Latest topics
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
Top posting users this month
No user |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பூமியை அச்சுறுத்தும் ஆபத்து
2 posters
Page 1 of 1
பூமியை அச்சுறுத்தும் ஆபத்து
பூமியை அச்சுறுத்தும் ஆபத்து
எம். சடகோபன்
இந்தியாவில் இப்போது நீர், நிலம், காற்று மாசடைதல் அதிகரித்துக் கொண்டே வருகிறது. மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையின் கீழ் இயங்கும் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் புள்ளிவிவர அறிக்கையிலிருந்து இதை அறியலாம்.
அகில இந்திய அளவில் அதிகம் மாசடைந்த மாவட்டங்கள் பட்டியலில் அங்களேஸ்வர் (குஜராத்), வாபி (குஜராத்), காசியாபாத் (உத்தரப் பிரதேசம்), சந்திராபூர் (மகாராஷ்டிரம்), கோர்பா (சத்தீஸ்கர்), பிவாடி (ராஜஸ்தான்), அங்குல் டால்ச்சர் (ஒரிசா), வேலூர் (தமிழ்நாடு), சிங்குரிலி (உத்தரப்பிரதேசம்), லூதியானா (பஞ்சாப்) ஆகியவை முதல் 10 இடங்களில் உள்ளன.
தமிழக அளவில் அதிகம் மாசடைந்த மாவட்டங்கள் பட்டியலில் வேலூர் (தோல் ஆலை), கடலூர் (ரசாயன ஆலை), மணலி (பெட்ரோ கெமிக்கல் ஆலை), கோவை (ஜவுளி, என்ஜினியரிங்), திருப்பூர் (சாய ஆலை), மேட்டூர் (ரசாயன ஆலை), ஈரோடு (ஜவுளி, தோல் ஆலை) ஆகியவை உள்ளன. இவை அனைத்தும் தொழில் நகரங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையை அடுத்துள்ள மணலி காற்று அதிகம் மாசடைந்துள்ள பட்டியலில் வந்துள்ளது.
கோவை மாவட்டத்தில் காற்று மிகக் கடினமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நீர் கடினமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஆய்வு கூறுகிறது.
திருப்பூரில் நீர், நிலம், காற்று ஆகிய மூன்றுமே மிகக் கடினமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வு தெரிவிக்கிறது. சாய ஆலைகளை அதிகம் உள்ளடக்கியது திருப்பூர் என்பது குறிப்பிடத்தக்கது. அதிகம் ரசாயன ஆலைகளைக் கொண்டுள்ள மேட்டூரும் பட்டியலில் இருந்து தப்பவில்லை.
நிலத்தை வளப்படுத்தும் நீரின் அளவு குறைந்துகொண்டே போவதால், நிலம் முழுவதும் பாலைவனம் ஆகிவிடுமோ என்ற அச்சம் உண்டாகிறது.
புதிது புதிதாய்த் தோன்றும் பெரிய தொழிற்சாலைகள், அவற்றிலிருந்து வெளியேறும் ரசாயனக் கழிவுகள், வனங்கள் அழிக்கப்படுதல், அபரிமிதமாக நகர் மயமாதல் ஆகியவையே இதற்குக் காரணம் எனலாம்.
நீர் மாசுபடுதலில், குறிப்பாக கடற்கரையோரப் பகுதிகளில், இறால் பண்ணைகள் பெரும்பங்கு வகிக்கின்றன. விளை நிலங்கள் இறால் பண்ணைகளாக மாற்றப்படுவதுடன் இவற்றில் இருந்து வெளியேறும் கழிவுநீரில் உள்ள உப்பு மற்றும் ரசாயனப் பொருட்களால், மற்ற விளைநிலங்களும் தரிசாகின்றன.
அருகிலுள்ள கிணறுகளும், குளங்களும், உப்பு நீராகி விடுகின்றன. கடல்நீர் நிலத்தில் புகுந்து, நிலத்தடி நீர் உப்பு நீராகிறது.
அடுத்து, தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் ஆறுபோல் பெருகி கடலை அடைகின்றன. இக் கழிவுகள் விளைநிலங்களைப் பாழடித்து விடுகின்றன. இக் கழிவுகள் கலக்கும் நீரை, கால்நடைகள் அருந்துவதால் இறந்து போகின்றன.
மேலும், இப் பகுதியில் உள்ள மக்கள், தோல் மற்றும் மூச்சிறைப்பு நோய் ஆகியவற்றால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
பெரும்பாலான தொழிற்சாலைகள் ஆற்றங்கரைகளில்தான் அமைக்கப்படுகின்றன. அந்த ஆறுகளில், இன்று தொழிற்சாலைக் கழிவுகளும், மனிதக் கழிவுகளுமே உள்ளன.
நாட்டில் தொழிற்சாலைகள் எங்கும் பெருகி, தீய புகையைக் கக்கிய வண்ணம் உள்ளன. அவற்றால் நச்சுக் காற்று பரவி மனிதனை அழிக்கின்றது. தோல் பதனிடும் தொழிற்சாலை, சாயத் தொழிற்சாலை போன்றவற்றிலிருந்து வெளியாகும் கழிவுநீரால், அப் பகுதி கிராமங்களும், விளைநிலங்களும் பாதிப்புக்குள்ளாகின்றன. மேலும், தொழிற்சாலைக் கழிவுகள் கலக்கும் நீரைப் பருகுவதால் மஞ்சள் காமாலை, வயிற்றுப்போக்கு முதலியவற்றால் மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகின்றனர்.
இந்த மாசு சுமார் 25 சதவீதம் வாகனங்களில் இருந்தும், 30 சதவீதம் புழுதியில் இருந்தும், 20 சதவீதம் தொழிற்சாலைகளில் இருந்தும் வருவதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
கடந்த 15 ஆண்டுகளாக பூமியின் வெப்பம் பெருமளவுக்கு அதிகரித்துள்ளது. இது பூமியின் சாதாரண வெப்ப அளவின் விகிதத்தைப் பெருமளவுக்கு மீறியிருப்பதாக புள்ளிவிவரங்கள் மூலம் அறிய முடிகிறது.
நீராவி, கரியமில வாயு, ஓசோன், மீத்தேன், நைட்ரஸ் ஆக்சைடு போன்றவற்றின் அளவு அதிகரித்திருப்பதே இதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது.
காடுகளை அழிப்பது, எரிபொருட்களின் வெப்பம், ஒழுங்கற்ற மழை, கோடையில் அதிக வெப்பம், பனிக்காலத்தில் கடும் பனி ஆகியவையே இந்த பூமியின் வெப்ப நிலை மாற்றத்துக்கு காரணம்.
இப்போதைய வெப்ப அளவு இதுவரை இல்லாத அளவுக்கு வேகமாக அதிகரிப்பதாக அமெரிக்காவின் நாசா கவலை தெரிவித்துள்ளது. மலேரியா, டெங்கு காய்ச்சல் போன்ற பல நோய்கள் இந்த வெப்ப ஏற்றத்தினால் வெகு வேகமாகப் பரவுகின்றன.
நான்கு லட்சம் ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு பூமியில் கரியமில வாயு (கார்பன்-டை ஆக்ûஸடு) அதிகரித்திருப்பதாகவும் இதற்கு முக்கியக் காரணம் தொழிற்சாலைகள்தான் எனவும் ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.
இந்த கரியமில வாயு, பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள வளையத்துக்குப் பாதிப்பு ஏற்படுத்தலாம் என்றும், அப்படி நிகழும் பட்சத்தில் துருவப் பனி வேகமாய் உருகி பூமியை மூடி விடும் என்றும் இன்னொரு ஆராய்ச்சி அச்சுறுத்துகிறது.
மொத்தத்தில் நீர், நிலம், காற்று என அனைத்தும் மாசடைந்து வரும் செய்தி நம்மிடையே கண்ணீரை வரவழைக்கிறது.
இதை முற்றிலும் ஒழிப்பது என்பது இயலாத காரியம். இருப்பினும், மேலும், மாசடையாமல் தவிர்க்க மத்திய, மாநில அரசுகள் முடிந்த அளவு செய்யலாமே..!
தினமணி
எம். சடகோபன்
இந்தியாவில் இப்போது நீர், நிலம், காற்று மாசடைதல் அதிகரித்துக் கொண்டே வருகிறது. மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையின் கீழ் இயங்கும் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் புள்ளிவிவர அறிக்கையிலிருந்து இதை அறியலாம்.
அகில இந்திய அளவில் அதிகம் மாசடைந்த மாவட்டங்கள் பட்டியலில் அங்களேஸ்வர் (குஜராத்), வாபி (குஜராத்), காசியாபாத் (உத்தரப் பிரதேசம்), சந்திராபூர் (மகாராஷ்டிரம்), கோர்பா (சத்தீஸ்கர்), பிவாடி (ராஜஸ்தான்), அங்குல் டால்ச்சர் (ஒரிசா), வேலூர் (தமிழ்நாடு), சிங்குரிலி (உத்தரப்பிரதேசம்), லூதியானா (பஞ்சாப்) ஆகியவை முதல் 10 இடங்களில் உள்ளன.
தமிழக அளவில் அதிகம் மாசடைந்த மாவட்டங்கள் பட்டியலில் வேலூர் (தோல் ஆலை), கடலூர் (ரசாயன ஆலை), மணலி (பெட்ரோ கெமிக்கல் ஆலை), கோவை (ஜவுளி, என்ஜினியரிங்), திருப்பூர் (சாய ஆலை), மேட்டூர் (ரசாயன ஆலை), ஈரோடு (ஜவுளி, தோல் ஆலை) ஆகியவை உள்ளன. இவை அனைத்தும் தொழில் நகரங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையை அடுத்துள்ள மணலி காற்று அதிகம் மாசடைந்துள்ள பட்டியலில் வந்துள்ளது.
கோவை மாவட்டத்தில் காற்று மிகக் கடினமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நீர் கடினமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஆய்வு கூறுகிறது.
திருப்பூரில் நீர், நிலம், காற்று ஆகிய மூன்றுமே மிகக் கடினமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வு தெரிவிக்கிறது. சாய ஆலைகளை அதிகம் உள்ளடக்கியது திருப்பூர் என்பது குறிப்பிடத்தக்கது. அதிகம் ரசாயன ஆலைகளைக் கொண்டுள்ள மேட்டூரும் பட்டியலில் இருந்து தப்பவில்லை.
நிலத்தை வளப்படுத்தும் நீரின் அளவு குறைந்துகொண்டே போவதால், நிலம் முழுவதும் பாலைவனம் ஆகிவிடுமோ என்ற அச்சம் உண்டாகிறது.
புதிது புதிதாய்த் தோன்றும் பெரிய தொழிற்சாலைகள், அவற்றிலிருந்து வெளியேறும் ரசாயனக் கழிவுகள், வனங்கள் அழிக்கப்படுதல், அபரிமிதமாக நகர் மயமாதல் ஆகியவையே இதற்குக் காரணம் எனலாம்.
நீர் மாசுபடுதலில், குறிப்பாக கடற்கரையோரப் பகுதிகளில், இறால் பண்ணைகள் பெரும்பங்கு வகிக்கின்றன. விளை நிலங்கள் இறால் பண்ணைகளாக மாற்றப்படுவதுடன் இவற்றில் இருந்து வெளியேறும் கழிவுநீரில் உள்ள உப்பு மற்றும் ரசாயனப் பொருட்களால், மற்ற விளைநிலங்களும் தரிசாகின்றன.
அருகிலுள்ள கிணறுகளும், குளங்களும், உப்பு நீராகி விடுகின்றன. கடல்நீர் நிலத்தில் புகுந்து, நிலத்தடி நீர் உப்பு நீராகிறது.
அடுத்து, தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் ஆறுபோல் பெருகி கடலை அடைகின்றன. இக் கழிவுகள் விளைநிலங்களைப் பாழடித்து விடுகின்றன. இக் கழிவுகள் கலக்கும் நீரை, கால்நடைகள் அருந்துவதால் இறந்து போகின்றன.
மேலும், இப் பகுதியில் உள்ள மக்கள், தோல் மற்றும் மூச்சிறைப்பு நோய் ஆகியவற்றால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
பெரும்பாலான தொழிற்சாலைகள் ஆற்றங்கரைகளில்தான் அமைக்கப்படுகின்றன. அந்த ஆறுகளில், இன்று தொழிற்சாலைக் கழிவுகளும், மனிதக் கழிவுகளுமே உள்ளன.
நாட்டில் தொழிற்சாலைகள் எங்கும் பெருகி, தீய புகையைக் கக்கிய வண்ணம் உள்ளன. அவற்றால் நச்சுக் காற்று பரவி மனிதனை அழிக்கின்றது. தோல் பதனிடும் தொழிற்சாலை, சாயத் தொழிற்சாலை போன்றவற்றிலிருந்து வெளியாகும் கழிவுநீரால், அப் பகுதி கிராமங்களும், விளைநிலங்களும் பாதிப்புக்குள்ளாகின்றன. மேலும், தொழிற்சாலைக் கழிவுகள் கலக்கும் நீரைப் பருகுவதால் மஞ்சள் காமாலை, வயிற்றுப்போக்கு முதலியவற்றால் மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகின்றனர்.
இந்த மாசு சுமார் 25 சதவீதம் வாகனங்களில் இருந்தும், 30 சதவீதம் புழுதியில் இருந்தும், 20 சதவீதம் தொழிற்சாலைகளில் இருந்தும் வருவதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
கடந்த 15 ஆண்டுகளாக பூமியின் வெப்பம் பெருமளவுக்கு அதிகரித்துள்ளது. இது பூமியின் சாதாரண வெப்ப அளவின் விகிதத்தைப் பெருமளவுக்கு மீறியிருப்பதாக புள்ளிவிவரங்கள் மூலம் அறிய முடிகிறது.
நீராவி, கரியமில வாயு, ஓசோன், மீத்தேன், நைட்ரஸ் ஆக்சைடு போன்றவற்றின் அளவு அதிகரித்திருப்பதே இதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது.
காடுகளை அழிப்பது, எரிபொருட்களின் வெப்பம், ஒழுங்கற்ற மழை, கோடையில் அதிக வெப்பம், பனிக்காலத்தில் கடும் பனி ஆகியவையே இந்த பூமியின் வெப்ப நிலை மாற்றத்துக்கு காரணம்.
இப்போதைய வெப்ப அளவு இதுவரை இல்லாத அளவுக்கு வேகமாக அதிகரிப்பதாக அமெரிக்காவின் நாசா கவலை தெரிவித்துள்ளது. மலேரியா, டெங்கு காய்ச்சல் போன்ற பல நோய்கள் இந்த வெப்ப ஏற்றத்தினால் வெகு வேகமாகப் பரவுகின்றன.
நான்கு லட்சம் ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு பூமியில் கரியமில வாயு (கார்பன்-டை ஆக்ûஸடு) அதிகரித்திருப்பதாகவும் இதற்கு முக்கியக் காரணம் தொழிற்சாலைகள்தான் எனவும் ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.
இந்த கரியமில வாயு, பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள வளையத்துக்குப் பாதிப்பு ஏற்படுத்தலாம் என்றும், அப்படி நிகழும் பட்சத்தில் துருவப் பனி வேகமாய் உருகி பூமியை மூடி விடும் என்றும் இன்னொரு ஆராய்ச்சி அச்சுறுத்துகிறது.
மொத்தத்தில் நீர், நிலம், காற்று என அனைத்தும் மாசடைந்து வரும் செய்தி நம்மிடையே கண்ணீரை வரவழைக்கிறது.
இதை முற்றிலும் ஒழிப்பது என்பது இயலாத காரியம். இருப்பினும், மேலும், மாசடையாமல் தவிர்க்க மத்திய, மாநில அரசுகள் முடிந்த அளவு செய்யலாமே..!
தினமணி
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: பூமியை அச்சுறுத்தும் ஆபத்து
கேட்கவே வருத்தமாக உள்ளது
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
கேசவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
Similar topics
» மாசு :- பூமியை அச்சுறுத்தும் ஆபத்து
» உலகையே அச்சுறுத்தும் ஆபத்து! அழிய போவது எத்தனை நாடுகளோ!
» இந்தியாவை அச்சுறுத்தும் சாலை விபத்துகள்...!!!
» பனி உருகினாலும் ஆபத்து, உருகாவிட்டாலும் ஆபத்து..........
» சிறுவர் கதை: ஆபத்து…ஆபத்து!
» உலகையே அச்சுறுத்தும் ஆபத்து! அழிய போவது எத்தனை நாடுகளோ!
» இந்தியாவை அச்சுறுத்தும் சாலை விபத்துகள்...!!!
» பனி உருகினாலும் ஆபத்து, உருகாவிட்டாலும் ஆபத்து..........
» சிறுவர் கதை: ஆபத்து…ஆபத்து!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|