புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறுவயது வறுமை ஜீன்களில் தெரியும்! Poll_c10சிறுவயது வறுமை ஜீன்களில் தெரியும்! Poll_m10சிறுவயது வறுமை ஜீன்களில் தெரியும்! Poll_c10 
48 Posts - 51%
heezulia
சிறுவயது வறுமை ஜீன்களில் தெரியும்! Poll_c10சிறுவயது வறுமை ஜீன்களில் தெரியும்! Poll_m10சிறுவயது வறுமை ஜீன்களில் தெரியும்! Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
சிறுவயது வறுமை ஜீன்களில் தெரியும்! Poll_c10சிறுவயது வறுமை ஜீன்களில் தெரியும்! Poll_m10சிறுவயது வறுமை ஜீன்களில் தெரியும்! Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
சிறுவயது வறுமை ஜீன்களில் தெரியும்! Poll_c10சிறுவயது வறுமை ஜீன்களில் தெரியும்! Poll_m10சிறுவயது வறுமை ஜீன்களில் தெரியும்! Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
சிறுவயது வறுமை ஜீன்களில் தெரியும்! Poll_c10சிறுவயது வறுமை ஜீன்களில் தெரியும்! Poll_m10சிறுவயது வறுமை ஜீன்களில் தெரியும்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறுவயது வறுமை ஜீன்களில் தெரியும்! Poll_c10சிறுவயது வறுமை ஜீன்களில் தெரியும்! Poll_m10சிறுவயது வறுமை ஜீன்களில் தெரியும்! Poll_c10 
48 Posts - 51%
heezulia
சிறுவயது வறுமை ஜீன்களில் தெரியும்! Poll_c10சிறுவயது வறுமை ஜீன்களில் தெரியும்! Poll_m10சிறுவயது வறுமை ஜீன்களில் தெரியும்! Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
சிறுவயது வறுமை ஜீன்களில் தெரியும்! Poll_c10சிறுவயது வறுமை ஜீன்களில் தெரியும்! Poll_m10சிறுவயது வறுமை ஜீன்களில் தெரியும்! Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
சிறுவயது வறுமை ஜீன்களில் தெரியும்! Poll_c10சிறுவயது வறுமை ஜீன்களில் தெரியும்! Poll_m10சிறுவயது வறுமை ஜீன்களில் தெரியும்! Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
சிறுவயது வறுமை ஜீன்களில் தெரியும்! Poll_c10சிறுவயது வறுமை ஜீன்களில் தெரியும்! Poll_m10சிறுவயது வறுமை ஜீன்களில் தெரியும்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறுவயது வறுமை ஜீன்களில் தெரியும்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 29, 2011 8:29 am

`தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்'. இது சில பழக்கவழக்கங்களுக்கு அடிமையாவதை குறிப்பிட்டுச் சொல்லப் பயன்படும் ஒரு பழமொழி. ஆனால், நம் பழக்கவழக்கங்கள், குணாதிசயங்கள், ஆரோக்கியம் என இவை அனைத்துக்கும் டி.என்.ஏ. எனும் மரபுப்பொருளாலான நம் மரபணுக்களே காரணம் என்கிறது மூலக்கூறு அறிவியல்.

இது ஒருபுறமிருக்க, ஒருவரின் இளமைக்காலம் வறுமையில் கழிந்ததா அல்லது செல்வச்செழிப்பில் நகர்ந்ததா என்பதைத் தெரிந்துகொள்ள, அவரது மரபணுக்களை ஆராய்ந்தாலே போதும் என்று ஆச்சரியப்படுத்துகிறது இங்கிலாந்து நாட்டின் சமீபத்திய ஆய்வு ஒன்று!

கட்டுரைச் செய்தியை முழுமையாகத் தெரிந்துகொள்வதற்கு முன்பு, டி.என்.ஏ. மற்றும் மரபணுக்களைப் பற்றிய அடிப்படையைத் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். ஒரு காலத்தில், ஒருவரின் குணம், திறமை, அறிவு என எல்லாவற்றுக்கும் அவரவர் மூளைதான் காரணம் என்று மேலோட்டமாக சொல்லிக்கொண்டிருந்தோம். அதேபோல, ஒருவரின் குணாதிசயம், அறிவு எல்லாம் அவரது சந்ததிக்கு போகும் என்று நம்பப்படுகிறது. உதாரணமாக, `அவன் அவங்கப்பா மாதிரி ரொம்பக் கோவக்காரன்', `அவ அவங்க தாத்தா மாதிரி பயங்கரப் புத்திசாலி', என சிலர் சொல்வதை பார்த்திருப்போம். இந்த கூற்றுகளில் உண்மையிருப்பினும், இதன் அடிப்படை இன்னதென்று யாருக்குமே தெரியாது என்பதுதான் நிதர்சனம்.

இதற்கெல்லாம் விளக்கமாக வந்தது, கடந்த 1950-களில் கண்டுபிடிக்கப்பட்ட மரபுப்பொருளான டி.என்.ஏ.

மரபியலின் அடிப்படை மூலக்கூறுதான் இந்த டி.என்.ஏ. `டீ ஆக்சி ரிபோ நிïக்ளிக் ஆக்சைடு' என்பதுதான் டி.என்.ஏ. என்பதன் விரிவாக்கம். ஓர் ஏணியைக் கயிறுபோல முறுக்கினால் உருவாகும் வடிவம்தான் டி.என்.ஏ.வின் வடிவம். மனித உடலின் ஒவ்வொரு உயிரணுவிலும் டி.என்.ஏ.வால் ஆன குரோமோசோம்கள் என்னும் மரபணுச்சுருள்கள் உண்டு. மனிதனுடைய ஒவ்வொரு உயிரணுவிலும் உள்ள குரோமோசோம்களின் எண்ணிக்கை 46. ஒவ்வொரு குரோமோசோமிலும் பல நூறு முதல், பல்லாயிரக்கணக்கான மரபணுக்கள் உண்டு.

இந்த மரபணுக்கள் ஒவ்வொன்றிலும் நமது குணாதிசயங்கள், திறமைகள், நோய்கள் ஏற்படும் வாய்ப்பு, உடல் ஆரோக்கியம் என எல்லாம் ரசாயன குறியீடுகளாகக் பதிவு செய்யப்பட்டுள்ளன. உடலிலுள்ள பல்வேறு ரசாயன சமிக்ஞைகளின் கட்டளையின்படி, தேவையானபோது டி.என்.ஏ.விலுள்ள ரசாயனக் குறியீடுகளை புரதங்களாக மாற்றி/மொழிபெயர்த்து, உடலின் பல்வேறு செயல்பாடுகளை ஒவ்வொரு உயிரணுவும் மேற்கொள்கின்றன. ஒருவருக்கு குழந்தை பிறக்கும்போது இந்த டி.என்.ஏ. தாய்-தந்தை யிடமிருந்து குழந்தைக்குச் செல்கிறது. இப்படித்தான் ஒருவரது திறமைகள், குணாதிசயங்கள், நோய்கள் என எல்லாம் ஒரு சந்ததியிலிருந்து மற்றொரு சந்ததிக்குக் கடத்தப்படுகின்றன.

பெற்றோரிடமிருந்து குழந்தைக்குச் செல்லும் டி.என்.ஏ.வில் இருவிதமான ரசாயன மாற்றங்கள் இருக்கும். ஒன்று, டி.என்.ஏ.வின் உட்புறத்திலுள்ள ரசாயன மூலக்கூறுகளில் ஏற்படும் மாற்றங்கள். மற்றொன்று, டி.என்.ஏ.வின் வெளிப் புறத்தில் ஏற்படும் ரசாயன மாற்றங்கள்.

இவ்விரு வகையான ரசாயன மாற்றங்களும் டி.என்.ஏ.விலிருந்து உருவாகும் புரதங்களைப் பாதிக்கின்றன. இவ்விரு மாற்றங்களும் மரபணு செயல்பாடுகளைத் `தூண்டிவிடுவது' அல்லது `முற்றிலும் தடுப்பது' என இருவிதமான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. அதனால், பெற்றோரிடமிருந்து மரபணுக்கள் குழந்தைக்குச் செல்லும்போது அந்த மரபணுக்களில் `மரபணுச் செயல்பாட்டைத் தூண்டிவிடுவது, தடுப்பது' என இரு வகையான ரசாயன மாற்றங்களில் எது இருக்கிறதோ அதுதான் குழந்தைக்குச் செல்லும். ஒருவரது குணாதிசயம் அவரது சந்ததிக்கு மரபியல் அடிப்படையில், டி.என்.ஏ. மூலம் எப்படிச் செல்கிறது என்பது பற்றிய அடிப்படைப் புரிதல் உங்களுக்கு இப்போது ஏற்பட்டிருக்கும்.

சரி, நாம் இப்போது கட்டுரைச் செய்திக்கு வருவோம். அதாவது, ஒருவரது குணாதிசயங்கள், திறமைகள், நோய்கள் போன்றவைதான் டி.என்.ஏ/மரபணுவில் பதியப்பட்டு அவரது சந்ததிக்குச் செல்கிறது என்று நமக்கு தெரியும். ஆனால், சிறுவயதில் ஒருவரது வாழ்க்கை சூழல் வறுமையாக இருந்ததா அல்லது செல்வச்செழிப்பாகத் திகழ்ந்ததா என்பது அவரது மரபணுக்கள் அல்லது ஜீன்களில் பதிவாகிவிடுகிறது என்கிறது, இங்கிலாந்தின் பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று.

செல்வச்செழிப்பான வாழ்க்கை முறையும், வறுமையான வாழ்க்கைமுறையும் ஒருவரின் மரபணுக் களை எதிர்பாராதவிதங் களில் பாதிக்கிறது. ஆடம்ப ரமான வாழ்க்கை மற்றும் வறுமை நிறைந்த வாழ்க்கை என இருவிதமான வாழ்க்கை வாழும் குழந்தைகளுக்கு ஒரே வகையான மரபணுக் கள் இருந்தாலும், எந்த மரபணு தூண்டப்பட வேண்டும், எந்த மரபணு தடுக்கப்பட வேண்டும் என்பதை அவர்களது வாழ்க்கை சூழலே நிர்ணயிக்கிறது என்கிறார் ஆய்வாளர் மார்கஸ் பெம்ப்ரே. மரபணுக்களை பாதிக்கும், ஒரு டி.என்.ஏ.வின் மேற்புறத்தில் ஏற்படும் இந்த வகை ரசாயன மாற்றங்கள் `எபிஜெனசிஸ்' என்றழைக்கப்படுகிறது.

மேலும், இந்த வகையான மாற்றங்களுக்கும் உளப்பிணி (Psychosis), மனச்சிதைவு நோய் Schizophrenia மற்றும் இருமுனையப் பிறழ்வு ((Bipolar disorder) ஆகிய சில நோய்களுக்கும் தொடர்பிருக்கிறது என சமீபத்திய ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த 1958-ம் ஆண்டு பிறந்த 3 ஆயிரம் பேரில், பணக்கார வீட்டில் பிறந்த 20 பேர் மற்றும் ஏழை வீட்டில் பிறந்த 20 பேர் என மொத்தம் 40 பேரின் ரத்தத்திலிருக்கும் வெள்ளை ரத்த அணுக்களிலிருந்து டி.என்.ஏ.வை பிரித்தெடுத்து, அதில் டி.என்.ஏ.வின் மேற்புறத்தில் ஏற்படும் `எபிஜெனிடிக்' ரசாயன மாற்றங்கள் ஏதும் இருக்கின்றனவா என்று பரிசோதிக்கப்பட்டது. இவ்வகையான டி.என்.ஏ. மாற்றங்களில், ஒரு மரபணுவின் டி.என்.ஏ.வில் `மீதைல் ரசாயன மூலக்கூறு' சேர்க்கப்பட்டிருந்தால் அம்மரபணுக் களின் செயல்பாடுகள் தடுக்கப்பட்டும், மீதைல் ரசாயன மூலக்கூறுகள் சேர்க்கப்படாத மரபணுக்களின் செயல்பாடுகள் தூண்டப்பட்டும் இருக்கும் என்பது இயல்பு.

ஆய்வில் கலந்துகொண்ட 40 பேரின் டி.என்.ஏ.வில் சுமார் 20 ஆயிரம் இடங்களில் இவ்வகையான ரசாயன மாற்றங்கள் இருக்கின்றனவா என்று பரிசோதிக்கப்பட்டது. பரிசோதனையின் முடிவில், வறுமையில் வாழ்ந்தவர்களின் டி.என்.ஏ. மாற்றங்களுக்கும், செல்வச்செழிப்பில் வாழ்ந்தவர்களின் டி.என்.ஏ. மாற்றங்களுக்கும், பரிசோதிக்கப்பட்ட சுமார் மூன்றில் ஒரு பங்கு டி.என்.ஏ. இடங்களில் நிறைய வித்தியாசங்கள் இருந்தது கண்டறியப்பட்டது. அதாவது, வறுமையில் வாடியவர்களின் டி.என்.ஏ.வில் சுமார் 1252 இடங்களில் மீதைல் ரசாயனக் கூறுகள் சேர்க்கப்பட்டிருந்தன. ஆனால் செல்வச்செழிப்பில் வாழ்ந்தவர்களின் டி.என்.ஏ.வில் 545 இடங்களில் மட்டுமே இக்கூறுகள் சேர்க்கப்பட்டிருந்தன.

டி.என்.ஏ. ரசாயன மாற்றங்களால் பாதிக்கப்பட்டுள்ள மரபணுக்கள் தனித்தனியானவை அல்ல என்பதும், மாறாக குறிப்பிட்ட மரபணுக் குழுக்களைச் சேர்ந்தவை என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆக, ஒரு மரபணுக் குழு பாதிக்கப்பட்டால் அதன் கட்டுப்பாட்டில் இருக்கும் உடலியல் செயல்பாடுகள் அனைத்தும் பாதிக்கப்படும் என்பதே இயற்கை. இவ்வகையான டி.என்.ஏ. ரசாயண மாற்றங்கள் ஒரு சந்ததியிலிருந்து மற்றொரு சந்ததிக்கும் கடத்தப்படுகின்றன என்று நம்பப்படுகிறது. உதாரணமாக, எலிகளில் நடத்தப்பட்ட சோதனையில் இவ்வகையான எபிஜெனடிக் ரசாயன மாற்றங்கள் ஒரு சந்ததியிலிருந்து அதற்கு அடுத்த 2 சந்ததிகளுக்கு கடத்தப்பட்டது தெரியவந்தது.

இப்பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்கள் அனைவரும் நடுத்தர வயதானவர்கள் என்பதால், இந்த டி.என்.ஏ. ரசாயன மாற்றங்கள் எந்த வயதில் ஏற்பட்டிருக்கும் என்பது பற்றி தெரியவில்லை. சிசுப்பருவம், குழந்தைப்பருவம் என எந்தக் கால நிலையிலும் இம்மாற்றங்கள் தோன்றியிருக்கக்கூடும். ஆனால், இம்மாற்றங்கள் எந்த காலத்தில் தோன்றியிருந்தாலும், நடுத்தர வயது வரை அழியாமல் இருந்திருக்கின்றன என்பதே உண்மை என்கிறார், ஆய்வாளர் பெம்ப்ரே.

இவரது அடுத்தகட்ட ஆய்வு, இம்மாற்றங்கள் தோன்றிய காலத்தைக் கண்டுபிடிப்பதே. இதற்காக சுமார் 14 ஆயிரம் மக்களின் ரத்தத்தை சேகரித்து வைத்திருக்கும் ஒரு பெரும் ஆய்வை பயன்படுத்தப்போகிறார் பெம்ப்ரே. இந்த 14 ஆயிரம் பேரையும் குழந்தைப்பருவம் முதல் கண்காணித்து வருகிறது இந்த ஆய்வுக்குழு.

என்ன, இப்போது புரிந்திருக்குமே, தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை மட்டுமல்ல. அதையும் தாண்டி சில பல சந்ததிகள் வரை தொடரக்கூடியது என்று! அதுமட்டுமல்லாமல், ஒருவரது வாழ்க்கைச்சூழலும் மரபணுக்களில் பதிந்துபோவதால், ஒருவரின் டி.என்.ஏ.வை பரிசோதனை செய்தால் போதும். அவரது வரலாற்றையே அக்கு வேறு ஆணி வேறாக புட்டுப் புட்டு வைத்துவிடலாம்.

முனைவர் பத்மஹரி



சிறுவயது வறுமை ஜீன்களில் தெரியும்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Tue Nov 29, 2011 8:54 am

நல்ல பகிர்வு



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
சிறுவயது வறுமை ஜீன்களில் தெரியும்! 1357389சிறுவயது வறுமை ஜீன்களில் தெரியும்! 59010615சிறுவயது வறுமை ஜீன்களில் தெரியும்! Images3ijfசிறுவயது வறுமை ஜீன்களில் தெரியும்! Images4px

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக