புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 2 Poll_c10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 2 Poll_m10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 2 Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 2 Poll_c10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 2 Poll_m10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 2 Poll_c10 
77 Posts - 36%
i6appar
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 2 Poll_c10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 2 Poll_m10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 2 Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 2 Poll_c10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 2 Poll_m10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 2 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 2 Poll_c10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 2 Poll_m10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 2 Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 2 Poll_c10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 2 Poll_m10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 2 Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 2 Poll_c10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 2 Poll_m10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 2 Poll_c10 
4 Posts - 2%
Guna.D
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 2 Poll_c10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 2 Poll_m10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 2 Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 2 Poll_c10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 2 Poll_m10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 2 Poll_c10 
2 Posts - 1%
ஜாஹீதாபானு
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 2 Poll_c10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 2 Poll_m10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 2 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10


   
   

Page 2 of 27 Previous  1, 2, 3 ... 14 ... 27  Next

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Nov 29, 2011 12:02 pm

First topic message reminder :

என் இனிய தமிழ் மக்களே ... :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

நான்தான் உங்கள் பாசத்துக்குரிய( ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ) பாலாஜி எழுதுகின்றேன். என்ன மக்களே இருமுடி கட்டுகிற பிலிங்க் வருதா ..

இது ஒரு புது திரி , நான் ஒரு கதைகான ஒரு குறிப்பு தருவேன் அதை வைத்து ஒரு கதை எழுதவேண்டும் .

" ஒரு கதையின் தொடக்கமும் ,முடிவும் குதிரை ஓட்ட பந்தயத்தைபோல இருக்கவேண்டும் என்பார்கள் " அதை போல என்னால் முடிந்தவரை சிறப்பான குறிப்புதர முயற்சி செய்கின்றேன் ..

பின்னூட்டம் தமிழ்ல் அடிப்பதே சிரமம் ,இதில் கதை எப்படி எழுதுவது என்று கேட்டுறீங்களா...

குமுதம் பத்திரிகையில் வருவது போல ஒரு பக்க கதை போல அமைந்தால் சிறப்பு (அதாவது 20-30 வரிகள்) ,இந்த திரி வெற்றி பெறுவது சிரமம் என்று எனக்கு தெரியும் ..ஆகவே வாரத்திற்க்கு ஒரு குறிப்பு மட்டுமே வழங்க படும் ..

சிறந்த கதைக்கான பரிசு , உங்களுக்கு மூன்று மதிப்பீடு புள்ளிகள் வழங்கப்படும் ..வேறு என்ன பரிசு தர முடியும் எங்களால் ...

குறிப்பை பார்க்கலாமா ..

இலக்கம்: 1

நண்பகல் 12:00 மணி ..

கடற்கரையில் இருந்த சில்லறை வியாபாரிகளுக்கு இன்று வெயில் அதிகம் போல தோன்றியது .ஆனால் சிவாவுக்கு அப்படி தோன்றவில்லை. கடிகாரத்தில் மணி பார்த்து ,அரைமணி நேரம் முன்னதாகவே வந்த்துவிட்டதாக மகிழ்ச்சி.மணி மூன்றை நெருங்கியது தொடர்பு கொண்ட கைப்பேசி அனைத்துவைக்கபட்டுயிருந்தது .வெறுப்பில் மணலை உதைத்தபோது தரையில் ஏதோ மின்னியது .அது கல்லூரிபெண்ணின் அடையாள அட்டை ,பின் பக்கத்தில் அவளின் முகவரியும் , கைபேசி எண்ணும் இருந்தது ..




குறிப்பு : இந்த பெயர் அனைத்து மக்ககளையும் கவரும் விதத்தில் அமைக்கபட்டுள்ளது .வேறு எந்த காரணமும் இல்லை ..

தொடர்வோமா நண்பர்களே

நன்றியுடன்
வை.பாலாஜி

குறிப்பு : நான் தருகின்ற கதையின் கரு சரியில்லை என்றால் தனிமடல்கள் வரவேற்க்கபடுகின்றன ..





http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...



உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Nov 29, 2011 5:16 pm

வாழ்த்துகள் பாலாஜி அண்ணாத்த .

இதுக்கெல்லாம் அதிக கற்பனை சக்தி வேணும்.அதெல்லாம் எனக்கு இல்லை



கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 2 Uகதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 2 Dகதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 2 Aகதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 2 Yகதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 2 Aகதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 2 Sகதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 2 Uகதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 2 Dகதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 2 Hகதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 2 A
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Nov 29, 2011 5:18 pm

ஸாரி பாலாஜி அண்ணா நான் கொஞ்சம் பெரிய சிறுகதையே எழுதிட்டேன் கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 2 838572



பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Nov 29, 2011 5:29 pm

ரேவதி wrote:ஸாரி பாலாஜி அண்ணா நான் கொஞ்சம் பெரிய சிறுகதையே எழுதிட்டேன் கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 2 838572

வாழ்த்துக்கள் ரேவதி , எதிர்பார்க்காத நிறைய திருப்பதோடு உள்ளது ... நல்ல கதை ..நல்ல கற்பனை வளம் உனக்கு ..

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி




http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Nov 29, 2011 5:35 pm

வை.பாலாஜி wrote:
ரேவதி wrote:ஸாரி பாலாஜி அண்ணா நான் கொஞ்சம் பெரிய சிறுகதையே எழுதிட்டேன் கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 2 838572

வாழ்த்துக்கள் ரேவதி , எதிர்பார்க்காத நிறைய திருப்பதோடு உள்ளது ... நல்ல கதை ..நல்ல கற்பனை வளம் உனக்கு ..

கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 2 677196 கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 2 677196 கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 2 677196 கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 2 677196 கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 2 677196 கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 2 677196 கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 2 677196 கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 2 677196 கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 2 677196 கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 2 677196 கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 2 677196
நன்றி கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 2 678642 கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 2 154550



கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Tue Nov 29, 2011 5:38 pm

ரேவதி wrote:

ஒரு நிமிடம் சிவாவிற்கு எதுவுமே
புரியவில்லை..கண்கள் கலங்கி விட்டது .. இந்த நிமிடமே சுனாமி வராத என்றுதோன்றியது..

இருந்தும் அதை மறந்து உன் காதலான யார் அவன் என்று கேட்டான்..

அருமை அக்கா அழுகை சூப்பருங்க
உமா அக்கா கதையும் அருமை சூப்பருங்க



கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 2 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 2 599303
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 2 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 2 102564

நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Tue Nov 29, 2011 5:39 pm

ரேவதி wrote:

சடாலென சிவாக்குள் ஒரு சாரல் அடித்தது காரணம், ??

அது மழைக்காலம்...


பெரும்(சிறு)கதை அருமை ரேவதி.. வாழ்த்துக்கள்.. கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 2 224747944 கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 2 224747944



ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்


கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 2 Aகதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 2 Sகதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 2 Hகதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 2 Rகதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 2 Aகதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 2 Fகதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 2 Blank
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Nov 29, 2011 5:57 pm

ஷாலி, உமா அக்கா இருவரின் கதைகளுமே கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 2 2825183110



கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Tue Nov 29, 2011 7:19 pm

வை.பாலாஜி wrote:
நண்பகல் 12:00 மணி ..

கடற்கரையில் இருந்த சில்லறை வியாபாரிகளுக்கு இன்று வெயில் அதிகம் போல தோன்றியது .ஆனால் சிவாவுக்கு அப்படி தோன்றவில்லை. கடிகாரத்தில் மணி பார்த்து ,அரைமணி நேரம் முன்னதாகவே வந்த்துவிட்டதாக மகிழ்ச்சி.மணி மூன்றை நெருங்கியது தொடர்பு கொண்ட கைப்பேசி அனைத்துவைக்கபட்டுயிருந்தது .வெறுப்பில் மணலை உதைத்தபோது தரையில் ஏதோ மின்னியது .அது கல்லூரிபெண்ணின் அடையாள அட்டை ,பின் பக்கத்தில் அவளின் முகவரியும் , கைபேசி எண்ணும் இருந்தது ..

முகவரி படித்து பார்த்தான் !....7,ராஜபாதர் ஸ்ட்ரீட் .......சென்னை !அந்த தெருவில்தான் சிவாவின் நண்பன் ராம்கி வீடு இருப்பது ஞாபகம் வந்தது....அவனையும் பார்த்தது போல் ஆயிற்று ...இந்த அடையாள அட்டையையும் கொடுத்துவிடலாம் .....மனதில் எண்ணம் ஓடியது ....உதவிசெய்யும் குணம் சிவாவிற்கு பிறவியிலையே அமைந்துவிட்டது ! மற்றவர்களாக இருந்தால் நமக்கென்ன என்று தூக்கி வீசிவிடுவார்கள் . சிவாவால் அப்படி செய்யமுடியாது
*************
வாடாமாப்ள ! ............ என்னடா இந்தப்பக்கம் ....
சும்மாதான் பாத்துட்டு போகலாம்னு ...சரி வா ...ஹோட்டல...சாப்பிட்டுட்டே பேசலாம் ...பில் உன்னது .ஓ.கே ...நண்பர்கள் சிரித்து பேசி பிரியும் வேளை வந்தபோதுதான்
சிவா சொன்னான் ..இந்த 7,ராஜபாதர் ஸ்ட்ரீட்...எங்கட மாப்ள இந்த ஐ டி கார்டு பீச்ல கிடந்துசு குடுத்துடலாம்நு ....
ராம்கி வாங்கி..புரட்டி பார்த்தான். நம்ம ஷாலினி கார்டு ....நேத்திக்கூட பாத்துபேசிக்கிட்டு இருந்தேன்பா !..பக்கத்து தெருதான்
சரி போ...நான் குடுத்தர்ரென் ....
ஓ.கே.டா. மாப்ள ..நா வர்றேன்
==================
ஆபீஸில் மறுநாள் பேப்பரை புரட்டியபோது அந்த விளம்பரம் எதேசையாக கண்ணில் பட்டது .ஐ டி யில் இருந்த அதே பெண்

காணவில்லை :
பெயர் :ஷாலினி
வயது :23
கல்லூரிக்கு சென்றவரை கடந்த 7 நாட்களாக காணவில்லை ....
================
ஹலோ ராம்கி நான் சிவா பேசுறேன் ....அந்த ஐ டி....குடுத்திட்டியா
ஓ.நானே சொல்லணும் நு நெனெச்சேன் ..நீயே போன்பண்ணிட்ட .......நேத்தைக்கு ஷாலினிகிட்ட கொடுத்தேன் ...உனக்கு தாங்க்ஸ் சொல்ல சொன்னாடா!
ஓ.கே. ட வச்சிரு....
========================
விளம்பரத்தை பார்த்து ..போலீஸ் தொலை பேசி எண்ணிற்கு டயல் செய்தான் .....கண்ட்ரோல் ரூமில் இருந்து பேசினார்கள்

சார் ...ஷாலினி னும் ஒரு பொண்ணு காணும்னு விளம்பரம் பார்த்தேன் கிடச்சிட்டாங்களா 1
இல்லையே சார் ! ஒரு க்ளூ கூட கிடைக்க மாட்டேன்கிறது உங்களுக்கு ஏதாவது அவங்கள பத்தி தெரியுமா ?
தெரியுமே ...ராம்கி னும் அவங்க வீட்டுக்கு பக்கத்து தெருவுல ஒருத்தன் இருக்கான் அவனை பிடித்து விசாரிங்க ...உண்மை தெரியும் !...நானே நேரில் வந்து சொல்றேன்

================
மறுநாள் பத்திரிக்கை செய்தி
இளம் பெண்ணை ஏமாற்றி கடலில் அமுக்கி கொலை செய்த வாலிபர் கைது ! துப்புக்கொடுத்த நண்பருக்கு போலீஸ் பாராட்டு
சென்னை : ராம்கி என்ற வாலிபர் ..........



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Nov 29, 2011 9:22 pm

நல்ல முயற்சி பாலாஜி , எழுதும் உறவுகளின் எழுதும் ஆர்வம் இன்னும் அதிகமாகும். திரி வெற்றி பெற வாழ்த்துக்கள்.
நானும் இதில் பங்கு பெற முயல்கிறேன். ஒரு காற்புள்ளியாவது தரமாட்டீங்களா. நீங்க் பெரும்புள்ளிதானே.. நெசமாத்தான். ஐசெல்லாம் வைக்கல.. கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 2 755837

மிதுனா
மிதுனா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011

Postமிதுனா Tue Nov 29, 2011 9:45 pm

வை.பாலாஜி wrote:

நண்பகல் 12:00 மணி ..

கடற்கரையில் இருந்த சில்லறை வியாபாரிகளுக்கு இன்று வெயில் அதிகம் போல தோன்றியது .ஆனால் சிவாவுக்கு அப்படி தோன்றவில்லை. கடிகாரத்தில் மணி பார்த்து ,அரைமணி நேரம் முன்னதாகவே வந்த்துவிட்டதாக மகிழ்ச்சி.மணி மூன்றை நெருங்கியது தொடர்பு கொண்ட கைப்பேசி அனைத்துவைக்கபட்டுயிருந்தது .வெறுப்பில் மணலை உதைத்தபோது தரையில் ஏதோ மின்னியது .அது கல்லூரிபெண்ணின் அடையாள அட்டை ,பின் பக்கத்தில் அவளின் முகவரியும் , கைபேசி எண்ணும் இருந்தது ..

அதை பார்த்த சிவா " யாரோ எவ்வளவு அலட்சியமாக இருந்து இருக்கிறார்கள் , இந்த பெண்களுக்கு கொஞ்சம் கூட பொறுப்பே இல்லை " என்று நினைத்து கொண்டு இருந்த நேரத்தில் திடீரென்று -----------------------------

ஒரு கை அவன் தோளை தொட்டது . சட்டென்று திரும்பினான் சிவா .
அங்கே ----
------------------------ நின்று கொண்டு இருந்தான் பாலாஜி .

பாலாஜியை பார்த்ததும் சிவாவுக்கு மகிழ்ச்சி

" என்னடா ! சக்ஸஸ் தானே போன வேலை ,
நான் கேட்ட கடன கொடுக்கிறதா அவர் ஒத்துகிட்டாரா ? " என்று கேட்டான்

" இம் -- ஒத்துகிட்டார் " என்றான் பாலாஜி குரலில் சுரத்தே இல்லாமல் .

"இதை ஏண்டா இவ்வளவு சோகமா சொல்ற ? ஏண்டா பணம் கிடைச்சு நான் பிசினஸ் ஆரம்பிக்கிறது உனக்கு பிடிக்கலையா ? " - இது சிவா

" அட , அது இல்ல டா நானே வேறு ஒரு டென்ஷன் ல இருக்கேன் " என்று சொன்ன பாலாஜியின் கண்ணில் அப்போதுதான் பட்டது சிவாவின் கையில் இருந்தது . உடனே அதை அவன் கையில் இருந்து பிடுங்கி பார்த்தான் பாலாஜி .

அதை கண்டவுடன் அவன் முகம் , அதிர்ச்சியும் , சந்தோஷமும் , சந்தேகமும் , கொஞ்சம் விரக்தியாகவும் எல்லாம் கலந்த கலவையாக தெரிந்தது சிவாவுக்கு

என்னடா ? என்று கேட்டு பாலாஜியை உலுக்கினான் சிவா அவனிடம் பதில் இல்லை அந்த கார்டையே வெறித்து பார்த்துக்கொண்டு இருந்தான் பாலாஜி .

"டேய் அது இங்கே கீழே கிடந்தது , நான் அதை எடுத்து பார்த்துக்கொண்டு இருந்தேன் " என்றான் சிவா .

அவன் இதை சொல்லி கொண்டு இருக்கும் போதே பாதியில் பாலாஜி
" சிவா , சீக்கிரமா வா , வந்து வண்டியில ஏறு " என்று சொன்னான்

சீறியது பைக் இருவரையும் சுமந்து கொண்டு . சிறிது நேரத்தில் ஒரு வீட்டின் வாசலில் நின்றது . இருவரும் வீட்டின் உள்ளே சென்றனர் .

சிவாவுக்கு ஒன்றும் புரியவில்லை பேசாமல் பேந்த பேந்த முழித்துக்கொண்டு பாலாஜியை பின் தொடர்ந்தான்.

பாதி இருள் சூழ்ந்த அறையினுள் இருவரும் நுழைந்தனர் .
அங்கே மேசை மீது தலை கவிழ்த்து அழுது கொண்டு இருந்தது ஒரு உருவம்
சற்று அருகில் சென்று பார்த்த போது தெரிந்தது நரை விழுந்த தலை .

ஆம் , அந்த உருவம் ஒரு முதியவர் . அவர் ஏன் அழுகிறார் ?
காரணம் புரியவில்லை சிவாவுக்கு . குழப்பத்துடன் பாலாஜியை பார்த்தான் .

முதியவரின் முதுகில் ஆதரவாய் கைவைத்து அவரை தட்டி எழுப்பினான் பாலாஜி .

முதியவர் தன் தலையை நிமிர்த்தி பார்த்தார் . பாலாஜியை கண்டவுடன் சிறு குழந்தை போல் அவனை கட்டிபிடித்துக்கொண்டு அழுதார் .

"என் தீபா எங்கோ போய்விட்டாள் ? என்னை வேண்டாம் என்று சொல்லி போய்விட்டாள் ? " என்று கூறிக்கொண்டே அழுதார் அந்த முதியவர் .

பாலாஜி சொன்னான்
" இல்லை , ஸார் அவள் எங்கும் போகவில்லை இதோ இங்கு இருக்கிறாள் "
என்று அந்த கார்டை அவரிடம் காட்டினான் .

அதை பார்த்த முதியவர் பாய்ந்து அதை பிடுங்கி தன் நெஞ்சோடு கட்டிக்கொண்டு "அம்மா வந்துவிட்டாயா ? எங்கே என்னை விட்டு போயி விட்டாயோ என்று நினைத்து துடிதுடித்துவிட்டேன் . நீ மட்டும் இப்போ வந்து இருக்காவிட்டால் நான் செத்து இருப்பேன் " என்று கூறி அந்த கார்டை கட்டி அனைத்து முத்தமழை பொழிந்தார் .

அவரை அப்படியே படுக்கையில் படுக்க வைத்தான் பாலாஜி . போர்வையை எடுத்து போர்த்திவிட்டு " அழாதீர்கள் " என்றான் . முதியவரும் சரி என்பது போல தலை அசைத்தார் நெஞ்சில் அந்த கார்டை அணைத்தபடி .

சிவாவும் , பாலாஜியும் வீட்டிற்க்கு வெளியே வந்தனர்

" டேய் என்னடா நடக்குது இங்கே ? ஒண்ணுமே புரியல எனக்கு "
சிவா குழப்பத்துடன் கேட்டான்

பாலாஜியிடம் ஒரு நீண்ட பெருமூச்சும் விரக்தியான சிரிப்பும் வெளிப்பட்டது

மெல்ல அவன் பேச தொடங்கினான்

" சிவா கொஞ்ச மாசத்துக்கு முன்னாடி பஸ் ல போகும்போது
உன் சர்டிபிகேட்ஸ் ஐ நீ தவற விட்டுட்டே இல்ல ?

"ஆமா பாலாஜி , நான் தவியா தவிச்சுக்கிட்டு இருந்தப்போ யாரோ ஒரு நல்ல உள்ளம் என் தொலைந்த சர்டிபிகேட்ஸ் ஐ என் அட்ரஸ் க்கு அனுப்பி வச்சாங்க
அவங்க திருப்பி தந்தது என் சர்டிபிகேட்ஸ் ஐ இல்ல டா என் வாழ்க்கைய "
என்ற தழு தழுத்த குரலில் சொன்னான் சிவா .

"அந்த நல்ல உள்ளத்தை கண்டு பிடிச்சு மனதார நன்றி சொல்லனும்டா" என்றான்

அப்படியா ! இங்க வா , என்று அழைத்துக்கொண்டு அந்த வீட்டின் பூஜை அறைக்கு சென்றான் பாலாஜி . அங்கே -----------------------------

id கார்டில் இருந்த பெண்ணின் புகைப்படம் பெரிய அளவில் மாட்டப்பட்டு இருந்தது அந்த படத்துக்கு --- மாலை போடப்பட்டு இருந்தது . அதிர்ந்து போனான் சிவா

நன்றி சொல் தீபாவுக்கு - இது பாலாஜி

குழம்பி தவித்தான் சிவா

தொடர்ந்தான் பாலாஜி

"தீபா என் தோழி , அவள் பெற்றோருக்கு ஒரே மகள் . அப்பா செல்லம் .

அவள் கேட்டதை எதையும் மறுக்காமல் வாங்கி தருவார் அவள் அப்பா

அவள் கேட்டாள் , ஸ்கூட்டி வாங்கி தந்தார் .
அவள் கேட்டாள் , கார்த்திக் ஐ .
அவர் மறுக்கவில்லை .
"சரிமா உன் விருப்பமே என் விருப்பம்" என திருமணத்திற்க்கு சம்மதித்தார் .

திருமண நாள் நெருங்கியது .

" அம்மா , பியூட்டி பார்லர் வரைக்கும் போயிட்டு வரேன் " என்று வாசலில் இருந்து கத்திய படியே தன் ஸ்கூட்டி யில் சிட்டென பறந்தாள் .

"பாத்து மெதுவா போடி" என்று கத்தியபடியே அவள் அம்மா ஓடி வந்தார்
அதற்குள் தீபா தெருமுனையை கடந்து இருந்தாள் .

நேரம் ஆகிகொண்டே இருந்தது " டேய் பாலாஜி எனக்கென்னவோ பயமாயிருக்கு கொஞ்சம் பார்லர் வரை போயி பாருடா " என்று தீபா அம்மா சொன்னார்கள்

சரி என்று நான் என் பைக்கை எடுத்து கொண்டு வீட்டை விட்டு வெளியே வரும் போது எதிரே ஆம்புலன்ஸ் ஒன்று வந்தது . அதில் தீபா ரத்த கோலத்தில் . அம்மா அதை கண்டு மூர்ச்சை ஆனார் .

ஆம்புலன்சில் வந்தவர் சொன்னார்

"இந்த பொண்ணு ரோட் ஆக்சிடென்ட் ல செத்து போச்சுபா ,
பக்கத்தில இதோ இந்த id கார்ட் கிடந்தது அத பாத்து இங்கே கொண்டு வந்தோம் "

எனக்கு பிரம்மை பிடித்தது போல் ஆகிவிட்டது .
உடனே தீபாவின் அப்பா ஆபீசுக்கு ஃபோன் போட்டேன் .

மூர்ச்சை ஆகி இருந்த அம்மாவை தட்டி எழுப்ப முயன்றேன்
நீண்ட நேர முயற்சிக்கு பின்னரே தெரிந்தது
போனது தீபா மட்டும் அல்ல அவள் அம்மாவும் தான் என்று

தீபாவின் அப்பா வந்தார் . ஒன்றும் பேசவில்லை. எல்லாவற்றையும் பார்த்தார் . இனி ஆகவேண்டிய காரியங்களை எல்லாம் கவனிங்கப்பா என தன் வேலைக்காரர்களிடம் சொன்னார் . அறையின் ஒரு ஓரத்தில் சென்று அமர்ந்தார்

கட கடவென எல்லா காரியமும் நடக்க ,
உலகத்தை விட்டு சென்ற தீப்பாவும் அவள் அம்மாவும்
வீட்டை விட்டு சென்று விட்டனர் .

கார்த்திக் கதறி துடித்தான்
இனி தனக்கு வாழ்வே இல்லை என்றான் .
தானும் இறக்கபோவதாக கூறினான் .
அவனது பெற்றோர் அவனை சமாதானம் செய்ய
வெளி நாட்டிர்க்கு அழைத்து சென்றுவிட்டனர் .

தீபாவின் அப்பா அன்று முதல் குழந்தை போல் ஆகிவிட்டார் .
கையில் தீபாவின் அந்த id கார்டை வைத்துக்கொண்டு வீதியில் போவோர் வருவோரிடம் எல்லாம் என் மகள் இந்த காலேஜில்தான் படிக்கிறாள்
இன்னும் காலேஜில் இருந்து வரவில்லை . நீங்கள் பார்த்தீர்களா ?
என கேட்டக துவங்கினார்

அன்று முதல் இன்று வரை இந்த செயலை அவர் தொடர்ந்து செய்துகொண்டு இருக்கிறார் . அப்படிதான் அவர் பீச் பக்கம் போயி கேட்டு கொண்டு இருந்து இருப்பார்

அப்புறம் எப்படியோ அதை தவற விட்டு விட்டார் . தேடி பார்த்தும் பிரியோஜனம் இல்லை என்று தெரிந்தவுடன் அவர் கால் போன போக்கில் போயி கொண்டு இருந்தார் .

ரோட்டில் அவரை கண்ட நான் அவரை கொண்டுவந்து வீட்டில் சேர்த்தேன் . விஷயத்தை தெரிந்து கொண்டேன் . எப்படியாவது அதை கண்டுபிடிக்கவேண்டும் என்று நினைத்து சரி , முதலில் உன் விஷயத்தை உன்னிடம் சொல்லிவிட்டு பின் தேடுவது பற்றி யோசிப்போம் என்று நினைத்தே உன்னிடம் வந்தேன் "

சொல்லி முடித்தான் பாலாஜி

சிவாவுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை . ஸ்தம்பித்து நின்றான்

"தீபாவை நீ எனக்கு அறிமுகம் செய்து இருந்தால்
அவளை நேரில் பார்த்து நன்றி சொல்லி இருப்பேன் டா "
என்று ஒரு ஆழ்ந்த பெரு மூச்சுக்கிடையில் சொன்னான் சிவா .
மேற்கொண்டு எதுவும் பேசாமல் அங்கிருந்து சென்றான் சிவா

போகும் சிவாவை பார்துக்கொண்டு இருந்த பாலாஜியின்
கண்களில் கண்ணீர் வெள்ளமாய் வழிந்தோடியாது .

அவன் மனம் பேசியது

ஆம் , சிவா நான் அவளை உனக்கு அறிமுகம்
செய்ய நினைத்தேன் என் மனைவியாக .

பாலாஜியின் உள்ளம் எரிமலையாக குமுறியது .

தீபா அன்று என்னிடம் சொன்னாள் ,
"யாரோ பாவம் அவங்க சர்டிபிகேட்ஸ் ஐ தவற விட்டுட்டாங்க
நல்ல வேளை அவர் அட்ரஸ் இருக்கு அவருக்கு அனுப்பீரலாம்"

அட்ரெஸ்சை பார்த்தால் , அட ! இது நம்ம சிவா ,
சரி தீபா அவள் இஷ்ட்டபடியே செய்யட்டும்

சிவாகிட்ட இது பத்தி சொல்ல வேண்டாம் .

ஒரு நாள் சிவா முன்னாடி தீபாவை கொண்டு போயி நிறுத்தி

" பாருடா இவதான் என் வருங்கால மனைவி
உன் சர்டிபிகேட்ஸ் ஐ அனுப்பி வைத்தவள்"
என்று பெருமை பொங்க கூறவேண்டும் என்று நினைத்தேனடா நண்பா

ஆனால் என் உள்ளம் சுக்கு நூறாய் உடைந்தது
அவள் கார்த்திக்கை காதலிக்கிறாள் என்று தெரிந்ததும் .
எனக்கு உலகமே இருண்டு போனது .

அவளுடன் வாழத்தான் எனக்கு கொடுப்பினை இல்லை என்றால் வாய் விட்டு கதறி ஆழ கூட அருகதை இல்லாமல் போய்விட்டது நண்பா எனக்கு

தீபாவின் அப்பா மகளை இன்னமும் நம்பிக்கையுடன்
தேடிக்கொண்டு இருக்கிறார் நிம்மதியாக

உறுதியாக அவள் கிடைத்துவிடுவாள் என்ற நம்பிக்கையுடன்
அவரால் அவ்வாறு சுதந்திரமாக புத்தி சுவாதீனமாக நடந்துகொள்ள முடிகிறது

கார்திக்கால் வாய் விட்டு அழமுடிகிறது
என் காதலி போயி விட்டாளே என்று
அனைவரிடம் கூறி புலம்ப முடிகிறது சுதந்திரமாக

ஆனால் நான் !!????????

என்னால் வாய் விட்டு கதறி ஆழ முடியாது .
அவளை நான் காதலித்தேன் ஆனால் அவள் சென்று விட்டாளே
என்று சுதந்திரமாக சொல்லி புலம்ப முடியாது

எத்தகைய கொடிய பாவி நான் ???????????

மனதினுள் பூட்டியும் வைக்க இயலாமல் ,
வெளியே மற்றவரிடம் சொல்லி அழுது புலம்பவும் முடியாமல்
நான் படும் பாடு , அய்யோ !!? என் நெஞ்சே வெடித்துவிடும் போலிருக்கிறதே!! .

இந்த கொடுமையை அனுபவிப்பதற்க்கு பதில்
ஒரெடியாக செத்து போய்விடலாமே
அது எவ்வளவோ மேல் என்று எண்ணி எண்ணி உருகி
அழுத படியே மனம் நெந்து வெந்தபடியே
என் இரவுகளை கொன்று ,
காலத்தை வென்று என் முடிவை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்

என்று எண்ணியபடியே சிலையாக ,
பித்து பித்தவன் போல் நின்று இருந்தான் பாலாஜி

காலம் அவன் காயங்களை ஆற்றுமா ? ??????

Sponsored content

PostSponsored content



Page 2 of 27 Previous  1, 2, 3 ... 14 ... 27  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக