ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்நாட்டில் முதல் முறையாக கண்பார்வையற்றவர் தலைமை ஆசிரியராக நியமனம்

+2
Dr.சுந்தரராஜ் தயாளன்
இளமாறன்
6 posters

Go down

தமிழ்நாட்டில் முதல் முறையாக கண்பார்வையற்றவர் தலைமை ஆசிரியராக நியமனம் Empty தமிழ்நாட்டில் முதல் முறையாக கண்பார்வையற்றவர் தலைமை ஆசிரியராக நியமனம்

Post by இளமாறன் Sun Dec 04, 2011 6:50 pm

Print | E-mail
ஞாயிற்றுக்கிழமை, 4, டிசம்பர் 2011 (17:59 IST)



தமிழ்நாட்டில் முதல் முறையாக
கண்பார்வையற்றவர் தலைமை ஆசிரியராக நியமனம்

காஞ்சிபுரம் மாவட்டம் புத்தேரி கிராமத்தை சேர்ந்தவர் மனோகரன். இவர் 5 வயதில் கண்பார்வை இழந்தார். தனது 8-வது வயதில் பூந்தமல்லி அரசு பார்வையற்றறோர் பள்ளியில் சேர்ந்து 11-ம் வகுப்பு வரை படித்தார். பின்னர் சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் புதுமுக வகுப்பு, பி.ஏ. ஆங்கிலம் மற்றும் எம்.ஏ. ஆங்கிலம் படித்து தேர்ச்சி பெற்றார்.

ராயப்பேட்டை மெஸ்டன் கல்வியியல் கல்லூரியில் பி.எட் பட்டம் பெற்றார். அஞ்சல்வழி கல்வி மூலமாக எம்.எட் மற்றும் எம்.பில் பட்டங்களை பெற்றார் பார்வையற்ற மாணவர்களுக்காக பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கம் என்ற அமைப்பு 1981-ல் தொடங்கப்பட்ட போது அதன் நிறுவன உறுப்பினர்களில் ஒருவராகவும், சங்கத்தின் தலைவராகவும் சேவை புரிந்துள்ளார்.

பார்வையற்ற ஆசிரியர் சங்கத்தில் 2 முறை மாநில தலைவராக இருந்துள்ளார். 1984-ல் முதுகலை ஆசிரியராக பணிநியமனம் இவருக்கு வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து 3.12.1984 அன்று சேலம் மாவட்டம் மேட்டூர் அணை அரசு மேல்நிலைப்பள்ளியில் முதுகலை ஆங்கிலம் ஆசிரியராக 4 ஆண்டுகள் பணியாற்றினார்.

பின்னர் திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கத்தில் உள்ள பள்ளியில் 18 ஆண்டுகளும், காஞ்சீபுரம் மாவட்டம் அய்யங்கார்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 5 ஆண்டுகளும் முதுநிலை ஆங்கில ஆசிரியராக பணியாற்றினார்.

பின்னர் அதே பள்ளியில் உதவி தலைமை ஆசிரியராக இருந்தார். தற்போது அரக்கோணம் தாலுகா மேலபுலம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு தலைமை ஆசிரியராக பதிவு உயர்வு பெற்றுள்ளார்.

இதன் மூலம் தமிழ் நாட்டின் முதல் பார்வையற்ற தலைமை ஆசிரியராக பொறுப்பெற்றுள்ளார். இவர் தமிழ்நாடு தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட துறை தேர்வுகள் எழுதி தேர்ச்சி பெற்றவர்.


இது குறித்து தலைமை ஆசிரியர் மனோகரன், ‘’நான் பொறுப்பெற்று இருக்கும் பள்ளியில் போது தேர்வுகளில் மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை நூற்றுக்கு நூறு ஆக்க வேண்டும் என்பதே என் லட்சியம்’’ என்றார்.

நக்கீரன்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





தமிழ்நாட்டில் முதல் முறையாக கண்பார்வையற்றவர் தலைமை ஆசிரியராக நியமனம் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

தமிழ்நாட்டில் முதல் முறையாக கண்பார்வையற்றவர் தலைமை ஆசிரியராக நியமனம் Empty Re: தமிழ்நாட்டில் முதல் முறையாக கண்பார்வையற்றவர் தலைமை ஆசிரியராக நியமனம்

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Sun Dec 04, 2011 6:59 pm

உண்மையிலே அவரை மிகவும் பாராட்டவேண்டும் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

தமிழ்நாட்டில் முதல் முறையாக கண்பார்வையற்றவர் தலைமை ஆசிரியராக நியமனம் Empty Re: தமிழ்நாட்டில் முதல் முறையாக கண்பார்வையற்றவர் தலைமை ஆசிரியராக நியமனம்

Post by இளமாறன் Sun Dec 04, 2011 7:06 pm

அவர் தன்னம்பிக்கை மற்றும் முன்ன்ர வைக்கும் உணர்வுகள் எல்லா வற்றையும் நாம் கற்றுக்கொள்ள வேண்டும


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





தமிழ்நாட்டில் முதல் முறையாக கண்பார்வையற்றவர் தலைமை ஆசிரியராக நியமனம் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

தமிழ்நாட்டில் முதல் முறையாக கண்பார்வையற்றவர் தலைமை ஆசிரியராக நியமனம் Empty குறை தடையல்ல: தமிழகத்தின் முதல் பார்வையற்ற தலைமை ஆசிரியர் நிரூபணம்

Post by kitcha Mon Dec 05, 2011 1:02 pm

வேலூர்: மனோகரன் என்னும் கண் பார்வையற்றவர் தமிழகத்தி்ன் முதல் தலைமை ஆசிரியராக பொறுப்பேற்றுள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் புத்தேரி கிராமத்தைச் சேர்ந்தவர் மனோகரன். 5 வயதில் கண் பார்வையை இழந்த அவர் 8வது வயதில் பூந்தமல்லி அரசு பார்வையற்றறோர் பள்ளியில் சேர்ந்து அங்கேயே 11ம் வகுப்பு வரை படித்தார். பின்னர் சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் புதுமுக வகுப்பு, பி.ஏ. ஆங்கிலம் மற்றும் எம்.ஏ. ஆங்கிலம் படித்தார்.

இதையடுத்து ராயப்பேட்டை மெஸ்டன் கல்வியியல் கல்லூரியில் பி.எட். பட்டமும், அஞ்சல்வழி கல்வி மூலமாக எம்.எட் மற்றும் எம்.பில் பட்டங்களும் பெற்றார். பார்வையற்ற மாணவர்களுக்காக பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கம் என்ற அமைப்பு 198ம் ஆண்டு துவங்கப்பட்டது. அப்போது அந்த அமைப்பின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவராகவும், சங்கத்தின் தலைவராகவும் இருந்தார்.

பார்வையற்ற ஆசிரியர் சங்கத்தின் மாநில தலைவராக 2 முறை இருந்துள்ளார். கடந்த 1984ம் ஆண்டு அவருக்கு முதுகலை ஆசிரியராக பணிநியமனம் வழங்கப்பட்டது. இதையடுத்து 3.12.1984 அன்று சேலம் மாவட்டம் மேட்டூர் அணை அரசு மேல்நிலைப்பள்ளியில் முதுகலை ஆங்கிலம் ஆசிரியராக சேர்ந்து அங்கேயே 4 ஆண்டுகள் பணியாற்றினார்.

இதைத் தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கத்தில் உள்ள பள்ளியில் 18 ஆண்டுகளும், காஞ்சீபுரம் மாவட்டம் அய்யங்கார்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 5 ஆண்டுகளும் பணியாற்றினார். பின்னர் அதே பள்ளியில் உதவி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்றார். தற்போது அரக்கோணம் தாலுகா மேலபுலம் அரசு மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியராக பதவியேற்றுள்ளார்.

தமிழகத்தில் பார்வையற்ற ஒருவர் தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட்டிருப்பது இது தான் முதல் முறை ஆகும். தமிழ்நாடு தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட துறை தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து அவர் கூறுகையில், நான் தலைமை ஆசிரியராக பொறுப்பேற்றிருக்கும் இந்த பள்ளியில் பொதுத் தேர்வுகளில் மாணவர்கள் 100 சதவீத தேர்ச்சி அடைய வேண்டும் என்பது தான் என் லட்சியம் என்றார்.

தட்ஸ்தமிழ்


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,தமிழ்நாட்டில் முதல் முறையாக கண்பார்வையற்றவர் தலைமை ஆசிரியராக நியமனம் Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

தமிழ்நாட்டில் முதல் முறையாக கண்பார்வையற்றவர் தலைமை ஆசிரியராக நியமனம் Empty Re: தமிழ்நாட்டில் முதல் முறையாக கண்பார்வையற்றவர் தலைமை ஆசிரியராக நியமனம்

Post by உதயசுதா Mon Dec 05, 2011 1:45 pm

உயர்வதற்கு ஊனம் தடை இல்லை என்று நிரூபித்த இவருக்கு என் தலை தாழ்ந்த வணக்கங்கள்


தமிழ்நாட்டில் முதல் முறையாக கண்பார்வையற்றவர் தலைமை ஆசிரியராக நியமனம் Uதமிழ்நாட்டில் முதல் முறையாக கண்பார்வையற்றவர் தலைமை ஆசிரியராக நியமனம் Dதமிழ்நாட்டில் முதல் முறையாக கண்பார்வையற்றவர் தலைமை ஆசிரியராக நியமனம் Aதமிழ்நாட்டில் முதல் முறையாக கண்பார்வையற்றவர் தலைமை ஆசிரியராக நியமனம் Yதமிழ்நாட்டில் முதல் முறையாக கண்பார்வையற்றவர் தலைமை ஆசிரியராக நியமனம் Aதமிழ்நாட்டில் முதல் முறையாக கண்பார்வையற்றவர் தலைமை ஆசிரியராக நியமனம் Sதமிழ்நாட்டில் முதல் முறையாக கண்பார்வையற்றவர் தலைமை ஆசிரியராக நியமனம் Uதமிழ்நாட்டில் முதல் முறையாக கண்பார்வையற்றவர் தலைமை ஆசிரியராக நியமனம் Dதமிழ்நாட்டில் முதல் முறையாக கண்பார்வையற்றவர் தலைமை ஆசிரியராக நியமனம் Hதமிழ்நாட்டில் முதல் முறையாக கண்பார்வையற்றவர் தலைமை ஆசிரியராக நியமனம் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

தமிழ்நாட்டில் முதல் முறையாக கண்பார்வையற்றவர் தலைமை ஆசிரியராக நியமனம் Empty Re: தமிழ்நாட்டில் முதல் முறையாக கண்பார்வையற்றவர் தலைமை ஆசிரியராக நியமனம்

Post by பேகன் Mon Dec 05, 2011 2:14 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி
பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Back to top Go down

தமிழ்நாட்டில் முதல் முறையாக கண்பார்வையற்றவர் தலைமை ஆசிரியராக நியமனம் Empty Re: தமிழ்நாட்டில் முதல் முறையாக கண்பார்வையற்றவர் தலைமை ஆசிரியராக நியமனம்

Post by sshanthi Mon Dec 05, 2011 5:03 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Back to top Go down

தமிழ்நாட்டில் முதல் முறையாக கண்பார்வையற்றவர் தலைமை ஆசிரியராக நியமனம் Empty Re: தமிழ்நாட்டில் முதல் முறையாக கண்பார்வையற்றவர் தலைமை ஆசிரியராக நியமனம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» வடகொரியாவில் முதல் முறையாக வெளியுறவு மந்திரியாக பெண் நியமனம்
» இந்தியாவில் முதல் முறையாக கல்லூரி முதல்வராக திருநங்கை நியமனம்!
» உலகத்திலேயே முதல் முறையாக தேவாலயத்தின் ஆயர் பணிக்கு திருநங்கை நியமனம் (சி எஸ் ஐ )
» முதல் முறையாக பெண் நியமனம்: அமெரிக்க தூதரானார் சவுதி இளவரசி
» உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு மத்திய அரசின் உதவி சொலிசிட்டர் ஜெனரலாக முதல் முறையாக பெண் வழக்கறிஞர் நியமனம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum