புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சபரிமலை திருவாபரணம் பற்றிய சில தகவல்கள்! Poll_c10சபரிமலை திருவாபரணம் பற்றிய சில தகவல்கள்! Poll_m10சபரிமலை திருவாபரணம் பற்றிய சில தகவல்கள்! Poll_c10 
21 Posts - 66%
heezulia
சபரிமலை திருவாபரணம் பற்றிய சில தகவல்கள்! Poll_c10சபரிமலை திருவாபரணம் பற்றிய சில தகவல்கள்! Poll_m10சபரிமலை திருவாபரணம் பற்றிய சில தகவல்கள்! Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சபரிமலை திருவாபரணம் பற்றிய சில தகவல்கள்! Poll_c10சபரிமலை திருவாபரணம் பற்றிய சில தகவல்கள்! Poll_m10சபரிமலை திருவாபரணம் பற்றிய சில தகவல்கள்! Poll_c10 
63 Posts - 64%
heezulia
சபரிமலை திருவாபரணம் பற்றிய சில தகவல்கள்! Poll_c10சபரிமலை திருவாபரணம் பற்றிய சில தகவல்கள்! Poll_m10சபரிமலை திருவாபரணம் பற்றிய சில தகவல்கள்! Poll_c10 
32 Posts - 32%
mohamed nizamudeen
சபரிமலை திருவாபரணம் பற்றிய சில தகவல்கள்! Poll_c10சபரிமலை திருவாபரணம் பற்றிய சில தகவல்கள்! Poll_m10சபரிமலை திருவாபரணம் பற்றிய சில தகவல்கள்! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
சபரிமலை திருவாபரணம் பற்றிய சில தகவல்கள்! Poll_c10சபரிமலை திருவாபரணம் பற்றிய சில தகவல்கள்! Poll_m10சபரிமலை திருவாபரணம் பற்றிய சில தகவல்கள்! Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சபரிமலை திருவாபரணம் பற்றிய சில தகவல்கள்!


   
   
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sat Dec 03, 2011 8:55 am

சபரிமலையில் மகர ஸங்க்ரமண நேரத்தில், ஐயப்பனுக்குச் சார்த்துவதற்காக பந்தளம் அரண்மனையிலிருந்து திருவாபரணம் புறப்படும். வருடத்தில் 56 நாட்களுக்குத்தான் வெளியே கொண்டு வரப்படும் திருவாபரணம் வருடத்தின் மற்ற நாட்கள் முழுவதும் பந்தள அரண்மனையின் பொறுப்பில் பூட்டி வைக்கப்பட்டிருக்கும். பந்தளம் அரண்மனையில், பூஜைகளை முடித்து சபரிமலை புறப்படுவதற்காக அரசர் உட்பட அனைவரும் காத்திருப்பார்கள். வானில் கருடன் வந்து திருவாபரணத்தை வட்டமிட்ட பிறகுதான், திருவாபரண யாத்திரை புறப்படும். இந்த ஆபரணப் பெட்டியைச் சுமப்பதற்காகவே, பாரம்பரியமாகவே சில குடும்பங்கள் இருக்கின்றன. அவர்களே இந்தப் பெட்டிகளைச் சுமப்பதற்காக விரதம் இருந்து வருகிறார்கள்.

பந்தளம் அரண்மனையிலிருந்து தலைச்சுமையாகப் புறப்படும் திருவாபரண ஊர்வலத்தைக் காண, வழியெங்கும் விளக்கேற்றி சாதிமத பேதமின்றி பக்தர்கள் காத்திருந்து வரவேற்பார்கள். சுமார் மூன்று நாட்கள் காட்டுவழியில் வந்து சேர்ந்த ஆபரணம் பெரியானை வட்டத்தை அடையும்போது பரவசம் ஏற்படும். சரங்குத்தி கடந்து பதினெட்டாம் படியேறி ஆபரணம் சன்னிதானம் அடைவதைக் காண கண்கோடி வேண்டும். ஐயப்பனுக்குத் திருவாபரணம் சார்த்திக் காணக் கிடைக்கும் தரிசனம் கண நேரம் மட்டுமே கிடைக்கும் அரிதான ஒரு தரிசனம்!

அந்த ஆபரணங்களைக் குறித்து அறிய, பல பக்தர்களுக்கும் ஆர்வம் இருக்கும் அல்லவா? சுத்தமான பசுந்தங்கத்தால் ஆன இந்த ஆபரணங்கள் சபரிமலையில் கோயில் கொண்ட தர்ம சாஸ்தாவுக்காக பந்தளராஜனால் உருவாக்கப்பட்ட ஆபரணங்கள் ஆகும்.

திருவாபரணப் பெட்டி ஊர்வலமாக வரும்போது மொத்தம் மூன்று பெட்டிகளாக வரும். அவை 1. திருவாபரணப் பெட்டி, 2. வெள்ளிப் பெட்டி, 3. கொடிப்பெட்டி. இதில் திருவாபரணப் பெட்டி மட்டுமே ஐயப்பன் சன்னதியை அடையும். மற்ற இரண்டு பெட்டிகள் மாளிகைப்புறத்தம்மன் சன்னதிக்குச் சென்று விடும்.

1. திருவாபரணப் பெட்டி

ஐயப்பன் சன்னதியில் கொடுக்கப்படும் முக்கியமான திருவாபரணப் பெட்டியில், தர்மசாஸ்தாவை அலங்கரிக்க கீழ்க்காணும் ஆபரணங்கள் உள்ளது.

திருமுகம்(சாஸ்தாவின் முகக் கவசம்)
ப்ரபா மண்டலம் (ப்ரபாவளி)
வலிய சுரிகை (பெரிய கத்தி)
செறிய சுரிகை (சிறிய கத்தி)
யானை, விக்ரஹம்-2
கடுவாய் புலி விக்ரஹம் 1
வெள்ளி கட்டிய வலம்புரிச் சங்கு
பூர்ணா புஷ்கலா தேவியர் உருவம்
பூத்தட்டம் (பூக்களை வைக்கும் தங்கத் தட்டு)
நவரத்தின மோதிரம்
சரப்பளி மாலை
வில்வ மாலை (தங்க இதழ்களால் ஆனது)
மணி மாலை (நவரத்னங்களால் ஆனது)
எருக்கம் பூ மாலை (தங்க எருக்கம்பூக்களால் ஆனது)

2. வெள்ளிப் பெட்டி

மாளிகைபுறம் சன்னதிக்குச் செல்லும் இந்த வெள்ளிப்பெட்டியில், தங்கக்குடம் ஒன்று மற்ற பூஜா பாத்திரங்கள் இந்தத் தங்கக்குடத்தால் சுவாமிக்கு பின்னர் நெய்அபிஷேகம் செய்யப்படும்.

3. கொடிப்பெட்டி

மாளிகைப்புறம் சன்னதிக்குச் செல்லும் இந்தக் கொடிப்பெட்டியில், யானைக்கான நெற்றிப்பட்டம் தலைப்பாறை மற்றும் உடும்பாறை மலைக்கான கொடிகள்
குடை மற்றும் யானை ஊர்வலத்துக்கான பொருட்கள் உள்ளன. கொடிப்பெட்டியில் உள்ளவற்றால் மறுநாள் யானை அலங்கரிக்கப்பட்டு, மாளிகைப்புறத்து தேவி சரம்குத்தி வரையில் யானையில் பவனி வருவாள்.

இந்த திருவாபரணங்கள் சபரிமலையில் கோயில் கொண்டுள்ள பகவானுக்கு அணிவிக்கவேயன்றி, ஐயப்பன் தானே அணிந்து கொண்டிருந்தவையல்ல! திருவாபரணத்தில் வரும் சாஸ்தாவின் திருமுகத்தில், அழகான முறுக்கு மீசை தெரிவதைக் காணலாம். அத்துடன் பூர்ணா புஷ்கலா தேவியரின் உருவமும் உடன் இருப்பதைக் காணமுடியும். மகர நட்சத்திரம் உதித்து வானில் கருடன் வட்டமிட, அந்த ஆபரணங்களை ஐயப்பனுக்குச் சார்த்தி தீபாராதனை நடக்கும்
நன்றி : தினமலர்
http://temple.dinamalar.com/news_detail.php?id=7217



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
சபரிமலை திருவாபரணம் பற்றிய சில தகவல்கள்! 1357389சபரிமலை திருவாபரணம் பற்றிய சில தகவல்கள்! 59010615சபரிமலை திருவாபரணம் பற்றிய சில தகவல்கள்! Images3ijfசபரிமலை திருவாபரணம் பற்றிய சில தகவல்கள்! Images4px
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Dec 03, 2011 10:32 am

இதுவரை அறியாத தகவல், அறிய தந்தமைக்கு நன்றி..



dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Sat Dec 03, 2011 10:54 am

சபரிமலை திருவாபரணம் பற்றிய சில தகவல்கள்! 224747944

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக