ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

Top posting users this month
ayyasamy ram
தமிழகம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டன Poll_c10தமிழகம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டன Poll_m10தமிழகம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டன Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டன

Go down

தமிழகம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டன Empty தமிழகம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டன

Post by சிவா Fri Dec 02, 2011 8:59 am

தமிழகம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டன First0212
சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா முழுவதும் நேற்று கடை அடைப்பு போராட்டம் நடைபெற்றது. தமிழ்நாட்டில் கடைகளை அடைத்து வியாபாரிகள் உண்ணாவிரதம், உறுதிமொழி ஏற்பு போன்ற போராட்டங்களை நடத்தினார்கள்.

அன்னிய முதலீடு

சில்லரை வர்த்தகத்தில் 51 சதவீத அன்னிய நேரடி முதலீட்டிற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால், இந்தியா முழுவதும் பல கோடி சிறு வியாபாரிகள் மற்றும் பெரிய வியாபாரிகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சில்லரை வியாபாரத்தில் வெளிநாட்டு நிறுவனங்களை அனுமதிக்க முடியாது என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா, மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, உத்திரபிரதேச மாநில முதல்-மந்திரி மாயாவதி உள்பட காங்கிரஸ் ஆட்சி செய்யாத அனைத்து மாநிலங்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

கடையடைப்பு போராட்டம்

சில்லரை வர்த்தகத்தில் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அனுமதி அளித்திருப்பதின் மூலம் வால் மார்ட் போன்ற பெரிய நிறுவனங்கள், 50 ஏக்கர் பரப்பளவில் மிகப் பெரிய வணிக வளாகங்களை அமைப்பார்கள். இங்கு குண்டூசி முதல் ஜவுளி, அரிசி, மளிகை பொருட்கள் உள்பட அனைத்து வகையான பொருட்களையும் வாங்க முடியும்.

இந்த வணிக வளாகங்களில் 6 மாதங்களுக்கு எல்லா வகையான பொருட்களும் மிகவும் குறைவான விலையில் கிடைக்கும். இதன் பின்பு இந்த நிறுவனங்களுக்கு போட்டியாக எந்த கடைகளும் இருக்காது. இதைத் தொடர்ந்து படிப்படியாக தங்கள் இஷ்டத்திற்கு விலையை உயர்த்தி விற்பனை செய்வார்கள் என்று வியாபாரிகள் கருதுகிறார்கள்.

வெளிநாட்டு நிறுவனங்கள் வால் மார்ட் போன்ற கடைகளை தொடங்குவதின் மூலம் இந்தியா முழுவதும் பல கோடி சிறு வியாபாரிகளும், பெரிய வியாபாரிகளும் பாதிக்கப்படுவார்கள். தமிழ்நாட்டில் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட கடைகளை மூடும் அபாயமும், ஒரு கோடிக்கு மேற்பட்டவர்கள் வேலை இழக்கும் நிலையும் ஏற்படும் என்று வியாபாரிகள் அச்சமடைந்துள்ளனர். எனவே, சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டுக்கு எதிராக இந்தியா முழுவதும் நேற்று கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.

15 லட்சம் கடைகள் அடைப்பு


இதைத் தொடர்ந்து இந்தியா முழுவதும் நேற்று ஏராளமான சிறிய மற்றும் பெரிய கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. தமிழ்நாட்டில் திருச்சி, கோவை, மதுரை, சேலம், திண்டுக்கல், கடலூர், விழுப்புரம், ஈரோடு, நாமக்கல், நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்பட அனைத்து மாவட்டங்களிலும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. தமிழ்நாட்டில் உள்ள 20 லட்சம் கடைகளில், 15 லட்சத்திற்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டிருந்ததாக வியாபாரிகள் சங்க தலைவர் ஒருவர் கூறினார்.

சென்னையில் நேற்று அனைத்து பகுதிகளிலும் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. சென்னையின் முக்கிய வர்த்தக மையமாக விளங்கக்கூடிய தியாகராயநகர் பகுதியில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு வெறிச்சோடி காணப்பட்டது.

ரங்கநாதன் தெருவில் உள்ள மிகப் பெரிய ஜவுளிக்கடைகளும், நகைக்கடைகளும், பாத்திரக்கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. கடை திறந்திருக்கும் என்ற நோக்கத்தில், பொருட்களை வாங்குவதற்காக வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

அதே நேரத்தில், ரங்கநாதன் தெருவில் ரோட்டோரங்களில் உள்ள கடைகளில் விறுவிறுப்பாக வியாபாரம் நடைபெற்றது. சுடிதார், கைக்குட்டை, உள்ளாடைகள் ஆகியவற்றை ஏலம் போடுவது போல 150 ரூபாய், 200 ரூபாய் என்று கூவிக்கூவி வியாபாரம் செய்தனர்.

பாண்டி பஜார்

பாண்டி பஜாரில் உள்ள பெரிய கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. அதே நேரத்தில் பூக்கடை, பழக்கடைகள் திறக்கப்பட்டு வியாபாரம் நடைபெற்றது. இந்தப் பகுதியில் ரோட்டின் ஓரத்தில் நடை பாதைக் கடைகளில் வியாபாரம் செய்பவர்கள் தங்கள் பொருட்களை சுருட்டி மூட்டையாக கட்டி வைத்துவிட்டு, போராட்டத்திற்கு ஆதரவு அளித்தனர்.

இதேபோல், உஸ்மான் ரோட்டில் உள்ள கடைகளும் மூடப்பட்டிருந்தன. உஸ்மான் ரோட்டின் அருகே உள்ள மேம்பாலத்தின் கீழ், தள்ளு வண்டியில் வைத்து பிரியாணி, சாப்பாடு போன்றவைகளின் விற்பனை சுறுசுறுப்பாக நடைபெற்றது.

கார், மோட்டார் சைக்கிள்களின் உதிரிபாகங்கள் விற்பனையாகக்கூடிய புதுப்பேட்டை பகுதியில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. பஞ்சர் போடும் கடைகள் மட்டுமே திறக்கப்பட்டிருந்தன.

கோயம்பேடு மார்க்கெட்


கோயம்பேடு மொத்த மார்க்கெட்டிற்கு நேற்று முன்தினம் இரவு முதல் வெளிமாநிலங்களில் இருந்து காய்கறிகள் ஏற்றிய லாரிகள் எதுவும் வரவில்லை. நேற்று கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள காய்கறி கடைகள், பழக்கடைகள், பூக்கடைகள் உள்பட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு வெறிச்சோடி கிடந்தன.

கோயம்பேடு மார்க்கெட்டில் மொத்தம் 2,500 கடைகள் அடைக்கப்பட்டிருந்ததாக கோயம்பேடு காய்கறி வியாபாரிகள் நலச்சங்க தலைவர் தியாகராஜன், செயலாளர் சந்திரன் ஆகியோர் தெரிவித்தனர்.

வடசென்னை பகுதியில், புதுவண்ணாரப்பேட்டை, வண்ணாரப்பேட்டை, பெரம்பூர், ராயபுரம், திருவொற்றிïர் ஆகிய பகுதிகளில் டீக்கடைகள், ஓட்டல்கள் தவிர மற்ற கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

டீக்கடை, ஓட்டல்கள் திறப்பு


காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவன் அருகே உள்ள கல்யாண சுந்தரம் சாலை ஜி.பி. ரோட்டில் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் கார் மற்றும் மோட்டார் சைக்கிளுக்கு தேவையான கூடுதல் உதிரிபாகங்கள் வைத்து வியாபாரம் நடத்தி வருகிறார்கள். இந்தப் பகுதியில் உள்ள அனைத்து கடைகளும் திறக்கப்பட்டு விறுவிறுப்பாக வியாபாரம் நடைபெற்றது. இதுமட்டும் அல்லாமல், இவர்கள் கார்களை நடுரோட்டில் நிறுத்தி புதிய இருக்கைகளை பொருத்துவது, கார்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டுவது போன்ற பணிகளில் வழக்கம்போல் ஈடுபட்டனர்.

சென்னை பீச் ரோட்டில் உள்ள பர்மா பஜாரில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. ஐகோர்ட்டு எதிரே உள்ள என்.எஸ்.சி. போஸ் ரோட்டில், சில கடைகள் திறந்தும், சில கடைகள் மூடப்பட்டும் இருந்தன. பாரிமுனை பஸ் நிலையத்தின் உள்ளே உள்ள கடைகள் மூடப்பட்டு இருந்தன. அதே நேரத்தில் பாரிமுனை பஸ் நிலையத்தை சுற்றியுள்ள டீக்கடைகள், ஓட்டல்கள் திறக்கப்பட்டு வியாபாரம் சூடுபறந்தது.

இயல்பு வாழ்க்கை பாதிப்பில்லை


எப்போதும் வியாபாரம் சுறுசுறுப்பாக நடைபெறக்கூடிய புரசைவாக்கம் பகுதியில் கடைகள் மூடப்பட்டு வெறிச்சோடி காட்சியளித்தது. சென்னை நகரில் உள்ள பெரும்பாலான மளிகைக் கடைகள் மூடப்பட்டிருந்தன. சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து டீக்கடைகள் அடைக்கப்படும் என்று டீக்கடை உரிமையாளர்கள் அறிவித்திருந்தனர். ஆனால், சென்னை நகரில் அனைத்து பகுதிகளிலும் டீக்கடைகள் திறக்கப்பட்டு வியாபாரம் வழக்கம்போல் நடைபெற்றது.

ரெயில், பஸ், ஆட்டோ போன்றவை வழக்கம்போல ஓடின. மருந்து கடைகள், பெரிய வணிக வளாகங்கள் திறக்கப்பட்டிருந்தன. இதனால், பொதுமக்களுடைய இயல்பு வாழ்க்கையில் எந்தவிதமான பாதிப்பும் இல்லை.

உண்ணாவிரதம்

சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில், வெள்ளையன் தலைமையில் சென்னை காயிதேமில்லத் மணி மண்டபம் அருகே வியாபாரிகள் உண்ணாவிரதம் இருந்தனர். இதேபோல், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில், கடற்கரை சாலையில் உள்ள காந்தி சிலை முன்பு, விக்கிரமராஜா தலைமையில் இந்திய வணிகம் காப்போம் என்று உறுதிமொழி ஏற்றனர்.

இதேபோல், தமிழ்நாடு முழுவதும் வியாபாரிகள் கடைகளை அடைத்துவிட்டு, ஆங்காங்கே உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். கடையடைப்பு போராட்டத்தையொட்டி சென்னை நகரில் முக்கிய இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

தினதந்தி


தமிழகம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டன Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum