Latest topics
» கருத்துப்படம் 02/07/2024by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
புதிய அணை கட்ட வலியுறுத்தி முல்லைப் பெரியாறு தமிழக மதகு பகுதியில் கேரள காங்கிரசார் ரகளை
3 posters
Page 1 of 1
புதிய அணை கட்ட வலியுறுத்தி முல்லைப் பெரியாறு தமிழக மதகு பகுதியில் கேரள காங்கிரசார் ரகளை
![புதிய அணை கட்ட வலியுறுத்தி முல்லைப் பெரியாறு தமிழக மதகு பகுதியில் கேரள காங்கிரசார் ரகளை First1204](https://2img.net/h/dailythanthi.com/images/news/20111204/first1204.jpg)
முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்ட வலியுறுத்தி முல்லை பெரியாறு அணையில் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடப்படும் மதகு பகுதியில் நேற்று கேரள இளைஞர் காங்கிரசார் போராட்டம் நடத்தினார்கள்.
அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியபோது இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 4 போலீசார் காயம் அடைந்தனர்.
புதிய அணை கோரி போராட்டம்
முல்லை பெரியாறு அணை வலுவிழந்துவிட்டதாகவும், எந்த நேரத்திலும் இடிந்துவிடும் அபாயத்தில் இருப்பதாகவும், அதனால் புதிய அணை கட்டவேண்டும் என்றும் வலியுறுத்தி கேரள மாநிலத்தில் அரசியல் கட்சியினர் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். கடந்த சில நாட்களாக இந்த போராட்டம் தீவிரம் அடைந்து உள்ளது.
தினமும் கேரள-தமிழக எல்லைப்பகுதியான குமுளி சோதனை சாவடி அருகில் பல்வேறு கட்சியினர் மறியல் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதனால் தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு செல்லும் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது.
சபரிமலைக்கு செல்லும் தமிழக அய்யப்ப பக்தர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகிறார்கள். மேலும் கேரளா இடுக்கி மாவட்டத்தில் முல்லைப் பெரியாறு புதிய அணை கோரி பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் ஊர்வலம், பேரணி, மனித சங்கிலி உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இளைஞர் காங்கிரசார் முற்றுகை
இந்த நிலையில் புதிய அணை கட்டும் கோரிக்கையை வலியுறுத்தி, அணையில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடப்படும் மதகு பகுதியில் போராட்டம் நடத்தப்படும் என்று கேரள மாநில இளைஞர் காங்கிரஸ் தரப்பில் அறிவிக்கப்பட்டது.
அணை பலவீனமாக இருப்பதால் அணையில் இருந்து தமிழகத்துக்கு செல்லும் தண்ணீரின் அளவை அதிகரிக்கும் வகையில் மதகுகளை திறந்துவிடப்போவதாகவும், அதனால் அணையில் உள்ள தண்ணீரின் நீர்மட்டம் குறையும் என்றும், அதன் காரணமாக அணை தொடர்ந்து பாதுகாப்பான நிலையில் இருக்கும் என்றும் இளைஞர் காங்கிரசார் போராட்ட அறிவிப்பின்போது பிரசாரம் செய்து வந்தனர்.
இந்த நிலையில் கேரள மாநில இளைஞர் காங்கிரசார் வட்டார செயலாளர் ரோபி என்பவரது தலைமையில் நேற்று மதியம் 12 மணியளவில் முல்லை பெரியாறு அணை தமிழக மதகு பகுதிக்கு செல்வதற்காக தேக்கடி நுழைவுவாயில் அருகே குவிந்தனர். சுமார் 300-க்கும் மேற்பட்ட காங்கிரசார் அங்கு திரண்டு வந்து தேக்கடி நுழைவுவாயில் பகுதியில் முற்றுகையிட்டதால் பரபரப்பு சூழ்ந்தது.
பயங்கர மோதல்
இதற்கிடையே போராட்டத்தின் எதிரொலியாக அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த 25-க்கும் மேற்பட்ட கேரள போலீசார் இளைஞர் காங்கிரசாரை தடுத்து நிறுத்த தயார் ஆனார்கள்.
அதற்குள் தேக்கடி நுழைவு வாயில் பகுதியில் உள்ள இரும்பு கிரில் கேட்டில் சிலர் ஏறி குதித்தனர். அப்போது அங்கு பணியில் இருந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சசிதரன் சிலரை தடுத்து நிறுத்தினார்.
இதனால் காங்கிரசாருக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு இருதரப்பினரும் மோதிக்கொண்டனர். அந்த சமயம் காங்கிரசார் சிலர் தாங்கள் கொண்டுவந்திருந்த காங்கிரஸ் கொடிகளை கட்டிய கம்புகளைக் கொண்டு போலீசார் மீது தாக்க ஆரம்பித்தனர். இதில் சப்-இன்ஸ்பெக்டர் சசிதரன் மற்றும் போலீசார் சுதாகரன், விதினசந்திரன், ஜெயதேவன் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் சசிதரன் தலையில் ரத்தக் காயம் ஏற்பட்டது.
தமிழக மதகு பகுதியில் போராட்டம்
அதற்குள் காங்கிரசார் கும்பலாக தேக்கடி நுழைவுவாயில் கதவை திறந்துவிட்டு முல்லை பெரியாறு அணையின் தமிழக மதகு பகுதிக்கு ஓடினார்கள். அங்கிருந்த சிறிய கிரில் கேட்டையும் உடைத்துவிட்டு மதகு பகுதிக்கு விறுவிறுவென ஏறிச்சென்றனர்.
பின்னர் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடப்படும் மதகுகளின் மேல் 10-க்கும் மேற்பட்டோர் ஏறி காங்கிரஸ் கொடியை நாட்டினர். மற்றவர்கள் மதகுகளின் அருகே திரண்டு நின்றிருந்தனர்.
அதன்பிறகு மதகுகளின் மேல் நின்றவாறு, `காங்கிரசுக்கு வெற்றி; கட்டவேண்டும், கட்டவேண்டும், முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்ட வேண்டும்' என்று கோஷங்களை எழுப்பினார்கள். சுமார் அரைமணிநேரத்துக்கு பிறகு போலீசார் அங்கு போராட்டம் நடத்திய இளைஞர் காங்கிரசாரை கைது செய்தனர்.
50 பேர் மீது வழக்குப்பதிவு
தாக்குதலில் காயம்பட்ட போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சசிதரன் கட்டப்பனையில் ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மற்ற 3 போலீசாரும் குமுளி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
இளைஞர் காங்கிரசார் போராட்டம் நடத்தப்போவதாக ஏற்கனவே அறிவித்து இருந்தும் தமிழக மதகு பகுதிக்கு செல்லும் பாதையில் போலீசார் மிகவும் குறைவாகவே பாதுகாப்பு பணிக்கு நியமிக்கப்பட்டு இருந்தனர். இதனால் 300-க்கும் மேற்பட்ட அளவில் வந்த காங்கிரசாரை போலீரால் தடுத்து நிறுத்தமுடியவில்லை. இந்த போராட்டத்தின் காரணமாக தேக்கடி நுழைவு வாயில் மற்றும் அணையின் தமிழக மதகு பகுதியில் 2 மணி நேரம் பரபரப்பாக இருந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக கேரள போலீசார் இளைஞர் காங்கிரசார் 50 பேர் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
தினதந்தி
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![புதிய அணை கட்ட வலியுறுத்தி முல்லைப் பெரியாறு தமிழக மதகு பகுதியில் கேரள காங்கிரசார் ரகளை Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: புதிய அணை கட்ட வலியுறுத்தி முல்லைப் பெரியாறு தமிழக மதகு பகுதியில் கேரள காங்கிரசார் ரகளை
என்று தீரூமோ இந்த அணை பிரச்சனை
இந்தியர்களுக்குள் வேறுபாடு ஏனோ
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
இந்தியர்களுக்குள் வேறுபாடு ஏனோ
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: புதிய அணை கட்ட வலியுறுத்தி முல்லைப் பெரியாறு தமிழக மதகு பகுதியில் கேரள காங்கிரசார் ரகளை
இந்த பிரச்சினை இன்னும் பெரிதாக ஆகவேண்டும் , இதை போல ஏதாவது நடந்தால் தான் ஆட்டுமந்தை போல 40 வருடதிற்கும் மேலாக திராவிடர் கட்சிகளிடம் அடிமை பட்டு கிடக்கிற தமிழர் தன்மானம் தலை நிமிரும்
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» தமிழக எல்லை அருகே ஏழு புதிய அணைகள் கட்ட கேரள அரசு திட்டம்
» முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம்: கேரள அரசு சட்டத்திற்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு
» முல்லைப் பெரியாறு பேச்சில் தமிழக அரசு பங்கேற்பில்லை!
» முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னையில் தமிழகத்தின் உரிமைகளை காத்திட வலியுறுத்தி, சென்னை மெரினா கடற்கரையில், கண்ணகி சிலை அருகே ஒன்று கூடல் நிகழ்வு மிகசிறப்பாக நடந்து முடிந்தது
» முல்லைப் பெரியாறு விவகாரத்தில் முரண்டு பிடிக்கும் கேரளா-தமிழக இளைஞர் தீக்குளிப்பு
» முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம்: கேரள அரசு சட்டத்திற்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு
» முல்லைப் பெரியாறு பேச்சில் தமிழக அரசு பங்கேற்பில்லை!
» முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னையில் தமிழகத்தின் உரிமைகளை காத்திட வலியுறுத்தி, சென்னை மெரினா கடற்கரையில், கண்ணகி சிலை அருகே ஒன்று கூடல் நிகழ்வு மிகசிறப்பாக நடந்து முடிந்தது
» முல்லைப் பெரியாறு விவகாரத்தில் முரண்டு பிடிக்கும் கேரளா-தமிழக இளைஞர் தீக்குளிப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|