியே கேரளாவை நோக்கி நகரக் கூடும் என்றும் ஒரு தகவல் கூறுகிறது. இதனால் எல்லைப் பகுதியில் மீண்டும் பதட்டம் தொற்றிக் கொண்டுள்ளது. போலீஸாரும் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.
தட்ஸ் தமிழ்
Guest- Guest
Re: முல்லை பெரியாறு அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை
ஈரோட்டில் கடையடைப்பு,கேரளா கடாய் உரிமையாளர்களுக்கு 24 மணி நேரம் கேடு
ஈரோடு: முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் கேரளாவில் தமிழர்கள் தாக்கப்படுவதை கண்டித்து ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் மற்றும் சித்தோடு பகுதியில் உள்ள வணிகர்கள் கடையடைப்பு செய்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் கேரளா கடைகள் ,வணிக நிறுவனங்கள் மீது தாக்குதல் ..
கடைகளை காலி செய்ய 24 மணி நேரம் கேடு ...
ஈரோடு: முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் கேரளாவில் தமிழர்கள் தாக்கப்படுவதை கண்டித்து ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் மற்றும் சித்தோடு பகுதியில் உள்ள வணிகர்கள் கடையடைப்பு செய்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் கேரளா கடைகள் ,வணிக நிறுவனங்கள் மீது தாக்குதல் ..
கடைகளை காலி செய்ய 24 மணி நேரம் கேடு ...
Guest- Guest
Re: முல்லை பெரியாறு அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை
கேரளாவைக் கண்டித்து தேனியில் தா.பாண்டியன் உண்ணாவிரதம்
தேனி: முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் தலைமையில் அக்கட்சியினர் தேனியில் உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.
முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொர்பாக அதிமுகவைத் தவிர மற்ற அனைத்துக் கட்சிகளும் ஏதாவது ஒரு வகையான போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
திமுக சார்பில் சமீபத்தில் தமிழகம் தழுவிய உண்ணாவிரதம் மற்றும் ஐந்து முல்லைப் பெரியாறு பாசன மாவட்டங்களில் மனிதச் சங்கிலிப் போராட்டம் நடந்தது.
அதன் பின்னர் தேமுதிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகளும் போராட்டங்கள் நடத்தின. இந்த வரிசையில் சிபிஐ சார்பில் இன்று தேனியில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
தா.பாண்டியன் தலைமையில் நடந்து வரும் உண்ணாவிரதத்தில் பெரும் திரளானோர் கலந்து கொண்டுள்ளனர்.
தேனி: முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் தலைமையில் அக்கட்சியினர் தேனியில் உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.
முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொர்பாக அதிமுகவைத் தவிர மற்ற அனைத்துக் கட்சிகளும் ஏதாவது ஒரு வகையான போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
திமுக சார்பில் சமீபத்தில் தமிழகம் தழுவிய உண்ணாவிரதம் மற்றும் ஐந்து முல்லைப் பெரியாறு பாசன மாவட்டங்களில் மனிதச் சங்கிலிப் போராட்டம் நடந்தது.
அதன் பின்னர் தேமுதிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகளும் போராட்டங்கள் நடத்தின. இந்த வரிசையில் சிபிஐ சார்பில் இன்று தேனியில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
தா.பாண்டியன் தலைமையில் நடந்து வரும் உண்ணாவிரதத்தில் பெரும் திரளானோர் கலந்து கொண்டுள்ளனர்.
Guest- Guest
Re: முல்லை பெரியாறு அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை
சீமானின் நடைபயணம்
உண்ணாவிரத போராட்டமாக மற்றபட்டதன் காரணம் என்ன ? புரட்சி
உண்ணாவிரத போராட்டமாக மற்றபட்டதன் காரணம் என்ன ? புரட்சி
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![முல்லை பெரியாறு அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை - Page 15 Thank-you015](https://2img.net/h/www.sadmuffin.net/cherrybam/graphics/comments-thank-you/thank-you015.gif)
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
Re: முல்லை பெரியாறு அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை
தமிழக பள்ளி மாணவர்களை இடுக்கியிலிருந்து விரட்டும் கேரள ரவுடிகள்
இடுக்கி: முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினையால் இடுக்கி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி பயிலும் தமிழக மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து தப்பி வந்தவர்கள் கூறியுள்ளனர்.
விடுதிகளில் தங்கி படிக்கும் தமிழக மாணவர்களை பள்ளிகளில் இருந்து வெளியேற்றுமாறு அங்குள்ள மலையாளிகள் பள்ளிகளுக்கு சென்று நெருக்கடி கொடுத்து வருவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்ட கேரளா முயற்சித்து வருகிறது. இதற்கு தமிழக மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் இருமாநில எல்லைப் பகுதிகளிலும் பதற்றம் உருவாகியுள்ளது.
ஆயிரக்கணக்கானோர் தஞ்சம்
பீர்மேடு, தேவிகுளத்தை உள்ளடக்கிய இடுக்கி மாவட்டத்தை தமிழகத்துடன் மீண்டும் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் வலுத்து வருகிறது. தமிழர்களுக்கு ஆதரவாக இடுக்கி மாவட்ட தமிழர்கள் போராடி வருவதால் அவர்களை மலையாளிகள் தாக்கி அங்கிருந்து விரட்டி வருகின்றனர்.
நெடுங்குண்டம், பாரத்தோடு, காரித்தோடு, உடும்பன் சோலை உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் தமிழர்கள் கேரள ரவுடிகளின் தாக்குதலுக்கு குடும்பம் குடும்பமாக வெளியேறிவருகின்றனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சாக்குலூத்து மெட்டு, ராமக்கல்மெட்டு பாதைகளில் மலையில் இறங்கி நடந்தே தமிழகப் பகுதியான தேவாரத்தில் தஞ்சம் அடைந்து வருகின்றனர்.
மாணவர்கள் பாதிப்பு
இந்த நிலையில் விடுதிகளில் தங்கி படிக்கும் தமிழக மாணவர்களை பள்ளிகளில் இருந்து வெளியேற்றுமாறு அங்குள்ள மலையாளிகள் பலரும் பள்ளிகளுக்கு சென்று நெருக்கடி கொடுத்து வருவதாக அங்கிருந்து தப்பி வந்துள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.
கேரளாவில் இருந்து வெளியேறாமல் உள்ள தமிழர்களின் பிள்ளைகளை கேரளாவில் தமிழகத்துக்கு எதிராக நடக்கும் போராட்டத்தில் பங்கேற்குமாறு மிரட்டி வருகின்றனர். இடுக்கி மாவட்டத்தில் உள்ள தமிழ் பள்ளிகளுக்கு பலவித நெருக்கடி கொடுக்கின்றனர்.
இது குறித்து போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தால் போலீசார் வந்து வேடிக்கை பார்த்துவிட்டு நடவடிக்கை எதுவும் எடுக்க மறுக்கிறார்கள் என்று அங்கிருந்து தப்பிவந்த தமிழர்கள் கூறுகின்றனர்.
இடுக்கி: முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினையால் இடுக்கி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி பயிலும் தமிழக மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து தப்பி வந்தவர்கள் கூறியுள்ளனர்.
விடுதிகளில் தங்கி படிக்கும் தமிழக மாணவர்களை பள்ளிகளில் இருந்து வெளியேற்றுமாறு அங்குள்ள மலையாளிகள் பள்ளிகளுக்கு சென்று நெருக்கடி கொடுத்து வருவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்ட கேரளா முயற்சித்து வருகிறது. இதற்கு தமிழக மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் இருமாநில எல்லைப் பகுதிகளிலும் பதற்றம் உருவாகியுள்ளது.
ஆயிரக்கணக்கானோர் தஞ்சம்
பீர்மேடு, தேவிகுளத்தை உள்ளடக்கிய இடுக்கி மாவட்டத்தை தமிழகத்துடன் மீண்டும் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் வலுத்து வருகிறது. தமிழர்களுக்கு ஆதரவாக இடுக்கி மாவட்ட தமிழர்கள் போராடி வருவதால் அவர்களை மலையாளிகள் தாக்கி அங்கிருந்து விரட்டி வருகின்றனர்.
நெடுங்குண்டம், பாரத்தோடு, காரித்தோடு, உடும்பன் சோலை உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் தமிழர்கள் கேரள ரவுடிகளின் தாக்குதலுக்கு குடும்பம் குடும்பமாக வெளியேறிவருகின்றனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சாக்குலூத்து மெட்டு, ராமக்கல்மெட்டு பாதைகளில் மலையில் இறங்கி நடந்தே தமிழகப் பகுதியான தேவாரத்தில் தஞ்சம் அடைந்து வருகின்றனர்.
மாணவர்கள் பாதிப்பு
இந்த நிலையில் விடுதிகளில் தங்கி படிக்கும் தமிழக மாணவர்களை பள்ளிகளில் இருந்து வெளியேற்றுமாறு அங்குள்ள மலையாளிகள் பலரும் பள்ளிகளுக்கு சென்று நெருக்கடி கொடுத்து வருவதாக அங்கிருந்து தப்பி வந்துள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.
கேரளாவில் இருந்து வெளியேறாமல் உள்ள தமிழர்களின் பிள்ளைகளை கேரளாவில் தமிழகத்துக்கு எதிராக நடக்கும் போராட்டத்தில் பங்கேற்குமாறு மிரட்டி வருகின்றனர். இடுக்கி மாவட்டத்தில் உள்ள தமிழ் பள்ளிகளுக்கு பலவித நெருக்கடி கொடுக்கின்றனர்.
இது குறித்து போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தால் போலீசார் வந்து வேடிக்கை பார்த்துவிட்டு நடவடிக்கை எதுவும் எடுக்க மறுக்கிறார்கள் என்று அங்கிருந்து தப்பிவந்த தமிழர்கள் கூறுகின்றனர்.
Guest- Guest
Re: முல்லை பெரியாறு அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை
குமுளியை நோக்கி நடைபயணம் சென்ற திருமாவளவன் கைது
தேனி: விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தலைமையில் அக்கட்சியினர் சார்பில் இன்று குமுளியை நோக்கி நடைபயணம் மேற்கொண்டனர். இதையடுத்து அவர்களைப் போலீஸார் கைது செய்து பின்னர் விடுவித்தனர்.
முல்லைப் பெரியாறு விவகாரத்தில் தமிழக அரசுக்கு ஆதரவு தெரிவித்தும், தமிழகத்தின் உரிமையை வலியுறுத்தியும், கேரளாவைக் கண்டித்தும், பல்வேறு வகையான போராட்டங்கள் நாளுக்கு நாள் பெருகி வருகின்றன.
இந்த நிலையில் இன்று திருமாவளவன் குமுளியை நோக்கி நடைபயணம் மேற்கொண்டார். காலை 10 மணிக்கு தேனியிலிருந்து நடைபயணம் தொடங்கினர். பெரும் திரளான தொண்டர்களுடன், எழுசத்சி முழகத்துடன் திருமாவளவன் நடந்தார்.
4 கிலோமீட்டர் தொலைவுக்கு நடந்து சென்ற நிலையில், போலீஸார் அனைவரையும் தடுத்து நிறுத்தி குமுளி செல்லக் கூடாது என்று கூறி கைது செய்தனர். பின்னர் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
தேனி: விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தலைமையில் அக்கட்சியினர் சார்பில் இன்று குமுளியை நோக்கி நடைபயணம் மேற்கொண்டனர். இதையடுத்து அவர்களைப் போலீஸார் கைது செய்து பின்னர் விடுவித்தனர்.
முல்லைப் பெரியாறு விவகாரத்தில் தமிழக அரசுக்கு ஆதரவு தெரிவித்தும், தமிழகத்தின் உரிமையை வலியுறுத்தியும், கேரளாவைக் கண்டித்தும், பல்வேறு வகையான போராட்டங்கள் நாளுக்கு நாள் பெருகி வருகின்றன.
இந்த நிலையில் இன்று திருமாவளவன் குமுளியை நோக்கி நடைபயணம் மேற்கொண்டார். காலை 10 மணிக்கு தேனியிலிருந்து நடைபயணம் தொடங்கினர். பெரும் திரளான தொண்டர்களுடன், எழுசத்சி முழகத்துடன் திருமாவளவன் நடந்தார்.
4 கிலோமீட்டர் தொலைவுக்கு நடந்து சென்ற நிலையில், போலீஸார் அனைவரையும் தடுத்து நிறுத்தி குமுளி செல்லக் கூடாது என்று கூறி கைது செய்தனர். பின்னர் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
Guest- Guest
Re: முல்லை பெரியாறு அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை
தமிழர்களைத் தாக்குவதைக் கண்டித்து 1000 அடி உயர மலையில் அமர்ந்து 100 பேர் தற்கொலை மிரட்டல்!
உத்தமபாளையம்: கேரளாவில் தமிழர்கள் மீது மலையாளிகள் தொடர் தாக்குதல் நடத்தி வருவதைக் கண்டித்து தேவாரம் அருகே உள்ள 100 அடி உயர மலை உச்சியில் 100 பேர் அமர்ந்து கொண்டு தற்கொலை செய்யப்போவதாக மிரட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை காரணமாக கேரளாவில் உள்ள எஸ்டேட்களில் தங்கி வேலை பார்க்கும் தமிழர்களை மலையாளிகள் தாக்கி வருகின்றனர். இதனால் அங்கு வசிக்கும் தமிழ்க் குடும்பங்கள் இரவோடு இரவாக தமிழகத்திற்கு தப்பியோடி வருகின்றன.
இந்நிலையில் கேரளாவில் தமிழர்களை மலையாளிகள் தாக்குவதைக் கண்டித்தும், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தக் கோரியும், கேரள அரசு மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்கக் கோரியும் தமிழக எல்லைப் பகுதியான தேவாரத்தை அடுத்த தே.மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த 100 நேற்று காலை 11 மணி அளவில் திடீர் என்று அங்குள்ள சாக்குலூத்து மெட்டுப் பாறைக்கு வந்தனர்.
அவர்கள் அனைவரும் சக்கணக்குண்டுவில் 1000 அடி உயரம் கொண்ட மலை உச்சிக்கு சென்றனர். உச்சியில் நின்று கொண்டு கேரளாவில் தமிழர்களை மலையாளிகள் தாக்கி அங்கிருந்து விரட்டியடிப்பதைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். பிறகு கேரள அரசைக் கண்டித்து தற்கொலை செய்துகொள்ளப் போவதாக மிரட்டல் விடுத்தனர்.
இது குறித்து தேவாரம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனே அவர்கள் மலைப்பகுதிக்கு வந்து தற்கொலை மிரட்டல் விடுத்தவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் அவர்கள் கீழே இறங்கவில்லை. பிடிவாதமாக மலை உச்சியில் உட்கார்ந்திருந்தனர். மாலை 5 மணிக்கு போலீசார் மைக் மூலம் மலை உச்சியில் இருந்தவர்களுடன் பேசினார்கள்.
அப்போது அவர்கள், கேரளாவில் தமிழர்கள் தாக்கப்படுவது, விரட்டியடிக்கப்படுவது குறித்து உரிய நடவடிக்கை எடுக்ககுமாறு தேனி மாவட்ட ஆட்சியர் இடுக்கி மாவட்ட ஆட்சியருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதனால் தமிழர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றனர்.
அதை கேட்டும் அவர்கள் கீழே இறங்கவில்லை. நீண்ட நேர பேச்சுவார்த்தைக்குப் பிறகு மாலை 6 மணியளவில் தான் அவர்கள் மலை உச்சியில் இருந்து கீழே இறங்கினர்.
உத்தமபாளையம்: கேரளாவில் தமிழர்கள் மீது மலையாளிகள் தொடர் தாக்குதல் நடத்தி வருவதைக் கண்டித்து தேவாரம் அருகே உள்ள 100 அடி உயர மலை உச்சியில் 100 பேர் அமர்ந்து கொண்டு தற்கொலை செய்யப்போவதாக மிரட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை காரணமாக கேரளாவில் உள்ள எஸ்டேட்களில் தங்கி வேலை பார்க்கும் தமிழர்களை மலையாளிகள் தாக்கி வருகின்றனர். இதனால் அங்கு வசிக்கும் தமிழ்க் குடும்பங்கள் இரவோடு இரவாக தமிழகத்திற்கு தப்பியோடி வருகின்றன.
இந்நிலையில் கேரளாவில் தமிழர்களை மலையாளிகள் தாக்குவதைக் கண்டித்தும், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தக் கோரியும், கேரள அரசு மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்கக் கோரியும் தமிழக எல்லைப் பகுதியான தேவாரத்தை அடுத்த தே.மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த 100 நேற்று காலை 11 மணி அளவில் திடீர் என்று அங்குள்ள சாக்குலூத்து மெட்டுப் பாறைக்கு வந்தனர்.
அவர்கள் அனைவரும் சக்கணக்குண்டுவில் 1000 அடி உயரம் கொண்ட மலை உச்சிக்கு சென்றனர். உச்சியில் நின்று கொண்டு கேரளாவில் தமிழர்களை மலையாளிகள் தாக்கி அங்கிருந்து விரட்டியடிப்பதைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். பிறகு கேரள அரசைக் கண்டித்து தற்கொலை செய்துகொள்ளப் போவதாக மிரட்டல் விடுத்தனர்.
இது குறித்து தேவாரம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனே அவர்கள் மலைப்பகுதிக்கு வந்து தற்கொலை மிரட்டல் விடுத்தவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் அவர்கள் கீழே இறங்கவில்லை. பிடிவாதமாக மலை உச்சியில் உட்கார்ந்திருந்தனர். மாலை 5 மணிக்கு போலீசார் மைக் மூலம் மலை உச்சியில் இருந்தவர்களுடன் பேசினார்கள்.
அப்போது அவர்கள், கேரளாவில் தமிழர்கள் தாக்கப்படுவது, விரட்டியடிக்கப்படுவது குறித்து உரிய நடவடிக்கை எடுக்ககுமாறு தேனி மாவட்ட ஆட்சியர் இடுக்கி மாவட்ட ஆட்சியருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதனால் தமிழர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றனர்.
அதை கேட்டும் அவர்கள் கீழே இறங்கவில்லை. நீண்ட நேர பேச்சுவார்த்தைக்குப் பிறகு மாலை 6 மணியளவில் தான் அவர்கள் மலை உச்சியில் இருந்து கீழே இறங்கினர்.
Guest- Guest
Re: முல்லை பெரியாறு அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை
புரட்சி wrote:தமிழர்களைத் தாக்குவதைக் கண்டித்து 1000 அடி உயர மலையில் அமர்ந்து 100 பேர் தற்கொலை மிரட்டல்!
உத்தமபாளையம்: கேரளாவில் தமிழர்கள் மீது மலையாளிகள் தொடர் தாக்குதல் நடத்தி வருவதைக் கண்டித்து தேவாரம் அருகே உள்ள 100 அடி உயர மலை உச்சியில் 100 பேர் அமர்ந்து கொண்டு தற்கொலை செய்யப்போவதாக மிரட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை காரணமாக கேரளாவில் உள்ள எஸ்டேட்களில் தங்கி வேலை பார்க்கும் தமிழர்களை மலையாளிகள் தாக்கி வருகின்றனர். இதனால் அங்கு வசிக்கும் தமிழ்க் குடும்பங்கள் இரவோடு இரவாக தமிழகத்திற்கு தப்பியோடி வருகின்றன.
இந்நிலையில் கேரளாவில் தமிழர்களை மலையாளிகள் தாக்குவதைக் கண்டித்தும், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தக் கோரியும், கேரள அரசு மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்கக் கோரியும் தமிழக எல்லைப் பகுதியான தேவாரத்தை அடுத்த தே.மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த 100 நேற்று காலை 11 மணி அளவில் திடீர் என்று அங்குள்ள சாக்குலூத்து மெட்டுப் பாறைக்கு வந்தனர்.
அவர்கள் அனைவரும் சக்கணக்குண்டுவில் 1000 அடி உயரம் கொண்ட மலை உச்சிக்கு சென்றனர். உச்சியில் நின்று கொண்டு கேரளாவில் தமிழர்களை மலையாளிகள் தாக்கி அங்கிருந்து விரட்டியடிப்பதைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். பிறகு கேரள அரசைக் கண்டித்து தற்கொலை செய்துகொள்ளப் போவதாக மிரட்டல் விடுத்தனர்.
இது குறித்து தேவாரம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனே அவர்கள் மலைப்பகுதிக்கு வந்து தற்கொலை மிரட்டல் விடுத்தவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் அவர்கள் கீழே இறங்கவில்லை. பிடிவாதமாக மலை உச்சியில் உட்கார்ந்திருந்தனர். மாலை 5 மணிக்கு போலீசார் மைக் மூலம் மலை உச்சியில் இருந்தவர்களுடன் பேசினார்கள்.
அப்போது அவர்கள், கேரளாவில் தமிழர்கள் தாக்கப்படுவது, விரட்டியடிக்கப்படுவது குறித்து உரிய நடவடிக்கை எடுக்ககுமாறு தேனி மாவட்ட ஆட்சியர் இடுக்கி மாவட்ட ஆட்சியருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதனால் தமிழர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றனர்.
அதை கேட்டும் அவர்கள் கீழே இறங்கவில்லை. நீண்ட நேர பேச்சுவார்த்தைக்குப் பிறகு மாலை 6 மணியளவில் தான் அவர்கள் மலை உச்சியில் இருந்து கீழே இறங்கினர்.
என்ன மடமை?!
தமிழனுக்கு கோபம் வந்தால் தன்னை தானே அழித்துக் கொள்வான் போல தொிகிறது.
தமிழனின் போராட்ட குண்த்துக்கோா் அளவேயில்லை போலிருக்கிறது.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![முல்லை பெரியாறு அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை - Page 15 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![முல்லை பெரியாறு அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை - Page 15 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![முல்லை பெரியாறு அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை - Page 15 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![முல்லை பெரியாறு அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை - Page 15 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![முல்லை பெரியாறு அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை - Page 15 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![முல்லை பெரியாறு அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை - Page 15 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc- வி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
Page 15 of 17 • 1 ... 9 ... 14, 15, 16, 17
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» முல்லை பெரியாறு!
» முல்லை பெரியாறு யாருக்கு சொந்தம்?
» புதிய முல்லை பெரியாறு அணை: ரூ.50 கோடி ஒதுக்கீடு
» முல்லை பெரியாறு அணையின் உண்மை நிலை
» முல்லை பெரியாறு -142 அடி உயர்த்த தடை இல்லை -உச்ச நீதிமன்றம்
» முல்லை பெரியாறு யாருக்கு சொந்தம்?
» புதிய முல்லை பெரியாறு அணை: ரூ.50 கோடி ஒதுக்கீடு
» முல்லை பெரியாறு அணையின் உண்மை நிலை
» முல்லை பெரியாறு -142 அடி உயர்த்த தடை இல்லை -உச்ச நீதிமன்றம்
Page 15 of 17
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|