ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

Top posting users this week
ayyasamy ram
விசுவரூபம் எடுக்கும் முல்லைப் பெரியாறு பிரச்சினை Poll_c10விசுவரூபம் எடுக்கும் முல்லைப் பெரியாறு பிரச்சினை Poll_m10விசுவரூபம் எடுக்கும் முல்லைப் பெரியாறு பிரச்சினை Poll_c10 
heezulia
விசுவரூபம் எடுக்கும் முல்லைப் பெரியாறு பிரச்சினை Poll_c10விசுவரூபம் எடுக்கும் முல்லைப் பெரியாறு பிரச்சினை Poll_m10விசுவரூபம் எடுக்கும் முல்லைப் பெரியாறு பிரச்சினை Poll_c10 
mohamed nizamudeen
விசுவரூபம் எடுக்கும் முல்லைப் பெரியாறு பிரச்சினை Poll_c10விசுவரூபம் எடுக்கும் முல்லைப் பெரியாறு பிரச்சினை Poll_m10விசுவரூபம் எடுக்கும் முல்லைப் பெரியாறு பிரச்சினை Poll_c10 
VENKUSADAS
விசுவரூபம் எடுக்கும் முல்லைப் பெரியாறு பிரச்சினை Poll_c10விசுவரூபம் எடுக்கும் முல்லைப் பெரியாறு பிரச்சினை Poll_m10விசுவரூபம் எடுக்கும் முல்லைப் பெரியாறு பிரச்சினை Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
விசுவரூபம் எடுக்கும் முல்லைப் பெரியாறு பிரச்சினை Poll_c10விசுவரூபம் எடுக்கும் முல்லைப் பெரியாறு பிரச்சினை Poll_m10விசுவரூபம் எடுக்கும் முல்லைப் பெரியாறு பிரச்சினை Poll_c10 
heezulia
விசுவரூபம் எடுக்கும் முல்லைப் பெரியாறு பிரச்சினை Poll_c10விசுவரூபம் எடுக்கும் முல்லைப் பெரியாறு பிரச்சினை Poll_m10விசுவரூபம் எடுக்கும் முல்லைப் பெரியாறு பிரச்சினை Poll_c10 
mohamed nizamudeen
விசுவரூபம் எடுக்கும் முல்லைப் பெரியாறு பிரச்சினை Poll_c10விசுவரூபம் எடுக்கும் முல்லைப் பெரியாறு பிரச்சினை Poll_m10விசுவரூபம் எடுக்கும் முல்லைப் பெரியாறு பிரச்சினை Poll_c10 
VENKUSADAS
விசுவரூபம் எடுக்கும் முல்லைப் பெரியாறு பிரச்சினை Poll_c10விசுவரூபம் எடுக்கும் முல்லைப் பெரியாறு பிரச்சினை Poll_m10விசுவரூபம் எடுக்கும் முல்லைப் பெரியாறு பிரச்சினை Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

விசுவரூபம் எடுக்கும் முல்லைப் பெரியாறு பிரச்சினை

2 posters

Go down

விசுவரூபம் எடுக்கும் முல்லைப் பெரியாறு பிரச்சினை Empty விசுவரூபம் எடுக்கும் முல்லைப் பெரியாறு பிரச்சினை

Post by சிவா Sun Dec 04, 2011 12:24 pm

முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக கேரளாவுக்கும், தமிழ்நாட்டுக்கும் நீண்ட காலமாக இருந்து வரும் பிரச்சினை இப்போது மிகவும் தீவிரம் அடைந்து உள்ளது. 116 ஆண்டு பழமை வாய்ந்த இந்த அணை நல்ல நிலையில் வலுவாக இருந்த போதிலும், அது உடைந்து விடும் ஆபத்து இருப்பதாகவும், எனவே புதிய அணை கட்ட வேண்டும் என்றும் கேரளா தேவை இல்லாமல் பீதியை கிளப்பி வருவதால் பிரச்சினை விசுவரூபம் எடுத்து உள்ளது.

சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கும் முல்லைப் பெரியாறு அணை பற்றிய விவரங்களை பார்ப்போம்.

மன்னர் சேதுபதியின் முயற்சி

மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி கேரளாவில் மேற்கு நோக்கி பாய்ந்து அரபிக்கடலில் கலக்கும் பெரியாற்றின் குறுக்கே கட்டப்பட்டு உள்ளது முல்லைப் பெரியாறு அணை.

அதாவது முல்லை என்ற நதியும், பெரியார் என்ற நதியும் சங்கமிக்கும் இடத்தில் தமிழகம்-கேரள எல்லையில், அதாவது கேரளாவில் இடுக்கி மாவட்ட எல்லையில் அமைந்துள்ளது இந்த அணை. இது கட்டப்பட்ட இடம் கேரளாவுக்கும், அணை தமிழ்நாட்டுக்கும் உரியது. தமிழக பொதுப்பணித்துறை இந்த அணையை பராமரித்து வருகிறது.

1798-ம் ஆண்டு ராமநாதபுரம் மன்னர் சேதுபதி முல்லையாறு, பெரியாறு ஆகிய நதிகளை இணைத்து அணை கட்டி தண்ணீர் முழுவதையும் மதுரை ராமநாதபுரம் பகுதிகளுக்கு கொண்டுவர திட்டமிட்டார். ஆனால் போதிய நிதி வசதி இல்லாததால் அணை கட்டும் திட்டம் கைவிடப்பட்டது.

பென்னி குயிக்

அதன்பிறகு முல்லைப் பெரியாறு அணைக்கு வித்திட்டவர் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இந்தியாவுக்கு ராணுவ என்ஜினீயராக வந்த கர்னல் ஜான் பென்னி குயிக் ஆவார். மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி மேற்கு நோக்கி பாய்ந்து வீணாக கடலில் சென்று கலப்பதை பார்த்த அவர், அதன் குறுக்கே ஓர் அணையை கட்டி வடக்கு நோக்கி திருப்பி விட்டால், தமிழ்நாட்டில் வறண்டு கிடக்கும் நிலங்கள் விளைநிலங்களாக மாறிவிடும் என்ற தொலை நோக்குடன் திட்டமிட்டார்.

விசுவரூபம் எடுக்கும் முல்லைப் பெரியாறு பிரச்சினை JOHNPENNYCUICK

அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு அணையை கட்டுவதற்கு ஆங்கிலேய அரசின் அனுமதியையும் பெற்றார். அதன்படி 155 அடி உயரத்தில் அணையை கட்டுவது என்று தீர்மானிக்கப்பட்டு திட்ட அறிக்கை தயார் ஆனது.

இந்த திட்டத்தின் படி, அணையில் தேங்கும் நீரை எதிர்ப்புற திசையில் இருந்து 6,500 அடி நீள வாய்க்கால் வழியே கிழக்கு நோக்கி கொண்டு வந்து, பின்னர் மலையை கடக்க மலையின் உள்ளே 5,900 அடி நீளத்துக்கு சுரங்கம் அமைத்து நீரை வைரவன் ஆற்றில் கலக்கச் செய்வது என்றும், பின்னர் அதை சுருளி ஆற்றில் கலந்து வைகை ஆற்றுடன் இணைப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.

சொந்த பணத்தில் அணை கட்டினார்

இதன் அடிப்படையில், ரூ.75 லட்சம் திட்ட மதிப்பீட்டில் 1893-ம் ஆண்டு அப்போதைய சென்னை மாகாண கவர்னர் வென்லாக் முன்னிலையில் அணையை கட்டுவதற்கான பணிகள் தொடங்கின. இங்கிலாந்து ராணுவத்தின் கட்டுமான துறை அணை கட்டும் பணியை மேற்கொண்டது. அடர்ந்த காடு, விஷப்பூச்சிகள், காட்டு மிருகங்கள், கடும் மழை, திடீரென பெருக்கெடுக்கும் காட்டாற்று வெள்ளம் போன்ற பல்வேறு இடைïறுகளை சமாளித்து அணை பாதி கட்டப்பட்டு இருந்த நிலையில், தொடர்ந்து பெய்த மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் அணை அடித்துச் செல்லப்பட்டது.

இதனால் பென்னி குயிக் மிகுந்த வேதனை அடைந்தார். ஆனால் அணைக்கு மேலும் நிதி ஒதுக்க முடியாது என்று ஆங்கிலேய அரசு கையை விரித்து விட்டது. என்றாலும் பென்னி குயிக் மனம் தளராமல் இங்கிலாந்துக்கு திரும்பிச் சென்று தனது குடும்ப சொத்துகள் அனைத்தையும் விற்று, அதன் மூலம் கிடைத்த பணத்தை கொண்டு வந்து முல்லைப் பெரியாறு அணையை கட்டி முடித்தார்.

3 ஆண்டுகள் நடைபெற்ற அணையின் கட்டுமான பணிகள் 1895-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நிறைவடைந்தது. அணையை கவர்னர் வென்லாக் திறந்துவைத்தார்.

நீர்மின் நிலையம்

முல்லைப் பெரியாறு அணையில் இருந்து வெளியேறும் தண்ணீர் வைரவன், சுருளி ஆறுகளில் கலந்து 60 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து வைகை அணையை அடைகிறது.

1,200 அடி நீளம் மற்றும் 155 அடி உயரம் கொண்ட முல்லைப் பெரியாறு அணையில் 15.662 டி.எம்.சி. (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கன அடி) தண்ணீரை தேக்கி வைக்க முடியும். ஆனால் தற்போது 136 அடி உயரத்துக்கு தான் தண்ணீர் தேக்கப்படுகிறது. அதாவது 10.563 டி.எம்.சி. தண்ணீர்தான் தேக்கி வைக்கப்படுகிறது. (இந்த அணையில் அதிகபட்சமாக 1943-ம் ஆண்டு ஜனவரி 3-ந் தேதி 154.8 அடி உயரத்துக்கு தண்ணீர் தேக்கிவைக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது ஆகும்.)

பெரியாறு தண்ணீர் தமிழ்நாட்டுக்குள் நுழையும் இடத்தில் மின் உற்பத்தி செய்வதற்கு ஒரு திட்டம் வகுக்கப்பட்டது. 1970-ம் ஆண்டு கேரள அரசுடன் தமிழக அரசு செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி, அந்த இடத்தில் 140 மெகாவாட் திறன் கொண்ட மின்உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டது. இது தமிழகத்துக்கு வரும் நீரை கொண்டு உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் ஆகும்.

விவசாயம்

அந்த அணையில் இருந்து முல்லை ஆறாக வரும் நீர் தேனி மாவட்டத்தின் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கு பயன்படுகிறது. முல்லை ஆற்றின் வழியில் உள்ள கூடலூர், கம்பம், சின்னமனூர், தேனி மற்றும் பல ஊர்களின் குடிநீர் தேவையையும் பூர்த்தி செய்கிறது. இந்த முல்லை ஆறு தேனி நகருக்கு கிழக்கு பகுதியில்தான் வைகை ஆற்றுடன் கலந்து வைகை அணையின் முக்கிய நீர் ஆதாரமாகவும் விளங்குகிறது.

மதுரை, திண்டுக்கல் மாவட்ட பகுதிகளின் விவசாய தேவைகளை நிறைவேற்றுவதற்காக காமராஜர் ஆட்சி காலத்தில் சிமெண்டால் கட்டப்பட்டது முல்லைப் பெரியாறு பிரதான கால்வாய். முல்லைப் பெரியாறு அணையில் இருந்து வைகை அணைக்கு பயணமாகும் தண்ணீர் திண்டுக்கல் மாவட்டம் அணைப்பட்டி கிராமம் அருகே வைகை ஆற்றில் இருந்து பிரித்து விடப்படுகிறது.

இந்த கால்வாய் அதன்பிறகு மதுரை மாவட்ட எல்லைக்குள் நுழைந்து மட்டப்பாறை, வாடிப்பட்டி, அலங்காநல்லூர், தள்ளந்திரி ஆகிய ஊர்களை கடந்து மேலூர் வரை செல்கிறது. இந்த கால்வாய் மூலம் கிடைக்கும் நீர் வசதியால் நெல், கரும்பு, தென்னை, வாழை போன்றவை பயிர் செய்யப்படுகின்றன.

2 லட்சத்து 17 ஆயிரம் ஏக்கர் பாசனம்

முல்லைப் பெரியாறு அணையினால் தமிழ்நாட்டில் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 17 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. மேலும் மதுரை நகர மக்களின் குடிநீர் தேவையையும் பூர்த்தி செய்கிறது. மேலும் ஆண்டிப்பட்டி, சேடப்பட்டி, உசிலம்பட்டி பகுதிகளில் உள்ள கிராமங்களுக்கான குடிநீர் தேவையையும் நிறைவேற்றி வருகிறது.

தனது சொந்த முயற்சியால், வறண்டு கிடந்த தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு விவசாயத்துக்கு தேவையான நீர் ஆதாரத்தை ஏற்படுத்தி கொடுத்த பென்னி குயிக்கை தேனி மாவட்ட மக்கள் கடவுளுக்கு நிகராக கருதி வணங்குகிறார்கள். சில கோவில்களில் அவரது உருவப்படமும் வைக்கப்பட்டு உள்ளது. பயிர் செய்யும் போதும், அறுவடையின் போதும் மக்கள் பென்னி குயிக் உருவப்படத்தை வணங்கிவிட்டு பணிகளை தொடங்கும் நடைமுறையும் சில பகுதிகளில் உள்ளது. மார்க்கேயன்பட்டி, அம்மாபட்டி, பாளையம் போன்ற பல கிராமங்களில் பென்னி குயிக் பெயரில் பேரவைகளும் அமைக்கப்பட்டு உள்ளது.

தங்கள் வாழ்வாதாரத்துக்கு வழிவகுத்த ஆங்கிலேயரான பென்னி குயிக்குக்கு தமிழர்கள் காட்டும் நன்றி இது.

----

999 ஆண்டு ஒப்பந்தம்

முல்லைப் பெரியாறு அணை கட்டப்படும் பகுதி திருவாங்கூர் சமஸ்தானத்துடன் (தற்போதைய கேரளா) இருந்ததால் அந்த சமஸ்தானத்துக்கும், சென்னை மாகாணத்துக்கும் (தற்போதைய தமிழ்நாடு) அணை அமையும் இடம், லாபப் பங்கீடு தொடர்பாக 1886-ம் ஆண்டு அக்டோபர் 26-ந் தேதி ஒரு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. அதன்படி அணையில் தண்ணீர் தேங்கும் பகுதியான 8 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு மற்றும் அணை கட்டுவதற்கும் பிற பணிகளுக்குமாக ஆயிரம் ஏக்கர் ஆக மொத்தம் 8,100 ஏக்கருக்கு குத்தகை பணம் செலுத்த வேண்டும் என்பது 7 அம்சங்கள் அந்த ஒப்பந்தத்தில் இடம் பெற்றன.

விசுவரூபம் எடுக்கும் முல்லைப் பெரியாறு பிரச்சினை DAMMAP03

இதற்கு தமிழகம் குத்தகை தொகையாக 1896-ல் இருந்து 1970 வரை ஏக்கருக்கு 5 ரூபாய் எனறு கொடுத்து வந்தது. 1970-ம் ஆண்டு கேரளா அந்த ஒப்பந்தத்தை திருத்தி குத்தகை தொகை ஏக்கருக்கு ரூ.30 என மாற்றி, அணையிலும் அதை சார்ந்த நீர்ப்பிடிப்பு, குளம், குட்டை போன்ற நீர்நிலைகளிலும் மீன் பிடிக்கும் உரிமையை தமிழகத்திடம் இருந்து எழுதி வாங்கிக்கொண்டது. இந்த ஒப்பந்தம் 999 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின்படி முல்லைப் பெரியாறு அணையில் இருந்து 104 அடிக்கு மேல் தேங்கும் நீர் குகை மூலம் வைகை படுகைக்கு திருப்பி விடப்படுகிறது.

தினதந்தி


விசுவரூபம் எடுக்கும் முல்லைப் பெரியாறு பிரச்சினை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

விசுவரூபம் எடுக்கும் முல்லைப் பெரியாறு பிரச்சினை Empty Re: விசுவரூபம் எடுக்கும் முல்லைப் பெரியாறு பிரச்சினை

Post by பேகன் Mon Dec 05, 2011 3:13 pm

நன்றி
பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum