Latest topics
» கருத்துப்படம் 02/07/2024by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
அறிவியல் செய்திகள் -விண்வெளி வரலாற்றில் ஓர் அரிய நிகழ்வு
2 posters
Page 1 of 1
அறிவியல் செய்திகள் -விண்வெளி வரலாற்றில் ஓர் அரிய நிகழ்வு
நட்சத்திரத்தை விழுங்கிய அதிக சக்தி வாய்ந்த கருந்துளை:
விண்வெளி வரலாற்றில் ஓர் அரிய நிகழ்வு
விண்வெளியில் அதிக சக்தி வாய்ந்த கருந்துளைகள் உள்ளன. இவை தங்களுக்கருகில் இருக்கும் அனைத்தையும் உள்ளிழுத்து கொள்ளும் ஆற்றல் பெற்றவை. தற்போது அத்தகைய கருந்துளைகளில் ஒன்று நட்சத்திரம் ஒன்றை சிதறடித்து பின் தனக்குள்ளே உள் வாங்கிய அரிய நிகழ்ச்சியை வானியலாளர்கள் முதன் முறையாக கண்டறிந்துள்ளனர். பூமியிலிருந்து 4 பில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் நடந்துள்ள இது போன்ற நிகழ்வு இதற்கு முன்பு கண்டறியப்படாதது. பொதுவாக கருந்துளைகளின் மையம் சூரியனைப்போன்று 100 கோடி மடங்கு அதிக வலிமை கொண்டதாக இருக்கும். தற்போது நடைபெற்ற நிகழ்வில், கருந்துளையானது தன்னிடமிருந்து 3.9 பில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்த நட்சத்திரத்தை, அதிக சக்தி வாய்ந்த காஸ்மிக் ஜெட் எனப்படும் தனிப்பட்ட சக்தியால் சிதறடித்து பின் தன்னுள் இழுத்து கொண்டுள்ளது. இதனால் ஏற்பட்ட ஒளி வெள்ளம் அதனை படம் பிடித்த நாசாவின் ஸ்விப்ட் தொலைநோக்கிக்கு அடுத்த ஒரு வடருடத்திற்கு தேவையான ஒளியை வழங்குமளவிற்கு பிரமாண்டமாய் இருந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் விண்வெளியில் கடந்த மார்ச் மாதத்திலிருந்து எக்ஸ் கதிர்களின் அலைவீச்சு அடிக்கடி நிகழ்ந்து வந்ததையும் ஸ்விப்ட் தொலைநோக்கி அவ்வப்போது நாசாவிற்கு தெரிவித்து வந்தது. அதனை தொடர்ந்து ஆராய்ந்ததில் இந்த அரிய நிகழ்வு தற்போது உலகிற்கு தெரிய வந்துள்ளது. மற்றும் நட்சத்திர மண்டலத்தில் 100 மில்லியன் வருடங்களுக்கு ஒரு முறை இது போன்ற நிகழ்வு நடைபெறும் என பென்சில்வேனியா மாநில பல்கலைகழகம் மற்றும் ஹார்வேர்டு ஸ்மித்சோனியன் வானியல் அமைப்பு ஆகிய குழுவை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
பூமியின் மிக பழமையான தொல்லுயிர் படிவம் ஆஸ்திரேலியாவில் உள்ளதாக ஆய்வில் தகவல்
ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த ஆராய்ச்சியாளர் டேவிட் வாசி தலைமையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி சுமார் 3.4 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் வாழ்ந்த பாக்டீரியாவின் தொல்லுயிர் படிவம் ஆஸ்திரேலியா நாட்டின் பில்பரா பகுதியில் அமைந்த ஸ்ட்ரெல்லி நதிக்கரையில் கிடைத்துள்ளது. இதுவே உலகின் மிக தொன்மை வாய்ந்த உயிரி படிவம் ஆகும். சாதாரண கண்களால் பார்க்க இயலாத இந்த பாக்டீரிய படிவத்தை மைக்ரோஸ்கோப் வழியே எளிதாக கண்டுணர முடியும். இது பற்றி டேவிட் கூறும் பொழுது, 3.4 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் கடும் வெப்பமான, உயிரினங்கள் வாழ்வதற்கு தேவையான ஆக்சிஜன் இல்லாத சூழல் காணப்பட்டது. அத்தகைய நிலையில் ஏதேனும் ஒரு வழியில் உயிரிகள் வாழ்ந்தாக வேண்டும். அப்பொழுது எரிமலை வெடித்து வெளிப்பட்ட குழம்பில் அதிகம் நிறைந்த கந்தக பொருள்களை இத்தகைய பாக்டீரியாக்கள் சுவாசித்து வாழ்ந்திருக்க வேண்டும் என கூறுகிறார்.
உலகிலேயே மிக நீளமான பெரிஸ்கோப்பு கல்பாக்கத்தில் அமைப்பு
தமிழ் நாட்டின் கல்பாக்கத்திலுள்ள இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி நிலையத்தில் உலகின் மிக நீளமான, அதாவது 10 மீட்டர் நீளம் கொண்ட பெரிஸ்கோப்பு ஒன்று ரூபாய் 4 கோடி மதிப்பில் இங்கு உருவாக்கப்பட்டுள்ளது. இது இன்று முதல் இயக்கி வைக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஆய்வு மையத்தில் அதிக எண்ணிக்கையில் ரியாக்டர்கள் இயங்கி வருகின்றன. இந்த ரியாக்டர்களின் பராமரிப்புப்பணிகளை பார்வையிட, ரிமோட் கண்ட்ரோல் மூலமாக இயங்கும், இந்த பெரிஸ்கோப்புகள் பயன்படும் என தெரிய வருகிறது. அணுவை பிளந்து, வெப்பத்தை உருவாக்கி, நீராவியை தயார் செய்யும் அனைத்து பணிகளையும் செய்பவவைதான் இந்த ரியாக்டர்கள். இந்த ரியாகடர்களின் பராமறிப்பு பணியை கண்களால் நேரடியாக பார்வையிட முடியாது. இதனை சாத்தியமாக்கவே இந்த பெரிஸ்கோப்புகள் பயன்படுத்தப்படுகின்றன.
கடல் வாழ் உயிரினங்கள் எழுப்பும் ஒலி குறித்து ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு
கடல் வாழ் உயிரினங்கள் கடலில் பிரயாணிக்கும் பொழுது தங்களுக்குள் தொடர்பு ஏற்படுத்தி கொள்வதற்கு சப்தத்தை எழுப்பும். உதாரணமாக, சில திமிங்கல வகைகள் முனங்குவது போலவும், கத்துவது போலவும் ஒலியெழுப்பி ஒன்றுடன் ஒன்று தொடர்பு ஏற்படுத்தி கொள்வது வழக்கம். கடல் பரப்பில் மனிதனின் தாக்கம் பல வருடங்களாக அதிகரித்துள்ள நிலையில், அதனால் கடல் வாழ் உயிரினங்களின் தகவல் தொடர்பில் ஏற்படும் பாதிப்பு குறித்து கடல் ஆராய்ச்சியாளர்கள் நீண்ட காலமாக ஆய்வு செய்து வருகின்றனர். தற்போது, இது பற்றி வரும் ஆகஸ்ட் 30 மற்றும் செப்டம்பர் 01 ஆகிய தினங்களில் பாரிஸ் நகரில் அமைந்த யுனெஸ்கோ அமைப்பின் கலந்தாய்வு கூட்டத்தில் விரிவாக விவாதம் நடத்தப்படும் என ஐ.நா. கழகம் தெரிவித்துள்ளது. 21.8.2011 10.20 PM
தலைமுடிக்கு ஜெல் பயன்படுத்திய பழங்கால எகிப்தியர்கள்: ஆய்வில் தகவல்
இங்கிலாந்து நாட்டிலுள்ள மான்செஸ்டர் பல்கலைகழகத்தில் தொல்லியல் துறை நிபுணரான நடாலி மேக்கிரீஷ் என்பவர் தலைமையில் எகிப்து நாட்டின் மம்மிகள் பற்றி ஆய்வு மேற்கொண்டனர். அவர்களின் ஆய்விற்கு எடுத்து கொள்ளப்பட்ட 18 மம்மிகளில் பெரும்பாலானவை கிரேக்க மற்றும் ரோமானிய காலத்தின்படி 2,300 வருடங்களுக்கு முற்பட்டவை. அதில் மிக பழமையான மம்மியின் வயது 3,500 ஆகும். இந்த மம்மிகளில் ஆண், பெண் என்று 4 வயது முதல் 58 வயது வரையிலானவர்கள் அடங்குவர். மைக்ரோஸ்கோபி முறையில் ஒளி மற்றும் எலக்ட்ரான்களை பயன்படுத்தி ஆராய்ந்ததில் 9 மம்மிகளின் தலை முடியில் கொழுப்பு போன்ற பொருள் பூசப்பட்டு இருந்தது. ஆய்வில், அது பால்மிடிக் மற்றும் ஸ்டியரிக் வகையை சேர்ந்த கொழுப்பு அமிலங்கள் என தெரிய வந்தது. ஜெல் வடிவில் பயன்படுத்தப்பட்ட அவை எதிலிருந்து எடுக்கப்பட்டது என்பது சரிவர தெரியவில்லை. எனினும் தற்போது, எகிப்து நாட்டவர்கள் பழங்காலத்திலேயே தங்கள் தலைமுடியினை அழகாக பராமரித்து வந்துள்ளனர் என்பதும் மம்மிகள் உருவாக்கத்திலும் அந்நடைமுறை பின்பற்றப்பட்டுள்ளது என்பதும் ஆய்வின் வழியாக தெரிய வந்துள்ளது.
ஜிப்பான்கள் தாவிக்குதிக்கும் ரகசியம்
குரங்குகள் பலவிதம். ஏப் இனத்தை சேர்ந்த ஜிப்பான் என்பது ஒரு வகை குரங்கு. இவற்றின் கைகள் வெள்ளையாக இருப்பதனால் இது வெள்ளைக்கை ஜிப்பான் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஜிப்பான்கள் தரையிலிருந்து மேலெழும்பி சுமார் 3 மீட்டர் உயரம் தாவிக்குதிக்கும் திறன் பெற்றது. மனிதர்களுக்கு உடம்பில் 11 சதவீதம் கைகளின் எடை. ஆனால், ஜிப்பான்களுக்கு இது 17 சதவீதமாம். எனவே, தங்களது பலம் வாய்ந்த கைகளை அசைத்து, வீசி ஒரு அசுர பலத்தை ஏற்படுத்தி இவை தாவிக்குதிக்கின்றன. அப்படி செய்யும் போது அவற்றின் உடல் எடையின் புவி மையம் கைகளுக்கு வந்து விடுகிறதாம். அதுவே இவை இவ்வளவு உயரம் தாவிக்குதிப்பதற்கு தேவையான சக்தியை தருகிறது என்கின்றனர் இந்த ஆய்வாளர்கள். ஃப்ளீ என்பது ஒரு வகையான ஒட்டுண்ணிகள். இவை 1.5 மில்லி மீட்டரிலிருந்து 3.3 மில்லி மீட்டர் நீளம் வரை வளரக்கூடியவை. ஆனால், ஆச்சரியமாக இவை தங்களது உடலின் நீளத்தை விட 200 மடங்கு தூரத்தை அதாவது, 18 செ மீ உயரத்தை அல்லது 33 செ மீ நீளத்தை, ஒரே தாவலில் தாவி விடும். மிக அதிக உயரம் துள்ளிக்குதிக்கும் உயிரினம் இது தான். பொதுவாக நீண்ட தூரம் தாவிக்குதிக்கும் பிற உயிரினங்கள் வெட்டுக்கிளி மற்றும் ஃப்ளீ. ஆனால், இவை தாவிக்குதிப்பதற்கும் இந்த ஜிப்பான்கள் தாவிக்குதிப்பதற்கும் நிறைய வித்தியாசமிருப்பதாக இவற்றை ஆராய்ந்த விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
வெளவால்களை பற்றிய ஒரு ருசிகர ஆராய்ச்சி
வெளவால்கள் எவ்வாறு திசைகளை கண்டுபிடித்து பறக்கின்றன என்பதை கண்டறிய ஒரு ஜி.பி.எஸ். கருவியை ஜெருஸலம் பல்கலை கழக விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர். தங்களது இலக்குகளை திறம்பட நிர்ணயம் செய்வதில் வீட்டுப்புறாக்களை விட பழ வெளவால்கள் திறமையானவை என இவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
எகிப்திலுள்ள பழ வெளவால்கள், மலைகள் மற்றும் மக்கள் குடியிருப்புக்களில் தெரியும் வெளிச்சம் போன்றவற்றை அடையாளமாக வைத்தே வேறிடத்துக்கு செல்லவோ அல்லது மீண்டும் அதே இடத்துக்கு திரும்பி வரவோ செய்கின்றனவாம். வெளிச்சம் இல்லாத காலங்களில் அவை ஏதோ ஒரு உள்ளுணர்வின் அடிப்படையில் தங்களது இலக்குகளை மிக துல்லியமாக கணிக்கும் ஆற்றல் பெற்றவை என இந்த ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
சில வெளவால்களின் மீது ஒரு ஜி.பி.எஸ் கருவியை இணைத்து அவற்றை ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து பறக்க விட்டார்கள். அவை சுமார் 25 கிலோமீட்டர் தூரத்திலுள்ள ஒரு பழ மரத்திற்கு பறந்து சென்று மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே வந்து சேர்ந்தன. அதிசயமாக, அதே போன்ற பழ மரங்கள் வெளவால்கள் பறந்து சென்ற வழியில் வெகு அருகில் இருந்தாலும் அவை தாங்கள் வழக்கமாக செல்லும் ஒரு குறிப்பிட்ட மரத்திற்கே சென்று வந்தது தெரிய வந்தது.
இன்னும் சுவாரசியமாக, பட்டினியாய் சிலவற்றையும் இறையெடுத்த சில வெளவால்களையும் தங்களது இருப்பிடத்தைவிட்டு வெகு தொலைவுக்கு கொண்டு சென்று பறக்க விட்ட போது, இறையெடுத்தவை தங்களது சரியான இருப்பிடத்துக்கும், பட்டினியாய் இருந்தவை வழக்கமாக செல்லும் பழ மரங்களுக்கு சென்று பின்னர் தங்களது இருப்பிடத்துக்கு திரும்பியதும் கண்டுபிடிக்கப்பட்டது.
http://www.dailythanthi.com/FlashNews/science.html
விண்வெளி வரலாற்றில் ஓர் அரிய நிகழ்வு
விண்வெளியில் அதிக சக்தி வாய்ந்த கருந்துளைகள் உள்ளன. இவை தங்களுக்கருகில் இருக்கும் அனைத்தையும் உள்ளிழுத்து கொள்ளும் ஆற்றல் பெற்றவை. தற்போது அத்தகைய கருந்துளைகளில் ஒன்று நட்சத்திரம் ஒன்றை சிதறடித்து பின் தனக்குள்ளே உள் வாங்கிய அரிய நிகழ்ச்சியை வானியலாளர்கள் முதன் முறையாக கண்டறிந்துள்ளனர். பூமியிலிருந்து 4 பில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் நடந்துள்ள இது போன்ற நிகழ்வு இதற்கு முன்பு கண்டறியப்படாதது. பொதுவாக கருந்துளைகளின் மையம் சூரியனைப்போன்று 100 கோடி மடங்கு அதிக வலிமை கொண்டதாக இருக்கும். தற்போது நடைபெற்ற நிகழ்வில், கருந்துளையானது தன்னிடமிருந்து 3.9 பில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்த நட்சத்திரத்தை, அதிக சக்தி வாய்ந்த காஸ்மிக் ஜெட் எனப்படும் தனிப்பட்ட சக்தியால் சிதறடித்து பின் தன்னுள் இழுத்து கொண்டுள்ளது. இதனால் ஏற்பட்ட ஒளி வெள்ளம் அதனை படம் பிடித்த நாசாவின் ஸ்விப்ட் தொலைநோக்கிக்கு அடுத்த ஒரு வடருடத்திற்கு தேவையான ஒளியை வழங்குமளவிற்கு பிரமாண்டமாய் இருந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் விண்வெளியில் கடந்த மார்ச் மாதத்திலிருந்து எக்ஸ் கதிர்களின் அலைவீச்சு அடிக்கடி நிகழ்ந்து வந்ததையும் ஸ்விப்ட் தொலைநோக்கி அவ்வப்போது நாசாவிற்கு தெரிவித்து வந்தது. அதனை தொடர்ந்து ஆராய்ந்ததில் இந்த அரிய நிகழ்வு தற்போது உலகிற்கு தெரிய வந்துள்ளது. மற்றும் நட்சத்திர மண்டலத்தில் 100 மில்லியன் வருடங்களுக்கு ஒரு முறை இது போன்ற நிகழ்வு நடைபெறும் என பென்சில்வேனியா மாநில பல்கலைகழகம் மற்றும் ஹார்வேர்டு ஸ்மித்சோனியன் வானியல் அமைப்பு ஆகிய குழுவை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
பூமியின் மிக பழமையான தொல்லுயிர் படிவம் ஆஸ்திரேலியாவில் உள்ளதாக ஆய்வில் தகவல்
ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த ஆராய்ச்சியாளர் டேவிட் வாசி தலைமையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி சுமார் 3.4 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் வாழ்ந்த பாக்டீரியாவின் தொல்லுயிர் படிவம் ஆஸ்திரேலியா நாட்டின் பில்பரா பகுதியில் அமைந்த ஸ்ட்ரெல்லி நதிக்கரையில் கிடைத்துள்ளது. இதுவே உலகின் மிக தொன்மை வாய்ந்த உயிரி படிவம் ஆகும். சாதாரண கண்களால் பார்க்க இயலாத இந்த பாக்டீரிய படிவத்தை மைக்ரோஸ்கோப் வழியே எளிதாக கண்டுணர முடியும். இது பற்றி டேவிட் கூறும் பொழுது, 3.4 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் கடும் வெப்பமான, உயிரினங்கள் வாழ்வதற்கு தேவையான ஆக்சிஜன் இல்லாத சூழல் காணப்பட்டது. அத்தகைய நிலையில் ஏதேனும் ஒரு வழியில் உயிரிகள் வாழ்ந்தாக வேண்டும். அப்பொழுது எரிமலை வெடித்து வெளிப்பட்ட குழம்பில் அதிகம் நிறைந்த கந்தக பொருள்களை இத்தகைய பாக்டீரியாக்கள் சுவாசித்து வாழ்ந்திருக்க வேண்டும் என கூறுகிறார்.
உலகிலேயே மிக நீளமான பெரிஸ்கோப்பு கல்பாக்கத்தில் அமைப்பு
தமிழ் நாட்டின் கல்பாக்கத்திலுள்ள இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி நிலையத்தில் உலகின் மிக நீளமான, அதாவது 10 மீட்டர் நீளம் கொண்ட பெரிஸ்கோப்பு ஒன்று ரூபாய் 4 கோடி மதிப்பில் இங்கு உருவாக்கப்பட்டுள்ளது. இது இன்று முதல் இயக்கி வைக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஆய்வு மையத்தில் அதிக எண்ணிக்கையில் ரியாக்டர்கள் இயங்கி வருகின்றன. இந்த ரியாக்டர்களின் பராமரிப்புப்பணிகளை பார்வையிட, ரிமோட் கண்ட்ரோல் மூலமாக இயங்கும், இந்த பெரிஸ்கோப்புகள் பயன்படும் என தெரிய வருகிறது. அணுவை பிளந்து, வெப்பத்தை உருவாக்கி, நீராவியை தயார் செய்யும் அனைத்து பணிகளையும் செய்பவவைதான் இந்த ரியாக்டர்கள். இந்த ரியாகடர்களின் பராமறிப்பு பணியை கண்களால் நேரடியாக பார்வையிட முடியாது. இதனை சாத்தியமாக்கவே இந்த பெரிஸ்கோப்புகள் பயன்படுத்தப்படுகின்றன.
கடல் வாழ் உயிரினங்கள் எழுப்பும் ஒலி குறித்து ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு
கடல் வாழ் உயிரினங்கள் கடலில் பிரயாணிக்கும் பொழுது தங்களுக்குள் தொடர்பு ஏற்படுத்தி கொள்வதற்கு சப்தத்தை எழுப்பும். உதாரணமாக, சில திமிங்கல வகைகள் முனங்குவது போலவும், கத்துவது போலவும் ஒலியெழுப்பி ஒன்றுடன் ஒன்று தொடர்பு ஏற்படுத்தி கொள்வது வழக்கம். கடல் பரப்பில் மனிதனின் தாக்கம் பல வருடங்களாக அதிகரித்துள்ள நிலையில், அதனால் கடல் வாழ் உயிரினங்களின் தகவல் தொடர்பில் ஏற்படும் பாதிப்பு குறித்து கடல் ஆராய்ச்சியாளர்கள் நீண்ட காலமாக ஆய்வு செய்து வருகின்றனர். தற்போது, இது பற்றி வரும் ஆகஸ்ட் 30 மற்றும் செப்டம்பர் 01 ஆகிய தினங்களில் பாரிஸ் நகரில் அமைந்த யுனெஸ்கோ அமைப்பின் கலந்தாய்வு கூட்டத்தில் விரிவாக விவாதம் நடத்தப்படும் என ஐ.நா. கழகம் தெரிவித்துள்ளது. 21.8.2011 10.20 PM
தலைமுடிக்கு ஜெல் பயன்படுத்திய பழங்கால எகிப்தியர்கள்: ஆய்வில் தகவல்
இங்கிலாந்து நாட்டிலுள்ள மான்செஸ்டர் பல்கலைகழகத்தில் தொல்லியல் துறை நிபுணரான நடாலி மேக்கிரீஷ் என்பவர் தலைமையில் எகிப்து நாட்டின் மம்மிகள் பற்றி ஆய்வு மேற்கொண்டனர். அவர்களின் ஆய்விற்கு எடுத்து கொள்ளப்பட்ட 18 மம்மிகளில் பெரும்பாலானவை கிரேக்க மற்றும் ரோமானிய காலத்தின்படி 2,300 வருடங்களுக்கு முற்பட்டவை. அதில் மிக பழமையான மம்மியின் வயது 3,500 ஆகும். இந்த மம்மிகளில் ஆண், பெண் என்று 4 வயது முதல் 58 வயது வரையிலானவர்கள் அடங்குவர். மைக்ரோஸ்கோபி முறையில் ஒளி மற்றும் எலக்ட்ரான்களை பயன்படுத்தி ஆராய்ந்ததில் 9 மம்மிகளின் தலை முடியில் கொழுப்பு போன்ற பொருள் பூசப்பட்டு இருந்தது. ஆய்வில், அது பால்மிடிக் மற்றும் ஸ்டியரிக் வகையை சேர்ந்த கொழுப்பு அமிலங்கள் என தெரிய வந்தது. ஜெல் வடிவில் பயன்படுத்தப்பட்ட அவை எதிலிருந்து எடுக்கப்பட்டது என்பது சரிவர தெரியவில்லை. எனினும் தற்போது, எகிப்து நாட்டவர்கள் பழங்காலத்திலேயே தங்கள் தலைமுடியினை அழகாக பராமரித்து வந்துள்ளனர் என்பதும் மம்மிகள் உருவாக்கத்திலும் அந்நடைமுறை பின்பற்றப்பட்டுள்ளது என்பதும் ஆய்வின் வழியாக தெரிய வந்துள்ளது.
ஜிப்பான்கள் தாவிக்குதிக்கும் ரகசியம்
குரங்குகள் பலவிதம். ஏப் இனத்தை சேர்ந்த ஜிப்பான் என்பது ஒரு வகை குரங்கு. இவற்றின் கைகள் வெள்ளையாக இருப்பதனால் இது வெள்ளைக்கை ஜிப்பான் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஜிப்பான்கள் தரையிலிருந்து மேலெழும்பி சுமார் 3 மீட்டர் உயரம் தாவிக்குதிக்கும் திறன் பெற்றது. மனிதர்களுக்கு உடம்பில் 11 சதவீதம் கைகளின் எடை. ஆனால், ஜிப்பான்களுக்கு இது 17 சதவீதமாம். எனவே, தங்களது பலம் வாய்ந்த கைகளை அசைத்து, வீசி ஒரு அசுர பலத்தை ஏற்படுத்தி இவை தாவிக்குதிக்கின்றன. அப்படி செய்யும் போது அவற்றின் உடல் எடையின் புவி மையம் கைகளுக்கு வந்து விடுகிறதாம். அதுவே இவை இவ்வளவு உயரம் தாவிக்குதிப்பதற்கு தேவையான சக்தியை தருகிறது என்கின்றனர் இந்த ஆய்வாளர்கள். ஃப்ளீ என்பது ஒரு வகையான ஒட்டுண்ணிகள். இவை 1.5 மில்லி மீட்டரிலிருந்து 3.3 மில்லி மீட்டர் நீளம் வரை வளரக்கூடியவை. ஆனால், ஆச்சரியமாக இவை தங்களது உடலின் நீளத்தை விட 200 மடங்கு தூரத்தை அதாவது, 18 செ மீ உயரத்தை அல்லது 33 செ மீ நீளத்தை, ஒரே தாவலில் தாவி விடும். மிக அதிக உயரம் துள்ளிக்குதிக்கும் உயிரினம் இது தான். பொதுவாக நீண்ட தூரம் தாவிக்குதிக்கும் பிற உயிரினங்கள் வெட்டுக்கிளி மற்றும் ஃப்ளீ. ஆனால், இவை தாவிக்குதிப்பதற்கும் இந்த ஜிப்பான்கள் தாவிக்குதிப்பதற்கும் நிறைய வித்தியாசமிருப்பதாக இவற்றை ஆராய்ந்த விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
வெளவால்களை பற்றிய ஒரு ருசிகர ஆராய்ச்சி
வெளவால்கள் எவ்வாறு திசைகளை கண்டுபிடித்து பறக்கின்றன என்பதை கண்டறிய ஒரு ஜி.பி.எஸ். கருவியை ஜெருஸலம் பல்கலை கழக விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர். தங்களது இலக்குகளை திறம்பட நிர்ணயம் செய்வதில் வீட்டுப்புறாக்களை விட பழ வெளவால்கள் திறமையானவை என இவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
எகிப்திலுள்ள பழ வெளவால்கள், மலைகள் மற்றும் மக்கள் குடியிருப்புக்களில் தெரியும் வெளிச்சம் போன்றவற்றை அடையாளமாக வைத்தே வேறிடத்துக்கு செல்லவோ அல்லது மீண்டும் அதே இடத்துக்கு திரும்பி வரவோ செய்கின்றனவாம். வெளிச்சம் இல்லாத காலங்களில் அவை ஏதோ ஒரு உள்ளுணர்வின் அடிப்படையில் தங்களது இலக்குகளை மிக துல்லியமாக கணிக்கும் ஆற்றல் பெற்றவை என இந்த ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
சில வெளவால்களின் மீது ஒரு ஜி.பி.எஸ் கருவியை இணைத்து அவற்றை ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து பறக்க விட்டார்கள். அவை சுமார் 25 கிலோமீட்டர் தூரத்திலுள்ள ஒரு பழ மரத்திற்கு பறந்து சென்று மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே வந்து சேர்ந்தன. அதிசயமாக, அதே போன்ற பழ மரங்கள் வெளவால்கள் பறந்து சென்ற வழியில் வெகு அருகில் இருந்தாலும் அவை தாங்கள் வழக்கமாக செல்லும் ஒரு குறிப்பிட்ட மரத்திற்கே சென்று வந்தது தெரிய வந்தது.
இன்னும் சுவாரசியமாக, பட்டினியாய் சிலவற்றையும் இறையெடுத்த சில வெளவால்களையும் தங்களது இருப்பிடத்தைவிட்டு வெகு தொலைவுக்கு கொண்டு சென்று பறக்க விட்ட போது, இறையெடுத்தவை தங்களது சரியான இருப்பிடத்துக்கும், பட்டினியாய் இருந்தவை வழக்கமாக செல்லும் பழ மரங்களுக்கு சென்று பின்னர் தங்களது இருப்பிடத்துக்கு திரும்பியதும் கண்டுபிடிக்கப்பட்டது.
http://www.dailythanthi.com/FlashNews/science.html
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
![அறிவியல் செய்திகள் -விண்வெளி வரலாற்றில் ஓர் அரிய நிகழ்வு 1357389](https://2img.net/r/ihimg/scaled/thumb/217/1357389.jpg)
![அறிவியல் செய்திகள் -விண்வெளி வரலாற்றில் ஓர் அரிய நிகழ்வு 59010615](https://2img.net/r/ihimg/scaled/thumb/689/59010615.jpg)
![அறிவியல் செய்திகள் -விண்வெளி வரலாற்றில் ஓர் அரிய நிகழ்வு Images3ijf](https://2img.net/r/ihimg/scaled/thumb/580/images3ijf.jpg)
![அறிவியல் செய்திகள் -விண்வெளி வரலாற்றில் ஓர் அரிய நிகழ்வு Images4px](https://2img.net/r/ihimg/scaled/thumb/856/images4px.jpg)
கேசவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
Re: அறிவியல் செய்திகள் -விண்வெளி வரலாற்றில் ஓர் அரிய நிகழ்வு
நல்ல தகவல்கள் கேசவன்
ஒவ்வொரு தலைப்பையும் ஒரு பகுதியாக பிரித்து படியுங்கள் இன்னும் நன்றாக படிபப்வர்களுக்கு புரியும்
ஒவ்வொரு தலைப்பையும் ஒரு பகுதியாக பிரித்து படியுங்கள் இன்னும் நன்றாக படிபப்வர்களுக்கு புரியும்
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» நட்சத்திரத்தை விழுங்கிய அதிக சக்தி வாய்ந்த கருந்துளை: விண்வெளி வரலாற்றில் ஓர் அரிய நிகழ்வு
» பூமிக்கு மிக அருகில் வரும் செவ்வாய் : நாளை வானில் அரிய நிகழ்வு
» அண்டார்டிகாவில் 315 பில்லியன் டன் ராட்சத பனிப்பாறை உடைந்தது; 50 ஆண்டுகளில் இல்லாத அரிய நிகழ்வு!
» RADIAN IAS ACADEMY வெளியிட்ட CCSEIV நடப்பு நிகழ்வு, கணிதம், சமூக அறிவியல் முழு தேர்வு
» அறிவுக்குச் சில தகவல்கள்
» பூமிக்கு மிக அருகில் வரும் செவ்வாய் : நாளை வானில் அரிய நிகழ்வு
» அண்டார்டிகாவில் 315 பில்லியன் டன் ராட்சத பனிப்பாறை உடைந்தது; 50 ஆண்டுகளில் இல்லாத அரிய நிகழ்வு!
» RADIAN IAS ACADEMY வெளியிட்ட CCSEIV நடப்பு நிகழ்வு, கணிதம், சமூக அறிவியல் முழு தேர்வு
» அறிவுக்குச் சில தகவல்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|