ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடந்த 2 நாட்களில் மட்டும் தமிழகத்தில் மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்வு

3 posters

Go down

கடந்த 2 நாட்களில் மட்டும் தமிழகத்தில் மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்வு Empty கடந்த 2 நாட்களில் மட்டும் தமிழகத்தில் மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்வு

Post by சிவா Sun Nov 27, 2011 11:18 am

கடந்த 2 நாட்களில் மட்டும் தமிழகத்தில் மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்வு Rain02

தமிழ்நாட்டில் கடந்த 2 நாட்களாக பெய்த பலத்த மழைக்கு இதுவரை பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்து உள்ளது.

தமிழகத்தில் பலத்த மழை

தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவ மழை தொடங்கி உள்ளது. இதனால் வங்க கடலில் அடுத்தடுத்து புயல் சின்னங்கள் ஏற்பட்டு தமிழகம் முழுவதும் பலத்த மழை பெய்து வருகிறது. கடந்த 25-ந் தேதி பெய்த மழைக்கு 3 பேர் பலியானார்கள்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் குமரி கடல் பகுதியில் ஏற்பட்ட புதிய காற்றழுத்த தாழ்வு நிலை வலுவடைந்து நேற்று தமிழ்நாடு முழுவதும் பலத்த மழை பெய்து வருகிறது.

இந்த மழைக்கு நேற்று ஒரே நாளில் மட்டும் 7 பேர் பலியானார்கள். நேற்றுமுன்தினம் பலியான 3 பேர் உள்பட 10 பேர் கடந்த 2 நாட்களில் பலியாகி உள்ளனர்.

நேற்று ஒரே நாளில் மழைக்கு பலியானவர்கள் விவரம் வருமாறு:-

அ.தி.மு.க. கவுன்சிலர்

தமிழகத்தில் பெய்து வரும் மழைக்கு நேற்று சித்தையன்கோட்டை பேரூராட்சி 11-வது வார்டு உறுப்பினர் சேடப்பட்டி அ.தி.மு.க. கவுன்சிலர் சக்திவேல் (வயது 42) கிணற்றில் இருந்து மின்மோட்டாரை தூக்கும்போது மின்சாரம் தாக்கி பலியானார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் பலத்த மழையால் கலசப்பாக்கம் அருகே சி.நிம்மியேந்தல் கிராமத்தில் வீட்டு சுவர் இடிந்து விழுந்து ரோஸ்மேரி (45) என்ற பெண் பலியானார். அவரது கணவர் ஜேம்ஸ், மகள் மேனகா ஆகியோர் காயமடைந்தனர்.

சென்னை சிறுவன் சாவு

சென்னை பனையூரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் மஸ்தான் தனது மகன் அபுதாகீர் உள்ளிட்ட குடும்பத்தினருடன் சொந்த ஊரான வந்தவாசி அருகே உள்ள சென்னாவரத்துக்கு சென்றார். அவர்கள் அனைவரும் வீட்டில் தங்கியிருந்தபோது வீட்டு சுவர் இடிந்து விழுந்தது. இதில் சிறுவன் அபுதாகீர்(4) பலியானான். மேலும் 3 பேர் காயம் அடைந்தனர்.

போலீஸ்காரர் பலி

சேலம் மாவட்டம் தொளுவளூரை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவரது மகன் கார்த்திகேயன் (21). இவர் கடந்த 10 மாதங்களுக்கு முன்தான் போலீசில் சேர்ந்தார். அவர் கமுதி ஆயுதப்படை குடியிருப்பில் மின்சார விளக்கை அணைக்க சுவிட்சில் கை வைத்தபோது மின்சாரம் தாக்கி பலியானார்.

திருச்சி பொன்மலை ஆலத்தூர் கிராம பகுதியை சேர்ந்தவர் புஷ்பவள்ளி (55). இவர் நேற்றுமுன்தினம் இரவு வீட்டில் தூங்கி கொண்டு இருந்தார். அப்போது மழையால் அவரது வீட்டு சுவர் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி இறந்தார்.

அய்யப்ப பக்தர் சாவு

திருச்சி மாவட்டத்தில் அலங்காநல்லூர் கிராமத்தில் பக்கத்து வீட்டு சுவர் இடிந்து விழுந்ததில் கர்ப்பிணிப்பெண் உள்பட 3 பேர் காயம் அடைந்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் சேத்தியாபட்டி என்ற கிராமத்தை சேர்ந்த அய்யப்ப பக்தர் ஒருவர் மின் மோட்டாரை இயக்க சுவிட்சை போட்ட போது மின்சாரம் தாக்கி பலியானார்.

புதுமாப்பிள்ளை சாவு

நெல்லை மாவட்டம் கயத்தாறை அடுத்த அய்யானாரூத்து அம்மன் கோவிலை சேர்ந்தவர் சண்முகையா. இவருடை மகன் செல்லத்துரை (25). காற்றாலையில் எலெக்டீரிசியனாக வேலை பார்த்த இவருக்கும் கற்பகவள்ளி என்ற பெண்ணுக்கும் கடந்த 18 நாட்களுக்கு முன்தான் திருமணம் நடந்தது.

நேற்று மாலை 4 மணி அளவில் செல்லத்துரையின் வீட்டில் திடீர் மின்தடை ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் வீட்டின் அருகே உள்ள மின்கம்பத்தில் ஏறி மின் பழுதை சரி செய்ய முயன்றார். இதில் அவர் மீது மின்சாரம் பாய்ந்து, கம்பத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டு உடல் கருகி பலியானார்.

குமரியில் 200 படகுகள் சேதம்

குமரி மாவட்டத்தின் கடலோர பகுதிகளில் நேற்று சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால் கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டு உள்ளது. இதன்காரணமாக கன்னியாகுமரி, ஆரோக்கியபுரம், பொழிக்கரை உள்ளிட்ட கடலோர பகுதிகளில் கடல் அலை 15 அடி உயரத்துக்கு அலைகள் எழுந்தன.

கடல் கொந்தளிப்பு மற்றும் சூறைக்காற்றால் 20-க்கும் மேற்பட்ட படகுகள் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டன. 200-க்கும் மேற்பட்ட படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதி சேதம் அடைந்தன.

பள்ளம்துறை பகுதியில் கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந்த 18 படகுகள் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டன. அதை மீட்டுக்கொண்டு வர மீனவர்கள் ஒரு குழுவாக கடலில் குதித்தனர். அவர்கள் மிகலாவகமாக கடலில் இழுத்துச் செல்லப்பட்ட 15 படகுகளை மீட்டனர். ஆனால் 3 படகுகளை மீட்க முடியாமல் இருந்தது. அதையும் மீட்க ஒரு குழு சென்ற உள்ளது.

அணைகள் நிரம்புகின்றன

மழையால் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. குமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளது.

நெல்லை மாவட்டம் பாபநாசம் அணையின் நீர்மட்டம் நேற்று ஒரே நாளில் 17 அடியாக உயர்ந்தது. மணிமுத்தாறு அணை, சேர்வலாறு ஆகிய அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. பலத்த மழையால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

வெள்ளத்தில் சிக்கிய 14 பேர் மீட்பு

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே அய்யனார் கோவில் அருவியில் மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. நேற்று மாலை கோவிலுக்கு சென்ற பக்தர்கள் மற்றும் பூசாரிகள் உள்பட 14 பேர் கிழக்கு பகுதியில் திடீர் வெள்ளத்தில் சிக்கினார்கள்.

இதுபற்றி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து 14 பேரையும் பத்திரமாக மீட்டனர்.

2 பேர் ஆற்றில் அடித்து செல்லப்பட்டனர்

பெங்களூர் பன்சகிரி பகுதியை சேர்ந்த விஜய்லட்சுமணன் (34), கெப்பல் பகுதியை சேர்ந்த சுப்புரத்பிஸ்வால் (29) ஆகியோர் நண்பர்களுடன் ஒகேனக்கல்லுக்கு வந்தனர். அவர்கள் ஆலாம்பாடி பரிசல்துறை அருகே குளித்துக்கொண்ட இருந்தனர். அப்போது விஜய்லட்சுமணன், சுப்புரத்பிஸ்வால் ஆகிய 2 பேரும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டனர். அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

20 ஆயிரம் எக்டேர் நெல்பயிர்கள் மூழ்கின

தஞ்சை, திருவாரூர், நாகை, நெல்லை, சேலம் ஆகிய மாவட்டங்களில் நேற்று பலத்த மழை பெய்தது. தஞ்சாவூர் மாவட்டத்தில் இந்த மழையால் 20 ஆயிரம் எக்டேரில் நெல் பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளன.

சேலம் மாவட்டத்தில் பெய்த மழையால் தலைவாசல், வீரகனூர் பகுதியில் உள்ள தரைப்பாலங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. இதனால் 20 கிராமங்கள் துண்டிக்கப்பட்டன.

திருச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, கரூர் ஆகிய மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்தது. திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் பலத்த மழையால் சந்தான ராமசாமி கோவில் குளத்தை ஒட்டிய பகுதியில் உள்ள 2 அறைகள் இடிந்து விழுந்தன.

பாம்பனில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் துறைமுக கடல்சார் வாரிய அலுவலகத்தில் நேற்றுமுன்தினம் இரவு மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வண்ணம் 3-ம் எண் புயல் கூண்டு ஏற்பட்டது. நேற்று 2-வது நாளாக 3-ம் எண் புயல் எச்சரிக்கை ஏற்றப்பட்டு இருந்தது.

20 இடங்களில் மரங்கள் சாய்ந்தன

ஊட்டி மற்றும் அதன்சுற்றுப்புற பகுதிகளில் நேற்றுமுன்தினம் முதல் மீண்டும் மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக அரசு தாவரவியல் பூங்கா, கெம்பைய்யா தியேட்டர் முன்பு, மான்பூங்காவின் பின்புறம் உள்பட 20 இடங்களில் மின் கம்பிகள் மீது மரங்கள் விழுந்தன. இதனால் ஏற்பட்ட மின் தடையை ஊழியர்கள் சீரமைத்தனர்.

வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு

நேற்றுமுன்தினம் இரவு முதல் வைகை ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் அடைமழை பெய்தது. இதைத்தொடர்ந்து நேற்று பிற்பகலில் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் ஆற்றில் அமைக்கப்பட்ட உறைகிணறுகளில் பொருத்தப்பட்டு இருந்த குடிநீர் குழாய்கள் மற்றும் மின் இணைப்பு கேபிள்கள் அனைத்தும் அடித்து செல்லப்பட்டது.

தினதந்தி


கடந்த 2 நாட்களில் மட்டும் தமிழகத்தில் மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்வு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கடந்த 2 நாட்களில் மட்டும் தமிழகத்தில் மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்வு Empty Re: கடந்த 2 நாட்களில் மட்டும் தமிழகத்தில் மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்வு

Post by சிவா Sun Nov 27, 2011 11:18 am

கடந்த 2 நாட்களில் மட்டும் தமிழகத்தில் மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்வு Rain03


கடந்த 2 நாட்களில் மட்டும் தமிழகத்தில் மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்வு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கடந்த 2 நாட்களில் மட்டும் தமிழகத்தில் மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்வு Empty Re: கடந்த 2 நாட்களில் மட்டும் தமிழகத்தில் மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்வு

Post by சிவா Sun Nov 27, 2011 11:19 am

கடந்த 2 நாட்களில் மட்டும் தமிழகத்தில் மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்வு Rain05


கடந்த 2 நாட்களில் மட்டும் தமிழகத்தில் மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்வு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கடந்த 2 நாட்களில் மட்டும் தமிழகத்தில் மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்வு Empty Re: கடந்த 2 நாட்களில் மட்டும் தமிழகத்தில் மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்வு

Post by பிளேடு பக்கிரி Sun Nov 27, 2011 11:27 am

இன்னும் சில நாட்களுக்கு பலத்த மழை இருக்குமாமே? அதிர்ச்சி



கடந்த 2 நாட்களில் மட்டும் தமிழகத்தில் மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்வு Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

கடந்த 2 நாட்களில் மட்டும் தமிழகத்தில் மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்வு Empty Re: கடந்த 2 நாட்களில் மட்டும் தமிழகத்தில் மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்வு

Post by ராஜா Sun Nov 27, 2011 11:36 am

பிளேடு பக்கிரி wrote:இன்னும் சில நாட்களுக்கு பலத்த மழை இருக்குமாமே? அதிர்ச்சி
ஆமாம் , அப்படிதான் சொல்லுறாங்க. இங்கேயும் ரெண்டு நாளா மழை.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கடந்த 2 நாட்களில் மட்டும் தமிழகத்தில் மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்வு Empty Re: கடந்த 2 நாட்களில் மட்டும் தமிழகத்தில் மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்வு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ரஷ்யாவின் வொல்கா படகு விபத்து : பலியானோர் எண்ணிக்கை 129 ஆக உயர்வு!
» விளையாட்டு மைதான குண்டு வெடிப்பு :பலியானோர் எண்ணிக்கை 95 ஆக உயர்வு
» உ.பி. விஷச் சாராயத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 21-ஆக உயர்வு: முக்கிய குற்றவாளி கைது
» பன்றிக்காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 3 ஆக உயர்வு, சென்னையில் மேலும் ஒரு பெண் சாவு
» தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum