ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்ணதாசன் ஒரு சகாப்தம் ***நான் பேச நினைப்பதெல்லாம்..***

3 posters

Go down

கண்ணதாசன் ஒரு சகாப்தம் ***நான் பேச நினைப்பதெல்லாம்..*** Empty கண்ணதாசன் ஒரு சகாப்தம் ***நான் பேச நினைப்பதெல்லாம்..***

Post by shivaahshankar Tue Nov 29, 2011 10:31 pm

நான் பேச நினைப்பதெல்லாம்..
வெள்ளித்திரையில் விளைந்த நன்மைகள் என்னும் தலைப்பில் கட்டுரை எழுதச் சொன்னால் சொற்சித்திரங்கள் பூத்துவந்த பூஞ்சோலை என்று வர்ணிக்காமல் இருக்க முடியுமா? மனித உறவுகளுக்கு அடிப்படை அன்பு என்பதும் ஆணிவேர் போன்றதுதான். ‘நான்’ ‘நீ’ என்று சொல்லும்போது உதடுகள்கூப் பிரிந்துகிடக்கின்றன.. ‘நாம்’ என்று சொல்லும்போதே உதடுகள் இணைந்திருக்கின்றன என்கிற உவமைகளை அள்ளி வழங்கியவர் கலைஞர் அவர்கள்.

அத்தகு அன்பில் முகிழ்க்கும் உறவுகளில் கணவன் - மனைவி என்கிற அதியற்புத உறவைப் பற்றி ஒரு ஆராய்ச்சியா இப்பாடல்? இசையால் நம்மை என்றைக்கும் வசப்படுத்தும் இரட்டையர்கள் விஸ்வநாதன் - ராமமூர்த்தி வார்த்தளித்த அரும்புதையல் - டி.எம்.செளந்திரராஜன் - பி.சுசீலா குரல்களில் இழைந்தோடி பாலும் பழமுமாய் பவனி வருகிற பாடல்!!

அன்பு நெஞ்சங்களே.. மறக்க முடியாத இந்தப் பாடல்.. திரையில் எத்தகு சூழலில் வருகிறது என்பதைச் சற்றே நினைவூட்டுவது அவசியம் என்பதால்.. இதோ..

நாயகன் - நாயகியாய் சிவாஜிகணேசன் - சரோஜாதேவி - மருத்துவ விஞ்ஞானியான நாயகனுக்கு உதவிக்கரமாய் செயலாற்றி.. அவன் உள்ளத்திலும் இடம்பெற்று இல்லத்தரசியாகிறாள் நாயகி. கணவன்-மனைவி என்கிற பந்தம் ஏற்று சில நாட்களுக்குப் பிறகு தேனிலவுக்குப் பயணிக்கிறார்கள். அழகியதோர் புல்வெளியில் அமர்ந்திருக்கிறான் நாயகன்.. அடைக்கலமானதுபோல் அவன் மடியில் தலைசாய்த்திருக்கிறாள் அழகுமயில் நாயகி!

நாயகன் ஒரு வினா தொடுக்கிறான்! நானும் பார்க்கிறேன்.. நான் எழுவதற்குள் எழுந்து விடுகிறாய்.. எனக்கு வேண்டியது அனைத்தும் செய்கிறாய்.. நான் உறங்கிய பின்னரே துயில்கிறாய்.. உனக்கென இதுவரை எதுவுமே நீ கேட்கவில்லையே.. இப்போது உனது உதட்டிலிருந்து வரும் முதல் வார்த்தை .. ஏதாவது நீ கேட்க வேண்டும். அதை நான் கொடுக்க வேண்டும்.. பின்புதான் மற்ற பணி என்று முடிக்கிறான். நாயகி இதழ் திறக்கிறாள்.. பாடலின் பின்னணி இசைத் தென்றலாய் முன்செல்கிறது.

நான் பேச நினைப்பதெல்லாம்.. நீ பேச வேண்டும் என்கிறாள்..

சூழலுக்காக மட்டுமல்ல.. திரைக்கதைக்காகவும் முழுமையாகப் பொருந்தியது என்பதையும் தாண்டி.. மனிதகுலத்தில் மானுட இனத்தில் .. திருமண பந்தம் ஏற்கும் ஒவ்வொரு தம்பதிக்களுக்குமான இல்லற ரகசியம் இதில்தான் இருக்கிறது. இந்த அர்த்தப்புதையலை கண்டெடுத்துத் தந்தார் எங்கள் கண்ணதாசன் கலை இலக்கிய மையத்தலைவி முனைவர் பேராசிரியர் சரசுவதி ராமனாதன் அவர்கள்.

இந்துக்களின் திருமணச்சடங்குகளின்போது மங்கல நாணேற்றும் தருணம்.. சமஸ்கிருத ஸ்லோகம் ஒன்று சொல்லப்படுவது வழக்கம்! மாங்கல்யம் தந்துநா மககேதனா என்று துவங்கும் அந்த ஸ்லோகம் என்ன சொல்கிறது தெரியுமா? இன்று முதல் இவனது கண்வழியே இந்த உலகைப் பார். இருவரும் எப்டி இணைந்து வாழ வேண்டும் என்று வேதங்களின் சாரமாய் விளைந்த இந்த மந்திரத்தின் அர்த்தங்களை அப்படியே உள்வாங்கி 16 வரிகளுக்குள் வரைந்து வழங்கியுள்ளார் கண்ணதாசன். இப்போது மீண்டும் ஒரு முறை இப்பாடலைக் கேட்டுப் பாருங்கள்..

நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்
நாளோடும் பொழுதோடும் உறவாட வேண்டும் உறவாட வேண்டும்
நான் காணும் உலகங்கள் நீ காண வேண்டும் நீ காண வேண்டும்
நீ காணும் பொருள் யாவும் நானாக வேண்டும் நானாக வேண்டும்

பாலோடு பழம் யாவும் உனக்காக வேண்டும் உனக்காக வேண்டும்
பாவை உன் முகம் பார்த்துப் பசியாற வேண்டும் பசியாற வேண்டும்
மனதாலும் நினைவாலும் தாயாக வேண்டும் நானாக வேண்டும்
மடி மீது விளையாடும் சேயாக வேண்டும் நீயாக வேண்டும்
(நான் பேச)

சொல்லென்றும் மொழியென்றும் பொருளென்றும் இல்லை
பொருளென்றும் இல்லை
சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை விலையேதும் இல்லை
ஒன்றோடு ஒன்றாக உயிர் சேர்ந்த பின்னே உயிர் சேர்ந்த பின்னே
உலகங்கள் நமையன்றி வேறேதும் இல்லை வேறேதும் இல்லை
(நான் பேச)

படம்: பாலும் பழமும்
இசை: MS விஸ்வநாதன் - TK ராமமூர்த்தி
பாடியவர்கள்: P சுசீலா, TM சௌந்தர்ராஜன்
வரிகள்: கண்ணதாசன்


தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்
மறுபடியும் தர்மமே வெல்லும்....

karghi.blogspot.com
shivaahshankar
shivaahshankar
பண்பாளர்


பதிவுகள் : 101
இணைந்தது : 14/08/2011

http://karghi.blogspot.com

Back to top Go down

கண்ணதாசன் ஒரு சகாப்தம் ***நான் பேச நினைப்பதெல்லாம்..*** Empty Re: கண்ணதாசன் ஒரு சகாப்தம் ***நான் பேச நினைப்பதெல்லாம்..***

Post by இளமாறன் Tue Nov 29, 2011 10:58 pm

இரவில் கேட்கும் இனிமையான பாடல் பகிர்ந்தமைக்கு நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கண்ணதாசன் ஒரு சகாப்தம் ***நான் பேச நினைப்பதெல்லாம்..*** Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

கண்ணதாசன் ஒரு சகாப்தம் ***நான் பேச நினைப்பதெல்லாம்..*** Empty Re: கண்ணதாசன் ஒரு சகாப்தம் ***நான் பேச நினைப்பதெல்லாம்..***

Post by ராஜா Wed Nov 30, 2011 10:55 am

"கண்ணதாசன் ஒரு சகாப்தம்" கண்ணதாசன் ஒரு சகாப்தம் ***நான் பேச நினைப்பதெல்லாம்..*** 678642
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கண்ணதாசன் ஒரு சகாப்தம் ***நான் பேச நினைப்பதெல்லாம்..*** Empty Re: கண்ணதாசன் ஒரு சகாப்தம் ***நான் பேச நினைப்பதெல்லாம்..***

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum