புதிய பதிவுகள்
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am
» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am
» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am
» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm
by sanji Today at 9:27 am
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am
» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am
» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am
» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Geethmuru |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அணு உலைகளுக்கு மாற்று : வெளிவராத உண்மைகள்
Page 1 of 1 •
கூடங்குள அணுஉலைகள் தொடர்பாக 13,147 கோடி ரூபாயைக் கட்டுமானச் செலவு செய்தபின் இயக்கவிருக்கின்ற நேரத்தில் மூடச்சொல்லிப் போராடுகிறார்களே! அணுஉலை கட்டுமானம் துவங்கும் முன்பே தடுத்து நிறுத்தியிருக்கலாமே! - என்ற வாதங்கள் பொதுவெளியில் முன்வைக்கப்படுகின்றன.
அணுஉலை வேண்டாம் என்று சொன்னால் மின்தேவை இருக்கிறது; அணுஉலையே அதற்குத் தீர்வு; அணுஉலையை நிறுவத் தகுந்த இடத்தில் தானே வைத்தாக வேண்டும் என்ற வாதம். அணுஉலைத் திட்டத்தை மறுக்கிறவர்கள் மாற்றுப் பற்றிக் கூறாதவரை தேச நலனுக்கு எதிரானவர்கள் என்ற பார்வையும் நிலவுகிறது. வழிதெரியா இந்தப் புதிர்ப்பாதையில் இருந்து நாம் எவ்வாறு தப்புவது? நம் வாழ்வையும், வாழ்வாதாரங்களையும் நமக்குப் பிந்தைய தலைமுறையினரின் நலனையும் எப்படிக் காப்பது என்பது சமூக நலன் விரும்பிகளுக்கு முன்னுள்ள விழிபிதுங்கவைக்கும் சவாலாக உள்ளது!
அணுஉலைகளின் மூலம் தயாரிக்கப்படுகிற மின்சாரம் பற்றிய பிரச்சினையாகத் துவங்கினாலும், தோன்றினாலும், உண்மையில் இது ஆற்றல் பற்றிய பிரச்சினை தான். ஆற்றல் எரிசக்திக்கான போட்டா போட்டியில் உலக அரங்கில்; வல்லரசுகள், பல்வேறு நாடுகளில் தங்கள் படைகளை இறக்கி, ஏதேதோ காரணங்களைச் சொல்லி, அங்கு அதிகாரத்தில் உள்ளோர் மக்களைக் கொன்று குவித்து ஆற்றல் எரிசக்திக்கான தங்களின் அடங்காப் பசியைத் தீர்த்துக் கொள்ள முயற்சிப்பதும் வரலாறு. சில ஆண்டுகளுக்கு முன் ஈராக்கிலும், தற்போது லிபியாவிலும் நடந்தவைகளை நாம் நன்கறிவோம். பல லட்சம் கோடி டாலர்கள் புழங்குவது தான் இந்த ஆற்றல் துறை!
தற்போது தேசம் எனும் குதிரைக்கு சேணம் பூட்டப்பட்டு விட்டது. அணுஉலை பாதுகாப்பானதா? இல்லையா? என்ற ஒரே திசையில் தேசத்தை முடுக்கிவிடுகின்றவர்களாக உள்ளனர் அணுவிஞ்ஞானிகள்.
ஆக, பொது வெளியில் இன்று விவாதப் பொருள் அணுஉலை பாதுகாப்பானதா? இல்லையா? என்ற தர்க்கமாகச் சுருக்கப்பட்டுள்ளது.
அணுவிஞ்ஞானத்தளத்தை ஒட்டியதாக மட்டும் கூடங்குள அணுஉலைகள் தொடர்பாக மட்டும், பாதுகாப்பு உள்ளிட்ட எவற்றைப் பற்றி; பேச வேண்டும் என அதிகார அணுவிஞ்ஞானிகளும், அரசும் பேசத் திட்டமட்டுள்ளார்களா? அதைப் பற்றி மட்டுமான தொழில் வல்லுனத்தன்மை கொண்ட அரசு - போராட்டத் தரப்புக்கு இடையிலான விவாதங்கள் என்று சுருக்க நடந்துவரும் அரசின் முயற்சிகளில் - மத்திய அரசின் பொறியில் மக்கள்திரள் போராட்டங்கள் சிக்குகின்றனவா என்ன?
அணு உலைக்கு மாற்று ஏதும் உள்ளதா?
தேவையே புதிய கண்டுபிடிப்புகளின் தாய்!
அமெரிக்காவில் 1970களில் ஆற்றல் பிரச்சினையின் போது (Energy Crisis) பயனீட்டாளர்கள் கட்டுக்கடங்காமல் அதிகரிக்கும் ஆற்றல் விலைகளைச் சமாளிக்க வேண்டி வந்தது. அப்போது அணு உள்ளிட்ட பல்வேறு ஆற்றல் மூலங்கள் (Energy Sources) சோதித்துப் பார்க்கப்பட்டன. 1979ல் மூன்று மைல் தீவில் அணு உலைப் பேரழிவு நிகழ்ந்தது. 1980களில் புதிய ஆற்றல் சேமிப்பு முறை தோற்றுவிக்கப்பட்டது. அது அதிகரித்துவந்த ஆற்றல் விலைகளை பயனீட்டாளர்கள் சமாளிப்பதற்கு உதவியது. அந்த முறைதான் திறம்பட்ட ஆற்றல் பயன்பாடு.
அமெரிக்க ஆற்றல் விஞ்ஞானிகள், “திறம்பட்ட ஆற்றல் பயன்பாட்டுச் (Energy of Efficiency) செயல்பாடுகள் 1970களில் துவங்கி அமெரிக்க ஆற்றல் தேவையைக் குறைக்க வழிசெய்து வந்திருக்கிறது. ஒரு டாலர் (Gross Domestic Product adjusted for imports) க்கான ஆற்றல் பயன்பாடு 1970களில் உள்ளதைப் போலவே இருந்திருந்தால், அமெரிக்கா 2008ல் பயன்படுத்திய ஆற்றலைக் காட்டிலும் 80 விழுக்காடு அதிகமாகச் செலவழிக்க வேண்டி இருந்திருக்கும். வேறுவிதத்தில் சொன்னால் திறம்பட்ட ஆற்றல் பயன்பாடு தான் ஆற்றலுக்கான எங்கள் முதலாவது மூலம். பழைய தொழில்நுட்பமும், சந்தை நிலவரமும் மாற்றமில்லாது இருந்திருந்தால், அதிகரித்திருக்கக்கூடிய ஆற்றல் பயன்பாட்டின் 70 விழுக்காட்டிற்கு மேல் குறைத்தது திறம்பட்ட ஆற்றல் பயன்பாடு தான் என்கின்றனர்.
திறம்பட்ட ஆற்றல் பயன்பாடுதான் ஆற்றலுக்கான எங்கள் முதலாவது மூலம் என்கிறார்களே? அதாவது அனல் மின், நீர் மின், சூரியசக்தி, காற்றாலை மூலமான மின் மூலங்கள் என எல்லா வகை மின் மூலங்களைக் காட்டிலும் இந்த திறம்பட்ட ஆற்றல் பயன்பாடுதான் ஆற்றலுக்கான முதல் மூலம் என்று மிகப் பெருமையாகப் பறைசாற்றுகிறார்களே! அது என்ன?
அணுஉலை வேண்டாம் என்று சொன்னால் மின்தேவை இருக்கிறது; அணுஉலையே அதற்குத் தீர்வு; அணுஉலையை நிறுவத் தகுந்த இடத்தில் தானே வைத்தாக வேண்டும் என்ற வாதம். அணுஉலைத் திட்டத்தை மறுக்கிறவர்கள் மாற்றுப் பற்றிக் கூறாதவரை தேச நலனுக்கு எதிரானவர்கள் என்ற பார்வையும் நிலவுகிறது. வழிதெரியா இந்தப் புதிர்ப்பாதையில் இருந்து நாம் எவ்வாறு தப்புவது? நம் வாழ்வையும், வாழ்வாதாரங்களையும் நமக்குப் பிந்தைய தலைமுறையினரின் நலனையும் எப்படிக் காப்பது என்பது சமூக நலன் விரும்பிகளுக்கு முன்னுள்ள விழிபிதுங்கவைக்கும் சவாலாக உள்ளது!
அணுஉலைகளின் மூலம் தயாரிக்கப்படுகிற மின்சாரம் பற்றிய பிரச்சினையாகத் துவங்கினாலும், தோன்றினாலும், உண்மையில் இது ஆற்றல் பற்றிய பிரச்சினை தான். ஆற்றல் எரிசக்திக்கான போட்டா போட்டியில் உலக அரங்கில்; வல்லரசுகள், பல்வேறு நாடுகளில் தங்கள் படைகளை இறக்கி, ஏதேதோ காரணங்களைச் சொல்லி, அங்கு அதிகாரத்தில் உள்ளோர் மக்களைக் கொன்று குவித்து ஆற்றல் எரிசக்திக்கான தங்களின் அடங்காப் பசியைத் தீர்த்துக் கொள்ள முயற்சிப்பதும் வரலாறு. சில ஆண்டுகளுக்கு முன் ஈராக்கிலும், தற்போது லிபியாவிலும் நடந்தவைகளை நாம் நன்கறிவோம். பல லட்சம் கோடி டாலர்கள் புழங்குவது தான் இந்த ஆற்றல் துறை!
தற்போது தேசம் எனும் குதிரைக்கு சேணம் பூட்டப்பட்டு விட்டது. அணுஉலை பாதுகாப்பானதா? இல்லையா? என்ற ஒரே திசையில் தேசத்தை முடுக்கிவிடுகின்றவர்களாக உள்ளனர் அணுவிஞ்ஞானிகள்.
ஆக, பொது வெளியில் இன்று விவாதப் பொருள் அணுஉலை பாதுகாப்பானதா? இல்லையா? என்ற தர்க்கமாகச் சுருக்கப்பட்டுள்ளது.
அணுவிஞ்ஞானத்தளத்தை ஒட்டியதாக மட்டும் கூடங்குள அணுஉலைகள் தொடர்பாக மட்டும், பாதுகாப்பு உள்ளிட்ட எவற்றைப் பற்றி; பேச வேண்டும் என அதிகார அணுவிஞ்ஞானிகளும், அரசும் பேசத் திட்டமட்டுள்ளார்களா? அதைப் பற்றி மட்டுமான தொழில் வல்லுனத்தன்மை கொண்ட அரசு - போராட்டத் தரப்புக்கு இடையிலான விவாதங்கள் என்று சுருக்க நடந்துவரும் அரசின் முயற்சிகளில் - மத்திய அரசின் பொறியில் மக்கள்திரள் போராட்டங்கள் சிக்குகின்றனவா என்ன?
அணு உலைக்கு மாற்று ஏதும் உள்ளதா?
தேவையே புதிய கண்டுபிடிப்புகளின் தாய்!
அமெரிக்காவில் 1970களில் ஆற்றல் பிரச்சினையின் போது (Energy Crisis) பயனீட்டாளர்கள் கட்டுக்கடங்காமல் அதிகரிக்கும் ஆற்றல் விலைகளைச் சமாளிக்க வேண்டி வந்தது. அப்போது அணு உள்ளிட்ட பல்வேறு ஆற்றல் மூலங்கள் (Energy Sources) சோதித்துப் பார்க்கப்பட்டன. 1979ல் மூன்று மைல் தீவில் அணு உலைப் பேரழிவு நிகழ்ந்தது. 1980களில் புதிய ஆற்றல் சேமிப்பு முறை தோற்றுவிக்கப்பட்டது. அது அதிகரித்துவந்த ஆற்றல் விலைகளை பயனீட்டாளர்கள் சமாளிப்பதற்கு உதவியது. அந்த முறைதான் திறம்பட்ட ஆற்றல் பயன்பாடு.
அமெரிக்க ஆற்றல் விஞ்ஞானிகள், “திறம்பட்ட ஆற்றல் பயன்பாட்டுச் (Energy of Efficiency) செயல்பாடுகள் 1970களில் துவங்கி அமெரிக்க ஆற்றல் தேவையைக் குறைக்க வழிசெய்து வந்திருக்கிறது. ஒரு டாலர் (Gross Domestic Product adjusted for imports) க்கான ஆற்றல் பயன்பாடு 1970களில் உள்ளதைப் போலவே இருந்திருந்தால், அமெரிக்கா 2008ல் பயன்படுத்திய ஆற்றலைக் காட்டிலும் 80 விழுக்காடு அதிகமாகச் செலவழிக்க வேண்டி இருந்திருக்கும். வேறுவிதத்தில் சொன்னால் திறம்பட்ட ஆற்றல் பயன்பாடு தான் ஆற்றலுக்கான எங்கள் முதலாவது மூலம். பழைய தொழில்நுட்பமும், சந்தை நிலவரமும் மாற்றமில்லாது இருந்திருந்தால், அதிகரித்திருக்கக்கூடிய ஆற்றல் பயன்பாட்டின் 70 விழுக்காட்டிற்கு மேல் குறைத்தது திறம்பட்ட ஆற்றல் பயன்பாடு தான் என்கின்றனர்.
திறம்பட்ட ஆற்றல் பயன்பாடுதான் ஆற்றலுக்கான எங்கள் முதலாவது மூலம் என்கிறார்களே? அதாவது அனல் மின், நீர் மின், சூரியசக்தி, காற்றாலை மூலமான மின் மூலங்கள் என எல்லா வகை மின் மூலங்களைக் காட்டிலும் இந்த திறம்பட்ட ஆற்றல் பயன்பாடுதான் ஆற்றலுக்கான முதல் மூலம் என்று மிகப் பெருமையாகப் பறைசாற்றுகிறார்களே! அது என்ன?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
திறம்பட்ட ஆற்றல் பயன்பாடு (Energy Efficiency)
இந்த வகை ஆற்றல் சேமிப்பின்படி ஒரே ஆற்றல் வக்கு (உதாரணம்: ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு வண்டியில் போவதற்கு ஆகும் ஆற்றலை, ஆற்றல் விரையத்தைக் குறைப்பதற்கான சில மாற்றங்களைச் செய்வதன் மூலம் குறைக்க முடியும்)
ஒரு புரிதலுக்காக இப்படிச் சொல்ல ஆரம்பிக்கலாம், தாயார் தினமும் சமைத்து வைத்த உணவை சாப்பிடும் போது விரையம் செய்து வந்ததால் நால்வர் மட்டுமே சாப்பிட்டு வந்தனர். அதே நேரத்தில் தாயார் தினமும் சந்ைத்து வைத்த உணவை சாப்பிடுகையில் விரையம் செய்யாத போது, மீதம் இருந்த சாப்பாடு கூடுதலாக ஒருவருக்கு உணவிடும் அளவிற்கு இருந்தது. இந்த இரு நிகழ்வுகளிலும் அந்த நால்வரும் சாப்பிட்ட சாப்பாட்டின் அளவு குறையவில்லை. விரையம் செய்வதை தவிர்த்தனால் ஒருவர் கூடுதலாகச் சாப்பிடும் அளவிற்கு சாப்பாடு மிஞ்சுகிறது. விரையம் செய்து சாப்பிடுவதைக் காட்டிலும் விரையம் செய்யாமல் சாப்பிடும்போது கிடைத்த ஒருவருக்கான சாப்பாட்டை தாயார் அரூபமாக உருவாக்கியதாக (யண்ழ்ற்ன்ஹப் ஏங்ய்ங்ழ்ஹற்ண்ர்ய்) நினைத்துக் கொள்ளலாம் அல்லவா? இதையே ஈஹல்ஹcண்ற்ஹ் ஈழ்ங்ஹற்ண்ர்ய் என்று சொல்லி அழைக்கின்றனர். ஆக ஒரே ஆற்றல் சேவையை குறைந்த ஆற்றலைக் கொண்டு செய்வதே இம்முறை.
அதாவது ஒரு வண்டியில் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு பயணிப்பவர்களுக்கு "V" அளவு பெட்ரோல் ஆகிறது என்று வைத்துக் கொள்வோம். இம்முறையை மேற்கொண்டால், வண்டியில் சில மாற்றங்களைச் செய்து அதே நபர்கள் அதே பயணத்துாரத்தை "V" அளவைக் காட்டிலும் குறைவான பெட்ரோல் செலவில் கடக்கமுடியும். இங்கு இரு நன்மைகள். ஒன்று பயணத்திற்கு ஆகும் பெட்ரோல் செலவை குறைக்கிறோம். அதே நேரத்தில் முன்னுள்ள நிலையை ஒப்பிடும்போது பெட்ரோல் அடுத்த பயணத்திற்கு செலவிடும் வகையில் மிச்சமாகிறது. (இதே போல் ஒரு மின்மோட்டாரைக் கொண்டு ஒரு குறிப்பிட்ட வேலையைச் செய்யும்போது "m" அளவு மின்சக்தி தேவையாகிறது என்று வைத்துக்கொள்வோம். இந்த மோட்டாரில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் அதே வேலையை செய்வதற்கு "m" அளவு மின்சக்தியைக் காட்டிலும் குறைவான மின்சக்தி செலவாகும். குறைகின்ற மின்சக்தியை கிலோவாட் என்ற அலகிலும், எவ்வளவு மணிநேரம் நாம் மின்மோட்டாரைச் செலுத்துகிறோமோ அதை மணிநேரமாக மாற்றி இரண்டையும் பெருக்கல் கணக்கு செய்தால் நாம் எவ்வளவு குறைவாக மின் ஆற்றலைச் செலவு செய்திருக்கிறோம் என்பது தெரியவரும். அந்தளவிற்கு தகுந்தாற்போல் நம் மின் கட்டணம் குறையும். நாம் இப்போது பேசியது மின் ஆற்றலைப் (Electrical Energy அல்லது யூனிட் என நாம் அறிவோம்) பற்றியது. நாம் ஏற்கெனவே நமக்குத் தேவைப்படும் மின்சக்தி (Electrical Power அல்லது எத்தனை வாட் - எச்.பி. என்று அறிவோம்) குறைவதாகக் கூறினோமே அதை பக்கத்து வீட்டுக்காரர் புதிதாக வாங்கிய மோட்டாருக்குக் கொடுக்க உபயோகமாகும்.
இம்முறையைச் செயல்படுத்துவதற்குக் கூடுதலாக பண முதலீடு செய்ய வேண்டிவரும். கூடுதலாக முதலீடு செய்யும் பணமும் 1முதல் 3வருடங்களுக்குள் ஆற்றல் மின்சாரச் செலவு குறைவதால் திரும்பப் பெற்று விடுவர். ஆக இம்முறையில் நமக்கும் பயன், இவ்வாறு ஒரு யூனிட் மின்சாரம் சேமிப்பது என்பது அல்லது 2 யூனிட் மின்சாரம் தயாரித்ததற்கு ஈடாகும் என்பதை மின்துறை பற்றி பரிச்சயமுள்ளவர்கள் அறிவர். அதேபோல்தான் பெட்ரோல் செலவுக் குறைந்தாலும் நமக்கும், பிறருக்கும், புவிக்கும் நன்மை.
அக்காலத்திலேயே (1980 களிலேயே) ஆற்றல் துறையில் உள்ள முன்னணி ஆராய்ச்சியாளர்கள் திறம்பட்ட ஆற்றல் பயன்பாடு பொருளாதாரச் செழிப்பை, ஆற்றல் உத்திரவாதத்தை, சுற்றுச்சூழல் பாதுகாப்பை மேம்படுத்துகிறது. இதுவே ஆற்றல் சிக்கலில் இருந்து மீள்வதற்கான மிகச் சிறந்த வழி என்று அலசிப் பாத்துக் கூறினர். அதற்காகத் தங்களை அர்ப்பணித்துக் கொண்டனர்.
அந்த ஆற்றல் விஞ்ஞானிகள் 1980 களிலேயே திறம்பட்ட ஆற்றல் பயன்பாட்டின் மூலம் பொருளாதாரச் செழிப்பை ஏற்படுத்தும் அமெரிக்க சபை (American Council for Energy Efficient Economy) என்ற லாபநோக்கற்ற அமைப்பை ஏற்படுத்தினர். பெயரைச் சற்று ஆழமாகச் சிந்திக்கவும்.
அமெரிக்க அரசின் ஆற்றல் அமைச்சகத்தின் கீழ் திறம்பட்ட ஆற்றல் பயன்பாடு மற்றும் மரபு சாரா ஆற்றல் துறை என்ற அமைப்பு உள்ளது. இதிலும் பெயரில் உள்ள வரிசைத் கிரமம் மிக முக்கியமானது. ஆற்றல் சிக்கலுக்கான முதலாவது மாற்று மூலம் திறம்பட்ட ஆற்றல் பயன்பாடுதான் பின்னர்தான் மரபுசாரா ஆறறல்களான சூரியஒளி, காற்று போன்றவை. இதைப் பல பத்தாண்டுகளாக அமெரிக்க அரசு அறியும்.
இந்த வகை ஆற்றல் சேமிப்பின்படி ஒரே ஆற்றல் வக்கு (உதாரணம்: ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு வண்டியில் போவதற்கு ஆகும் ஆற்றலை, ஆற்றல் விரையத்தைக் குறைப்பதற்கான சில மாற்றங்களைச் செய்வதன் மூலம் குறைக்க முடியும்)
ஒரு புரிதலுக்காக இப்படிச் சொல்ல ஆரம்பிக்கலாம், தாயார் தினமும் சமைத்து வைத்த உணவை சாப்பிடும் போது விரையம் செய்து வந்ததால் நால்வர் மட்டுமே சாப்பிட்டு வந்தனர். அதே நேரத்தில் தாயார் தினமும் சந்ைத்து வைத்த உணவை சாப்பிடுகையில் விரையம் செய்யாத போது, மீதம் இருந்த சாப்பாடு கூடுதலாக ஒருவருக்கு உணவிடும் அளவிற்கு இருந்தது. இந்த இரு நிகழ்வுகளிலும் அந்த நால்வரும் சாப்பிட்ட சாப்பாட்டின் அளவு குறையவில்லை. விரையம் செய்வதை தவிர்த்தனால் ஒருவர் கூடுதலாகச் சாப்பிடும் அளவிற்கு சாப்பாடு மிஞ்சுகிறது. விரையம் செய்து சாப்பிடுவதைக் காட்டிலும் விரையம் செய்யாமல் சாப்பிடும்போது கிடைத்த ஒருவருக்கான சாப்பாட்டை தாயார் அரூபமாக உருவாக்கியதாக (யண்ழ்ற்ன்ஹப் ஏங்ய்ங்ழ்ஹற்ண்ர்ய்) நினைத்துக் கொள்ளலாம் அல்லவா? இதையே ஈஹல்ஹcண்ற்ஹ் ஈழ்ங்ஹற்ண்ர்ய் என்று சொல்லி அழைக்கின்றனர். ஆக ஒரே ஆற்றல் சேவையை குறைந்த ஆற்றலைக் கொண்டு செய்வதே இம்முறை.
அதாவது ஒரு வண்டியில் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு பயணிப்பவர்களுக்கு "V" அளவு பெட்ரோல் ஆகிறது என்று வைத்துக் கொள்வோம். இம்முறையை மேற்கொண்டால், வண்டியில் சில மாற்றங்களைச் செய்து அதே நபர்கள் அதே பயணத்துாரத்தை "V" அளவைக் காட்டிலும் குறைவான பெட்ரோல் செலவில் கடக்கமுடியும். இங்கு இரு நன்மைகள். ஒன்று பயணத்திற்கு ஆகும் பெட்ரோல் செலவை குறைக்கிறோம். அதே நேரத்தில் முன்னுள்ள நிலையை ஒப்பிடும்போது பெட்ரோல் அடுத்த பயணத்திற்கு செலவிடும் வகையில் மிச்சமாகிறது. (இதே போல் ஒரு மின்மோட்டாரைக் கொண்டு ஒரு குறிப்பிட்ட வேலையைச் செய்யும்போது "m" அளவு மின்சக்தி தேவையாகிறது என்று வைத்துக்கொள்வோம். இந்த மோட்டாரில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் அதே வேலையை செய்வதற்கு "m" அளவு மின்சக்தியைக் காட்டிலும் குறைவான மின்சக்தி செலவாகும். குறைகின்ற மின்சக்தியை கிலோவாட் என்ற அலகிலும், எவ்வளவு மணிநேரம் நாம் மின்மோட்டாரைச் செலுத்துகிறோமோ அதை மணிநேரமாக மாற்றி இரண்டையும் பெருக்கல் கணக்கு செய்தால் நாம் எவ்வளவு குறைவாக மின் ஆற்றலைச் செலவு செய்திருக்கிறோம் என்பது தெரியவரும். அந்தளவிற்கு தகுந்தாற்போல் நம் மின் கட்டணம் குறையும். நாம் இப்போது பேசியது மின் ஆற்றலைப் (Electrical Energy அல்லது யூனிட் என நாம் அறிவோம்) பற்றியது. நாம் ஏற்கெனவே நமக்குத் தேவைப்படும் மின்சக்தி (Electrical Power அல்லது எத்தனை வாட் - எச்.பி. என்று அறிவோம்) குறைவதாகக் கூறினோமே அதை பக்கத்து வீட்டுக்காரர் புதிதாக வாங்கிய மோட்டாருக்குக் கொடுக்க உபயோகமாகும்.
இம்முறையைச் செயல்படுத்துவதற்குக் கூடுதலாக பண முதலீடு செய்ய வேண்டிவரும். கூடுதலாக முதலீடு செய்யும் பணமும் 1முதல் 3வருடங்களுக்குள் ஆற்றல் மின்சாரச் செலவு குறைவதால் திரும்பப் பெற்று விடுவர். ஆக இம்முறையில் நமக்கும் பயன், இவ்வாறு ஒரு யூனிட் மின்சாரம் சேமிப்பது என்பது அல்லது 2 யூனிட் மின்சாரம் தயாரித்ததற்கு ஈடாகும் என்பதை மின்துறை பற்றி பரிச்சயமுள்ளவர்கள் அறிவர். அதேபோல்தான் பெட்ரோல் செலவுக் குறைந்தாலும் நமக்கும், பிறருக்கும், புவிக்கும் நன்மை.
அக்காலத்திலேயே (1980 களிலேயே) ஆற்றல் துறையில் உள்ள முன்னணி ஆராய்ச்சியாளர்கள் திறம்பட்ட ஆற்றல் பயன்பாடு பொருளாதாரச் செழிப்பை, ஆற்றல் உத்திரவாதத்தை, சுற்றுச்சூழல் பாதுகாப்பை மேம்படுத்துகிறது. இதுவே ஆற்றல் சிக்கலில் இருந்து மீள்வதற்கான மிகச் சிறந்த வழி என்று அலசிப் பாத்துக் கூறினர். அதற்காகத் தங்களை அர்ப்பணித்துக் கொண்டனர்.
அந்த ஆற்றல் விஞ்ஞானிகள் 1980 களிலேயே திறம்பட்ட ஆற்றல் பயன்பாட்டின் மூலம் பொருளாதாரச் செழிப்பை ஏற்படுத்தும் அமெரிக்க சபை (American Council for Energy Efficient Economy) என்ற லாபநோக்கற்ற அமைப்பை ஏற்படுத்தினர். பெயரைச் சற்று ஆழமாகச் சிந்திக்கவும்.
அமெரிக்க அரசின் ஆற்றல் அமைச்சகத்தின் கீழ் திறம்பட்ட ஆற்றல் பயன்பாடு மற்றும் மரபு சாரா ஆற்றல் துறை என்ற அமைப்பு உள்ளது. இதிலும் பெயரில் உள்ள வரிசைத் கிரமம் மிக முக்கியமானது. ஆற்றல் சிக்கலுக்கான முதலாவது மாற்று மூலம் திறம்பட்ட ஆற்றல் பயன்பாடுதான் பின்னர்தான் மரபுசாரா ஆறறல்களான சூரியஒளி, காற்று போன்றவை. இதைப் பல பத்தாண்டுகளாக அமெரிக்க அரசு அறியும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரத்தின் போது செனட்டராக இருந்த ஒபாமா ஆற்றல் பற்றிப் பேசிய இரண்டு கருத்துக்கள் முக்கியமானவை.
1. அணுமின்சாரம் எடுக்கப் பயன்படுத்தப்பட்ட அணு எரிபொருளை (Spent Fuel) பாதுகாப்பாகக் கழிக்க வழியில்லை. அதனால் நமக்கு அணுஉலைகள் மூலமான மின்சாரம் வேண்டாம்.
2. நாம் நம்முடைய தரைவழி வண்டிகளின் டயர்களில் வைக்கிற காற்றை ஒழுங்காக வைத்தாலே அமெரிக்க தேசிய அளவில் செலவாகும் எரிபொருளில் ஒரு சதவீதத்தை மிச்சப்படுத்த முடியும்.
திறம்பட்ட ஆற்றல் பயன்பாட்டின் மூலம் பொருளாதாரச் செழிப்பை ஏற்படுத்தும் அமெரிக்க சபை திறம்பட்ட ஆற்றல் பயன்பாட்டைப் பற்றி பின்வருமாறு கூறுகிறது:
பயனீட்டாளர் அமைப்பிலிருந்து உருவாகிற மூலமாக இது மதிக்கப்படுகிறது. இது புவி வெப்பம் அடையச் செய்யும் வாயுக்களைக் (Green House Gases) குறைப்பதோடு பயனீட்டாளர்களின் செலவையும் குறைக்கிறது. புதிய தொழில்கள், வேலைக்கு வழிவகுக்கிறது. பொருளாதாரக் கவலைகள் மற்றும் சுற்றுச் சூழல் மாற்றங்களின் காரணமாக சட்ட மன்றங்களும், கட்டுப்பாட்டாளர்களும் (Regulators) திறம்பட்ட ஆற்றல் பயன்பாட்டை முன்னெப்போதும் இருந்திராதவகையில் துணை செய்கின்றனர்”.
இன்றளவும் அவர்கள் திட்டம் வகுத்து 2020-ல் தற்போது செலவழியக் கூடிய ஆற்றலில் 20% வரை சேமிக்க முடியும் என்கின்றனர்.
நமக்கு மின்சேமிப்பு என்றால் குண்டு பல்ப் மாற்றுவது பற்றி தெரியும். உலகில் பெருவாரியான மின்சாதனங்கள் மோட்டார்கள்தான். அவற்றில் ஒரு சிறிய அளவு சேமிப்பு செய்தாலே பெருமளவிலான மின் சக்தியைச் சேமிக்க முடியும். இதை நன்கறிந்துதான் அமெரிக்கா, ஐரோப்பா போன்றவை மின் மோட்டார்களுக்கான தரக்கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கி, பெருமளவில் ஆற்றலைச் சேமித்து வருகின்றன. நம் நாட்டில் இருக்கும் மோட்டார்கள் பயன்படுத்தும் மின்சக்தியைக் காட்டிலும் மிகக் குறைந்த அளவே மின்சக்தியை எடுக்கிற மோட்டார்கள் அந்நாடுகளில் வடிவமைக்கப்படுகின்றன. 1980களில் துவங்கி அமெரிக்கா, ஐரோப்பாவில் திறம்பட்ட ஆற்றல் பயன்பாடு (Energy Efficiency) கட்டாயமாக்கப்பட்டு வருகிறது.
அமெரிக்காவில் State Policy, Federal Policy, Local Policy என பல்வேறு Policyகளைக் கொண்டு உள்ளூர் அளவிலிருந்து தேசிய அளவுவரை திறம்பட்ட ஆற்றல் பயன்பாட்டிற்கான வழிவகைகளைத் தேடி இன்றளவும் நடைமுறைப்படுத்தி வருகின்றனர். அதில் பெரும் வெற்றியடைவதாகவும் கூறுகின்றனர்.
வீடுகள், சிறுதொழில், விவசாயம், தொழிற்சாலைகள், வணிகம் போக்குவரத்து என்று எல்லாத் துறைகளுக்கும் திட்டம் வகுத்து செயல்பட்டு வருகிறார்கள். அமெரிக்கர்களுடைய நெடுநாளைய அனுபவத்தைத் தங்கள் நாட்டிற்குப் பயன்படுத்திக் கொள்ள திட்டம் வகுத்து சீன அரசு பல்லாயிரம் மெகாவாட் மின் சக்தியைச் சேமித்துள்ளது. இப்படி இது பற்றிக் கூறிக் கொண்டே போகலாம்.
உலக நடவடிக்கைகள் இவ்வாறு இருக்க, இந்தியாவிற்கு திறம்பட்ட ஆற்றல் பயன்பாடு பற்றித் தெரியாதா?
இந்தியாவில் Indian Institute of Science என்ற உயர்கல்வி நிறுவனம் உள்ளது. அதில் பேராசிரியராக இருந்த மறைந்த முனைவர் அமூல்யா ரெட்டி மற்றும் பிரேசில் போன்ற நாடுகள் உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த பேராசிரியர்கள் சர்வதேச ஆற்றல் தேவைக்கான முன்முயற்சி (International Energy Initiative) என்ற அமைப்பைத் துவக்கினர். இன்றுவரை அந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்தியா, பிரேசில், போன்ற நாடுகளில் மின்சாரத்தை - ஆற்றலை எப்படித் திறம்பட பயன்படுத்த முடியும் என்பதைப் பற்றியும், இங்குள்ள குறிப்பான தன்மைகளுக்கு ஏற்றவாறு ஆராய்ச்சிகளும் செய்து அவற்றை வெளியிட்டும் வருகின்றனர்.
Seminar என்ற ஆங்கில இதழ், உள்ளது. இது பல ஆண்டுகளாக வெளிவருகின்ற இதழ். ஒரு குறிப்பிட்ட விவாதப் பொருள், பிரச்சனையை (Crisis) ஒரு மாதத்திற்கு உரியதாக எடுத்து அறிவு ஜீவிகள் தங்கள் பல்வேறு கருத்துக்களை முன்வைப்பர். அந்த இதழ் 1994-ல் சக்தி - ஆற்றல் (Power) என்ற தலைப்பிட்ட சிறப்பிதழை வெளியிட்டது. அந்த இதழில் பல நாடுகளைச் சேர்ந்த வல்லுநர்கள் இந்தியாவில் மின் உற்பத்தி உள்ளிட்ட பல ஆற்றல் பிரச்சினைகளைப்பற்றி தங்கள் ஆலோசனைகளை வழங்கியுள்ளனர். இந்தியாவில் மின் தேவைக்கு, திறம்பட்ட ஆற்றல் பயன்பாட்டின் மூலம் கிடைக்கப்பெறும் மின்சேமிப்பு எந்த அளவிற்கு இன்றியமையாதது, எந்த அளவிற்கு புதிதாக மின்நிலையங்களை நிறுவ வேண்டிய தேவையை குறைக்கும் என்பதைப் பற்றி எல்லாம். விவாதித்துள்ளனர்.
இந்தியாவின் தேசிய உற்பத்தித்திறன் கவுன்சில் (National Productivity Council) அமெரிக்காவின் பிரின்சிடன் பல்கலைக் கழகத்தின்; ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் துறையைச் சார்ந்த மையம் (Centre for energy and Environmental studies of Princeton University, USA) இரண்டும் இணைந்து இந்தியாவை மையமாக வைத்து அதிகளவில் ஆற்றல் செலவழியும், மோட்டார்களை ஒட்டிய அமைப்புகளில் திறம்பட்ட ஆற்றல் பயன்பாட்டிற்கான தொழில்நுட்ப பட்டியல் (Technology Menu for Efficient Energy use - Motor Drive System) என்ற பெரும் அறிவுப் பொக்கி~த்தை வெளியிட்டு உள்ளனர். அதை வெளியிட உதவி செய்த அமைப்புகள் புதுதில்லியைச் சேர்ந்த இந்திய அரசின் தொழில் நுட்பம், தகவல், வருங்கால நிலை மற்றும் அதை ஆராயும் கவுன்சில் (Technology, Information, Forecasting & Assessment council (TIFAC), New Delhi, India) மற்றும் நாம் முன்னர் சொன்ன சர்வதேச ஆற்றலுக்கான முன்முயற்சி (International Energy Initiative, Bangalore, India)ஆகியன.
1. அணுமின்சாரம் எடுக்கப் பயன்படுத்தப்பட்ட அணு எரிபொருளை (Spent Fuel) பாதுகாப்பாகக் கழிக்க வழியில்லை. அதனால் நமக்கு அணுஉலைகள் மூலமான மின்சாரம் வேண்டாம்.
2. நாம் நம்முடைய தரைவழி வண்டிகளின் டயர்களில் வைக்கிற காற்றை ஒழுங்காக வைத்தாலே அமெரிக்க தேசிய அளவில் செலவாகும் எரிபொருளில் ஒரு சதவீதத்தை மிச்சப்படுத்த முடியும்.
திறம்பட்ட ஆற்றல் பயன்பாட்டின் மூலம் பொருளாதாரச் செழிப்பை ஏற்படுத்தும் அமெரிக்க சபை திறம்பட்ட ஆற்றல் பயன்பாட்டைப் பற்றி பின்வருமாறு கூறுகிறது:
பயனீட்டாளர் அமைப்பிலிருந்து உருவாகிற மூலமாக இது மதிக்கப்படுகிறது. இது புவி வெப்பம் அடையச் செய்யும் வாயுக்களைக் (Green House Gases) குறைப்பதோடு பயனீட்டாளர்களின் செலவையும் குறைக்கிறது. புதிய தொழில்கள், வேலைக்கு வழிவகுக்கிறது. பொருளாதாரக் கவலைகள் மற்றும் சுற்றுச் சூழல் மாற்றங்களின் காரணமாக சட்ட மன்றங்களும், கட்டுப்பாட்டாளர்களும் (Regulators) திறம்பட்ட ஆற்றல் பயன்பாட்டை முன்னெப்போதும் இருந்திராதவகையில் துணை செய்கின்றனர்”.
இன்றளவும் அவர்கள் திட்டம் வகுத்து 2020-ல் தற்போது செலவழியக் கூடிய ஆற்றலில் 20% வரை சேமிக்க முடியும் என்கின்றனர்.
நமக்கு மின்சேமிப்பு என்றால் குண்டு பல்ப் மாற்றுவது பற்றி தெரியும். உலகில் பெருவாரியான மின்சாதனங்கள் மோட்டார்கள்தான். அவற்றில் ஒரு சிறிய அளவு சேமிப்பு செய்தாலே பெருமளவிலான மின் சக்தியைச் சேமிக்க முடியும். இதை நன்கறிந்துதான் அமெரிக்கா, ஐரோப்பா போன்றவை மின் மோட்டார்களுக்கான தரக்கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கி, பெருமளவில் ஆற்றலைச் சேமித்து வருகின்றன. நம் நாட்டில் இருக்கும் மோட்டார்கள் பயன்படுத்தும் மின்சக்தியைக் காட்டிலும் மிகக் குறைந்த அளவே மின்சக்தியை எடுக்கிற மோட்டார்கள் அந்நாடுகளில் வடிவமைக்கப்படுகின்றன. 1980களில் துவங்கி அமெரிக்கா, ஐரோப்பாவில் திறம்பட்ட ஆற்றல் பயன்பாடு (Energy Efficiency) கட்டாயமாக்கப்பட்டு வருகிறது.
அமெரிக்காவில் State Policy, Federal Policy, Local Policy என பல்வேறு Policyகளைக் கொண்டு உள்ளூர் அளவிலிருந்து தேசிய அளவுவரை திறம்பட்ட ஆற்றல் பயன்பாட்டிற்கான வழிவகைகளைத் தேடி இன்றளவும் நடைமுறைப்படுத்தி வருகின்றனர். அதில் பெரும் வெற்றியடைவதாகவும் கூறுகின்றனர்.
வீடுகள், சிறுதொழில், விவசாயம், தொழிற்சாலைகள், வணிகம் போக்குவரத்து என்று எல்லாத் துறைகளுக்கும் திட்டம் வகுத்து செயல்பட்டு வருகிறார்கள். அமெரிக்கர்களுடைய நெடுநாளைய அனுபவத்தைத் தங்கள் நாட்டிற்குப் பயன்படுத்திக் கொள்ள திட்டம் வகுத்து சீன அரசு பல்லாயிரம் மெகாவாட் மின் சக்தியைச் சேமித்துள்ளது. இப்படி இது பற்றிக் கூறிக் கொண்டே போகலாம்.
உலக நடவடிக்கைகள் இவ்வாறு இருக்க, இந்தியாவிற்கு திறம்பட்ட ஆற்றல் பயன்பாடு பற்றித் தெரியாதா?
இந்தியாவில் Indian Institute of Science என்ற உயர்கல்வி நிறுவனம் உள்ளது. அதில் பேராசிரியராக இருந்த மறைந்த முனைவர் அமூல்யா ரெட்டி மற்றும் பிரேசில் போன்ற நாடுகள் உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த பேராசிரியர்கள் சர்வதேச ஆற்றல் தேவைக்கான முன்முயற்சி (International Energy Initiative) என்ற அமைப்பைத் துவக்கினர். இன்றுவரை அந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்தியா, பிரேசில், போன்ற நாடுகளில் மின்சாரத்தை - ஆற்றலை எப்படித் திறம்பட பயன்படுத்த முடியும் என்பதைப் பற்றியும், இங்குள்ள குறிப்பான தன்மைகளுக்கு ஏற்றவாறு ஆராய்ச்சிகளும் செய்து அவற்றை வெளியிட்டும் வருகின்றனர்.
Seminar என்ற ஆங்கில இதழ், உள்ளது. இது பல ஆண்டுகளாக வெளிவருகின்ற இதழ். ஒரு குறிப்பிட்ட விவாதப் பொருள், பிரச்சனையை (Crisis) ஒரு மாதத்திற்கு உரியதாக எடுத்து அறிவு ஜீவிகள் தங்கள் பல்வேறு கருத்துக்களை முன்வைப்பர். அந்த இதழ் 1994-ல் சக்தி - ஆற்றல் (Power) என்ற தலைப்பிட்ட சிறப்பிதழை வெளியிட்டது. அந்த இதழில் பல நாடுகளைச் சேர்ந்த வல்லுநர்கள் இந்தியாவில் மின் உற்பத்தி உள்ளிட்ட பல ஆற்றல் பிரச்சினைகளைப்பற்றி தங்கள் ஆலோசனைகளை வழங்கியுள்ளனர். இந்தியாவில் மின் தேவைக்கு, திறம்பட்ட ஆற்றல் பயன்பாட்டின் மூலம் கிடைக்கப்பெறும் மின்சேமிப்பு எந்த அளவிற்கு இன்றியமையாதது, எந்த அளவிற்கு புதிதாக மின்நிலையங்களை நிறுவ வேண்டிய தேவையை குறைக்கும் என்பதைப் பற்றி எல்லாம். விவாதித்துள்ளனர்.
இந்தியாவின் தேசிய உற்பத்தித்திறன் கவுன்சில் (National Productivity Council) அமெரிக்காவின் பிரின்சிடன் பல்கலைக் கழகத்தின்; ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் துறையைச் சார்ந்த மையம் (Centre for energy and Environmental studies of Princeton University, USA) இரண்டும் இணைந்து இந்தியாவை மையமாக வைத்து அதிகளவில் ஆற்றல் செலவழியும், மோட்டார்களை ஒட்டிய அமைப்புகளில் திறம்பட்ட ஆற்றல் பயன்பாட்டிற்கான தொழில்நுட்ப பட்டியல் (Technology Menu for Efficient Energy use - Motor Drive System) என்ற பெரும் அறிவுப் பொக்கி~த்தை வெளியிட்டு உள்ளனர். அதை வெளியிட உதவி செய்த அமைப்புகள் புதுதில்லியைச் சேர்ந்த இந்திய அரசின் தொழில் நுட்பம், தகவல், வருங்கால நிலை மற்றும் அதை ஆராயும் கவுன்சில் (Technology, Information, Forecasting & Assessment council (TIFAC), New Delhi, India) மற்றும் நாம் முன்னர் சொன்ன சர்வதேச ஆற்றலுக்கான முன்முயற்சி (International Energy Initiative, Bangalore, India)ஆகியன.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இந்த தொழில் நுட்பப் பட்டியல் 1994 ஆம் ஆண்டிலேயே குறிப்பிடப்படுபவை; மிகவும் முக்கியமானவை:
மின்சாரத்திற்காக அதிகரித்த தேவையை கணிசமாக ஈடுசெய்வதற்கு புதிய மின்நிலையங்களை அமைப்பதைக் காட்டிலும் மின்சாரத்தைத் திறம்படச் செலவழிப்பதே சிறந்த வழி என்று பல்வேறு நாடுகள் கண்டுணர்ந்துள்ளன. அமெரிக்கா, பிரேசில் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கடைநிலையில் (End Use) மின்சார பயனீட்டாளர் இடத்தில் திறம்பட்ட ஆற்றல் பயன்பாட்டை அதிகரிப்பதற்கான நுண்ணிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அநேக ஆய்வுகளில், தற்போதைய மின்சார பயன்பாடு அல்லது பின்னாட்களில் நிறுவ வேண்டிவரக்கூடிய மின்நிலைத் திறனை குறைந்தபட்சம் 25 சதவீதம் குறைக்க முடியும் என்கின்றன. இவற்றில் மோட்டார் சார்ந்த அமைப்புகளில் மின் சேமிப்பிற்கான சாத்தியப்பாடு மிக அதிகளவு இருக்கிறது.
இந்தியாவில் இவ்வாறான மின்மோட்டார் உள்ளிட்ட அனைத்து மின்சாதனங்களின் மின்பயன்பாட்டைத் திறம்பட உபயோகிப்பதற்கான சாத்தியத்தைக் கணக்கிட்ட முயற்சிகளே மிகமிகக்குறைவு. இதற்கான காரணம் நாட்டில் கடைநிலைப் பயனீட்டாளர்களை வகைப்படுத்திய தரவுகள் இல்லை என்பது தான்/
வரவிருக்கும் 18வது இந்திய மின்சக்திக் கணக்கீட்டு அறிக்கையிலும் (Report on 18th Electric Power Survey of India) இதற்கான தரவுகள் இருக்காது என்பதே நிச்சயம்.
அமெரிக்காவில் திறம்பட்ட ஆற்றல் பயன்பாடுதான் முதன்மையான ஆற்றல் மூலம் என்று மதிக்கப்படுகிறது. அதனால் ஆன பயன்கள், அவர்கள் பயனடைந்த விவரங்களைப் பார்த்தால் பிரமிப்பாக உள்ளது. இவ்வளவு அதிமுக்கியமான ஒரு மூலம் (Energy Source) நம் நாட்டினரின் பார்வைக்கு தட்டுப்படாமல் போய் உள்ளது தற்செயல்தானா? இதுபற்றி நம் விஞ்ஞானிகளுக்குத் தெரியாதா? அப்படி தெரியவில்லை என்றால் ஏன் ஆற்றல் விஞ்ஞானிகளாக (Energy Scientist) அணுவிஞ்ஞானிகள் காட்சி அளிக்க முயல்கின்றனர். தங்களது ஆற்றல் மூலம் மட்டுமே சிறந்தது என்று ஏன் கூறுகின்றனர்.
இவ்வளவு அதிமுக்கியத்துவம் வாய்ந்த ஒன்றை கணக்கில் எடுக்காமல் எப்படி அணுஉலைதான் சிறந்தது: அதுதான் நமக்குத் தேவை என்கின்றனர் அணுவிஞ்ஞானிகள்?
பிரதமருக்கு இதுபற்றி எல்லாம் சொல்லப்பட்டதா? அரசு கவிழ்ந்துவிடும் நிலையில் கூட இந்திய - அமெரிக்க அணு ஒப்பந்தத்தை கையெழுத்திட முனைப்பாக இருந்தனரே!
ஒன்றைப்பற்றி கணக்கிட சரியான தரவுகளே இல்லை என்ற நிலையில் அதில் மறைமுகமான ஆற்றல் உருவாக்கத்திற்கான (Virtual Energy Generation) பெருமளவு வாய்ப்பு உள்ள ஒன்றை கணக்கிலேயே எடுக்காமல், பொது வழிக்குக் காட்டாமல் நம் முன்னாள் குடியரசுத் தலைவரும், ஏவுகணை விஞ்ஞானியுமான அப்துல்கலாமும், இந்நாள் பிரதமரும் பொருளாதார நிபுணருமான மன்மோகன்சிங்கும் அணுசக்தி இல்லாமல் மின்சக்தியை உருவாக்க வேறு வழியே இல்லை என்கின்றனர். இதுவா விஞ்ஞான பூர்வமான விவாதம்?
மின்சாரத்திற்காக அதிகரித்த தேவையை கணிசமாக ஈடுசெய்வதற்கு புதிய மின்நிலையங்களை அமைப்பதைக் காட்டிலும் மின்சாரத்தைத் திறம்படச் செலவழிப்பதே சிறந்த வழி என்று பல்வேறு நாடுகள் கண்டுணர்ந்துள்ளன. அமெரிக்கா, பிரேசில் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கடைநிலையில் (End Use) மின்சார பயனீட்டாளர் இடத்தில் திறம்பட்ட ஆற்றல் பயன்பாட்டை அதிகரிப்பதற்கான நுண்ணிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அநேக ஆய்வுகளில், தற்போதைய மின்சார பயன்பாடு அல்லது பின்னாட்களில் நிறுவ வேண்டிவரக்கூடிய மின்நிலைத் திறனை குறைந்தபட்சம் 25 சதவீதம் குறைக்க முடியும் என்கின்றன. இவற்றில் மோட்டார் சார்ந்த அமைப்புகளில் மின் சேமிப்பிற்கான சாத்தியப்பாடு மிக அதிகளவு இருக்கிறது.
இந்தியாவில் இவ்வாறான மின்மோட்டார் உள்ளிட்ட அனைத்து மின்சாதனங்களின் மின்பயன்பாட்டைத் திறம்பட உபயோகிப்பதற்கான சாத்தியத்தைக் கணக்கிட்ட முயற்சிகளே மிகமிகக்குறைவு. இதற்கான காரணம் நாட்டில் கடைநிலைப் பயனீட்டாளர்களை வகைப்படுத்திய தரவுகள் இல்லை என்பது தான்/
வரவிருக்கும் 18வது இந்திய மின்சக்திக் கணக்கீட்டு அறிக்கையிலும் (Report on 18th Electric Power Survey of India) இதற்கான தரவுகள் இருக்காது என்பதே நிச்சயம்.
அமெரிக்காவில் திறம்பட்ட ஆற்றல் பயன்பாடுதான் முதன்மையான ஆற்றல் மூலம் என்று மதிக்கப்படுகிறது. அதனால் ஆன பயன்கள், அவர்கள் பயனடைந்த விவரங்களைப் பார்த்தால் பிரமிப்பாக உள்ளது. இவ்வளவு அதிமுக்கியமான ஒரு மூலம் (Energy Source) நம் நாட்டினரின் பார்வைக்கு தட்டுப்படாமல் போய் உள்ளது தற்செயல்தானா? இதுபற்றி நம் விஞ்ஞானிகளுக்குத் தெரியாதா? அப்படி தெரியவில்லை என்றால் ஏன் ஆற்றல் விஞ்ஞானிகளாக (Energy Scientist) அணுவிஞ்ஞானிகள் காட்சி அளிக்க முயல்கின்றனர். தங்களது ஆற்றல் மூலம் மட்டுமே சிறந்தது என்று ஏன் கூறுகின்றனர்.
இவ்வளவு அதிமுக்கியத்துவம் வாய்ந்த ஒன்றை கணக்கில் எடுக்காமல் எப்படி அணுஉலைதான் சிறந்தது: அதுதான் நமக்குத் தேவை என்கின்றனர் அணுவிஞ்ஞானிகள்?
பிரதமருக்கு இதுபற்றி எல்லாம் சொல்லப்பட்டதா? அரசு கவிழ்ந்துவிடும் நிலையில் கூட இந்திய - அமெரிக்க அணு ஒப்பந்தத்தை கையெழுத்திட முனைப்பாக இருந்தனரே!
ஒன்றைப்பற்றி கணக்கிட சரியான தரவுகளே இல்லை என்ற நிலையில் அதில் மறைமுகமான ஆற்றல் உருவாக்கத்திற்கான (Virtual Energy Generation) பெருமளவு வாய்ப்பு உள்ள ஒன்றை கணக்கிலேயே எடுக்காமல், பொது வழிக்குக் காட்டாமல் நம் முன்னாள் குடியரசுத் தலைவரும், ஏவுகணை விஞ்ஞானியுமான அப்துல்கலாமும், இந்நாள் பிரதமரும் பொருளாதார நிபுணருமான மன்மோகன்சிங்கும் அணுசக்தி இல்லாமல் மின்சக்தியை உருவாக்க வேறு வழியே இல்லை என்கின்றனர். இதுவா விஞ்ஞான பூர்வமான விவாதம்?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மூடி மறைக்கப்பட்ட உண்மைகள்
இந்தியாவில் ஆற்றல்துறையின் கீழ்வரும் திறம்பட்ட ஆற்றல் பயன்பாட்டிற்கான அமைப்பு இருக்கிறது. அதன் வலைதளத்தில், நாட்டில் குறைந்தது 25,000 மெகாவாட் மின்சக்தியைச் சேமிக்க முடியும்; நாட்டின் ஒட்டுமொத்த ஆற்றலில் 23 விழுக்காடு சேமிக்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் சேமிப்பிற்கான இந்தக் கணக்கீடு மகிமிகக் குறைந்த அளவே அனுமானிக்கப்பட்டு இருந்தாலும் இது மிகக் கணிசமான தொகை.
முதன்மையான ஆற்றல் மூலம் என்று அமெரிக்கா, சீனா போன்ற பல அரசுகள் கருதுகிற பறைசாற்றுகின்ற ஒன்றில், 1994லிருந்து கிட்டத்தட்ட 20 வருடங்களாக விசயம் தெரிந்திருந்தும் எந்த திறம்பட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. வெறுமனே சட்டம் போட்டோம் 2001ல் என்கிறது ஆற்றல் துறை; தன்னார்வமாகத் திறம்பட்ட ஆற்றல் பயன்பாட்டின் மூலம் சேமித்தோருக்கு போட்டி நடத்தினோம், கட்டுரைப் போட்டி நடத்தினோம் என்கிற அளவில் உள்ளது.
இன்றாவது மத்திய அரசு சொல்லட்டும்! முதலில் திறம்பட்ட ஆற்றல் பயன்பாட்டிற்கான அதிமுக்கியத்துவத்தையும் அதைச் செயல்படுத்தினால் கூடுதலாக நிறுவ வேண்டிய மின் நிலையங்களைத் தவிர்க்கலாம்; வரிப்பணத்தை மிச்சப்படுத்தலாம் என்பது பற்றி எல்லாம் அரசு உணர்ந்ததா? அப்படி என்றால் இத்திசையில் அது கடந்த காலங்ளில் காட்டிய முனைப்பு என்ன? அதற்காக அரசு ஒதுக்கிய, செலவு செய்த தொகை என்ன? இத்துறையில் 1994 முதல் அரசு படைத்த சாதனைகள் என்ன? எவ்வாறு திறம்பட்ட ஆற்றல் பயன்பாடு தொடர்பான திட்டங்களை அரசு திறம்பட செயல்படுத்திற்று?
மாநில அளவிலும் மின்சேமிப்பு வலியுறுத்தப்படுகிறது. ஆனால் திறம்பட்ட ஆற்றல் பயன்பாட்டு முறைகள் சிறு, நடுத்தரத் தொழில்சாலைகளுக்கு சொல்லித் தரப்படாததன் விளைவாக, அவர்களுக்கு அது எட்டாததன் விளைவாக, குறைந்த அளவு கட்டணம் வசூலிக்கும் ஆற்றல் தணிக்கையாளரைக் (ஊய்ங்ழ்ஞ்ஹ் ஆன்க்ண்ற்ர்ழ்) கொண்டு தொழிற்சாலைகள் சேமிப்பு செய்துவிட்டதாகக் சுயமாகப் பத்திரம் அளித்து வருகின்றனர். ஆக தணிக்கை நடவடிக்கை அவர்களுக்கும், நாட்டிற்கும் பலனளிக்கவில்லை.
இந்த திறம்பட்ட ஆற்றல் பயன்பாடு பற்றிய அறிவைப் பயன்படுத்திக் கொண்ட பல பெருந்தொழில் நிறுவனங்கள் நம் நாட்டில் உள்ளன. அதன் மூலம் பெருமளவு மின் சேமிப்பைச் செய்துள்ளனர். 1990 முதல் 2011 வரையிலே கூட தன்னார்வமாகச் செய்த திறம்பட்ட ஆற்றல் பயன்பாட்டு முறைகளினால் மிகச் சில தொழில் நிறுவனங்களே 2194 மெகா வாட் அளவு மின்சாரத்தை சேமித்திருக்கின்றன. இதை சொல்வதும் இந்திய அரசின் ஆற்றல் துறைதான். அதாவது மக்கள் வரிப்பணச் செலவு எதுவுமே இல்லாமல் 2194 மெகாவாட் மின் சக்தி உபரியாக்கப்பட்டிருக்கிறது.
அதாவது கூடங்குள அணு உலைகளின் மின்சக்தித்திறனைக் காட்டிலும் கூடுதலான மின்சக்தித்திறனை அவர்கள் உபரியாக்கி இருக்கின்றனர். அரசு அவர்களிடமெல்லாம் இவற்றைக்கேட்டு மக்களுக்கு விளக்கக்கூடாதா?
- முனைவர் வே. பிரகாஷ்
இந்தியாவில் ஆற்றல்துறையின் கீழ்வரும் திறம்பட்ட ஆற்றல் பயன்பாட்டிற்கான அமைப்பு இருக்கிறது. அதன் வலைதளத்தில், நாட்டில் குறைந்தது 25,000 மெகாவாட் மின்சக்தியைச் சேமிக்க முடியும்; நாட்டின் ஒட்டுமொத்த ஆற்றலில் 23 விழுக்காடு சேமிக்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் சேமிப்பிற்கான இந்தக் கணக்கீடு மகிமிகக் குறைந்த அளவே அனுமானிக்கப்பட்டு இருந்தாலும் இது மிகக் கணிசமான தொகை.
முதன்மையான ஆற்றல் மூலம் என்று அமெரிக்கா, சீனா போன்ற பல அரசுகள் கருதுகிற பறைசாற்றுகின்ற ஒன்றில், 1994லிருந்து கிட்டத்தட்ட 20 வருடங்களாக விசயம் தெரிந்திருந்தும் எந்த திறம்பட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. வெறுமனே சட்டம் போட்டோம் 2001ல் என்கிறது ஆற்றல் துறை; தன்னார்வமாகத் திறம்பட்ட ஆற்றல் பயன்பாட்டின் மூலம் சேமித்தோருக்கு போட்டி நடத்தினோம், கட்டுரைப் போட்டி நடத்தினோம் என்கிற அளவில் உள்ளது.
இன்றாவது மத்திய அரசு சொல்லட்டும்! முதலில் திறம்பட்ட ஆற்றல் பயன்பாட்டிற்கான அதிமுக்கியத்துவத்தையும் அதைச் செயல்படுத்தினால் கூடுதலாக நிறுவ வேண்டிய மின் நிலையங்களைத் தவிர்க்கலாம்; வரிப்பணத்தை மிச்சப்படுத்தலாம் என்பது பற்றி எல்லாம் அரசு உணர்ந்ததா? அப்படி என்றால் இத்திசையில் அது கடந்த காலங்ளில் காட்டிய முனைப்பு என்ன? அதற்காக அரசு ஒதுக்கிய, செலவு செய்த தொகை என்ன? இத்துறையில் 1994 முதல் அரசு படைத்த சாதனைகள் என்ன? எவ்வாறு திறம்பட்ட ஆற்றல் பயன்பாடு தொடர்பான திட்டங்களை அரசு திறம்பட செயல்படுத்திற்று?
மாநில அளவிலும் மின்சேமிப்பு வலியுறுத்தப்படுகிறது. ஆனால் திறம்பட்ட ஆற்றல் பயன்பாட்டு முறைகள் சிறு, நடுத்தரத் தொழில்சாலைகளுக்கு சொல்லித் தரப்படாததன் விளைவாக, அவர்களுக்கு அது எட்டாததன் விளைவாக, குறைந்த அளவு கட்டணம் வசூலிக்கும் ஆற்றல் தணிக்கையாளரைக் (ஊய்ங்ழ்ஞ்ஹ் ஆன்க்ண்ற்ர்ழ்) கொண்டு தொழிற்சாலைகள் சேமிப்பு செய்துவிட்டதாகக் சுயமாகப் பத்திரம் அளித்து வருகின்றனர். ஆக தணிக்கை நடவடிக்கை அவர்களுக்கும், நாட்டிற்கும் பலனளிக்கவில்லை.
இந்த திறம்பட்ட ஆற்றல் பயன்பாடு பற்றிய அறிவைப் பயன்படுத்திக் கொண்ட பல பெருந்தொழில் நிறுவனங்கள் நம் நாட்டில் உள்ளன. அதன் மூலம் பெருமளவு மின் சேமிப்பைச் செய்துள்ளனர். 1990 முதல் 2011 வரையிலே கூட தன்னார்வமாகச் செய்த திறம்பட்ட ஆற்றல் பயன்பாட்டு முறைகளினால் மிகச் சில தொழில் நிறுவனங்களே 2194 மெகா வாட் அளவு மின்சாரத்தை சேமித்திருக்கின்றன. இதை சொல்வதும் இந்திய அரசின் ஆற்றல் துறைதான். அதாவது மக்கள் வரிப்பணச் செலவு எதுவுமே இல்லாமல் 2194 மெகாவாட் மின் சக்தி உபரியாக்கப்பட்டிருக்கிறது.
அதாவது கூடங்குள அணு உலைகளின் மின்சக்தித்திறனைக் காட்டிலும் கூடுதலான மின்சக்தித்திறனை அவர்கள் உபரியாக்கி இருக்கின்றனர். அரசு அவர்களிடமெல்லாம் இவற்றைக்கேட்டு மக்களுக்கு விளக்கக்கூடாதா?
- முனைவர் வே. பிரகாஷ்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
நல்ல கட்டுரை...நன்றி சிவா அவர்களே
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|