ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எண் 5 யில் பிறந்தவருக்குரிய பலன்கள் - புதன் (Mercury)

3 posters

Go down

எண் 5 யில் பிறந்தவருக்குரிய பலன்கள் - புதன் (Mercury) Empty எண் 5 யில் பிறந்தவருக்குரிய பலன்கள் - புதன் (Mercury)

Post by இளமாறன் Fri Nov 25, 2011 1:05 am

எண் 5 யில் பிறந்தவருக்குரிய பலன்கள் - புதன் (Mercury)
எண் 5 யில் பிறந்தவருக்குரிய பலன்கள் - புதன் (Mercury) :

இந்த எண் அனைவராலும் மிகவும் விரும்பப்படும் எண்ணாகும். அனைத்து எண்களுக்கும் இந்த எண் பொதுவாக உள்ளது. மிக நன்மையும், அதிர்ஷ்டமும் தருவது இந்த எண்ணாகும். புதனின் ஆதிக்கம் வலுத்து இருப்பவர்களுக்குப் பெருத்த யோகங்களைக் கொடுக்கும். புதனின் எண் இல்லாதவர்களுக்கும்கூட இந்த ஆதிக்கமானது, நல்ல பலன்களைத் தரவல்லது! இதனாலேயே பெரும்பாலான எண் சோதிடர்கள், பெயர் எண் 5 ஆக வரும்படி அமைத்துக் கொடுக்கிறார்கள். மற்ற அதிர்ஷ்ட எண்களான 1, 3, 6, 9 ஆகியவைகள் (அந்தக் குறிப்பிட்ட எண்ணானது) நல்ல அமைப்புடனும், வலுவுடனும் அன்பர்களுக்கு இருந்தால் தான் நன்மை புரியும். இல்லையெனில் தீய பலன்களைக் கண்டிப்பாக கொடுத்துவிடும். உதாரணமாக 3 ம் எண்ணில் பிறந்தவர்களுக்கு 24, 33, 42, 51 ஆகிய 6 எண்ணின் வர்க்கங்கள் எந்த ஒரு பலனையும் கொடுக்காது. அதுமட்டுமன்று, அவர்களை நிச்சயம் பல தோல்விகளையும் வேதனைகளையும் ஆழ்த்திவிடும்.
ஆனால் 5 மட்டும் யாருக்கும் தீமை புரியாது! சோதிட சாத்திரத்தல் நவக்கிரகங்களில் சந்திரனுக்கு மட்டும் எல்லா இராசி வீடுகளிலும் சமமாகவும், நட்பாகவும் (விருச்சிகம் தவிர) சொல்லப்பட்டுள்ளது! அதனால்தான் சந்திரனின் ஆதிக்கம் ஜாதகத்தில் பொதுவாக எல்லா இராசிகளுக்கு நன்மையான பலன்களையே கொடுக்கும். கோசார பலன்களும் சந்திரனின் நிலையையே அடிப்படையாகக் கொண்டுள்ளது.

ஆனால் எண்கணிதத்தில் 5ம் எண்ணே அத்தகைய ஒரு சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளது. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 ஆகிய எண் வரிசையில் 5ம் எண்ணே மற்ற எண்களுக்கும் நடுவில் அமைந்துள்ளது என்பதே இதன் சிறப்புக்கும், நற்பலன்களுக்கும் காரணம். மற்ற எண்காரர்கள் தங்களது துன்பங்களையும், துயரங்களையும் கண்டு கலங்கும்போது இவர்கள் மட்டும், அவைகளைச் சவால்களாக எடுத்துக் கொள்வார்கள். 5ஆம் எண்காரர்களின் புத்தி அதாவது அறிவு மிகவும் அற்புதமானது!

ஒவ்வொரு நிமிடமும் புதுப்புது யோசனைகள் (!) பிரஞ்சத்திலிருந்து இவர்களுக்குத் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும். தேவர்களில் அறிவுக்கும், புத்திக்கும், செயல்திறனுக்கும் பெயர் பெற்றவர் விஷ்ணு பகவான்தான்! அவரின் முழுக்கடாட்சமும் பொருந்திய எண் இதுதான் (5 எண்).
மற்ற எண்காரர்களைக் காப்பதற்காகவே (விஷ்ணுவின் தொழில் மக்களைக் காத்தல் அல்லவா), 5ம் எண்ணின் பலம் உதவுகிறது! 9 எண்கள் வரிசையில் எந்த ஒரு கிரகத்தினருக்கும் இல்லாத ஒரு கவர்ச்சி (காந்த சக்தி) இந்த 5ம் எண் நபர்களுக்கு உண்டு! எனவேதான் இந்த எண்ணைக் காந்த எண் அல்லது ஜனவசியம் நிறைந்த எண் என்று கூறவாக்£ள். காந்தமானது, எந்த அளவு இரும்பினையும், எளிதாக இழுத்து விடும் தன்மை உடையது. அதேபோன்றே, மக்களைக் கவர்வதில் இவர்களுக்கு நிகர் எவரும் இலர். இவர்களுக்கு அடுத்த நிலையில்தான் 6ம் எண்காரர்கள் உள்ளனர். ஏனெனில் அவர்களுக்கும் ஜனவசியம் இயற்கையாக உண்டு!

இவர்களது பேச்சில் கேலியும் (அடுத்தவ¬ப் புண்படுத்தாமல்) கிண்டலும், சிரிப்பும் கலந்திருக்கும். எத்தகைய நபர்களைச் சந்தித்தாலும், தங்களது தனித்தன்மையை (Presence) அவர்களுக்குச் சீக்கிரம் உணர்த்திவிடுவார்கள். பல வருடகாலம் நண்பர்களாக நீடித்துத் தொடர்பு கொள்ளும் தன்மையும், கவர்ச்சியும், நட்புப் பலமும் இந்த 5 எண்காரர்களுக்கு உண்டு. மேலும் இவர்களுக்கு காரில், ரயிலில், விமானத்தில், அடுத்த ஊரில், அடுத்த நாட்டில் எதிர்பாராத நண்பர்களும், அவர்களின் மூலம் நட்பு மற்றும் பரஸ்பர உதவியும் எளிதில் இவர்களுக்குக் கிடைத்துவிடும். எப்போதும் எடுப்பாகவும், அழகாகவும், ஆடைகளையும், அழகு சாதனங்களையும் அணிந்து கொள்ளும் விருப்பம் கொண்டவர்கள். இவர்கள் தாங்கள் எடுத்துக் கொண்ட எந்தத் துறையிலும், தங்களது திறமையின் மூலம் விரைந்து உச்சியை அடைந்துவிட வேண்டும் என்று துடிப்பார்கள். இவர்கள் சாப்பிடுவதில் வேகமாக இருப்பார்கள். பேச்சிலும் நடையிலும் வேகம் உண்டு! பார்வைக்கு எளிமையாக இருந்தாலும் அரசர்களையும் கவர்ந்து விடுவார்கள்.

பிறர் முறையாகக் கணக்குகள் எழுதி வைத்துக் கொள்ள நினைக்கும் விபரங்களையும்கூட இவர்கள் மனதிலேயே நிலையாக வைத்துக் கொள்ளவும். விரும்பிய போது அவைகளை சரியாக எடுத்துக்காட்டியும் சொல்லுவார்கள். எப்போதுமே பெரிய மனிதர்களின் ஆதரவு இவருக்கு உண்டு.
தங்களது சொந்தப் படைப்புக்களைவிட அடுத்தவர்களின் கருத்துக்களையும், விஷயங்களையும் தொகுத்து அவைகளை ஆராய்ந்து முடிவுக்கு வரும் அறிவுத் துறைகளில் இவர்கள் சிறப்பாக விளங்குவார்கள். ஒரே சமயத்தில் பல காரியங்களில் கவனம் செலுத்துவம் அஷ்டாவதானிகள் இவர்கள்தான். புகழ்பெற்ற உலகக் கவிஞர் ஷேக்ஸ்பியர், மெஸ்மரிசம் கண்டுபிடித்த மெஸ்மர் போன்றவர்களெல்லாம் இந்த எண்ணில் பிறந்தவர்களே!

இவர்களின் தொழில்கள்
எழுத்தாளர் பணியில் இவர்கள் நன்கு பிரகாசிப்பார்கள். பேனா நண்பர்கள் அதிகம் உடையவர்கள். அரசியல்துறையிலும், அதிர்-ஷ்டம் உடையவர்கள். இவர்களது பேச்சிலும் விவாதங்களிலும் அரசியல் கலப்பு அதிகமாக இருக்கும். அறிவியல் துறைப் பணிக்கும் (Science), கலைத்துறை, சோதிடம், கணிதம் போன்ற துறைகளும் ஏற்றவை! நடிகர்கள், நடிகைகள், கலைஞர்கள், ஆராய்ச்சியாளர்கள் போன்றவர்களாக புகழ்பெறுவார்கள்.
இவர்கள் எந்த வியாபாரமும் செய்யலாம். (Any Business) ஜனவசியம் நிறைந்தவர்கள். இவர்கள் இருக்கும் இடத்திற்குக் கூட்டம் அதிகம் வரும். தரகர்களாகவும் (Brokers) கமிஷன் முகவர்களாகவும் மிகவும் புகழ் பெறுவார்கள். பிரயாண முகவர்களாகவும் (Travel Agents) நன்கு சம்பாதிப்பார்கள். இருப்பினும் ஒரு தொழிலை நன்கு செய்து கொண்டிருக்கிற போது, இன்னொரு தொழில் செய்தால் இதைவிட நன்றாக இருக்குமே என்று யோசிப்பார்கள். பின்பு இதை நடுவில் விட்டுவிட்டு, புதிய தொழிலில் துணிந்து இறங்கி விடுவார்கள்! இதைப்போன்று அடிக்கடி செய்யும் தொழில்களை, வியாபாரங்களை மாற்றக்கூடாது. ஆனால் தாங்கள் செய்து கொண்டிருக்கும் தொழில்களில் புதுமையைப் புகுத்தி வெற்றி அடையலாம்.
உலகத்தின் நாடுகளுக்கிடையே அமைதியை ஏற்படுத்தும் தூதுவர்களாக (Ambassadors) நன்கு விளங்குவார்கள். வான ஆராய்ச்சி, செய்தி பரப்புத் துறைகள் ஆகியவையும் இவர்களுக்கு வெற்றி தரும். பொது மக்கள் தொடர்பு சம்பந்தமான (P.R.O) தொழில்களிலும் நன்கு பிரகாசிப்பார்கள்.

இவர்களது திருமண வாழ்க்கை
இவர்களுக்குக் காதல் மீது மோகம் அதிகம். துணிந்து காதல்களில் ஈடுபடுவார்கள். அதுவும் 5, 9 ஆகிய எண்களில் பிறந்தவர்களால் மிகவும் ஈர்க்கப்படுவார்கள். 1, 3, 6 பிறந்தவர்களையும் மணக்கலாம். 9, 18, 27, 1, 10, 19, 28 ஆகிய தேதிகளும் கூட்டு எண் 1, 9 வரும் தேதிகளும் திருமணத்திற்கு உகந்தவை. மேலும் 6, 15, 24 தேதிகளும், கூட்டு எண் 6 வரும் தேதிகளும் ஓரளவுக்குச் சாதகமானவையே. குழந்தை பாக்கியம் இவர்களுக்குக் குறைவு. எனவே 2, 6 ஆகிய எண்களில் பிறந்தோரைத் திருமணம் செய்தால் குழந்தை பாக்கியம் உண்டு.

இவர்களது நண்பர்கள் / கூட்டாளிகள்
பொதுவாக மற்ற எண்காரர்கள் அனைவரும் இவர்களுக்கு நண்பர்களே! குறிப்பாக 9, 1, 6 தேதிகளில் பிறந்தவர்கள் இவர்களுடன் மிகவும் அதிகமாகப் பழகுவார்கள். இவர்கள் யாருடனும் கூட்டுத் தொழில் சேர்ந்து செய்யலாம். மற்ற எண்காரர்களை, அனுசரித்துச் சென்று, வெற்றி பெற்று விடுவார்கள்.

இவர்களது நோய்கள் ...
பொதுவாக இவர்கள் அதிகமாகச் சிந்தனைகளில் ஈடுபடுவதால் மன அமைதிக் குறைவு, மனஇறுக்கம் (டென்ஷன்) மனச்சோர்வு ஆகியவற்றால் பாதிக்கப்படுவார்கள். நரம்பு பலவீனமே அதிகமாகப் பாதிக்கும். அடிக்கடி ஏதாவது நரம்புகளில் வலி ஏற்படும். சிறுவயதுகளில் காக்கை வலிப்புப் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.
எனவே இவர்கள் முன்பு சொன்னபடி நல்ல தூக்கம் நல்ல உணவு ஆகியவைகளைக் கடைப்பிடித்தால், பல நோய்களைத் தவிர்த்துவிடலாம். சிற்றின்ப இச்சைகளை ஓரளவு குறைத்துக் கொண்டால், நரம்பு பலம் கூடும். கடுமையான நிலைகளில் நரம்புகளின் பாதிப்பால் பக்கவாதம், ஒருபுறம் நரம்புகள் சுருக்கிக் கொள்ளும் நிலை ஏற்படும்.
எனவே இவர்கள் உணவில் அதிகமாகப் பருப்பு வகைகள் தானியங்கள் ஆகியவைகளைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

புதன் யந்திரம் & புதன் & 24
9 4 11
10 8 6
5 12 7

புதன் மந்திரம் & புதன் & 24
ப்ரியங்கு கலிகா ஸ்யாமம்
ரூபேணாப்ரதிமம் புதம்!
ஸௌம்யம் ஸௌம்ய குணோபேதம்
தம்புதம் பிரணமர்மயஹம்

எண் 5. சிறப்புப் பலன்கள்
9 எண்களிலும் 5 தான் அனைவராலும் விரும்பப்படுகிறது! காரணம் 5ம் எண்தான் மற்ற 9 எண்களுக்கும் நடுவில் உள்ளது! இந்த எண்ணே மற்ற அனைத்து மக்களையும் (எண்களையும்) ஈர்க்கும் சக்தி மிகுந்த எண்ணாகும்.
எனவே, இவர்கள் எளிதில் அனைவரிடமும் நட்புக் கொண்டு விடுவார்கள். அனைவரையும் அனுசரித்துச் செல்லும் இயல்பினர். அறிவு என்கிற அற்புதத்தின் விளக்கம் இவர்கள் தான். புதியதாக எதையும் அறிந்து கொள்ளும் ஆர்வமும், அதை வாழ்வில் உடனடியாக பயன்படுத்தி கொள்ளும் திறமையும் உண்டு. எந்த வகையான சோதனைகளையும், சிரித்துக் கொண்டே சமாளித்து விடுவார்கள். தன்னம்பிக்கை மிகுந்தவர்கள்.
மற்றவர்களைவிட அறிவுத் திறனும், திறமையும் உண்டு! இவர்கள் நெளிவு, சுழிவுகள் மிகத் தெரிந்தவர்கள். சீக்கிரமாக, அதுவும் அதிகமாகச் சம்பாதிக்க வேண்டும் என்ற முயற்சியிடன்தான் எந்தத் தொழிலிலும் ஈடுபடுவார்கள். அதே போன்று இலாபங்களையும் அடைவார்கள். புதிய முயற்சிகளிலும் துணிந்து இறங்கி விடுவார்கள். நணடம் வந்தபோதும் இவர்கள் கலங்கமாட்டார்கள். மிகுந்த சிந்தனைகள் செய்பவர்களாதலால் நரம்பு பலவீனம் அடையும். எனவே, சில சமயங்களில் அதிகமான வேலை செய்யும் போது, எளிதில் எரிச்சலும் கோபமும் கொள்வார்கள். எத்துறையிலும் வேகம், வேகம் என்று செயலாற்றுபவர்கள் இவர்கள்தான். பிறரைத் தூண்டி விட்டு வேகமாக எந்த வேலையையும் மிரட்டி வாங்கி விடுவார்கள். உடல் உழைப்பில் நாட்டம் குறைவு! ஆனால் மூளை உழைப்பில் சிறந்த விளங்குவார்கள். மகாவிஷ்ணுவைப் (புராணங்களில்) போன்ற திறமையும், புத்திசாலித்தனமும் உண்டு!

நிறையப் பணம் கிடைப்பதென்றால், தீய வழிகளிலும் துணிந்து இறங்கி விடுவார்கள். ஆனால் எப்படியாவது தண்டனையிலிருந்து தங்களது புத்தியால் தப்பித்துக் கொள்வார்கள். இவர்களைப் புகழ்ந்தால் அப்படியே மயங்கி விடுவார்கள். எனவே, இவர்களைப் புகழ்ந்தே மற்றவர்கள் தங்களது செயல்களை இவர்களிடம் செய்து கொள்ளலாம். அனைத்துப் பிரச்சினைகளுக்கும் மிக எளிதில் தீர்வு சொல்லி விட்டுவார்கள். டாக்டர், வியாபாரிகள், பொருள் ஏஜெண்டுகள் போன்று பணம் சம்பாதிக்கும் தொழில்களிலேயே இவர்களது எண்ணம் செல்லும். வெளிநாடு, வெளியூர் செல்வதென்றால், உடனே புறப்பட்டு விடுவார்கள். தங்களது பேச்சிலும், முடிவு எடுப்பதிலும் வேகமாகச் செயல்படுவார்கள். மற்றவர்களுக்குப் புரியவில்லையென்றால் கோபம் எளிதில் வந்துவிடும். அதிக உழைப்பும் ஓயாத அலைச்சலு ஆற்றலும், புத்தி சாதுர்யமும் அதிகம். சூதாட்டம், பந்தயம், புரோக்கர் தொழில் மூலம் பொருள் பணம் குவிக்கும் யோகம் உண்டு.
காதல் விஷயங்களில் ஈடுபாடு உண்டு. காதலிப்பவரையே மணக்கும் தைரியமும், பிடிவாதமும் உண்டு. வசதியான மனைவியையே தேடுவார்கள். எவ்வளவு பெரிய காரியமானாலும் பயமோ, தயக்கமோ இன்றித் துணிந்து ஈடுபட்டு அதை வெற்றியாக மாற்றிக் காட்டுவார்கள்.
5 எண்ணின் பலம் குறைந்தவர்கள் தீய காரியங்களில் துணிந்து இறங்குவார்கள். பிறரை வஞ்சித்தல், பொய் சாட்சி சொல்லுதல், ஏமாற்றிப் பிழைத்தல், போர்ஜரி போன்றவற்றில் ஈடுபட்டுக் குறுக்கு வழியில் பணம் சம்பாதிப்பார்கள். அரசாங்கப் பணிணைவிடச் சொந்தத் தொழிலே சிறப்புத் தரும். கூட்டு எண்கள் ஒத்து வந்தால் மட்டுமே அரசாங்கப் பணி சிறப்புத் தரும். இந்த எண்காரர்களை வேலைக்கு வைத்து முதலாளிகள் லாபம் சம்பாதித்து விடுவார்கள். இவர்கள் ஜனவஸ்யம் நிறைந்தவர்கள். எனவே, இவரைச் சுற்றிலும் எப்போதும் மக்கள் இருந்த கொண்டே இருப்பார்கள்.
ஒருவிதக் குருட்டுத் தைரியம் இவர்களுக்கு மனதில் இருந்து கொண்டே இருக்கும். புதிய சாதனைகளை விரைந்து செய்ய வேண்டும் என்ற விருப்பம் நிறைந்தவர்கள். அடுத்தவர்களின் கருத்துப்படி இவர்கள் நடந்தால் தோல்விகள்தான் அதிகமாகும். இவர்களுக்கு இறைவனின் அருளால், திடீர் யோசனைகள் அல்லது ஞானோதயம் ஏற்படும். அதன்படி இவர்கள் செயலாற்றினால் வெற்றி நிச்சயம். இவர்கள் பணத்திற்கு ஆசைப்பட்டுத் தாங்கள் செய்யும தொழிலை அடிக்கடி மாற்றிக் கொள்ளக்கூடாது. நிரந்தரமான ஒரு தொழிலை தேர்ந்தெடுத்து, அதில் புதிய வழிமுறைகளையும், புதுமையையும் புகுத்தி வெற்றி பெற வேண்டும். ஆழம் தெரியாமல், ஒன்றில் இறங்கக் கூடாது. செய்யும் தொழிலைப் பிடிக்காமல் பாதியிலேயே விட்டுவிட்டு, அடுத்த தொழிலில் இறங்கக்கூடாது.

இவர்கள் இரவில் நெடுநேரம் சிந்தித்துக் கொண்டே இருப்பார்கள். இதனால் இரவில் தூக்கம் குறையும். மனச்சோர்வுகள், நரம்புக் கோளாறுகள் ஏற்படும். எனவே, தினமும் 6 முதல் 8 மணி நேரம் தூங்குவதைப் பழக்கமாக வைத்துக் கொள்ள வேண்டும். தியானம், உடற்பயிற்சி போன்றவற்றில் ஈடுபட்டு, மனதைச் சலனமில்லாமல் வைத்துக் கொள்ளப் பழக வேண்டும். பின்பு உடல் நலம் தானே வரும். சுறுசுறுப்பும், வேகமும், இலாப நோக்கும் இவர்கள் கூடப்பிறந்தவை. எனவே, வியாபாரம், கமிஷன் தொழில். டிராவல் ஏஜெண்ட்ஸ் விற்பனைப் பிரதிநிதிகள், அரசியல் போன்ற மக்கள் தொடர்புத் தொழில்கள் மிக்க நன்மை தரும்.

உடல் அமைப்பு/ உடல் நலம்
சற்றுச் சதைப்பிடிப்பான உடல் அமைப்பு அமையும். நடுத்தரமான உயரமும், மற்றவர்களைக் கவர்ந்திழுக்கும் கவர்ச்சியான முகமும், கண்களும் உண்டு. நிமிர்ந்த பார்வையும், வேகமான நடையும் உண்டு.
அதிர்ஷ்ட தினங்கள் Lucky Dates
ஒவ்வொரு மாதமும் 5, 14, 23 ஆகிய தேதிகளும் 9, 18, 27 ஆகிய தேதிகளும் மிக அதிர்ஷ்டமானவை. தே போன்று கூட்டு எண் 5 அல்லது 9 வரும் தினங்களும் அதிர்ஷ்டமானவையே!
இவர்களுக்கு மற்ற அனைத்து எண்காரர்களும் உதவுவார்கள். இருப்பினும் 5, 9 எண்காரர்கள் இவர்களுக்கு மிகவும் நன்மை செய்வார்கள்.

அதிர்ஷ்ட இரத்தினம்
இவர்களுக்கு அதிர்ஷ்ட இரத்தினம் வைரம் எனப்படும். DIAMOND ஆகும். இந்தக் கற்களில் தரமான கற்கள் (ORIGINAL) கிடைப்பது அரிதாக உள்ளது. ZIRCON எனப்படும் கற்களும் இவர்களுக்குச் சிறந்த பலன்களையே அளிக்கும்.
அதிர்ஷ்ட நிறங்கள் Lucky colours சாம்பல் நிறம் (GREY) மிகவும் ஏற்றது. அனைத்து இலேசான வண்ணங்களும் ஏற்றவையே. (LIGHT COLOURS) மினுமினுக்கும் உடைகளும், மினுமினுக்கும் வண்ணங்களும் நன்மையே புரியும்.
கறுப்பு, சிவப்பு, பச்சை போன்ற ஆழந்த (DARK) வண்ணங்களை நீக்கிக் கொள்ளவும்.

முக்கியக் குறிப்பு
இவர்களுக்கு நரம்புச் சக்தி குறைவு. எனவே குழந்தைச் செல்வம் தடைப்படும். மனைவியின் எண்களில் 5 எண் வந்தால் குழந்தைச் செல்வத்தைக் குறைத்து விடும். எனவே மனைவியைத் தேர்வு செய்வதில், குழந்தைச் செல்வம் உள்ள எண்களாகத் தேர்வு செய்து கொள்ளவும். குடும்பத்தில் தங்களது வேகமான பேச்சையும், செயல்களையும் குறைத்துக் கொண்டால், இன்ப வாழ்க்கை அமையும். உடல் உழைப்பிலும் சற்று ஈடுபட வேண்டும். அதுவே உடல் நலத்திற்கு உகந்ததாகும்.
5&ஆம் தேதி பிறந்தவர்கள்: புதன் கிரகத்தின் முழு அம்சம் பெற்றவர்கள். நல்ல தெய்வீக வாழ்க்கை அமையும். அறிவும், தெளிவும் உண்டு. இவர்கள் மற்றவர்களை மதிப்பவர்கள். அழகான தோற்றம் உடையவர்கள். இவர்களின் பேச்சிலும் நடத்தையிலும் ஒருவித ஈர்ப்புச் சத்தி உண்டு. சிறு வயது முதலே குறிப்பிட்ட இலட்சியத்துடன் வாழ்க்கையை நடத்துவார்கள். மற்றவர்களை ஏமாற்றத் தெரியாது.

14&ஆம் தேதி பிறந்தவர்கள் :
இவர்கள் மிகுந்த அதிர்ஷ்டம் உடையவர்கள். பயணத்தில் சலிக்காத நாட்டம் இவர்களுக்கு இருக்கும். பலர் புகழ்பெற்ற வியாபாரிகளாக இருப்பார்கள். இருந்தாலும் இவர்களது வாழ்க்கையில் அடிக்கடி விபத்துகள், சரிவுகள் ஏற்படும். இறைவனின் அருளால் இவர்களுக்கு துன்பங்களைச் சமாளிப்பதற்கான சூழ்நிலையும், அறிவும் உருவாகும். காதல் விஷயங்களில் கவனமாக இல்லாவிட்டால், பின்பு வாழ்க்கையே கசந்துவிடும். மக்களைக் கவர்கின்ற சிறந்த எண் இது. எனவே எப்போதும் இவரைச் சூழ்ந்து 10 பேர் இருப்பார்கள். அரசியலிலும் இவர்களுக்கு அதிர்ஷ்டம் உண்டு!

23&ஆம் தேதி பிறந்தவர்கள்:
இவர்கள் மிகுந்த அதிர்ஷ்டசாலிகள். குருச்சந்திர யோகம் நிறைந்தவர்கள். அரசாங்கத்தாரால் எப்போதும் ஆதரவு கிடைக்கும். சமூகத்தில் உயர்ந்த பதவிகள் கிடைக்கும். ஓர் அரசனைப் போன்று அனைத்து வசதிகளுடனும் வாழ்வார்கள். பண்பாடும், ஒழுக்கமும் நிறைந்தவர்கள். இவர்கள் உலகத்தில் சாதனை புரியப் பிறந்தவர்கள். மக்களைக் கவர்கின்ற சக்தி நிறைந்தவர்கள். புன்னகை புரிந்தே மற்றவர்களை வென்று விடுவார்கள். இவர்கள் சொல்லும் வார்த்தைகளுக்கு மறுப்பு இருக்காது. அனைத்து மக்களின் அன்பும், ஆதரவும் கிடைப்பதால் பெரும் வியாபாரிகளாகவும் ஆன்மிகம் மற்றும் அரசியல் துறைகளில் புகழ் பெற்றதும் விளங்குவார்கள்.

எண் 5க்கான (புதன்) தொழில்கள்
இவர்கள் கதை, கவிதை, நாடகம் எழுதல், சிற்பம் செதுக்குதல், ஜோதிடம் பார்த்தல், காகிதம், மொச்சை, பயிறு, மஞ்சள், முத்து, வெற்றிலைப் பாக்கு கொடி வகைகள் போன்ற வியாபாரங்கள்/ தொழில்கள் நன்மை பயக்கும். கல்வித் துறை, கணக்குத் துறை, தபால் துறை போன்றவற்றில் பணி செய்தல், Accountants, சொற்பொழிவாற்றுதல், புரோகிதம் செய்தல் போன்றவையும் ஒத்து வரும். ஜோதிடம் போன்ற சாஸ்திர ஆராய்ச்சியிலும் ஈடுபடுவார்கள். சிலர் நாட்டின் தூதுவர்களாகவும் இருப்பார்கள்.

பொதுவாக அனைத்து வியாபாரங்களும் இவர்களுக்கு நன்மை தரும். ஆனால் பொருட்கள், கருவிகள் உற்பத்தித் துறைகளில் இறங்கக்கூடாது! Marketing மற்றும் Broker போன்ற தொழில்கள் நன்மை தரும். சொந்தத் தொழில் செய்யவே இவர்கள் விரும்புவார்கள். இவர்கள் மற்றவர்களிடம் வேலை செய்யும்போது, முதலாளிகளுக்கு பல ஆலோசனைகளையும், பணம் சம்பாதிக்கும் வழிமுறைகளையும் கூறுவார்கள். அதனால் முதலாளிகளால் மிக விரும்பப்படுவார்கள். பொதுவாக தனியார் நிறுவனங்களில் வேலை செய்வார்கள்! அடிக்கடி தொழிலை மாற்றும் இயல்பினர். சம்பள உயர்வே இவர்களது நோக்கம்!
ஏதாவது உபதொழில் .. செய்து வருமானத்தை பெருக்குவதில் நாட்டமாக இருப்பார்கள். ... விற்பனைப் பிரதிநிதிகள் போன்றவற்றிலும் நன்கு பிரகாசிப்பார்கள்.

அறிவியல் துறைப் பணிகள், கலைத்துறை, பேச்சாளர்கள் போன்ற துறைகளும் நன்கு அமையும். இவர்கள் அறிவினால் உழைப்பவர்கள்! மற்றவர்களை வசியம் செய்து தங்களின் காரியங்களை சாதித்துக் கொள்வார்கள். நடிகர்கள், நடிகைகள், எழுத்தாளர்கள், வியாபாரிகள் இந்த எண்ணில் பிறந்திருப்பார்கள். Business Management கணிதம், செய்தி சேகரிப்பாளர்களாகவும் வெற்றி பெறுவார்கள்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





எண் 5 யில் பிறந்தவருக்குரிய பலன்கள் - புதன் (Mercury) Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

எண் 5 யில் பிறந்தவருக்குரிய பலன்கள் - புதன் (Mercury) Empty Re: எண் 5 யில் பிறந்தவருக்குரிய பலன்கள் - புதன் (Mercury)

Post by amloo Sat Nov 26, 2011 5:05 pm

எண் 5 யில் பிறந்தவருக்குரிய பலன்கள் - புதன் (Mercury) 2825183110 எண் 5 யில் பிறந்தவருக்குரிய பலன்கள் - புதன் (Mercury) 2825183110 பெருமையா இருக்கு... சிரி
amloo
amloo
தளபதி

தளபதி

பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009

http://www.tamilstylez.net

Back to top Go down

எண் 5 யில் பிறந்தவருக்குரிய பலன்கள் - புதன் (Mercury) Empty Re: எண் 5 யில் பிறந்தவருக்குரிய பலன்கள் - புதன் (Mercury)

Post by sshanthi Sat Nov 26, 2011 5:11 pm

நன்றி


ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Back to top Go down

எண் 5 யில் பிறந்தவருக்குரிய பலன்கள் - புதன் (Mercury) Empty Re: எண் 5 யில் பிறந்தவருக்குரிய பலன்கள் - புதன் (Mercury)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum