Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டுby heezulia Today at 8:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:25 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:02 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:50 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:43 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 4:44 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 3:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:02 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:25 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:25 am
» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am
» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am
» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am
» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm
» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm
» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm
» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm
» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm
» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am
» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am
» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am
» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm
» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm
» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am
» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am
» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am
» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am
» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm
» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm
» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm
» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm
» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm
» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Abiraj_26 | ||||
mohamed nizamudeen | ||||
mini | ||||
balki1949 | ||||
Rathinavelu |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
Abiraj_26 | ||||
சுகவனேஷ் | ||||
mini | ||||
Barushree | ||||
Saravananj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நாளை பாபர் மசூதி இடிப்பு தினம்: சென்னையில், 12 ஆயிரம் போலீஸ் பாதுகாப்பு; தமிழகம் முழுவதும் தீவிர கண்காணிப்பு
2 posters
Page 1 of 1
நாளை பாபர் மசூதி இடிப்பு தினம்: சென்னையில், 12 ஆயிரம் போலீஸ் பாதுகாப்பு; தமிழகம் முழுவதும் தீவிர கண்காணிப்பு
சென்னை, டிச. 5-
பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் 6-ந் தேதி அன்று ஆண்டு தோறும் நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களில் தீவிரவாதிகள் நாசவேலையில் ஈடுபடக்கூடும் என கருதி இந்த நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டு வருகிறது. நாளை டிசம்பர் 6-ந் தேதியையொட்டி தமிழகம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டுள்ளனர்.
சென்னையில் 12 ஆயிரம் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான தியாகராய நகர், பாரிமுனை, புரசைவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கூடுதல் போலீசார் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சென்ட்ரல், எழும்பூர், ரெயில் நிலையங்கள், கோயம்பேடு பஸ் நிலையம் ஆகியவற்றில் பயணிகள் உடமைகள் பலத்த சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது.
மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. ரெயில்களில் பார்சல்கள் அனுப்பதடை விதிக்கப்பட்டுள்ளதால் எழும்பூர், சென்ட்ரல் ரெயில் நிலையங்களில் பார்சல் மூட்டைகள் குவிந்து கிடக்கின்றன. சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு வடமாநிலங்களில் இருந்து வரும் அனைத்து ரெயில்களிலும் அங்குலம் அங்குலமாக போலீசார் வெடிகுண்டு சோதனை நடத்தி வருகிறார்கள்.
ரெயில் நிலையத்தில் சந்தேகப்படும்படியாக ஏதாவது பொருட்கள் கிடந்தால் அதனை பொதுமக்கள் தொட வேண்டாம் என்றும், அருகில் உள்ள போலீஸ் நிலையத்திலோ, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் போலீசாரிடமோ உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்று ஒலிபெருக்கி மூலம் போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.
சென்னையில் வாகன சோதனையை தீவிரப்படுத்த போலீஸ் கமிஷனர் திரிபாதி உத்தரவிட்டுள்ளார். கூடுதல் கமிஷனர் தாமரைக் கண்ணன், மேற்பார்வையில், இணை கமிஷனர்கள் சேஷசாய், சண்முகராஜேஸ்வரன், சங்கர், செந்தாமரைக் கண்ணன் ஆகியோரது தலைமையில் வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இன்று இரவு இதனை தீவிரப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலையத்திலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் பலத்த சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். மத்திய தொழிற் பாதுகாப்பு படை போலீசார் துப்பாக்கி ஏந்தியபடி பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கார்கள் நிறுத்துமிடம் விமான நிலைய சுற்று பகுதிகளில் ரகசிய கேமிரா மூலம் கண்காணிக்கப்படுகிறது. விமான நிலையத்தை சுற்றி துப்பாக்கி ஏந்திய போலீசார் மற்றும் மத்திய தொழிற்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் விமான நிலைய போலீசார் மாறுவேடங்களில் கண்காணித்து வருகின்றனர். விமான நிலைய பகுதிகள் பாதுகாப்பு வளையத்திற்குள் வந்து உள்ளதால் 7 அடுக்கு பாதுகாப்பு போட்டப்பட்டு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். அண்ணா பன்னாட்டு முனையம், காமராஜர் உள்நாட்டு முனையத்தில் பார்வையாளர்களுக்கும் பலத்த சோதனை செய்யப்படுகிறது.
விமான நிலையத்திற்குள் சந்தேகப்படும்படியாக சுற்றி திரியும் நபர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களையும் போலீசார் கண்காணித்து வருகின்றனர். விமான நிலையத்தின் அனைத்து பகுதிகளிலும் மோப்ப நாயுடன் கண்காணிக்கும் பணியில் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் ஈடுபட்டனர்.
விமான நிலையத்தில் போலீசார், மத்திய தொழிற்படை போலீசார், விமான நிலைய பாதுகாப்பு படையினர் என அனைத்து தரப்பினரும் சேர்ந்து 24 மணி நேரமும் பாதுகாப்பு மற்றும் சோதனை பணியில் ஈடுப்பட்டு உள்ளனர். கோவை மாநகர் முழுவதும் 2 ஆயிரத்து 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கோவை விமான நிலையம் மற்றும் ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ரெயில் நிலையம் முழுவதும் 16 கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தி ரகசியமாக கண்காணித்து வருகின்றனர். கோவை விமான நிலையத்திலும் பயணிகள் அனைவரும் முழுமையான சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். வெளிமாவட்டம், மாநிலங்களில் இருந்து கோவை மாநகரத்திற்கு வரும் அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகிறது. கமிஷனர் அமரேஷ் புஜாரி தலைமையில், 500 போலீசார் 33 ரோந்து வாகனங்களில் மாநகர பகுதிகள் முழுவதும் ரோந்து சுற்றி வந்து கண்காணித்து வருகின்றனர்.
மாலைமலர்
பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் 6-ந் தேதி அன்று ஆண்டு தோறும் நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களில் தீவிரவாதிகள் நாசவேலையில் ஈடுபடக்கூடும் என கருதி இந்த நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டு வருகிறது. நாளை டிசம்பர் 6-ந் தேதியையொட்டி தமிழகம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டுள்ளனர்.
சென்னையில் 12 ஆயிரம் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான தியாகராய நகர், பாரிமுனை, புரசைவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கூடுதல் போலீசார் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சென்ட்ரல், எழும்பூர், ரெயில் நிலையங்கள், கோயம்பேடு பஸ் நிலையம் ஆகியவற்றில் பயணிகள் உடமைகள் பலத்த சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது.
மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. ரெயில்களில் பார்சல்கள் அனுப்பதடை விதிக்கப்பட்டுள்ளதால் எழும்பூர், சென்ட்ரல் ரெயில் நிலையங்களில் பார்சல் மூட்டைகள் குவிந்து கிடக்கின்றன. சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு வடமாநிலங்களில் இருந்து வரும் அனைத்து ரெயில்களிலும் அங்குலம் அங்குலமாக போலீசார் வெடிகுண்டு சோதனை நடத்தி வருகிறார்கள்.
ரெயில் நிலையத்தில் சந்தேகப்படும்படியாக ஏதாவது பொருட்கள் கிடந்தால் அதனை பொதுமக்கள் தொட வேண்டாம் என்றும், அருகில் உள்ள போலீஸ் நிலையத்திலோ, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் போலீசாரிடமோ உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்று ஒலிபெருக்கி மூலம் போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.
சென்னையில் வாகன சோதனையை தீவிரப்படுத்த போலீஸ் கமிஷனர் திரிபாதி உத்தரவிட்டுள்ளார். கூடுதல் கமிஷனர் தாமரைக் கண்ணன், மேற்பார்வையில், இணை கமிஷனர்கள் சேஷசாய், சண்முகராஜேஸ்வரன், சங்கர், செந்தாமரைக் கண்ணன் ஆகியோரது தலைமையில் வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இன்று இரவு இதனை தீவிரப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலையத்திலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் பலத்த சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். மத்திய தொழிற் பாதுகாப்பு படை போலீசார் துப்பாக்கி ஏந்தியபடி பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கார்கள் நிறுத்துமிடம் விமான நிலைய சுற்று பகுதிகளில் ரகசிய கேமிரா மூலம் கண்காணிக்கப்படுகிறது. விமான நிலையத்தை சுற்றி துப்பாக்கி ஏந்திய போலீசார் மற்றும் மத்திய தொழிற்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் விமான நிலைய போலீசார் மாறுவேடங்களில் கண்காணித்து வருகின்றனர். விமான நிலைய பகுதிகள் பாதுகாப்பு வளையத்திற்குள் வந்து உள்ளதால் 7 அடுக்கு பாதுகாப்பு போட்டப்பட்டு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். அண்ணா பன்னாட்டு முனையம், காமராஜர் உள்நாட்டு முனையத்தில் பார்வையாளர்களுக்கும் பலத்த சோதனை செய்யப்படுகிறது.
விமான நிலையத்திற்குள் சந்தேகப்படும்படியாக சுற்றி திரியும் நபர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களையும் போலீசார் கண்காணித்து வருகின்றனர். விமான நிலையத்தின் அனைத்து பகுதிகளிலும் மோப்ப நாயுடன் கண்காணிக்கும் பணியில் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் ஈடுபட்டனர்.
விமான நிலையத்தில் போலீசார், மத்திய தொழிற்படை போலீசார், விமான நிலைய பாதுகாப்பு படையினர் என அனைத்து தரப்பினரும் சேர்ந்து 24 மணி நேரமும் பாதுகாப்பு மற்றும் சோதனை பணியில் ஈடுப்பட்டு உள்ளனர். கோவை மாநகர் முழுவதும் 2 ஆயிரத்து 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கோவை விமான நிலையம் மற்றும் ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ரெயில் நிலையம் முழுவதும் 16 கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தி ரகசியமாக கண்காணித்து வருகின்றனர். கோவை விமான நிலையத்திலும் பயணிகள் அனைவரும் முழுமையான சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். வெளிமாவட்டம், மாநிலங்களில் இருந்து கோவை மாநகரத்திற்கு வரும் அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகிறது. கமிஷனர் அமரேஷ் புஜாரி தலைமையில், 500 போலீசார் 33 ரோந்து வாகனங்களில் மாநகர பகுதிகள் முழுவதும் ரோந்து சுற்றி வந்து கண்காணித்து வருகின்றனர்.
மாலைமலர்
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: நாளை பாபர் மசூதி இடிப்பு தினம்: சென்னையில், 12 ஆயிரம் போலீஸ் பாதுகாப்பு; தமிழகம் முழுவதும் தீவிர கண்காணிப்பு
இன்று எந்த பிரச்சனையும் வராமல் இருக்கணும்
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Similar topics
» பாபர் மசூதி இடிப்பு வழக்கு தீர்ப்பு-நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு க்கு ஏற்பாடு !!!
» பாபர் மசூதி இடிப்பு வழக்கு தீர்ப்பு-தீவிர பாதுகாப்புக்கு ஏற்
» தமிழகம் முழுவதும் 6 ஆயிரம் வங்கிகள் நாளை வேலைநிறுத்தம் July 27, 2016 தமிழகம்
» பாபர் மசூதி இடிப்பு திட்டமிட்ட சதி: வீடியோ வெளியீடு
» பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அனைவரும் விடுதலை
» பாபர் மசூதி இடிப்பு வழக்கு தீர்ப்பு-தீவிர பாதுகாப்புக்கு ஏற்
» தமிழகம் முழுவதும் 6 ஆயிரம் வங்கிகள் நாளை வேலைநிறுத்தம் July 27, 2016 தமிழகம்
» பாபர் மசூதி இடிப்பு திட்டமிட்ட சதி: வீடியோ வெளியீடு
» பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அனைவரும் விடுதலை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|